Jump to content

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

HemavandhanaPublished:June 21 2021, 13:32 [IST]

சென்னை: "கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக்கிட்டு வர்றார் சீமான்.. ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருக்கார்.. அதனால் முதல்வர் ஸ்டாலின்தான், சீமான் விஷயத்தில் தலையிட்டு, எனக்கு ஒரு நியாயம் பெற்று தர வேண்டும் வேண்டும்" என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி

விஜயலட்சுமி

அதுதான் சமீப காலமாக, பத்மா சேஷாத்ரி பள்ளி, சிவசங்கர் பாபா முதல் மாஜி அமைச்சர் மணிகண்டன் வரை கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.. இதுதான் பெண்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தந்து வருகிறது.. அந்த வகையில் நடிகை விஜயலட்சுமிக்கும், புது நம்பிக்கை பிறந்துள்ளது.. தன்னுடைய பிரச்சனைக்கு இந்த ஆட்சியில் நிச்சயம் ஒரு வழி கிடைக்கும் என்ற முனைப்பில், திமுக அரசின் கதவை தட்டி உள்ளார்.

தமிழகம்

குற்றச்சாட்டு

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர் நடிகை விஜயலட்சுமி... இதை பல முறை மீடியா முன்பு பகிரங்கமாகவே சொல்லி உள்ளார்.. புகார் தந்துள்ளார்.. அதேபோல, தனிப்பட்ட முறையில் வீடியோ வெளியிட்டும், சீமானை தாக்கி பேசியிருந்தார்.

அமைச்சர்

மணிகண்டன்

இப்போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டதை போல் தன்னுடைய புகாரில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி மறுபடியும் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

குற்றச்சாட்டு

வீடியோ

'சீமான் அவர்களால் கடந்த 4 வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன்.. அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன். அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அமைச்சர் மணிகண்டன் கைதாகும் போது சீமான் ஏன் கைதாகவில்லை? நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்டும் ஏன் அவைகளின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 வருஷத்துக்கு முன்பு போலீஸில் புகார் துந்தேன்.. ஆனால், அந்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆதாரம்

திமுக

சீமானுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.. அதனால், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் தெரிவிக்க போகிறேன்.. இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் 10 வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

வருத்தம்

கர்த்தர்

கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டி கொண்டு வருகிறார்.. இதுவரைக்கும் சீமான் வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருந்துட்டு வர்றார்.

பழிவாங்கல்

முதலமைச்சர்

திமுக இன்னைக்கு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறதுன்னு சொல்றாங்களே, அப்படின்னா நாம் தமிழர் கட்சியும் இன்னைக்கு இதைதான் பண்ணியிருக்காங்க.. சீமான் இன்னைக்கு எதை சுட்டிக் காட்டுகிறாரோ, அதைதான் இவ்வளவு காலம் நானும் சுட்டிக்காட்டிட்டு வர்றேன். அதனால், முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வழக்கு சம்பந்தமா நடவடிக்கை எடுக்கணும்னு நான் கேட்டுக்கறேன்.

பப்ளிசிட்டி

அதிமுக

நான் பப்ளிசிட்டிக்காக இதை சொல்லவில்லை.. என்னுடைய வழக்கு பெரிது.. இதை அதிமுகவை வைத்து அன்னைக்கு மூடிட்டாங்க.. அதிமுக ஆட்சியில் எனக்கு நியாயமே கிடைக்காமல் செய்தாங்க.. இன்னைக்கு வரைக்கும் அவருடைய ஆட்கள் என்னை அசிங்கமா பேசிட்டுத்தான் இருக்காங்க.

ஆட்சி

நியாயம்

இன்னைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், எல்லாவற்றிற்கும் ஒரு நியாயத்தை வழங்கிட்டு வரும்போது, ஒரு பெண்ணுடைய வாழ்க்கை கேவலம் கிடையாது, அது திமிரின் உச்சம் என்பதை காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கறேன்.. திமுகவில் இருக்கும் பெரியவங்க இந்த வீடியோவை பாருங்க.. யார் கிட்ட கொண்டு போய் சேர்க்கணுமோ, தயவுசெய்து சேர்த்துடுங்க. திமுக எனக்கு நியாயம் வாங்கி தரணும்... நம்பிக்கையா காத்துக்கிட்டு இருக்கேன்' என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர்

நடவடிக்கையா?

சமீப காலமாக முதல்வர் ஸ்டாலினுடன், சீமானுக்கு நல்ல இணக்கம் இருந்து வருகிறது.. இவர்களின் ஒவ்வொரு முறை சந்திப்பும், நட்பான பேச்சும் சோஷியல் மீடியாவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.. ஒருவேளை வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் நாம் தமிழருடன் திமுக கூட்டணி வைக்கக்கூடும் என்ற அளவுக்கு யூகங்களும் கிளம்பி வரும் நிலையில், சீமானுக்கு எதிரான இந்த வழக்கை திமுக கையில் எடுக்குமா? விஜயலட்சுமியின் கண்ணீர் கோரிக்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://tamil.oneindia.com/news/chennai/actress-vijayalakshmi-appeal-to-cm-mk-stalin-for-arrest-naam-tamizhar-party-seeman-424576.html 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விஜய லட்சுமி… விசயம் இன்னும் முடியேல்லையா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

ஸ்ராலின், உதய நிதி, அவங்க தாத்தா… எல்லாரும் இந்த விசயத்திலை….

பழம் திண்டு… கொட்டை போட்ட ஆக்கள்.

அவங்களிடம் நீதி கேட்கப் போகலாமா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

குற்றச்சாட்டு

வீடியோ

'சீமான் அவர்களால் கடந்த 4 வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன்.. அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன். அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அமைச்சர் மணிகண்டன் கைதாகும் போது சீமான் ஏன் கைதாகவில்லை? நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்டும் ஏன் அவைகளின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 வருஷத்துக்கு முன்பு போலீஸில் புகார் துந்தேன்.. ஆனால், அந்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆதாரம்

திமுக

சீமானுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.. அதனால், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் தெரிவிக்க போகிறேன்.. இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் 10 வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

பொண்ணு பிழைக்க தெரிஞ்ச பொண்ணு 
பேமண்ட் கொஞ்சம் பெருசா இருக்கும் போலயே , அறை வாடகை கட்ட வக்கில்லாமல் நடுத்தெருவில் நின்று கூவும்போது சீமான் நல்லவர் இப்போது சீமானுக்கெதிராக நடவடிக்கை, பார்த்தும்மா இப்படித்தான் பச்சைத்தமிழனின் ரசிக குஞ்சுகள் உசுப்பேத்தி உடம்பை ரணகளப்படுத்தி விட்டு நடுவில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆனவை , ஊப்பிகள் வேறு தினுசான பேர்வழிகள், மகளீர் பாசறை செயலாளர் இடுப்பிலேயே பம்பரம் விட்ட எமகாதகனுகள் கும்மென்று இருக்கும் உங்களை கும்மியெடுத்து விடுவானுகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின், உதய நிதி, அவங்க தாத்தா… எல்லாரும் இந்த விசயத்திலை….

பழம் திண்டு… கொட்டை போட்ட ஆக்கள்.

அவங்களிடம் நீதி கேட்கப் போகலாமா? 😁

🤣 தமிழ் சினிமால சின்ன வில்லன பற்றி பெரிய வில்லனிடம் முறையிடும் சீன் வருமே அது போலத்தான் இதுவும்🤣.

6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பொண்ணு பிழைக்க தெரிஞ்ச பொண்ணு 
பேமண்ட் கொஞ்சம் பெருசா இருக்கும் போலயே , அறை வாடகை கட்ட வக்கில்லாமல் நடுத்தெருவில் நின்று கூவும்போது சீமான் நல்லவர் இப்போது சீமானுக்கெதிராக நடவடிக்கை, பார்த்தும்மா இப்படித்தான் பச்சைத்தமிழனின் ரசிக குஞ்சுகள் உசுப்பேத்தி உடம்பை ரணகளப்படுத்தி விட்டு நடுவில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆயிட்டினம் , ஊப்பிகள் வேறு தினுசான பேர்வழிகள், மகளீர் பாசறை செயலாளர் இடுப்பிலேயே பம்பரம் விட்ட எமகாதகனுகள் கும்மென்று இருக்கும் உங்களை கும்மியெடுத்து விடுவானுகள்  

ஒருக்கா அப்பீடீக்கா சொல்லுது, மறுக்கா இப்டீக்கா சொல்லுது, மறுபடியும் அப்டீக்கா சொல்லுது.

இதில பொறுத்த நேரத்தில அண்ணன் ஹரி நாடார வேற உள்ள தூக்கி வச்சிட்டாங்க.

ஆனா நிச்சயம் இத வச்சு திருட்டு திமுக செம அரசியல் லாபம் பாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லு கொடுக்காம போனா, கடையை பூட்டின பிறகு, பில்லை தூக்கிட்டு காலெக்சன் கிளிம்பிடுவாங்க....😁

சீமான் 5 லட்ச்சம், ஸ்டாலின் கிட்ட கொடுத்தாரு, எனக்கு ஒரு ரூபா கூட கொடுக்கவில்லை என்று கோபப்பட்டார். இவருக்கு தேவை பணம். 😁

இவர் போலீசுக்கு போக மாட்டார், போவது போல காட்டி பணம் பறிக்க தான் முயல்வார்.

இவர் சீமானிடம் பணம் இல்லை என்று, ஆளை கழட்டி விட்டு, பெங்களூரு போய், அங்கே ஒருவரை பிடித்து கலியாணம் வரை சென்றார். அதுவும் இவரது attitude காரணமாக குழம்ப, வேறு பல இடம் போய்....பின்னர்  சீமான் மேல் தாக்குதல் தொடங்கினார்.

திமுக, அரசியல் ரீதியாக ஏதாவது செய்யும், அதன் மூலம் பணம் வரும் என்று நினைக்கிறார்.

காரம் சாப்பிட்டா, விக்கல் வரும், விஜயலெஸ்சுமிக்கு உதவினா சிக்கல் வரும்.... சொல்வது திமுகவின் பாலிமர் டிவி. 🤗

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்வத்தினடிப்படையில் சீமான்மீது வழக்கு தொடுக்கிறார்களோ கைது செய்கிறார்களோ என்பதெல்லாம் அவர்களது சட்டம் அரசியல் சம்பந்தமான பிரச்சனைகள் , ஆனால்

பத்மா சேஷாத்திரி பள்ளி, சிவங்கர்பாபா விஷயங்களும் உங்கள் விஷயமும் ஒன்றல்ல விஜயலட்சுமி.

அவை பாதிக்கப்பட்ட பெண்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட பாலியல் சீண்டல்கள் என்று பாதிக்கப்பவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு.

ஆனால் மாஜி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி விஷயமும் உங்கள் விஷயமும் ஒன்றேதான், நீங்கள் இருவரும் விரும்பியே உங்கள் தனிப்பட்டவாழ்வில் அவர்களுடன் நெருக்கத்தை பேணினீர்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானவர்கள்.

திருமணம் செய்யவில்லை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கலாச்சாரம் கண்ணியம் காக்கும் நீங்கள், திருமணத்தின் முன்னர் ரகசிய வாழ்வை வைத்திருந்தது மட்டும் கலாச்சாரம் கண்ணியத்திற்குரியதா?

சாந்தினியும் நீங்களும் நிச்சயமாக இந்த சம்பவங்களில் பாதிக்குமேல் பங்காளிகள்.

சிலமாதங்கள் முன்னாடி தற்கொலை செய்யபோறேன் என்றீர்கள், பின்பு மறுபடியும் நாளைக்கு சாகபோறேன் ரஜனி சார் உதவி செய்யவேண்டும் என்று செயற்கை சுவாச குளாய்களை பொருத்தியபடி ஆஸ்பத்திரியில் படுத்திருந்தீர்கள்,

ரஜனி உதவி செய்ததா தெரியவில்லை ஆனால் உங்கள் நிலமையை பார்த்து பரிதாபபட்டு அங்கே வந்து உதவி செய்த ரவிபிரகாஷ் எனும் நடிகர்மீதே பின்பு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்தீர்கள். 

அந்த சம்பவம் முடிந்ததும் நீங்களும் நடிகை வனிதாவும் நடமாடும் நகைகடை ஹரிநாடாருடன் நெருக்கத்தை பேணியதாகவும் தமிழக ஊடகங்களில் செய்திகள் உண்டு . 

அவர் உதவியுடன் படவாய்ப்பே இல்லாத நீங்கள்  மாதவாடகையே லட்சங்களில் செலவு செய்து எப்படி இருந்தீர்கள் என்று கேள்வியும், ஹரிநாடார்  கைதின் பின்னர் 3 மாத வாடகை பாக்கியால் விரட்டியடிக்கப்பட்டீர்கள் என்றும் தமிழக ஊடகங்களில் செய்திகள் சாரை சாரையாக வந்திருக்கிறது.

கூட்டி கழித்து பார்த்தால் எப்போ எல்லாம் பண கஷ்டம் வருகிறதோ அப்போ மட்டுமே நீங்கள் பரபரப்பை கிளப்புகிறீர்கள், சீமான்மீது கொந்தளிக்கிறீர்கள்  என்பதை எளிதில் எல்லோரும் புரிந்து கொள்வார்கள், பட வாய்ப்புகளும் ஹரிநாடார் பெரும் புள்ளிகளின் நட்பும் இருந்துவிட்டால் சீமான் கதையை பற்றி பேசமாட்டீர்கள் என்பதும் கடந்தகால வரலாறு.

இன்றைய முதல்வர் ஸ்டாலின்மீதுகூட அன்றைய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான பெப்சி உமா, பாத்திமா பாபு போன்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் என்று புகார்கள் உண்டு அவர் யோக்கியமே அந்த ரேஞ்சில் இருக்கு நீங்கள் அவரிடம்போய் நியாயம் கேக்கிறீர்கள்?

கண்டிப்பாக இது சீமானுக்கு வக்காலத்து வாங்கவோ ஆதரவாகவோ செய்யும் பதிவல்ல, உங்கள் குற்றசாட்டுக்களில் நேர்மை தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, valavan said:

கண்டிப்பாக இது சீமானுக்கு வக்காலத்து வாங்கவோ ஆதரவாகவோ செய்யும் பதிவல்ல, உங்கள் குற்றசாட்டுக்களில் நேர்மை தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இது.

👆🏼👌

34 minutes ago, valavan said:

இன்றைய முதல்வர் ஸ்டாலின்மீதுகூட அன்றைய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான பெப்சி உமா, பாத்திமா பாபு போன்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் என்று புகார்கள் உண்டு அவர் யோக்கியமே அந்த ரேஞ்சில் இருக்கு நீங்கள் அவரிடம்போய் நியாயம் கேக்கிறீர்கள்?

 

பாத்திமா பாபுவுக்கு நிகழ்ந்த வன்கொடுமை நெருக்கடிக்கும் மேலானது. பெப்சி உமாவுக்கு நெருக்கடி இருந்ததாக இன்றுதான் கேள்வி படுகிறேன்.

36 minutes ago, valavan said:

ஆனால் மாஜி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி விஷயமும் உங்கள் விஷயமும் ஒன்றேதான், நீங்கள் இருவரும் விரும்பியே உங்கள் தனிப்பட்டவாழ்வில் அவர்களுடன் நெருக்கத்தை பேணினீர்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானவர்கள்.

திருமணம் செய்யவில்லை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கலாச்சாரம் கண்ணியம் காக்கும் நீங்கள், திருமணத்தின் முன்னர் ரகசிய வாழ்வை வைத்திருந்தது மட்டும் கலாச்சாரம் கண்ணியத்திற்குரியதா?

இந்தியாவில் சட்டம் கொஞ்சம் வித்தியாசம் என நினைக்கிறேன்.

மேற்குலகில்…ஆம் கல்யாணம் முடிப்பதாக சொன்னேன். ஒன்றாக வாழ்ந்தோம்… இப்போ கல்யாணம் முடிக்கும் முடிவை மாற்றி விட்டேன் என்று சொன்னால்… சட்டம் அதை ஏற்று கொள்ளும்.

ஆனால் இந்தியாவில் கல்யாணம் முடிப்பதாக வாக்குறுதி தந்து, என்னுடன் கூட வாழ்ந்து பின் வாக்குறுதியை மீறினார் என்பது ஒரு வகையான குற்றம் என்றே நினைக்கிறேன்.

நேற்றைய மணி கண்டன் பற்றிய செய்தியில் நீதிபதி இதை சுட்டி காட்டி, எம் ஐ ஆர் ஐ மாற்றி எழுதும் படி பொலிசுக்கு சொல்லி உள்ளார் என போடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து 

விஜயலக்சுமியோடு சீமான் கணவன் மனைவியாக வாழ்ந்தார் என்றே நினைக்கிறேன்.

கல்யாணம் பண்ணி கொள்வதாக சொன்னாரா என்பது தெளிவில்லை.

விஜயலக்சுமி தருணம் பார்த்து மாறி மாறி கதைக்கிறார் என்பது வெளிப்படை. 

இது பணத்துக்காக என்றே நினைகிறேன்.

ஆனால் சீமான் மீது 100%மாக அவதூறு செய்கிறார் என்பதும் உண்மையல்ல.

Link to comment
Share on other sites

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

இது தனியே ஒருவரின் அந்தரங்கம் மட்டும் இல்லை. இதில் ஒரு அரசியல்வாதியின் கண்ணியம், நம்பகத்தன்மை,  என்பனவும் சம்பந்தபட்டுள்ளன. ஒரு அரசியல் தலைவரின் அரசியலை எடை போட இவற்றை ஆராய்வது இன்றி அமையாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமக்கெதிராகப் பேசுபவர் பெண் என்றாலே அவர் மீது "நடத்தை" தொடர்பான குற்றச்சாட்டை வதந்தியாகப் கிளப்பி விடும் ஒரு அரசியல் வாதி பற்றிய பெண் விவகாரத்தை அலசுவதில் தவறில்லை! (அனந்தி சசிதரன்  பற்றிய செய்தி உதாரணம்!)

Link to comment
Share on other sites

24 minutes ago, Justin said:

 தமக்கெதிராகப் பேசுபவர் பெண் என்றாலே அவர் மீது "நடத்தை" தொடர்பான குற்றச்சாட்டை வதந்தியாகப் கிளப்பி விடும் ஒரு அரசியல் வாதி பற்றிய பெண் விவகாரத்தை அலசுவதில் தவறில்லை! (அனந்தி சசிதரன்  பற்றிய செய்தி உதாரணம்!)

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

அதுக்குத்தான் இன்னொரு பெண்ணையும் இதற்குள் இழுத்து  விட்டிருக்கோறோம் இல்ல....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

நிழலி,

இதை ஆங்கிலத்தில் எழுதினால் மக்கள் கடுப்பாக கூடும் என்பதால் கடந்த பதிவில் எழுதவில்லை. பத்திரிகை உலகில் அடிப்படை test ஒன்று உள்ளது. ஒருவரின் அந்தரங்கத்தை எழுத முன் இந்த test பிரயோகிப்பார்கள்.

அந்த டெஸ்டானது:

Is it in the public interest to publish this story? Or is it a story in which the public are interested ?

இந்த செய்தி மக்கள் நலன் சம்பந்த பட்டதா? அல்லது வெறுமனே மக்கள் அறிய விரும்புபதா (கொசிப்பா)?

ஒரு அரசியல் தலைவரின் மீதான மக்களின் நோக்கு, நம்பிக்கை அவர் தனிவாழ்வோடு பிண்ணி பிணைந்தது. குறிப்பாக இந்த குற்றசாட்டுகளை பற்றி அவர் ஒரு தகுந்த தன்னிலை விளக்கம் கொடுக்காத போது.

 

 

கிளிண்டன் மொனிக்கா லிவின்சி வழக்கை ஏன் இவ்வாறு கடந்து போகவில்லை?

ஒரே காரணம்தான்.

அனந்தி மீது வாறியிறைக்கப்பட்டது சேறு. அங்கே பாதிக்க பட்டதாக எந்த ஆணும் முறையிடவில்லை. ஆகவே அவை ஆதாரமற்ற வெறும் வதந்திகள்.

ஆனா இங்கே ஒருவர் பொலீசில் முறைபாடு கொடுத்துள்ளார். 

உண்மையில் உங்களுக்கும் இரெண்டுக்குமான வித்தியாசம் விளங்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

மேலே கோசான் சொன்ன கருத்து அரைவாசிக்காரணம், எனவே ஆமோதித்திருக்கிறேன்!

அடுத்த பாதிக் காரணம்: hypocrisy என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். அது முன்னே வரத் துடிக்கும் தலைவர்கள், பிரபலங்களாக இருக்கும் போது அவசியம். ஒருவனைக் கள்வன் என்று சீமான் சொன்னால், சீமானின்  பண வரவு ஆய்வுக்குள்ளாவது நியாயமானது. ஒருவரை நடத்தைப் பிறழ்வுடையவர் என்று சீமான் சொன்னால் , அவரது நடத்தைப் பிறழ்வாகத் தெரியும் நடவடிக்கை ஆய்வுக்குள்ளாவது நியாயமானது.

31 minutes ago, விசுகு said:

அதுக்குத்தான் இன்னொரு பெண்ணையும் இதற்குள் இழுத்து  விட்டிருக்கோறோம் இல்ல....???

சீமான் கட்சிக்கு 6% வாக்குக் கிடைத்த போது நீங்கள் சொன்னது: "இனி அவர்களில்லாமல் நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது!"( உடனே நிழலி யாழ் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாது என்று மறுக்க வேண்டியிருந்தது!)

பந்தியில் இடம் வேணுமெண்டால் விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப் படும் போதும் அதை எதிர் கொள்ள வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன முயலக் கூடாது!

(நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சீமான் குழு இழுத்து விட்டு, அதற்கு யாழ் தம்பிகள் நியாயம் கற்பித்த போது, இதே கரிசனை விசுகருக்கு எங்கே போனதென யோசிக்கிறேன், பதில் தெரியுமென்பதால் சிரித்து 🤣நகர்கிறேன்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

மேலே கோசான் சொன்ன கருத்து அரைவாசிக்காரணம், எனவே ஆமோதித்திருக்கிறேன்!

அடுத்த பாதிக் காரணம்: hypocrisy என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். அது முன்னே வரத் துடிக்கும் தலைவர்கள், பிரபலங்களாக இருக்கும் போது அவசியம். ஒருவனைக் கள்வன் என்று சீமான் சொன்னால், சீமானின்  பண வரவு ஆய்வுக்குள்ளாவது நியாயமானது. ஒருவரை நடத்தைப் பிறழ்வுடையவர் என்று சீமான் சொன்னால் , அவரது நடத்தைப் பிறழ்வாகத் தெரியும் நடவடிக்கை ஆய்வுக்குள்ளாவது நியாயமானது.

சீமான் கட்சிக்கு 6% வாக்குக் கிடைத்த போது நீங்கள் சொன்னது: "இனி அவர்களில்லாமல் நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது!"( உடனே நிழலி யாழ் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாது என்று மறுக்க வேண்டியிருந்தது!)

பந்தியில் இடம் வேணுமெண்டால் விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப் படும் போதும் அதை எதிர் கொள்ள வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன முயலக் கூடாது!

(நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சீமான் குழு இழுத்து விட்டு, அதற்கு யாழ் தம்பிகள் நியாயம் கற்பித்த போது, இதே கரிசனை விசுகருக்கு எங்கே போனதென யோசிக்கிறேன், பதில் தெரியுமென்பதால் சிரித்து 🤣நகர்கிறேன்!)

தவறு நான் அப்படி  எங்கும் எழுதியதாக ஞாபகமில்லை

இனி நடக்காது என்று  எழுதியிருக்கலாம்

அடுத்தது

பெண்களை  இழுக்காதீர்கள் இழுக்காதீர்கள் என்றபடி

முடிந்ததை  இங்கே இழுத்து  விட்டதை  தான் குறிப்பிட்டேன்

மற்றும்படி  நான் யாழுக்கு  வருவதற்கும் நேரத்தை  செலவளிப்பதற்கும் ஒரு  நோக்குண்டு

அதற்காக  சிலவற்றை  கடந்து  போவதுண்டு

அது தப்பென்றாலும் செய்யவேண்டியுள்ளது

அது  தப்பென்று  உங்களுக்கு உறைத்தால் என்னை மன்னித்தருள்க....

ஏனெனில் அதைத்தான் தொடர்வேன்......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

தவறு நான் அப்படி  எங்கும் எழுதியதாக ஞாபகமில்லை

இனி நடக்காது என்று  எழுதியிருக்கலாம்

அடுத்தது

பெண்களை  இழுக்காதீர்கள் இழுக்காதீர்கள் என்றபடி

முடிந்ததை  இங்கே இழுத்து  விட்டதை  தான் குறிப்பிட்டேன்

மற்றும்படி  நான் யாழுக்கு  வருவதற்கும் நேரத்தை  செலவளிப்பதற்கும் ஒரு  நோக்குண்டு

அதற்காக  சிலவற்றை  கடந்து  போவதுண்டு

அது தப்பென்றாலும் செய்யவேண்டியுள்ளது

அது  தப்பென்று  உங்களுக்கு உறைத்தால் என்னை மன்னித்தருள்க....

ஏனெனில் அதைத்தான் தொடர்வேன்......

 

வேறு திரி பற்றி விரிவாக விவரிக்க விரும்பவில்லை! நீங்களே திரும்பிப் போய்ப் பார்க்கலாம் விசுகர்!

உங்கள் நோக்கம் காரணமாகவே  நீங்கள் இதை விட மோசமாக இழுத்து விடப் பட்ட திரிகளில் கள்ள மௌனம் சாதித்துக் கடந்து போனீர்கள் என்பதையே  நானும் மேலே சுட்டிக் காட்டியிருக்கிறேன்! அதே போல இங்கே திடீர் கரிசனைக்கும் அதே நோக்கம் காரணம்.

இதை யாழ் வாசகர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டுவது மட்டுமே என் நோக்கம்! உங்களைக் கட்டுப் படுத்துவதல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

எனது கருத்தும் இதே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் சம்மதம்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக நீதிபதிகள் வந்துவிட்டார்கள் ....... திரிக்கு 

இனி கண்ணகி மாதவிக்கு தீர்ப்பு கிடைக்குதோ இல்லையோ?

சிலப்திகரத்துக்கும் சீமான்தான் காரணம் என்று இங்கிருப்பவர்கள் 
நம்புமட்டும் திரியை போட்டு உருட்டுவதே எங்கள் மக்கள் சேவை!


திருமணம் முடிந்த பிறகுகூட 
உங்களுக்கு பிடிக்காவிடின் விவாகரத்து வாங்கி போக முடியும் என்றாலும் 
எவ்வளவுதான் விஜலயலெட்ட்சுமி காரக்ட்டர் கீழாக இருந்தாலும் 
சீமான் இறுதிவரை வாழவே வேண்டும் என்று 
பஞ்சாயத்து ......அதாவது மக்கள் ஜனநாயக .... உலக விஞ்ஞான ...தொல்லியல் நிபுணத்துவ ...
அறிஞர்கள் அரகோட்ப்பாட்டு பஞ்சாயத்து தீர்ப்பு என்பதை இங்கே எல்லோருக்கும் அறிய தருகிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

ஜனநாயக நீதிபதிகள் வந்துவிட்டார்கள் ....... திரிக்கு 

இனி கண்ணகி மாதவிக்கு தீர்ப்பு கிடைக்குதோ இல்லையோ?

சிலப்திகரத்துக்கும் சீமான்தான் காரணம் என்று இங்கிருப்பவர்கள் 
நம்புமட்டும் திரியை போட்டு உருட்டுவதே எங்கள் மக்கள் சேவை!


திருமணம் முடிந்த பிறகுகூட 
உங்களுக்கு பிடிக்காவிடின் விவாகரத்து வாங்கி போக முடியும் என்றாலும் 
எவ்வளவுதான் விஜலயலெட்ட்சுமி காரக்ட்டர் கீழாக இருந்தாலும் 
சீமான் இறுதிவரை வாழவே வேண்டும் என்று 
பஞ்சாயத்து ......அதாவது மக்கள் ஜனநாயக .... உலக விஞ்ஞான ...தொல்லியல் நிபுணத்துவ ...
அறிஞர்கள் அரகோட்ப்பாட்டு பஞ்சாயத்து தீர்ப்பு என்பதை இங்கே எல்லோருக்கும் அறிய தருகிறோம். 

தீர்ப்பு யார் எழுதியது? படுக்கையறை விவகாரத்திற்கெல்லாம் தீர்ப்பு எழுதுவதும், விதி வைப்பதும்  வலது சாரிக் கட்டுப் பெட்டிகளின் வேலையல்லவா?😎

"யார் குற்றம் செய்யாதவனோ அவன் மரிய மதலேனாள் மீது முதற்கல்லை எறியட்டும்!" என்றார் 2000 ஆண்டுகள் முன்பு வாழந்த ஒரு சோசலிஸ்ட்!

சீமானும் தம்பிகளும் கல் எறிந்த போது இதை நினைத்திருக்க வேண்டுமென்று மட்டுமே சொல்லப் படுகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லு கொடுக்காம போனா, கடையை பூட்டின பிறகு, பில்லை தூக்கிட்டு காலெக்சன் கிளிம்பிடுவாங்க....😁

சீமான் 5 லட்ச்சம், ஸ்டாலின் கிட்ட கொடுத்தாரு, எனக்கு ஒரு ரூபா கூட கொடுக்கவில்லை என்று கோபப்பட்டார். இவருக்கு தேவை பணம். 😁

இவர் போலீசுக்கு போக மாட்டார், போவது போல காட்டி பணம் பறிக்க தான் முயல்வார்.

இவர் சீமானிடம் பணம் இல்லை என்று, ஆளை கழட்டி விட்டு, பெங்களூரு போய், அங்கே ஒருவரை பிடித்து கலியாணம் வரை சென்றார். அதுவும் இவரது attitude காரணமாக குழம்ப, வேறு பல இடம் போய்....பின்னர்  சீமான் மேல் தாக்குதல் தொடங்கினார்.

திமுக, அரசியல் ரீதியாக ஏதாவது செய்யும், அதன் மூலம் பணம் வரும் என்று நினைக்கிறார்.

காரம் சாப்பிட்டா, விக்கல் வரும், விஜயலெஸ்சுமிக்கு உதவினா சிக்கல் வரும்.... சொல்வது திமுகவின் பாலிமர் டிவி. 🤗

 

சினிமா எனும் கனவுத்தொழிற்சாலை 
சீரழிக்கும் பெண்களின் எண்ணிக்கை இங்கு அமெரிக்காவிலேயே 
பல லட்ஷம்.

இதற்கு அடிப்படை காரணம் 
இவர்கள் வெளியுலக அறிவு அற்ற வெறும் 16-18 வயதுக்கு உட்பட்ட காலத்திலேயே 
கனவுத்தொழிற்சாலைக்கு வேலைக்கு போகிறார்கள்.

பணம் புகழ் வந்து கொட்டும் என்ற ஆசை எல்லோராலும் கொடுக்கப்படுகிறது 
சினிமா என்பது 95வீதம் காமம் சார்ந்தது 5 வீதம் கலை சார்ந்து இருந்தாலும் 
அவை குப்பைக்குத்தான் தகுதி என்று பார்வையாளர்கள் ஆகிய எங்களாலயே தூக்கி 
எறியப்படுகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. 

இவர்களின் அழகும் காமமும் களையப்பட்ட பின்பு 
கறிவேப்பிலை ஆகும்போது .... வெளியுலகில் கால் பாதிக்க 
இவர்களுக்கு வெளியுலக அறிவு என்பது 1 வீதம் கூட இல்லை 
வேறு எந்த தொழிலோ கல்வி அறிவோ கூட பலருக்கு இல்லை 

சிலருக்கு திரும்பி போவதற்கு குடும்பம் இருந்தால் 
அதிர்ஷ்ட்டம் என்றுதான் எண்ணுகிறேன் 
இடையில் இவர்களுக்கு கிடைக்கும் சினிமா அறிமுகத்தால் 
சிலர் குடும்பங்களையும் மதிக்காது நடந்து மீண்டும் போக முடியாத நிலையை தோற்றுவிக்கிறார்கள் 

தமிழ் சினிமா முன்னணி நடிகை நயன்தார ( இன்று அதிக அளவு சம்பளம் வாங்குபவர் என்று எண்ணுகிறேன்)
இவரின் கதையே கறிவேப்பிலை கதைதான் எனும்போது 
பாட்டுக்கு டான்ஸ் அடபோனவர்கள் நிலை என்னவாக இருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

 


திருமணம் முடிந்த பிறகுகூட 
உங்களுக்கு பிடிக்காவிடின் விவாகரத்து வாங்கி போக முடியும் என்றாலும் 
எவ்வளவுதான் விஜலயலெட்ட்சுமி காரக்ட்டர் கீழாக இருந்தாலும் 
சீமான் இறுதிவரை வாழவே வேண்டும் என்று 
பஞ்சாயத்து ......அதாவது மக்கள் ஜனநாயக .... உலக விஞ்ஞான ...தொல்லியல் நிபுணத்துவ ...
அறிஞர்கள் அரகோட்ப்பாட்டு பஞ்சாயத்து தீர்ப்பு என்பதை இங்கே எல்லோருக்கும் அறிய தருகிறோம். 

இங்கே யாரும் தீர்ப்பு சொல்ல வரவில்லை மருதர்,

மேலே தெளிவாக வல்லவனுக்கான பதிலில் சொல்லி உள்ளேன், எமக்கு புலப்பட்ட மேற்கத்தைய சட்டம் போலன்றி, இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி உடன் வாழ்ந்தால் இங்கு போல இலகுவாக பிரிந்து போக முடியாது போலுள்ளது என்பதை.

ஆகவே இந்தியாவை பொறுத்தவரை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து கூடி வாழ்ந்து விட்டால், திருமணம் செய்து பின் விவாகரத்துதான் செய்ய வேண்டும் போல இருக்கிறது 🤦‍♂️. அதுதான் ஒரே வழி போலுள்ளது.

ஆகவே மேற்கத்தேய கண்ணாடிகளினூடு இதை பார்த்து கருத்தாளர் மீது ஏரிந்து விழுவதில் ஒரு பயனும் இல்லை.

வடிவாக கவனியுங்கள் இங்கே சீமான் மீது கொடுக்கபட்டிருப்பது என்னுடன் மனமொத்து உல்லாசமாக இருந்தார் என்ற புகார் அல்ல,

என்னை கல்யாணம் செய்வதாக கூறி எமாற்றி விட்டார் என்பதே புகார்.

ஒரு அராசியல்வாதி ஏமாற்றுகிறார், என்ற புகாரை தூய அரசியலை விரும்பும் எளிய பிள்ளைகள் யாரும் “அந்தரங்கம்” என கடந்து போக மாட்டார்கள். 

நீங்களும் அப்படித்தானே?

பிகு

அதுவும் நாங்கள் யார்? 

இருக்கும் கட்டிடத்தை வெள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் அல்ல, அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட போகும் தூய அரசியல் புரட்சியாளர்கள் என்கிறார் சீமான். 

அப்படி பட்ட தூய அரசியல் தலைவன் மீது  இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அதை அலசுவதுதானே தூய அரசியல் பேசும் எளிய பிள்ளைகளின் முதல் கடமை?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

இங்கே யாரும் தீர்ப்பு சொல்ல வரவில்லை மருதர்,

மேலே தெளிவாக வல்லவனுக்கான பதிலில் சொல்லி உள்ளேன், எமக்கு புலப்பட்ட மேற்கத்தைய சட்டம் போலன்றி, இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி உடன் வாழ்ந்தால் இங்கு போல இலகுவாக பிரிந்து போக முடியாது போலுள்ளது என்பதை.

ஆகவே இந்தியாவை பொறுத்தவரை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து கூடி வாழ்ந்து விட்டால், திருமணம் செய்து பின் விவாகரத்துதான் செய்ய வேண்டும் போல இருக்கிறது 🤦‍♂️. அதுதான் ஒரே வழி போலுள்ளது.

ஆகவே மேற்கத்தேய கண்ணாடிகளினூடு இதை பார்த்து கருத்தாளர் மீது ஏரிந்து விழுவதில் ஒரு பயனும் இல்லை.

வடிவாக கவனியுங்கள் இங்கே சீமான் மீது கொடுக்கபட்டிருப்பது என்னுடன் மனமொத்து உல்லாசமாக இருந்தார் என்ற புகார் அல்ல,

என்னை கல்யாணம் செய்வதாக கூறி எமாற்றி விட்டார் என்பதே புகார்.

ஒரு அராசியல்வாதி ஏமாற்றுகிறார், என்ற புகாரை தூய அரசியலை விரும்பும் எளிய பிள்ளைகள் யாரும் “அந்தரங்கம்” என கடந்து போக மாட்டார்கள். 

நீங்களும் அப்படித்தானே?

பிகு

அதுவும் நாங்கள் யார்? 

இருக்கும் கட்டிடத்தை வெள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் அல்ல, அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட போகும் தூய அரசியல் புரட்சியாளர்கள் என்கிறார் சீமான். 

அப்படி பட்ட தூய அரசியல் தலைவன் மீது  இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அதை அலசுவதுதானே தூய அரசியல் பேசும் எளிய பிள்ளைகளின் முதல் கடமை?

 

 

 

இதில் சீமானை பற்றி அலச என்ன இருக்கிறது?
இது 20 வருடத்துக்கு முன்னைய கதை 

வேண்டியதெல்லாம் அலசி முடிந்தது என்பதை விடவும் 
நீதிமன்று தீர்ப்பளித்து முடிந்த விடயம் 


அப்ப அப்ப வியலடிச்சுமிக்கு பண கஸ்ட்ரம் 
மற்றவர்களால் ஏமாற்றம் வரும்போது 
இவர் இந்த சீமான் சீனை கடந்த 15 வருடமாக போட்டுவருகிறார் 

யாழில் மட்டும் எனக்கு தெரிய 10 திரி இருக்கிறது.

எங்களுக்கு என்ன வேலையா? வெட்டியா?
அலசினா போச்சு ......  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.