Jump to content

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

HemavandhanaPublished:June 21 2021, 13:32 [IST]

சென்னை: "கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டிக்கிட்டு வர்றார் சீமான்.. ஆனால், இதுவரைக்கும் சீமான் என் விஷயத்துக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருக்கார்.. அதனால் முதல்வர் ஸ்டாலின்தான், சீமான் விஷயத்தில் தலையிட்டு, எனக்கு ஒரு நியாயம் பெற்று தர வேண்டும் வேண்டும்" என்று நடிகை விஜயலட்சுமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பள்ளி

விஜயலட்சுமி

அதுதான் சமீப காலமாக, பத்மா சேஷாத்ரி பள்ளி, சிவசங்கர் பாபா முதல் மாஜி அமைச்சர் மணிகண்டன் வரை கைது நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது.. இதுதான் பெண்களுக்கு தைரியத்தையும் நம்பிக்கையையும் தந்து வருகிறது.. அந்த வகையில் நடிகை விஜயலட்சுமிக்கும், புது நம்பிக்கை பிறந்துள்ளது.. தன்னுடைய பிரச்சனைக்கு இந்த ஆட்சியில் நிச்சயம் ஒரு வழி கிடைக்கும் என்ற முனைப்பில், திமுக அரசின் கதவை தட்டி உள்ளார்.

தமிழகம்

குற்றச்சாட்டு

தமிழகத்தில் சில வருடங்களுக்கு முன்பு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் தன்னை கல்யாணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக என்ற குற்றச்சாட்டை முன்வைத்தவர் நடிகை விஜயலட்சுமி... இதை பல முறை மீடியா முன்பு பகிரங்கமாகவே சொல்லி உள்ளார்.. புகார் தந்துள்ளார்.. அதேபோல, தனிப்பட்ட முறையில் வீடியோ வெளியிட்டும், சீமானை தாக்கி பேசியிருந்தார்.

அமைச்சர்

மணிகண்டன்

இப்போது, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டதை போல் தன்னுடைய புகாரில் சீமானை கைது செய்ய வேண்டும் என்று விஜயலட்சுமி மறுபடியும் வீடியோ வெளியிட்டு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:

குற்றச்சாட்டு

வீடியோ

'சீமான் அவர்களால் கடந்த 4 வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன்.. அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன். அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அமைச்சர் மணிகண்டன் கைதாகும் போது சீமான் ஏன் கைதாகவில்லை? நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்டும் ஏன் அவைகளின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 வருஷத்துக்கு முன்பு போலீஸில் புகார் துந்தேன்.. ஆனால், அந்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆதாரம்

திமுக

சீமானுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.. அதனால், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் தெரிவிக்க போகிறேன்.. இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் 10 வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

வருத்தம்

கர்த்தர்

கர்த்தரின் மறுபிறவி போல தன்னை காட்டி கொண்டு வருகிறார்.. இதுவரைக்கும் சீமான் வருத்தம் தெரிவிக்கவில்லை.. ஆமா, நான் தப்பு பண்ணிட்டேன்னு இதுவரைக்கும் வாய் திறந்து சொல்லவில்லை.. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்துட்டோமேன்னு கூட நினைக்காமல் அசால்ட்டா இருந்துட்டு வர்றார்.

பழிவாங்கல்

முதலமைச்சர்

திமுக இன்னைக்கு பழிவாங்கும் செயலில் ஈடுபடுகிறதுன்னு சொல்றாங்களே, அப்படின்னா நாம் தமிழர் கட்சியும் இன்னைக்கு இதைதான் பண்ணியிருக்காங்க.. சீமான் இன்னைக்கு எதை சுட்டிக் காட்டுகிறாரோ, அதைதான் இவ்வளவு காலம் நானும் சுட்டிக்காட்டிட்டு வர்றேன். அதனால், முதலமைச்சர் ஸ்டாலின், இந்த வழக்கு சம்பந்தமா நடவடிக்கை எடுக்கணும்னு நான் கேட்டுக்கறேன்.

பப்ளிசிட்டி

அதிமுக

நான் பப்ளிசிட்டிக்காக இதை சொல்லவில்லை.. என்னுடைய வழக்கு பெரிது.. இதை அதிமுகவை வைத்து அன்னைக்கு மூடிட்டாங்க.. அதிமுக ஆட்சியில் எனக்கு நியாயமே கிடைக்காமல் செய்தாங்க.. இன்னைக்கு வரைக்கும் அவருடைய ஆட்கள் என்னை அசிங்கமா பேசிட்டுத்தான் இருக்காங்க.

ஆட்சி

நியாயம்

இன்னைக்கு ஆட்சியில் இருப்பவர்கள், எல்லாவற்றிற்கும் ஒரு நியாயத்தை வழங்கிட்டு வரும்போது, ஒரு பெண்ணுடைய வாழ்க்கை கேவலம் கிடையாது, அது திமிரின் உச்சம் என்பதை காட்ட வேண்டும் என்று நான் கேட்டுக்கறேன்.. திமுகவில் இருக்கும் பெரியவங்க இந்த வீடியோவை பாருங்க.. யார் கிட்ட கொண்டு போய் சேர்க்கணுமோ, தயவுசெய்து சேர்த்துடுங்க. திமுக எனக்கு நியாயம் வாங்கி தரணும்... நம்பிக்கையா காத்துக்கிட்டு இருக்கேன்' என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர்

நடவடிக்கையா?

சமீப காலமாக முதல்வர் ஸ்டாலினுடன், சீமானுக்கு நல்ல இணக்கம் இருந்து வருகிறது.. இவர்களின் ஒவ்வொரு முறை சந்திப்பும், நட்பான பேச்சும் சோஷியல் மீடியாவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.. ஒருவேளை வரப்போகும் பஞ்சாயத்து தேர்தலில் நாம் தமிழருடன் திமுக கூட்டணி வைக்கக்கூடும் என்ற அளவுக்கு யூகங்களும் கிளம்பி வரும் நிலையில், சீமானுக்கு எதிரான இந்த வழக்கை திமுக கையில் எடுக்குமா? விஜயலட்சுமியின் கண்ணீர் கோரிக்கைக்கு என்ன பதில் சொல்ல போகிறது? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://tamil.oneindia.com/news/chennai/actress-vijayalakshmi-appeal-to-cm-mk-stalin-for-arrest-naam-tamizhar-party-seeman-424576.html 

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விஜய லட்சுமி… விசயம் இன்னும் முடியேல்லையா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!

ஸ்ராலின், உதய நிதி, அவங்க தாத்தா… எல்லாரும் இந்த விசயத்திலை….

பழம் திண்டு… கொட்டை போட்ட ஆக்கள்.

அவங்களிடம் நீதி கேட்கப் போகலாமா? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

குற்றச்சாட்டு

வீடியோ

'சீமான் அவர்களால் கடந்த 4 வருடங்களாக நான் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறேன்.. அதுவும் சமூக வலைத்தளங்களில் மூலம் மட்டுமே என்னுடைய குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றேன். அதனை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.. அமைச்சர் மணிகண்டன் கைதாகும் போது சீமான் ஏன் கைதாகவில்லை? நான் எத்தனையோ ஆதாரங்களை நான் வெளியிட்டும் ஏன் அவைகளின் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. 10 வருஷத்துக்கு முன்பு போலீஸில் புகார் துந்தேன்.. ஆனால், அந்த வழக்கிலும் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆதாரம்

திமுக

சீமானுக்கு எதிராக இந்த வழக்கில் என்னிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.. அதனால், இந்த ஆதாரங்கள் அனைத்தையும் திமுகவில் உள்ள மூத்த தலைவர்களிடம் தெரிவிக்க போகிறேன்.. இந்த வழக்கில் கிட்டத்தட்ட நான் 10 வருடங்களாக நியாயம் கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.. இந்த வழக்கில் திமுக சார்பில் இருந்து எனக்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் பிறக்கும்.

பொண்ணு பிழைக்க தெரிஞ்ச பொண்ணு 
பேமண்ட் கொஞ்சம் பெருசா இருக்கும் போலயே , அறை வாடகை கட்ட வக்கில்லாமல் நடுத்தெருவில் நின்று கூவும்போது சீமான் நல்லவர் இப்போது சீமானுக்கெதிராக நடவடிக்கை, பார்த்தும்மா இப்படித்தான் பச்சைத்தமிழனின் ரசிக குஞ்சுகள் உசுப்பேத்தி உடம்பை ரணகளப்படுத்தி விட்டு நடுவில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆனவை , ஊப்பிகள் வேறு தினுசான பேர்வழிகள், மகளீர் பாசறை செயலாளர் இடுப்பிலேயே பம்பரம் விட்ட எமகாதகனுகள் கும்மென்று இருக்கும் உங்களை கும்மியெடுத்து விடுவானுகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின், உதய நிதி, அவங்க தாத்தா… எல்லாரும் இந்த விசயத்திலை….

பழம் திண்டு… கொட்டை போட்ட ஆக்கள்.

அவங்களிடம் நீதி கேட்கப் போகலாமா? 😁

🤣 தமிழ் சினிமால சின்ன வில்லன பற்றி பெரிய வில்லனிடம் முறையிடும் சீன் வருமே அது போலத்தான் இதுவும்🤣.

6 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பொண்ணு பிழைக்க தெரிஞ்ச பொண்ணு 
பேமண்ட் கொஞ்சம் பெருசா இருக்கும் போலயே , அறை வாடகை கட்ட வக்கில்லாமல் நடுத்தெருவில் நின்று கூவும்போது சீமான் நல்லவர் இப்போது சீமானுக்கெதிராக நடவடிக்கை, பார்த்தும்மா இப்படித்தான் பச்சைத்தமிழனின் ரசிக குஞ்சுகள் உசுப்பேத்தி உடம்பை ரணகளப்படுத்தி விட்டு நடுவில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆயிட்டினம் , ஊப்பிகள் வேறு தினுசான பேர்வழிகள், மகளீர் பாசறை செயலாளர் இடுப்பிலேயே பம்பரம் விட்ட எமகாதகனுகள் கும்மென்று இருக்கும் உங்களை கும்மியெடுத்து விடுவானுகள்  

ஒருக்கா அப்பீடீக்கா சொல்லுது, மறுக்கா இப்டீக்கா சொல்லுது, மறுபடியும் அப்டீக்கா சொல்லுது.

இதில பொறுத்த நேரத்தில அண்ணன் ஹரி நாடார வேற உள்ள தூக்கி வச்சிட்டாங்க.

ஆனா நிச்சயம் இத வச்சு திருட்டு திமுக செம அரசியல் லாபம் பாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லு கொடுக்காம போனா, கடையை பூட்டின பிறகு, பில்லை தூக்கிட்டு காலெக்சன் கிளிம்பிடுவாங்க....😁

சீமான் 5 லட்ச்சம், ஸ்டாலின் கிட்ட கொடுத்தாரு, எனக்கு ஒரு ரூபா கூட கொடுக்கவில்லை என்று கோபப்பட்டார். இவருக்கு தேவை பணம். 😁

இவர் போலீசுக்கு போக மாட்டார், போவது போல காட்டி பணம் பறிக்க தான் முயல்வார்.

இவர் சீமானிடம் பணம் இல்லை என்று, ஆளை கழட்டி விட்டு, பெங்களூரு போய், அங்கே ஒருவரை பிடித்து கலியாணம் வரை சென்றார். அதுவும் இவரது attitude காரணமாக குழம்ப, வேறு பல இடம் போய்....பின்னர்  சீமான் மேல் தாக்குதல் தொடங்கினார்.

திமுக, அரசியல் ரீதியாக ஏதாவது செய்யும், அதன் மூலம் பணம் வரும் என்று நினைக்கிறார்.

காரம் சாப்பிட்டா, விக்கல் வரும், விஜயலெஸ்சுமிக்கு உதவினா சிக்கல் வரும்.... சொல்வது திமுகவின் பாலிமர் டிவி. 🤗

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சம்வத்தினடிப்படையில் சீமான்மீது வழக்கு தொடுக்கிறார்களோ கைது செய்கிறார்களோ என்பதெல்லாம் அவர்களது சட்டம் அரசியல் சம்பந்தமான பிரச்சனைகள் , ஆனால்

பத்மா சேஷாத்திரி பள்ளி, சிவங்கர்பாபா விஷயங்களும் உங்கள் விஷயமும் ஒன்றல்ல விஜயலட்சுமி.

அவை பாதிக்கப்பட்ட பெண்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்ட பாலியல் சீண்டல்கள் என்று பாதிக்கப்பவர்களால் தொடுக்கப்பட்ட வழக்கு.

ஆனால் மாஜி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி விஷயமும் உங்கள் விஷயமும் ஒன்றேதான், நீங்கள் இருவரும் விரும்பியே உங்கள் தனிப்பட்டவாழ்வில் அவர்களுடன் நெருக்கத்தை பேணினீர்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானவர்கள்.

திருமணம் செய்யவில்லை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கலாச்சாரம் கண்ணியம் காக்கும் நீங்கள், திருமணத்தின் முன்னர் ரகசிய வாழ்வை வைத்திருந்தது மட்டும் கலாச்சாரம் கண்ணியத்திற்குரியதா?

சாந்தினியும் நீங்களும் நிச்சயமாக இந்த சம்பவங்களில் பாதிக்குமேல் பங்காளிகள்.

சிலமாதங்கள் முன்னாடி தற்கொலை செய்யபோறேன் என்றீர்கள், பின்பு மறுபடியும் நாளைக்கு சாகபோறேன் ரஜனி சார் உதவி செய்யவேண்டும் என்று செயற்கை சுவாச குளாய்களை பொருத்தியபடி ஆஸ்பத்திரியில் படுத்திருந்தீர்கள்,

ரஜனி உதவி செய்ததா தெரியவில்லை ஆனால் உங்கள் நிலமையை பார்த்து பரிதாபபட்டு அங்கே வந்து உதவி செய்த ரவிபிரகாஷ் எனும் நடிகர்மீதே பின்பு பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி புகார் கொடுத்தீர்கள். 

அந்த சம்பவம் முடிந்ததும் நீங்களும் நடிகை வனிதாவும் நடமாடும் நகைகடை ஹரிநாடாருடன் நெருக்கத்தை பேணியதாகவும் தமிழக ஊடகங்களில் செய்திகள் உண்டு . 

அவர் உதவியுடன் படவாய்ப்பே இல்லாத நீங்கள்  மாதவாடகையே லட்சங்களில் செலவு செய்து எப்படி இருந்தீர்கள் என்று கேள்வியும், ஹரிநாடார்  கைதின் பின்னர் 3 மாத வாடகை பாக்கியால் விரட்டியடிக்கப்பட்டீர்கள் என்றும் தமிழக ஊடகங்களில் செய்திகள் சாரை சாரையாக வந்திருக்கிறது.

கூட்டி கழித்து பார்த்தால் எப்போ எல்லாம் பண கஷ்டம் வருகிறதோ அப்போ மட்டுமே நீங்கள் பரபரப்பை கிளப்புகிறீர்கள், சீமான்மீது கொந்தளிக்கிறீர்கள்  என்பதை எளிதில் எல்லோரும் புரிந்து கொள்வார்கள், பட வாய்ப்புகளும் ஹரிநாடார் பெரும் புள்ளிகளின் நட்பும் இருந்துவிட்டால் சீமான் கதையை பற்றி பேசமாட்டீர்கள் என்பதும் கடந்தகால வரலாறு.

இன்றைய முதல்வர் ஸ்டாலின்மீதுகூட அன்றைய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான பெப்சி உமா, பாத்திமா பாபு போன்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் என்று புகார்கள் உண்டு அவர் யோக்கியமே அந்த ரேஞ்சில் இருக்கு நீங்கள் அவரிடம்போய் நியாயம் கேக்கிறீர்கள்?

கண்டிப்பாக இது சீமானுக்கு வக்காலத்து வாங்கவோ ஆதரவாகவோ செய்யும் பதிவல்ல, உங்கள் குற்றசாட்டுக்களில் நேர்மை தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, valavan said:

கண்டிப்பாக இது சீமானுக்கு வக்காலத்து வாங்கவோ ஆதரவாகவோ செய்யும் பதிவல்ல, உங்கள் குற்றசாட்டுக்களில் நேர்மை தன்மை இல்லை என்பதை சுட்டிக்காட்ட மட்டுமே இது.

👆🏼👌

34 minutes ago, valavan said:

இன்றைய முதல்வர் ஸ்டாலின்மீதுகூட அன்றைய தொலைக்காட்சி அறிவிப்பாளர்களான பெப்சி உமா, பாத்திமா பாபு போன்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் என்று புகார்கள் உண்டு அவர் யோக்கியமே அந்த ரேஞ்சில் இருக்கு நீங்கள் அவரிடம்போய் நியாயம் கேக்கிறீர்கள்?

 

பாத்திமா பாபுவுக்கு நிகழ்ந்த வன்கொடுமை நெருக்கடிக்கும் மேலானது. பெப்சி உமாவுக்கு நெருக்கடி இருந்ததாக இன்றுதான் கேள்வி படுகிறேன்.

36 minutes ago, valavan said:

ஆனால் மாஜி அமைச்சர் மணிகண்டன் நடிகை சாந்தினி விஷயமும் உங்கள் விஷயமும் ஒன்றேதான், நீங்கள் இருவரும் விரும்பியே உங்கள் தனிப்பட்டவாழ்வில் அவர்களுடன் நெருக்கத்தை பேணினீர்கள், அதனால் ஏற்பட்ட விளைவுகளுக்கும் நீங்களே பொறுப்பானவர்கள்.

திருமணம் செய்யவில்லை ஏமாற்றிவிட்டார் என்று சொல்லி கலாச்சாரம் கண்ணியம் காக்கும் நீங்கள், திருமணத்தின் முன்னர் ரகசிய வாழ்வை வைத்திருந்தது மட்டும் கலாச்சாரம் கண்ணியத்திற்குரியதா?

இந்தியாவில் சட்டம் கொஞ்சம் வித்தியாசம் என நினைக்கிறேன்.

மேற்குலகில்…ஆம் கல்யாணம் முடிப்பதாக சொன்னேன். ஒன்றாக வாழ்ந்தோம்… இப்போ கல்யாணம் முடிக்கும் முடிவை மாற்றி விட்டேன் என்று சொன்னால்… சட்டம் அதை ஏற்று கொள்ளும்.

ஆனால் இந்தியாவில் கல்யாணம் முடிப்பதாக வாக்குறுதி தந்து, என்னுடன் கூட வாழ்ந்து பின் வாக்குறுதியை மீறினார் என்பது ஒரு வகையான குற்றம் என்றே நினைக்கிறேன்.

நேற்றைய மணி கண்டன் பற்றிய செய்தியில் நீதிபதி இதை சுட்டி காட்டி, எம் ஐ ஆர் ஐ மாற்றி எழுதும் படி பொலிசுக்கு சொல்லி உள்ளார் என போடப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கருத்து 

விஜயலக்சுமியோடு சீமான் கணவன் மனைவியாக வாழ்ந்தார் என்றே நினைக்கிறேன்.

கல்யாணம் பண்ணி கொள்வதாக சொன்னாரா என்பது தெளிவில்லை.

விஜயலக்சுமி தருணம் பார்த்து மாறி மாறி கதைக்கிறார் என்பது வெளிப்படை. 

இது பணத்துக்காக என்றே நினைகிறேன்.

ஆனால் சீமான் மீது 100%மாக அவதூறு செய்கிறார் என்பதும் உண்மையல்ல.

Link to comment
Share on other sites

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, நிழலி said:

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

இது தனியே ஒருவரின் அந்தரங்கம் மட்டும் இல்லை. இதில் ஒரு அரசியல்வாதியின் கண்ணியம், நம்பகத்தன்மை,  என்பனவும் சம்பந்தபட்டுள்ளன. ஒரு அரசியல் தலைவரின் அரசியலை எடை போட இவற்றை ஆராய்வது இன்றி அமையாதது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தமக்கெதிராகப் பேசுபவர் பெண் என்றாலே அவர் மீது "நடத்தை" தொடர்பான குற்றச்சாட்டை வதந்தியாகப் கிளப்பி விடும் ஒரு அரசியல் வாதி பற்றிய பெண் விவகாரத்தை அலசுவதில் தவறில்லை! (அனந்தி சசிதரன்  பற்றிய செய்தி உதாரணம்!)

Link to comment
Share on other sites

24 minutes ago, Justin said:

 தமக்கெதிராகப் பேசுபவர் பெண் என்றாலே அவர் மீது "நடத்தை" தொடர்பான குற்றச்சாட்டை வதந்தியாகப் கிளப்பி விடும் ஒரு அரசியல் வாதி பற்றிய பெண் விவகாரத்தை அலசுவதில் தவறில்லை! (அனந்தி சசிதரன்  பற்றிய செய்தி உதாரணம்!)

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

அதுக்குத்தான் இன்னொரு பெண்ணையும் இதற்குள் இழுத்து  விட்டிருக்கோறோம் இல்ல....???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

நிழலி,

இதை ஆங்கிலத்தில் எழுதினால் மக்கள் கடுப்பாக கூடும் என்பதால் கடந்த பதிவில் எழுதவில்லை. பத்திரிகை உலகில் அடிப்படை test ஒன்று உள்ளது. ஒருவரின் அந்தரங்கத்தை எழுத முன் இந்த test பிரயோகிப்பார்கள்.

அந்த டெஸ்டானது:

Is it in the public interest to publish this story? Or is it a story in which the public are interested ?

இந்த செய்தி மக்கள் நலன் சம்பந்த பட்டதா? அல்லது வெறுமனே மக்கள் அறிய விரும்புபதா (கொசிப்பா)?

ஒரு அரசியல் தலைவரின் மீதான மக்களின் நோக்கு, நம்பிக்கை அவர் தனிவாழ்வோடு பிண்ணி பிணைந்தது. குறிப்பாக இந்த குற்றசாட்டுகளை பற்றி அவர் ஒரு தகுந்த தன்னிலை விளக்கம் கொடுக்காத போது.

 

 

கிளிண்டன் மொனிக்கா லிவின்சி வழக்கை ஏன் இவ்வாறு கடந்து போகவில்லை?

ஒரே காரணம்தான்.

அனந்தி மீது வாறியிறைக்கப்பட்டது சேறு. அங்கே பாதிக்க பட்டதாக எந்த ஆணும் முறையிடவில்லை. ஆகவே அவை ஆதாரமற்ற வெறும் வதந்திகள்.

ஆனா இங்கே ஒருவர் பொலீசில் முறைபாடு கொடுத்துள்ளார். 

உண்மையில் உங்களுக்கும் இரெண்டுக்குமான வித்தியாசம் விளங்கவில்லையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, நிழலி said:

அதாவது அவர் செய்வதாக நீங்கள் குறிப்பிடும் தகாத செயலை நாமும் செய்ய வேண்டும் என்று?

மேலே கோசான் சொன்ன கருத்து அரைவாசிக்காரணம், எனவே ஆமோதித்திருக்கிறேன்!

அடுத்த பாதிக் காரணம்: hypocrisy என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். அது முன்னே வரத் துடிக்கும் தலைவர்கள், பிரபலங்களாக இருக்கும் போது அவசியம். ஒருவனைக் கள்வன் என்று சீமான் சொன்னால், சீமானின்  பண வரவு ஆய்வுக்குள்ளாவது நியாயமானது. ஒருவரை நடத்தைப் பிறழ்வுடையவர் என்று சீமான் சொன்னால் , அவரது நடத்தைப் பிறழ்வாகத் தெரியும் நடவடிக்கை ஆய்வுக்குள்ளாவது நியாயமானது.

31 minutes ago, விசுகு said:

அதுக்குத்தான் இன்னொரு பெண்ணையும் இதற்குள் இழுத்து  விட்டிருக்கோறோம் இல்ல....???

சீமான் கட்சிக்கு 6% வாக்குக் கிடைத்த போது நீங்கள் சொன்னது: "இனி அவர்களில்லாமல் நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது!"( உடனே நிழலி யாழ் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாது என்று மறுக்க வேண்டியிருந்தது!)

பந்தியில் இடம் வேணுமெண்டால் விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப் படும் போதும் அதை எதிர் கொள்ள வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன முயலக் கூடாது!

(நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சீமான் குழு இழுத்து விட்டு, அதற்கு யாழ் தம்பிகள் நியாயம் கற்பித்த போது, இதே கரிசனை விசுகருக்கு எங்கே போனதென யோசிக்கிறேன், பதில் தெரியுமென்பதால் சிரித்து 🤣நகர்கிறேன்!)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Justin said:

மேலே கோசான் சொன்ன கருத்து அரைவாசிக்காரணம், எனவே ஆமோதித்திருக்கிறேன்!

அடுத்த பாதிக் காரணம்: hypocrisy என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியது அவசியம். அது முன்னே வரத் துடிக்கும் தலைவர்கள், பிரபலங்களாக இருக்கும் போது அவசியம். ஒருவனைக் கள்வன் என்று சீமான் சொன்னால், சீமானின்  பண வரவு ஆய்வுக்குள்ளாவது நியாயமானது. ஒருவரை நடத்தைப் பிறழ்வுடையவர் என்று சீமான் சொன்னால் , அவரது நடத்தைப் பிறழ்வாகத் தெரியும் நடவடிக்கை ஆய்வுக்குள்ளாவது நியாயமானது.

சீமான் கட்சிக்கு 6% வாக்குக் கிடைத்த போது நீங்கள் சொன்னது: "இனி அவர்களில்லாமல் நிகழ்ச்சிகள் நடக்கக் கூடாது!"( உடனே நிழலி யாழ் அப்படியெல்லாம் நடந்து கொள்ளாது என்று மறுக்க வேண்டியிருந்தது!)

பந்தியில் இடம் வேணுமெண்டால் விமர்சனங்கள் பொது வெளியில் வைக்கப் படும் போதும் அதை எதிர் கொள்ள வேண்டும். நோகாமல் நொங்கு தின்ன முயலக் கூடாது!

(நான் குறிப்பிட்ட பெண்ணின் பெயரை சீமான் குழு இழுத்து விட்டு, அதற்கு யாழ் தம்பிகள் நியாயம் கற்பித்த போது, இதே கரிசனை விசுகருக்கு எங்கே போனதென யோசிக்கிறேன், பதில் தெரியுமென்பதால் சிரித்து 🤣நகர்கிறேன்!)

தவறு நான் அப்படி  எங்கும் எழுதியதாக ஞாபகமில்லை

இனி நடக்காது என்று  எழுதியிருக்கலாம்

அடுத்தது

பெண்களை  இழுக்காதீர்கள் இழுக்காதீர்கள் என்றபடி

முடிந்ததை  இங்கே இழுத்து  விட்டதை  தான் குறிப்பிட்டேன்

மற்றும்படி  நான் யாழுக்கு  வருவதற்கும் நேரத்தை  செலவளிப்பதற்கும் ஒரு  நோக்குண்டு

அதற்காக  சிலவற்றை  கடந்து  போவதுண்டு

அது தப்பென்றாலும் செய்யவேண்டியுள்ளது

அது  தப்பென்று  உங்களுக்கு உறைத்தால் என்னை மன்னித்தருள்க....

ஏனெனில் அதைத்தான் தொடர்வேன்......

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

தவறு நான் அப்படி  எங்கும் எழுதியதாக ஞாபகமில்லை

இனி நடக்காது என்று  எழுதியிருக்கலாம்

அடுத்தது

பெண்களை  இழுக்காதீர்கள் இழுக்காதீர்கள் என்றபடி

முடிந்ததை  இங்கே இழுத்து  விட்டதை  தான் குறிப்பிட்டேன்

மற்றும்படி  நான் யாழுக்கு  வருவதற்கும் நேரத்தை  செலவளிப்பதற்கும் ஒரு  நோக்குண்டு

அதற்காக  சிலவற்றை  கடந்து  போவதுண்டு

அது தப்பென்றாலும் செய்யவேண்டியுள்ளது

அது  தப்பென்று  உங்களுக்கு உறைத்தால் என்னை மன்னித்தருள்க....

ஏனெனில் அதைத்தான் தொடர்வேன்......

 

வேறு திரி பற்றி விரிவாக விவரிக்க விரும்பவில்லை! நீங்களே திரும்பிப் போய்ப் பார்க்கலாம் விசுகர்!

உங்கள் நோக்கம் காரணமாகவே  நீங்கள் இதை விட மோசமாக இழுத்து விடப் பட்ட திரிகளில் கள்ள மௌனம் சாதித்துக் கடந்து போனீர்கள் என்பதையே  நானும் மேலே சுட்டிக் காட்டியிருக்கிறேன்! அதே போல இங்கே திடீர் கரிசனைக்கும் அதே நோக்கம் காரணம்.

இதை யாழ் வாசகர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டுவது மட்டுமே என் நோக்கம்! உங்களைக் கட்டுப் படுத்துவதல்ல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

எனக்கு சீமானின் அரசியல் கொள்கைகளில் உடன்பாடு இல்லாவிடினும் இவ்வாறான சேறடிப்புகளைக் கொண்ட செய்திகளுக்கு எந்த ஆதரவும் இல்லை. இருவரின் அந்தரங்களை பாதுக்காக்க முடியாத ஒருவரின் கொச்சைத்தனமான நடவடிக்கைகளுக்கு யாழ் களமும் மேடையாக அமைவதை தவிர்ப்பதே நல்லது..

எனது கருத்தும் இதே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் சம்மதம்!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக நீதிபதிகள் வந்துவிட்டார்கள் ....... திரிக்கு 

இனி கண்ணகி மாதவிக்கு தீர்ப்பு கிடைக்குதோ இல்லையோ?

சிலப்திகரத்துக்கும் சீமான்தான் காரணம் என்று இங்கிருப்பவர்கள் 
நம்புமட்டும் திரியை போட்டு உருட்டுவதே எங்கள் மக்கள் சேவை!


திருமணம் முடிந்த பிறகுகூட 
உங்களுக்கு பிடிக்காவிடின் விவாகரத்து வாங்கி போக முடியும் என்றாலும் 
எவ்வளவுதான் விஜலயலெட்ட்சுமி காரக்ட்டர் கீழாக இருந்தாலும் 
சீமான் இறுதிவரை வாழவே வேண்டும் என்று 
பஞ்சாயத்து ......அதாவது மக்கள் ஜனநாயக .... உலக விஞ்ஞான ...தொல்லியல் நிபுணத்துவ ...
அறிஞர்கள் அரகோட்ப்பாட்டு பஞ்சாயத்து தீர்ப்பு என்பதை இங்கே எல்லோருக்கும் அறிய தருகிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

ஜனநாயக நீதிபதிகள் வந்துவிட்டார்கள் ....... திரிக்கு 

இனி கண்ணகி மாதவிக்கு தீர்ப்பு கிடைக்குதோ இல்லையோ?

சிலப்திகரத்துக்கும் சீமான்தான் காரணம் என்று இங்கிருப்பவர்கள் 
நம்புமட்டும் திரியை போட்டு உருட்டுவதே எங்கள் மக்கள் சேவை!


திருமணம் முடிந்த பிறகுகூட 
உங்களுக்கு பிடிக்காவிடின் விவாகரத்து வாங்கி போக முடியும் என்றாலும் 
எவ்வளவுதான் விஜலயலெட்ட்சுமி காரக்ட்டர் கீழாக இருந்தாலும் 
சீமான் இறுதிவரை வாழவே வேண்டும் என்று 
பஞ்சாயத்து ......அதாவது மக்கள் ஜனநாயக .... உலக விஞ்ஞான ...தொல்லியல் நிபுணத்துவ ...
அறிஞர்கள் அரகோட்ப்பாட்டு பஞ்சாயத்து தீர்ப்பு என்பதை இங்கே எல்லோருக்கும் அறிய தருகிறோம். 

தீர்ப்பு யார் எழுதியது? படுக்கையறை விவகாரத்திற்கெல்லாம் தீர்ப்பு எழுதுவதும், விதி வைப்பதும்  வலது சாரிக் கட்டுப் பெட்டிகளின் வேலையல்லவா?😎

"யார் குற்றம் செய்யாதவனோ அவன் மரிய மதலேனாள் மீது முதற்கல்லை எறியட்டும்!" என்றார் 2000 ஆண்டுகள் முன்பு வாழந்த ஒரு சோசலிஸ்ட்!

சீமானும் தம்பிகளும் கல் எறிந்த போது இதை நினைத்திருக்க வேண்டுமென்று மட்டுமே சொல்லப் படுகிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லு கொடுக்காம போனா, கடையை பூட்டின பிறகு, பில்லை தூக்கிட்டு காலெக்சன் கிளிம்பிடுவாங்க....😁

சீமான் 5 லட்ச்சம், ஸ்டாலின் கிட்ட கொடுத்தாரு, எனக்கு ஒரு ரூபா கூட கொடுக்கவில்லை என்று கோபப்பட்டார். இவருக்கு தேவை பணம். 😁

இவர் போலீசுக்கு போக மாட்டார், போவது போல காட்டி பணம் பறிக்க தான் முயல்வார்.

இவர் சீமானிடம் பணம் இல்லை என்று, ஆளை கழட்டி விட்டு, பெங்களூரு போய், அங்கே ஒருவரை பிடித்து கலியாணம் வரை சென்றார். அதுவும் இவரது attitude காரணமாக குழம்ப, வேறு பல இடம் போய்....பின்னர்  சீமான் மேல் தாக்குதல் தொடங்கினார்.

திமுக, அரசியல் ரீதியாக ஏதாவது செய்யும், அதன் மூலம் பணம் வரும் என்று நினைக்கிறார்.

காரம் சாப்பிட்டா, விக்கல் வரும், விஜயலெஸ்சுமிக்கு உதவினா சிக்கல் வரும்.... சொல்வது திமுகவின் பாலிமர் டிவி. 🤗

 

சினிமா எனும் கனவுத்தொழிற்சாலை 
சீரழிக்கும் பெண்களின் எண்ணிக்கை இங்கு அமெரிக்காவிலேயே 
பல லட்ஷம்.

இதற்கு அடிப்படை காரணம் 
இவர்கள் வெளியுலக அறிவு அற்ற வெறும் 16-18 வயதுக்கு உட்பட்ட காலத்திலேயே 
கனவுத்தொழிற்சாலைக்கு வேலைக்கு போகிறார்கள்.

பணம் புகழ் வந்து கொட்டும் என்ற ஆசை எல்லோராலும் கொடுக்கப்படுகிறது 
சினிமா என்பது 95வீதம் காமம் சார்ந்தது 5 வீதம் கலை சார்ந்து இருந்தாலும் 
அவை குப்பைக்குத்தான் தகுதி என்று பார்வையாளர்கள் ஆகிய எங்களாலயே தூக்கி 
எறியப்படுகிறது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை. 

இவர்களின் அழகும் காமமும் களையப்பட்ட பின்பு 
கறிவேப்பிலை ஆகும்போது .... வெளியுலகில் கால் பாதிக்க 
இவர்களுக்கு வெளியுலக அறிவு என்பது 1 வீதம் கூட இல்லை 
வேறு எந்த தொழிலோ கல்வி அறிவோ கூட பலருக்கு இல்லை 

சிலருக்கு திரும்பி போவதற்கு குடும்பம் இருந்தால் 
அதிர்ஷ்ட்டம் என்றுதான் எண்ணுகிறேன் 
இடையில் இவர்களுக்கு கிடைக்கும் சினிமா அறிமுகத்தால் 
சிலர் குடும்பங்களையும் மதிக்காது நடந்து மீண்டும் போக முடியாத நிலையை தோற்றுவிக்கிறார்கள் 

தமிழ் சினிமா முன்னணி நடிகை நயன்தார ( இன்று அதிக அளவு சம்பளம் வாங்குபவர் என்று எண்ணுகிறேன்)
இவரின் கதையே கறிவேப்பிலை கதைதான் எனும்போது 
பாட்டுக்கு டான்ஸ் அடபோனவர்கள் நிலை என்னவாக இருக்கும்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Maruthankerny said:

 


திருமணம் முடிந்த பிறகுகூட 
உங்களுக்கு பிடிக்காவிடின் விவாகரத்து வாங்கி போக முடியும் என்றாலும் 
எவ்வளவுதான் விஜலயலெட்ட்சுமி காரக்ட்டர் கீழாக இருந்தாலும் 
சீமான் இறுதிவரை வாழவே வேண்டும் என்று 
பஞ்சாயத்து ......அதாவது மக்கள் ஜனநாயக .... உலக விஞ்ஞான ...தொல்லியல் நிபுணத்துவ ...
அறிஞர்கள் அரகோட்ப்பாட்டு பஞ்சாயத்து தீர்ப்பு என்பதை இங்கே எல்லோருக்கும் அறிய தருகிறோம். 

இங்கே யாரும் தீர்ப்பு சொல்ல வரவில்லை மருதர்,

மேலே தெளிவாக வல்லவனுக்கான பதிலில் சொல்லி உள்ளேன், எமக்கு புலப்பட்ட மேற்கத்தைய சட்டம் போலன்றி, இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி உடன் வாழ்ந்தால் இங்கு போல இலகுவாக பிரிந்து போக முடியாது போலுள்ளது என்பதை.

ஆகவே இந்தியாவை பொறுத்தவரை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து கூடி வாழ்ந்து விட்டால், திருமணம் செய்து பின் விவாகரத்துதான் செய்ய வேண்டும் போல இருக்கிறது 🤦‍♂️. அதுதான் ஒரே வழி போலுள்ளது.

ஆகவே மேற்கத்தேய கண்ணாடிகளினூடு இதை பார்த்து கருத்தாளர் மீது ஏரிந்து விழுவதில் ஒரு பயனும் இல்லை.

வடிவாக கவனியுங்கள் இங்கே சீமான் மீது கொடுக்கபட்டிருப்பது என்னுடன் மனமொத்து உல்லாசமாக இருந்தார் என்ற புகார் அல்ல,

என்னை கல்யாணம் செய்வதாக கூறி எமாற்றி விட்டார் என்பதே புகார்.

ஒரு அராசியல்வாதி ஏமாற்றுகிறார், என்ற புகாரை தூய அரசியலை விரும்பும் எளிய பிள்ளைகள் யாரும் “அந்தரங்கம்” என கடந்து போக மாட்டார்கள். 

நீங்களும் அப்படித்தானே?

பிகு

அதுவும் நாங்கள் யார்? 

இருக்கும் கட்டிடத்தை வெள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் அல்ல, அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட போகும் தூய அரசியல் புரட்சியாளர்கள் என்கிறார் சீமான். 

அப்படி பட்ட தூய அரசியல் தலைவன் மீது  இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அதை அலசுவதுதானே தூய அரசியல் பேசும் எளிய பிள்ளைகளின் முதல் கடமை?

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, goshan_che said:

இங்கே யாரும் தீர்ப்பு சொல்ல வரவில்லை மருதர்,

மேலே தெளிவாக வல்லவனுக்கான பதிலில் சொல்லி உள்ளேன், எமக்கு புலப்பட்ட மேற்கத்தைய சட்டம் போலன்றி, இந்தியாவில் திருமணம் செய்வதாக கூறி உடன் வாழ்ந்தால் இங்கு போல இலகுவாக பிரிந்து போக முடியாது போலுள்ளது என்பதை.

ஆகவே இந்தியாவை பொறுத்தவரை திருமணம் செய்வதாக வாக்கு கொடுத்து கூடி வாழ்ந்து விட்டால், திருமணம் செய்து பின் விவாகரத்துதான் செய்ய வேண்டும் போல இருக்கிறது 🤦‍♂️. அதுதான் ஒரே வழி போலுள்ளது.

ஆகவே மேற்கத்தேய கண்ணாடிகளினூடு இதை பார்த்து கருத்தாளர் மீது ஏரிந்து விழுவதில் ஒரு பயனும் இல்லை.

வடிவாக கவனியுங்கள் இங்கே சீமான் மீது கொடுக்கபட்டிருப்பது என்னுடன் மனமொத்து உல்லாசமாக இருந்தார் என்ற புகார் அல்ல,

என்னை கல்யாணம் செய்வதாக கூறி எமாற்றி விட்டார் என்பதே புகார்.

ஒரு அராசியல்வாதி ஏமாற்றுகிறார், என்ற புகாரை தூய அரசியலை விரும்பும் எளிய பிள்ளைகள் யாரும் “அந்தரங்கம்” என கடந்து போக மாட்டார்கள். 

நீங்களும் அப்படித்தானே?

பிகு

அதுவும் நாங்கள் யார்? 

இருக்கும் கட்டிடத்தை வெள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் அல்ல, அதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட போகும் தூய அரசியல் புரட்சியாளர்கள் என்கிறார் சீமான். 

அப்படி பட்ட தூய அரசியல் தலைவன் மீது  இப்படி ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அதை அலசுவதுதானே தூய அரசியல் பேசும் எளிய பிள்ளைகளின் முதல் கடமை?

 

 

 

இதில் சீமானை பற்றி அலச என்ன இருக்கிறது?
இது 20 வருடத்துக்கு முன்னைய கதை 

வேண்டியதெல்லாம் அலசி முடிந்தது என்பதை விடவும் 
நீதிமன்று தீர்ப்பளித்து முடிந்த விடயம் 


அப்ப அப்ப வியலடிச்சுமிக்கு பண கஸ்ட்ரம் 
மற்றவர்களால் ஏமாற்றம் வரும்போது 
இவர் இந்த சீமான் சீனை கடந்த 15 வருடமாக போட்டுவருகிறார் 

யாழில் மட்டும் எனக்கு தெரிய 10 திரி இருக்கிறது.

எங்களுக்கு என்ன வேலையா? வெட்டியா?
அலசினா போச்சு ......  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.