Jump to content

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தன்னைப் பற்றியும் மறைந்த தன் கணவர் ரகுவரன் குறித்தும் அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே. சுவாமி என்பவர் மீது சென்னை நகரக் காவல்துறையில் திரைக்கலைஞர் ரோகிணி புகார் அளித்துள்ளார்.

ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் தொடர்ந்து எழுதி வந்த கிஷோர் கே சுவாமி, பல்வேறு பெண் பத்திரிகையாளர்கள் குறித்தும் அரசியல் தலைவர்கள் குறித்தும் ஆபாசமாகவும் அவதூறாகவும் எழுதிவந்த நிலையில், அவர் மீது பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் பெண்கள் புகார்களை அளித்தனர். இவற்றில் சில வழக்குகளில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சுவாமி, ஜாமீனில் விடப்பட்டார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் மறைந்த முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை குறித்து சில நாட்களுக்கு முன்பாக அவதூறான கருத்து ஒன்றைப் பதிவுசெய்தார். இது தொடர்பாக புகார்கள் வந்த நிலையில், அவரை சென்னை சங்கர் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்குப் பிறகு, பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஏற்கனவே அளித்திருந்த புகாரில் மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் அவரை மீண்டும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜூன் 30ஆம் தேதிவரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

ரோஹிணி

பட மூலாதாரம்,ROHINI

இந்த நிலையில் திரைக்கலைஞர் ரோகிணி ஆன்லைன் மூலம் சென்னை நகரக் காவல் துறையிடம் ஆன்லைனில் புகார் ஒன்றைப் பதிவுசெய்துள்ளார்.

அதில், தன்னைப் பற்றியும் மறைந்த தனது கணவர் ரகுவரன் குறித்தும் ஃபேஸ்புக்கில் அவதூறாக கிஷோர் கே சாமி எழுதியுள்ளதாக ரோகிணி புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கீழ்ப்பாக்கம் காவல்துறைக்கு அனுப்பப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே கிஷோர் கே. சுவாமி கைது செய்யப்பட்டபோது அரசியல் தலைவர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகப் பதிவிட்ட நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக கிஷோர் பல தலைவர்களைப் பற்றி மிக இழிவாகவும் அவதூறாகவும் எழுதிய ஃபேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டுகளை முன்வைத்து சிலர் நியாயம் கேட்டனர்.

இந்தப் பதிவில்தான் ரோகிணி - ரகுவரன் தம்பதி குறித்து கிஷோர் மிக மோசமாக எழுதியிருந்தார். அதை முன்வைத்தே இப்போது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

நடிகை ரோஹிணிக்கும் நடிகர் ரகுவரனுக்கும் 1996ல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரிஷிவரன் என்ற மகன் உள்ளார். 2004ல் இந்த தம்பதி விவகாரத்து பெற்றனர். இருப்பினும் ரகுவரனின் கடைசி காலத்தில் அவருடன் சுமூகாகவே ரோஹிணி பழகி வந்தார்.

கிஷோர் கே.சாமி மீது ரோகிணி போலீஸ் புகார்: "ரகுவரன் பற்றியும் என்னைப் பற்றியும் அவதூறாக பதிவிட்டார்" - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்?

உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு திட்டினால், சுந்தர் பிச்சைக்கு சொல்லுவீர்களா அல்லது, பஸ்சை பிடித்து ஒட்டாவா போய், பிரித்தானிய தூதரகத்திடம் முறையிடுவீர்களா? சொல்லுங்கோ, நிழலி...சொல்லுங்கோ? 

விடியோவை யாழ்பாணத்திலை போன இடத்திலை, போட்டு இருந்தால், என்ன செய்வீர்கள்?

சரி, திட்டுறதுக்கு எண்டு பக்கவாத்தியம் மியூசிக், ஜெர்மினியிலை இருந்து வந்திருந்தால், ஜேர்மன் எம்பசிக்குமெல்லே போகோணும்.

IT யில் இருக்கும் உங்களிடம், இதனை எதிர்பார்க்கவில்லை.

youtube ரிப்போர்ட் பண்ணும் வசதிகள் உண்டு.

அரசியலை ஒருபக்கமாக வைத்து விடுங்கள். (இருந்தாலும் ஒரு குறிப்பு: திட்டியவர் சிங்கப்பூர், திட்டு வாங்க கூடிய அளவில், இந்திய அரசியல் வாதியின் தனிப்பட்ட வாழ்வினை தொட்டவர், இலங்கை, ஊடகம் அமெரிக்கா. இதுக்கு, இந்திய தூதரகம் என்ன செய்யலாம் என்று யோசிக்கவில்லையா?)

இந்திய தூதரகம் இப்ப, சம்பந்தரோடை வலு பிஸி. உதே அவயலுக்கு தலை போற பிரச்சனையாக இருக்கும்.

youtube என்பது ஒரு அமெரிக்க ஊடகம். நமக்கு கேடு கெட்ட  வார்த்தைகளாக தெரிபவை, அங்கே, சாதாரண விடயம். இது உங்களுக்கு புரியாததல்ல.

இந்த மதன் சிக்கலுக்குள்ளான ஒரே விசயம்: அவரது சேனலுக்கு சிறுபிள்ளைகளை வரவழைத்து ஆபாசமாக பேசினார் என்பதை.

சிறுபிள்ளைகள் என்ற விசயம் youtube கரிசனைகள் கொள்ளலாம். ஆனாலும், மதன் விடயத்தில், இந்திய நீதிமன்றம் அதனை தண்டித்தால் மட்டுமே சானலை முடக்கும்.

மதன், சாட்டை, சுந்தரவள்ளி, பழனி அனைத்துமே, youtube பொறுத்தளவில் பணம் காய்க்கும் மரங்கள். 

நீங்களும், நானும் ஒருவரை ஒருவர் திட்டி வீடியோ போட்டால், அதனை சனம் விழுந்து, விழுந்து பார்க்குது எண்டால், விசயம் என்ன தெரியுமா? நானும், நீங்களும், பிசினஸ் ஐடியா போட்டு, இந்த வேலை இல்லாத, விடுப்பு பார்க்கும் சனத்தின் நேரத்தில் பணம் சம்பாதிக்க,  அலுவல் பார்க்கிறோம். 

இது புரிந்தால், இந்த youtube வீடியோ போட்டு, சம்பாதிக்கலாமே, எதுக்கு, it வேலை, வரி, டென்ஷன் என்று யோசிக்க தொடங்கி விடுவீர்கள்.

மேலும், இந்த மதனுக்கும் மனைவிக்கும், ஆளுக்கொரு BMW கார்கள், இரண்டு வீடுகள்.... அவர்களது மாத வருமானம் 6 லட்சம் இந்திய ரூபா. இது போலீஸ் கணிப்பு.

ஆனாலும், சிறைக்கு போனாலும், வரி கட்டுவதால், முதல் வகுப்பு.  

Link to comment
Share on other sites

36 minutes ago, Nathamuni said:

நீங்கள், எதனை, எதனூடு முடிச்சு போடுகிறீர்கள்?

உதாரணமாக, நான் உங்களை, இங்கிருந்து நீங்கள் காதை பொத்துற மாதிரி வீடியோ போட்டு 

 

ஆபாசமாக திட்டியவர் மீது ரோகிணி புகார் கொடுத்தது போன்று அனந்தியை ஆபாசமாக திட்டியவர் மீது புகார் கொடுக்க சொல்வது எப்படி தொடர்பில்லாமல் தெரிகின்றது உங்களுக்கு? அனந்தியை திட்டி படு ஆபாசமாக பேசியவர்கள் தமிழகத்திலும் உள்ளனர். (அல்லது சிங்கபூர் ஆள் திட்டியது மட்டும்தான் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம்) தமிழகம் இந்தியாவில் இருப்பதால் இந்திய தூதரகத்தின் மூலம் புகார் கொடுக்க சொல்லும் போது உங்களுக்கு ஏன் அது தவறாக தெரிகின்றது.

36 minutes ago, Nathamuni said:

 

 

youtube ரிப்போர்ட் பண்ணும் வசதிகள் உண்டு.

 


நான் யுடீயூப் இற்கு சென்று முறையிடச் சொல்லவில்லை. ஆபாசமாக திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்கத்தான் சொல்கின்றேன். சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக தனி நபர்களின் படங்களை தரவேற்றுகின்றவர்களில் இரந்து தரங்கெட்ட வகைகளில் பதிவுகள் போடுகின்றவர்கள் வரைக்கு நடவடிக்கை எடுப்பது Cyber crime பிரிவு. அங்கு தான் புகார் கொடுப்பது. சமூகவலைத்தளங்களின் CEO விடம் அல்ல

 

36 minutes ago, Nathamuni said:

 

IT யில் இருக்கும் உங்களிடம், இதனை எதிர்பார்க்கவில்லை.

 

 

உங்களுக்கு என்  IT துறை பற்றிய புரிதலும் இல்லை, சமூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசுகின்றவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது பற்றிய புரிதலும் இல்லை. ஆனால் இவ்வாறு எதிலும் ஒரு தெளிவான புரிதல் இல்லாமல் மற்றவர்களின் தொழில்களை கருத்துகளில் இழுத்து கருத்தாடுவது ஒன்றும் உங்களுக்கு புதுதும் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

Link to comment
Share on other sites

1 minute ago, Maruthankerny said:

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி, என்னாச்சு, கோவிக்கிறீர்கள்?

IT யில் இருப்பவர்களுக்கு லாஜிக் முக்கியம் என்பதனை சொல்லவே, அவ்வாறு சொன்னேன். உங்கள் தொழிலை இழுத்து நக்கல் அடிக்க அல்ல என்பதும் உங்களுக்கு புரியும்.

முதலில், அடிப்படை விடயம் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்.

ரோகினி, இப்போது முறைப்பாடு செய்ய போனது அரசியல் தூண்டுதல் காரணமாக. அவர் சம்பந்தமான பேச்சினை, இந்த மனிதர் கிசோர் செய்தது, அதிமுக காலத்தில்.

அதுவே சாட்டை துரைமுருகனுக்கும் நடக்கிறது.

இது நீதிமன்றில் நில்லாது. கருத்து சுதந்திரம் என்றே முடியும். இதுவும் உங்களுக்கு புரியாதது அல்ல.

அரசியல் வேண்டாம் என்றேன். இருந்தாலும் பெயர் குறிப்பிடாமல் சொல்கிறேன். ஐயன் கார்த்திகேயன் தனது சேனலை வளர்க்க, இலங்கையில், வீட்டில் இருக்கும் பெண்மணியின் வாயை கிளற, அதுக்கு சிங்கப்பூரில் இருந்து ஒருத்தர் பதிலை போட, அதனை முறைப்பாடு எடுத்து, டெல்லிக்கு அனுப்பி, இந்திய அரசும், சிங்கப்பூர் அரசும், இலங்கை அரசும் ராஜதந்திர வேலைகள் செய்து, தீர்வு காணவேண்டும் என்கிறீர்களா? இந்திய தூதரகத்துக்கு, இதுவா வேலை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

ஆபாசமாக திட்டியோ

பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ

அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ

இவற்றை செய்பவர்களின் நோக்கம் என்ன?
அதே நோக்கத்தை இந்த மூன்றையும் தவிர்த்து செய்தால் தகுமா? 

Abusive என்பது எந்த வடிவம் எடுத்தாலும் அது களையப்பட வேண்டும்.
Abuse  செய்பவர்களின் நோக்கமே இன்னொருவரை துன்புறுத்துவதுதான் 
பிஸிக்கல் ரீதியாக செய்ய பலம் இல்லாதபோது வார்த்தை பிரயோகமாக செய்கிறார்கள். 

போராளிகள் மீது பரப்பப்படும் அவதூறுகள் என்ன நோக்கில் இருக்கிறது?
புலிகள் இன்னாரை சுட்டிருந்தால் இவரை புலிகள் சுட்டார்கள் என்பதுக்கும் 
றோட்டில் போனவர்களை புலிகள் சுட்டார்கள் எண்பதுக்கும் இடையில் 
என்ன ரீதியான மனப்பாங்கு இருக்கிறது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, நிழலி said:

இவ்வாறு சாதாரணமாக நீங்கள் சொல்லிவிட்டு இருக்க முடியாது.

யாழில் எங்கே எந்த இடத்தில் எவரை ஆபாசமாக திட்டியோ, பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ அல்லது அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ அது இன்றும் மறைக்கப்படாமல் உள்ளது எனக் காட்டவும். இதை ஒரு சவாலாகவே சொல்கின்றேன். ஒரு பதிவையாவது காட்டவும்

அதுக்கு தான் நாம் நிர்வாகத்தினை சார்ந்து இருக்கிறோம். 

முதலில், யூடியூபில் முறைப்பாடு கொடுக்கவேண்டும். சைபர் கிரைம் என்பது, ஒருவரை ஏமாத்தினால், மோசடி செய்தால் மட்டுமே கண்டு கொள்ளும். மேலும், சிறுவர், சிறுமியர் பாலியல் வக்கிரகம், யூடியூபில் ஏத்த முடியாது. 

உதாரணமாக, MGR பாட்டு ஒன்றினை 10 செக்கனுக்கு மேல் போட்டாலே, யூடூப்பில், இது ஏத்த முடியாது (copy rights) என்று சொல்லி விடும். அவ்வளவு கண்டிப்பாக சிஸ்டத்தினை வைத்து உள்ளனர்.

சும்மா, அவன் என்னை திட்டினான், பேசினான் என்று போய் நின்றால், அதனை தீர்க்க அவர்களுக்கு (சைபர் கிரைம்) நேரமோ, ஆட்களோ கிடையாது. 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

 

மேலும், இந்த மதனுக்கும் மனைவிக்கும், ஆளுக்கொரு BMW கார்கள், இரண்டு வீடுகள்.... அவர்களது மாத வருமானம் 6 லட்சம் இந்திய ரூபா. இது போலீஸ் கணிப்பு.

ஆனாலும், சிறைக்கு போனாலும், வரி கட்டுவதால், முதல் வகுப்பு.  

பையன் மனைவியை பக்கவா வித்து இருக்கிறான் 
என்ன என்ன மாதிரி எல்லாம் உழைக்கிறது உலகம் 

2 minutes ago, Nathamuni said:

 

சும்மா, அவன் என்னை திட்டினான், பேசினான் என்று போய் நின்றால், அதனை தீர்க்க அவர்களுக்கு நேரமோ, ஆட்களோ கிடையாது. 


 

அந்த சனியன் பிடிச்ச கொம்பனியில் இப்போது ஆட்களே கிடையாதுபோலவே இருக்கிறது 
எல்லாம் கொம்ப்யூட்டர்தான்.

நான் யாரோ இணைத்த வீடியோவை நேரம் இண்மையால் பின்பு பார்ப்பதற்காக 
எனது லிஸ்ட்டில் சேர்த்து இருந்தேன் 

அது பயங்கரவாதம் சார்ந்தது என்று என்னை மூன்று மாதம் தடை விதித்து வைத்து இருந்தது 
ஆனால் அப்பீல் பண்ண முடியும் என்று வரும் ... நீங்கள் எழுதலாம் அனால் அந்த சைடில் யாரும் வாசிப்பதில்லை. தடை தடைதான் 
 

Link to comment
Share on other sites

5 minutes ago, Maruthankerny said:

ஆபாசமாக திட்டியோ

பாலியல் ரீதியில் கொச்சைப்படுத்தியோ

அனாகரீகமாக தரங்கெட்டு திட்டியோ

இவற்றை செய்பவர்களின் நோக்கம் என்ன?
அதே நோக்கத்தை இந்த மூன்றையும் தவிர்த்து செய்தால் தகுமா? 

Abusive என்பது எந்த வடிவம் எடுத்தாலும் அது களையப்பட வேண்டும்.
Abuse  செய்பவர்களின் நோக்கமே இன்னொருவரை துன்புறுத்துவதுதான் 
பிஸிக்கல் ரீதியாக செய்ய பலம் இல்லாதபோது வார்த்தை பிரயோகமாக செய்கிறார்கள். 

 

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

Link to comment
Share on other sites

3 hours ago, நிழலி said:

சமூகவலைத்தளங்களில் எதையும் எப்படியும் வரம்பு மீறி எழுதலாம், ஆபாசமாக திட்டலாம் என்பவர்களுக்கும், முக்கியமாக அரசியலில், பொது வெளியில் இருக்கும் பெண்களை பாலியல் ரீதியில் எவ்வளவு ஆபாசமகாகவும், அசிங்கமாகவும்திட்டிக் கொண்டு இருக்கும் ஒழுக்கம் கெட்டவர்களுக்கும் இவ்வாறான நடவடிக்கைகளும் முறைப்பாடுகளும் நல்ல பாடங்களை கற்பித்து கொடுக்கும் என நம்புகின்றேன். 

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்தச் செய்தியும் இதை போன்றவர்களுக்கு எதிரான செய்தி:

 

இதை நீங்கள் ஏன் சம்பவம் நடந்த போது கூறவில்லை.( கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் எதற்கு) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

அனந்தியும் இந்திய தூதராலயமூடாக தன்னை ஆபாசமாக திட்டிய கோழைகளுக்கு எதிராக சரியான வழியில் முறைப்பாடு செய்தால் நல்லது.

இந்திய தூதுவராலயம் எப்ப தொடக்கம் தன்ரை வேலைய  மாற்றியது .?

Link to comment
Share on other sites

11 minutes ago, Nathamuni said:

அதுக்கு தான் நாம் நிர்வாகத்தினை சார்ந்து இருக்கிறோம். 

 


 

நீங்கள் நிர்வாகத்தை மட்டுமே இது தொடர்பாக சார்ந்து இருக்க தேவையில்லை.

உதாரணத்துக்கு யாழில் ஒருவர் எழுதும் கருத்து ஒன்று இன்னொருவரையோ அல்லது பொது வெளியில் இருக்கின்ற ஒருவரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆபாசமாக, பாலியல் ரீதியில் திட்டியோ அல்லது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக எழுதியோ இருப்பின் அவர் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளாமல் நேரிடையாக சைபர் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் உள்ள ஒரு இடத்தில் முறையிட முடியும். அவர்கள் யாழில் வந்து உங்கள் விபரங்களை கேட்பின் யாழ் நிர்வாகமும் அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில் உள்ள சட்டம். இவற்றுக்கு கட்டுப்பட்டுத்தான் யாழ் மற்றும் ஏனையை ஆரோக்கியமான தளங்கள் இயங்குகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

என்ன நிழலி பகிடி விடுகிறீர்கள்?
நியானி நீங்கள் எல்லாம் வெட்டும் கருத்துக்கள் என்ன?

இப்போ இதிலேயே நீங்கள் என் மீது உங்கள் சொந்த வாரத்தை பிரோயோகம் பாவித்து 
என்னை பற்றி இல்லாதைத்தாநீ எழுதுகிறீர்கள்?
இதில் என்ன கருத்து பஞ்சம்? 

நாங்கள் இன்னும் ஒரு பாத்து கருத்து பரிமாற்றம் செய்தால் 
எப்படி இருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிழலி said:

இவ்வாறு இங்குள்ளவர்களை Abusive ஆக (Physical லாக அல்லது mentally யாக ) எவராவது திட்டிய கருத்து ஒன்றைக் காட்டவும். 

போராளிகளையும் அவர்களின் தியாகங்களையும் கொச்சைபடுத்துவதில் முன்னிலை வகிப்பது எது என்றால், தான் சொல்லும் கருத்துகள் வலு இழக்கும் போது அவர்களை திரிகளில் இழுத்து அவர்களின் பின்னால் தங்கள் கருத்து பஞ்சத்தை மறைப்பதும் ஆகும். இந்த பதிலில் அதைத் தான் நீங்கள் செய்கின்றீர்கள்.

நான் முதல் கேட்ட மாதிரி ஒரு பதிவை காட்டவும்.

நிழலி இன்று ஏதோ அப்செட் ஆகி இருக்கிறார் என்று மட்டும் புரிகிறது.

நான் மீண்டும் சொல்கிறேன். யாராவது என்னை மோசமாக திட்டினால், முதலில் ரிப்போர்ட் பண்ணுவது நிர்வாகத்திடம். 

திட்டியவர் வாழும் நாட்டின் தூதரகத்தில் அல்ல.

அதனையே நானும் சொல்கிறேன், youtube ரிப்போர்ட் வசதி செய்து இருக்கிறது.

தமிழகத்தில் ஒரு அரசியல் தலைவர் குறித்து, தூண்டப்பட்ட ஒரு நடிகை, நேரடியாகவே, தூசனை வார்த்தைகளினால் திட்டினார். அதுகுறித்து சைபர் கிரைம் எதுவுமே செய்யவில்லை.

அதனால் தான் சொல்கிறேன், அவர்களுக்கு நேரமோ, ஆட்களோ இல்லை.

மோசடி, சமூக வலைத்தளம் ஊடாக தொடர்பாகி, பாலியல் உறவு கொண்டு, கை விடல் (பாலியல் பலாத்காரத்துக்கு சமானம்) போன்றவையே அவர்கள் விசாரணைக்கு எடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

Just now, Maruthankerny said:

என்ன நிழலி பகிடி விடுகிறீர்கள்?
நியானி நீங்கள் எல்லாம் வெட்டும் கருத்துக்கள் என்ன?

இப்போ இதிலேயே நீங்கள் என் மீது உங்கள் சொந்த வாரத்தை பிரோயோகம் பாவித்து 
என்னை பற்றி இல்லாதைத்தாநீ எழுதுகிறீர்கள்?
இதில் என்ன கருத்து பஞ்சம்? 

நாங்கள் இன்னும் ஒரு பாத்து கருத்து பரிமாற்றம் செய்தால் 
எப்படி இருக்கும்? 

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

அத்துடன் உங்களுக்கு விமர்சனத்துக்கும் ஆபாசமாக / பாலியல் ரீதியில் திட்டுவதற்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கூட தெரிகின்றது இல்லை. இதைச் சுட்டிக் காட்டுவதும் உங்கள் கருத்துகளினூடாக உங்களைப் பற்றி எழும் பிம்பம் சார்ந்து விமர்சனம் வைப்பதும் ஆபாச / தரங்கெட்ட / பாலியல் ரீதியிலான / உண்மைக்கு புறம்பான விடயங்கள் அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

அத்துடன் உங்களுக்கு விமர்சனத்துக்கும் ஆபாசமாக / பாலியல் ரீதியில் திட்டுவதற்கும் இடையில் இருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் கூட தெரிகின்றது இல்லை. இதைச் சுட்டிக் காட்டுவதும் உங்கள் கருத்துகளினூடாக உங்களைப் பற்றி எழும் பிம்பம் சார்ந்து விமர்சனம் வைப்பதும் ஆபாச / தரங்கெட்ட / பாலியல் ரீதியிலான / உண்மைக்கு புறம்பான விடயங்கள் அல்ல.

ok, cool down bro.... not a good day, it seems!!!

Link to comment
Share on other sites

44 minutes ago, Maruthankerny said:

இதிலும்விட மிகவும் கீழ்த்தரமாக இங்கே யாழ் களத்தில் நடக்கிறது 
முதலில் நாம் அதனை தடுப்போம் பின்பு தூரகங்களுக்கு மனு கொடுப்போம் 

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

முக்கியமாக இங்கு சொல்லப்பட்டு இருக்கும் செய்தியில் உள்ள சம்பவத்தை விட கீழ்த்தரமான ஒரு பதிலை / பதிவைக் காட்டவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நிழலி said:

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

டபாரெண்டு, கருத்தாளர் நிழலி, நிர்வாகத்தரா மாற ஆலய பரிபாலன சபை விடாது என்று நினைக்கிறேன்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நிழலி said:

மருதங்கேணி, மீண்டும் நிர்வாக ரீதியில் கேட்கின்றேன், யாழில் நீங்கள் குறிப்பிட்டு இருக்கும் விதமான ஒரு கருத்தை காட்டவும். 

நீங்கள் குற்றம் நடக்கிறது 
ஆனால் மகா குற்றம் இல்லை என்கிறீர்கள்

பின்பு என்னிடம் என்ன ஆதாரம் கேட்க்கிறீர்கள்? 

இன்னொரு மனிதரை மனோரீதியாக தாக்குவது என்பதும் 
தனிமனித தாக்குதலும் ஒரே விடயம்தான் 

அண்ணளவாக "கருத்து பஞ்சம்" என்ற சொற்பிரயோகம் பாவித்து 
நீங்களே அதை நிரூபணம் ஆக்கி இருக்கிறீர்கள் 

புலிகள்மீது அவ்வாறு யாரும் எழுதுவதில்லை என்று நீங்கள் கூறவேண்டும் 
அல்லது உங்கள் பாணியில் அவை பெருத்த அவதூறு இல்லை என்று ஒரு 
வாதத்தை முன்வைக்க வேண்டும் 

அதைவிடுத்து என்மீதே ஒருவகையான சொற்பிரயோகம் பாவித்துக்கொண்டு 
என்ன ரீதியான ஆதாரத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

நான் தேடி இணைத்தால் 
அவை பெருத்த விடயம் இல்லை எனும்போது 
அதை தடுக்க ஏதும் வழி இருக்கிறதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிழலி said:

நியானியும் நானுன் வெட்டும் கருத்துகள் இவ்வாறான தரங்குறைந்த மற்றும் அனாகரீகமான தனிமனித தாக்குதல் மற்றும் யாழ் விதிகளை மீறுகின்ற கருத்துகள். 

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

எனக்கு புள்ளி வழங்கியது அந்த அடிப்படையிலே நீங்களே அனுமதி கண்டும் காணாமல் விடுவியல்  நான் எழுதினால் மட்டும் குத்துமாக்கும் ?

Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

இவ்வாறு தெலுங்கர்களை வந்தேறிகள் என்று அவமானப்படுத்தும் அல்லது எந்த இனக் குழுமத்தையும் அவமானப்படுத்தும் கீழ்த்தரமான தலைப்புகளை நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படி எங்கள் கண்களில் அகப்படாமல், தவறு என்று தெரிந்தும் எவரும் முறையிடாமல் இருக்கும் ஒரு பதிவை / பதிவுகளைக் காட்டவும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெருமாள் said:

தெலுங்குவந்தேறி என்று தலையங்கம் போடலாம் தனிப்பட்டவர்கள் எழுதினால் பிழை என்கிறீர்கள் அது பக்க சார்பானதுதானே ?

என்ன பெரும்ஸ்,

இதில கோஷான இழுத்து விட்டு நிழலியோட சேத்து ரெண்டு சாத்து, சாத்துற எண்ணம் போல🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, நிழலி said:

நீங்கள் நிர்வாகத்தை மட்டுமே இது தொடர்பாக சார்ந்து இருக்க தேவையில்லை.

உதாரணத்துக்கு யாழில் ஒருவர் எழுதும் கருத்து ஒன்று இன்னொருவரையோ அல்லது பொது வெளியில் இருக்கின்ற ஒருவரையோ நேரிடையாகவோ மறைமுகமாகவோ ஆபாசமாக, பாலியல் ரீதியில் திட்டியோ அல்லது உண்மைக்கு முற்றிலும் புறம்பாக எழுதியோ இருப்பின் அவர் யாழ் நிர்வாகத்தை தொடர்பு கொள்ளாமல் நேரிடையாக சைபர் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரம் உள்ள ஒரு இடத்தில் முறையிட முடியும். அவர்கள் யாழில் வந்து உங்கள் விபரங்களை கேட்பின் யாழ் நிர்வாகமும் அதை மறுக்காமல் கொடுக்க வேண்டும். இது தான் இன்றைய நிலையில் உள்ள சட்டம். இவற்றுக்கு கட்டுப்பட்டுத்தான் யாழ் மற்றும் ஏனையை ஆரோக்கியமான தளங்கள் இயங்குகின்றன.

நீங்கள் சைபர் குற்றங்கள் குறித்து தவறாக புரிந்து கொண்டுளீர்கள் என்று நினைக்கிறேன்.

மீண்டும் சொல்கிறேன், நான் உங்களை, ஆபாசமாக திட்டினேன் என்று நீங்கள் நினைத்தால், போக வேண்டியது, போலீஸ் அல்ல, புரோகிராசியர்.

மான நஷ்ட வழக்கு போடு அவன் மேலே என்று சொல்வீர்கள்.

நான் பெரிய வியாபார பிஸ்தா, ஒரு 10,000 டொலர் தாருங்கள், ஒரே மாதத்தில் 100,000 மாக திருப்பி தருவேன் வ்ந்தரு சொல்லி விட்டு, பணத்துடன் ஓடி விட்டால், போக வேண்டியது போலீஸ், புரோகிராசியர் அல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.