Jump to content

சீனாவில் 100 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவில் 100 கோடிக்கும் அதிகமாக செலுத்தப்பட்ட தடுப்பு மருந்து

 
சீன தடுப்பு மருந்து

பட மூலாதாரம், Getty Images

சீனாவில் 100கோடிக்கும் அதிகாமானோருக்கு கோவிட் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு.

சீனாவில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்திய பிறகு தடுப்பு மருந்து செலுத்தும் பணி மெதுவாக தொடங்கியது.

இருப்பினும் இலவசமாக முட்டைகளை வழங்குவது, டெல்டா திரிபு பரவும் ஆபத்து ஆகியவற்றால் தடுப்பு மருந்து செலுத்தி கொள்வது வேகம் அடைந்தது.

சீனாவின் மக்கள் தொகை 140 கோடியாகும் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பு மருந்துகளை வழங்குவதை இலக்காக வைத்துள்ளனர் சீன அதிகாரிகள்.

சீனா தனது மக்களுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சினோஃபாம் மற்றும் சினோவேக் தடுப்பூசிகளை செலுத்துகிறது. இரண்டுமே இரண்டு டோஸ்கள் செலுத்தி கொள்ள வேண்டும்.

பொதுமுடக்கம் மற்றும் அதிகளவிலான பரிசோதனை தொற்று பரவலை கட்டுப்படுத்தியது.

 

தொடக்கத்தில் பலர் தடுப்பு மருந்து அவசியம் இல்லை என நினைத்தாலும், நாட்கள் செல்ல செல்ல தடுப்பு மருந்து செலுத்திக் கொள்ளும் வேகம் அதிகரித்தது என்றும், ஐந்து நாட்களில் 100 மில்லியன் டோஸ்களை செலுத்தியதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவிக்கிறது.

சீனாவின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் டெல்டா திரிபு பரவியதும் மக்கள் அதிகளவில் தடுப்பு மருந்து எடுத்து கொள்வதற்கான காரணம்.

குவாண்டாங் மாகாணத்தில் உள்ள குவாங்க்சூவில் அங்கு பரவிய வைரஸால் ஏற்படக்கூடிய அறிகுறி, 2019ஆம் ஆண்டு இறுதியில் ஹூவானில் பரவிய வைரஸால் ஏற்பட்ட அறிகுறிகளை காட்டிலும் அதிக ஆபத்தானது என்றும், வித்தியாசமானது என்றும் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

குவாங்க்சூ நகருக்கு அருகில் உள்ள ஷென்சென் நகரில் வசிக்கும் ஒருவர், முதலில் தடுப்பு மருந்து எடுத்து கொண்டால் பக்க விளைவுகள் வரும் என்ற அச்சத்தில் எடுத்து கொள்ளவில்லை அதன்பின் தனது மனதை மாற்றிக் கொண்டதாக அந்த செய்தித்தாளிடம் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்த காத்திருக்கும் மக்கள்

பட மூலாதாரம், Getty Images

"நான் தற்போது தடுப்பூசியை செலுத்தி கொள்ள விரும்புகிறேன் ஆனால் அதற்கான இடம் கிடைப்பது தற்போது கடினமாக உள்ளது. மேலும் இலவச முட்டைகளும், தடுப்பு மருந்து மையங்களுக்கு இலவசமாக கூட்டிச் செல்வதும் வாகன வசதிகளும் தற்போது இல்லை," என அந்த 27 வயது பெண் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பிற பகுதிகளில் சில இலவசங்களை அளிக்கின்றனர். இலவசமாக முட்டைகளையும் அளிக்கின்றனர். பீய்ஜிங்கில் உள்ள சிலருக்கு ஷாப்பிங் வவுச்சர்களும் கிடைத்துள்ளன.

இந்த வருடத்தின் முடிவில் மக்கள் தொகையில் 70 சதவீத பேருக்கு தடுப்பு மருந்து செலுத்த இலக்கு வைத்துள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுவரை மூன்று சீன தடுப்பு மருந்துகளுக்கு அவசர நிலை பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சினோஃபாம் மற்றும் சினோவேக் தடுப்பு மருந்துகள் உலக சுகாதார நிறுவனத்தின் ஒப்புதல் பெற்றுள்ளன

இந்த தடுப்பு மருந்துகளும் ஏற்கனவே பிலிப்பைன்ஸ், சில்லி, பிரேசில், இந்தோனீசியா, மெக்ஸிகோ, தாய்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் உள்ள அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சினோஃபார்ம் தடுப்பு மருந்து 79 சதவீத பலன் தருகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

சினோவேக் தடுப்பு மருந்து எடுத்து கொண்டவர்களில் 51 சதவீதம் பேருக்கு தொற்று ஏற்படமால் உள்ளது. மேலும் 100 சதவீத மாதிரிகளில் தீவிர அறிகுறிகள் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலையை தடுத்துள்ளது என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.https://www.bbc.com/tamil/global-57550015

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.