Jump to content

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே அளித்திருந்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதிவரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

ரோஹிணி

பட மூலாதாரம்,ROHINI

இந்த நிலையில் திரைக்கலைஞர் ரோகிணி ஆன்லைன் மூலம் சென்னை நகரக் காவல் துறையிடம் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.

அதில், தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் ஃபேஸ்புக்கில் அவதூறாக கிஷோர் கே சாமி எழுதியுள்ளதாக ரோகிணி புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டபோது அரசியல் தலைவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்ட நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக கிஷோர் பல தலைவர்களைப் பற்றி மிக இழிவாகவும் அவதூறாகவும் எழுதிய ஃபேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை முன்வைத்து சிலர் நியாயம் கேட்டனர்.

இந்தப் பதிவில்தான் ரோகிணி - ரகுவரன் தம்பதி குறித்து கிஷோர் மிக மோசமாக எழுதியிருந்தார். அதை முன்வைத்தே இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரோஹிணிக்கும் நடிகர் ரகுவரனுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். 2004ல் இந்த தம்பதி விவகாரத்து பெற்றனர். இருப்பினும் ரகுவரனின் கடைசி காலத்தில் அவருடன் சுமூகாகவே ரோஹிணி பழகி வந்தார்.

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்: "ரகுவரன் பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டார்" - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்?

உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு திட்டினால், சுந்தர் பிச்சைக்கு சொல்லுவீர்களா அல்லது, பஸ்சை பிடித்து ஒட்டாவா போய், பிரித்தானிய தூதரகத்திடம் முறையிடுவீர்களா? சொல்லுங்கோ, நிழலி...சொல்லுங்கோ? 

விடியோவை யாழ்பாணத்திலை போன இடத்திலை, போட்டு இருந்தால், என்ன செய்வீர்கள்?

சரி, திட்டுறதுக்கு எண்டு பக்கவாத்தியம் மியூசிக், ஜெர்மினியிலை இருந்து வந்திருந்தால், ஜேர்மன் எம்பசிக்குமெல்லே போகோணும்.

IT யில் இருக்கும் உங்களிடம், இதனை எதிர்பார்க்கவில்லை.

youtube ரிப்போர்ட் பண்ணும் வசதிகள் உண்டு.

அரசியலை ஒருபக்கமாக வைத்து விடுங்கள். (இருந்தாலும் ஒரு குறிப்பு: திட்டியவர் சிங்கப்பூர், திட்டு வாங்க கூடிய அளவில், இந்திய அரசியல் வாதியின் தனிப்பட்ட வாழ்வினை தொட்டவர், இலங்கை, ஊடகம் அமெரிக்கா. இதுக்கு, இந்திய தூதரகம் என்ன செய்யலாம் என்று யோசிக்கவில்லையா?)

இந்திய தூதரகம் இப்ப, சம்பந்தரோடை வலு பிஸி. உதே அவயலுக்கு தலை போற பிரச்சனையாக இருக்கும்.

youtube என்பது ஒரு அமெரிக்க ஊடகம். நமக்கு கேடு கெட்ட  வார்த்தைகளாக தெரிபவை, அங்கே, சாதாரண விடயம். இது உங்களுக்கு புரியாததல்ல.

இந்த மதன் சிக்கலுக்குள்ளான ஒரே விசயம்: அவரது சேனலுக்கு சிறுபிள்ளைகளை வரவழைத்து ஆபாசமாக பேசினார் என்பதை.

சிறுபிள்ளைகள் என்ற விசயம் youtube கரிசனைகள் கொள்ளலாம். ஆனாலும், மதன் விடயத்தில், இந்திய நீதிமன்றம் அதனை தண்டித்தால் மட்டுமே சானலை முடக்கும்.

மதன், சாட்டை, சுந்தரவள்ளி, பழனி அனைத்துமே, youtube பொறுத்தளவில் பணம் காய்க்கும் மரங்கள். 

நீங்களும், நானும் ஒருவரை ஒருவர் திட்டி வீடியோ போட்டால், அதனை சனம் விழுந்து, விழுந்து பார்க்குது எண்டால், விசயம் என்ன தெரியுமா? நானும், நீங்களும், பிசினஸ் ஐடியா போட்டு, இந்த வேலை இல்லாத, விடுப்பு பார்க்கும் சனத்தின் நேரத்தில் பணம் சம்பாதிக்க,  அலுவல் பார்க்கிறோம். 

இது புரிந்தால், இந்த youtube வீடியோ போட்டு, சம்பாதிக்கலாமே, எதுக்கு, it வேலை, வரி, டென்ஷன் என்று யோசிக்க தொடங்கி விடுவீர்கள்.

மேலும், இந்த மதனுக்கும் மனைவிக்கும், ஆளுக்கொரு BMW கார்கள், இரண்டு வீடுகள்.... அவர்களது மாத வருமானம் 6 லட்சம் இந்திய ரூபா. இது போலீஸ் கணிப்பு.

ஆனாலும், சிறைக்கு போனாலும், வரி கட்டுவதால், முதல் வகுப்பு.  

Link to comment
Share on other sites

36 minutes ago, Nathamuni said:

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்?

உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு 

 

ஆபாசமாக திட்டியவர் மீது ரோகிணி புகார் கொடுத்தது போன்று அனந்தியை ஆபாசமாக திட்டியவர் மீது புகார் கொடுக்க சொல்வது எப்படி தொடர்பில்லாமல் தெரிகின்றது உங்களுக்கு? அனந்தியை திட்டி படு ஆபாசமாக பேசியவர்கள் தமிழகத்திலும் உள்ளனர். (அல்லது சிங்கபூர் ஆள் திட்டியது மட்டும்தான் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம்) தமிழகம் இந்தியாவில் இருப்பதால் இந்திய தூதரகத்தின் மூலம் புகார் கொடுக்க சொல்லும் போது உங்களுக்கு ஏன் அது தவறாக தெரிகின்றது.

36 minutes ago, Nathamuni said:

 

 

youtube ரிப்போர்ட் பண்ணும் வசதிகள் உண்டு.

 


நான் யுடீயூப் இற்கு சென்று முறையிடச் சொல்லவில்லை. ஆபாசமாக திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் சொல்கின்றேன். சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக தனி நபர்களின் படங்களை தரவேற்றுகின்றவர்களில் இரந்து தரங்கெட்ட வகைகளில் பதிவுகள் போடுகின்றவர்கள் வரைக்கு நடவடிக்கை எடுப்பது Cyber crime பிரிவு. அங்கு தான் புகார் கொடுப்பது. சமூகவலைத்தளங்களின் CEO விடம் அல்ல

 

36 minutes ago, Nathamuni said:

 

IT யில் இருக்கும் உங்களிடம், இதனை எதிர்பார்க்கவில்லை.

 

 

உங்களுக்கு என்  IT துறை பற்றிய புரிதலும் இல்லை, சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசுகின்றவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது பற்றிய புரிதலும் இல்லை. ஆனால் இவ்வாறு எதிலும் ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் மற்றவர்களின் தொழில்களை கருத்துகளில் இழுத்து கருத்தாடுவது ஒன்றும் உங்களுக்கு புதுதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

Link to comment
Share on other sites

1 minute ago, Maruthankerny said:

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, என்னாச்சு, கோவிக்கிறீர்கள்?

IT யில் இருப்பவர்களுக்கு லாஜிக் முக்கியம் என்பதனை சொல்லவே, அவ்வாறு சொன்னேன். உங்கள் தொழிலை இழுத்து நக்கல் அடிக்க அல்ல என்பதும் உங்களுக்கு புரியும்.

முதலில், அடிப்படை விடயம் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

ரோகினி, இப்போது முறைப்பாடு செய்ய போனது அரசியல் தூண்டுதல் காரணமாக. அவர் சம்பந்தமான பேச்சினை, இந்த மனிதர் கிசோர் செய்தது, அதிமுக காலத்தில்.

அதுவே சாட்டை துரைமுருகனுக்கும் நடக்கிறது.

இது நீதிமன்றில் நில்லாது. கருத்து சுதந்திரம் என்றே முடியும். இதுவும் உங்களுக்கு புரியாதது அல்ல.

அரசியல் வேண்டாம் என்றேன். இருந்தாலும் பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன். ஐயன் கார்த்திகேயன் தனது சேனலை வளர்க்க, இலங்கையில், வீட்டில் இருக்கும் பெண்மணியின் வாயை கிளற, அதுக்கு சிங்கப்பூரில் இருந்து ஒருத்தர் பதிலை போட, அதனை முறைப்பாடு எடுத்து, டெல்லிக்கு அனுப்பி, இந்திய அரசும், சிங்கப்பூர் அரசும், இலங்கை அரசும் ராஜதந்திர வேலைகள் செய்து, தீர்வு காணவேண்டும் என்கிறீர்களா? இந்திய தூதரகத்துக்கு, இதுவா வேலை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

ஆபாசமாக திட்டியோ

பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ

அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ

இவற்றை செய்பவர்களின் நோக்கம் என்ன?
அதே நோக்கத்தை இந்த மூன்றையும் தவிர்த்து செய்தால் தகுமா? 

Abusive என்பது எந்த வடிவம் எடுத்தாலும் அது களையப்பட வேண்டும்.
Abuse  செய்பவர்களின் நோக்கமே இன்னொருவரை துன்புறுத்துவதுதான் 
பிஸிக்கல் ரீதியாக செய்ய பலம் இல்லாதபோது வார்த்தை பிரயோகமாக செய்கிறார்கள். 

போராளிகள் மீது பரப்பப்படும் அவதூறுகள் என்ன நோக்கில் இருக்கிறது?
புலிகள் இன்னாரை சுட்டிருந்தால் இவரை புலிகள் சுட்டார்கள் என்பதுக்கும் 
றோட்டில் போனவர்களை புலிகள் சுட்டார்கள் எண்பதுக்கும் இடையில் 
என்ன ரீதியான மனப்பாங்கு இருக்கிறது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

அதுக்கு தான் நாம் நிர்வாகத்தினை சார்ந்து இருக்கிறோம். 

முதலில், யூடியூபில் முறைப்பாடு கொடுக்கவேண்டும். சைபர் கிரைம் என்பது, ஒருவரை ஏமாத்தினால், மோசடி செய்தால் மட்டுமே கண்டு கொள்ளும். மேலும், சிறுவர், சிறுமியர் பாலியல் வக்கிரகம், யூடியூபில் ஏத்த முடியாது. 

உதாரணமாக, MGR பாட்டு ஒன்றினை 10 செக்கனுக்கு மேல் போட்டாலே, யூடூப்பில், இது ஏத்த முடியாது (copy rights) என்று சொல்லி விடும். அவ்வளவு கண்டிப்பாக சிஸ்டத்தினை வைத்து உள்ளனர்.

சும்மா, அவன் என்னை திட்டினான், பேசினான் என்று போய் நின்றால், அதனை தீர்க்க அவர்களுக்கு (சைபர் கிரைம்) நேரமோ, ஆட்களோ கிடையாது. 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

மேலும், இந்த மதனுக்கும் மனைவிக்கும், ஆளுக்கொரு BMW கார்கள், இரண்டு வீடுகள்.... அவர்களது மாத வருமானம் 6 லட்சம் இந்திய ரூபா. இது போலீஸ் கணிப்பு.

ஆனாலும், சிறைக்கு போனாலும், வரி கட்டுவதால், முதல் வகுப்பு.  

பையன் மனைவியை பக்கவா வித்து இருக்கிறான் 
என்ன என்ன மாதிரி எல்லாம் உழைக்கிறது உலகம் 

2 minutes ago, Nathamuni said:

 

சும்மா, அவன் என்னை திட்டினான், பேசினான் என்று போய் நின்றால், அதனை தீர்க்க அவர்களுக்கு நேரமோ, ஆட்களோ கிடையாது. 


 

அந்த சனியன் பிடிச்ச கொம்பனியில் இப்போது ஆட்களே கிடையாதுபோலவே இருக்கிறது 
எல்லாம் கொம்ப்யூட்டர்தான்.

நான் யாரோ இணைத்த வீடியோவை நேரம் இண்மையால் பின்பு பார்ப்பதற்காக 
எனது லிஸ்ட்டில் சேர்த்து இருந்தேன் 

அது பயங்கரவாதம் சார்ந்தது என்று என்னை மூன்று மாதம் தடை விதித்து வைத்து இருந்தது 
ஆனால் அப்பீல் பண்ண முடியும் என்று வரும் ... நீங்கள் எழுதலாம் அனால் அந்த சைடில் யாரும் வாசிப்பதில்லை. தடை தடைதான் 
 

Link to comment
Share on other sites

5 minutes ago, Maruthankerny said:

ஆபாசமாக திட்டியோ

பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ

அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ

இவற்றை செய்பவர்களின் நோக்கம் என்ன?
அதே நோக்கத்தை இந்த மூன்றையும் தவிர்த்து செய்தால் தகுமா? 

Abusive என்பது எந்த வடிவம் எடுத்தாலும் அது களையப்பட வேண்டும்.
Abuse  செய்பவர்களின் நோக்கமே இன்னொருவரை துன்புறுத்துவதுதான் 
பிஸிக்கல் ரீதியாக செய்ய பலம் இல்லாதபோது வார்த்தை பிரயோகமாக செய்கிறார்கள். 

 

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

இதை நீங்கள் ஏன் சம்பவம் நடந்த போது கூறவில்லை.( கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்திய தூதுவராலயம் எப்ப தொடக்கம் தன்ரை வேலைய  மாற்றியது .?

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

அதுக்கு தான் நாம் நிர்வாகத்தினை சார்ந்து இருக்கிறோம். 

 


 

நீங்கள் நிர்வாகத்தை மட்டுமே இது தொடர்பாக சார்ந்து இருக்க தேவையில்லை.

உதாரணத்துக்கு யாழில் ஒருவர் எழுதும் கருத்து ஒன்று இன்னொருவரையோ அல்லது பொது வெளியில் இருக்கின்ற ஒருவரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆபாசமாக, பாலியல் ரீதியில் திட்டியோ அல்லது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக எழுதியோ இருப்பின் அவர் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளாமல் நேரிடையாக சைபர் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் உள்ள ஒரு இடத்தில் முறையிட முடியும். அவர்கள் யாழில் வந்து உங்கள் விபரங்களை கேட்பின் யாழ் நிர்வாகமும் அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில் உள்ள சட்டம். இவற்றுக்கு கட்டுப்பட்டுத்தான் யாழ் மற்றும் ஏனையை ஆரோக்கியமான தளங்கள் இயங்குகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

என்ன நிழலி பகிடி விடுகிறீர்கள்?
நியானி நீங்கள் எல்லாம் வெட்டும் கருத்துக்கள் என்ன?

இப்போ இதிலேயே நீங்கள் என் மீது உங்கள் சொந்த வாரத்தை பிரோயோகம் பாவித்து 
என்னை பற்றி இல்லாதைத்தாநீ எழுதுகிறீர்கள்?
இதில் என்ன கருத்து பஞ்சம்? 

நாங்கள் இன்னும் ஒரு பாத்து கருத்து பரிமாற்றம் செய்தால் 
எப்படி இருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

நிழலி இன்று ஏதோ அப்செட் ஆகி இருக்கிறார் என்று மட்டும் புரிகிறது.

நான் மீண்டும் சொல்கிறேன். யாராவது என்னை மோசமாக திட்டினால், முதலில் ரிப்போர்ட் பண்ணுவது நிர்வாகத்திடம். 

திட்டியவர் வாழும் நாட்டின் தூதரகத்தில் அல்ல.

அதனையே நானும் சொல்கிறேன், youtube ரிப்போர்ட் வசதி செய்து இருக்கிறது.

தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவர் குறித்து, தூண்டப்பட்ட ஒரு நடிகை, நேரடியாகவே, தூசனை வார்த்தைகளினால் திட்டினார். அதுகுறித்து சைபர் கிரைம் எதுவுமே செய்யவில்லை.

அதனால் தான் சொல்கிறேன், அவர்களுக்கு நேரமோ, ஆட்களோ இல்லை.

மோசடி, சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பாகி, பாலியல் உறவு கொண்டு, கை விடல் (பாலியல் பலாத்காரத்துக்கு சமானம்) போன்றவையே அவர்கள் விசாரணைக்கு எடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

Just now, Maruthankerny said:

என்ன நிழலி பகிடி விடுகிறீர்கள்?
நியானி நீங்கள் எல்லாம் வெட்டும் கருத்துக்கள் என்ன?

இப்போ இதிலேயே நீங்கள் என் மீது உங்கள் சொந்த வாரத்தை பிரோயோகம் பாவித்து 
என்னை பற்றி இல்லாதைத்தாநீ எழுதுகிறீர்கள்?
இதில் என்ன கருத்து பஞ்சம்? 

நாங்கள் இன்னும் ஒரு பாத்து கருத்து பரிமாற்றம் செய்தால் 
எப்படி இருக்கும்? 

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

அத்துடன் உங்களுக்கு விமர்சனத்துக்கும் ஆபாசமாக / பாலியல் ரீதியில் திட்டுவதற்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கூட தெரிகின்றது இல்லை. இதைச் சுட்டிக் காட்டுவதும் உங்கள் கருத்துகளினூடாக உங்களைப் பற்றி எழும் பிம்பம் சார்ந்து விமர்சனம் வைப்பதும் ஆபாச / தரங்கெட்ட / பாலியல் ரீதியிலான / உண்மைக்கு புறம்பான விடயங்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

அத்துடன் உங்களுக்கு விமர்சனத்துக்கும் ஆபாசமாக / பாலியல் ரீதியில் திட்டுவதற்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கூட தெரிகின்றது இல்லை. இதைச் சுட்டிக் காட்டுவதும் உங்கள் கருத்துகளினூடாக உங்களைப் பற்றி எழும் பிம்பம் சார்ந்து விமர்சனம் வைப்பதும் ஆபாச / தரங்கெட்ட / பாலியல் ரீதியிலான / உண்மைக்கு புறம்பான விடயங்கள் அல்ல.

ok, cool down bro.... not a good day, it seems!!!

Link to comment
Share on other sites

44 minutes ago, Maruthankerny said:

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

முக்கியமாக இங்கு சொல்லப்பட்டு இருக்கும் செய்தியில் உள்ள சம்பவத்தை விட கீழ்த்தரமான ஒரு பதிலை / பதிவைக் காட்டவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

டபாரெண்டு, கருத்தாளர் நிழலி, நிர்வாகத்தரா மாற ஆலய பரிபாலன சபை விடாது என்று நினைக்கிறேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

நீங்கள் குற்றம் நடக்கிறது 
ஆனால் மகா குற்றம் இல்லை என்கிறீர்கள்

பின்பு என்னிடம் என்ன ஆதாரம் கேட்க்கிறீர்கள்? 

இன்னொரு மனிதரை மனோரீதியாக தாக்குவது என்பதும் 
தனிமனித தாக்குதலும் ஒரே விடயம்தான் 

அண்ணளவாக "கருத்து பஞ்சம்" என்ற சொற்பிரயோகம் பாவித்து 
நீங்களே அதை நிரூபணம் ஆக்கி இருக்கிறீர்கள் 

புலிகள்மீது அவ்வாறு யாரும் எழுதுவதில்லை என்று நீங்கள் கூறவேண்டும் 
அல்லது உங்கள் பாணியில் அவை பெருத்த அவதூறு இல்லை என்று ஒரு 
வாதத்தை முன்வைக்க வேண்டும் 

அதைவிடுத்து என்மீதே ஒருவகையான சொற்பிரயோகம் பாவித்துக்கொண்டு 
என்ன ரீதியான ஆதாரத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

நான் தேடி இணைத்தால் 
அவை பெருத்த விடயம் இல்லை எனும்போது 
அதை தடுக்க ஏதும் வழி இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

எனக்கு புள்ளி வழங்கியது அந்த அடிப்படையிலே நீங்களே அனுமதி கண்டும் காணாமல் விடுவியல்  நான் எழுதினால் மட்டும் குத்துமாக்கும் ?

Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

இவ்வாறு தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் அல்லது எந்த இனக் குழுமத்தையும் அவமானப்படுத்தும் கீழ்த்தரமான தலைப்புகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படி எங்கள் கண்களில் அகப்படாமல், தவறு என்று தெரிந்தும் எவரும் முறையிடாமல் இருக்கும் ஒரு பதிவை / பதிவுகளைக் காட்டவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

என்ன பெரும்ஸ்,

இதில கோஷான இழுத்து விட்டு நிழலியோட சேத்து ரெண்டு சாத்து, சாத்துற எண்ணம் போல🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

நீங்கள் நிர்வாகத்தை மட்டுமே இது தொடர்பாக சார்ந்து இருக்க தேவையில்லை.

உதாரணத்துக்கு யாழில் ஒருவர் எழுதும் கருத்து ஒன்று இன்னொருவரையோ அல்லது பொது வெளியில் இருக்கின்ற ஒருவரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆபாசமாக, பாலியல் ரீதியில் திட்டியோ அல்லது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக எழுதியோ இருப்பின் அவர் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளாமல் நேரிடையாக சைபர் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் உள்ள ஒரு இடத்தில் முறையிட முடியும். அவர்கள் யாழில் வந்து உங்கள் விபரங்களை கேட்பின் யாழ் நிர்வாகமும் அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில் உள்ள சட்டம். இவற்றுக்கு கட்டுப்பட்டுத்தான் யாழ் மற்றும் ஏனையை ஆரோக்கியமான தளங்கள் இயங்குகின்றன.

நீங்கள் சைபர் குற்றங்கள் குறித்து தவறாக புரிந்து கொண்டுளீர்கள் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், நான் உங்களை, ஆபாசமாக திட்டினேன் என்று நீங்கள் நினைத்தால், போக வேண்டியது, போலீஸ் அல்ல, புரோகிராசியர்.

மான நஷ்ட வழக்கு போடு அவன் மேலே என்று சொல்வீர்கள்.

நான் பெரிய வியாபார பிஸ்தா, ஒரு 10,000 டொலர் தாருங்கள், ஒரே மாதத்தில் 100,000 மாக திருப்பி தருவேன் வ்ந்தரு சொல்லி விட்டு, பணத்துடன் ஓடி விட்டால், போக வேண்டியது போலீஸ், புரோகிராசியர் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.