Jump to content

புலிகளின் உள்நாட்டு உற்பத்தி சேணேவிகள்(Artillery) மற்றும் உந்துகணைகள் - ஆவணம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


எல்லா(Hello)…

வணக்கம் தோழர்களே...

இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உருவாக்கப்பட்டு சமர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான உந்துகணைகள் மற்றும் சேணேவிகள் பற்றியே.

முதலில் சேணேவி(Artillery) பற்றி பார்ப்போம். இவர்கள், சேணேவிகளில் நெடுந்தூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகள்(Howitzer) முதல் குறுந்தூர வீச்சுக் கொண்ட கணையெக்கிகள்(Mortar) வரை விளைவித்திருந்தனர்(produce). இவற்றிற்கான எறிகணைகளையும்(Shell) அவர்களாகவே மானுறுத்தியிருந்தனர்(Manufacture) என்பது குறிப்பிடத்தக்கது.

 


  • செம்மைப்படுத்தப்பட்ட சேணேவி (improvised artillery)

1) இது 106 மி.மீ பின்னுதைப்பற்ற சுடுகலனின் குழலைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.. இதன் காவுவண்டியானது புலிகளால் இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும்.

main-qimg-ce868a581883467fc60f95526bfdaa0f.png

 


  • உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட சேணேவி ( Indigenously produced Artillery)

கீழ்கண்ட சேணேவிகள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பது பற்றி எனக்குத் தெரியாது! தயவுகூர்ந்து இது பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்..

1. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலும். மேலும் இதற்கு காவுவண்டி பொருத்தப்பட்டுள்ளது.

main-qimg-c312103dc0f51b09ea3ba0cdcf01260f.png

கழுத்துப்பகுதி:

main-qimg-451c812aa4d4e3326fcf5ebab609d651.png

சக்கரத்துடன் கூடிய அடிப்பகுதி:

இந்த அடிப்பகுதி ஆனது புலிகளின் உந்துகணை ஏவுபலைகையின் அடிப்பகுதியினை ஒத்தது ஆகும். இதன் அடிப்பகுதியில் உள்ள அந்த இரு தண்டுகளையும் விரித்து ஒடுக்கலாம்.

main-qimg-2fba74cea05dd2dbd6554ab545b2cec2.png

நுனிக்குழாய்:

main-qimg-792f02f67ad82fc1ad9a46e425da9915.png

2)இதே போன்று மற்றொன்று பின்னால் தெரிகிறது பாருங்கள்.. அதுவும் இதே வகையைச் சேர்ந்ததே….

main-qimg-29d162387b2823d0fcefd14210cb3c34.png

3). இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-ce9fd0c947d438206849b5ced7aa864b.png

4) புலிகளிடம் இருந்த மற்றொரு வகையான உந்துகணை கணையெக்கி.. இது எதற்குப் பயன்பட்டது என்பது பற்றிய செய்திகள் ஏதும் எனக்குத் தெரியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-2fd57ba0f894e059b22247b1bc002b86.png

'3 படங்களை ஒருங்கிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்'

மேற்கண்ட படைக்கலத்தின் அடிப்பகுதி:

main-qimg-c249b5044844000827e47af77c55e7f7.png

→ மேலுள்ள அனைத்துப் படங்களும் திரைப்பிடிப்பே!

 


  • பாபா கணையெக்கி - Baba Mortar

இது 1980களின் பிற்பகுதியில் விளைவிக்கப்படட்டது ஆகும். இதை விளைவித்தவர் புலிகளின் அப்போதைய தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கப்டன் வாசு ஆவார்.

இதில் செம்மைப்படுத்தப்பட்ட 120 மிமீ எறிகணைகளானவை எறிகணைகளாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சுற்றுகளில் தார் இருந்ததால், அவை தரையில் மோதியபோது தீயினை ஏற்படுத்தின.

main-qimg-9c2b17929c94159ef06fd90946bb49b0.png

'பாபா கணையெக்கியினுள்(Mortar) எறிகணையினை போராளிகள் தாணிக்கின்றனர்(Load)'

main-qimg-1c7e6e47aecac9f78e8e9ec06bd692db.png

'அந்த கணையெக்கியின் முழுப் படம்'

→ மேலுள்ள அனைத்துப் படங்களும் திரைப்பிடிப்பே!

பாபா கணையெக்கியின் 120 மிமீ எறிகணைகள்.

main-qimg-b18db6bfe26b0b8f98a20f63c3bdce28.png

 

Baba Mortar shell.jpg

'எறிகணையினை ஏந்தியிருக்கும் புலிவீரன்'

 


  • பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி (Pasiilan 2000 Rocket Mortar)

புதுப்புனைந்தவர்: கேணல் ராயு / குயிலன் 

எண்ணிக்கை: 11 (ஆதாரம்

இது முற்றிலும் விடுதலைப் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இதைக் குத்துவதற்கென்றே புலிகளிடம் தனிப் பிரிவே இருந்தது. அதன் பெயர் 'பசீலன் மோட்டார் பிரிவு' என்பதாம். இதுதான் ஈழத்தமிழரின் முதலாவது சேணேவிப் பிரிவு(Artillery unit) ஆகும்.

இது புலிகளால் 80களில் பயன்படுத்தப்பட்ட பாபா கணையெக்கி எனப்படும் கணையெக்கியின்(mortar) கால்வழியே(successor) ஆகும்.. இதற்கான எறிகணையினைக் கூட புலிகள் உள்நாட்டில்தான் விளைவித்திருந்தனர். இந்த எறிகணையின் வெடிப்பொலியானது எதிரிகளை கொல்கிறதோ இல்லையோ அவர்களின் காதுகளை செவிடாக்கி செந்நீரை வரவழைக்கும் என்பதே முதன்மையான புலனம்.. இந்த பேரொலியைக் கேட்கும் பாதிபேர் அந்த இடத்திலே நெஞ்சிடி வந்து புத்தனின் பாதத்தைக் காணச் சென்றுவிடுவார்கள்.. அப்படி ஒரு பேரிடி கேட்கும், இது வீழ்ந்துவெடிக்கும் இடத்தில்! அது மட்டுமல்ல இதை ஏவுபவருக்கும் இதே சிக்கல் உண்டு, ஆனால் அது எதிரிக்கு ஏற்படுவதைவிட குறைவானதே!... பிற்காலங்களில் ஏவுபவருக்கான இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு விட்டது.

இது புலிகளின் உருமறைப்பு (camouflage) மற்றும் மறைக்கும் தாக்குதல்(conceal attacking) பாணிக்கு ஏற்ப தெறோச்சி(artillery) அல்லது பல்குழல் போன்றவற்றால் ஏற்படுத்தப்படும் நிலையான முகவாய் எரிப்புகளைப் (muzzle flares) போன்று இதன் எறிகணை வெளியிடுவதில்லை. ஆனால் தொடக்க காலங்களில் குத்தும்(fired) போது ஏற்படுத்தும் பேரொலியானது இதன் இருப்பிடத்தை காட்டிகொடுக்கும் வாய்ப்பிருந்து பின்னர் சரிசெய்யப்பட்டது. இது வெடிக்க வேண்டுமெனில் செங்குத்தாக அதன் நுனி தரையை நேராக மோதுவதாக வீழவேண்டும். இதனால் இதன் தொடக்க காலங்களில் செங்குத்தாக வீழாத எறிகணைகள் வெடிப்பதில்லை.. ஆனால் ஒருசில ஆண்டுகளில் இந்த சிக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சரிசெய்யப்பட்டது.

1) இதுதான் தமிழீழத்தின் முதலாவது பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி. இது பேரரையன் ராயு அவர்களின் மேற்பார்வையில் சோதிக்கப்பட்டது.

main-qimg-5c2b6583b9666daf54656c1c2ce4bbca.png

main-qimg-d2f4b484f28df89ed36fcac4e3c21ca9.png

main-qimg-3d0892f10937b531e86b2e6f1f3a3bef.png

'வானை நோக்கி சீறிச்செல்லும் முதலாவது எறிகணை'

2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. இந்நிழற்படமானது 90களில் எடுக்கப்பட்து ஆகும்

main-qimg-f55b91c50c35d60ea6a7c35a007b468e.jpg

'இரண்டு புலி வீரர்கள் மேசை போன்ற ஒன்றின் மீது ஏறி நிற்கின்றனர்.. கீழே ஒரு வீரன் பசீலனுக்கான எறிகணையினை சுமந்தபடி நிற்கின்றார்'

main-qimg-7bbab02c60314baf13c4ef39e03b759a.jpg

'பசீலனுக்கான எறிகணை தாணிக்கப்படுகிறது (loaded)'

3) இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது. மேலதிகமாக இருந்ததா என்று அறியமுடியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-36a7fe5a0658ea21685d19dc154c6ae3.png

'சில்லுக்கு அருகில் இருப்பதுதான் இதற்கான எறிகணை'

மேற்கண்டதின் பின்பகுதி:

main-qimg-772a824d557a7b393afdecb8bfc9c0cf.png

4) இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது.

1)இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-88b8939863a143042b222e605379553f.jpg

2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது.

main-qimg-afab12cbabc48886a674162f29315233.jpg

main-qimg-3f36427173c1520b7857b306185ce89f.png

main-qimg-83dc6f53f39f2db4d3ddc5d47c32cdc0.png

main-qimg-1477cf35b54961c96eb01cb51108fc97.png

'சிங்களத் தரைப்படை வீரன் பசீலன் 2000 கணையெக்கியில் உள்ள ஒரு சக்கரத்தினை தன் கையால் சுற்றுகிறார். இந்த சக்கரத்தினை சுற்றுவதால் இதன் குழல் தாழ்ந்துயரும்.'

main-qimg-450e78c75eece262134e7fdeeb313f5a.png

main-qimg-f7f2b9037bd4e2462701c1d8226867ed.png

 

5) பசீலன் 2000 உந்துகணையின் மற்றொரு விதம்.

இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. மேலும் இதன் சுடுகுழல் கட்டையாகவும் உள்ளது.

main-qimg-90cd0678b6afbda800794fdf577fcf52.png

main-qimg-8b1913e98d8b19ec2583a3d3e6a54576.png

மேற்கண்ட பசீலனுக்கான எறிகணைகள்:

main-qimg-d21e326b81424fd7fde27ebc71cb3c43.png

 

 

எறிகணை நீளம்: 5'

நெடுக்கம்(range): 15 - 25 km

வெடியுளை(war head): 65–70 kg

வெடியுளை வகை : TNT

main-qimg-93560d230c0525b4b8a1716217790198.jpg

'பசீலன் எறிகணையை தூக்கி நிறுத்தும் பசீலன் மோட்டார்(கணையெக்கி) பிரிவுப் போராளி '

 

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்: தெரியவில்லை

வெடியுளை: தெரியவில்லை

மேற்கண்ட எறிகணையை விட இது உயரம் குறைந்தது.

main-qimg-3e738dca40c112b3ffdce01c8886a864.png

 

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்: தெரியவில்லை

வெடியுளை: தெரியவில்லை

மேற்கண்டதை விடச் சிறியவை இவை:

main-qimg-311995a87e21daa5ac60e9d7f6f2c388.png

 

வகை 4 எறிகணை:-

main-qimg-02e674e55138b1006dc7701779c67b13.png

 

மாமா & வகை 4 எறிகணை:

main-qimg-c50af68bc8add1367af57200b6645e7b.jpg

main-qimg-d233be305e1b32f7e6abb89161282fe7.jpg

 

2) பசீலனுக்கான பிறிதொரு வகையைச் சேர்ந்த எறிகணை:

எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது.

நெடுக்கம்: தெரியவில்லை

வெடியுளை: தெரியவில்லை

main-qimg-8852879648a59c2c41e6831230ed6ac1.png

 


  • வான்குண்டு 

1) வான்குண்டு (Aerial Bomb)

நீளம்: 10'

நெடுக்கம்: தெரியவில்லை

வெடியுளை: 300 kg

வெடியுளை வகை : C4

இது ஒரு வகையான வான்குண்டு. இதுவும் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது தான். 

main-qimg-cc22686694057ab2ca39c45ecd30d018.png

'வகை -56 - 2 துமுக்கியுடன்(rifle) நிற்பவர்கள் சிங்கள இராணுவத்தினர்'

main-qimg-cc75b7af125a524e4fb0a63ba94277a7.jpg

எறிகணையின் கழுத்துப்பகுதி:

main-qimg-46bdab9aca0e50edadf93aac292d83fa.png

 

 


  • எறிகணை

1) ராகவன் 152மிமீ எறிகணை

இந்த 152 மிமீ எறிகணைகள் பல்வேறு நெடுக்கத்தில் இருந்தன.

Ragavan Shells.jpg

 

 


அடுத்து, உந்துகணைகள் பற்றிப் பார்போம். இவை புலிகளால் நான்காம் ஈழப்போரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவையெல்லாம் அவர்களின் உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டன ஆகும்.

  • உந்துகணைகள் மற்றும் அதற்குரிய செலுத்திகள் (Rockets & their respective launchers)

1) பண்டிதர் 1550(Pandithar 1550)

இதன் வெடியுளையில் மூன்று முனைகள் உண்டு.

  • புதுப்புனைந்தவர்: சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்)
  • 'பண்டிதர்' என்னும் பெயர்காரணம்: விடுதலைப் புலிகளின் உறுப்பினர் லெப்.கேணல் பண்டிதர் அவர்களின் நினைவாகச் சூட்டப்பெற்றது
  • பட்டப் பெயர்: சமாதானம்(Samaathaanam)
    • பெயர்க்காரணம்: அதன் ஒலி மற்றும் அது தரும் தாக்கம் ஆகிய இரண்டும் இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்குமளவு சக்தியானது என்றுதான் அப்படி அழைக்கப்பட்டது.
  • வெடியுளை: 214 kg
  • வெடியுளை வகை : C4
  • உந்துகணை நீளம்: 14'
  • நெடுக்கம்: 6 km
  • இருப்பில் இருந்த இழுவையுடன் கூடிய ஏவுபலகைகள் (launchpad with trailer): 15
  • நேரடி தாக்கம்: 50m சுற்றுவட்டத்தை அழிக்கும்

இந்த உந்துகணைகள் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதனை துக்கி தாணிப்பதற்கு(load) குறைந்தது இருவர் என்றாலும் வேண்டும்.. இந்த உந்துகணையை இயக்க சுமார் ஆறு பேர் தேவை. இதனை இயக்கும் இடத்தில் இயக்குபவர்கள் நிக்கமட்டார்கள், சுமார் 50 மீற்றர் துரத்தில் நின்றுதான் இயக்கவைப்பர்கள். இது இலக்கில் வீழ்ந்து வெடிக்கும் போது பாரிய ஒலி கேட்கும் ,அதன் துண்டுகள் கூட படையினரில் படத்தேவையில்லை இது வெடிக்கும் போது எழும் சத்தமே படையினரை கொன்றுவிடும் .

இந்த உந்துகணைகள் முதன் முதலில் முகமாலை முன்னரணில் உள்ள படையினர் மீதுதான் சோதித்துப் பார்க்கபட்டது . அதன் பின்னர் தான் இந்த உந்துகணையின் மானுறுத்தல்(manufacturing) அதிகரிக்கபட்டு மன்னார் ,வவுனியா, மணலாறு போன்ற களமுனைகளுக்கு அனுப்பிவைக்கபட்டது.

ஆனால் சமாதானம் பின்னர் பயன்படுத்தப்படவில்லை. அவற்றை காவிச்செல்வது, செயல்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு மேலதிக போராளிகள் தேவைப்பட்டதால் முகமாலை முன்னரங்கு பகுதி சண்டைகளோடு உள்ளூர் விளைவிப்புக்கள் நிறுத்தப்பட்டன.

main-qimg-adad10bf85738816a9b3c01af1e67352.png

'பின்பகுதி.. கீழிருந்து மேனோகிய பார்வை'

main-qimg-affb299bb5d9de2359c23c917dde9eda.png

'பக்கவாட்டுத் தோற்றம்.. உந்துகணை அதன் ஏவுபலகை மேல் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது'

main-qimg-f1d1c52ac1ed532083c4c71d2c7bb43c.png

'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை.. உந்துகணை அதன் ஏவுபலகை மேல் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது'

main-qimg-723a3ffcce5909bfaf2ff273e74720e0.png

'காவுவண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏவுபலகைகள்'

main-qimg-e8dcab6bdfc82b53570ae8edf64b546e.png

'காவுவண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏவுபலகைகள்'

main-qimg-891319f91ee6dcdde651270c9c5a7778.png

'முன்பக்கம்.. மூன்று முனைகளும் தெரிகிறது ஆனால் அதில் ஒரு முனை மட்டும் கழற்றப்பட்டுள்ளது'

main-qimg-123a462f67fc48474c181a1ff18878fe.png

'உந்துகணை நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.. பின்னிருந்து முன்னோக்கிய பார்வை(back to front view)'

வெடிக்கும் காட்சி:

main-qimg-0bfaa24f3a2c5615ed167198907effb3.png

 

2) சண்டியன் (Sandiyan)

சமாதனம் போன்று இது படையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது . ஆனால் படையினர் இதன் பெயரை சொல்லி அச்சப்படும் அளவிற்கு இதன் தாக்கம் இருந்தது. இந்த உந்துகணை முதன்முதலாக 2000 ஆண்டு 3ம் மாதமளவில் சாள்ஸ் அன்ரனி அவர்களால் முல்லை. சாலை தளத்தில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக உறுதிசெய்யப்பட்டது.

  • புதுப்புனைந்தவர்: சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்)

உந்துகணை நீளம்: 4'

நெடுக்கம்: <15 km

வெடியுளை: 65 kg

வெடியுளை வகை : C4

தாக்க சுற்றுவட்டம் : 800m

main-qimg-fc155a20f035259681edf0d2c8e5cb19.jpg

'சண்டியனை ஏவ ஆயத்தமாகும் புலிவீரன்'

main-qimg-65dd7a8161092806c3caa56980a54a2a.jpg

'சண்டியனை ஏவிவிட்டு ஏவுபலகையை நகர்த்துகின்றனர் புலிவீரர்கள்'

main-qimg-c270f3073401b0c202fbaec0a172039a.jpg

'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-96b523ab625f92fb27a29b3dd124a644.jpg

'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பின்னிருந்து முன்னோக்கிய பார்வை'

main-qimg-7b5479af05e76fa0048ff31154600d0b.jpg

'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பக்கவாட்டுத் தோற்றம்'

main-qimg-38cd289d74eac35944bc6dc09ae9148c.jpg

'முழுமையடையாத உந்துகணை ஏவுபலகையில் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது'

main-qimg-b060de16be8b9453993704384d65d87a.png

main-qimg-8907879d5612676456a6dc74ae0acc85.png

'சண்டியன் உந்துகணையின் அடிப்பகுதி. அடிப்பகுதியில் தெரியும் இந்த தந்திரிகை(wire) மூலம் தான் இது இயக்கப்படுகிறது (கொளுத்தப்படுகிறது)'

main-qimg-5db2fea3167a69312ff6a8432cc4d1a9.png

'

'இங்குதெரியும் மொத்த ஏவுபலகை கொண்ட காவுவண்டிகளின் எண்ணிக்கை = 8'

3) இந்திய அமைதிப்படை என்னும் பசுத்தோல் போர்த்திய ஓநாய்களிடம் புலிகளால் ஒப்படைக்கப்பட்ட ஆய்தங்களின் ஒரு தொகுதி.. இதில் நன்கு உத்துப்பாருங்கள், வெள்ளை நிற வெடியுளை(war head) கொண்ட இரண்டு உந்துகணைகள் தெரிகின்றன. ஆனால் அவற்றின் வகை என்னவென்று என்னால் அடையாளம் காண முடியவில்லை.

main-qimg-62268f3b08a725a57b32c57cd788a12d.jpg

4) சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 'சண்டியன் உந்துகணை'யின் இருபக்கமும் வேறுபாடான இரு உந்துகணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. அவை பற்றிய எந்தவொரு புலனமும் தெரியவில்லை.

main-qimg-e2512655130fa03ea7d8e4504d150e23.png

 

 


  • பல்குழல் உந்துகணை செலுத்திகள் (multi barrel rocket launchers)

கடைசியாக புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பல்குழல் உந்துகணை செலுத்திகள் பற்றியும் அவற்றில் எறிகணையாகப் பயன்படுத்தப்பட்ட உந்துகணைகள் பற்றியும் காண்போம்.

ஈழத்தீவிலே முதன்முதலில் பல்குழல் உந்துகணையினை பயன்படுத்தியவர்கள் புலிகளே. இவர்கள் இதை 1987 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்துகின்றனர்

இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய படைகளால் 1987 இல் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கையின் போது புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உள்நாட்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள்:-

main-qimg-5eee8d2ddca3876fdbbcf50d083834a8.png

இதன் பிறகு அதாவது 1990 இல் இருந்து புலிகளிடம் மொத்தம் 5 பல்குழல் உந்துகணை செலுத்திகள் இருந்ததாக அறியப்படுகிறது.. அவற்றுள் ஒன்று மட்டுமே வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டதை நான் இங்கு இணைக்கவில்லை. ஏனைய நான்கும் உள்நாட்டிலே புலிகளால் உருவாக்கப்பட்டவை.. நான் இங்கு புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ப.கு.உ.செ பற்றி மட்டுமே குறிப்புகளைக் கொடுக்கிறேன்.

இவற்றினை புலிகள் தங்களின் படகுகளிலும் காவிச்சென்று எதிரியின் தளங்கள் மீது கடலில் இருந்தபடியே உந்துகணைத் தாக்குதல் நடத்துவார்கள். அதிலும் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் மீது கடந்த 2000 ஆம் ஆண்டு நடத்தபட்ட பல்குழல் தாக்குதல் குறிப்பிடத்தக்கதாகும்

1) அறுகுழல் கொண்ட ப.கு.உ.செ

எறிகணை: 107mm

பெரும வீச்சு நெடுக்கம் (max. firing range): 8km

சிறும வீச்சு நெடுக்கம்(min. firing range): 1km

குத்தும் வீதம்(rate of fire): 10 சுற்றுகள்/ நிமிடம்

இந்த பல்குழல் உந்துகணை செலுத்தியை பார்பதற்கு ஏதோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கிறது. உள்ளூரிலே அவர்களால் இவ்வாறு உருவாக்கப்பட்டமை பெரும் மலைப்பாக உள்ளது. இது காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது.

main-qimg-35b174030a8c6b2a75ade50f0ec5f8f6.png

main-qimg-fe6f5d481730574418b2fc878485d8a6.png

main-qimg-d4a3b12eda24e3e933ba3a3c529c20a1.png

main-qimg-fcea94efef6ccd97fda37df46cb002ae.jpg

'உந்துகணைகள் தாணிக்கப்பட்டுகின்றன (load). தாணிப்பவர் சிங்கள தரைப்படை வீரர்'

main-qimg-387107375ba3c86b7c8a80b30ea84bcd.jpg

'உந்துகணைகள் தாணிக்கப்பட்டுள்ளன'

 

2) அறுகுழல் கொண்ட ப.கு.உ.செ

எறிகணை: 107mm

பெரும வீச்சு நெடுக்கம்: 8km

சிறும வீச்சு நெடுக்கம்: 1km

குத்தும் வீதம்: 10 சுற்றுகள்/ நிமிடம்

main-qimg-98c6465740fb675431703ca3d5176cd4.png

main-qimg-e3d93be2c7ffb71bc3395e91b03cfadc.png

 

3) நாற்குழல் கொண்ட ப.கு.உ.செ

.

 

 

 


 

1)ஒற்றைக்குழல் கொண்ட உ.செ

எறிகணை: 107mm

பெரும வீச்சு நெடுக்கம்: 8km

சிறும வீச்சு நெடுக்கம்: 1km

குத்தும் வீதம்: 10 சுற்றுகள்/ நிமிடம்

இதுவும் காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது.

main-qimg-219bb9762be130d1a71853020157edd1.png

 


உசாத்துணை:

படிமப்புரவு

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

 

இதுதான் புலிகளின் பண்டிதர் மற்றும் சண்டியன் உந்துகணைகளுக்கான ஏவுபலகை ஆகும்

 

 

 

 

விடுதலைப் புலிகளின் உள்நாட்டு தயாரிப்பு சேணேவிகள்: https://eelam.tv/watch/வ-ட-தல-ப-ப-ல-கள-ன-உள-ந-ட-ட-தய-ர-ப-ப-ச-ண-வ-கள-artilleries_nMg2loPYTgbtmsJ.html

 

 

இதனுள்தான் விடுதலைப் புலிகளின் உள்நாட்டு தயாரிப்பு சேணேவிகளின்(Artillery) நிகழ்படம் உள்ளது. முற்றிலும் சிதைந்த நிலையில் இந்நிகழ்படம் உள்ளது. யாரேனும் இதனை HD விருத்திற்கு(version) மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

 

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

புலிகளால் வெளிநாட்டில் வாங்கப்பட்ட பல்குழல் உந்துகணை செலுத்திகள் 

 

 

வகை-63 12 குழல் 107மிமீ  ப.உ.செ. | Chinese T-63 12 Barrel 107mm  MBRL

 

 

(இது மட்டக்களப்பு தொப்பிக்கல்லில் இருந்து சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்டது  ஆகும்.)

 

ltte-mbrl.jpg

 

unnamed (1).jpg

 

குறிப்பு: அடோய்... தொப்பிக்கல் வேறு; குடும்பிமலை வேறு... இரண்டையும் போட்டு குழப்பியடிக்க வேண்டாம்!

 

 

 

 

 

 

================================

 

 

 

 

 

 

வகை-63 2 குழல் 107மிமீ  ப.உ.செ. | Chinese T-63 2 Barrel 107mm  MBRL

 

 

இதே போன்ற ஒன்றுதான் திருமலை துறைமுகம் மீதான தாக்குதலிலும் பாவிக்கப்பட்டது.

107mm 2 barrel t-63 mbrl.png

 

 

 

 

 

 

================================

 

 

 

 

 

வகை-63 4 குழல் 107மிமீ  ப.உ.செ. | Chinese T-63 4 Barrel 107mm  MBRL

 

 

main-qimg-2dd07524001ae19de304c493993431ab.jpg

 

Edited by நன்னிச் சோழன்
Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட கணையெக்கி ஒன்று வெள்ளையரின் நிழற்படப்பிடிப்பிற்காக கண்டர் வகை ஊர்தியில் பொதுயிடமொன்றிற்கு எடுத்துவரப்படுகிறது

 

Tamil Tigers' Home made mortar being brought up in a cander

 

Tamil Tigers' Home made mortar

'ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருப்பவர் 'தியாக தீபம்' லெப் கேணல் திலீபன் ஆவார்'

 

Tamil Tigers' Home made mortar

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • நேற்று தமிழ் மாநில காங்கிரஸ் (தமாக) வாசன் பிரச்சாராம் செய்யும் போது, 'உங்கள் வாக்குகளை மறக்காமல் கை சின்னத்திற்கு.....' என்று ஆரம்பித்து விட்டார். பழைய நினைவுகள் ஆக்கும். பின்னர் கூட நின்றவர்கள் அவரை உஷார் ஆக்கியவுடன், கொஞ்சம் சுதாகரித்து, 'கையை எடுங்கப்பா, கையை எடுங்கப்பா, சைக்கிள் சின்னத்திற்கு வாக்களியுங்கள்....' என்ற மாதிரி சமாளித்துவிட்டார். மக்களுக்கு முன்னர் இவர்கள் குழம்பி விடுவார்கள் போல கிடக்குதே.....😀
    • பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான்! Published By: DIGITAL DESK 3  28 MAR, 2024 | 04:19 PM   பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்திவரும் பின்புலத்தில் நேற்று புதன்கிழமை தொழிலாளர் அமைச்சின் ஊடாக பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை கிழக்கு மாகாண ஆளுநரும் இதொகாவின்  தலைவருமான செந்தில் தொண்டமான் கடுமையாக நிராகரித்துள்ளார்.  கூட்டு ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பங்காளிகளும் அதே நிலைப்பாட்டை எடுத்தனர்.   "தொழில் அமைச்சில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் RPC நிறுவனம் முன்மொழிந்த புதிய திட்டமானது தொழிலாளர்களை விட RPC நிறுவனத்திற்கு அதிக பயன் தரும் ஊக்கத் திட்டமாக  மட்டுமே அமையும்.  தொழிலார்களுக்கு நாம் ஊக்க தொகையை கோரவில்லை மாறாக சம்பள  உயர்வையே கோரினோம்." என இதன்போது செந்தில் தொண்டமான் சுட்டிக்காட்டினார்.  அத்துடன் சம்பள நிர்ணய சபையின் ஊடாக நியாயமான சம்பள உயர்வை எதிர்பார்க்கின்றோம் என அமைச்சர்  மனுஷ நாணயக்காரவுக்கும்  செந்தில்  தொண்டமான் எடுத்துரைத்தார்.  இதேவேளை அமைச்சர் மனுஷ நாணயக்கார, தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வைப் பெற்றுத்தர  தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.  தோட்ட தொழிலாளர்களுக்கு 1700ரூபா சம்பள உயர்வை வழங்க வேண்டுமென்று  அரசாங்கம் எடுத்திருந்த தீர்மானத்தின் பிரகாரம் தொடர்ச்சியான கலந்துரையாடைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179910  
    • வட்டுக்கோட்டை இளைஞர் கொலை: DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவு வட்டுக்கோட்டை இளைஞர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் இறுதியாக கைது செய்யப்பட்ட மூவரின் தொலைபேசி அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர். குறித்த அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 ஆம் திகதி மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களும் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, 8, 9 ஆம் சந்தேகநபர்களை அடையாள அணிவகுப்பிற்கு உடபடுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் பிரகாரம், எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். பொன்னாலை கடற்படை காவலரணுக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கெமராவின் DVR-ஐ பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர். பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற நீதவான் அதனை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். வட்டுக்கோட்டை இளைஞர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297478
    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.