Jump to content

இணைப்போமா? இணைவோமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்போமா? இணைவோமா?

 
%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%
 238 Views

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலைதீவின் வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் 191 உறுப்புரிமை வாக்குகளில் 143 வாக்குகளைப் பெற்றுத் தெரிவாகியுள்ளார். இவருடன் போட்டியிட்ட ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சலாமை ரசோலுக்கு 48 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. இத்தேர்தல் உலக நாடுகளின் தலைமை, ஆசியா சார்ந்ததாக அதுவும் சீனப் பின்னணியில் கட்டமைக்கப்படுகிறது என்பதை மீளவும் தெளிவாக்கியுள்ளது.

இந்துமாகடலின் 1195 தீவுக் கூட்டங்களில், மாலைதீவும் இலங்கையைப் போன்று சீனாவுடன் அதனுடைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் முக்கியமான ஒரு தீவாக, வரலாற்றுத் தொடர்புடன் விளங்கும் தீவு. உலகின் மூன்றில் இரண்டு எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களும், வர்த்தகக் கப்பல்களில் அரைவாசிக்கு மேற்பட்டனவும் பயணிக்கும் கடல்வழிப் பாதைகளுக்கு மிக அருகாமையில் உள்ள மாலைதீவு உலகச் சந்தை,  உலகப் பாதுகாப்பு என்பனவற்றுக்கு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இன்று உள்ளது.

அதே வேளையில் இந்தியாவில் இருந்து 1200 கிலோ மைலிலும், இந்தியாவின் இலட்சத்தீவுக் கூட்டத்தில் இருந்து 700 கிலோ மைலிலும் உள்ளது மாலைதீவு.  1965இல் மாலைதீவு பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலம் முதலாக அரை நூற்றாண்டுக்கு மேலாக 52 ஆண்டுகள் மாலைதீவு, இந்திய மேலாண்மையுள் விளங்கிய நாடு. 1988இல் அன்றைய சர்வாதிகாரத் தனமான மாலைதீவு அரச அதிபர் மாமூன் அப்துல் கயாம் அவர்களுடைய ஆட்சிக்கு எதிராக நடந்த சதியை இந்தியா தனது படையினை அனுப்பி முறியடிக்கும் அளவுக்கு இந்திய மேலாண்மையைக் கொண்டிருந்த நாடு மாலைதீவு. இந்தியாவைச் சார்ந்து நின்ற தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தையும், இந்தியா மாலைதீவு அரசியலுள் தன்னை நிலைநிறுத்தப் பயன்படுத்தியது என்பதும் வரலாறு.

மேலும் புவியியல் சூழல் காரணமாக உள்ள பெரிய நாடுகள், சிறிய நாடுகளின் மேல் மேலாதிக்கம் செலுத்துவதை அரசறிவியலில் ‘பின்லன்டனிசம்’ என்பர். அதாவது பின்லாந்து மேல் யேர்மன் மேலாதிக்கம் செலுத்திய இயல்பு நிலையையும், பின்லாந்து,  ‘இஸ்காண்டிநேவிய’ நாடுகளுடனான இணைவின் வழி அதனை வென்று, செயற்படும் வரலாற்றையும் இந்த ‘பின்லன்டனிசம்’ என்னும் சொல்லாட்சி குறிக்கும். சிறு நாடும் கூட நாடுகளின் கூட்டுகளுள் இணைவதன் வழி தம்முடைய தன்னாட்சியினை உறுதிப்படுத்த முடியும் என்னும் இந்த வரலாற்று உண்மைக்கு, மாலைதீவின் சமகால வரலாறு மற்றொரு சான்றாகிறது.

2014 இல் சீனாவின் அரச அதிபர் சீ ஜின்பிங்கின், அதுவரை தூதரகத் தொடர்புகள் கூட இல்லாதிருந்த மாலைதீவுடன், “எதிர்காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்” என்னும் அவருடைய தத்துவத்தின் அடிப்படையில் சீன – மாலைதீவு நட்புப் பாலத்தை உருவாக்கினார். இது சீனாவின் 21ஆம் நூற்றாண்டில் மீளவும் முன்னைய கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தை மீளக் கட்டியெழுப்பும் செயற்பாடாகிய ‘மண்டலங்களையும் பாதைகளையும்’ அமைத்தலுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை உருவாக்க உதவியது. இதன்வழி மிக அதிகளவிலான உட்கட்டுமான வளர்ச்சியை மாலைதீவுக்கு ஏற்படுத்த உதவும் நிதியளிப்புக்களையும், கடனளிப்புக்களையும் சீனா தொடங்கியது. 08.12.2017 இல் மாலைதீவின் அரச அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் மாலைதீவு, சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் பாகிஸ்தானுக்கு அடுத்த இரண்டாவது தெற்காசிய நாடாகக் கையெழுத்திட்டது. மாலைதீவுடனும், சிறீலங்காவுடனுமான சீனாவின் நெருக்கம், இன்று இந்தியாவின் இலட்சத்தீவில் நேரடியல்லாத மூலதனமிடும் அளவுக்குச் சீனா தன்னை அகலப்படுத்தச் சீனாவுக்கு உதவியுள்ளது. இது இன்று இந்துமாகடலில் சீனாவின் பட்டுப்பாதை குறுகிய காலத்தில் விரைந்து எழும் புதிய வரலாற்றின் செல்நெறியாகிறது.

இந்நிலையில், இந்துமாகடலில் தன் மேலாண்மையுடன் கூடிய அமைதியினை உறுதிப்படுத்தும் அரசியல் மூலோபாய நோக்கில்தான்,  2018இல் இந்தோனேசியா மாலைதீவுடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிலையான உறுப்பினரல்லாத, உறுப்புரிமைக்குப் போட்டியிட்ட போது, இந்தியா இந்தோனேசியாவை ஆதரித்து வெற்றிபெற வைத்தது.

ஆனால் இன்று சீன – மாலைதீவு நட்புறவுப் பாலம் இறுக்கமடைந்த நிலையில், மீளவும் மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் அப்துல் சாகிட் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் தலைவராவதை ஆதரித்துள்ளது.

இது ‘எதிர் காலத்தைக் கருத்தில் கொண்ட, எல்லா வட்டங்களுடனுமான நட்பும்  ஒத்துழைப்பும்’ என்னும் சீனத் தத்துவத்தின் ஆற்றலாகப் பார்க்கப்பட வேண்டிய ஓன்றாகவுள்ளது. இந்தத் தத்துவத்தை ஈழமக்கள் இன்று தங்கள் அரசியல் மூலோபாயமாகக் கொள்ள வேண்டிய நேரமிது.

அதாவது சிறீலங்காவின் அனைத்துலகச் சட்டங்களுக்கு எதிரான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள எதிர்வரும் செப்டெம்பர் மாதத்து ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத் தொடர் மாலைதீவைச் சேர்ந்த அப்துல் சாகிட் அவர்களின் தலமையிலேயே தொடங்கப் போகின்றது. இந்நிலையில், மாலைதீவுடன் ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொன்மையின் பழமையும் இன்று ஈழத்தமிழர்களுக்கு உள்ள தொல்லைகளின் நிலைமைகளும் ஈழத்தமிழர்களால் எந்த அளவுக்குத் தெளிவாக்கப்படப் போகின்றன என்பதிலேயே ஈழத்மிழர்கள் குரல் ஐக்கிய நாடுகள் சபையில் பலமாக ஒலிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

மாலைதீவுடன் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகள் அத்தனையுடனும், ஈழத்தமிழர்கள் தங்களின் உலகளாவிய நிலையில் பரந்துள்ள புத்திஜீவித் தனத்தையும், சமூக மூலதனங்களையும், எந்த அளவுக்கு இணைப்பார்கள் – எந்த அளவுக்கு ஒரு பொது வேலைத் திட்டத்தில் இணைவார்கள் என்பதிலேயே ஈழத்தமிழர்களின் உரிமைகள் மீளமைக்கப்படும் காலத்தின் குறுக்கம் உள்ளது என்பதே ‘இலக்கின்’ இவ்வார எண்ணமாக உள்ளது.

 

 

https://www.ilakku.org/?p=52910

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.