Jump to content

சீனாவிற்கு இலங்கையின் மீனுற்பத்தி - சீனத்தூதரகம் அறிவித்துள்ளது என்ன ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நா.தனுஜா

இலங்கையிலிருந்து சீனாவிற்கு மீனுற்பத்தி மற்றும் கடலுணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவினால் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட சுகாதார சான்றிதழை ஏற்றுமதியாளர்கள் பெற்றிருக்கவேண்டும் என்று சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் மீன் உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான புதுப்பிக்கப்பட்ட சுகாதாரத் தரச்சான்றிதழுக்கு சீன சுங்கத்தின் பொது நிர்வாகப்பிரிவு அங்கீகாரமளித்திருக்கிறது.

இதன்மூலம் அனுமதியளிக்கப்பட்ட மீனுற்பத்திகள் மற்றும் கடலுணவுப்பொருட்கள் சீனாவின் போட்டிச் சந்தைக்குள் நுழைவதற்கும் இலங்கையின் வணிகங்கள் அவற்றின் உற்பத்தியை மேலும் விரிவாக்குவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக இலங்கையிலுள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து மீனுற்பத்தி மற்றம் கடலுணவுப்பொருட்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யும் இலங்கை ஏற்றுமதியாளர்கள், அவர்களது உற்பத்திப்பொருட்களின் பெயர்களுடன் புதுப்பிக்கப்பட்ட சுகாதாரச் சான்றிதழையும் சீன சுங்கப்பிரிவிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சீனாவிற்கு இலங்கையின் மீனுற்பத்தி - சீனத்தூதரகம் அறிவித்துள்ளது என்ன ? | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசப் பாம்பு சாப்பிடும் எங்களுக்கு உந்த கப்பல் விசம் சாப்பிட்ட  மீன்கள் பெரிய விடயம் அல்ல.....அனுப்பு சீனாவுக்கு நாங்கள் அதை பிளிச்சில் போட்டு சுத்தம் பண்ணி அழகாக பொதி செய்து மீண்டும் அமெரிக்கா ,இந்தியா,மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறோம்  ....நீ வடமகாணத்தை என்க்கு 50 வ்ருட குத்தகைக்கு தா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

விசப் பாம்பு சாப்பிடும் எங்களுக்கு உந்த கப்பல் விசம் சாப்பிட்ட  மீன்கள் பெரிய விடயம் அல்ல.....அனுப்பு சீனாவுக்கு நாங்கள் அதை பிளிச்சில் போட்டு சுத்தம் பண்ணி அழகாக பொதி செய்து மீண்டும் அமெரிக்கா ,இந்தியா,மத்தியகிழக்கு நாடுகளுக்கு அனுப்பிவிடுகிறோம்  ....நீ வடமகாணத்தை என்க்கு 50 வ்ருட குத்தகைக்கு தா....

சாப்பிடுவது மட்டுமல்ல அதையே கக்கி உலகத்தை திணறடிக்குதுகள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.