Jump to content

எறிவளைதடு - Boomerang


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் ஒரு Cappuccino காதல் குறும்படத்தை தயாரித்தவரின் இன்னொரு படைப்பு. 

வயோதிப பெற்றோரை நீங்கள் நன்றாக நடத்தாவிட்டால் அது 🪃 போல திரும்பும் என கூறும் படம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு என்ன எழுதுறது எண்டு எனக்குத் தெரியெல்ல.......நல்லாய் இருக்கு எண்டு சொன்னால் எனக்கு வயது போட்டுது என்று நினைக்கப் போகினம்........பரவாயில்லை  சூப்பர்.......!   😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

இதுக்கு என்ன எழுதுறது எண்டு எனக்குத் தெரியெல்ல.......நல்லாய் இருக்கு எண்டு சொன்னால் எனக்கு வயது போட்டுது என்று நினைக்கப் போகினம்........பரவாயில்லை  சூப்பர்.......!   😂 

வீட்டை சுத்தம் செய்தல், பெயிண்ட் அடித்தல் எல்லாம் பப்பிளிக்கில் வந்து எழுதினால் வயது போட்டுது என்று எடுத்துக் கொள்ளலாம்..😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாயினி said:

வீட்டை சுத்தம் செய்தல், பெயிண்ட் அடித்தல் எல்லாம் பப்பிளிக்கில் வந்து எழுதினால் வயது போட்டுது என்று எடுத்துக் கொள்ளலாம்..😄

இருந்த வீட்டை விட்டுட்டு போகும்போது எல்லாவற்றையும் நிறைவாக செய்து போட்டுத்தான் போகவேண்டி இருக்கு பிள்ளாய்........அவற்றை நானே செய்கின்ற படியால் நான் மிகவும் இளமையாக இருக்கின்றேன்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதுமையிலும் ஆரோக்கியமாக இருக்க உடலுழைப்பு அவசியம்.

Link to comment
Share on other sites

1 hour ago, suvy said:

இதுக்கு என்ன எழுதுறது எண்டு எனக்குத் தெரியெல்ல.......நல்லாய் இருக்கு எண்டு சொன்னால் எனக்கு வயது போட்டுது என்று நினைக்கப் போகினம்........பரவாயில்லை  சூப்பர்.......!   😂 

கவலை வேண்டாம் சுவி அவர்களே! உங்கள் அகமுடையாள் அப்படி எல்லாம் நினைக்கமாட்டா...😁

Quellbild anzeigen

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூமராங்கும் சரியென்று நினைக்கிறன்.....!

27 minutes ago, Paanch said:

கவலை வேண்டாம் சுவி அவர்களே! உங்கள் அகமுடையாள் அப்படி எல்லாம் நினைக்கமாட்டா...😁

Quellbild anzeigen

இனி அகமுடையாள் நினைத்தென்ன விட்டென்ன பாஞ்ச் ..........!   😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பார்த்த/கேட்ட சம்பவங்களை வைத்ததே இதை இணைத்தேன்..இதில் வரும் பெற்றோர் போன்றவர்களே எங்களது சமூகத்தில் அதிகம்.. 

இந்த குறும்படத்தில் வரும் பெற்றோர், பிள்ளைகளை நன்றாக படிக்கவைத்து அவர்களுக்கென வாழ்க்கையை கொடுத்தபின்பும் வயதான காலத்தில் இப்படி செய்யவேண்டுமா? 

இரண்டாவது இதில் வரும் பெற்றோர் தனியே பிள்ளைகளுக்கு படிப்பை மட்டுமே கொடுத்து வளர்த்திருக்கிறார்கள்.. இல்லாவிடில் அந்த Dr மகன் தாயைபார்த்து அப்படி சொல்லமாட்டார்..

பிள்ளைகளும், பெற்றோருடன் இருக்கும் வரை பெற்றோரில் தங்கியிருந்தார்கள், வளர்ந்தபின் துணையில் தங்கியிருக்கிறார்கள்.. அவர்களுக்கென தனித்துவமான/சுயபுத்தி இல்லாதவர்களாக இந்த படத்தில் காட்டப்படுகிறார்கள்..

இவர்களது பிள்ளை நாளை வளர்ந்து இவர்களை முதியோர் இல்லத்தில்தான் கொண்டுபோய் விடுவாரோ தெரியாது.. 


இந்த படத்தை பார்த்தபின்பு நான் நினைத்தது.. எதையும் அளவோடு செய்தால்தான் எங்களுக்கு பின்னாளில் ஏமாற்றங்கள் ஏற்படாது என்பதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, இணையவன் said:

வளரி என்றும் சொல்வார்கள் (முன்னர் யாழ் இளைஞன் சொன்னதாக ஞாபகம் 🙂).

வளரி என்றதை தேடியபோது பின்வரும் செய்தி கிடைத்தது.. SBS வானெலியில் வந்த செய்தியை இதில் இணைக்கிறேன் இணையவன் அண்ணா!. 

பூமராங்கிற்கு வேறு பல தமிழ்சொற்களும் உள்ளது.. 
//தமிழ்நாட்டில் யானைத்தந்தத்தால் தயாரிக்கப்பட்ட பூமராங்குகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன என்னும் தகவல் நமக்கு வியப்பளிக்கிறது அல்லவா? பழங்காலத்தில் பயன்பாட்டில் இருந்த அவை இன்று அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. பூமராங்குகளுக்கு தமிழில் வளரி என்று பெயர். வளரியின் வேறுசில பெயர்கள் வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் போன்றவை. வளரிகள் பெரும்பாலும் அடிமரத் தண்டுகளிலிருந்து தயாரிக்கப்பட்டன. சிறப்பாக சில உலோகத்திலும் யானைத்தந்தங்களிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.// 

https://www.sbs.com.au/language/tamil/audio/boomerang-known-and-unknown-facts

Link to comment
Share on other sites

இக் குறும்படம் சற்று அதிகமாக மிகைப்படுத்தி சமூகத்திற்கு செய்தி  சொல்லுவதாக எனக்கு படுகிறது. மகன்மாரை அப்பாவிகள் போலவும் மருமகள்களை வில்லிகள், மோசமானவர்கள்  போலவும் காட்டியுள்ளது தமிழ் சீரியல் நாடகங்களின் வகைக்கு இட்டு செல்கிறது. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. காலங்காலமான தமிழ்ப்பட பாணி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எறிவளைதடு எனக்கு வட்அப்பில் வந்தது வழக்கமான ஒன்று என்று விட்டுவிட்டேன். பின்பு  பிரபா சிதம்பரநாதன்  Tulpen,  சுவி,ஏராளன் எல்லாம் விமர்சனம் இங்கே எழுதியிருப்பதை பார்த்துவிட்டு தான் படத்தை பார்த்து முடித்தேன் 😂

9 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

அவர்களுக்கென தனித்துவமான/சுயபுத்தி இல்லாதவர்களாக இந்த படத்தில் காட்டப்படுகிறார்கள்..

தனித்துவமாக பிள்ளைகள் இல்லாமல் தங்களுடன்  தயவில்  பிள்ளைகள் இருப்பதை பெருமையாக 🤦‍♂️நினைக்கும் பலர் இருக்கிறார்கள் தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

இக் குறும்படம் சற்று அதிகமாக மிகைப்படுத்தி சமூகத்திற்கு செய்தி  சொல்லுவதாக எனக்கு படுகிறது. மகன்மாரை அப்பாவிகள் போலவும் மருமகள்களை வில்லிகள், மோசமானவர்கள்  போலவும் காட்டியுள்ளது தமிழ் சீரியல் நாடகங்களின் வகைக்கு இட்டு செல்கிறது. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. காலங்காலமான தமிழ்ப்பட பாணி. 

என்னுடைய பார்வையில்... 
மகன்மாரை , பெண்டாட்டி தாசர்களாக காட்டியுள்ளார்கள். 

சிறிய மகன்.... டாக்டராக  இருந்தும்,
தாயின்  "ஆஸ்மா" பிரச்சினைக்கு ஒரு தீர்வு சொல்லாமல்,
மனிசியையும்,   நாய் குட்டியையும்  தடவிக் கொண்டு இருக்கிறான்.

மூத்தவனோ... தகப்பனின், ஓய்வூதிய கடிதத்தில்...  
ஒரு கையெழுத்து போட மனமில்லாமல்,
கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டு...
சோறு எப்ப வரும் என்று... பார்த்துக் கொண்டு இருக்கிறான். 

அவர்களை படிப்பித்து, ஆளாக்க... அந்த வயோதியப் பெற்றோர்,
தம் இளவயதில்... எத்தனை சிரமப் பட்டிருப்பார்கள் என்பதனை,
அந்தப் பிள்ளைகள்... ஒரு கணமும் யோசிக்காமல், இருக்கிறார்கள்.

இவங்களை, பெத்த நேரம்... தாய், தகப்பன்... இரண்டு நாய், வாங்கி வளர்த்திருக்கலாம். 🐕 🦮 :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

இவங்களை, பெத்த நேரம்... தாய், தகப்பன்... இரண்டு நாய், வாங்கி வளர்த்திருக்கலாம். 🐕 🦮 :grin:

அதில் ஒரு மகன் சமையல் பானையை திறந்து சோறு கறி இருக்கிறதா என்று பார்ப்பார் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, tulpen said:

இக் குறும்படம் சற்று அதிகமாக மிகைப்படுத்தி சமூகத்திற்கு செய்தி  சொல்லுவதாக எனக்கு படுகிறது. மகன்மாரை அப்பாவிகள் போலவும் மருமகள்களை வில்லிகள், மோசமானவர்கள்  போலவும் காட்டியுள்ளது தமிழ் சீரியல் நாடகங்களின் வகைக்கு இட்டு செல்கிறது. யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டது. காலங்காலமான தமிழ்ப்பட பாணி. 

நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்கிறேன்.. அதிகபடியாகத்தான் உள்ளது. இதைவிட வெளிக்கொணரவேண்டிய விடயங்கள் உள்ளது

உதாரணமாக:- 

- பெற்றோரை பிரித்து, தந்தை ஒரு பிள்ளையிடமும் தாய் இன்னொரு பிள்ளையிடமும் இருப்பது.. அவர்கள் அப்படி இருப்பது அவரவருடைய தனிப்பட்ட விடயமாக இருந்தாலும், வயோதிபகாலத்தில் அவர்களை பிரித்து வைப்பது, சரியென தெரியவில்லை.

- பெற்றோரில் ஒருவருக்கு இயலவில்லை என்றவுடன், அவரை முதியோர் இல்லத்திலும், மற்றவரை வீட்டிலும் வைத்திருப்பது மட்டுமல்ல, முதியோர் இல்லத்தில் இருப்பவரை பார்க்க அவருடைய துணை ஒவ்வொரு நாளும் அலைவது

- பெற்றோருக்கான விருப்பங்களை மறுப்பது

- பெற்றோர்களை, மற்றவர்கள் முன் மரியாதை குறைவாக அல்லது மனம் நோகும்படி கதைத்து அவமானப்படுத்துவது.. 

இப்படி பல.. 

ஆனாலும், நீங்கள் கூறுவதும் சரியே துல்பன் அண்ணா!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.