Jump to content

இலங்கை கடலில் இறக்கப்படும் கைவிடப்பட்ட பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் மாசு ஏற்படுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக
19 ஜூன் 2021, 07:05 GMT
கடலில் விடப்படும் பேருந்து

மீன் உற்பத்தியை பெருக்கும் நோக்கில் கைவிடப்பட்ட பேருந்துகளை இலங்கை மீன் வளத்துறையினர் இலங்கை கடற்பரப்பில் இறக்கி வருகின்றனர். இலங்கை மீன் வளத்துறையின் இச்செயலால் இந்திய கடற்பரப்பு மாசுபடுவதுடன், மறைமுகமாக இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கடலுக்குள் செல்லும் பேருந்து

இலங்கையில் கடல் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் பயன்பாட்டில் இல்லாத கைவிடப்பட்ட பேருந்துகளை கடலில் இறக்கும் திட்டம் கடந்த ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்பு கடற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இருந்து 5 நாட்டிக்கல் தூரத்தில் கச்சத்தீவு முதல் நெடுந்தீவு வரையிலான கடலில் பேருந்து கூடுகள் இலங்கை கடற்படையின் உதவியுடன் போடப்பட்டு வருகிறது.

இதற்காக இலங்கை கொழும்புவில் இருந்து மீன் வளத்துறை உயர் அதிகாரிகள் அடங்கிய குழு மற்றும் யாழ்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் யாழ்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கை போக்குவரத்து துறையால் கைவிடப்பட்ட 40 பேருந்துகளை கப்பலில் ஏற்றி கொண்டு இந்திய இலங்கை இடையே உள்ள சர்வதேச கடல் எல்லை வரை செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு நான்கு பேருந்துகளை மட்டும்மே கடலில் இறக்க முடியும் என்பதால் பத்து நாட்களில் இந்த 40 பேருந்துகளையும் கடலில் இறக்க திட்டமிட்டு கடந்த 12ந்தேதி முதல் இலங்கை கடல் பகுதியான நெடுந்தீவு, நயினா தீவு, கச்சத்தீவு பகுதிகளில் இலங்கை கடற்படையின் பாதுகாப்புடன் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தீவுகள் அனைத்தும் இலங்கை கடற்பரப்பிற்குள் இருந்தாலும் இந்திய கடல் எல்லைக்கு அருகாமையில் உள்ளது.

இவ்வாறு பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடலில் இறக்கி விடுவதன் மூலம் மீன் இனங்களின் இனப்பெருக்கத்திற்கு ஏதுவான சூழல் உருவாகி, வடக்கு கடலில் கடலுணவு வளம் அதிகரிக்கும் என இலங்கை மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.

கடலில் விடப்படும் பேருந்து

ரயில் பெட்டிகளை கடலில் இறக்க திட்டம்

இந்த திட்டம் குறித்து இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடல் வாழ் உயிரினங்களின் உற்பத்தியை அதிகரிக்க அமெரிக்கா, ஜப்பான், கனடா, இந்தியா உட்பட பல நாடுகளில் செயற்கை பவளப்பாறைகள் கடலில் போடப்படுகின்றன.

அந்த வகையில் தான் இலங்கை மீன்பிடி அமைச்சகம் சார்பில் இலங்கை கடற்பரப்பிற்குள் இவ்வாறு பேருந்துகளை இறக்கி வைத்து அதனை செயற்கை பவளப்பாறைகளாக மாற்றி வருகிறோம். இது தவறான செயல் ஒன்றும் இல்லை.

இலங்கையை பொறுத்தவரை இது புதிய முறையும் அல்ல, காரணம் மன்னார் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் அவர்களுடைய பழைய பஸ், கார், டிராக்டர் போன்றவற்றை கடலில் போட்டு அதன் மூலம் கடல் வாழ் உயிரினங்களின் எண்ணக்கையை உயர்த்தி மீன்பிடி தொழில் செய்து நல்ல வருமானம் ஈட்டி வருகின்றனர்.

இந்த திட்டம் இலங்கை அரசின் முழு அனுமதியுடன் நடைபெற்று வருகிறது. முன்னதாக திரிகோணமலையில் இலங்கை அரசு போக்குவரத்துக் கழகத்தால் கைவிடப்பட்ட பேருந்துகள் கடலில் இறக்கப்பட்டுள்ளன.

கடலில் விடப்படும் பேருந்து

அதுமட்டுமில்லாமல் இலங்கை அமைச்சரவை கூட்டத்தில் இலங்கையில் கைவிடப்பட்ட ரயில்களை கொடுங்கள் நாங்கள் அதனை கடலில் இறக்கி பவளப்பாறைகளாக மாற்றுகிறோம் என கேட்டுள்ளேன். அதற்கு அமைச்சரவையில் நல்ல பதில் கிடைத்துள்ளது எனவே விரைவில் அதற்கான அனுமதியும் இலங்கை ரயில்வே துறையில் இருந்து வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்" என்று கூறுகிறார் டக்ளஸ் தேவானந்தா.

இந்திய மீனவர்களுக்கும் பலன் உண்டு

இலங்கை கடற்பரப்பில் போடப்படும் இந்த கைவிடப்பட்ட பேருந்துகள் கடல் நீரோட்டத்தின் காரணமாக இந்திய கடற்பரப்பிற்குள் வந்தால் இந்திய கடற்பரபபு மாசுபடும் என இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த டக்ளஸ் தேவானந்தா, இந்த திட்டத்ததால் கடல் வளம் அழிய சாத்தியம் இல்லை. காரணம் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கான்கிரீட் தூண்கள் அமைத்து நடுக்கடலில் செயற்கை பவளப்பாறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கடலில் இறக்கும் இந்த பழைய பேருந்துகள் கடல் சீற்றம் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக இந்திய எல்லைக்குள் போகாமல் இருக்க பேருந்தின் நான்கு புறமும் கான்கிரீட் போட்டு உறுதியாக கடலில் நிறுத்தப்பட்டு வருகின்றன. இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மட்டும்மே செய்து வருகிறது.

இலங்கை மீன் வளத்துறையால் கடலில் போடப்படும் இந்த பேருந்துகள் செயற்கை பவளப்பாறையாக மாறி அதன் மூலம் கிடைக்கும் மீன்கள் நிச்சயம் இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய கடற்பரப்பிற்குள் செல்லும் என்பதால் இந்திய மீனவர்களுக்கும் நல்ல பயன் கிடைக்கும்.

இந்த திட்டத்தால் இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழில் நிச்சயம் பாதிக்கப்படாது. இலங்கை கடற்பரப்பில் உருவாகும் மீன்களுக்கு இந்திய கடல் இலங்கை கடல் என பிரித்து பார்க்க தெரியாது எனவே மீன்கள் இந்திய கடலுக்குள் செல்ல அதிக வாய்ப்புண்டு.

தமிழ்நாட்டுக் கடற்பரப்பில் உள்ள வளங்களை தமிழ்நாடு மீனவர்கள் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறை மற்றும் அதிக குதிரை திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தி மீன்பிடித்து அழித்துள்ளனர்.

இந்திய கடற்பரப்பில் மீன் பிடிக்கும் தமிழ்நாடு மீனவர்களுக்கு எது தங்களது எல்லை என்பது நிச்சயம் தெரியும். அதன் அடிப்படையில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்தால் நிச்சயம் இலங்கை இந்திய மீனவர்கள் இடையே பிரச்சனை இல்லாமல் மீன் பிடிக்க முடியும் என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

இரு நாட்டு மீனவர்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு

தொடர்ந்து பேசிய இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "இந்திய பிரதமர் நரேந்திர மோதி அழைப்பை ஏற்று கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் டெல்லி சென்றிருந்தோம்.

அப்போது இந்திய இலங்கை மீனவர்கள் பிரச்சினை நீண்ட ஆண்டு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கோடு இந்திய மீன் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு மீன்வளத்துறை, தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம், இலங்கை மீன்வளத்துறை, இலங்கை கடல்வள ஆராய்ச்சி நிலையம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் போன்றவற்றில் உள்ள வல்லுனர்களை கொண்டு இலங்கை கடல் வளத்தை எப்படி பாதுகாப்பது, கடல் வளங்களை எப்படி ஊக்கப்படுத்தலாம் என்பது குறித்து அறிக்கையாக தயார் செய்து நான் இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரிடம் கொடுத்திருந்தேன்.

இந்திய அரசு இது ஒரு அற்புதமான திட்டம் என்றும் இது குறித்து கலந்து ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அறிக்கை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்க முடியவில்லை" என்கிறார் டக்ளஸ் தேவானந்தா.

பேருந்துகளை கடலில் இறக்குவதற்கு இலங்கை மீனவர்கள் ஆதரவு

கடலில் விடப்படும் பேருந்து

இத்திட்டம் குறித்து யாழ்பாணம் மீனவ சங்க தலைவர் அன்னராசா பிபிசி தமிழிடம் பேசுகையில், இலங்கை அரசாங்கமும் மீன் வளத்துறை அமைச்சரும் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன் வளத்தையும் அதிகரிக்கும் நோக்கோடு பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தி, நீண்டகால முயற்சியாக இலங்கை வடக்கு மீனவ அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று தற்போது யாழ்ப்பாண மாவட்டம் காங்கேசன்துறை மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பு பகுதியில் பேருந்துகளை இறக்கி வருகின்றனர்.

இலங்கை கடல் எல்லைக்குள், இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் எங்களுடைய கடல் வளத்தைப் பாதுகாத்து மீன் வளத்தை அதிகரிக்கும் நோக்கோடு பேருந்துகள் கடலுக்குள் போடப்பட்டு வருகின்றன.

இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையை யாழ்பாணம் மாவட்ட மீனவ சமூதாயமும், மீனவ சங்கங்களும் வரவேற்றுள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மீனவர்கள் சிலர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்திய கடற்பரப்பில் இது போன்ற பழைய இரும்புகள் கடலுக்குள் போடப்பட்டு செயற்கை பவளப்பாறைகள் ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை அறியாதவர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின் இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து பவளப்பாறைகளையும், கடல் வளங்களையும் அழித்து வருவதாக குற்றம்சாட்டுகிறார் யாழ்பாணம் மீனவர் சங்க தலைவர் அன்னராசா.

இந்திய மீனவர்களுக்கு கண்டனம்

தொடர்ந்து பேசிய அன்னராசா, "இலங்கை வடக்கு மாகாண மீனவர்களின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசு இலங்கை கடலில் தொடர்ந்து பேருந்துகளை போடுவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். இதுபோன்று நெடுந்தீவு, கச்சத்தீவு, அனலைதீவு, எழுவைதீவு, கடற்பரப்பிலும் பேருந்துகள் போடப்படுவதை நாங்கள் வரவேற்கிறோம்.

கடல்

தமிழ்நாட்டில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருவதாக செய்தி வாயிலாக அறிந்தோம். இவ்வாறான செயல்பாடுகளை இந்திய மீனவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லையேல் அதற்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட மீனவர்கள் போராடும் சூழல் உருவாகும்" என்கிறார் யாழ்ப்பாணம் மீனவ சங்க தலைவர் அன்னராசா

மீனவர்களுக்கு நன்மையை விட தீமையே அதிகம்

பேருந்துகள் கடலில் போடப்படுவதால் நாளடைவில் எவ்வாறான பிரச்சனைகள் வரக்கூடும் என இலங்கையை சேர்ந்த ஓய்வு பெற்ற கடல் சார் பேராசிரியர் சூசை ஆனந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கைவிடப்பட்ட பேருந்துகளை கடலில் இறக்குவதால் உள்ளுர் மீனவர்களின் படுப்பு வலை தொழில் முழுமையாக பாதிக்கப்படுவதுடன் இயற்கை சீற்றம் ஏற்படும் காலத்தில் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் மீன்பிடி படகுகள் கவிழ்ந்தால் படகில் உள்ள மீனவர்கள் உயிரிழக்க நேரிடும்.

கைவிடப்பட்ட பேருந்து கூடுகள் எடை குறைந்தவை என்பதால் கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப இடத்திற்கு இடம் நகரும். இதனால் மீனவர்களுக்கு ஏற்படும் நன்மையை விட தீமையே அதிகம்.

மேலும், பேருந்து கூடுகள் இறக்கும் இடத்திற்கு அருகில் நண்டுவலை, சுறாவலை, திருக்கை வலை, கும்ளாவலை, போன்றவற்றை பயன்படுத்த முடியாது. இதனால் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும். அதேநேரம் இலங்கையில் இறுதி கட்ட போரின் போது மன்னாரில் சாகரவர்த்தனா கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பகுதியில் மீன் உற்பத்தி நன்றாக உள்ளது என்கிறார் சூசை ஆனந்தன்.

மீன் பிடி தொழில் அழியும் அபாயம்

இது குறித்து ராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர் ஜேசுராஜா பிபிசி தமிழிடம் பேசுகையில், ராமேஸ்வரம், மண்டபம், புதுக்கோட்டை, நாகப்பட்டிணம், காரைக்கால் பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் போது மீனவர்கள் விரிக்கும் வலைகள் காற்றின வேகம் காரணமாக கச்சத்தீவு வரை செல்லக்கூடும் அவ்வாறு செல்லும் மீன் பிடி வலைகள் இந்த பேருந்துகளில் சிக்கி கிழிந்து மீனவர்கள் வலைகளை இழக்கும் சூழ்நிலை ஏற்படும்.

இதனால் படகு ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்படும். இந்த நிலை நீடித்தால் இந்திய மீனவர்கள் தங்கள் பாரம்பரிய இடத்தில் மீன் பிடிக்க முடியாமல் மீன்பிடி தொழிலை கைவிட்டு விட்டு மாற்று தொழில் தேடி அண்டை மாவட்டங்களுக்கு செல்ல நேரிடும். இதனால் காலப்போக்கில் மீன் பிடி அழியும் சூழல் ஏற்படும்.

எனவே இலங்கை மீன் வளத்துறை இந்திய மீனவர்களின் மீன் பிடி தொழிலை அழிக்கும் நோக்கில் ரகசியமாக திட்டமிட்டு இலங்கை கடற்படையின் உதவியுடன் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்திய அரசு மீன் உற்பத்தியை அதிகரிக்க கான்கிரீட்டால் ஆன செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கி கடலில் போட்டு வருகிறது. அதே போல் இலங்கை அரசும் கைவிடப்பட்ட பேருந்துகளை பழைய இரும்பு விலைக்கு விற்று அதில் வரும் பணத்தில் செயற்கை பவளப்பாறைகள் அமைத்து கடல்வாழ் உயிரினங்களின் எண்ணிக்கையை உயர்த்தலாம்.

இலங்கை அரசு அதை செய்யாமல் உலக நாடுகளில் எங்கும் செய்யாத ஒரு செயலை செய்து வருகிறது. தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைகாலம் முடிவடைந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லும் நிலையில் இலங்கை அரசு திட்டமிட்டே இந்திய மீனவர்களின் மீன்பிடி தொழிலை அழிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறது என்கிறார் ஜேசுராஜா.

கடலில் போடும் பேருந்தால் கடல் மாசுபடாது

இலங்கை கடற்பரப்பில் போடப்படும் பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் உள்ள மீன் வளங்கள் பாதிக்கப்படும் என இந்திய மீனவர்களின் குற்றச்சாட்டு குறித்து மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ஒருவரிடம் கேட்ட போது, ஆரம்ப காலங்களில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க நான்கு சக்கர வாகனங்களின் டயர்கள் கடலில் போடப்பட்டு வந்தது. காலப்போக்கில் டயர்களில் உள்ள ரப்பர்களால் கடல் மாசுபடும் என ஆய்வுகளில் தெரிய வந்ததையடுத்து கடலில் போடப்பட்ட டயர்கள் திருப்பி எடுக்கப்பட்டன.

பல நாடுகளில் கடலில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க கைவிடப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். அது நல்ல பலனை அளித்து வருகிறது. கடலில் பல ஆண்டுகள் இரும்பு வாகனங்கள் இருப்பதால் அந்தப்பகுதிகளில் கடல் வாழ் உயிரின பெருக்கம் அதிகரித்துள்ளது.

கைவிடப்பட்ட பேருந்துகளை கடலில் போடும் போது பேருந்துகளின் மேற்பரப்பில் பாசி பிடித்து நுண்ணுயிர்கள் வளர தொடங்கி அது ஒரு நல்ல செயற்கை பவளப்பாறையாக மாறும். பேருந்தின் மேற்பரப்பில் பாசிகள் வளர்வதால் துருப்பிடித்து கடல் மாசுபட வாய்பில்லை.

அதே போல் நாளடைவில் பேருந்துகள் கடல் நீரோட்டம் காரணமாக உடைந்து வேறு இடத்திற்கு சென்றாலும் அந்த பாகம் நிச்சயம் மற்றொரு செயற்கை பவளப்பாறையாக மாறும். எனவே கடல் மாசுபடாது என்கிறார் அந்த பெயர் வெளியிட விரும்பாத இந்திய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானி.

இலங்கை கடலில் இறக்கப்படும் கைவிடப்பட்ட பேருந்துகளால் இந்திய கடற்பரப்பில் மாசு ஏற்படுமா? - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.