Jump to content

கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கிலங்கை திருப்படை கோயில்கள்

 
 
 
24162_401454377852_401453287852_5017601_2469408_n.jpg
 

By- கெளரி புண்ணியமூர்த்தி , மைலம்பாவெளி, தன்னாமுனை மட்டக்களப்பு.

இலங்கையின் கிழக்குக் கரை யோரத்தில் முருக வழிபாடு மிகத் தொன்மைக் காலம் முதலாக நிலைபெற்று வந்துள்ளது. அப்பகுதியிற் காணப்பட்ட பிராமிச் சாசனங்கள் இதற்குச் சான்றாக அமைகின்றன.
மட்டக்களப்பு மான்மியமானது கிழக்கிலங்கை முருகனாலயங்கள் பற்றியும் அவற்றிற்கான மன்னர்களது திருப்பணிகள் மற்றும் மானியங்கள் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவ்வாலயங்களில் காணப்படும் சாசனங்கள் சற்றுப் பிந்திய காலத்திற்குரியனவாக காணப் படுகின்ற போதிலும், அக்கோயில்களிலே பின்பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகள் பாரம்பரியமிக்கனவாகவும், கதிர்காமத்துடன் தொடர்புடையன வாகவும் அமைகின்றன. கிழக்கிலங்கையில் உள்ள பழமை வாய்ந்த முருகனாலயங்கள் 'திருப்படைக் கோயில்கள்' என அழைக்கப்படுகின்றன. கிழக்கிலங்கைத் திருப்படைக் கோயில்கள் என்று அடையாளங் காணப்படுபவை வடக்கே, வெருகல் முதல் தெற்கே குமண வரையான பிரதேசத்திலுள்ள ஐந்து தலங்களாகும். அக்கோயில்கள் மட்டக்களப்பிற்குரிய திருப்படைக் கோயில்காளகவே அடையாளப் படுத்தப்பட்டு வந்துள்ளன.

 எனினும் வெருகல் சித்திரவேலாயுதர் கோயில் திருகோணமலை மாவட்டத்திலும், திருக்கோயில் சித்திர வேலாயுதர் கோயில் அம்பாறை மாவட்டத்திலும் அடங்கியுள்ளன.
24162_401454377852_401453287852_5017601_2469408_n.jpg
திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி
 போரதீவு ஸ்ரீ சித்திரவேலாயுதர் கோயில், வெருகலம்பதி ஸ்ரீ சித்திர வேலாயுதர் கோயில், சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோயில், மண்டூர் ஸ்ரீ முருகன் கோயில் என்பனவே மட்டக்களப்பு தேசத்திற்குரிய திருப்படைக் கோயில்களாகும்.

 "மட்டக்களப்பில் பழமையும் பிரசித் தமும் உடையனவான முருகன் கோயில்களைத் திருப்படைக் கோயில்கள் என்று கூறுவர். பண்டைய அரசர்களின் மதிப்பும், மானியமும், சீர்வரிசைகளும் பெற்ற கோயில்களே திருப்படைக் கோயில்களாகும்" என வி. சி. கந்தையா தனது மட்டக்களப்புத் தமிழகம் எனும் நூலில் குறிப் பிடுகின்றார். இவர் கொக்கட்டிச்சோலை தான்தோன்aஸ்வரர் கோயிலையும் திருப்படைக் கோயில்களுள் ஒன்றாக கருதுகின்றமை அவதானத்திற்குரியது.

 கோயிலின் மூலஸ்தானத்தில் முருகனது படையாகிய வேல் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில்களே திருப்படைக் கோயில்களாகும். முருக வழிபாட்டின் தோற்றமாக வேல் வழிபாடு அமைந்திருந்தது. பழந்தமிழ் இலக்கியங்களான திருமுருகாற்றுப் படையிற் காணப்படும் 'வேல் கெழு தடக்கைச் சால் பெருஞ் செல்வ', 'செவ்வேற் சேஎய்' (திருமுருகாற்றுப்படை- 61) போன்ற குறிப்புகளும், பரிபாடலிற் காணப்படும் 'செருசேற்றானைச் செல்வ' (பரிபாடல் 18: 54) என்ற குறிப்பும் முருக வழிபாட்டில் வேல் பெறும் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றது. வேல் மிகப் பழைய வழிபாட்டம் சமாகும். படைவீடு என்பது முருகனது ஆறு வீடுகளுடன் இணைத்துக் கூறப்பட்டாலும், இதில் வரும் படை (ஆயுதம்) முருக வணக்கத்தின் தோற் றமாக வேல் அமைந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
 
 
kovil-1.jpg
 
 
 
 

 பழந்தமிழ் இலக்கியங் களின் மூலம் முருகனின் அடையாளமாக (சின்னமாக) வேல் வணங்கப்பட்ட செய்தியை அறிய முடிகின்றது. எனவே முருகனது படையாகிய வேலினை மூலஸ்தானத்தில் கொண்டிருந்த கோயில்கள் 'படைக்கோயில்கள்' எனப்பட்டன. தெய்வீகத்தைக் குறிக்க பயன்படும் 'திரு' என்ற அடைமொழியை இணைத்துக்கொண்டு இக்கோயில்கள்

'திருப்படைக் கோயில்கள்' என்ற நாமத்தினைப் பெற்றுக்கொண்டன. திருப்படைக் கோயில்களின் தொன்மையை எடுத்துக்காட்டுவனவாக இவற்றின் பெயர்களிலே 'வேலாயுதம்' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளமை கவனத்திற்குரியது. இக்கோயில்களில் வேலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் வெருகல் சித்திர வேலாயுதர் சுவாமி கோயிலில் இன்று மூலமூர்த்தியாக முருகனதும் அவரது தேவியரதும் திருவுருவங்கள் பிரதிஷ்டை செய் யப்பட்டுள்ளன. எனினும் இக்கோயிலின் பெயரில் இடம்பெறும் 'வேலாயுதர்' என்னும் அடைமொழி முன்பு முருகனது படையான வேலே அங்கு வழிபாட்டுப் பொருளாகக் காணப்பட்டது என்பதைத் தெளிவாக்குகின்றது. வேல் வைத்து வழிபடப்பட்ட இடமே இப்போது கதிர்காமசுவாமி கோயில் என்று வழங்கி வருகின்றது என்பது மரபு. இந்த விளக்கத்தின் அடிப்படையில் நோக்குகின்றபோது கொக்கட்டிச்சோலை தான்தோன்aஸ்வரர் கோயில் திருப்படைக் கோயில் என்ற வரையறைக்குள் அடங்க மாட்டாது. அது தேசத்துக் கோயிலாகும். ஏனெனில் அங்கு மூலவராக அருவத் திருமேனியான (சிலர் அருவுருவம் என்பர்) சிவலிங்கமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முற்காலங்களிலே மட்டக்களப்பு தேசத்தவர்களாற் தலை சிறந்தனவாகக் கொள்ளப்பட்டவை தேசத்துக் கோயில்களாகும். தேசத்திலுள்ள சைவர்கள் எல்லோரும் அத்தலங்களுக்கு யாத்திரை செல்வது வழக்கம். விழாக்காலங்களில் ஆலயங்களில் நடைபெற்ற வைபவங்களும் அவற்றிலே அனுசரிக்கப்பட்ட சம்பிரதாயங்களும் சமுதாயக் கட்டுக்கோப்புகளுக்கும் பந்தங்களுக்கும் அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தன. தலயாத்திரைகளும் ஆலய வழமைகளும் மட்டக்களப்புப் பிராந்தியம் முழுவதிலும் வாழ்ந்த மக்களிடையே சமய வழிபாடுகள், சம்பிரதாயங்கள், இலக்கிய மரபுகள், சடங்குகள் முதலானவற்றில் ஒரு பொதுவான பாரம்பரியம் ஏற்படுவதற்கு ஏதுவா யிருந்தன. அதன் விளைவாகவே மத்திய காலத்தில் மட்டக்களப்பு தேசம் என்ற சிந்தனை உருவாகியது.

kovil-3.jpg முருக வழிபாட்டைப் பொறுத்த வரையில் தமிழகம் மற்றும் ஈழத்தின் ஏனைய இடங்கள் போலல்லாது கிழக்கில் சற்று வித்தியாசமான நடை முறைகள் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. புராதன காலம் முதலாக அப்பகுதிகளில் வேல் வழி பாடு நிலை பெற்று வந்துள்ளமைக்குத் திருப்படைக் கோயில்கள் சான்றாக அமைகின்றன. இக்கோயில்களில் வேடர் பூசை முறைகளும் பாரம் பரியங்களும் சேர்ந்து நடைபெறுவதும் முக்கிய அம்சமாகும். இத்துடன் கப்புகன் வழிபாட்டு முறையையும் அங்கு காணமுடிகின்றது. கப்புகன் என்பது சிங்களத்தில் கப்புறாளை எனக் கூறப்படுகின்றது. மட்டக்களப்பில் கப்புகன் வழிபாடானது மெளன வழிபாட்டைக் குறிக்கும். இதற்கு அறிகுறியாக கப்புகன்மார் வாய் திற வாத நிலையில் வாய்ச்சீலை கட்டிக் கொள்வதைக் காணலாம். கந்தழி வழிபாடு (உருவமற்ற தெய்வத்திற்கு பிராமணரல்லாத கப்புறாளையால் இயற்றப்படும் வழிபாடு) பண்டைய வேலன் வழிபாட்டை நம் மனக்கண் முன்பு நிறுத்துகிறது. வேலன் வழி வந்த பூசாரிகளே காலகதியில் சிங்கள மொழி மாற்றத்தால் கப்புறாளை என அழைக்கப்பட்டனர். இவ்வழிபாட்டு முறை மண்டூர் முருகன் ஆலயத்திலும் கதிர்காமத்திலும் இன்றும் தொடர்ந்து இருந்து வருகின்றது.
 
 
kovil-2.jpg வெருகல் சித்திரவேலாயுதர் சுவாமி கோயிலில் அமைந்துள்ள கதிர்காமசுவாமி கோயிலிலும் இம்முறையை அவதா னிக்க முடிகின்றது. மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்கள் கதிர்காமத்துடன் தொடர்புடையனவாகக் காணப்படு கின்றன. அவ்வாலயங்கள் கதிர்காமத்தை யொட்டி உபய கதிர்காமம், சின்னக் கதிர்காமம் என்று அழைக்கப்படும் மரபு இப்பகுதிகளில் உண்டு கதிர்காமத்தைப் பின்னணியாகக் கொண்டதோர் வழிபாட்டு முறையே மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்கள் அனைத்திலும் இழையோடுவதைக் காணமுடிகின்றது. எனவே இவற்றினை கதிர்காமத்தினை ஒத்த வரலாற்று மரபு சார்ந்த கோயில்கள். மட்டக்களப்புத் திருப்படைக் கோயில்களில் முதன்மைக் கோயிலாக திருக்கோயில் சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் காணப்படுகின்றது. அது மட்டக்களப்பிற்குத் தெற்கே நாற்பத்தாறு மைல் தொலைவில் அமைந்துள்ளது. திருக்கோவில் பண்டைக் காலத்தில் நாகர்முனை, உன்னரசுகிரி, கண்டபாணந்துறை முதலிய பெயர்களால் குறிப்பிடப்பட்டது. ஆதியான முருக வழிபாட்டின் அம்சமான வேல் வழிபாட்டைக் கொண்ட இவ்வாலயம் ஆதிக்குடிகளான வேடுவரின் வழிபாட்டிலேயே தொடங்கப்பட்டது. இவ்வாலயத்தின் தோற்றம் தொடர்பில் பல ஐதிகக் கதைகள் காணப்படுகின்றன. திருக்கோயில் புவனேகயபாகு என்னும் கலிங்க இளவரசனது காலத்திலும், அவனது மகன் மனுநேயகயபாகு காலத்திலும் இருமுறை சோழ நாட்டுச் சிற்பிகளாலே திருத்திய மைக்கப்பட்டமை பற்றி மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. மாகனது திருப்பணி அவ்வாலயத்திற்கு இடம் பெற்றுள்ளமையையும் இந்நூல் கூறும். திருக்கோயில் சித்திரவேலாயுத சுவாமி கோயில் போர்த்துக்கேயரால் தகர்கப்பட்டமை பற்றி குவேரோஸ் தமது நூலிற் கூறியுள்ளார். அக்கோயிலில் மூன்று கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. அதில் தம்பிலுவில் அம்மன் கோயிலிற் காணப்பட்ட கல்வெட்டானது 16 ஆம் நூற்றாண்டுக்குரியது என அடையாளங் காணப்படுகின்றது.
DSC05396.JPG சிவஞான சங்கரர் கோயிலிற்கு வோவில் என்ற இடத்தை யாரோ மானியமாக அளித்ததை அக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. மற்றைய கல்வெட்டும் அதே நூற்றாண்டுக்குரிய தமிழ் எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. சிறிய தூணில் உள்ள மூன்றாவது கல்வெட்டு ஒரு எல்லைக் கல்லாக அடையாளங் காணப்படுகின்றது. இது 18 ஆம் நூற்றாண்டுக்குரியதாகும். கோயிற் போரதீவு சித்திரவேலாயுதர் கோயில் மட்டக்களப்பிற்குத் தெற்கே, வாவிக்கு மேற்குப் பகுதியில் 19 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. இவ்வாலய வரலாற்றைக் கூறும் வகையிலான புராதன கல்வெட்டோ செப்பேடுகளோ கிடைக்கவில்லை. எனினும் ஆலய மூலஸ்தான வாசலின் படிக்கல்லில், 'தென்னிந்திய காரைக்குடி நாகப்பச் செட்டி உபயம் பிராமணர் பராபரிப்பு' என பொறிக்கப்பட்டுள்ளமை பிற்காலத்தில் செட்டிகளின் திருப்ப ணியை இக்கோயில் பெற்றுள்ளமை யினைக் காட்டுகின்றது. மட்டக்களப்பு மான்மியம் காலசேனன் என்னும் மன்னன் பெரும் படை கொண்டு வந்து மண்டுநாகனை வென்று மண்டூர், கோயிற் போரதீவு எனும் இரு ஆலயங்களையும் இடித்தான் என்றும், பிற்காலத்தில் ஆட்சி செய்த மதிசுதன் தொண்டை நாட்டுச் சிற்பிகளை வரவழைத்து அவ்வாலயத்தைப் புனரமைத்தான் என்றும் கூறுகின்றது. மட்டக்களப்பிலிருந்து தென் மேற்கில் சுமார் 20 மைல் தூரத்தில் மண்டூர் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. மண்டுநாகன் என்னும் மன்னன் மண்டூர் முருகன் கோயிலைக் கட்டுவித்தான் என மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. அங்கு மட்டக்களப்பு மான்மியம் கூறும் மாகோன் வகுத்த வன்னிமை, திருப்படைக் கோயில் ஒழுங்கின் படியே பூசை, நிர்வாக நடைமுறைகள் என்பன நடைபெறுகின்றன. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வேடர் வணக்க முறைப்படி சிறிய குமாரத்தன் கோயில் அமைந்துள்ளது. இங்கு பூசை வேளையில் திரை மூடிப் பூசை நடைபெறும். துணியினால் வாய் மூடி, கப்புகனார் பூசை செய்வார். கதிர்காமம் போன்று வேடர் பூசையும் மரக்கறி, மான் இறைச்சி சேர்ந்த அவிபாகமும் குமாரத்தன் கோயிலில் வைக்கும் பூசையும் நடைபெறுகின்றது. சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோயில் மட்டக்களப்பு நகரிற்கு வடக்கே பதின்மூன்று மைல் தொலைவில் அமைந்துள்ளது. அக்கோயில் பழமையுஞ் சிறப்பும் கொண்டதெனினும் அதன் வரலாறு பற்றிய புராதனமான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இங்கு வேடர்களுடன் தொடர்புடைய குமாரத்தன் கோயில் அமைந்துள்ளதுடன், வள்ளியம்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதையும் பூசை நடைமுறையின்போது அவதானிக்க முடிகின்றது. கோயில் வழமைகளை ஆதாரமாகக் கொண்டு நோக்குமிடத்து, சித்தாண்டியில் ஆலய பரிபாலனத்தில் முதன்மை அதிகாரம் தேசத்து வன்னியருக்குரியதாகும். வண்ணக்கரே இங்கு நிர்வாகத்திற்குப் பொறுப்புடை யவராவார். அக்கோயிற் திருவிழாவில் 13 ஆம் நாள் நடைபெறும் மயிற்கட்டுத் திருவிழா சிறப்பானதாகும். வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுதர் சுவாமி கோயில் மண்டூர் முருகன் கோயிலைப் போன்று 'சின்னக் கதிர்காமம்' என்று அழைக்கப்படுகின்றது. திருகோணமலைக்குத் தெற்கே 37 மைல் தூரத்திலும், மட்டக்களப்பு நகருக்கு வடக்கே 47 மைல் தூரத்திலும் இது அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் கிளை நதியான வெருகல் ஆற்றங்கரையில் இவ்வாலயம் உள்ளது. சித்திரவேலாயுதர் ஆலயத்தின் தென்புறம் கதிர்காமசுவாமி கோயில் உள்ளது. ஆதி காலத்தில் இப்பகுதிகளில் வாழ்ந்த வேடுவர்களால் இவ்விடத்தில் வழிபாடு நிகழ்த்தப்பட்டதாக மரபு வழிக் கதைகள் கூறுகின்றன. இருந்தபோதிலும் வெருகலம்பதி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்களை நாம் 17 ஆம் நூற்றாண்டு முதலே பெற்றுக் கொள்ள முடிகின்றது. 'வெருகல் ஸ்ரீ சித்திரவேலாயுதர் காதல்' எனும் நூலும், கோயிலில் நடைபெற்ற திருப்பணி பற்றிய விடயங்களைக் கூறும் சாசனமொன்றும் வெருகலம்பதி பற்றிய ஆதாரபூர்வமான பழைய குறிப்புகளாகும். இச்சாசனம் 17 ஆம் நூற்றாண்டுக்குரியதென பேராசிரியர் சி. பத்மநாதன் கருதுகின்றார். ஆயினும் அதற்கு முன்னரே இங்கு கோயில் அமைக்கப்பட்டு திருகோண மலை, மட்டக்களப்பு தேசத்து மக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளது என்பதைக் கிடைக்கும் ஆதாரங்களிலிருந்து ஊகித்துக்கொள்ள முடிகின்றது.
 கெளரி புண்ணியமூர்த்தி
மைலம்பாவெளி,
தன்னாமுனை மட்டக்களப்பு.http://www.battinews.com/2012/02/blog-post_1220.html
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.