Jump to content

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் கண்டுபிடிப்பு

உலகின் மூன்றாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில்  கண்டுபிடிப்பு

 

கேபரான்:
 
உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போஸ்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
 
உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 3,106 காரட் அளவு கொண்டதாகும். அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் 2015 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வைரம் 1,109 காரட் அளவு ஆகும்.
 
 
இந்நிலையில், 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்ட்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மில்லி மீட்டர் நீளம், 52 மில்லி மீட்டர் அகலம், 27 மில்லி மீட்டர் தடிமனும் கொண்டுள்ள இந்த வைரக்கல் கடந்த 1-ம் தேதி அரசு துணையுடம் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது.
 
பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த வைரக்கல்லை கொரோனா வைரஸ் காலம் முடிவடைந்த பின்னர் ஏலம் விட போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது. வைரத்தை ஏலம் விடுவதில் கிடைக்கும் பணத்தின் மூலம் கொரோனாவுக்கு பிந்தைய நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, மியாவ் said:

பிரபஞ்சத்தில் ஒரு கோளே வைரமாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா...

இயலுமானவரை, பௌதிக விஞ்ஞானம்  இல்லாமல், இலகு தமிழில் சொல்கிறேன்.  

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

அல்லது  நட்சத்திரங்கள் வெடித்து, பின் அவற்றுக்குள்ளேயே இடிந்து (இப்படியே கருந்துளை உருவாக்குவது, நட்சத்திரங்கள் போதிய அளவு பருமன் இருந்தால்) கருந்துளை உருவாகாமல், அதற்கு முதல் படிகளில் உள்ள தன்மையை அடையும் போது (pulsar, neutorn star, dwarf), முக்கியமாக dwarf ஆக மாறும் போது (ஏனெனில் இந்த நிலையில் அநேகமாக carbon மற்றும் oxygen, ஏறத்தாழ வியாழனி அல்லது அதனிலும் கூடிய  பருமனில், அதற்குலேயே இடிந்து நொருங்கும் நிலை),  உருவாக கூடிய சாத்தியக்  கூறுகள் இருக்கிறது.  
 
  மேலதிக ஆர்வம் இருந்தால், இணைப்பை வாசித்து பாருங்கள் (எச்சரிக்கை: அறிய முற்பட்டால், ஓர் போதையாக மாறிவிடக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு) .

http://content.time.com/time/health/article/0,8599,2090471,00.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிபுணர்களாலேயே வித்தியாசம் கண்டுபிடிக்க கஸ்டமாக இருக்கும் செயற்கை வைரம் வந்திட்டாம் என்று எங்கோ படித்தேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, Kadancha said:

இயலுமானவரை, பௌதிக விஞ்ஞானம்  இல்லாமல், இலகு தமிழில் சொல்கிறேன்.  

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

அல்லது  நட்சத்திரங்கள் வெடித்து, பின் அவற்றுக்குள்ளேயே இடிந்து (இப்படியே கருந்துளை உருவாக்குவது, நட்சத்திரங்கள் போதிய அளவு பருமன் இருந்தால்) கருந்துளை உருவாகாமல், அதற்கு முதல் படிகளில் உள்ள தன்மையை அடையும் போது (pulsar, neutorn star, dwarf), முக்கியமாக dwarf ஆக மாறும் போது (ஏனெனில் இந்த நிலையில் அநேகமாக carbon மற்றும் oxygen, ஏறத்தாழ வியாழனி அல்லது அதனிலும் கூடிய  பருமனில், அதற்குலேயே இடிந்து நொருங்கும் நிலை),  உருவாக கூடிய சாத்தியக்  கூறுகள் இருக்கிறது.  
 
  மேலதிக ஆர்வம் இருந்தால், இணைப்பை வாசித்து பாருங்கள் (எச்சரிக்கை: அறிய முற்பட்டால், ஓர் போதையாக மாறிவிடக் கூடிய சந்தர்ப்பமும் உண்டு) .

http://content.time.com/time/health/article/0,8599,2090471,00.html

ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டேன்...

கறுந்துளை விண்வெளியை (Space) வளைக்க கூடியதா, அசுர பலம் கொண்ட புவியீர்ப்பு சக்தி கொண்டதா... அறிவியலில் இது போன்று இருவேறு கருத்துகள் நிலவுகின்றன...

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புவியீர்ப்பானாலும் சரி விண்வெளியை வளைக்க கூடியதாக இருந்தாலும் சரி ஒளி அதனை கடந்து தப்பிக்க முடியாமல் அதனுள் சென்று விடும் என்பது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

கோள் அளவோ என்று உறுதியாக கூறமுடியாது, அனால் மிகப் பெரிய அளவு, கருந்துளைக்குள் (black hole) இருபதற்கு சாத்தியக்  கூறுகள் இருக்கிறது. அனால் என்ன அதை அடைய முடியாது.

மன்னிக்கவும். மிகவும் தவறான  விளக்கத்தை தந்துவிட்டேன்.  

ஆம் ஒளியையே புதைக்கக்கூடிய ஈர்ப்பை கொண்ட கருந்துளையில்,  வைரங்கள் எம்மாத்திரம்?  

கருந்துளை என்பதே மிக கூடிய திணிவு ஓர் புள்ளியில் ஒருங்கியுள்ளது (SINGULARITY) எனும் பொழுது, வைரத்துக்கு இடம் ஏது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

 அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

 அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

இந்த பிரபஞ்சம் குறித்து சிந்தித்தாலே தலை சுற்றும்.

நாம் வாழும், உலகம், இன்னோரு கிரகத்தின், நரக லோகமாக இருக்கலாம் யார் கண்டது என்றும் ஒரு கவி கிறுக்கி இருக்கிறார். 

Link to comment
Share on other sites

23 minutes ago, Nathamuni said:

இந்த பிரபஞ்சம் குறித்து சிந்தித்தாலே தலை சுற்றும்.

நாம் வாழும், உலகம், இன்னோரு கிரகத்தின், நரக லோகமாக இருக்கலாம் யார் கண்டது என்றும் ஒரு கவி கிறுக்கி இருக்கிறார். 

வேரொறுவரின் கனவில் கூட இந்த உலகமானது இயங்கி கொண்டிருக்கலாம் என்ற ஒரு கருத்தும் அறிவியல் உலகில் உலவி வருகிறது...

--Parallel Universe பற்றி யவரேனும் குறுகலாக இனிப்பான விளக்கம் அளித்தால் சுவையாக இருக்கும்...

Link to comment
Share on other sites

6 hours ago, Kadancha said:

இங்கே ஒரு தமிழரின், கருந்துளை பற்றிய கண்டுபிடிப்பை சொல்ல மறந்து விட்டேன்.

 அவரின் பெயர் சுப்ரமணியன் சந்திரசேகர். வேறு யாருமில்லை, c.v. இராமனின் மைத்துனர்.

இவர்,    Chandrasekar Limit என்று, ஓர் dwarf நட்சத்திரம் கருந்துளையாக பரி ணமிபதற்கு இருக்க வேண்டிய மிக குறைந்த திணிவை கண்டறிந்தார். இந்த திணிவு அண்ணளவாக, 1.4 சூரியனின் திணிவிலும் அதிகமாக இரு க்க வேண்டும், dwarf நட்சத்திரம் கருந்து ளையாக பரிணமிதற்கு.

சி வி இராமனின் மைத்துனர் இல்லை, சகோதரனின் மகன், சி வி இராமன் இவரது சித்தப்பா ஆவார். இவர் லாகூரில் பிறந்தவர், சிக்காகோவில் காலமானார்.. அத்துடன் இவர்கள் இருவரும் பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள்..

அவரின் நினைவாகவே அமெரிக்காவினால்  “Chandra X-ray Observatory” விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மியாவ் said:

-Parallel Universe பற்றி யவரேனும் குறுகலாக இனிப்பான விளக்கம் அளித்தால் சுவையாக இருக்கும்...

இதை பற்றி ஒரு டிவி நிகழ்சி 20 வருடங்களுக்கு முன் பார்த்தேன். பிபிசி என நினைகிறேன்.

உலகில் நடக்கும் அத்தனை விசயங்களும் இந்த 2ம் உலகில் எதிர்மாறாக நடக்குமாம்.

 

இதோ அந்த நிகழ்ச்சி.

 

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

இதை பற்றி ஒரு டிவி நிகழ்சி 20 வருடங்களுக்கு முன் பார்த்தேன். பிபிசி என நினைகிறேன்.

உலகில் நடக்கும் அத்தனை விசயங்களும் இந்த 2ம் உலகில் எதிர்மாறாக நடக்குமாம்.

 

இதோ அந்த நிகழ்ச்சி.

 

நல்ல தீனி... பொறுமையாக பார்க்கிறேன்...

Link to comment
Share on other sites

ஆங்கில படம் தி மண்டேலா எஃபக்ட் (The Mandela Effect) படத்தில் Parallel universe பற்றி அழகாக காட்டி இருப்பார்கள்...

இந்த படத்தில் கோடிட்டு காட்ட வேண்டிய இடம் என்றால் ஒரு பெண் குழந்தை விளையாட்டு பொம்மையை எடுத்து கொண்டு தன் பெற்றோர்களின் மேற்பார்வையில் கடலுக்குள் குளிக்க சென்று இறந்து விடும்... அதே குழந்தை படம் முடியும் தருவாயில் பொம்மையை எடுத்து கொண்டு ஓடுகையில் குழந்தையின் தந்தை அந்த பொம்மையை வைத்துவிட்டு விளையாட செல்லுமாறு கேட்பதனில் அடங்கி இருக்கிறது சூட்சுமம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பழுவூர்கிழான் said:

பௌதீகவியலில் நோபல் பரிசு பெற்றவர்கள்..

இதையும் நினைத்து விட்டு எழுத மறந்து விட்டேன். நன்றி.

ஆனால், இவரின் கலாநிதி செய்த மாணவர்கள் இருவர், இவருக்கு  முதல் நோபல் பரிசை பெற்றார்கள்.

இவர் UK இல் நிறவாத பிரச்சனைக்கு முகம் கொடுத்தே, US வந்தவர்.

பிரச்னை தோடங்கியது  Arthur Eddington, einsteen இந்த எதிர்வு கூறலான பெரிய திணிவுகள்  ஒளியை வளைக்கும் என்பதை einsteen சொல்லிய  சூரிய கிரகணத்தை கொண்டு  பரிசோதனை செய்து பொது சார்பு தத்துவத்தின் முக்கிய பகுதியை யதார்த்தமாக சரி பார்த்தவர். 

https://www.nature.com/articles/435020a
 

 

 

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 17/6/2021 at 21:31, மியாவ் said:

ஓரளவு நன்றாகவே புரிந்து கொண்டேன்...

கறுந்துளை விண்வெளியை (Space) வளைக்க கூடியதா, அசுர பலம் கொண்ட புவியீர்ப்பு சக்தி கொண்டதா... அறிவியலில் இது போன்று இருவேறு கருத்துகள் நிலவுகின்றன...

இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை புவியீர்ப்பானாலும் சரி விண்வெளியை வளைக்க கூடியதாக இருந்தாலும் சரி ஒளி அதனை கடந்து தப்பிக்க முடியாமல் அதனுள் சென்று விடும் என்பது...

 

(1)

பதில் பிந்தியது தான். ஆம், அல்லது இல்லை என்ற  பதில் விளக்கத்தை ஏற்படுத்தாது. இது எனது ஒழுங்கற்ற பொழுது போக்குகளில் ஒன்று. மீண்டும் சில விடயங்களை சரி பார்த்து (refresh), அளவான மட்டத்தில் இருக்க வேண்டும் என்பதால் பிந்திவிட்டது. 

சற்று விரிவாக பார்ப்பதால், பகுதி பகுதியாக பார்ப்போம். இன்னொரு காரணம், உங்களுக்கு  மட்டம் கூடினால்,  விலா வாரியின் ஆழத்தை குறைக்குமாறு நீங்கள் சொல்லலாம்.  

சிறிய ஓர் மனப் பரிசோதனையோடு தொடங்குவோம். காரணம் பின்பு தெரியும்.
 
ஒருவரியில் கூறுவதானால் , கருந்துளை என்பது, கற்பனைக்கு அப்பாற்பட்ட திணிவை (ஆக குறைந்தது, முன்பு சொல்லிய Chandra Shekar Limit - எமது சூரியனின் திணிவின் 1.4 மடங்கிலும் அதிகமாக), கற்பனைக்கு உள்ளேயும் காணமுடியாத சிறிய பரிமாணத்துக்குள்ளே (புள்ளியில் ??? - எவருக்கும்  தெரியாது) தங்கி வைத்து உள்ளது. 

ஆகவே, கருந்துளையின் அடர்த்தியும்  (அடர்த்தியின் பௌதிக வரைவிலக்கணம் - ஓர் குறிப்பிட்ட கன அளவில் (volume) இருக்கும் திணிவு (mass) ) கற்பனைக்கு அப்பாற்றப்பட்டது. அடர்த்தி என்பதும், செறிவு  என்பதும்  வேறு வேறான  அளவீடுகள் விஞ்ஞானத்தில். எனவே, செறிவு என்பது உங்களுக்கு தெரிந்தால், அடர்த்தியும் தெரிந்து இருக்க சந்தர்ப்பம் இருக்கிறது.

ஆனால், கருந்துளையின் பரிமாணம் புள்ளி அளவு என்பது உண்மையாய் இருக்கும் என்றால், புள்ளி பரிமாணம் அற்றதால் (புள்ளியின் கன  அளவு 0) - விளைவு, தூய கணித முடிவிலியை (எந்த கணித விற்பன்னருக்கு கூட கற்பனையிலேயே வேறு எவருக்கும் உணர்த்த முடியும், இதுவரையில்)   பௌதிகமாக, நிதர்சனத்தில்  மனித வர்க்கம் உணர்கிறது, முடிவிலியை (அதாவது கருந்துளையை) பற்றிய  பல தரவுகளையும் (data) செய்மதிகள், மிகவும் நுண்திறன் கொண்ட விண்வெளி தொலை நோக்கு கருவி (பெயர் Hubble) போன்றவற்றால் பெறுகிறது. 

தூய கணித கற்பனையில் உள்ள முடிவிலி என்பது ஒன்றித்த முடிவிலி. ஏனெனில், எந்த எண்ணையும், பூச்சியதால் வகுத்தால் விளைவு முடிவிலி அல்லது கற்பனைக்கு அப்பாற்றப்பட்ட மிகப் பெரிய எண் (அதாவது, உ.ம். ஆக, 2/0 - முடிவிலி, 37/ 0 - முடிவிலி,  1000 / 0 - முடிவிலி ..., எல்லாவற்றுக்கும் ஒரே ஒரு முடிவிலி, தூய கணித கற்பனையில்).  எனவே இதில் வரும் இன்னொரு உப முடிவு,   தூய கணித கற்பனையில் உள்ள ஒன்றித்த முடிவிலியிலும், வேறு வேறான பௌதிக முடிவிலிகள் உண்டு என்பது.  அதாவது, உ.ம். ஆக, 2/0, 37/ 0, 1000 / 0 என்பது  போன்றவைகல் எல்லாமே வேறு வேறான முடிவிலிகள், ஏனெனில், கருந்துளைகளின் திணிவு வேறுபடலாம் என்பதால். 

இன்னுமொரு சிந்தனைக்கும் இது வழி சமைக்கிறது. வேறு, வேறு முடிவிலிகள் இருப்பதால், பூச்சியத்திலும் வேறு வேறான பூச்சியங்கள் (பௌதிக அடிப்படையில்) இருக்கிறதா?    

இந்த மனபரிசோதனைக்கு காரணம்,  கருந்துளை பற்றிய குறித்த அறிவை பெறுவதை விட (அடிப்படை அறிவு தேவை, அது பொதுவாக அடிப்படை பௌதிகம் தான்) , அது பற்றி எவ்வாறு சிந்திக்கப்படுகிறது என்பதை அறிவதே பொருத்தம். ஏனெனில், கருந்துளைக்கு மிகவும் சமீபமாக கூட இதுவரையில் பயணிக்க முடியாது!!             

இன்னொரு காரணம், அதி உயர் தூய கணிதம் - (பிரோயக கணிதம், பொறியியற் கணிதம்  ஒரு விதத்தில் பௌதிகத்தின் ஓர் கிளை) - பௌதிகம், ஓருடலும் ஈருயிரும் போல என்பதை அறியவும்.     

 அடுத்த பகுதியை பார்க்க முதல், இந்த மட்டம் உங்களுக்கு பொருத்தமானதா என்பதை அறியத்தரவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றை மறந்து விட்டேன்.  

உ.ம். ஆக, 2/0 - முடிவிலி, 37/ 0 - முடிவிலி,  1000 / 0 - முடிவிலி போன்ற முடிவிலிகள், உண்மையில் முடிவிலிகள் தானா? ஏனெனில், பௌதிக அடிப்படையில், 1.4 சூரியத் திணிவிலும் கூடிய திணிவு புள்ளியில் அடக்கப்படும் என்பது உண்மையாய் இருக்கும் பொது தான்  முடிவிலியின் பௌதிக யதார்த்தத்தை காண்கிறோம்.  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.