Jump to content

சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

 1990.06.19 அன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தி 1981ம் ஆண்டு தொடக்கம் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து இந் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன் போது பத்மநாபாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மண்முனை மேற்குப் பிரதேச சபை உபதவிசாளர் பொன்னம்பலம் செல்லத்துரை,மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பி.கிருஸ்ணகுமார், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மு.அருட்செல்வம் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

 

 

https://ibctamil.com/article/eastern-province-memorial-1624087398

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல்  நிகழ்வுகளில் மக்கள்  கலந்து  கொள்ள அனுமதிக்கப்படுவதில்லையா??

Link to comment
Share on other sites

26 minutes ago, விசுகு said:

நினைவேந்தல்  நிகழ்வுகளில் மக்கள்  கலந்து  கொள்ள அனுமதிக்கப்படுவதில்லையா??

பிரான்ஸில் இவர்களை நீங்கள் நினைவுகூர்வதில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் மனதில் நின்றாடும் சம்பவம்.. யாழ் பரியோவான் கல்லூரி மாணவன் அறிவை கொன்றுவிட்டு யாழ் அரசடிச் சந்தியில் வெள்ளைவானில் இருந்து தள்ளிவிட்டு போன இந்தக் கூட்டம்.. அன்று அந்த காலைவேளையில் தனியார் வகுப்புக்குப் போய் கொண்டிருந்த எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி வெருட்டிவிட்டுப் போன நிகழ்வுகள்... 

இவங்கள் எல்லாம் யாருக்கு தியாகிகள்..????!

அடிப்படை மனிதப் பண்பை இழந்து சொந்த மக்களையே காட்டிக்கொடுத்து காவுகொண்ட கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் சேர்ந்து செய்த அட்டுழீயங்களுக்கும், கட்டாயமாக இளைஞர்கள், சிறுவர்களைப் பிடித்து மொட்டை அடித்தும், இமை மயிர்களைக் கூட மழித்தும் TNA (தமிழ் தேசிய இராணுவம்) என்று படை கட்டியவர்கள்.  அந்த அராஜகங்களுக்கு எல்லாம் எப்போதாவது மன்னிப்பு கேட்டதாக நினைவு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கற்பகதரு said:

பிரான்ஸில் இவர்களை நீங்கள் நினைவுகூர்வதில்லையா?

நடக்கலாம் நான் கலந்து கொள்வதில்லை. மன்னிக்கவும்

அழிக்க உதவி விட்டு இரங்கல் செய்யும் ஆள் நான் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

87-89 வட கிழக்கில் இவர்களின் அராஜகத்துக்குள் வாழ்ந்த யாரும் இவர்களை நல்லவகையில் நினைவுகூரல் செய்யார்கள்.
ஆனால் கொல்லப்பட்டவர்களும் இப்போ இல்லை, கொன்றவர்களும் இல்லை. இதில் தப்பிய ஒரே ஒருவர் எனப்படுபவரும் பின்னர் கொன்றவர்களால் மன்னித்து ஏற்று கொள்ளப்பட்டுவிட்டார்.

30 வருடத்தின் பின் இரெண்டு பகுதியின் வால்களும் பொது வெளியில் பழைய ரணங்களை கிண்டுவதில் ஒரு பலனும் இல்லை.

Time to reconcile, time to move on. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் சேர்ந்து செய்த அட்டுழீயங்களுக்கும், கட்டாயமாக இளைஞர்கள், சிறுவர்களைப் பிடித்து மொட்டை அடித்தும், இமை மயிர்களைக் கூட மழித்தும் TNA (தமிழ் தேசிய இராணுவம்) என்று படை கட்டியவர்கள்.  அந்த அராஜகங்களுக்கு எல்லாம் எப்போதாவது மன்னிப்பு கேட்டதாக நினைவு இல்லை.

அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே.

நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள்.

அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

காலத்தின் கோலம் இந்த மண்டையனையும் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கி கிளிநொச்சிவரை அழைத்து தலைவரும் சந்தித்திருந்தார்.

சொந்த இன மக்களை என்னமோ ஜென்மவிரோதிகள்போல் தேடி தேடி வேட்டையாடிவிட்டு இந்தியபடை திரும்பும்போது தாயக பகுதியெங்கும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சொந்த மக்களின் உயிர்களை சுருட்டியது போதாதென்று உடமைகளையும்  சுருட்டிக்கொண்டு  ஓடி தப்பியவர்கள் பதிலுக்கு வேட்டையாடப்பட்டார்கள். அவ்வளவுதான் இவர்களுக்கு அஞ்சலியெல்லாம் கிடையாது.

 அந்நிய சக்திகளின் பிராந்திய ஆக்கிரமிப்பு போதைக்கு அவர்களை மகிழ்விக்க சொந்த மக்களை வகை தொகையின்றி  படுகொலை செய்து அவர்களிடம் வாங்கி உண்ட சோற்றுகடன் தீர்த்தார்கள்.

காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் முயற்சியின்போது ஒரு ஈபி போராளி இறந்ததாக ஞாபகம், ஈபிஆர் எல் எவ்.வில் அந்த ஒரேயொரு போராளிக்கு மட்டும் அஞ்சலிகள்.

கடல்கடந்துபோய் இந்திய மண்ணில் இவர்களை போட்டு தள்ளியது தவறு என்று ஒரு விமர்சனம் உண்டு, 

கடல்கடந்து வந்து சொந்தமக்களை கொன்று குவித்துவிட்டு மீண்டும் கடல்கடந்து ஓடி தப்பி இந்திய மண்ணில் அடைக்கலம் புகுந்தது தவறில்லையென்றால், கடல்கடந்துபோய் அவர்களுக்கு தண்டனை வழங்கியதும் தவறில்லை.

அது தவறு என்று வாதிட்டால், இங்கிலாந்திலிருந்து கடல் கடந்து வந்து இந்தியாவில் ஜூலியன்வாலா படுகொலைகளை செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பிய ஜெனரல் டயரை இங்கிலாந்துவரை தேடி சென்று இந்தியரான ஷாஹீத் உதம்சிங் அவரை கொன்று பழி தீர்த்ததும்  தவறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே.

நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள்.

அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

காலத்தின் கோலம் இந்த மண்டையனையும் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கி கிளிநொச்சிவரை அழைத்து தலைவரும் சந்தித்திருந்தார்.

சொந்த இன மக்களை என்னமோ ஜென்மவிரோதிகள்போல் தேடி தேடி வேட்டையாடிவிட்டு இந்தியபடை திரும்பும்போது தாயக பகுதியெங்கும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சொந்த மக்களின் உயிர்களை சுருட்டியது போதாதென்று உடமைகளையும்  சுருட்டிக்கொண்டு  ஓடி தப்பியவர்கள் பதிலுக்கு வேட்டையாடப்பட்டார்கள். அவ்வளவுதான் இவர்களுக்கு அஞ்சலியெல்லாம் கிடையாது.

 அந்நிய சக்திகளின் பிராந்திய ஆக்கிரமிப்பு போதைக்கு அவர்களை மகிழ்விக்க சொந்த மக்களை வகை தொகையின்றி  படுகொலை செய்து அவர்களிடம் வாங்கி உண்ட சோற்றுகடன் தீர்த்தார்கள்.

காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் முயற்சியின்போது ஒரு ஈபி போராளி இறந்ததாக ஞாபகம், ஈபிஆர் எல் எவ்.வில் அந்த ஒரேயொரு போராளிக்கு மட்டும் அஞ்சலிகள்.

கடல்கடந்துபோய் இந்திய மண்ணில் இவர்களை போட்டு தள்ளியது தவறு என்று ஒரு விமர்சனம் உண்டு, 

கடல்கடந்து வந்து சொந்தமக்களை கொன்று குவித்துவிட்டு மீண்டும் கடல்கடந்து ஓடி தப்பி இந்திய மண்ணில் அடைக்கலம் புகுந்தது தவறில்லையென்றால், கடல்கடந்துபோய் அவர்களுக்கு தண்டனை வழங்கியதும் தவறில்லை.

அது தவறு என்று வாதிட்டால், இங்கிலாந்திலிருந்து கடல் கடந்து வந்து இந்தியாவில் ஜூலியன்வாலா படுகொலைகளை செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பிய ஜெனரல் டயரை இங்கிலாந்துவரை தேடி சென்று இந்தியரான ஷாஹீத் உதம்சிங் அவரை கொன்று பழி தீர்த்ததும்  தவறு. 

அதே..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, valavan said:

அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே.

நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள்.

அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

நாங்கள் தவ்வல்களாக இருந்த காலம். புலிகள் என்று அச்சில் கூட வரமுடியாத அளவு தணிக்கைகள் நிலவிய காலம். எனினும் தினமும் செய்திகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். இவர்களின் அசோகா ஹோட்டல் அராஜகங்கள் ஓரளவுதான் தெரிந்திருந்தன. இந்திய இராணுவத்தின் கொடுமைகளால், எனது நண்பனின் தமையனை கோப்பாய் பகுதிக்கு பாதுகாப்பாக படிக்க அனுப்பியிருந்தனர். ஆனால் இவர்கள் பிடித்து தலைக்கு மொட்டையும் அடித்து இமை மயிர்களையும் மழித்து வைத்திருந்தனர். பெற்றோர், பலரின் கையைக் காலைப்பிடித்து நண்பனின் தமையனை மீட்டிருந்தனர். 

வடமராட்சிப் பகுதியில் இவர்களின் அட்டகாசங்கள் அதிகம் இருக்கவில்லை. எனினும் முக்கிய இடங்களில் ஆள்காட்டிகளாகவும், தலையாட்டிகளாகவும் இருந்தனர். இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களை எல்லாம் உச்சிக்கொண்டிருந்ததால், அவர்களிடம் அடி வாங்கியதில்லை. ஆனாலும் ஈபிஆர்எல்எவ் இடமும் ஒருமுறை அகப்பட்டு திமிர்க்கதை (அரசியல்தான்) கதைத்து முட்டுக்காலில் வெயிலுக்குள் பலமணி நேரம் நின்றதும்,  ரெலோவிடம் அகப்பட்டபோது நண்பன் ஒருவன் மட்டக்களப்பு சாயலில் கதைத்தற்காக (அவன் ஒன்றிரண்டு வருடங்கள் இருந்து படித்தான்), அவன் சேர்ட் கிழிந்துபோகுமளவிற்கு அடித்தார்கள்.  இப்படித்தான் இவர்களை நினைவில் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களுக்கு அஞ்சலிகள். இவர்களின் இறப்பை நியாயப்படுத்தவும் இல்லை!

எண்பதுகளின் இறுதிகளில் EPRLF இனர் ஆடிய வெறியாட்டம் வரலாற்றில் மறக்கமுடியாதது. மனித குலத்துக்கு எதிரான படுபாதகங்களை புரிந்திருந்தனர். இன்று பத்மநாபா பற்றி பேசும் எஞ்சியுள்ள EPRLF இனர் அவர் ஏதோ சிந்தனைச் சிற்பி, மாபெரும் போராளி, சமூக விடுதலையாளர் போன்ற ரேஞ்சில் பேசித் தள்ளுவதுதான் காலத்தின் கொடுமை. மக்களைப் பாதுக்காக்க ஏந்திய ஆயுதங்களை அந்த மக்களுக்கெதிராகவே திருப்பிய துயரம் ஈழத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

மக்களைப் பாதுக்காக்க ஏந்திய ஆயுதங்களை அந்த மக்களுக்கெதிராகவே திருப்பிய துயரம் ஈழத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. 

மக்களைப் பாதுக்காக்க என்று ஆயுதம் ஏந்தியவர்கள் இப்படி நடந்தது கேவலம். அராஜகமும் அட்டூழியமும் பெரும் அளவில் நடந்துள்ளது.

 

Link to comment
Share on other sites

நேரில் கண்ட சம்பவம்:  கண்டி தெருவில் வசிக்கும் ஒரு மத்திய தர வர்க்க மனிதன். தமிழரசு, கூட்டணி என யார் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களின் பக்கம் நிற்கும் சாதாரண புகையிரத ஊழியர். அந்த வகையில் இயக்கங்கள் உருவெடுத்த போது தனது பரிபூரண ஆதரவை (பணமாகவோ, எதுவாகவோ) கொடுக்க தயங்கவில்லை. இறுதியில் மூத்த மகன் புலிகளில்  இணைகிறார். எந்த இயக்கம் உதவி கேட்டாலும் உதவி செய்ய தயங்காதவர். அது எந்த சின்ன இயக்கமாக இருந்தாலும் சரி.
மகன் புலியில் இணைந்ததற்காக அவருக்கான பரிசு கண்டி வீதியின் நடுவில்  வீட்டில் இருந்து அடித்து இழுத்து வரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டார் இந்த ஈபிஆர் எல் எவ் காடைகளால். 
சில வேளை கந்தன் கருணை பிழை எனும் போதும் கூட இந்த கொலையை புலிகள் செய்ய காரணிகள் இருந்தாகவே நினைக்கிறேன்.
தாமும் நினைக்க முடியாத தவறுகளை இழைத்து விட்டு புலிகள் தம்மை அழித்து விட்டார்கள் என்பது எவ்வகையில் நியாயம் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ பி ஆர் எல் எப் என்ற சொல் கண்ணில் படும்போதெல்லாம் 1988 இலிருந்து 1990 வரை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நான் அனுபவித்த, பார்த்த அட்டூழியங்கள்தான் வந்துபோகிறது.

என்னுடன் படித்த மாணவன் ஒருவனை பாடசாலை வாயிலில் வைத்து தமது வாகனத்தில் ஏற்றியதைப் பார்த்தேன். அவன் எப்படியோ அவர்களின் வாகனத்திலிருந்து தப்பியோடி எங்கள் விடுதிக்குள் வந்து ஒளிந்துகொண்டான். சில நிமிடங்களில் அவனைத் தேடி விடுதியினுள் ஈ பி ஆர் எல் எப் கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம் என்று அவன் அழுதது இன்னும் நினைவில் இருக்கு. சில நாட்களின் பின்னர் அவன் அவர்களால் பிடிபட்டு வந்தாறுமூலைப் அல்லது களுவங்கேணி பகுதியில் உள்ள கட்டாய ராணுவப் பயிற்சி முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்தும் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவ்வாறே திருநெல்வேலிச் சந்தைக்குப் போய்வரும் ஒரு நாள் இந்திய ராணுவத்தின் முக்கால் ட்ரக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை எல்லாம் புலியென்று காட்டிக் கொடுத்த ஒரு முகம். நான் தப்பிவிட்டேன், ஆனால் அன்று குறைந்தது 15 அல்லது 20 பேரையாவது அவன் தலையாட்டிக் காட்டிக் கொடுத்திருந்தான். 

இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று நம்புமளவிற்கு ஈழத்தமிழினத்திற்குச் செய்த சேவைகள் என்னவென்று எனக்குத் தெரியாது.

வரதராஜப் பெருமாளும், டக்கிளசும் இன்று இருக்கும் இடங்களப் பார்க்கும்போது இவர்கள் ஒருபோதுமே தமிழ் மக்களுக்காகப் போராடியதில்லை என்பதே தெளிவாகிறது. சுரேஷ் மண்டையன் குழு ஆயுததாரி, ஆனால் இப்போது தேசியம் பேசுகிறார், இந்திய நலனிலும் அக்கறை கொண்டவர்.

புலிகளைக் காரணம் காட்டியே தமது அட்டூழியங்களைச் சொந்த மக்கள் மீதே நடத்திய கயவர்கள். 

Link to comment
Share on other sites

விடுதலைக்காக புறப்பட்ட ஆயுத இயக்க தலைமைகள்  ஒவ்வொன்றும் திசை மாறி தமக்குள் பகையுணர்வையும் வெறுப்பையும் வளர்தது பழிவாங்க புறப்பட்டு தம்மை நம்பிவந்த சொந்த இயக்க இளைஞர்களையும்  சக இயக்க  இளைஞர்களையும்  வேட்டையாடி இறுதியில் அதன் விளைவாக  நம்பிய  மக்களுக்கு பேரழிவை உண்டாக்கி தாமும் அழிந்த பிறகும், அத்தவறுகளை பற்றி வெளிப்படையாகவும் இயக்க சார்பின்றி பொதுவாகவும் உணமைகளை  உரையாட விரும்பாமல்,  இங்கு அவரவர் தத்ததமது  தலைமை விசுவாசத்தை காட்டுவதற்காக,  1986 ம் ஆண்டில் ஆரம்பித்து பின்னர் சொந்த இன இயக்கங்களாலேயே இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட அத்தனை இளைஞர்களின்/ பொதுமக்களின்   படுகொலைகளுக்கு ஏதோ தம்மளவில் சப்பைக்கட்டு  காரணம் காட்டி வக்காலத்து வாங்குவதைப்  போலவே சிங்கள பேரினவாதமும்  உலக நாடுகளும்  எமது மக்களின் இறுதிப்  படுகொலைகளுக்கும்  இதைப் போலவே ஏதேனும் காரணங்களை காட்டி தப்பிக்கொள்ளும். ஏனெனில் எம்மை போலவே ஒரு தலைப்பட்ச சுயநலமனிதர்கள் தானே அவர்களும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பாத்தேன் ஆளை இன்னும் காணேல்லையே என்று. வந்திட்டார்! இனி களம் சூடு பிடிக்கும்.

Link to comment
Share on other sites

On 19/6/2021 at 22:58, விளங்க நினைப்பவன் said:

மக்களைப் பாதுக்காக்க என்று ஆயுதம் ஏந்தியவர்கள் இப்படி நடந்தது கேவலம். அராஜகமும் அட்டூழியமும் பெரும் அளவில் நடந்துள்ளது.

 

அந்தத் காலம் ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபாவின் சிந்தனை என ஒரு வாக்கியம் அவர்களது வெளியீடுகளில் வந்தது. 

"மக்களில்லா மண்ணை நான் நேசிக்கவில்லை" 

இப்படி சிந்தனை கொண்ட ஒருவரின் தலைமையில் இந்திய இராணுவகாலம் நடந்த அனியாயங்கள் பார்த்து அறிந்து அனுபவித்த அனுபவங்கள் நிறைய.

 இவர்கள் மரணம் எந்த வருத்தத்தையும் தரவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்கு என்ன ? இவர் மீது புலிகள் ஏன் கை வைக்கவில்லை ?

இந்தக் கொலைகள்-சுரேஸ் பிரேமச்சந்திரன்-புலிகள் : இவற்றிற்கிடையிலான தொடர்பு என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2021 at 22:20, ரஞ்சித் said:

ஈ பி ஆர் எல் எப் என்ற சொல் கண்ணில் படும்போதெல்லாம் 1988 இலிருந்து 1990 வரை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நான் அனுபவித்த, பார்த்த அட்டூழியங்கள்தான் வந்துபோகிறது.

என்னுடன் படித்த மாணவன் ஒருவனை பாடசாலை வாயிலில் வைத்து தமது வாகனத்தில் ஏற்றியதைப் பார்த்தேன். அவன் எப்படியோ அவர்களின் வாகனத்திலிருந்து தப்பியோடி எங்கள் விடுதிக்குள் வந்து ஒளிந்துகொண்டான். சில நிமிடங்களில் அவனைத் தேடி விடுதியினுள் ஈ பி ஆர் எல் எப் கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம் என்று அவன் அழுதது இன்னும் நினைவில் இருக்கு. சில நாட்களின் பின்னர் அவன் அவர்களால் பிடிபட்டு வந்தாறுமூலைப் அல்லது களுவங்கேணி பகுதியில் உள்ள கட்டாய ராணுவப் பயிற்சி முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்தும் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவ்வாறே திருநெல்வேலிச் சந்தைக்குப் போய்வரும் ஒரு நாள் இந்திய ராணுவத்தின் முக்கால் ட்ரக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை எல்லாம் புலியென்று காட்டிக் கொடுத்த ஒரு முகம். நான் தப்பிவிட்டேன், ஆனால் அன்று குறைந்தது 15 அல்லது 20 பேரையாவது அவன் தலையாட்டிக் காட்டிக் கொடுத்திருந்தான். 

இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று நம்புமளவிற்கு ஈழத்தமிழினத்திற்குச் செய்த சேவைகள் என்னவென்று எனக்குத் தெரியாது.

வரதராஜப் பெருமாளும், டக்கிளசும் இன்று இருக்கும் இடங்களப் பார்க்கும்போது இவர்கள் ஒருபோதுமே தமிழ் மக்களுக்காகப் போராடியதில்லை என்பதே தெளிவாகிறது. சுரேஷ் மண்டையன் குழு ஆயுததாரி, ஆனால் இப்போது தேசியம் பேசுகிறார், இந்திய நலனிலும் அக்கறை கொண்டவர்.

புலிகளைக் காரணம் காட்டியே தமது அட்டூழியங்களைச் சொந்த மக்கள் மீதே நடத்திய கயவர்கள். 

கொழும்பில் இருந்து புகையிரத்தில் யாழ் வருகையில் சாவகச்சேரியில் சிலர் ஆயுதங்களுடன் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இளம் வயது பெடியலை இறக்கினார்கள், அதில் நானும் ஒருவன். TNA இக்கு ஆட்கள் சேர்ப்பதாக கதைக்க பட்டது. புகையிரதம் புறப்பட்ட நேரம் எங்கள் பக்கத்தில் ஒரு ஆயுத தாரியும் நிக்காததால் நாங்கள் 4, 5 பேர் புகையிரத்திற்குள் ஏறி கொண்டோம். ஒரு வழியாக வீட்டுக்கு வந்தது நிம்மதி என்றால் அடுத்த நாள் சுற்றி வளைப்பில் என்னை மட்டும் தலையாட்டி கையை காட்டினார். மற்றவர்கள் எல்லாம் போக என்னை மட்டும் கடற்கரையை  அண்டிய தென்னம் தோப்பிற்குள் இந்திய ராணுவமும் ஒட்டுக்குழுவினரும் அழைத்து சென்றனர். எனது மூத்த அண்ணர் (என்னை விட 10 வயது கூடியவர்) இவர் படிக்கிறார், புலிகளுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி பார்த்தும் அவர்கள் விடவில்லை. தூரத்தில் இன்னுமொரு ஆள் மக்கள் கூட்டத்தில் இருந்து எங்களை நோக்கி நடந்து வந்தார், அவர் சாந்தன் (இந்த இடத்தில இவரை நினைவு கூறுவது சால சிறந்தது). என்னுடன் 5ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்.  83இல் பல இளைஞர்கள் இயக்கங்களுக்கு போக இவரும் டெலோவில் சேர்ந்தார். புலிகள் டெலோவை தடை செய்யும் போது இவரை ஊருக்குள் மட்டும் இருக்க சொல்லி விட்டு விட்டார்கள். இந்தியன் ஆமி ஒட்டுக்குழுக்கள் இவரை கூப்பிட்டும் தான் இனிமேல் இயக்கங்களுக்கு வர மாட்டேன் என்று தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விட்டார். இவர்தான் அந்த கும்பல்களுடன் இருந்து என்னை காப்பாற்றியவர். எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை என்று கூறினார், அவர்களும் அவர் சொன்னதை நம்பினார்கள் . துரதிஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் காலமாகி விட்டார்.
பிள்ளை பிடிகாரர்கள் தீவிரமாக இயங்கியதால் மயிலிட்டி வைத்தியசாலையில் பணியாற்றிய ஓன்று விட்ட அண்ணரின் உதவியுடன் அவரது அறையில் ஒழித்து இருந்து சிறி லங்கா ராணுவத்தின் விமானத்தில் 1000 ரூபாய் டிக்கெட் எடுத்து ரத்மலானை வந்து சேர்ந்தேன்.

 

ஆனையிறவு சோதனை சாவடியில் ஆசிரியைகள் ஒருவர் இருவர் தலையை சொரிஞ்சதால் தாக்கப்பட்டார்கள் என்று அறிந்தேன். காரணம் ஈரும்-பேனும் (EP). மறந்தும் தலையில் விரலை விட்டு நோண்ட கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17 hours ago, Kapithan said:

இந்தக் கொலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்கு என்ன ? இவர் மீது புலிகள் ஏன் கை வைக்கவில்லை ?

இந்தக் கொலைகள்-சுரேஸ் பிரேமச்சந்திரன்-புலிகள் : இவற்றிற்கிடையிலான தொடர்பு என்ன ?


 இப்ப இப்படி கேட்பீர்கள் 
போட்டிருந்தால் .......புலிகள் சுட்டதாலேயே 
தியாகிகள் .... கல்விமான்கள் ... கவரிமான்கள் ஆக்கி இருப்பீர்கள் 

புலிகளின் ரவைக்கு அவ்வளவு மவுசு 
பட்டதும் உடனேயே மக்களுக்கு மாங்கு மாங்கு என்று உழைத்த 
சிந்தனை சிற்பிகள் தியாகிகள் ஆகிவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேவுத்தகவலின் படி இவரும் நின்றிருக்க வேண்டும் என்றுதான் போனார்கள் 
இவர் அங்கு இருக்கவில்லை 

மாவை தப்பியதுபோல 
அமீர்தலிங்கத்தை சுட்ட போது அவர் மேலே மாடியில் நின்று இருந்தார் 
இவர்களுடன் சென்று வாசலில் நின்றவர் கொஞ்சம் நெர்வோசாக இருந்தார் 
அவரை பார்த்த அமீரின் போலீஸ் பாதுகாவலர் கொஞ்சம் சந்தேகப்பட தொடங்கிவிட்டார் 

இவர்கள் சுட தொடங்கியதுமே அந்த போலீஸ் காரர் அவரை சுட்டுவிட்டார் 
இவர்களின் முழு திட்டமும் அதோடு குளம்பிவிட்டது 

Link to comment
Share on other sites

பிறேம்சந்திரன் மேற்படி கொலை நடந்த போது வெளியில் உணவு வாங்க அனுப்பப்பட்டதாகவும் அதிஸ்டவசமாக உயிர்தப்பியதாகவும் செய்திகள் கூறின.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

 


 இப்ப இப்படி கேட்பீர்கள் 
போட்டிருந்தால் .......புலிகள் சுட்டதாலேயே 
தியாகிகள் .... கல்விமான்கள் ... கவரிமான்கள் ஆக்கி இருப்பீர்கள் 

புலிகளின் ரவைக்கு அவ்வளவு மவுசு 
பட்டதும் உடனேயே மக்களுக்கு மாங்கு மாங்கு என்று உழைத்த 
சிந்தனை சிற்பிகள் தியாகிகள் ஆகிவிடுவார்கள். 

அட விசயத்துக்கு வாங்கப்பூ..

இந்தக்கொலைகளில் இவருக்கும் பங்கு என்கிறது பட்சி..😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரஷ்ய இராணுவத்தில் பெருமளவு இலங்கையர் : உக்ரேனுக்கு எதிரான போரில் பலர் பலி ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து ரஷ்ய இராணுவத்திற்கு ஆட்களை இணைத்துக் கொள்வது இன்றைய காலத்தில் வழக்கமான ஒரு விடயமாக காணப்படுவதாக ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜனிதா லியனகே என குறிப்பிட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் ரஷ்யாவுக்கு சென்று இராணுவ பணியில் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ரஷ்ய இராணுவம் சுற்றுலா விசாவில் இலங்கையர்களும் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொள்வதாக தகவல் கிடைத்துள்ளதாக ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார். ஆனால் இது தொடர்பான சரியான தகவல்கள் தூதரகத்திடம் இல்லாததால், அந்நாட்டு இராணுவ சேவையில் இலங்கையர்கள் பணியாற்றினால் அது தொடர்பான தகவல்களை வழங்குமாறு ரஷ்ய பாதுகாப்பு பிரதானிகளிடம் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையர்கள் பலி ரஷ்ய படைகளுடன் இலங்கையர்கள் இணைந்து கொண்டால் அது தொடர்பில் தூதரகத்திற்கு அறிவிக்குமாறு அனைவரும் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக ரஷ்ய இராணுவத்தில் இருந்த இலங்கையர்கள் பலர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும், தூதரகத்திடம் தகவல் இல்லாததால், உயிரிழக்கும் இலங்கையர்கள் அல்லது காயமடையும் இலங்கையர்கள் தொடர்பிலும் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனிதா லியனகே குறிப்பிட்டுள்ளார்.   https://akkinikkunchu.com/?p=273802
    • பிளவை நோக்கி தமிழரசுக் கட்சி? – பேராசிரியா் அமிா்தலிங்கம் April 16, 2024   ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் சிலவற்றால் முன்வைக்கப்பட்ட தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற கருத்து, வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. மறுபுறம் தமிழரசுக் கட்சிக்குள் உருவாகியிருக்கும் முரண்பாடு அந்தக் கட்சி பிளவுபடுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் ஒரணியில் இணைக்கும் முயற்சிகளையும் இது பலவீனப்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணியில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியா் கோபாலபிள்ளை அமிா்தலிங்கம் வழங்கிய நோ்காணல். கேள்வி – பொதுத் தோ்தல்தான் முதலில் நடத்தப்பட வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை பொது ஜன பெரமுன கொடுத்தது. ஆனால் இப்போது ஜனாதிபதித் தோ்தல்தான் முதலில் நடத்தப்படும் என்பது பெருமளவுக்கு உறுதியாகியிருக்கின்றது. இந்த முரண்பாடான போக்கிற்கு காரணம் என்ன? பதில் – பொது ஜன பெரமுனவைப் பொறுத்தவரையில் ஜனாதிபதித் தோ்தலுக்கு முன்னதாக பொதுத் தோ்தலை நடத்த வேண்டும் என்று முயற்சிக்கின்றாா்கள். பொதுத் தோ்தலின் மூலம் சில ஆசனங்களைக் கைப்பற்றி எதிா்கால ஜனாதிபதி தமக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் தடுக்கலாம் என அவா்கள் சிந்திக்கின்றாா்கள். ஜனாதிபதித் தோ்தல் முதலில் நடைபெற்று அதில் யாா் ஜனாதிபதியாக வந்தாலும், அதன் பின்னா் வரக்கூடிய பாராளுமன்றத் தோ்தலில் பொதுஜன பெரமுன வெற்றிபெறுவது மிகவும் கடினமானது. மிகவும் குறைந்த ஆசனங்களையே அவா்களினால் பெறக்கூடியதாக இருக்கும். அதனைவிட, அவா்களுடைய கட்சியைச் சோ்ந்த சிலா் கூட, ஜனாதிபதியாக வருபவரின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கும் வாய்ப்புள்ளது.   அவ்வாறான சந்தா்ப்பத்தில் பாராளுமன்றத்தில் அவா்களுடைய பலம் கடுமையாக வீழ்ச்சியடைந்து எதிா்காலத்தில் வரக்கூடிய அரசாங்கங்கள் தம்மீதான சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தலாம் என்று அஞ்சுகிறாா்கள். அதனால் அவா்கள் தங்களைப் பாதுகாப்பதற்கு – தமது எதிா்காலத்தைப் பாதுகாப்பதற்கு பொதுத் தோ்தல் முதலில் நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றாா்கள். அவ்வாறு நிகழ்ந்தால், பாராளுமன்றத்தில் எந்வொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். புதிதாக வரப்போகும் ஜனாதிபதிக்கும் இதனால் மிகப் பெரிய சிக்கல் உருவாகும். பாராளுமன்றம் தொங்கு பாராளுமன்றமாக அமையலாம். பாராளுமன்றத்தை நான்கு வருடங்களுக்குக் கலைக்கவும் முடியாது. அது நாட்டில் பாரிய சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகளையும் உருவாக்கும் என்பதையும் ஜனாதிபதி உணா்ந்திருக்கின்றாா். கேள்வி – ஜனாதிபதித் தோ்தலை நோக்கி நாடு சென்றுகொண்டிருக்கும் நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. யாயைாவது ஆதரிப்பதா, பகிஷ்கரிப்பதா என்ற கேள்விகளுக்கு மத்தியில் தமிழ்ப் பொது வேட்பாளா் ஒருவரை களமிறக்குவது என்பது குறித்தும் முக்கியமாகப் பேசப்படுகின்றது. பொதுவேட்பாளா் என்ற விடயத்தைப் பொறுத்தவரையில் உங்கள் பாா்வை என்ன? பதில் – 1931 ஆம் ஆண்டு டொனமூா் அரசியலமைப்பின் படி இலங்கையிலுள்ள அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டு தோ்தல் நடைபெற்ற போது அது தமிழ் மக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அது தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற ரீதியில் யாழ். மாவட்ட மக்கள் அந்தத் தோ்தலைப் புறக்கணித்தாா்கள். அன்று முதல் பல்வேறுபட்ட புறக்கணிப்புக்களை தமிழ் மக்கள் செய்திருக்கின்றாா்கள். இப்போது பொதுவேட்பாளா் ஒருவரை நிறுத்துவது என்பதும், நாம் சிங்கள வேட்பாளா்கள் எவருக்கும் வாக்களிக்க மாட்டடோம் என வாக்களிப்பைப் புறக்கணிப்பதற்கு சமமானதுதான். அவ்வாறு பொதுவேட்பாளராக தமிழா் ஒருவரை களமிறக்கும் போது, அவரால் வெற்றிபெற முடியாது என்பதைத் தெரிந்துதான் தமிழ் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும். குமாா் பொன்னம்பலம் ஒரு தடவை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டவா். அவருக்கும் தமிழ்ப் பகுதிகளில் கூட அதிகளவு வாக்குகள் கிடைக்கவில்லை. இந்த விடயத்தைப் பொறுத்தவரையில் இரண்டு விடயங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து இதற்கான தீா்மானத்தை எடுப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை. தமிழரசுக் கட்சி ஒருபுறம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவா்கள் மற்றொரு அணியாக இருக்கின்றாா்கள். கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் மற்றொரு அணியில் இருக்கின்றாா். நீதியரசா் விக்னேஸ்வரனின் அணி மற்றொன்றாக இருக்கின்றது. இந்த நான்கு தரப்புக்களும் இணைந்து ஓரணியாக வரக்கூடிய வாய்ப்புக்கள் இல்லை. வேறுபட்ட முடிவுகளைத்தான் எடுக்கப்போகின்றாா்கள். இதனைவிட பொது வேட்பாளா் எந்தளவுக்குப் பொது வேட்பாளராக இருப்பாா் என்றொரு கேள்வி இருக்கின்றது. என்ன முடிவை எடுத்தாலும் தமிழ் மக்களுக்கு அதனால் ஏற்படக்கூடிய சாதக, பாதக அம்சங்களை அவா்கள் தெளிவாகக்கூற வேண்டும். பொது வேட்பாளரை நாங்கள் நிறுத்துகிறோம். நீங்கள் வாக்களியுங்கள். பெரும்பான்மை இன வேட்பாளா்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். அதனால் தமிழ் மக்களுக்கு சாதகமானவை என்ன பாதகமானவை என்ன என்பதையெல்லாம் இவா்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். கேள்வி – தமிழ் அரசியல் கட்சிகள் தவிா்ந்த சிவில் அமைப்புக்கள் இந்த விடயத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடியவையாக இருக்குமா? பதில் – சிவில் அமைப்புக்கள் அவ்வாறு கூறலாம். ஆனால் எம்மிடம் அவ்வாறு பலம்பொருந்திய சிவில் அமைப்புக்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளையில், அரசியல் கட்சிகள் ஒரு முடிவை எடுக்க சிவில் அமைப்புக்கள் இன்னொரு முடிவை எடுப்பது போன்றன தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை. சிவில் அமைப்புக்கள் அரசியல் கட்சிகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து ஒரு இலக்கை நோக்கி நகா்த்துவதற்கு முயற்சிக்கலாம். ஆனால், இது எவ்வாறு நடைபெறப்போகின்றது என்பதற்கு காலம்தான் பதில் சொல்லப்போகின்றது. கேள்வி – தமிழரசுக் கட்சிக்குள் உருவாகிய முரண்பாடு இன்று ஒரு பிளவாகி நீதிமன்றத்தின் முன்பாகச் சென்றுள்ளது. இந்தப் பிளவு தமிழ் மக்களுடைய அரசியலில் எந்தளவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்? பதில் – சம்பந்தன் அரசியலைவிட்டு விலகும் போது, தமிழரசுக் கட்சிக்குள் பாரிய பிளவு ஏற்படும் என்பது முன்னரே அனுமானிக்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில் அவா் தனக்கு அடுத்ததாக ஒரு தலைவரை உருவாக்கத் தவறிவிட்டாா். தந்தை செல்வா, அமிா்தலிங்கத்திடம் தலைமையைக் கொடுக்கும் போது தமிழ்த் தலைமை பலமாக இருந்தது. அவ்வாறான ஒன்றை சம்பந்தன் செய்வதற்குத் தவறிவிட்டாா். பலரும் விரும்புகிறாா்களோ இல்லையோ, தமிழரசுக் கட்சி தமிழா்களுக்குத் தேவையான ஒரு முதன்மையான கட்சி. ஆனால், இன்று பலா் ஒதுங்கிவிட்டாா்கள். இலங்கை அரசியலில் செல்வந்தா்கள், கல்விமான்கள் வாக்களிப்புக்குச் செல்வதில்லை. அதேபோல அரசியலுக்கு வருவதற்குப் பலா் பின்னடிக்கின்றாா்கள். ஏனெனில் அரசியல் சிக்கலான ஒன்றாக இருக்கின்றது. அந்தவகையில் பலா் வெளியில் இருக்கின்றாா்கள். தமிழரசுக் கட்சியில் ஜனநாயகம் என்று கதைத்தாலும், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாக்களிப்பின் மூலமாகத் தெரிவு செய்யப்படுவதில்லை. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையில் போட்டி வந்த போது தோ்தல் நடைபெறவில்லை. அண்மையில் இந்திய காங்கிரஸ் கட்சியில் சசி தருா் தலைமைப் பதவிக்காக தோ்தலில் கேட்க விரும்பினாா். ஆனால், காா்க்கேயைத்தான் காந்தி குடும்பம் தலைமைப் பதவிக்குக் கொண்டுவந்தது. சசி தருா் இளமையானவா் தமக்கு சவாலாக அமையலாம் என அவா்கள் கருதினாா்கள். இருவருக்கும் இடையில் தோ்தல் நடைபெற்றிருந்தால் சில சமயம் சசி தருா் வெற்றி பெற்றிருக்கக்கூடும். அரசியல் கட்சிகள் ஜனநாயகம் குறித்து பேசிக்கொண்டாலும் இவ்வாறு தோ்தல் நடத்தப்படுவதில்லை. ஏனெனில் தோல்வியடைந்த பிரிவினா் எப்போதும் பிரச்சினையாக இருப்பாா்கள். அதனால்தான் ஏகமனதான தெரிவுக்கு அனைத்துக் கட்சிகளுமே முயற்சிக்கின்றன. அதனால், தமிழரசுக் கட்சியில் இடம்பெற்ற தோ்தல் ஜனாநாயகத் தன்மையானது என சிலா் கூறுவதற்கு முற்பட்டாலும், அந்தத் தலைமை தெரிவு செய்யப்பட்ட பின்னா் கட்சி பிளவுபடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதனைத் தவிா்ப்பதற்காகத்தான் ஏகமனதான தெரிவை நோக்கி கட்சிகள் செல்கின்றன. இப்போது பொது வேட்பாளா் விடயத்தை எடுத்துக்கொண்டாலும், இந்த இரண்டு அணியினரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுக்கக்கூடும். ஒரு சிக்கலான நிலைமையில் தமிழினம் இருக்கின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.   https://www.ilakku.org/பிளவை-நோக்கி-தமிழரசுக்-க/
    • மூட நம்பிக்கையால் ஆசிரியையின் உயிர் பறிபோனது! adminApril 15, 2024   பில்லி சூனியம் குணமாக்கல் சிகிச்சைக்காக மத சபையில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (14.04.24)  உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டையை சேர்ந்த , அராலி முருகமூர்த்தி பாடசாலை ஆங்கில ஆசிரியையான 37 வயதுடைய  கோவிந்தசாமி கல்பனா   என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த ஆசிரியைக்கு கடந்த 05ஆம் திகதி முதல் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் யாரோ பில்லி சூனியம் வைத்து விட்டார்கள் என நம்பியுள்ளனர். அதனால் இளவாலை பகுதியில் உள்ள மத சபை ஒன்றுக்கு சென்ற போது , பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது அவற்றை அகற்ற, குணமாக்கல் வழிபாடுகள், பரிகாரங்கள் செய்ய வேண்டும் என மத சபையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் வாந்தியும், வயிற்று வலியும் ஏற்பட்டதை அடுத்து, ஆபத்தான நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மத சபையின் போதகரினால் அனுமதிக்கப்பட்டுள்ளார் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரியவராத நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அதேவேளை சடலத்தை புதைக்குமாறு அறிவுறுத்தி உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது.   https://globaltamilnews.net/2024/201801/
    • வடக்கு-கிழக்கில் தமிழ்த்தேசியம் பலவீனமாக உள்ளது. எதிர்ப்பு அரசியலால் சலித்துப்போனவர்கள் அதிகரித்துள்ளார்கள். பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப வெளிநாடுகளுக்கு ஓடமுயல்கின்றார்கள். இந்த நிலையில் மக்கள் இயல்பாகவே தமது தனிப்பட்ட வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஸ்திரமான ஆட்சியை யார் தருவார் என்று பார்ப்பார்களே தவிர, ஒரு திரளாக கொள்கைக்கு வாக்களிக்கமாட்டார்கள்.  ஆகவே, சிங்களத் தலைவர்கள்  “தமிழர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை” என்று சொன்னால் அதை மறுதலிக்கமுடியாத நிலைதான் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர் மூலம் உருவாகும். அது ஒரு வகையில் தமிழரின் தலைமை இனப்பிரச்சினைக்கு என்ன வகையான தீர்வை முன்னெடுக்கவேண்டும் என்பதை தீர்மானிக்கவும் உதவலாம்!
    • தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவர் அறிக்கை! தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே.வி.தவராசா அறிக்கையொன்றை விடுத்துள்ளார். தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் தமிழ் மக்கள் தமது இருப்பை நிலைநிறுத்தவும் உரிமைக் கோரிக்கைக்கான ஒரு குரலாகவும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்வைப்பது பொருத்தமாக இருக்கும் என கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவதனூடாக, தமிழர்கள் சிங்கள ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கையிழந்து விட்டார்கள் என்பதையும் தமிழ் மக்களின் உரிமைக்காக ஒன்றுபட்டமையை பொது வேட்பாளருக்கு திரளாக வாக்களிப்பதன் மூலம் உணர்த்த முடியும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் பொது வேட்பாளர் என்ற எண்ணக்கருவை எதிர்ப்பவர்கள் பேரினவாத ஆட்சியாளர்கள் வெல்வதற்கே துணை செய்கிறார்கள் எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா கூறியுள்ளார். -(3)   http://www.samakalam.com/தமிழ்-பொது-வேட்பாளர்-தொட/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.