Jump to content

சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட புரட்சிகர விடுலை முன்னணி உறுப்பினர்கள்- நினைவேந்தல்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தின நிகழ்வு  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 

கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, சுகாதார வழிமுறைகளுக்கமைவாக குறிப்பிட்ட சிலரின் பங்களிப்புடன் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

 1990.06.19 அன்று இந்தியாவின் சென்னையில் ஈழமக்கள் புரட்சிகர விடுலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா உட்பட 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட அன்றைய தினத்தை தியாகிகள் தினமாகப் பிரகடனப்படுத்தி 1981ம் ஆண்டு தொடக்கம் மரணித்த அனைவரையும் நினைவு கூர்ந்து இந் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன் போது பத்மநாபாவின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மண்முனை மேற்குப் பிரதேச சபை உபதவிசாளர் பொன்னம்பலம் செல்லத்துரை,மண்முனை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் பி.கிருஸ்ணகுமார், மண்முனை தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மு.அருட்செல்வம் மற்றும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்மநாபா மன்றத்தின் மத்திய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

 

 

https://ibctamil.com/article/eastern-province-memorial-1624087398

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவேந்தல்  நிகழ்வுகளில் மக்கள்  கலந்து  கொள்ள அனுமதிக்கப்படுவதில்லையா??

Link to comment
Share on other sites

26 minutes ago, விசுகு said:

நினைவேந்தல்  நிகழ்வுகளில் மக்கள்  கலந்து  கொள்ள அனுமதிக்கப்படுவதில்லையா??

பிரான்ஸில் இவர்களை நீங்கள் நினைவுகூர்வதில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றும் மனதில் நின்றாடும் சம்பவம்.. யாழ் பரியோவான் கல்லூரி மாணவன் அறிவை கொன்றுவிட்டு யாழ் அரசடிச் சந்தியில் வெள்ளைவானில் இருந்து தள்ளிவிட்டு போன இந்தக் கூட்டம்.. அன்று அந்த காலைவேளையில் தனியார் வகுப்புக்குப் போய் கொண்டிருந்த எங்களை நோக்கி துப்பாக்கியை நீட்டி வெருட்டிவிட்டுப் போன நிகழ்வுகள்... 

இவங்கள் எல்லாம் யாருக்கு தியாகிகள்..????!

அடிப்படை மனிதப் பண்பை இழந்து சொந்த மக்களையே காட்டிக்கொடுத்து காவுகொண்ட கூட்டம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் சேர்ந்து செய்த அட்டுழீயங்களுக்கும், கட்டாயமாக இளைஞர்கள், சிறுவர்களைப் பிடித்து மொட்டை அடித்தும், இமை மயிர்களைக் கூட மழித்தும் TNA (தமிழ் தேசிய இராணுவம்) என்று படை கட்டியவர்கள்.  அந்த அராஜகங்களுக்கு எல்லாம் எப்போதாவது மன்னிப்பு கேட்டதாக நினைவு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைவஞ்சலிகள்🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கற்பகதரு said:

பிரான்ஸில் இவர்களை நீங்கள் நினைவுகூர்வதில்லையா?

நடக்கலாம் நான் கலந்து கொள்வதில்லை. மன்னிக்கவும்

அழிக்க உதவி விட்டு இரங்கல் செய்யும் ஆள் நான் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

87-89 வட கிழக்கில் இவர்களின் அராஜகத்துக்குள் வாழ்ந்த யாரும் இவர்களை நல்லவகையில் நினைவுகூரல் செய்யார்கள்.
ஆனால் கொல்லப்பட்டவர்களும் இப்போ இல்லை, கொன்றவர்களும் இல்லை. இதில் தப்பிய ஒரே ஒருவர் எனப்படுபவரும் பின்னர் கொன்றவர்களால் மன்னித்து ஏற்று கொள்ளப்பட்டுவிட்டார்.

30 வருடத்தின் பின் இரெண்டு பகுதியின் வால்களும் பொது வெளியில் பழைய ரணங்களை கிண்டுவதில் ஒரு பலனும் இல்லை.

Time to reconcile, time to move on. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் சேர்ந்து செய்த அட்டுழீயங்களுக்கும், கட்டாயமாக இளைஞர்கள், சிறுவர்களைப் பிடித்து மொட்டை அடித்தும், இமை மயிர்களைக் கூட மழித்தும் TNA (தமிழ் தேசிய இராணுவம்) என்று படை கட்டியவர்கள்.  அந்த அராஜகங்களுக்கு எல்லாம் எப்போதாவது மன்னிப்பு கேட்டதாக நினைவு இல்லை.

அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே.

நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள்.

அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

காலத்தின் கோலம் இந்த மண்டையனையும் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கி கிளிநொச்சிவரை அழைத்து தலைவரும் சந்தித்திருந்தார்.

சொந்த இன மக்களை என்னமோ ஜென்மவிரோதிகள்போல் தேடி தேடி வேட்டையாடிவிட்டு இந்தியபடை திரும்பும்போது தாயக பகுதியெங்கும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சொந்த மக்களின் உயிர்களை சுருட்டியது போதாதென்று உடமைகளையும்  சுருட்டிக்கொண்டு  ஓடி தப்பியவர்கள் பதிலுக்கு வேட்டையாடப்பட்டார்கள். அவ்வளவுதான் இவர்களுக்கு அஞ்சலியெல்லாம் கிடையாது.

 அந்நிய சக்திகளின் பிராந்திய ஆக்கிரமிப்பு போதைக்கு அவர்களை மகிழ்விக்க சொந்த மக்களை வகை தொகையின்றி  படுகொலை செய்து அவர்களிடம் வாங்கி உண்ட சோற்றுகடன் தீர்த்தார்கள்.

காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் முயற்சியின்போது ஒரு ஈபி போராளி இறந்ததாக ஞாபகம், ஈபிஆர் எல் எவ்.வில் அந்த ஒரேயொரு போராளிக்கு மட்டும் அஞ்சலிகள்.

கடல்கடந்துபோய் இந்திய மண்ணில் இவர்களை போட்டு தள்ளியது தவறு என்று ஒரு விமர்சனம் உண்டு, 

கடல்கடந்து வந்து சொந்தமக்களை கொன்று குவித்துவிட்டு மீண்டும் கடல்கடந்து ஓடி தப்பி இந்திய மண்ணில் அடைக்கலம் புகுந்தது தவறில்லையென்றால், கடல்கடந்துபோய் அவர்களுக்கு தண்டனை வழங்கியதும் தவறில்லை.

அது தவறு என்று வாதிட்டால், இங்கிலாந்திலிருந்து கடல் கடந்து வந்து இந்தியாவில் ஜூலியன்வாலா படுகொலைகளை செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பிய ஜெனரல் டயரை இங்கிலாந்துவரை தேடி சென்று இந்தியரான ஷாஹீத் உதம்சிங் அவரை கொன்று பழி தீர்த்ததும்  தவறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, valavan said:

அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே.

நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள்.

அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

காலத்தின் கோலம் இந்த மண்டையனையும் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கி கிளிநொச்சிவரை அழைத்து தலைவரும் சந்தித்திருந்தார்.

சொந்த இன மக்களை என்னமோ ஜென்மவிரோதிகள்போல் தேடி தேடி வேட்டையாடிவிட்டு இந்தியபடை திரும்பும்போது தாயக பகுதியெங்கும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு சொந்த மக்களின் உயிர்களை சுருட்டியது போதாதென்று உடமைகளையும்  சுருட்டிக்கொண்டு  ஓடி தப்பியவர்கள் பதிலுக்கு வேட்டையாடப்பட்டார்கள். அவ்வளவுதான் இவர்களுக்கு அஞ்சலியெல்லாம் கிடையாது.

 அந்நிய சக்திகளின் பிராந்திய ஆக்கிரமிப்பு போதைக்கு அவர்களை மகிழ்விக்க சொந்த மக்களை வகை தொகையின்றி  படுகொலை செய்து அவர்களிடம் வாங்கி உண்ட சோற்றுகடன் தீர்த்தார்கள்.

காரைநகர் கடற்படை முகாம் தாக்குதல் முயற்சியின்போது ஒரு ஈபி போராளி இறந்ததாக ஞாபகம், ஈபிஆர் எல் எவ்.வில் அந்த ஒரேயொரு போராளிக்கு மட்டும் அஞ்சலிகள்.

கடல்கடந்துபோய் இந்திய மண்ணில் இவர்களை போட்டு தள்ளியது தவறு என்று ஒரு விமர்சனம் உண்டு, 

கடல்கடந்து வந்து சொந்தமக்களை கொன்று குவித்துவிட்டு மீண்டும் கடல்கடந்து ஓடி தப்பி இந்திய மண்ணில் அடைக்கலம் புகுந்தது தவறில்லையென்றால், கடல்கடந்துபோய் அவர்களுக்கு தண்டனை வழங்கியதும் தவறில்லை.

அது தவறு என்று வாதிட்டால், இங்கிலாந்திலிருந்து கடல் கடந்து வந்து இந்தியாவில் ஜூலியன்வாலா படுகொலைகளை செய்துவிட்டு இங்கிலாந்து திரும்பிய ஜெனரல் டயரை இங்கிலாந்துவரை தேடி சென்று இந்தியரான ஷாஹீத் உதம்சிங் அவரை கொன்று பழி தீர்த்ததும்  தவறு. 

அதே..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, valavan said:

அசோகா ஹோட்டலை மறந்துவிட்டீர்களே.

நூற்றுக்கணக்கான போராட்ட ஆதரவாளர்கள், பொதுமக்கள்,சந்தேகத்தின் பேரில் பிடித்து செல்லப்பட்ட இளைஞர்கள் விசாரணை என்ற பெயரில் உச்சந்தலையில் இரும்புகம்பிகளால் அடித்து கொல்லப்பட்டு மல குழிகளில் போட்டு மூடப்பட்டார்கள்.

அதனை தலைமையேற்று நடத்தியவர் இன்று தமிழர்களின் பிரதிநிதிகளில் ஒருவர் என்று தன்னை சொல்லி கொள்ளும் மண்டையன் எனும் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

நாங்கள் தவ்வல்களாக இருந்த காலம். புலிகள் என்று அச்சில் கூட வரமுடியாத அளவு தணிக்கைகள் நிலவிய காலம். எனினும் தினமும் செய்திகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தோம். இவர்களின் அசோகா ஹோட்டல் அராஜகங்கள் ஓரளவுதான் தெரிந்திருந்தன. இந்திய இராணுவத்தின் கொடுமைகளால், எனது நண்பனின் தமையனை கோப்பாய் பகுதிக்கு பாதுகாப்பாக படிக்க அனுப்பியிருந்தனர். ஆனால் இவர்கள் பிடித்து தலைக்கு மொட்டையும் அடித்து இமை மயிர்களையும் மழித்து வைத்திருந்தனர். பெற்றோர், பலரின் கையைக் காலைப்பிடித்து நண்பனின் தமையனை மீட்டிருந்தனர். 

வடமராட்சிப் பகுதியில் இவர்களின் அட்டகாசங்கள் அதிகம் இருக்கவில்லை. எனினும் முக்கிய இடங்களில் ஆள்காட்டிகளாகவும், தலையாட்டிகளாகவும் இருந்தனர். இந்திய இராணுவத்தின் சுற்றிவளைப்புக்களை எல்லாம் உச்சிக்கொண்டிருந்ததால், அவர்களிடம் அடி வாங்கியதில்லை. ஆனாலும் ஈபிஆர்எல்எவ் இடமும் ஒருமுறை அகப்பட்டு திமிர்க்கதை (அரசியல்தான்) கதைத்து முட்டுக்காலில் வெயிலுக்குள் பலமணி நேரம் நின்றதும்,  ரெலோவிடம் அகப்பட்டபோது நண்பன் ஒருவன் மட்டக்களப்பு சாயலில் கதைத்தற்காக (அவன் ஒன்றிரண்டு வருடங்கள் இருந்து படித்தான்), அவன் சேர்ட் கிழிந்துபோகுமளவிற்கு அடித்தார்கள்.  இப்படித்தான் இவர்களை நினைவில் இருக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களுக்கு அஞ்சலிகள். இவர்களின் இறப்பை நியாயப்படுத்தவும் இல்லை!

எண்பதுகளின் இறுதிகளில் EPRLF இனர் ஆடிய வெறியாட்டம் வரலாற்றில் மறக்கமுடியாதது. மனித குலத்துக்கு எதிரான படுபாதகங்களை புரிந்திருந்தனர். இன்று பத்மநாபா பற்றி பேசும் எஞ்சியுள்ள EPRLF இனர் அவர் ஏதோ சிந்தனைச் சிற்பி, மாபெரும் போராளி, சமூக விடுதலையாளர் போன்ற ரேஞ்சில் பேசித் தள்ளுவதுதான் காலத்தின் கொடுமை. மக்களைப் பாதுக்காக்க ஏந்திய ஆயுதங்களை அந்த மக்களுக்கெதிராகவே திருப்பிய துயரம் ஈழத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வாலி said:

மக்களைப் பாதுக்காக்க ஏந்திய ஆயுதங்களை அந்த மக்களுக்கெதிராகவே திருப்பிய துயரம் ஈழத்தில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. 

மக்களைப் பாதுக்காக்க என்று ஆயுதம் ஏந்தியவர்கள் இப்படி நடந்தது கேவலம். அராஜகமும் அட்டூழியமும் பெரும் அளவில் நடந்துள்ளது.

 

Link to comment
Share on other sites

நேரில் கண்ட சம்பவம்:  கண்டி தெருவில் வசிக்கும் ஒரு மத்திய தர வர்க்க மனிதன். தமிழரசு, கூட்டணி என யார் தமிழர்களுக்காக குரல் கொடுக்கிறார்களோ அவர்களின் பக்கம் நிற்கும் சாதாரண புகையிரத ஊழியர். அந்த வகையில் இயக்கங்கள் உருவெடுத்த போது தனது பரிபூரண ஆதரவை (பணமாகவோ, எதுவாகவோ) கொடுக்க தயங்கவில்லை. இறுதியில் மூத்த மகன் புலிகளில்  இணைகிறார். எந்த இயக்கம் உதவி கேட்டாலும் உதவி செய்ய தயங்காதவர். அது எந்த சின்ன இயக்கமாக இருந்தாலும் சரி.
மகன் புலியில் இணைந்ததற்காக அவருக்கான பரிசு கண்டி வீதியின் நடுவில்  வீட்டில் இருந்து அடித்து இழுத்து வரப்பட்டு சுட்டு படுகொலை செய்யப்பட்டார் இந்த ஈபிஆர் எல் எவ் காடைகளால். 
சில வேளை கந்தன் கருணை பிழை எனும் போதும் கூட இந்த கொலையை புலிகள் செய்ய காரணிகள் இருந்தாகவே நினைக்கிறேன்.
தாமும் நினைக்க முடியாத தவறுகளை இழைத்து விட்டு புலிகள் தம்மை அழித்து விட்டார்கள் என்பது எவ்வகையில் நியாயம் ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈ பி ஆர் எல் எப் என்ற சொல் கண்ணில் படும்போதெல்லாம் 1988 இலிருந்து 1990 வரை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நான் அனுபவித்த, பார்த்த அட்டூழியங்கள்தான் வந்துபோகிறது.

என்னுடன் படித்த மாணவன் ஒருவனை பாடசாலை வாயிலில் வைத்து தமது வாகனத்தில் ஏற்றியதைப் பார்த்தேன். அவன் எப்படியோ அவர்களின் வாகனத்திலிருந்து தப்பியோடி எங்கள் விடுதிக்குள் வந்து ஒளிந்துகொண்டான். சில நிமிடங்களில் அவனைத் தேடி விடுதியினுள் ஈ பி ஆர் எல் எப் கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம் என்று அவன் அழுதது இன்னும் நினைவில் இருக்கு. சில நாட்களின் பின்னர் அவன் அவர்களால் பிடிபட்டு வந்தாறுமூலைப் அல்லது களுவங்கேணி பகுதியில் உள்ள கட்டாய ராணுவப் பயிற்சி முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்தும் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவ்வாறே திருநெல்வேலிச் சந்தைக்குப் போய்வரும் ஒரு நாள் இந்திய ராணுவத்தின் முக்கால் ட்ரக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை எல்லாம் புலியென்று காட்டிக் கொடுத்த ஒரு முகம். நான் தப்பிவிட்டேன், ஆனால் அன்று குறைந்தது 15 அல்லது 20 பேரையாவது அவன் தலையாட்டிக் காட்டிக் கொடுத்திருந்தான். 

இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று நம்புமளவிற்கு ஈழத்தமிழினத்திற்குச் செய்த சேவைகள் என்னவென்று எனக்குத் தெரியாது.

வரதராஜப் பெருமாளும், டக்கிளசும் இன்று இருக்கும் இடங்களப் பார்க்கும்போது இவர்கள் ஒருபோதுமே தமிழ் மக்களுக்காகப் போராடியதில்லை என்பதே தெளிவாகிறது. சுரேஷ் மண்டையன் குழு ஆயுததாரி, ஆனால் இப்போது தேசியம் பேசுகிறார், இந்திய நலனிலும் அக்கறை கொண்டவர்.

புலிகளைக் காரணம் காட்டியே தமது அட்டூழியங்களைச் சொந்த மக்கள் மீதே நடத்திய கயவர்கள். 

Link to comment
Share on other sites

விடுதலைக்காக புறப்பட்ட ஆயுத இயக்க தலைமைகள்  ஒவ்வொன்றும் திசை மாறி தமக்குள் பகையுணர்வையும் வெறுப்பையும் வளர்தது பழிவாங்க புறப்பட்டு தம்மை நம்பிவந்த சொந்த இயக்க இளைஞர்களையும்  சக இயக்க  இளைஞர்களையும்  வேட்டையாடி இறுதியில் அதன் விளைவாக  நம்பிய  மக்களுக்கு பேரழிவை உண்டாக்கி தாமும் அழிந்த பிறகும், அத்தவறுகளை பற்றி வெளிப்படையாகவும் இயக்க சார்பின்றி பொதுவாகவும் உணமைகளை  உரையாட விரும்பாமல்,  இங்கு அவரவர் தத்ததமது  தலைமை விசுவாசத்தை காட்டுவதற்காக,  1986 ம் ஆண்டில் ஆரம்பித்து பின்னர் சொந்த இன இயக்கங்களாலேயே இரக்கமின்றி படுகொலை செய்யப்பட்ட அத்தனை இளைஞர்களின்/ பொதுமக்களின்   படுகொலைகளுக்கு ஏதோ தம்மளவில் சப்பைக்கட்டு  காரணம் காட்டி வக்காலத்து வாங்குவதைப்  போலவே சிங்கள பேரினவாதமும்  உலக நாடுகளும்  எமது மக்களின் இறுதிப்  படுகொலைகளுக்கும்  இதைப் போலவே ஏதேனும் காரணங்களை காட்டி தப்பிக்கொள்ளும். ஏனெனில் எம்மை போலவே ஒரு தலைப்பட்ச சுயநலமனிதர்கள் தானே அவர்களும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பாத்தேன் ஆளை இன்னும் காணேல்லையே என்று. வந்திட்டார்! இனி களம் சூடு பிடிக்கும்.

Link to comment
Share on other sites

On 19/6/2021 at 22:58, விளங்க நினைப்பவன் said:

மக்களைப் பாதுக்காக்க என்று ஆயுதம் ஏந்தியவர்கள் இப்படி நடந்தது கேவலம். அராஜகமும் அட்டூழியமும் பெரும் அளவில் நடந்துள்ளது.

 

அந்தத் காலம் ஈபிஆர்எல்எஃப் தலைவர் பத்மநாபாவின் சிந்தனை என ஒரு வாக்கியம் அவர்களது வெளியீடுகளில் வந்தது. 

"மக்களில்லா மண்ணை நான் நேசிக்கவில்லை" 

இப்படி சிந்தனை கொண்ட ஒருவரின் தலைமையில் இந்திய இராணுவகாலம் நடந்த அனியாயங்கள் பார்த்து அறிந்து அனுபவித்த அனுபவங்கள் நிறைய.

 இவர்கள் மரணம் எந்த வருத்தத்தையும் தரவில்லை.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்கு என்ன ? இவர் மீது புலிகள் ஏன் கை வைக்கவில்லை ?

இந்தக் கொலைகள்-சுரேஸ் பிரேமச்சந்திரன்-புலிகள் : இவற்றிற்கிடையிலான தொடர்பு என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/6/2021 at 22:20, ரஞ்சித் said:

ஈ பி ஆர் எல் எப் என்ற சொல் கண்ணில் படும்போதெல்லாம் 1988 இலிருந்து 1990 வரை யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் நான் அனுபவித்த, பார்த்த அட்டூழியங்கள்தான் வந்துபோகிறது.

என்னுடன் படித்த மாணவன் ஒருவனை பாடசாலை வாயிலில் வைத்து தமது வாகனத்தில் ஏற்றியதைப் பார்த்தேன். அவன் எப்படியோ அவர்களின் வாகனத்திலிருந்து தப்பியோடி எங்கள் விடுதிக்குள் வந்து ஒளிந்துகொண்டான். சில நிமிடங்களில் அவனைத் தேடி விடுதியினுள் ஈ பி ஆர் எல் எப் கும்பல் ஆயுதங்களுடன் வந்தது. தன்னைக் காட்டிக் கொடுக்கவேண்டாம் என்று அவன் அழுதது இன்னும் நினைவில் இருக்கு. சில நாட்களின் பின்னர் அவன் அவர்களால் பிடிபட்டு வந்தாறுமூலைப் அல்லது களுவங்கேணி பகுதியில் உள்ள கட்டாய ராணுவப் பயிற்சி முகாமுக்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்தும் தப்பிக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டான்.

இவ்வாறே திருநெல்வேலிச் சந்தைக்குப் போய்வரும் ஒரு நாள் இந்திய ராணுவத்தின் முக்கால் ட்ரக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை எல்லாம் புலியென்று காட்டிக் கொடுத்த ஒரு முகம். நான் தப்பிவிட்டேன், ஆனால் அன்று குறைந்தது 15 அல்லது 20 பேரையாவது அவன் தலையாட்டிக் காட்டிக் கொடுத்திருந்தான். 

இவர்கள் புரட்சிக்காரர்கள் என்று நம்புமளவிற்கு ஈழத்தமிழினத்திற்குச் செய்த சேவைகள் என்னவென்று எனக்குத் தெரியாது.

வரதராஜப் பெருமாளும், டக்கிளசும் இன்று இருக்கும் இடங்களப் பார்க்கும்போது இவர்கள் ஒருபோதுமே தமிழ் மக்களுக்காகப் போராடியதில்லை என்பதே தெளிவாகிறது. சுரேஷ் மண்டையன் குழு ஆயுததாரி, ஆனால் இப்போது தேசியம் பேசுகிறார், இந்திய நலனிலும் அக்கறை கொண்டவர்.

புலிகளைக் காரணம் காட்டியே தமது அட்டூழியங்களைச் சொந்த மக்கள் மீதே நடத்திய கயவர்கள். 

கொழும்பில் இருந்து புகையிரத்தில் யாழ் வருகையில் சாவகச்சேரியில் சிலர் ஆயுதங்களுடன் ஒவ்வொரு பெட்டியாக ஏறி இளம் வயது பெடியலை இறக்கினார்கள், அதில் நானும் ஒருவன். TNA இக்கு ஆட்கள் சேர்ப்பதாக கதைக்க பட்டது. புகையிரதம் புறப்பட்ட நேரம் எங்கள் பக்கத்தில் ஒரு ஆயுத தாரியும் நிக்காததால் நாங்கள் 4, 5 பேர் புகையிரத்திற்குள் ஏறி கொண்டோம். ஒரு வழியாக வீட்டுக்கு வந்தது நிம்மதி என்றால் அடுத்த நாள் சுற்றி வளைப்பில் என்னை மட்டும் தலையாட்டி கையை காட்டினார். மற்றவர்கள் எல்லாம் போக என்னை மட்டும் கடற்கரையை  அண்டிய தென்னம் தோப்பிற்குள் இந்திய ராணுவமும் ஒட்டுக்குழுவினரும் அழைத்து சென்றனர். எனது மூத்த அண்ணர் (என்னை விட 10 வயது கூடியவர்) இவர் படிக்கிறார், புலிகளுடன் தொடர்பு இல்லை என்று சொல்லி பார்த்தும் அவர்கள் விடவில்லை. தூரத்தில் இன்னுமொரு ஆள் மக்கள் கூட்டத்தில் இருந்து எங்களை நோக்கி நடந்து வந்தார், அவர் சாந்தன் (இந்த இடத்தில இவரை நினைவு கூறுவது சால சிறந்தது). என்னுடன் 5ம் வகுப்பு வரை ஒன்றாக படித்தவர்.  83இல் பல இளைஞர்கள் இயக்கங்களுக்கு போக இவரும் டெலோவில் சேர்ந்தார். புலிகள் டெலோவை தடை செய்யும் போது இவரை ஊருக்குள் மட்டும் இருக்க சொல்லி விட்டு விட்டார்கள். இந்தியன் ஆமி ஒட்டுக்குழுக்கள் இவரை கூப்பிட்டும் தான் இனிமேல் இயக்கங்களுக்கு வர மாட்டேன் என்று தானுண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விட்டார். இவர்தான் அந்த கும்பல்களுடன் இருந்து என்னை காப்பாற்றியவர். எனக்கு புலிகளுடன் தொடர்பு இல்லை என்று கூறினார், அவர்களும் அவர் சொன்னதை நம்பினார்கள் . துரதிஷ்டவசமாக சில வருடங்களுக்கு முன்பு அவர் மாரடைப்பால் காலமாகி விட்டார்.
பிள்ளை பிடிகாரர்கள் தீவிரமாக இயங்கியதால் மயிலிட்டி வைத்தியசாலையில் பணியாற்றிய ஓன்று விட்ட அண்ணரின் உதவியுடன் அவரது அறையில் ஒழித்து இருந்து சிறி லங்கா ராணுவத்தின் விமானத்தில் 1000 ரூபாய் டிக்கெட் எடுத்து ரத்மலானை வந்து சேர்ந்தேன்.

 

ஆனையிறவு சோதனை சாவடியில் ஆசிரியைகள் ஒருவர் இருவர் தலையை சொரிஞ்சதால் தாக்கப்பட்டார்கள் என்று அறிந்தேன். காரணம் ஈரும்-பேனும் (EP). மறந்தும் தலையில் விரலை விட்டு நோண்ட கூடாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

17 hours ago, Kapithan said:

இந்தக் கொலையில் சுரேஸ் பிரேமச்சந்திரன் பங்கு என்ன ? இவர் மீது புலிகள் ஏன் கை வைக்கவில்லை ?

இந்தக் கொலைகள்-சுரேஸ் பிரேமச்சந்திரன்-புலிகள் : இவற்றிற்கிடையிலான தொடர்பு என்ன ?


 இப்ப இப்படி கேட்பீர்கள் 
போட்டிருந்தால் .......புலிகள் சுட்டதாலேயே 
தியாகிகள் .... கல்விமான்கள் ... கவரிமான்கள் ஆக்கி இருப்பீர்கள் 

புலிகளின் ரவைக்கு அவ்வளவு மவுசு 
பட்டதும் உடனேயே மக்களுக்கு மாங்கு மாங்கு என்று உழைத்த 
சிந்தனை சிற்பிகள் தியாகிகள் ஆகிவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேவுத்தகவலின் படி இவரும் நின்றிருக்க வேண்டும் என்றுதான் போனார்கள் 
இவர் அங்கு இருக்கவில்லை 

மாவை தப்பியதுபோல 
அமீர்தலிங்கத்தை சுட்ட போது அவர் மேலே மாடியில் நின்று இருந்தார் 
இவர்களுடன் சென்று வாசலில் நின்றவர் கொஞ்சம் நெர்வோசாக இருந்தார் 
அவரை பார்த்த அமீரின் போலீஸ் பாதுகாவலர் கொஞ்சம் சந்தேகப்பட தொடங்கிவிட்டார் 

இவர்கள் சுட தொடங்கியதுமே அந்த போலீஸ் காரர் அவரை சுட்டுவிட்டார் 
இவர்களின் முழு திட்டமும் அதோடு குளம்பிவிட்டது 

Link to comment
Share on other sites

பிறேம்சந்திரன் மேற்படி கொலை நடந்த போது வெளியில் உணவு வாங்க அனுப்பப்பட்டதாகவும் அதிஸ்டவசமாக உயிர்தப்பியதாகவும் செய்திகள் கூறின.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Maruthankerny said:

 


 இப்ப இப்படி கேட்பீர்கள் 
போட்டிருந்தால் .......புலிகள் சுட்டதாலேயே 
தியாகிகள் .... கல்விமான்கள் ... கவரிமான்கள் ஆக்கி இருப்பீர்கள் 

புலிகளின் ரவைக்கு அவ்வளவு மவுசு 
பட்டதும் உடனேயே மக்களுக்கு மாங்கு மாங்கு என்று உழைத்த 
சிந்தனை சிற்பிகள் தியாகிகள் ஆகிவிடுவார்கள். 

அட விசயத்துக்கு வாங்கப்பூ..

இந்தக்கொலைகளில் இவருக்கும் பங்கு என்கிறது பட்சி..😉

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.