Jump to content

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில்  கண்டுபிடிப்பு

 

கேபரான்:
 
உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.
 
 
இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த 1-ம் தேதி அரசு துணையுடம் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது. வைரத்தை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தின் மூலம் கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மியாவ் said:

பிரபஞ்சத்தில் ஒரு கோளே வைரமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா...

இயலுமானவரை, பௌதிக விஞ்ஞானம்  இல்லாமல், இலகு தமிழில் சொல்கிறேன்.  

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

அல்லது  நட்சத்திரங்கள் வெடித்து, பின் அவற்றுக்குள்ளேயே இடிந்து (இப்படியே கருந்துளை உருவாக்குவது, நட்சத்திரங்கள் போதிய அளவு பருமன் இருந்தால்) கருந்துளை உருவாகாமல், அதற்கு முதல் படிகளில் உள்ள தன்மையை அடையும் போது (pulsar, neutorn star, dwarf), முக்கியமாக dwarf ஆக மாறும் போது (ஏனெனில் இந்த நிலையில் அநேகமாக carbon மற்றும் oxygen, ஏறத்தாழ வியாழனி அல்லது அதனிலும் கூடிய  பருமனில், அதற்குலேயே இடிந்து நொருங்கும் நிலை),  உருவாக கூடிய சாத்தியக்  கூறுகள் இருக்கிறது.  
 
  மேலதிக ஆர்வம் இருந்தால், இணைப்பை வாசித்து பாருங்கள் (எச்சரிக்கை: அறிய முற்பட்டால், ஓர் போதையாக மாறிவிடக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு) .

http://content.time.com/time/health/article/0,8599,2090471,00.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர்களாலேயே வித்தியாசம் கண்டுபிடிக்க கஸ்டமாக இருக்கும் செயற்கை வைரம் வந்திட்டாம் என்று எங்கோ படித்தேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

இயலுமானவரை, பௌதிக விஞ்ஞானம்  இல்லாமல், இலகு தமிழில் சொல்கிறேன்.  

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

அல்லது  நட்சத்திரங்கள் வெடித்து, பின் அவற்றுக்குள்ளேயே இடிந்து (இப்படியே கருந்துளை உருவாக்குவது, நட்சத்திரங்கள் போதிய அளவு பருமன் இருந்தால்) கருந்துளை உருவாகாமல், அதற்கு முதல் படிகளில் உள்ள தன்மையை அடையும் போது (pulsar, neutorn star, dwarf), முக்கியமாக dwarf ஆக மாறும் போது (ஏனெனில் இந்த நிலையில் அநேகமாக carbon மற்றும் oxygen, ஏறத்தாழ வியாழனி அல்லது அதனிலும் கூடிய  பருமனில், அதற்குலேயே இடிந்து நொருங்கும் நிலை),  உருவாக கூடிய சாத்தியக்  கூறுகள் இருக்கிறது.  
 
  மேலதிக ஆர்வம் இருந்தால், இணைப்பை வாசித்து பாருங்கள் (எச்சரிக்கை: அறிய முற்பட்டால், ஓர் போதையாக மாறிவிடக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு) .

http://content.time.com/time/health/article/0,8599,2090471,00.html

ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டேன்...

கறுந்துளை விண்வெளியை (Space) வளைக்க கூடியதா, அசுர பலம் கொண்ட புவியீர்ப்பு சக்தி கொண்டதா... அறிவியலில் இது போன்று இருவேறு கருத்துகள் நிலவுகின்றன...

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புவியீர்ப்பானாலும் சரி விண்வெளியை வளைக்க கூடியதாக இருந்தாலும் சரி ஒளி அதனை கடந்து தப்பிக்க முடியாமல் அதனுள் சென்று விடும் என்பது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

மன்னிக்கவும். மிகவும் தவறான  விளக்கத்தை தந்துவிட்டேன்.  

ஆம் ஒளியையே புதைக்கக்கூடிய ஈர்ப்பை கொண்ட கருந்துளையில்,  வைரங்கள் எம்மாத்திரம்?  

கருந்துளை என்பதே மிக கூடிய திணிவு ஓர் புள்ளியில் ஒருங்கியுள்ளது (SINGULARITY) எனும் பொழுது, வைரத்துக்கு இடம் ஏது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

 அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

 அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

இந்த பிரபஞ்சம் குறித்து சிந்தித்தாலே தலை சுற்றும்.

நாம் வாழும், உலகம், இன்னோரு கிரகத்தின், நரக லோகமாக இருக்கலாம் யார் கண்டது என்றும் ஒரு கவி கிறுக்கி இருக்கிறார். 

Link to comment
Share on other sites

23 minutes ago, Nathamuni said:

இந்த பிரபஞ்சம் குறித்து சிந்தித்தாலே தலை சுற்றும்.

நாம் வாழும், உலகம், இன்னோரு கிரகத்தின், நரக லோகமாக இருக்கலாம் யார் கண்டது என்றும் ஒரு கவி கிறுக்கி இருக்கிறார். 

வேரொறுவரின் கனவில் கூட இந்த உலகமானது இயங்கி கொண்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் அறிவியல் உலகில் உலவி வருகிறது...

--Parallel Universe பற்றி யவரேனும் குறுகலாக இனிப்பான விளக்கம் அளித்தால் சுவையாக இருக்கும்...

Link to comment
Share on other sites

6 hours ago, Kadancha said:

இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

 அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

சி வி இராமனின் மைத்துனர் இல்லை, சகோதரனின் மகன், சி வி இராமன் இவரது சித்தப்பா ஆவார். இவர் லாகூரில் பிறந்தவர், சிக்காகோவில் காலமானார்.. அத்துடன் இவர்கள் இருவரும் பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள்..

அவரின் நினைவாகவே அமெரிக்காவினால்  “Chandra X-ray Observatory” விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மியாவ் said:

-Parallel Universe பற்றி யவரேனும் குறுகலாக இனிப்பான விளக்கம் அளித்தால் சுவையாக இருக்கும்...

இதை பற்றி ஒரு டிவி நிகழ்சி 20 வருடங்களுக்கு முன் பார்த்தேன். பிபிசி என நினைகிறேன்.

உலகில் நடக்கும் அத்தனை விசயங்களும் இந்த 2ம் உலகில் எதிர்மாறாக நடக்குமாம்.

 

இதோ அந்த நிகழ்ச்சி.

 

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

இதை பற்றி ஒரு டிவி நிகழ்சி 20 வருடங்களுக்கு முன் பார்த்தேன். பிபிசி என நினைகிறேன்.

உலகில் நடக்கும் அத்தனை விசயங்களும் இந்த 2ம் உலகில் எதிர்மாறாக நடக்குமாம்.

 

இதோ அந்த நிகழ்ச்சி.

 

நல்ல தீனி... பொறுமையாக பார்க்கிறேன்...

Link to comment
Share on other sites

ஆங்கில படம் தி மண்டேலா எஃபக்ட் (The Mandela Effect) படத்தில் Parallel universe பற்றி அழகாக காட்டி இருப்பார்கள்...

இந்த படத்தில் கோடிட்டு காட்ட வேண்டிய இடம் என்றால் ஒரு பெண் குழந்தை விளையாட்டு பொம்மையை எடுத்து கொண்டு தன் பெற்றோர்களின் மேற்பார்வையில் கடலுக்குள் குளிக்க சென்று இறந்து விடும்... அதே குழந்தை படம் முடியும் தருவாயில் பொம்மையை எடுத்து கொண்டு ஓடுகையில் குழந்தையின் தந்தை அந்த பொம்மையை வைத்துவிட்டு விளையாட செல்லுமாறு கேட்பதனில் அடங்கி இருக்கிறது சூட்சுமம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பழுவூர்கிழான் said:

பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள்..

இதையும் நினைத்து விட்டு எழுத மறந்து விட்டேன். நன்றி.

ஆனால், இவரின் கலாநிதி செய்த மாணவர்கள் இருவர், இவருக்கு  முதல் நோபல் பரிசை பெற்றார்கள்.

இவர் UK இல் நிறவாத பிரச்சனைக்கு முகம் கொடுத்தே, US வந்தவர்.

பிரச்னை தோடங்கியது  Arthur Eddington, einsteen இந்த எதிர்வு கூறலான பெரிய திணிவுகள்  ஒளியை வளைக்கும் என்பதை einsteen சொல்லிய  சூரிய கிரகணத்தை கொண்டு  பரிசோதனை செய்து பொது சார்பு தத்துவத்தின் முக்கிய பகுதியை யதார்த்தமாக சரி பார்த்தவர். 

https://www.nature.com/articles/435020a
 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2021 at 21:31, மியாவ் said:

ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டேன்...

கறுந்துளை விண்வெளியை (Space) வளைக்க கூடியதா, அசுர பலம் கொண்ட புவியீர்ப்பு சக்தி கொண்டதா... அறிவியலில் இது போன்று இருவேறு கருத்துகள் நிலவுகின்றன...

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புவியீர்ப்பானாலும் சரி விண்வெளியை வளைக்க கூடியதாக இருந்தாலும் சரி ஒளி அதனை கடந்து தப்பிக்க முடியாமல் அதனுள் சென்று விடும் என்பது...

 

(1)

பதில் பிந்தியது தான். ஆம், அல்லது இல்லை என்ற  பதில் விளக்கத்தை ஏற்படுத்தாது. இது எனது ஒழுங்கற்ற பொழுது போக்குகளில் ஒன்று. மீண்டும் சில விடயங்களை சரி பார்த்து (refresh), அளவான மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதால் பிந்திவிட்டது. 

சற்று விரிவாக பார்ப்பதால், பகுதி பகுதியாக பார்ப்போம். இன்னொரு காரணம், உங்களுக்கு  மட்டம் கூடினால்,  விலா வாரியின் ஆழத்தை குறைக்குமாறு நீங்கள் சொல்லலாம்.  

சிறிய ஓர் மனப் பரிசோதனையோடு தொடங்குவோம். காரணம் பின்பு தெரியும்.
 
ஒருவரியில் கூறுவதானால் , கருந்துளை என்பது, கற்பனைக்கு அப்பாற்பட்ட திணிவை (ஆக குறைந்தது, முன்பு சொல்லிய Chandra Shekar Limit - எமது சூரியனின் திணிவின் 1.4 மடங்கிலும் அதிகமாக), கற்பனைக்கு உள்ளேயும் காணமுடியாத சிறிய பரிமாணத்துக்குள்ளே (புள்ளியில் ??? - எவருக்கும்  தெரியாது) தங்கி வைத்து உள்ளது. 

ஆகவே, கருந்துளையின் அடர்த்தியும்  (அடர்த்தியின் பௌதிக வரைவிலக்கணம் - ஓர் குறிப்பிட்ட கன அளவில் (volume) இருக்கும் திணிவு (mass) ) கற்பனைக்கு அப்பாற்றப்பட்டது. அடர்த்தி என்பதும், செறிவு  என்பதும்  வேறு வேறான  அளவீடுகள் விஞ்ஞானத்தில். எனவே, செறிவு என்பது உங்களுக்கு தெரிந்தால், அடர்த்தியும் தெரிந்து இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது.

ஆனால், கருந்துளையின் பரிமாணம் புள்ளி அளவு என்பது உண்மையாய் இருக்கும் என்றால், புள்ளி பரிமாணம் அற்றதால் (புள்ளியின் கன  அளவு 0) - விளைவு, தூய கணித முடிவிலியை (எந்த கணித விற்பன்னருக்கு கூட கற்பனையிலேயே வேறு எவருக்கும் உணர்த்த முடியும், இதுவரையில்)   பௌதிகமாக, நிதர்சனத்தில்  மனித வர்க்கம் உணர்கிறது, முடிவிலியை (அதாவது கருந்துளையை) பற்றிய  பல தரவுகளையும் (data) செய்மதிகள், மிகவும் நுண்திறன் கொண்ட விண்வெளி தொலை நோக்கு கருவி (பெயர் Hubble) போன்றவற்றால் பெறுகிறது. 

தூய கணித கற்பனையில் உள்ள முடிவிலி என்பது ஒன்றித்த முடிவிலி. ஏனெனில், எந்த எண்ணையும், பூச்சியதால் வகுத்தால் விளைவு முடிவிலி அல்லது கற்பனைக்கு அப்பாற்றப்பட்ட மிகப் பெரிய எண் (அதாவது, உ.ம். ஆக, 2/0 - முடிவிலி, 37/ 0 - முடிவிலி,  1000 / 0 - முடிவிலி ..., எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு முடிவிலி, தூய கணித கற்பனையில்).  எனவே இதில் வரும் இன்னொரு உப முடிவு,   தூய கணித கற்பனையில் உள்ள ஒன்றித்த முடிவிலியிலும், வேறு வேறான பௌதிக முடிவிலிகள் உண்டு என்பது.  அதாவது, உ.ம். ஆக, 2/0, 37/ 0, 1000 / 0 என்பது  போன்றவைகல் எல்லாமே வேறு வேறான முடிவிலிகள், ஏனெனில், கருந்துளைகளின் திணிவு வேறுபடலாம் என்பதால். 

இன்னுமொரு சிந்தனைக்கும் இது வழி சமைக்கிறது. வேறு, வேறு முடிவிலிகள் இருப்பதால், பூச்சியத்திலும் வேறு வேறான பூச்சியங்கள் (பௌதிக அடிப்படையில்) இருக்கிறதா?    

இந்த மனபரிசோதனைக்கு காரணம்,  கருந்துளை பற்றிய குறித்த அறிவை பெறுவதை விட (அடிப்படை அறிவு தேவை, அது பொதுவாக அடிப்படை பௌதிகம் தான்) , அது பற்றி எவ்வாறு சிந்திக்கப்படுகிறது என்பதை அறிவதே பொருத்தம். ஏனெனில், கருந்துளைக்கு மிகவும் சமீபமாக கூட இதுவரையில் பயணிக்க முடியாது!!             

இன்னொரு காரணம், அதி உயர் தூய கணிதம் - (பிரோயக கணிதம், பொறியியற் கணிதம்  ஒரு விதத்தில் பௌதிகத்தின் ஓர் கிளை) - பௌதிகம், ஓருடலும் ஈருயிரும் போல என்பதை அறியவும்.     

 அடுத்த பகுதியை பார்க்க முதல், இந்த மட்டம் உங்களுக்கு பொருத்தமானதா என்பதை அறியத்தரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை மறந்து விட்டேன்.  

உ.ம். ஆக, 2/0 - முடிவிலி, 37/ 0 - முடிவிலி,  1000 / 0 - முடிவிலி போன்ற முடிவிலிகள், உண்மையில் முடிவிலிகள் தானா? ஏனெனில், பௌதிக அடிப்படையில், 1.4 சூரியத் திணிவிலும் கூடிய திணிவு புள்ளியில் அடக்கப்படும் என்பது உண்மையாய் இருக்கும் பொது தான்  முடிவிலியின் பௌதிக யதார்த்தத்தை காண்கிறோம்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.