Jump to content

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்


 

அஸ்தமனமானது ‘முதலாவது’ சரணாகதி

சின்னையா செல்வராஜ்

இதுவும் நடந்துவிடவேண்டுமென நினைத்திருந்தவர்களுக்குக் கசப்பாகவும் நடந்துவிடவே கூடாதென எண்ணியிருந்தோருக்கு திகைப்பூட்டியும், ‘ஜனாதிபதி மாளிகை’யைக் களமாகக் கொண்டு, ‘ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு’த் தொடர்பாக, ஜூன் 15ஆம் திகதி வெளிவந்த செய்திகள் அமைந்திருந்தன. அதுதான் ‘முதல்’ முறை என்றாலும், ‘இறுதி’யாகி விடக்கூடாது என்பதே, பலரது கரிசனையுமாகும். 

ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னரான அறிவிப்புகள், ஜனாதிபதி செயலகத் தரப்பிலிருந்து விடுக்கப்படுவது அரிதாகும். இராஜதந்திர சந்திப்புகள் இடம்பெறுமாயின், அவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். ஆனால், கூட்டமைப்புடனான சந்திப்புத் தொடர்பிலும், சந்திப்பு பிற்போடப்பட்டமை குறித்தும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பக்கத்திலிருந்தே செய்திகள் வௌிப்படுத்தப்பட்டன.  

ஜனாதிபதித் தேர்தலையடுத்து, கோட்டாபய ராஜபக்‌ஷ, ஜனாதிபதியாக பதிவியேற்றதன் பின்னர், 69 இலட்சம் பெரும்பான்மை மக்களின் வாக்குளைப் பெற்று வெற்றியீட்டிய அதே உந்துதலுடன் தன்பயணத்தைத் தொடர்ந்த ஜனாதிபதி, சிங்கள பெரும்பான்மை மக்களின் மனங்களில் ‘சிங்கம்’ என இடம்பிடித்துக்கொண்டார். 

‘நெல்லுக்கு இறைத்த நீர், வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் பொசிவது போல்’,  அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் எந்தவொரு திட்டமாக இருந்தாலும், சிறுபான்மையினரின் பக்கமாகக் கடைக்கண் பார்வை மட்டுமே பார்க்கப்பட்டது.  
அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள், நிவாரணக் கொடுப்பனவுகள் என்று எதுவாக இருந்தாலும் அவையெல்லாம், தென்னிலங்கையை மையப்படுத்தியே முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கின்றன. 

சிறுபான்மை இனங்கள், பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில், அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர், பெருமெடுப்பில் முன்னெடுக்கப்படவில்லை என்பதே பலருடைய குற்றச்சாட்டுகளாகும். 

பல்லினங்கள் வாழும் நாட்டில், சகலருக்கும் பொதுவானவராகவே ஜனாதிபதி இருத்தல் வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் முன்னிலையில் போட்டியிட்டவர்களும் வெற்றியீட்டியவர்களும், சிறுபான்மையின மக்களை ஓரங்கட்டிப் பார்க்கவில்லை.

அரசியல் கொள்கை கோட்பாடுகளின் பிரகாரமும் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பொறுத்தும், அவற்றுக்கு ஆதரவானவர்களும் இருக்கலாம்; எதிரானவர்களும் இருக்கலாம். ஆனால், நாட்டுக்கு ஒருவரே ஜனாதிபதியாவார். 

கடந்த கால ஜனாதிபதிகள், அவ்வாறான பேதங்களை ஓரளவுக்கேனும் மறந்து செயற்பட்டனர். ஆனால், அவ்வாறான தோற்றப்பாட்டை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ காண்பிக்கவில்லை. இல்லையேல், சுற்றியிருக்கும் பரிவாரங்கள் அதற்கு இடமளிக்கவில்லை. 

என்னதான் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதி கொண்டிருந்தாலும் ‘ஜனாதிபதி’ என்றொருவரால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணமுடியாது. அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்புக்கூறல், ஆளும் கட்சியின் ஒ‌ற்றுமை, பாராளுமன்றத்தின் அங்கிகாரம், மக்களின் ஆதரவு போன்றவை எல்லாம், ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருக்கின்றன. 

இவற்றுக்கு ஒருபடி மேலேசெல்லவேண்டுமாயின், எதிர்க்கட்சியினரையும் அழைத்துப் பேசி, அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, அரசியல் சுய இலாபத்துக்காக இல்லாது, நாடு, மக்கள், எதிர்கால சந்ததி ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, தீர்மானங்கள் எட்டப்படுமாயின், ஜனாதிபதி தனித்து நிற்கவேண்டியதில்லை.  

விமர்சனங்களுக்குச் செவிசாய்க்காது, தான்தோன்றித்தனமாக, தன்னைச் சுற்றியிருக்கும் சிறு குழுவின் ஆலோசனைகளைப் பெற்று, அவ்வாறானவர்களை மட்டுமே திருப்திப்படுத்துவதற்கான முடிவுகள், கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக வேண்டியதை தவிர்க்கவே முடியாது. 

“பயங்காரவாதிகளைப் போல, கொரோனாவையும் நாட்டிலிருந்து துடைத்தெறிவோம்” என வீராப்பு வசனங்களைப் பேசி, தனிவழியில் சென்று,  திக்குமுக்காட வேண்டிய நிலைமைக்கு  அரசாங்கம் வந்துவிட்டது.

நானென்ன செய்வதெனக் கூறி, ஒரு நாட்டின் தலைவன் கைகளை விரித்துவிடமுடியாது; ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாளியாக இருக்கவேண்டும். அதற்குத் தேவையான வகையில், நிர்வாகக் கட்டமைப்புகளை வகுத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலம் தொடர்பில் தீர்க்கதரிசனத்துடன் சிந்தித்து, முடிவுகளை எடுக்கவேண்டும். 

ஜனாதிபதி, பெரும்பான்மை வாக்குகளால் வென்றிருப்பதை மறுதலிப்பதற்கு இல்லை; அந்தச் சூட்டோடு சூடாக, தங்களுக்கு ஆதரவளிக்காத தரப்பு மக்கள் பிரதிநிதிகளை  அழைத்துப் பேசி, அம்மக்களின் பிரச்சினைகளையும்  செவிசாய்த்திருந்தால், அது சிம்மாசனத்தை மென்மேலும் அலங்கரித்திருக்கும். 

‘சிங்கள-பௌத்த தலைவன்’ என்ற நாமம் இல்லாது ஒழிந்துவிடுமோ என்றோர் அச்சம், ஜனாதிபதியிடம் குடிகொண்டிருக்கலாம். அதனால், தமிழ்ப் பிரதிநிதிகளுடனான சந்திப்பை, இதுவரை காலமும் தவிர்த்துவந்திருக்கலாம். 

நாட்டில் புரையோடிப்போய் இருக்கின்ற பிரச்சினையென்றால், இனப்பிரச்சினையை மட்டுமே கூறமுடியும். அப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கான எந்தவொரு செயற்பாடும், புதிய ஜனாதிபதியின் கீழ் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இதற்கிடையில், ஜனாதிபதிக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று (16) ஏற்பாடாகியிருந்தது. எனினும், திகதி, நேரம் குறிக்கப்படாது அச்சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது. அச்சந்திப்பு இடம்பெற்றிருந்தால், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் த.தே.கூவுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பாகப் பதியப்பட்டிருக்கும். 

 புதிய அரசியலமைப்புக்கான யோசனைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2020 டிசெம்பர் அனுப்பி வைத்ததாகவும் அதன்பின்னர்,   2021 பெப்ரவரியில், நிபுணர் குழுவை சந்தித்ததாகவும் குறிப்பிட்டிருந்த கூட்டமைப்பு, இதை முன்கொண்டு செல்வது சம்பந்தமாகவே ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கலந்துரையாடப்படுமென  கூறியது.   

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அறிவிப்பை பார்க்குமிடத்து, இப்போதைய நிலைமையில் இது தேவைதானா என, உண்மையில் நினைக்கவைத்துவிட்டது.  

இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியை பலமுனைகளிலும் முன்னகர்த்தி, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்நிலையில், புதிய அரசியலமைப்பு யோசனை தொடர்பிலும் கட்டாயம் கதைத்தே ஆகவேண்டும். ஏனெனில், பயணக்கட்டுப்பாடுகள் எனக் கூறிக்கூறியே, தங்களுக்குத் தேவையானவற்றை இவ்வரசாங்கம் நிறைவேற்றிக்கொண்டுவிடும். ஆனால், அரசியலமைப்பு யோசனையை எடுத்த எடுப்பிலேயே நிறைவேற்றமுடியாது, அதற்கென சில படிமுறைகள் உள்ளன. எனவே, இப்போதைக்கு பேசவேண்டிய அதிமுக்கியமான விடயமாக அரசியலமைப்பு திருத்தம் இருந்துவிடமுடியாது.

கொரோனா தொற்றுக்காலத்தில், வடக்கு, கிழக்கு மக்களுக்கு கொரோனா தடுப்பூசியை விரைவாகப் பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும், பயணக்கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொறிமுறைகளை உருவாக்குதல்  உள்ளிட்டவை தொடர்பில், ஜனாதிபதியுடன் பேசப்போகின்றோமென கூட்டமைப்பு அறிவித்திருக்குமாயின், ஜனாதிபதிக்கு ஆதரவான தரப்பும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான  தரப்பும் மெளமாய் இருந்திருக்கும். ஆனால், ‘விடயம்’ இனப்பிரச்சினைத் தீர்வோடு பயணப்பட்டதால், ‘முதல் சந்திப்பு’  வேண்டுமென்றே தவிர்க்கப்பட்டிருக்கலாம். 

 ‘புலி முத்திரை’ குத்தப்பட்டுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன், ஜனாதிபதி சந்தித்தித்தால், “புலிகளின் கால்களில் சரணடைந்த சிங்கம்” எனப் பிரசாரம் செய்வதற்கு, இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக்கும் தென்னிலங்கை தரப்பின் வாய்களுக்கு, ‘அவல்’ போட்டதாய் அமைந்திருந்திருக்கும். அதேபோல, புலிகளின் போர்வைக்குள் இருந்து அரசியல் செய்யும் தமிழ்த்தரப்புகள், “சரணாகதி அரசியல் செய்யும் கூட்டமைப்பு” என பேரண்ட பிரசாரத்தில் குதித்திருப்பர்.   

ஆக, சந்திப்புத் தொடர்பில், முன்தம்பட்டம் அடிக்காமல் மௌனம் காத்திருந்தால், கூட்டமைப்பின் அரசியலுக்கு அது அழகுசேர்த்திருக்கும்.  மக்களுக்கு அதிரடியாய்த் தேவையான  விடயங்களை, ஜனாதிபதியின் நேரடிக் கவனத்துக்குக் கொண்டு சென்று, முடிந்தவற்றைப் பெற்றிருக்கலாம்.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான முயற்சியை கைவிடுமாறு கூறவில்லை; ஆனால், இடம், பொருள், ஏவல் அறிந்து, அரசியல் காய்களை நகர்த்தியிருக்க வேண்டும். அதில், கூட்டமைப்பு ‘கூத்தாடி’விட்டது. முன்னரே கசியவிட்ட செய்தியால், கடும்போக்கு சிங்களத் தரப்புகள், ‘சிங்கள-பௌத்த தலைவன்’ என்பதை நினைவூட்டி, சந்திப்பை வேண்டுமென்றே பிற்போடும் அளவுக்கு, உள் அழுத்தங்களைக் கொடுத்திருந்திருக்கலாம்.

இல்லையேல், கூட்டமைப்புக்காக ஒதுக்கியிருந்த அந்த நேரத்தில், அவசரமாகத் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில், கலந்துரையாடுவதற்கான கூட்டமொன்றை நடத்தவேண்டி இருந்திருக்கும். ஆக, ஜனாதிபதியின் நாட்குறிப்பை மாற்றக்கூடிய அதியுச்ச அதிகாரம், அவரிடம் மட்டுமே உள்ளதென்பதை மறுதலிக்க முடியாது. 

மிக நீண்ட நாள்களுக்குப் பின்னர், ஜனாதிபதி மாளிகையில் நேற்று (ஜூன் 16) நிகழவிருந்த அதிசயம், இறுதி செய்யப்படாது அஸ்தமனமாகி, மீண்டுமோர் உதயத்துக்கான திகதியோ நேரமோ குறிக்கப்படாது, விடப்பட்டுள்ளது எனக்கூறுவதில் தப்பேதும் இல்லை. 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அஸ்தமனமானது-முதலாவது-சரணாகதி/91-274422

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.