Jump to content

விசா இல்லாத இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பிரான்ஸ் தமிழ் முதலாளிகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விசா இல்லாத இளைஞர்களின் உழைப்பை உறிஞ்சி குடிக்கும் பிரான்ஸ் தமிழ் முதலாளிகள்!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் பிரான்ஸ் போன்றநாடுகளில் விசா இல்லாதவர்கள் எங்கு வேலை செய்கிறார்கள், எப்படியெல்லாம் கஷ்டபடுகிறார்கள் என்பது எம்மவர் அனைவருமே அறிந்த ரகசியம்தான்.

தாம் கசக்கி பிழியபடுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும், ஆனால் வந்த கடனை அடைச்சு கையில் கொஞ்ச காசுடனாவது நாட்டுக்கு திரும்பிபோகாவிட்டால்  இதைவிட கஷ்டபடவேண்டும் என்பது அதைவிட நன்கு தெரியும்.

விதி என்று தெரியும் வேறு வழியின்றி வலி தாங்குகிறார்கள்.

வீடியோ வெளியிட்டவர் என்னமோ பெரிய அநீதிக்கு எதிராக போரிடுகிறவன் போன்ற போர்வையில்  தனது யூடியூப் பொழைப்புக்காக விசா இன்றி ஒழிந்திருப்பவர்கள் எங்கிருக்கிறார்கள் எங்கெல்லாம் வேலை பார்க்கிறார்கள் என்பதை குடிவரவு அதிகாரிகளுக்கு காட்டி கொடுக்கிறாரா?

துன்பத்திலிருப்பவர்களின் வியர்வையில் லாபம் பார்க்கும் முதலாளிகள் பொறுக்கிதனமானவர்களென்றால்,நாதியின்றி மறைந்திருப்பவர்களின் மறைவிடங்களை அரசுக்கு  போட்டு கொடுப்பவர்களும் பொறுக்கிதனமானவர்கள்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, valavan said:

வீடியோ வெளியிட்டவர் என்னமோ பெரிய அநீதிக்கு எதிராக போரிடுகிறவன் போன்ற போர்வையில்  தனது யூடியூப் பொழைப்புக்காக விசா இன்றி ஒழிந்திருப்பவர்கள் எங்கிருக்கிறார்கள் எங்கெல்லாம் வேலை பார்க்கிறார்கள் என்பதை குடிவரவு அதிகாரிகளுக்கு காட்டி கொடுக்கிறாரா?

அந்த வீடியோவை பார்க்கும்போது அவர் தன்னை காட்டிக்கொள்ளாமல் சடையும்போதே எழுந்த கேள்வி .

அங்கு ஒவ்வொருமுறை வரும்போதும் கேட்க்கும்  கேள்வி  அநேக தமிழர்கள் பாரிஸ் புறநகர் பகுதியில் இருக்கினம். ஏன் பாரிஸ் நகரத்தை அண்டிய லாச்சப்பலில்   யூதர்களின் கட்டிடங்களுக்கு அதிகூடிய வாடகையை கொடுத்து  முதலாளி என்று யூத  அடிமையாக யூதனுக்கு உழைத்து கொடுக்கும் வர்க்கமாக நாம் இருக்கிறேம் பாரிஸ் புறநகர் பகுதியில் தமிழர்களுக்கு என்று மலிவான வாடகை உள்ள பகுதிகள் எவ்வளவோ உள்ளன அங்கு ஒரு கடைதொகுதியை உருவாக்கலாமே @விசுகு அண்ணா போன்றவர்கள் விளங்கப்டுத்தினால்  நல்லது . 

தமிழ் முதலாளி என்கினம் அங்குள்ள கோபால் அன்கோ  கடை உண்மையான முதலாளி ஒரு யூதன் அவனுக்கும் தமிழுக்கும் சம்பந்தமே கிடையாது இந்த விபரங்கள் இந்த விபரண ஒளி படமாக்கியாக்கியவருக்கு தெரியுமா தெரியாதா ? இன்னும் மூன்றெழுத்து கடைகளின் பினாமி யூதன் என்கிறார்கள் .

இந்த விடயத்தில் லண்டன் காரர் அசகாய சூரர் சிற்றிக்குள் ஒரு தமிழ்க்கடை பார்க்க முடியாது .

இப்போது இருக்கும் அநேக கடைகள் `அவர்களின் சொந்த கடைகள் ஆகி விட்டன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பெருமாள் said:

அந்த வீடியோவை பார்க்கும்போது அவர் தன்னை காட்டிக்கொள்ளாமல் சடையும்போதே எழுந்த கேள்வி .

அங்கு ஒவ்வொருமுறை வரும்போதும் கேட்க்கும்  கேள்வி  அநேக தமிழர்கள் பாரிஸ் புறநகர் பகுதியில் இருக்கினம். ஏன் பாரிஸ் நகரத்தை அண்டிய லாச்சப்பலில்   யூதர்களின் கட்டிடங்களுக்கு அதிகூடிய வாடகையை கொடுத்து  முதலாளி என்று யூத  அடிமையாக யூதனுக்கு உழைத்து கொடுக்கும் வர்க்கமாக நாம் இருக்கிறேம் பாரிஸ் புறநகர் பகுதியில் தமிழர்களுக்கு என்று மலிவான வாடகை உள்ள பகுதிகள் எவ்வளவோ உள்ளன அங்கு ஒரு கடைதொகுதியை உருவாக்கலாமே @விசுகு அண்ணா போன்றவர்கள் விளங்கப்டுத்தினால்  நல்லது . 

தமிழ் முதலாளி என்கினம் அங்குள்ள கோபால் அன்கோ  கடை உண்மையான முதலாளி ஒரு யூதன் அவனுக்கும் தமிழுக்கும் சம்பந்தமே கிடையாது இந்த விபரங்கள் இந்த விபரண ஒளி படமாக்கியாக்கியவருக்கு தெரியுமா தெரியாதா ? இன்னும் மூன்றெழுத்து கடைகளின் பினாமி யூதன் என்கிறார்கள் .

இந்த விடயத்தில் லண்டன் காரர் அசகாய சூரர் சிற்றிக்குள் ஒரு தமிழ்க்கடை பார்க்க முடியாது .

இப்போது இருக்கும் அநேக கடைகள் `அவர்களின் சொந்த கடைகள் ஆகி விட்டன .

லா சப்பலில் எனக்கு தெரிய ஒரு கடை தான் யூதர்கள் நடாத்துவது. கட்டிடங்கள் அவர்களுக்கு சொந்தமாக இருக்கலாம். ஆனால் அநேகமான கடைகள்  தமிழர்களால் வாங்கப்பட்டு விட்டன.( கோபால் அன்ட் கோ எனது ஊரவனின் கடை. அந்த கடை அவருக்கு சொந்தமானது) 

வீடியோவை முழுமையாக பார்த்தேன்.

உண்மை இல்லாமல் இல்லை

ஆனால் இரு பகுதிக்கும் தேவைகள் இருக்கிறது. எனவே அவர்களுக்கு இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கும். நாம் இடையில் புகுந்து குளப்பினால் இரு பகுதியும் வையும். 

அதை விட முதலாளிகளுக்கு நம்பிக்கையான ஆள் தேவை. எனவே அடாத்தாக நடாத்த மாட்டார்கள். அதேநேரம் இவர் போனால் இன்னொருவர் அவரது குடும்பத்தில் இருந்தே அந்த வேலைக்கு வர தயாராக இருப்பார்கள் என்பது தொழிலாளிக்கும் தெரியும்.

(இந்த கொரோனா காலப் பகுதியில் தன்னிடம் வேலை செய்த விசா இல்லாதவர்களுக்கு சம்பளத்துடன் சாப்பாடும் கொண்டு போய் கொடுத்த முதலாளிகளும் இருக்கிறார்கள்)

என்னை பொறுத்தவரை இந்த வீடியோ தாயகத்தை தான் சென்றடையணும். புலம் பெயர் தேசம் என்ன என்பது புரியணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா, அடிச்சு விடக்கூடாது.

லண்டனிலும் இது இருந்தது, இருக்குது. கராஜில் போர்கோட் சுத்தம் செய்வது, கார் வாஷ், டாய்லெட் சுத்தம் செய்வது, மொப்பர் அடிப்பது என்பது தான் தொடக்கம்.

முதலில், ஊர், பழக்க வழக்கங்களை விட்டு, இங்கேயுள்ள அடிப்படை பழக்க வழக்கங்களுக்கு, நாமும் பேச்சு வாங்கித்தான் வர வேண்டும்.

சனியனே, தங்கியூ சொல்லித் தொலை என்று திட்டுவார் நண்பர். வந்தோன்ன ஹலோ சொல்லு எண்டுவார் முதலாளி.

இரண்டாம் தரம் பிழை விட்டால், நண்பர் / முதலாளி வாயில் தூசணம் வரும். அதெலாம் பார்த்தால், வராமல், ஊரிலேயே இருந்திருக்கலாமே.

பெனிபிட்டில் இருப்பவர்களுக்கு, கையில காசு ஒரு வரப்பிரசாதம்.  இங்கே முதலாளி £5,000 தண்டம் ரிஸ்க் எடுத்து தான் வேலையே கொடுக்கிறார்.

லண்டனில் ஒரு வீட்டின் கராஜில் ஒரு குடும்பம் வாழ்கிறது. இலவசமாக கொடுத்துள்ளார் உரிமையாளர். அவர்கள் செய்வது, ஒரு சிக்கின் கடைக்கு போய், கடை முதலாளி கொடுக்கும் சிக்கின் வீடு கொண்டு வந்து, உரிச்சு, கிளீன் பண்ணி, மசாலா போட்டு கொண்டு போய் கொடுப்பது.

இது, சட்டம் ஒன்றுமே செய்ய இயலாத ஒழுங்கு ஒன்று (arrangement). அதாவது வேலை இல்லை. கொன்ராட்க்ட் எடுத்து செய்யினம். பணம் குறைவாகினும், இதுவாவது கிடைக்கிறதே என்கிறார் வீட்டுக்காரர். இரவு, கடைப்பக்கம் போனால், மிஞ்சின உணவுடன், வேலைக்கான காசும் கிடைக்கும். 

இது sky டிவியில் வந்தது.

ஆகவே, லா சப்பலில் நடப்பது, பரஸ்பர உதவி. யாருமே 14 மணி நேரம் கட்டாயம் வேலை செய்யவேண்டும் என்று சொல்ல முடியாது. காரணம் அடிமை சட்டம் உள்ளே போட்டு விடும். வேலை செய்பவருக்கு, பணம் தேவை. நீண்ட நேரம் வேலை செய்கிறார்.

நான், வந்த புதிதில், 57 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்து இருக்கிறேன். அடுத்த நாள் வர வரவேண்டியவர், சுகவீனமுற, அடுத்தவர், சோதனை. இந்தியா போயிருந்த சீக்கிய முதலாளியை கை விட முடியாது என்பதால், வேலை செய்தேன். (இரவு நித்திரை அடிக்கலாம் தானே). மகிழ்ந்து போன முதலாளி, கூடுதலாக பணம் தந்தார்.

அதுக்காக, முதலாளி, 57 ,மணிநேர வேலை செய்ய சொன்னார் என்று சொல்ல முடியுமா என்ன? 

இவ்வாறு பலர் இருக்கிறார்கள். இவர் இப்போது கேமராவை தூக்கிக் கொண்டு உழைப்பது போல, அவர்களுக்கு வசதி இல்லை. அவ்வளவுதான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.