Jump to content

"சீமானை விட்றாதீங்க.. ஸ்டாலின்தான் எனக்கு உதவி செய்யணும்".. விஜயலட்சுமியின் கண்ணீர் புகார்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Maruthankerny said:

நீதிமன்று தீர்ப்பளித்து முடிந்த விடயம் 

நான் மிஸ் பண்ணிட்டன் போல இருக்கு.

நீதி மன்றம் சீமான் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கி விட்டதா?

லிங்க இருந்தால் தாருங்களேன்? (சின்சியர் ரிகுவஸ்ட்).

பிகு:

ஒரு நடிகையின் மேட்டரையே 20 வருசமா தீர்க்க முடியாமல் அல்லாடும் இந்த மனிதர் ஒரு வினைதிறனான தலைவரா எப்படி வருவார் என்றும் யோசிக்க வைக்கிறது😆.

Link to comment
Share on other sites

  • Replies 98
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

நான் மிஸ் பண்ணிட்டன் போல இருக்கு.

நீதி மன்றம் சீமான் குற்றமற்றவர் என தீர்ப்பு வழங்கி விட்டதா?

லிங்க இருந்தால் தாருங்களேன்? (சின்சியர் ரிகுவஸ்ட்).

பிகு:

ஒரு நடிகையின் மேட்டரையே 20 வருசமா தீர்க்க முடியாமல் அல்லாடும் இந்த மனிதர் ஒரு வினைதிறனான தலைவரா எப்படி வருவார் என்றும் யோசிக்க வைக்கிறது😆.

https://www.thehindu.com/news/national/tamil-nadu/case-against-seeman/article2074692.ece

https://www.filmibeat.com/tamil/news/2011/seeman-lawsuit-vijaya-lakshmi-030611-aid0017.html

இந்த இரண்டும் கோர்ட் வரை சென்று தீர்ப்பு முடிந்தாகி விட்டது 
வக்கீல் செலவு தான் கை லாபம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

https://www.thehindu.com/news/national/tamil-nadu/case-against-seeman/article2074692.ece

https://www.filmibeat.com/tamil/news/2011/seeman-lawsuit-vijaya-lakshmi-030611-aid0017.html

இந்த இரண்டும் கோர்ட் வரை சென்று தீர்ப்பு முடிந்தாகி விட்டது 
வக்கீல் செலவு தான் கை லாபம் 

நீங்கள் தந்த இரெண்டு லிங்கில்,

முதலாவது சீமான் மீது விஜயலட்சுமி தந்த புகாரில் விசாரணை என்கிறது.

இரெண்டாவது சீமான் விஜயலட்சுமி மீது மானநஸ்ட வழக்கு போட உத்தேசம் என்கிறது. (அப்படி அவர் போட்டதாக தெரியவில்லை - ஏன் போடவில்லை என்பதும் தெரியவில்லை 😆).

 

ஆனால் நான் அறிந்த வரை சீமான் மீதான விஜய லட்சுமியின் புகாரில் இன்னும் வழக்கு நீதிமன்றில் தீர்ப்பாகவில்லை.

பிகு

இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கவே சீமான் எடப்பாடி அரசை மென்மையாக கையாண்டார் என்றும், வென்அ கையோடு ஸ்டாலினை சந்தித்தார், ஆட்சியை புகழ்ந்தார் என்றும் கூறுகிறார்கள்.

உண்மை பொய் தெரியவில்லை.

ஆனால் கள்ள டீல் போட்டு குற்றவாளிகள் மீது மென்போக்கை எடுப்பது எடப்பாடி, ஸ்டாலின் போன்ற அரசியல்வாதிகள் வழமையாக செய்வதே.

* குற்றவாளி அல்ல குற்றம்சாட்டப்பட்டவர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஸ்ராலின், உதய நிதி, அவங்க தாத்தா… எல்லாரும் இந்த விசயத்திலை….

பழம் திண்டு… கொட்டை போட்ட ஆக்கள்.

அவங்களிடம் நீதி கேட்கப் போகலாமா? 😁

கள்ளன் ஒளிக்கத்தெரியாமல் பொலிஸ்காரன் வீட்டிலை போய் ஒளிச்ச மாதிரி....ஆரிட்டை போய் முறைப்பாடு குடுக்கோணுமெண்டு விசயலச்சுமிக்கு இன்னும் தெரியேல்லை.😁

போயும் போயும்.....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்துத் திருமணச் சட்ட‍ம் 7

இந்துத் திருமணச் சட்ட‍ம் 7
 
1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்ட‍ம் கொண்டு வரப்பட்ட‍து. அச்சட்ட‍மானது இந்துக்கள், புத்த‍மதத்தினை பின்பற்றுபவர்கள், அல்ல‍து சீக்கியர்களுக்கு இச்ச‍ட்ட‍ம் பொருந்தும். ஆனால் முகமதியர்கள், கிறித்துவர்கள், பார்சி அல்ல‍து யூதர் மதத்தினைச் சேர்ந்தவர்களுக்கு இச்சட்ட‍ம் பொருந்தாது. இந்து திருமணத்தினை பதிவு செய்ய முடியும்.
 
ஒரு இந்து திருமணத்திற்கான தேவைகள் 
 
1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்ட‍த்தின் பிரிவு 5ன்படி முறையான திருமணம் ஒன்றிற்கு தேவையான நிபந்தனை எடுத்துரைக்கின்றது.
 
1. திருமணத்தின் போது (தரப்பினர்) வெறும், உயிருடன் இருக்கும் வேறு ஒரு வாழ்க்கைத் துணையை கொண்டிருக்க‍க் கூடாது.
 
2. மனநிலை சரியில்லாதக் காரணத்தால் முறையான இசைவை கொடுக்க‍ முடியாத நிலையில் தரப்பினர் இருக்க‍க் கூடாது.
 
அ. முறையான இசைவை கொடுக்க‍க் கூடியவராக இருந்தாலும், திருமணத்திற்கும், குழந்தை பெறுவதற்கும் தகுதியற்ற வகையில் மனநிலை பாதிக்க‍ப்பட்டு இருக்க‍க்கூடாது.
 
ஆ. காக்காய் வலிப்பு அல்ல‍து பித்து நிலை ஆகியவற்றிற்கு அடிக்கடி உட்பட்ட‍வராக இருக்க‍க் கூடாது.
 
3. திருமணத்தின் போது மணமகன் 21 வயதினையும், மணமகள் 18 வயதினையும் நிறைவு பெற்ற‍வராக இருத்தல் வேண்டும்.
 
4. வழக்காறு அனுமதித்தாலன்றி, தரப்பினர் இருவரும் சபித்தர்களாக இருத்தல் கூடாது. சபிந்தர்கள் என்பவர்கள் பொது மூதாதையர் வழியாக குறுதி தொடர்பு கொண்ட உறவு முறையினர் இந்த உறவு முறை தாயின் வழியில் 3 தலைமுறைகளையும் தந்தையின் வழியில் 5 தலைமுறைகளையும் கொண்டதாகும்.
 
திருமணத் தீர்வழிகள் 
 
இந்து திருமணச் சட்ட‍மானது ஓர் இளம் பெண்ணுக்கு 4 வகையான திருமண தீர்வழிகள் அளிக்கின்றது. இந்த நான்கும் ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுப்பட்ட‍தாகும். ஒவ்வொன்றும் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன•
 
அ) கலந்துறை உரிமை மிட்டடைவிப்பு 
 
இப்பிரிவின் படி திருமணத்தைப் பாதுகாத்து, தரப்பினரை ஒன்று சேர வைக்கும் நோக்க‍ம் கொண்டது. தக்க‍ காரணமின்றி மணவாழ்க்கையிலிருந்து கணவன் விலகிச் சென்றால், சட்ட‍க் கடமையிலிருந்து சட்ட‍ ஒப்ப‍ந்தத்திலிருந்து விலகிச் செல்கிறார் என்று பொருளாகும். எனவே பிரிவு 9-ன் கீழ் மனைவி நீதிமன்றம் சென்று தீர்வு பெற உரிமையுண்டு. இதனால் பாதிக்க‍ப்பட்ட‍ உறவு சீரடைய வாய்ப்பு உண்டு. தவிர திருமண உறவைத் துண்டிக்காமலேயே அல்ல‍து தீர்ப்பு வழி பிரிவு கோராமலேயே இச்சட்ட‍த்தின் பிரிவுகள் 24 மற்றும் 25 வாயிலாக வழக்கிடையே வாழ்க்கைப் பொருளதவியும், நிரந்தர வாழ்க்கைப் பொருளுதவியும் கோர உரிமை உண்டு. மேலும் நீதிமன்றம் உத்த‍ரவு பிறப்பிக்கும் கணவன் ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் மணவாழ்க்கையில் இணைய மறுக்கும் பொழுது மண முறிவுக்கு மனைவி மனு கொடுக்க‍லாம்.
 
ஆ. தீர்ப்பு வழி பிரிவு (பிரிவு10)
 
தீர்ப்பு வழி பிரிவு என்பது சற்று வேறுபட்ட‍ தீர்வழியாகும். தரப்பினரைத் தனியே வாழ அனுமதிக்கிறது. இது தவிர மண வாழ்க்கையை நிறுத்தி வைக்கிறது. கணவனும், மனைவியும் ஒன்றாக இணைந்து வாழும் கட்டுப்பாடு இல்லை. ஆனால் திருமணம் கலைக்கப்படுவதில்லை. தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இது அவர்கள் மீண்டும் இணைவதற்கும் தங்களுக்குள் உறவு முறையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், வாய்ப்பினை அளக்கிறது. இவ்வாறு பிரிந்து வாழும் தம்பதியர் மீண்டும் ஒன்றிணைந்து வாழ விருப்ப‍ம கொள்வாரேயானல் அதற்கு தடை கிடையாது. பிரிவு 10(2)-ன் கீழ் மனுத்தாக்க‍ல் செய்து பிறப்பிக்க‍ப்பட்ட‍ தீர்ப்பினைத் தள்ளுபடி செய்ய‍க் கோரி விண்ண‍ப்பிக்க‍லாம். ஆனால் தரப்பினர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் மணவாழ்க்கை திரும்ப அமையாவிடில் தீர்ப்பாணை பிறப்பித்து  1 ஆண்டு காலம் கடந்திருந்தால் இதனையே காரணமாக கொண்டு பிரிவு 13 (1ஏ)1) இன் கீழ் மணமுறிவிற்கு மனுத்தாக்கல் செய்ய முடியும்.
 
பிரிவு 10-ன் கீழ்  கூறப்பட்டுள்ள‍ தீர்ப்பு வழிப்பிரிவு என்ற தீர்வுக்கான காரணங்களும் மணமுறிவிற்கான காரணங்களும் 1976ஆம் ஆண்டு சட்ட‍த்திருத்த‍ப்பிறகு ஒன்றேயாகும். இதில் மொத்த‍ம் 13 காரணங்கள் உள்ள‍ன• முதல் ஒன்பதும் கணவனுக்கும், மனைவிக்கும் உரிய பொது காரணங்கள் கடைசி 4 காரணங்களும் மனைவிக்கு மட்ட‍டும் கிடைக்க‍ கூடிய தனிக்காரணங்களாகும்.
 
1. திருமணத்திற்கு அப்பாற்பட்டு கொள்ளும் உடலுறவு
2. இரண்டாண்டுகளுக்கு குறையாத, கைவிடுதல்
3. கொடுமைப்படுத்துதல்
4. வேறு ஒரு சமயத்தை தழுவுதல்
5. பித்து நிலை அல்ல‍து மனநிலை ஒழுங்கின்மை
6. பரவக்கூடிய வகையில் உள்ள‍ (மேகநோய்)
7. குணப்படுத்த‍ முடியாத கொடிய தொழுநோய்
8. துறவுநிலை மேற்கொள்ள‍ மற்றும்
9. உயிரோடு இருக்கிறாரா என அறியப்படாமல் இருத்த‍ல் ஆகியவை ஆகும்.
 
மனைவிக்கு கிடைக்கும் காரணங்கள் 
 
1. இச்சட்ட‍ம் செயலுக்கு வரும்முன்னர் திருமணம் நடைபெற்று கணவனுக்கு இன்னொரு மனைவி இருத்த‍ல்.
 
2. பாலியல் வல்லுறவு மற்றும் இயற்கைக்கு எதிரான குற்ற‍ங்களுக்குக் கணவன் தண்டிக்க‍ப்படுதல்
 
3. 1956ம் ஆண்டின் இந்து தத்தெடுப்பு மற்றும் வாழ்க்கைப் பொளுதவி சட்ட‍த்தின் 18வது பிரிவின் கீழ் அல்ல‍து குற்ற‍வியல் நடைமுறைத் தொகுப்பில் 125பிரிவின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவிக்கான தீர்ப்பாணைப் பெற்று குறைந்தது ஓராண்டு காலத்திற்கு உடலுறவு இல்லாதிருத்தல்
 
4. குழந்தைத் திருமணத்தை மறுத்த‍ல் ஆகியவையாகும்.
 
இ. தீர்ப்பினை வாயிலாக திருமணத்தை ரத்து செய்தல் (பிரிவுகள் 11 மற்றும் 12)
 
திருமணங்க்ளைப் பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம். 
 
1. முறையாக செல்லும்படியாக கூடிய திருமணம்
2. இல்லா  நிலையது திருமணம்
3. தவிர்தகு திருமணம்
 
1. முறையாக செல்லும்படியாகக் கூடிய திருமணம்
 
இச்சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍ நிபந்தனைகளுக்கு உட்பட்டு செய்விக்க‍ப்படும் திருமணம் முறையான திருமணமாகும்.
 
2. இல்லா நிலைத் திருமணம்
 
சட்ட‍த்தின் பார்வையில் இத்திருமணம் கருதப்பட மாட்டாது. இதற்கான காரணங்கள்.
 
1) வாழ்க்கைத் துணை இருக்கும் போது மீண்டும் திருமணம் செய்து கொள்ள‍ல்
2) தடுக்க‍ப்பட்ட‍ உறவிடையே திருமணம்
3) சபிந்தர்களிடையேயான திருமணம்
4) தவிர்தகு திருமணம் (பிரிவு12)
 
1. உடலுறவு மூலம் திருமணத்தை நிறைவு செய்ய முடியாத குறைபாடு, இக்குறை உடல் கூறாகவோ அல்ல‍து நோயின் காரணமாகவோ இருக்க‍லாம். தரப்பினரின் மனநிலை பொறுத்து அமையலாம்.
 
2. பித்து நிலையின் காரணமாக ஒருவர் பிறவியிலேயே பித்து பிடித்து இருக்க‍லாம். மூளைக் கோளாறு நோயினால் தரப்பினர் பாதிக்க‍ப்பட்டு இருந்தால் மனைவி திருமணப் பந்தத்தினை தவிர்க்க‍ வாய்ப்பு உண்டு.
 
3. திருமண இசைவைக் கட்டாயமாக அல்ல‍து மோசடியாக பெறுதல் மற்றும் எதிர்மனுதாரரின் கர்ப்ப‍ம் ஆகியவை தவிர்தகு  திருமணமாகும்.
 
மணமுறிவு பிரிவு (13) 
 
இந்துச் சட்ட‍த்தைப் பொறுத்த‍வரை மணமுறிவு என்பது ஒரு புரட்சிகரமான மாறுதல் ஆகும். 1955ம் ஆண்டின் இந்துத் திருமணச் சட்ட‍ம் அனைவருக்கும் பொருந்துமாறு மணமுறிவை கொண்டு வந்துள்ள‍து. 1978ஆம் ஆண்டு திருத்த‍ம் மணமுறிவைப் பொறுத்து மிகவும் எளிதாகிவிட்டது.
 
ம‌ணமுறிவுக்கான காரணங்கள் 
 
1. தன்னுடைய வாழ்க்கைத் துணையுடன் அன்றி வேறுயாருடனாவது தன்னிச்சையாக உடலுறவு கொள்ளுதல்
 
2. கொடுமைப்படுத்துதல்
 
3. இரண்டு ஆண்டுகால அளவிற்கு கைவிடுதல்
 
4. பித்து நிலை
 
5. கடுமையான மற்றும் குணப்படுத்த‍ முடியாத தொழுநோய்
 
6. தொற்றிக் கொள்ள‍க்கூடிய மேகநோய்
 
7. வேறு ஒரு சமயத்தை தழுவுதல்
 
8. உலகைத் துறந்து துறவு நிலை மேற்கொள்ள‍ல்
 
9. ஏழு (7) ஆண்டுகாலம் உயிருடன் இருக்கிறாரா என்று அளிவிக்கப்பாமல் இருத்த‍ல்
 
10. நீதி வழிப் பிரிவிற்கான தீர்ப்பாணைக்குப் பின்பவரும் மீண்டும் மணவாழ்க்கையை தொடராதிருத்தல்
 
11. சேர்ந்து வாழவேண்டும் என்று தீர்ப்பாணை அளிக்க‍ப்பட்டும் மீண்டும் சேர்ந்து வாழாமல் இருத்த‍ல்
 
12. ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலான  மணமுறிவு
 
13. மனைவிக்குமட்டும் கிடைக்கும் சிறப்புக்காரணங்கள்
 
14. சட்ட‍ம் செயலுக்கு வரும் முன் திருமணம் முடிந்து கணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்டு மனைவி உயிருடன் இருந்தால்
 
15. கணவன் பாலியல் வல்லுறவு அல்ல‍து இயற்கைக்கு முரணாக குற்ற‍ங்களால் தண்டிக்கப்பட்டிருந்தல்
 
16. 1956ம் ஆண்டின் இந்து தத்தெடுப்பு மற்றும் வாழ்க்கைப் பொருள் உதவி சட்ட‍த்தின் 18வது பிரிவின் கீழ் அல்ல‍து 1973ம்  ஆண்டின் குற்ற‍ நடைமுறைத் தொகுப்பின் 125 வது பிரிவின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவிக்கான தீர்ப்பாணைப்ப் பெற்று ஓராண்டு காலத்திற்கு மேல் உடலுறவு இல்லாதிருத்தல்.
 
ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலான மணமுறிவு (பிரிவு 118) 
 
இது 1978ம் ஆண்டு முதல் கிடைக்கும் புதிய தீர்வழியாகும். இப்பிரிவின்படி 
 
1. திருமணத் தரப்பினர் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
 
2. அவ்வாறு வாழ்ந்து கொண்டிருப்ப‍து ஓராண்டு அல்ல‍து அதற்கு மேற்பட்டு இருத்த‍ல் வேண்டும்.
 
3. இருவரும் தங்களது திருமணம் கலைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருவருக்கொருவர் ஒப்புக் கொண்டு இருக்க‍ வேண்டும்.
 
4. நீதிமன்றதிதல் இருவரும் சேர்ந்து மனுத்தாக்க‍ல் செய்திட வேண்டும்
 
5. ஒப்புதலானது மனுத்தாக்க‍ல் செய்த பதினெட்டு மாதங்களுக்குள் அல்ல‍து வழக்கு விசாரணைக்கு வரும்முன் எந்த தரப்பினராலும் திரும்பப் பெற்றிருக்க‍க்கூடாது.
 
எந்த இடத்தில் மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்பட வேண்டும்?
 
பிரிவு 19ன் படி மாவட்ட‍ நீதிமன்றத்தில் இதற்கான மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்பட வேண்டும். குடும்ப நல நீதி மன்றங்கள் நிறுவப்பட்டிருந்தால் அதன் எல்லைக்குட்பட்ட‍ வரம்புக்கு உட்பட்ட‍ இடத்தில் மனுத்தாக்க‍ல் செய்ய வேண்டும். 1. திருமணம் நிகழ்ந்த இடம் அல்ல‍து 2 . மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்படும் போது எதிர்மனுதாரர் குடியிருக்கும் இடம் அல்ல‍து 3. திருமணத் தரப்பினர் இறுதியாக வசித்த இடம் அல்ல‍து 4. மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்படும்போது மனுதாரர் வசிக்கும் இடம் போன்ற இடங்களுக்கு ஆள்வரை வரம்பு கொண்ட இடங்களில் மனுத்தாக்க‍ல் செய்யலாம்.
 
***
 
கிறித்து திருமணச் சட்ட‍ம் 27
 
1872 ஆம் ஆண்டு இந்திய கிறித்துவ திருமணச் சட்ட‍ம் இயற்றப்பட்ட‍து. இச்சட்ட‍த்தின் கீழ் திருமணம் செய்து கொள்வோர் இருவரும் கிறித்துவராக இருக்க‍ வேண்டும். இருவரில் ஒருவர் கிறித்துவர் இல்லாதவராக இருக்க‍லாம். பிரிவு 5 கூறப்பட்ட‍வர்களால் மட்டுமே திருமணம் செய்து விக்க‍ப்பட வேண்டும். இதில் நடத்தப்பட வேண்டிய இடம், செய்விக்க‍ப்பட வேண்டிய நேரம் ஆகியவை கூறப்பட்டுள்ள‍ன• பிரிவு 60 கிறித்துவ திருமணத்திற்கான நிபந்தனைகள் கூறுகிறது.
 
* அதன்படி ஆண் 21 வயதிற்கும் பெண் 18 வயதிற்கும் குறைவாக இருத்தல் கூடாது.
 
* உயிருட‌ன் கூடி மனைவியோ அல்ல‍து கணவனோ அவர்களுக்கு இருக்க‍க் கூடாது.
 
* பிரிஉ 9ல் கூறப்பட்ட உரிமம் பெற்ற‍வரின் முன்னிலையிலும் மற்றும் குறைந்தது இரண்டு சாட்சிகள் முன்னிலையிலும் திருமணம் நடத்த‍ப்பட வேண்டும். மணமக்க‍ள் அடுத்த‍வரை கணவனாக அல்ல‍து மனைவியாக ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
கிறித்துவ திருமணத்தில் விவாகரத்து 
 
பொதுவாக மேலைநாடுகளில் கிறித்துவ தம்பதியினர் செய்து கொள்வதற்கு 18 வகையான காரணங்கள் உள்ள‍ன• ஆனால் இநிதய கிறித்து திருமணச் சட்ட‍ம் 1872 மறும் இந்திய கிறித்துவ விவாகரத்து சட்ட‍ம் 1889-ன் படி 5 காரணங்கள் மட்டுமே விவாகரத்துக்கு எடுத்துக் கொள்ள‍ப்படுகிறது.
 
1. பிறன்மனை நோக்குதல்
 
2. கொடுமை
 
3. பிரிந்து இருத்த‍ல்
 
4. ஆண்மையின்மை
 
5. கடுமையான நோய்
 
 
1. பிறன்பனை நோக்குதல் 
 
கிறித்துவ சட்ட‍த்தின் படி பிறன்மனை நோக்குதல் என்ற ஒரே காரணத்திற்காக பெண் விவாகரது கோரமுடியாது. கொடுமைப்படுத்த‍ப்பட்டார் என்ற காரணம் இருந்தால் மட்டும் பெண் விவாகரத்து கோர முடியும். இருந்தபோதிலும் சில வருடங்களுக்கு முன்பு மும்பை உயர்நீதிமன்றம் சில வருடங்களுக்கு முன்பு பிறன்மனை நோக்குதல் இருந்தாலே மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெறலாம் என்று கூறப்பட்டுள்ள‍து.
 
2. கொடுமைக்கு உள்ளாதல் 
 
கொடுமை என்பது உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் உள்ள‍தைப்பற்றி சட்ட‍த்தில் குறிப்பிட்டுள்ள‍னர். பிறன்மனை நோக்குதல் மற்றும் கொடுமைக்கு உள்ளாதல் என்ற காரணங்களாக கிறித்துவ பெண் மணவிலக்கு கோரலாம். எவ்வாறு இருந்த போதிலும் தற்பொழுது கொடுமைக்கு ஆளாதல் என்ற காரணத்தினை வைத்து ஒரு விவாகரத்து கோரலாம்.
 
3. பிரிந்து வாழுதல் 
 
பிரிந்து வாழுதல் என்பது காரணங்கள் கூறப்படுகிறது மனைவியுடன் கணவனோ கணவனுடன் மனைவியோ சேர்ந்து வாழ மறுப்பது, எவ்வித காரணமும் இல்லாமல் கணவனோ மனைவியோ காணாமல் போவது, ஏழு வருடங்கள் வரை கணவனோ, மனைவியோ காணாமல் போனால் அவர் பிரிந்து வாழ்வதாக கருதப்பட்டு விவாகரத்து கோரலாம்.
 
4. ஆண்மையின்னை 
 
க‌ணவனோ, மனைவியோ திருமணக் கடமையினை நிறைவேற்றாமல் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்க‍ப்பட்டிருக்கும் போது அதனை காரணம் காட்டி விவாரத்து கோரலாம்.
 
5. கடுமையான நோய் 
 
ம‌னநோய் மற்றும் உடல்நலக் கோளாறு மற்றும் பாலியல் நோய் காரணமாக விவாகரத்து கோரலாம். தொழுநோயால் பாதிக்க‍ப்பட்டு இருந்தால் அதனை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது. ஆனால் இந்து திருமணச் சட்ட‍த்தின்படி விவாகரத்து கோரலாம்.
 
விவாகரத்து சட்ட‍த்திருத்த‍ம் பின்பு
 
பிரிவு 10
 
விவாகரத்து சம்பந்தமாக சட்ட‍த்திருத்த‍ம் கொண்டு வரப்பட்ட‍து. அதன்படி கீழ்க்காணும் காரணங்களுக்காக கணவன், மனைவி  இருவருமே விவாகரத்து கோரலாம்.
 
1. பிறன் மனை நோக்குதல்
 
2. கொடுமைக்கு ஆளாகுதல்
 
இவ்வாறாக சட்ட‍த்தில் சொல்லப்பட்ட‍ போதிலும் கீழ்க்காணும் காரணங்களுக்காக மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெற வழிசெய்துள்ள‍து.
 
1. கற்பழித்தல்
 
2. மிருகத்தனமாக நடந்து கொள்ளுதல்
 
3. இயற்கைக்கு மாறாக மிருகங்களுடன் கொள்ளுதல்
 
இவை தவிர பிரிவு 10ஏ ன் படி கணவனும், மனைவியும் மனமொத்து பிரிந்து கொள்ள‍ மனு செய்யலாம்.
 
விவாகரத்தினால் என்ன‍ உரிமை கிடைக்கின்றது.
 
1. விவாகரத்து மூலம் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வது தவிர்க்க‍ப்படுகிறது.
 
2. விவாகரத்து மூலம் கணவனோ மனைவியோ மறுமணம் செய்து கொள்ள‍லாம்.
 
குழந்தைகளின் நலன் பாதிக்க‍ப்படாமல் விவாகரத்து ஏற்பட்ட‍ பொழுது அவர்களின் நலன் பெற்றோர்களால் பாதுகாக்க‍ப்படுகிறது. குழந்தைகளை யார் நன்றாக பராமரிப்பார்களோ அவர்களிடமே குழந்தை இருக்கும் ஆனால் இந்திய நீதி மன்றங்களில் குழந்தைகளை பராமரிப்பு தாயிடமே வழங்கப்படுகின்றன• இவை விவாகரத்து நடவடிக்கையுடன் சேர்ந்தே நடத்தப்படுகின்றன•
 
****
 
முகமதியர் திருமணச் சட்ட‍ம் 29
 
இஸ்லாமிய சட்ட‍த்தில் திருமணம் அல்ல‍து நிக்கா என்பது ஓர் உரிமையில் ஒப்ப‍ந்தமாகும். முகமதியர்களைப் பொறுத்த‍வரை திருமணத்தைக் குறித்து சட்ட‍ம் ஏதும் இல்லை. அவர்கள் தங்களது இன்முறை சட்ட‍த்தின்படி ஆளப்படுவர். இஸ்லாமிய திருமணம் ஓர் ஒப்ப‍ந்தம் ஆகும்.
 
1. திருமணத் தரப்பினர் (திட சித்த‍ம்) உள்ள‍வராகவும்
 
2. பருவம் அடைந்தவராகவும், இருக்க‍ வேண்டும். பதினைந்து வயது நிரம்பியவர் திருமணம் செய்து கொள்ள‍லாம்.
 
3. திருமணத்திற்கான பரிவுரையும் ஏற்புரையும் செய்வது இரு ஆண் சாட்சிகள் அல்ல‍து 1 ஆண் மற்றும் இரு பெண் சாட்சிகள் முன்னிலையில் இருக்க‍ வேண்டும்.
 
4. திருமண தரப்பினர் இடையே தடைசெய்ய‍ப்பட்ட‍ உறவுமுறை இருக்க‍க்கூடாது.
 
5. ஒரு முஸ்லீம் பெண்மணி முஸ்லிம் அல்லாதவரை மணக்க‍ இயலாது.
 
6. ஒரு முஸ்லிம் ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
 
7. ஏழு வயதுக்கு உட்பட்ட‍வர் செய்து கொள்ளும் திருமணம் இல்லாநிலையது ஆகும்.
 
முகமதியர் கட்ட‍த்தில் திருமணத்தைக் கலைத்திட ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி காரணங்கள் கொடுக்க‍ப்பட்டுள்ள‍ன• ஒரு முகமதிய ஆண் தன்னிச்சையாக நீதிமன்றம் வாயிலாக அல்லாமல் தாமாக தக்க காரணம் ஏதும் கூறாமல் திருமணத்தைக் கலைக்க முடியம். இது தலாக் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முகமதியப் பெண்ணுக்கு நீதிமன்றம் வாயிலாக 1939ஆம் ஆண்டில் முஸ்லிம் திருமணக் கலைப்புச் சட்ட‍ம் கொண்டு வரப்பட்ட‍து. கீழ்க்காணும் காரணங்களுக்காக ஒரு முகமதிய பெண் மணமுறிவு கோரலாம் அவை
 
* நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் இருக்கும் இடம் அறியப்படாமல் இருத்த‍ல்
 
* இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல் கணவன், மனைவியை பராமரிக்காமல் இருத்தல்
 
* ஏழாண்டு காலத்திற்கு மேற்பட்டு கணவன் சிறைத்தண்டனை பெற்றிருத்தல்
 
* மூன்றாண்டு காலத்திற்கு மேல் மனைவியுடன் ஒன்றிணைந்து வாழ மறுத்தல் அல்ல‍து தவறுதல்
 
* திருமணத்தின் போது கணவன், பித்து பிடித்து, மனநிலை சரியில்லாமல் இருந்து அது தொடர்ந்தால்
 
* இரண்டாண்டுகளுக்கு மேற்பட்டு கணவன், பித்து நிலையினால் பாதிக்க‍ப்பட்டு இருத்தல் அல்ல‍து தொழுநோய் அல்ல‍து கடும் மேகநோயினால் பாதிக்க‍ப்பட்டு இருத்தல்.
 
* பருவம் அடைந்தும் (பதினைந்து வயது ஆனதும்) மனைவி திருமணத்தை மறுதலித்தல்.
 
* மனைவியைக் கணவன் கொடுமைப்படுத்துதல், மேற்குறித்த காரணங்களுடன் பிரிவு-4ன்கீழ் குறிப்பிட்ட கணவனின் மத மாற்ற‍ம் ஒரு கூடுதல் காரணமாகும்.
 
இவைகள் ஒரு மனைவிக்கு கிடைக்கக்கூடிய மணமுறிவுக்கான காரணங்கள் ஆகும்.
 
மேற்குறிப்பிட்ட‍ சில காரணங்களுடன் வேறு சில காரணங்களும் மணமுறிவிற்காக ஒரு முக்கிய பெண்மணிக்கு அளிக்கப்பட்டுள்ள‍து. இதில் குலா என்பது ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலானது. இதன்படி மனைவி, கணவனிடம் அதிருப்தியுற்றால் திருமண ஒப்ப‍ந்தத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறும் அதற்கான இழப்பீடு அளிப்பதாகவும் கூறலாம். இதனை கணவன், ஏற்றுக்கொண்டால் உடனடியாக மணமுறிவு ஏற்படும். அதற்கான மறுபயன் தன்னுடைய மணக்கொடையை விட்டுக் கொடுப்பதாக இருக்க‍லாம்.
 
முபராத் என்னும் மணமுறிவிலும் ஒருவருக்கொருவர் இசைவின் பேரில் திருமணம் கலைக்கப்படுகிறது. தலாக் இ தஃபிஸ் மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெறலாம். இதில் மனைவி தன் அதிகாரத்தினை காட்டி விவாகரத்து செய்ய‍லாம்.
 
இஸ்லாமிய திருமணமும் இந்திய சட்ட‍மும் 
 
இஸ்லாமிய முறையின்படி திருமணம் பதிவு செய்ய‍ப்பட்டு இருப்பின் அப்பெண்களுக்கு பெண்கள் வன்கொடுமை சட்ட‍ம் பாதுகாப்பு அளிக்கின்றது பெண் வன்கொடுமைச் சட்ட‍ம் பிரிவு 498ஏ , இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் படி கொமைக்கு ஆளானாலும் வரதட்சனை தடைச்சட்ட‍ம் 1961போன்றவைகளும் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கின்றது. மேலும் சிறப்புத் திருமணச் சட்ட‍ம் 1954-ன் படி பதிவுத் திருமணம் செய்ய‍ப்பட்டு இருந்தாலும் இஸ்லாமிய பெண்களுக்குப் பொருந்தும்.
 
இஸ்லாமிய பெண்களின் உரிமைச் சட்ட‍ம் 1986
 
இச்சட்ட‍த்தின்படி கணவன், மனைவியை காப்பாற்றுவதற்கு கடமைப்பட்ட‍வர், மனைவிக்கு கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு உரிமை உண்டு. குற்ற நீதி நடுவர் மன்றத்தில் ஜீவனாம்சம் பெறுவதற்கு மனுத்தாக்க‍ல் செய்ய‍ முடியும்.
 
* விவாகரத்து பெற்ற‍வராக இருக்க வேண்டும்.
 
* திருமணத்தின் பொழுது இருந்த வாழ்க்கைத் தரம்
 
* முன்னாள் கணவரிடமிருந்து பெறலாம்.
 
அவர் ஜீவனாம்சம் வழங்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் பினை ஆணை பிறப்பித்து அவரிடமிருந்து தொகையினை பெறலாம். ஆனால் விவாகரத்து பெற்ற‍ பின்பு 2ம் திருமணம் செய்து கொண்டுவிட்டால் ஜீவனாம்சம் கேட்க முடியாது.
 
சிறப்புத் திருமணச் சட்ட‍ம் 
 
1954ம் ஆண்டில் சிறப்புத் திருமணச் சட்ட‍ம் இயற்றப்பட்டுள்ள‍து. இது பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர். தங்களிடையே திருமணம் செய்து கொள்ள‍ வழி கோருகிறது. ஓர் இந்து இன்னொரு இந்துவை இச்ச‍ட்ட‍த்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள‍லாம். பொதுவாக இவைப் பதிவுத் திருமணம் என்று அழைக்கப்படுகின்றன• இச்சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍ நிபந்தனைகள், திருமணத் தீர்வழிகள் போன்றவை இந்து திருமணச் சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍து போன்றதாகும்.
 
****
 
வ‌ரதட்சனை தடுப்புச் சட்ட‍ம் 1961 – 11
 
திருமணத்திற்கு வரதட்சனை கொடுப்ப‍தாக பெண்ணின் பெற்றோர்கள் வாக்கு அளித்து பிறகு கொடுக்க முடியாமல் போனால் திருமணம் முடிந்த பின் அந்த பெண், அதற்காக துன்புறுத்த‍ப்படுவதோ அதனால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதோ அல்ல‍து அந்த பெண்ணை தற்கொலைக்குத் தூண்டும் அளவு கொடுமை புரிவதோ அல்ல‍து அப்பெண்ணை கொலைசெய்வது போன்ற நிகழ்ச்சிகள் அதிகமானதால் வரதட்சனை தடைச்சட்ட‍ம் 1961ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட‍து.
 
வ‌ரதட்சனை இந்திய சமுதாயத்தில் ஒரு சாபக்கேடாக கருதப்படுகிறது. மணப்பெண் எரிப்பு வழக்குகள் , வரதட்சனை மரணங்கள், வரதட்சனை கொடுமைகள் முதலியை சமுதாயத்தில் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. வரதட்சனை தொடர்பான குற்ற‍ங்கள் குறித்த சட்ட‍ங்கள் கடுமையானவை.
 
சட்ட‍ம் பற்றிய விளக்க‍ம் 
 
நேரடியாகவோ, மறைமுகமாவோ கீழ்க்காணும் வகையில் தரப்படும் அல்ல‍து தருவதாக ஒப்புக் கொள்ள‍ப்படும் தொகையோ அல்ல‍து சொத்தோ வரதட்சனையாக கருதப்படும்.
 
* திருமணம் செய்து கொள்ளும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினரால்
 
* திருமணம் செய்து கொள்ளும் மணமகள் அல்ல‍து மணமகளின் பெற்றோரால்
 
* வேறு மற்றொரு நபரால்
 
* திருமணம் செய்து கொள்ளும் ஏதாவது ஒரு தரப்பினரால்
 
* திருமணம் தொடர்பானவர் இடையிலோ
 
* முஸ்லீம் திருமண சட்ட‍ப்படி அச்சமுதாயத்தினரிடையே நிலவும் மகர்  போன்றவை வரதட்சனையாக கருதப்படுவதில்லை.
 
சம்பிரதாயப்படிவழங்கப்படும் பரிசுகள், பெற்றோரால் சுய விருப்ப‍த்தின் அடிப்படையில் தரப்படும் பொருட்கள் போன்றவை வரதட்சனையாக கருதப்படுவதில்லை. எனினும் அவ்வாறு பெறப்படும் பொருட்களின் பட்டியல் தயாரிக்க‍ப்பட்டு மணமகன் மற்றும் மணமகளின் கையொப்ப‍த்துடன் பராமரிக்க‍ப்பட வேண்டும் என 11985ம் ஆண்டில் வரதட்சனை தடுப்பு விதிகள் (மணமக்க‍ளுக்கு பரிசாக தரப்படும் பொருட்களின் பட்டியல் பாதுகாப்பு) பரிந்துரைக்கப்படுகிறது.
 
தண்டனைகள் 
 
1. வரதட்சனை வாங்குவது கொடுப்ப‍து மற்றும் அதற்கென தூண்டுவது ஆகியவை சட்ட‍ப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.15,000- அல்ல‍து வரதட்சனையாக பெற்ற தொகை இவற்றில் எது அதிகமோ அவ்வ‍ளவு அபராதமும் தண்டனையாக விதிக்க‍க் கூடிய குற்ற‍ங்களாகும்.
 
2. வரதட்சனை கேட்டு வாங்குவதும் சட்ட‍ப்படி 2 ஆண்டு வரை நீடிக்கத் தக்க‍ 6 மாத சிறைத் தண்டனையுடன் ரூ.15,000- அபராதமும் விதிக்கக் கூடிய அளவு குற்ற‍ங்களாகும்.
 
3. மணமகளுக்கு வரதட்சனை தொகையை குறிப்பிட்ட‍ காலத்திற்குள் மாற்றித் தராவிட்டால் சட்ட‍ப்படி 2 ஆண்டு வரை நீடிக்க‍த் தக்க‍ 6 மாத சிறைத் தண்டனையுடன் ரூ.5,000- முதல் ரூ.10,000- வரை அபராதமும் தண்டனையும் விதிக்க‍ப்படும்.
 
4. இச்சட்ட‍த்தின் கீழ் கையாளப்படும் குற்ற‍ங்கள் அனைத்தும் அபராதம் செலுத்த‍த்தக்க‍ பினையில் விட இயலாத தண்டனைக்குரியவை.
 
5. மேலும் இச்சட்ட‍த்தின் கீழ் கையாளப்படும் குற்ற‍ங்களில், கைது செய்தல், மற்றும் குற்ற‍வியல் நடைமுறை சட்ட‍ப் பரிவு 42ல் கூறியுள்ள‍வற்றைத் தவிர, விசாரணை போன்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். எனவே இச்சட்ட‍த்தின் கீழ் ஒரு நபரைக் கைது செய்ய ஆணை கண்டிப்பாக பெற வேண்டும்.
 
த‌வறு செய்பவர்களை தண்டிக்கும் வழிமுறைகள் 
 
* வரதட்சனை தடுப்பு அலுவலர் விசாரிக்க‍ப்பட்ட‍ புகார்கள் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட‍ நீதிமன்ற நடுவருக்கு அவருடைய கருத்துடன் குற்ற‍ப்பிரிவு வழக்கு (173-ன் படி அனுப்ப வேண்டும்.
 
* வரதட்சனை தடுப்பு அலுவலர் குற்றப்பிரிவு 10 எண். 5ன் படி நீதிமன்ற ஆணை இல்லாமலேயே குற்ற‍வாளியை கைது செய்வதற்கு காவல்துறை அலுவலருக்கு உள்ள‍ அதிகாரமும் பின்ன‍ர் சம்பந்தப்பட்ட‍ நீதிமன்ற நடுவருக்கு அறிக்கை அனுப்ப‍வும், அதிகாரம் படைத்துள்ளார்.
 
* வரதட்சனை தடுப்பு உபவிதிகள் 2ன்படி வரதட்சனை தடுப்பு அலுவலர் ஒரு குறிப்பிட்ட இடத்தை சோதனை மேற்கொள்ளும்போது அக்குறிப்பிட்ட‍ இடத்தில் உள்ள‍ உள்ளூர்வாசிகள் சேர்ந்து கொள்வதுடன் அவர்களையே சாட்சிகளாக போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு சாட்சிக்காக அழைக்கப்படும் போது சாட்சிக்கு வரமறுத்தால் இந்திய குற்ற‍வியல் சட்ட‍ப்பிரிவு 187-ன் படி குற்ற‍மாகும்.
 
வ‌ரதட்சனை கொடுமையால் ஏற்படும் மரணம் 
 
* காலம்காலமாக வரதட்சனை காரணங்களுக்காக பெண்கள், கொடுமைப்படுத்த‍ப்பட்டும், கொல்ல‍ப்ப‍ட்டும் வந்திருக்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் சட்ட‍ப்பிரிவு 304பி (ஐ.பி.சி.) அத்தகைய கொடுஞ்செயல் புரிவோரை தண்டிக்கிறது. திருமணமான 7 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டாலோ, மரணத்திற்கு முன் வரதட்சனையாக கனவனால் அல்ல‍து உறவினர்களால் கொடுமைப்படுத்த‍ப்பட்டிருந்தாலோ அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படும்.
 
* இந்திய தண்டனைச் சட்ட‍த்தின்படி 304பி (ஐ.பி.சி.) படி திருமணமான 7 ஆண்டுகளுக்குள் தீப்புண்கள் மற்றும் காயங்கள் அல்ல‍து இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டால் அது வரதட்சனை கொடுமையால் ஏறபட்ட‍ மரணமாக கருதப்படுகிறது.
 
* மரணத்திற்கு முன் வரதட்சனைக்காக கணவனால் அல்ல‍து உறவினர்களால் கொடுமைப்படுத்த‍ப்பட்டிருந்தாலும் அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படும்.
 
* வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன• குற்ற‍ங்கள் நிரூபிக்க‍ப்பட்டால் கணவனுக்கும் உறவினர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க‍ப்படலாம்.
 
எந்த சட்ட‍ப்பிரிவுகளின் கீழ் புகார் செய்ய‍லாம். 
 
1880ம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் (ஐ.பி.சி.) சட்ட‍ப்பிரிவு 304பி (ஐ.பி.சி.) 1973ஆம் ஆண்டின் குற்ற‍வியல் நடைமுறைச் சட்ட‍ப்பிரிவு (சி.ஆர்.பி.சி) 154 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவுசெய்ய‍லாம்.
 
யாரிடம் எப்பொழுது புகார் செய்ய‍லாம்? 
 
1. அருகிலுள்ள‍ காவல்நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக அல்ல‍து வாய்வார்த்தையாக புகார் செய்ய‍லாம்.
 
2. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய‍லாம்.
 
3. சம்பந்தப்பட்ட‍ அதிகாரி புகாரை பெறாவிட்டால், மாவட்ட‍ காவல் ஆணையாளருக்கு நேரிலோ அல்ல‍து தபால் மூலமோ புகாரை அனுப்பி பதிவு செய்ய‍லாம்.
 
4. காவல்துறை புகாரை பெற மறுத்தால், மாஜிஸ்டிரேட்டை அணுகி காவல்துறைக்கு உத்தரவிட்டு முதல் தகவல் அறிக்கைகளை பதிவுசெய்ய‍லாம்.
 
5. காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய‍ மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகி காவல்துறைக்கு உத்த‍ரவிட்டு பதிவு செய்ய வைக்க‍லாம்.
 
6. குற்ற‍ம் தொடர்பான அனைத்து தகவல்களையும் எடுத்துக் கூறி அவை அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையால் பதிவு செய்ய‍ப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
 
7. முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகலை பெற்றுக் கொள்ள புகார் அளிப்பவர்களுக்கு முழு உரிமையுண்டு.
 
8. குற்ற‍த்தில் ஈடுபட்ட‍வர்களின் பெயர், முகவரி, போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
 
9. குற்ற‍ம் நடைபெற்ற‍ நாள், தேதி, இடம், நேரம் போன்ற விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
 
10. வரதட்சனை மரணம் ஏற்படுத்த‍க் கூடிய காரணங்கள் உதாரணமாக சொத்துக்களுக்காகவோ, அல்ல‍து பணத்திற்காகவோ என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
 
11. மரணமனைந்தவர் உடலில் காணப்பட்ட‍ காயங்கள் அல்ல‍து தடங்கள் பற்றி குறிப்பிட வேண்டும்.
 
12. மரணத்தைப் பற்றி சாட்சியளிக்க‍க் கூடியவர்களை பற்றியும் குறிப்பிட வேண்டும்.
 
13. குற்றத்தைப் பற்றி தெரிந்த எவர் வேண்டுமானாலும் புகார் செய்ய‍லாம்.
 
வ‌ழக்கை எவ்வாறு பதிவுசெய்வது
 
1. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் காவல்துறை விசாரணையை தொடங்கும்.
 
2. சட்ட‍ப்பிரிவு 304பி-ன் கீழ் மாவட்ட‍ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய‍ப்படும்.
 
3. காவல்துறை கீழ்காண்பவற்றை நிரூபிக்க வேண்டும்.
 
அ) தீப்புண்கள் மற்றும் காயங்கள் அல்ல‍து இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டுள்ள‍தை பிரேத பரிசோதனை மூலம் நிரூபித்தல்.
 
ஆ) திருமணமான 7 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டுள்ள‍தை திருமணச் சான்று, திருமண பத்திரிகை புகைப்படங்கள் ஆகியவை மூலம் நிரூபித்தல்
 
இ) கொடுமைகள் வரதட்சனை தொடர்பாகத்தான் நடந்தது என்று  நிரூபித்தல்
 
குற்ற‍ம் சாட்டியவர்கள் மேற்கண்டவாறு நிரூபிக்கும் பட்சத்தில் கணவன் மற்றும் உறவினர்களால் வரதட்சனைக்காக மரணம் நிகழ்ச்சிக்காக நீதிமன்றம் கருதும், இதற்குமேல் தன்மீது கூறப்பட்டுள்ள‍ வரதட்சனை மரண குற்றத்தை செய்ய வில்லை எ ன்று நிரூபிக்கும் பொறுப்பு குற்ற‍ம் சாட்ட‍ப்பட்ட‍ நபரையே சேரும். இந்த குற்ற‍த்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க‍லாம்.
 
வ‌ரதட்சனை மரணம் தொடர்பான குற்ற‍ங்கள் அபராதம் செலுத்தத்தக்க‍ மற்றும் பினையில் விட இயலாத தண்டனைக்குரியவை மேலும் சமாதான உடன்படிக்கை மூலம் தீர்க்க முடியாதவை.
 
வ‌ழக்குக்காக எந்தக் கட்ட‍ணமும் செலுத்த‍ வேண்டியதில்லை.
 
மேல் நடவடிக்கைகள்
 
உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு
 
உச்ச‍ நீதிமன்றத்தில் மேல் முறையீடு
 
மாற்று வழி தீர்வுகள்
 
காவல்துறை புகாரை பெறாமல் மறுக்கும் பட்சத்தில் சட்ட‍ சேவை ஆணையத்தை (லீகல் சர்வீஸ் அத்தாரிட்டி) அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.
 
4.
 
குடும்ப வன்முறை – வரதட்சனை கொடுமையால் ஏற்படும் மரணம் 24
குடும்ப வன்முறைச் சட்ட‍ம் பிரிவு 498 அ 15
இந்துப் பெண்களின் வாழ்க்கைப் பொருளுதவிக்கான உரிமைச் சட்ட‍ம் 1956 – 18
இந்து பெண்களுக்கான சொத்துரிமைச் சட்ட‍ம் 5
சிறப்புச் சட்ட‍ங்கள் – பேறுகால சலுகைச் சட்ட‍ம் 21
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

இந்துத் திருமணச் சட்ட‍ம் 7

இந்துத் திருமணச் சட்ட‍ம் 7
 
1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்ட‍ம் கொண்டு வரப்பட்ட‍து. அச்சட்ட‍மானது இந்துக்கள், புத்த‍மதத்தினை பின்பற்றுபவர்கள், அல்ல‍து சீக்கியர்களுக்கு இச்ச‍ட்ட‍ம் பொருந்தும். ஆனால் முகமதியர்கள், கிறித்துவர்கள், பார்சி அல்ல‍து யூதர் மதத்தினைச் சேர்ந்தவர்களுக்கு இச்சட்ட‍ம் பொருந்தாது. இந்து திருமணத்தினை பதிவு செய்ய முடியும்.
 
ஒரு இந்து திருமணத்திற்கான தேவைகள் 
 
1955ஆம் ஆண்டின் இந்து திருமணச் சட்ட‍த்தின் பிரிவு 5ன்படி முறையான திருமணம் ஒன்றிற்கு தேவையான நிபந்தனை எடுத்துரைக்கின்றது.
 
1. திருமணத்தின் போது (தரப்பினர்) வெறும், உயிருடன் இருக்கும் வேறு ஒரு வாழ்க்கைத் துணையை கொண்டிருக்க‍க் கூடாது.
 
2. மனநிலை சரியில்லாதக் காரணத்தால் முறையான இசைவை கொடுக்க‍ முடியாத நிலையில் தரப்பினர் இருக்க‍க் கூடாது.
 
அ. முறையான இசைவை கொடுக்க‍க் கூடியவராக இருந்தாலும், திருமணத்திற்கும், குழந்தை பெறுவதற்கும் தகுதியற்ற வகையில் மனநிலை பாதிக்க‍ப்பட்டு இருக்க‍க்கூடாது.
 
ஆ. காக்காய் வலிப்பு அல்ல‍து பித்து நிலை ஆகியவற்றிற்கு அடிக்கடி உட்பட்ட‍வராக இருக்க‍க் கூடாது.
 
3. திருமணத்தின் போது மணமகன் 21 வயதினையும், மணமகள் 18 வயதினையும் நிறைவு பெற்ற‍வராக இருத்தல் வேண்டும்.
 
4. வழக்காறு அனுமதித்தாலன்றி, தரப்பினர் இருவரும் சபித்தர்களாக இருத்தல் கூடாது. சபிந்தர்கள் என்பவர்கள் பொது மூதாதையர் வழியாக குறுதி தொடர்பு கொண்ட உறவு முறையினர் இந்த உறவு முறை தாயின் வழியில் 3 தலைமுறைகளையும் தந்தையின் வழியில் 5 தலைமுறைகளையும் கொண்டதாகும்.
 
திருமணத் தீர்வழிகள் 
 
இந்து திருமணச் சட்ட‍மானது ஓர் இளம் பெண்ணுக்கு 4 வகையான திருமண தீர்வழிகள் அளிக்கின்றது. இந்த நான்கும் ஒன்றிலிருந்து இன்னொன்று மாறுப்பட்ட‍தாகும். ஒவ்வொன்றும் தனித்தன்மை பெற்று விளங்குகின்றன•
 
அ) கலந்துறை உரிமை மிட்டடைவிப்பு 
 
இப்பிரிவின் படி திருமணத்தைப் பாதுகாத்து, தரப்பினரை ஒன்று சேர வைக்கும் நோக்க‍ம் கொண்டது. தக்க‍ காரணமின்றி மணவாழ்க்கையிலிருந்து கணவன் விலகிச் சென்றால், சட்ட‍க் கடமையிலிருந்து சட்ட‍ ஒப்ப‍ந்தத்திலிருந்து விலகிச் செல்கிறார் என்று பொருளாகும். எனவே பிரிவு 9-ன் கீழ் மனைவி நீதிமன்றம் சென்று தீர்வு பெற உரிமையுண்டு. இதனால் பாதிக்க‍ப்பட்ட‍ உறவு சீரடைய வாய்ப்பு உண்டு. தவிர திருமண உறவைத் துண்டிக்காமலேயே அல்ல‍து தீர்ப்பு வழி பிரிவு கோராமலேயே இச்சட்ட‍த்தின் பிரிவுகள் 24 மற்றும் 25 வாயிலாக வழக்கிடையே வாழ்க்கைப் பொருளதவியும், நிரந்தர வாழ்க்கைப் பொருளுதவியும் கோர உரிமை உண்டு. மேலும் நீதிமன்றம் உத்த‍ரவு பிறப்பிக்கும் கணவன் ஓராண்டு காலத்திற்குள் மீண்டும் மணவாழ்க்கையில் இணைய மறுக்கும் பொழுது மண முறிவுக்கு மனைவி மனு கொடுக்க‍லாம்.
 
ஆ. தீர்ப்பு வழி பிரிவு (பிரிவு10)
 
தீர்ப்பு வழி பிரிவு என்பது சற்று வேறுபட்ட‍ தீர்வழியாகும். தரப்பினரைத் தனியே வாழ அனுமதிக்கிறது. இது தவிர மண வாழ்க்கையை நிறுத்தி வைக்கிறது. கணவனும், மனைவியும் ஒன்றாக இணைந்து வாழும் கட்டுப்பாடு இல்லை. ஆனால் திருமணம் கலைக்கப்படுவதில்லை. தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். இது அவர்கள் மீண்டும் இணைவதற்கும் தங்களுக்குள் உறவு முறையை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், வாய்ப்பினை அளக்கிறது. இவ்வாறு பிரிந்து வாழும் தம்பதியர் மீண்டும் ஒன்றிணைந்து வாழ விருப்ப‍ம கொள்வாரேயானல் அதற்கு தடை கிடையாது. பிரிவு 10(2)-ன் கீழ் மனுத்தாக்க‍ல் செய்து பிறப்பிக்க‍ப்பட்ட‍ தீர்ப்பினைத் தள்ளுபடி செய்ய‍க் கோரி விண்ண‍ப்பிக்க‍லாம். ஆனால் தரப்பினர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் மணவாழ்க்கை திரும்ப அமையாவிடில் தீர்ப்பாணை பிறப்பித்து  1 ஆண்டு காலம் கடந்திருந்தால் இதனையே காரணமாக கொண்டு பிரிவு 13 (1ஏ)1) இன் கீழ் மணமுறிவிற்கு மனுத்தாக்கல் செய்ய முடியும்.
 
பிரிவு 10-ன் கீழ்  கூறப்பட்டுள்ள‍ தீர்ப்பு வழிப்பிரிவு என்ற தீர்வுக்கான காரணங்களும் மணமுறிவிற்கான காரணங்களும் 1976ஆம் ஆண்டு சட்ட‍த்திருத்த‍ப்பிறகு ஒன்றேயாகும். இதில் மொத்த‍ம் 13 காரணங்கள் உள்ள‍ன• முதல் ஒன்பதும் கணவனுக்கும், மனைவிக்கும் உரிய பொது காரணங்கள் கடைசி 4 காரணங்களும் மனைவிக்கு மட்ட‍டும் கிடைக்க‍ கூடிய தனிக்காரணங்களாகும்.
 
1. திருமணத்திற்கு அப்பாற்பட்டு கொள்ளும் உடலுறவு
2. இரண்டாண்டுகளுக்கு குறையாத, கைவிடுதல்
3. கொடுமைப்படுத்துதல்
4. வேறு ஒரு சமயத்தை தழுவுதல்
5. பித்து நிலை அல்ல‍து மனநிலை ஒழுங்கின்மை
6. பரவக்கூடிய வகையில் உள்ள‍ (மேகநோய்)
7. குணப்படுத்த‍ முடியாத கொடிய தொழுநோய்
8. துறவுநிலை மேற்கொள்ள‍ மற்றும்
9. உயிரோடு இருக்கிறாரா என அறியப்படாமல் இருத்த‍ல் ஆகியவை ஆகும்.
 
மனைவிக்கு கிடைக்கும் காரணங்கள் 
 
1. இச்சட்ட‍ம் செயலுக்கு வரும்முன்னர் திருமணம் நடைபெற்று கணவனுக்கு இன்னொரு மனைவி இருத்த‍ல்.
 
2. பாலியல் வல்லுறவு மற்றும் இயற்கைக்கு எதிரான குற்ற‍ங்களுக்குக் கணவன் தண்டிக்க‍ப்படுதல்
 
3. 1956ம் ஆண்டின் இந்து தத்தெடுப்பு மற்றும் வாழ்க்கைப் பொளுதவி சட்ட‍த்தின் 18வது பிரிவின் கீழ் அல்ல‍து குற்ற‍வியல் நடைமுறைத் தொகுப்பில் 125பிரிவின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவிக்கான தீர்ப்பாணைப் பெற்று குறைந்தது ஓராண்டு காலத்திற்கு உடலுறவு இல்லாதிருத்தல்
 
4. குழந்தைத் திருமணத்தை மறுத்த‍ல் ஆகியவையாகும்.
 
இ. தீர்ப்பினை வாயிலாக திருமணத்தை ரத்து செய்தல் (பிரிவுகள் 11 மற்றும் 12)
 
திருமணங்க்ளைப் பொதுவாக மூன்று வகைகளாக பிரிக்கலாம். 
 
1. முறையாக செல்லும்படியாக கூடிய திருமணம்
2. இல்லா  நிலையது திருமணம்
3. தவிர்தகு திருமணம்
 
1. முறையாக செல்லும்படியாகக் கூடிய திருமணம்
 
இச்சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍ நிபந்தனைகளுக்கு உட்பட்டு செய்விக்க‍ப்படும் திருமணம் முறையான திருமணமாகும்.
 
2. இல்லா நிலைத் திருமணம்
 
சட்ட‍த்தின் பார்வையில் இத்திருமணம் கருதப்பட மாட்டாது. இதற்கான காரணங்கள்.
 
1) வாழ்க்கைத் துணை இருக்கும் போது மீண்டும் திருமணம் செய்து கொள்ள‍ல்
2) தடுக்க‍ப்பட்ட‍ உறவிடையே திருமணம்
3) சபிந்தர்களிடையேயான திருமணம்
4) தவிர்தகு திருமணம் (பிரிவு12)
 
1. உடலுறவு மூலம் திருமணத்தை நிறைவு செய்ய முடியாத குறைபாடு, இக்குறை உடல் கூறாகவோ அல்ல‍து நோயின் காரணமாகவோ இருக்க‍லாம். தரப்பினரின் மனநிலை பொறுத்து அமையலாம்.
 
2. பித்து நிலையின் காரணமாக ஒருவர் பிறவியிலேயே பித்து பிடித்து இருக்க‍லாம். மூளைக் கோளாறு நோயினால் தரப்பினர் பாதிக்க‍ப்பட்டு இருந்தால் மனைவி திருமணப் பந்தத்தினை தவிர்க்க‍ வாய்ப்பு உண்டு.
 
3. திருமண இசைவைக் கட்டாயமாக அல்ல‍து மோசடியாக பெறுதல் மற்றும் எதிர்மனுதாரரின் கர்ப்ப‍ம் ஆகியவை தவிர்தகு  திருமணமாகும்.
 
மணமுறிவு பிரிவு (13) 
 
இந்துச் சட்ட‍த்தைப் பொறுத்த‍வரை மணமுறிவு என்பது ஒரு புரட்சிகரமான மாறுதல் ஆகும். 1955ம் ஆண்டின் இந்துத் திருமணச் சட்ட‍ம் அனைவருக்கும் பொருந்துமாறு மணமுறிவை கொண்டு வந்துள்ள‍து. 1978ஆம் ஆண்டு திருத்த‍ம் மணமுறிவைப் பொறுத்து மிகவும் எளிதாகிவிட்டது.
 
ம‌ணமுறிவுக்கான காரணங்கள் 
 
1. தன்னுடைய வாழ்க்கைத் துணையுடன் அன்றி வேறுயாருடனாவது தன்னிச்சையாக உடலுறவு கொள்ளுதல்
 
2. கொடுமைப்படுத்துதல்
 
3. இரண்டு ஆண்டுகால அளவிற்கு கைவிடுதல்
 
4. பித்து நிலை
 
5. கடுமையான மற்றும் குணப்படுத்த‍ முடியாத தொழுநோய்
 
6. தொற்றிக் கொள்ள‍க்கூடிய மேகநோய்
 
7. வேறு ஒரு சமயத்தை தழுவுதல்
 
8. உலகைத் துறந்து துறவு நிலை மேற்கொள்ள‍ல்
 
9. ஏழு (7) ஆண்டுகாலம் உயிருடன் இருக்கிறாரா என்று அளிவிக்கப்பாமல் இருத்த‍ல்
 
10. நீதி வழிப் பிரிவிற்கான தீர்ப்பாணைக்குப் பின்பவரும் மீண்டும் மணவாழ்க்கையை தொடராதிருத்தல்
 
11. சேர்ந்து வாழவேண்டும் என்று தீர்ப்பாணை அளிக்க‍ப்பட்டும் மீண்டும் சேர்ந்து வாழாமல் இருத்த‍ல்
 
12. ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலான  மணமுறிவு
 
13. மனைவிக்குமட்டும் கிடைக்கும் சிறப்புக்காரணங்கள்
 
14. சட்ட‍ம் செயலுக்கு வரும் முன் திருமணம் முடிந்து கணவனுக்கு ஒன்றுக்கு மேற்பட்டு மனைவி உயிருடன் இருந்தால்
 
15. கணவன் பாலியல் வல்லுறவு அல்ல‍து இயற்கைக்கு முரணாக குற்ற‍ங்களால் தண்டிக்கப்பட்டிருந்தல்
 
16. 1956ம் ஆண்டின் இந்து தத்தெடுப்பு மற்றும் வாழ்க்கைப் பொருள் உதவி சட்ட‍த்தின் 18வது பிரிவின் கீழ் அல்ல‍து 1973ம்  ஆண்டின் குற்ற‍ நடைமுறைத் தொகுப்பின் 125 வது பிரிவின் கீழ் வாழ்க்கைப் பொருளுதவிக்கான தீர்ப்பாணைப்ப் பெற்று ஓராண்டு காலத்திற்கு மேல் உடலுறவு இல்லாதிருத்தல்.
 
ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலான மணமுறிவு (பிரிவு 118) 
 
இது 1978ம் ஆண்டு முதல் கிடைக்கும் புதிய தீர்வழியாகும். இப்பிரிவின்படி 
 
1. திருமணத் தரப்பினர் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.
 
2. அவ்வாறு வாழ்ந்து கொண்டிருப்ப‍து ஓராண்டு அல்ல‍து அதற்கு மேற்பட்டு இருத்த‍ல் வேண்டும்.
 
3. இருவரும் தங்களது திருமணம் கலைக்கப்பட வேண்டும் என்பதற்காக ஒருவருக்கொருவர் ஒப்புக் கொண்டு இருக்க‍ வேண்டும்.
 
4. நீதிமன்றதிதல் இருவரும் சேர்ந்து மனுத்தாக்க‍ல் செய்திட வேண்டும்
 
5. ஒப்புதலானது மனுத்தாக்க‍ல் செய்த பதினெட்டு மாதங்களுக்குள் அல்ல‍து வழக்கு விசாரணைக்கு வரும்முன் எந்த தரப்பினராலும் திரும்பப் பெற்றிருக்க‍க்கூடாது.
 
எந்த இடத்தில் மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்பட வேண்டும்?
 
பிரிவு 19ன் படி மாவட்ட‍ நீதிமன்றத்தில் இதற்கான மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்பட வேண்டும். குடும்ப நல நீதி மன்றங்கள் நிறுவப்பட்டிருந்தால் அதன் எல்லைக்குட்பட்ட‍ வரம்புக்கு உட்பட்ட‍ இடத்தில் மனுத்தாக்க‍ல் செய்ய வேண்டும். 1. திருமணம் நிகழ்ந்த இடம் அல்ல‍து 2 . மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்படும் போது எதிர்மனுதாரர் குடியிருக்கும் இடம் அல்ல‍து 3. திருமணத் தரப்பினர் இறுதியாக வசித்த இடம் அல்ல‍து 4. மனுத்தாக்க‍ல் செய்ய‍ப்படும்போது மனுதாரர் வசிக்கும் இடம் போன்ற இடங்களுக்கு ஆள்வரை வரம்பு கொண்ட இடங்களில் மனுத்தாக்க‍ல் செய்யலாம்.
 
***
 
கிறித்து திருமணச் சட்ட‍ம் 27
 
1872 ஆம் ஆண்டு இந்திய கிறித்துவ திருமணச் சட்ட‍ம் இயற்றப்பட்ட‍து. இச்சட்ட‍த்தின் கீழ் திருமணம் செய்து கொள்வோர் இருவரும் கிறித்துவராக இருக்க‍ வேண்டும். இருவரில் ஒருவர் கிறித்துவர் இல்லாதவராக இருக்க‍லாம். பிரிவு 5 கூறப்பட்ட‍வர்களால் மட்டுமே திருமணம் செய்து விக்க‍ப்பட வேண்டும். இதில் நடத்தப்பட வேண்டிய இடம், செய்விக்க‍ப்பட வேண்டிய நேரம் ஆகியவை கூறப்பட்டுள்ள‍ன• பிரிவு 60 கிறித்துவ திருமணத்திற்கான நிபந்தனைகள் கூறுகிறது.
 
* அதன்படி ஆண் 21 வயதிற்கும் பெண் 18 வயதிற்கும் குறைவாக இருத்தல் கூடாது.
 
* உயிருட‌ன் கூடி மனைவியோ அல்ல‍து கணவனோ அவர்களுக்கு இருக்க‍க் கூடாது.
 
* பிரிஉ 9ல் கூறப்பட்ட உரிமம் பெற்ற‍வரின் முன்னிலையிலும் மற்றும் குறைந்தது இரண்டு சாட்சிகள் முன்னிலையிலும் திருமணம் நடத்த‍ப்பட வேண்டும். மணமக்க‍ள் அடுத்த‍வரை கணவனாக அல்ல‍து மனைவியாக ஏற்றுக் கொள்வதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
கிறித்துவ திருமணத்தில் விவாகரத்து 
 
பொதுவாக மேலைநாடுகளில் கிறித்துவ தம்பதியினர் செய்து கொள்வதற்கு 18 வகையான காரணங்கள் உள்ள‍ன• ஆனால் இநிதய கிறித்து திருமணச் சட்ட‍ம் 1872 மறும் இந்திய கிறித்துவ விவாகரத்து சட்ட‍ம் 1889-ன் படி 5 காரணங்கள் மட்டுமே விவாகரத்துக்கு எடுத்துக் கொள்ள‍ப்படுகிறது.
 
1. பிறன்மனை நோக்குதல்
 
2. கொடுமை
 
3. பிரிந்து இருத்த‍ல்
 
4. ஆண்மையின்மை
 
5. கடுமையான நோய்
 
 
1. பிறன்பனை நோக்குதல் 
 
கிறித்துவ சட்ட‍த்தின் படி பிறன்மனை நோக்குதல் என்ற ஒரே காரணத்திற்காக பெண் விவாகரது கோரமுடியாது. கொடுமைப்படுத்த‍ப்பட்டார் என்ற காரணம் இருந்தால் மட்டும் பெண் விவாகரத்து கோர முடியும். இருந்தபோதிலும் சில வருடங்களுக்கு முன்பு மும்பை உயர்நீதிமன்றம் சில வருடங்களுக்கு முன்பு பிறன்மனை நோக்குதல் இருந்தாலே மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெறலாம் என்று கூறப்பட்டுள்ள‍து.
 
2. கொடுமைக்கு உள்ளாதல் 
 
கொடுமை என்பது உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் உள்ள‍தைப்பற்றி சட்ட‍த்தில் குறிப்பிட்டுள்ள‍னர். பிறன்மனை நோக்குதல் மற்றும் கொடுமைக்கு உள்ளாதல் என்ற காரணங்களாக கிறித்துவ பெண் மணவிலக்கு கோரலாம். எவ்வாறு இருந்த போதிலும் தற்பொழுது கொடுமைக்கு ஆளாதல் என்ற காரணத்தினை வைத்து ஒரு விவாகரத்து கோரலாம்.
 
3. பிரிந்து வாழுதல் 
 
பிரிந்து வாழுதல் என்பது காரணங்கள் கூறப்படுகிறது மனைவியுடன் கணவனோ கணவனுடன் மனைவியோ சேர்ந்து வாழ மறுப்பது, எவ்வித காரணமும் இல்லாமல் கணவனோ மனைவியோ காணாமல் போவது, ஏழு வருடங்கள் வரை கணவனோ, மனைவியோ காணாமல் போனால் அவர் பிரிந்து வாழ்வதாக கருதப்பட்டு விவாகரத்து கோரலாம்.
 
4. ஆண்மையின்னை 
 
க‌ணவனோ, மனைவியோ திருமணக் கடமையினை நிறைவேற்றாமல் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்க‍ப்பட்டிருக்கும் போது அதனை காரணம் காட்டி விவாரத்து கோரலாம்.
 
5. கடுமையான நோய் 
 
ம‌னநோய் மற்றும் உடல்நலக் கோளாறு மற்றும் பாலியல் நோய் காரணமாக விவாகரத்து கோரலாம். தொழுநோயால் பாதிக்க‍ப்பட்டு இருந்தால் அதனை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியாது. ஆனால் இந்து திருமணச் சட்ட‍த்தின்படி விவாகரத்து கோரலாம்.
 
விவாகரத்து சட்ட‍த்திருத்த‍ம் பின்பு
 
பிரிவு 10
 
விவாகரத்து சம்பந்தமாக சட்ட‍த்திருத்த‍ம் கொண்டு வரப்பட்ட‍து. அதன்படி கீழ்க்காணும் காரணங்களுக்காக கணவன், மனைவி  இருவருமே விவாகரத்து கோரலாம்.
 
1. பிறன் மனை நோக்குதல்
 
2. கொடுமைக்கு ஆளாகுதல்
 
இவ்வாறாக சட்ட‍த்தில் சொல்லப்பட்ட‍ போதிலும் கீழ்க்காணும் காரணங்களுக்காக மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெற வழிசெய்துள்ள‍து.
 
1. கற்பழித்தல்
 
2. மிருகத்தனமாக நடந்து கொள்ளுதல்
 
3. இயற்கைக்கு மாறாக மிருகங்களுடன் கொள்ளுதல்
 
இவை தவிர பிரிவு 10ஏ ன் படி கணவனும், மனைவியும் மனமொத்து பிரிந்து கொள்ள‍ மனு செய்யலாம்.
 
விவாகரத்தினால் என்ன‍ உரிமை கிடைக்கின்றது.
 
1. விவாகரத்து மூலம் கணவன், மனைவி சேர்ந்து வாழ்வது தவிர்க்க‍ப்படுகிறது.
 
2. விவாகரத்து மூலம் கணவனோ மனைவியோ மறுமணம் செய்து கொள்ள‍லாம்.
 
குழந்தைகளின் நலன் பாதிக்க‍ப்படாமல் விவாகரத்து ஏற்பட்ட‍ பொழுது அவர்களின் நலன் பெற்றோர்களால் பாதுகாக்க‍ப்படுகிறது. குழந்தைகளை யார் நன்றாக பராமரிப்பார்களோ அவர்களிடமே குழந்தை இருக்கும் ஆனால் இந்திய நீதி மன்றங்களில் குழந்தைகளை பராமரிப்பு தாயிடமே வழங்கப்படுகின்றன• இவை விவாகரத்து நடவடிக்கையுடன் சேர்ந்தே நடத்தப்படுகின்றன•
 
****
 
முகமதியர் திருமணச் சட்ட‍ம் 29
 
இஸ்லாமிய சட்ட‍த்தில் திருமணம் அல்ல‍து நிக்கா என்பது ஓர் உரிமையில் ஒப்ப‍ந்தமாகும். முகமதியர்களைப் பொறுத்த‍வரை திருமணத்தைக் குறித்து சட்ட‍ம் ஏதும் இல்லை. அவர்கள் தங்களது இன்முறை சட்ட‍த்தின்படி ஆளப்படுவர். இஸ்லாமிய திருமணம் ஓர் ஒப்ப‍ந்தம் ஆகும்.
 
1. திருமணத் தரப்பினர் (திட சித்த‍ம்) உள்ள‍வராகவும்
 
2. பருவம் அடைந்தவராகவும், இருக்க‍ வேண்டும். பதினைந்து வயது நிரம்பியவர் திருமணம் செய்து கொள்ள‍லாம்.
 
3. திருமணத்திற்கான பரிவுரையும் ஏற்புரையும் செய்வது இரு ஆண் சாட்சிகள் அல்ல‍து 1 ஆண் மற்றும் இரு பெண் சாட்சிகள் முன்னிலையில் இருக்க‍ வேண்டும்.
 
4. திருமண தரப்பினர் இடையே தடைசெய்ய‍ப்பட்ட‍ உறவுமுறை இருக்க‍க்கூடாது.
 
5. ஒரு முஸ்லீம் பெண்மணி முஸ்லிம் அல்லாதவரை மணக்க‍ இயலாது.
 
6. ஒரு முஸ்லிம் ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
 
7. ஏழு வயதுக்கு உட்பட்ட‍வர் செய்து கொள்ளும் திருமணம் இல்லாநிலையது ஆகும்.
 
முகமதியர் கட்ட‍த்தில் திருமணத்தைக் கலைத்திட ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி காரணங்கள் கொடுக்க‍ப்பட்டுள்ள‍ன• ஒரு முகமதிய ஆண் தன்னிச்சையாக நீதிமன்றம் வாயிலாக அல்லாமல் தாமாக தக்க காரணம் ஏதும் கூறாமல் திருமணத்தைக் கலைக்க முடியம். இது தலாக் என்று அழைக்கப்படுகிறது. ஒரு முகமதியப் பெண்ணுக்கு நீதிமன்றம் வாயிலாக 1939ஆம் ஆண்டில் முஸ்லிம் திருமணக் கலைப்புச் சட்ட‍ம் கொண்டு வரப்பட்ட‍து. கீழ்க்காணும் காரணங்களுக்காக ஒரு முகமதிய பெண் மணமுறிவு கோரலாம் அவை
 
* நான்கு ஆண்டுகளுக்கு மேல் கணவன் இருக்கும் இடம் அறியப்படாமல் இருத்த‍ல்
 
* இரண்டு ஆண்டு காலத்திற்கு மேல் கணவன், மனைவியை பராமரிக்காமல் இருத்தல்
 
* ஏழாண்டு காலத்திற்கு மேற்பட்டு கணவன் சிறைத்தண்டனை பெற்றிருத்தல்
 
* மூன்றாண்டு காலத்திற்கு மேல் மனைவியுடன் ஒன்றிணைந்து வாழ மறுத்தல் அல்ல‍து தவறுதல்
 
* திருமணத்தின் போது கணவன், பித்து பிடித்து, மனநிலை சரியில்லாமல் இருந்து அது தொடர்ந்தால்
 
* இரண்டாண்டுகளுக்கு மேற்பட்டு கணவன், பித்து நிலையினால் பாதிக்க‍ப்பட்டு இருத்தல் அல்ல‍து தொழுநோய் அல்ல‍து கடும் மேகநோயினால் பாதிக்க‍ப்பட்டு இருத்தல்.
 
* பருவம் அடைந்தும் (பதினைந்து வயது ஆனதும்) மனைவி திருமணத்தை மறுதலித்தல்.
 
* மனைவியைக் கணவன் கொடுமைப்படுத்துதல், மேற்குறித்த காரணங்களுடன் பிரிவு-4ன்கீழ் குறிப்பிட்ட கணவனின் மத மாற்ற‍ம் ஒரு கூடுதல் காரணமாகும்.
 
இவைகள் ஒரு மனைவிக்கு கிடைக்கக்கூடிய மணமுறிவுக்கான காரணங்கள் ஆகும்.
 
மேற்குறிப்பிட்ட‍ சில காரணங்களுடன் வேறு சில காரணங்களும் மணமுறிவிற்காக ஒரு முக்கிய பெண்மணிக்கு அளிக்கப்பட்டுள்ள‍து. இதில் குலா என்பது ஒருவருக்கொருவர் இசைவின் பேரிலானது. இதன்படி மனைவி, கணவனிடம் அதிருப்தியுற்றால் திருமண ஒப்ப‍ந்தத்திலிருந்து தன்னை விடுவிக்குமாறும் அதற்கான இழப்பீடு அளிப்பதாகவும் கூறலாம். இதனை கணவன், ஏற்றுக்கொண்டால் உடனடியாக மணமுறிவு ஏற்படும். அதற்கான மறுபயன் தன்னுடைய மணக்கொடையை விட்டுக் கொடுப்பதாக இருக்க‍லாம்.
 
முபராத் என்னும் மணமுறிவிலும் ஒருவருக்கொருவர் இசைவின் பேரில் திருமணம் கலைக்கப்படுகிறது. தலாக் இ தஃபிஸ் மனைவி, கணவனிடமிருந்து விவாகரத்து பெறலாம். இதில் மனைவி தன் அதிகாரத்தினை காட்டி விவாகரத்து செய்ய‍லாம்.
 
இஸ்லாமிய திருமணமும் இந்திய சட்ட‍மும் 
 
இஸ்லாமிய முறையின்படி திருமணம் பதிவு செய்ய‍ப்பட்டு இருப்பின் அப்பெண்களுக்கு பெண்கள் வன்கொடுமை சட்ட‍ம் பாதுகாப்பு அளிக்கின்றது பெண் வன்கொடுமைச் சட்ட‍ம் பிரிவு 498ஏ , இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் படி கொமைக்கு ஆளானாலும் வரதட்சனை தடைச்சட்ட‍ம் 1961போன்றவைகளும் இஸ்லாமிய பெண்களுக்கு பயன் அளிக்கின்றது. மேலும் சிறப்புத் திருமணச் சட்ட‍ம் 1954-ன் படி பதிவுத் திருமணம் செய்ய‍ப்பட்டு இருந்தாலும் இஸ்லாமிய பெண்களுக்குப் பொருந்தும்.
 
இஸ்லாமிய பெண்களின் உரிமைச் சட்ட‍ம் 1986
 
இச்சட்ட‍த்தின்படி கணவன், மனைவியை காப்பாற்றுவதற்கு கடமைப்பட்ட‍வர், மனைவிக்கு கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு உரிமை உண்டு. குற்ற நீதி நடுவர் மன்றத்தில் ஜீவனாம்சம் பெறுவதற்கு மனுத்தாக்க‍ல் செய்ய‍ முடியும்.
 
* விவாகரத்து பெற்ற‍வராக இருக்க வேண்டும்.
 
* திருமணத்தின் பொழுது இருந்த வாழ்க்கைத் தரம்
 
* முன்னாள் கணவரிடமிருந்து பெறலாம்.
 
அவர் ஜீவனாம்சம் வழங்க மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் பினை ஆணை பிறப்பித்து அவரிடமிருந்து தொகையினை பெறலாம். ஆனால் விவாகரத்து பெற்ற‍ பின்பு 2ம் திருமணம் செய்து கொண்டுவிட்டால் ஜீவனாம்சம் கேட்க முடியாது.
 
சிறப்புத் திருமணச் சட்ட‍ம் 
 
1954ம் ஆண்டில் சிறப்புத் திருமணச் சட்ட‍ம் இயற்றப்பட்டுள்ள‍து. இது பல்வேறு சமயத்தைச் சார்ந்தவர். தங்களிடையே திருமணம் செய்து கொள்ள‍ வழி கோருகிறது. ஓர் இந்து இன்னொரு இந்துவை இச்ச‍ட்ட‍த்தின் கீழ் திருமணம் செய்து கொள்ள‍லாம். பொதுவாக இவைப் பதிவுத் திருமணம் என்று அழைக்கப்படுகின்றன• இச்சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍ நிபந்தனைகள், திருமணத் தீர்வழிகள் போன்றவை இந்து திருமணச் சட்ட‍த்தில் கூறப்பட்டுள்ள‍து போன்றதாகும்.
 
****
 
வ‌ரதட்சனை தடுப்புச் சட்ட‍ம் 1961 – 11
 
திருமணத்திற்கு வரதட்சனை கொடுப்ப‍தாக பெண்ணின் பெற்றோர்கள் வாக்கு அளித்து பிறகு கொடுக்க முடியாமல் போனால் திருமணம் முடிந்த பின் அந்த பெண், அதற்காக துன்புறுத்த‍ப்படுவதோ அதனால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வதோ அல்ல‍து அந்த பெண்ணை தற்கொலைக்குத் தூண்டும் அளவு கொடுமை புரிவதோ அல்ல‍து அப்பெண்ணை கொலைசெய்வது போன்ற நிகழ்ச்சிகள் அதிகமானதால் வரதட்சனை தடைச்சட்ட‍ம் 1961ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட‍து.
 
வ‌ரதட்சனை இந்திய சமுதாயத்தில் ஒரு சாபக்கேடாக கருதப்படுகிறது. மணப்பெண் எரிப்பு வழக்குகள் , வரதட்சனை மரணங்கள், வரதட்சனை கொடுமைகள் முதலியை சமுதாயத்தில் சாதாரண நிகழ்வுகளாகி விட்டன. வரதட்சனை தொடர்பான குற்ற‍ங்கள் குறித்த சட்ட‍ங்கள் கடுமையானவை.
 
சட்ட‍ம் பற்றிய விளக்க‍ம் 
 
நேரடியாகவோ, மறைமுகமாவோ கீழ்க்காணும் வகையில் தரப்படும் அல்ல‍து தருவதாக ஒப்புக் கொள்ள‍ப்படும் தொகையோ அல்ல‍து சொத்தோ வரதட்சனையாக கருதப்படும்.
 
* திருமணம் செய்து கொள்ளும் ஒரு தரப்பினரிடமிருந்து மற்றொரு தரப்பினரால்
 
* திருமணம் செய்து கொள்ளும் மணமகள் அல்ல‍து மணமகளின் பெற்றோரால்
 
* வேறு மற்றொரு நபரால்
 
* திருமணம் செய்து கொள்ளும் ஏதாவது ஒரு தரப்பினரால்
 
* திருமணம் தொடர்பானவர் இடையிலோ
 
* முஸ்லீம் திருமண சட்ட‍ப்படி அச்சமுதாயத்தினரிடையே நிலவும் மகர்  போன்றவை வரதட்சனையாக கருதப்படுவதில்லை.
 
சம்பிரதாயப்படிவழங்கப்படும் பரிசுகள், பெற்றோரால் சுய விருப்ப‍த்தின் அடிப்படையில் தரப்படும் பொருட்கள் போன்றவை வரதட்சனையாக கருதப்படுவதில்லை. எனினும் அவ்வாறு பெறப்படும் பொருட்களின் பட்டியல் தயாரிக்க‍ப்பட்டு மணமகன் மற்றும் மணமகளின் கையொப்ப‍த்துடன் பராமரிக்க‍ப்பட வேண்டும் என 11985ம் ஆண்டில் வரதட்சனை தடுப்பு விதிகள் (மணமக்க‍ளுக்கு பரிசாக தரப்படும் பொருட்களின் பட்டியல் பாதுகாப்பு) பரிந்துரைக்கப்படுகிறது.
 
தண்டனைகள் 
 
1. வரதட்சனை வாங்குவது கொடுப்ப‍து மற்றும் அதற்கென தூண்டுவது ஆகியவை சட்ட‍ப்படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.15,000- அல்ல‍து வரதட்சனையாக பெற்ற தொகை இவற்றில் எது அதிகமோ அவ்வ‍ளவு அபராதமும் தண்டனையாக விதிக்க‍க் கூடிய குற்ற‍ங்களாகும்.
 
2. வரதட்சனை கேட்டு வாங்குவதும் சட்ட‍ப்படி 2 ஆண்டு வரை நீடிக்கத் தக்க‍ 6 மாத சிறைத் தண்டனையுடன் ரூ.15,000- அபராதமும் விதிக்கக் கூடிய அளவு குற்ற‍ங்களாகும்.
 
3. மணமகளுக்கு வரதட்சனை தொகையை குறிப்பிட்ட‍ காலத்திற்குள் மாற்றித் தராவிட்டால் சட்ட‍ப்படி 2 ஆண்டு வரை நீடிக்க‍த் தக்க‍ 6 மாத சிறைத் தண்டனையுடன் ரூ.5,000- முதல் ரூ.10,000- வரை அபராதமும் தண்டனையும் விதிக்க‍ப்படும்.
 
4. இச்சட்ட‍த்தின் கீழ் கையாளப்படும் குற்ற‍ங்கள் அனைத்தும் அபராதம் செலுத்த‍த்தக்க‍ பினையில் விட இயலாத தண்டனைக்குரியவை.
 
5. மேலும் இச்சட்ட‍த்தின் கீழ் கையாளப்படும் குற்ற‍ங்களில், கைது செய்தல், மற்றும் குற்ற‍வியல் நடைமுறை சட்ட‍ப் பரிவு 42ல் கூறியுள்ள‍வற்றைத் தவிர, விசாரணை போன்ற நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். எனவே இச்சட்ட‍த்தின் கீழ் ஒரு நபரைக் கைது செய்ய ஆணை கண்டிப்பாக பெற வேண்டும்.
 
த‌வறு செய்பவர்களை தண்டிக்கும் வழிமுறைகள் 
 
* வரதட்சனை தடுப்பு அலுவலர் விசாரிக்க‍ப்பட்ட‍ புகார்கள் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரங்கள் இருப்பின் சம்பந்தப்பட்ட‍ நீதிமன்ற நடுவருக்கு அவருடைய கருத்துடன் குற்ற‍ப்பிரிவு வழக்கு (173-ன் படி அனுப்ப வேண்டும்.
 
* வரதட்சனை தடுப்பு அலுவலர் குற்றப்பிரிவு 10 எண். 5ன் படி நீதிமன்ற ஆணை இல்லாமலேயே குற்ற‍வாளியை கைது செய்வதற்கு காவல்துறை அலுவலருக்கு உள்ள‍ அதிகாரமும் பின்ன‍ர் சம்பந்தப்பட்ட‍ நீதிமன்ற நடுவருக்கு அறிக்கை அனுப்ப‍வும், அதிகாரம் படைத்துள்ளார்.
 
* வரதட்சனை தடுப்பு உபவிதிகள் 2ன்படி வரதட்சனை தடுப்பு அலுவலர் ஒரு குறிப்பிட்ட இடத்தை சோதனை மேற்கொள்ளும்போது அக்குறிப்பிட்ட‍ இடத்தில் உள்ள‍ உள்ளூர்வாசிகள் சேர்ந்து கொள்வதுடன் அவர்களையே சாட்சிகளாக போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு சாட்சிக்காக அழைக்கப்படும் போது சாட்சிக்கு வரமறுத்தால் இந்திய குற்ற‍வியல் சட்ட‍ப்பிரிவு 187-ன் படி குற்ற‍மாகும்.
 
வ‌ரதட்சனை கொடுமையால் ஏற்படும் மரணம் 
 
* காலம்காலமாக வரதட்சனை காரணங்களுக்காக பெண்கள், கொடுமைப்படுத்த‍ப்பட்டும், கொல்ல‍ப்ப‍ட்டும் வந்திருக்கிறார்கள். இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் சட்ட‍ப்பிரிவு 304பி (ஐ.பி.சி.) அத்தகைய கொடுஞ்செயல் புரிவோரை தண்டிக்கிறது. திருமணமான 7 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டாலோ, மரணத்திற்கு முன் வரதட்சனையாக கனவனால் அல்ல‍து உறவினர்களால் கொடுமைப்படுத்த‍ப்பட்டிருந்தாலோ அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படும்.
 
* இந்திய தண்டனைச் சட்ட‍த்தின்படி 304பி (ஐ.பி.சி.) படி திருமணமான 7 ஆண்டுகளுக்குள் தீப்புண்கள் மற்றும் காயங்கள் அல்ல‍து இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டால் அது வரதட்சனை கொடுமையால் ஏறபட்ட‍ மரணமாக கருதப்படுகிறது.
 
* மரணத்திற்கு முன் வரதட்சனைக்காக கணவனால் அல்ல‍து உறவினர்களால் கொடுமைப்படுத்த‍ப்பட்டிருந்தாலும் அது வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணமாக கருதப்படும்.
 
* வரதட்சனை கொடுமையால் ஏற்பட்ட‍ மரணங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன• குற்ற‍ங்கள் நிரூபிக்க‍ப்பட்டால் கணவனுக்கும் உறவினர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க‍ப்படலாம்.
 
எந்த சட்ட‍ப்பிரிவுகளின் கீழ் புகார் செய்ய‍லாம். 
 
1880ம் ஆண்டின் இந்திய தண்டனைச் சட்ட‍த்தின் (ஐ.பி.சி.) சட்ட‍ப்பிரிவு 304பி (ஐ.பி.சி.) 1973ஆம் ஆண்டின் குற்ற‍வியல் நடைமுறைச் சட்ட‍ப்பிரிவு (சி.ஆர்.பி.சி) 154 ஆகியவற்றின் கீழ் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்) பதிவுசெய்ய‍லாம்.
 
யாரிடம் எப்பொழுது புகார் செய்ய‍லாம்? 
 
1. அருகிலுள்ள‍ காவல்நிலையத்தில் எழுத்துப் பூர்வமாக அல்ல‍து வாய்வார்த்தையாக புகார் செய்ய‍லாம்.
 
2. முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்ய‍லாம்.
 
3. சம்பந்தப்பட்ட‍ அதிகாரி புகாரை பெறாவிட்டால், மாவட்ட‍ காவல் ஆணையாளருக்கு நேரிலோ அல்ல‍து தபால் மூலமோ புகாரை அனுப்பி பதிவு செய்ய‍லாம்.
 
4. காவல்துறை புகாரை பெற மறுத்தால், மாஜிஸ்டிரேட்டை அணுகி காவல்துறைக்கு உத்தரவிட்டு முதல் தகவல் அறிக்கைகளை பதிவுசெய்ய‍லாம்.
 
5. காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்ய‍ மறுத்தால் உயர்நீதிமன்றத்தை அணுகி காவல்துறைக்கு உத்த‍ரவிட்டு பதிவு செய்ய வைக்க‍லாம்.
 
6. குற்ற‍ம் தொடர்பான அனைத்து தகவல்களையும் எடுத்துக் கூறி அவை அனைத்தும் முதல் தகவல் அறிக்கையில் காவல் துறையால் பதிவு செய்ய‍ப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
 
7. முதல் தகவல் அறிக்கையின் ஒரு நகலை பெற்றுக் கொள்ள புகார் அளிப்பவர்களுக்கு முழு உரிமையுண்டு.
 
8. குற்ற‍த்தில் ஈடுபட்ட‍வர்களின் பெயர், முகவரி, போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிட வேண்டும்.
 
9. குற்ற‍ம் நடைபெற்ற‍ நாள், தேதி, இடம், நேரம் போன்ற விவரங்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
 
10. வரதட்சனை மரணம் ஏற்படுத்த‍க் கூடிய காரணங்கள் உதாரணமாக சொத்துக்களுக்காகவோ, அல்ல‍து பணத்திற்காகவோ என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.
 
11. மரணமனைந்தவர் உடலில் காணப்பட்ட‍ காயங்கள் அல்ல‍து தடங்கள் பற்றி குறிப்பிட வேண்டும்.
 
12. மரணத்தைப் பற்றி சாட்சியளிக்க‍க் கூடியவர்களை பற்றியும் குறிப்பிட வேண்டும்.
 
13. குற்றத்தைப் பற்றி தெரிந்த எவர் வேண்டுமானாலும் புகார் செய்ய‍லாம்.
 
வ‌ழக்கை எவ்வாறு பதிவுசெய்வது
 
1. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தவுடன் காவல்துறை விசாரணையை தொடங்கும்.
 
2. சட்ட‍ப்பிரிவு 304பி-ன் கீழ் மாவட்ட‍ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய‍ப்படும்.
 
3. காவல்துறை கீழ்காண்பவற்றை நிரூபிக்க வேண்டும்.
 
அ) தீப்புண்கள் மற்றும் காயங்கள் அல்ல‍து இயற்கை அல்லாத வகையில் மரணம் ஏற்பட்டுள்ள‍தை பிரேத பரிசோதனை மூலம் நிரூபித்தல்.
 
ஆ) திருமணமான 7 ஆண்டுகளுக்குள் மரணம் ஏற்பட்டுள்ள‍தை திருமணச் சான்று, திருமண பத்திரிகை புகைப்படங்கள் ஆகியவை மூலம் நிரூபித்தல்
 
இ) கொடுமைகள் வரதட்சனை தொடர்பாகத்தான் நடந்தது என்று  நிரூபித்தல்
 
குற்ற‍ம் சாட்டியவர்கள் மேற்கண்டவாறு நிரூபிக்கும் பட்சத்தில் கணவன் மற்றும் உறவினர்களால் வரதட்சனைக்காக மரணம் நிகழ்ச்சிக்காக நீதிமன்றம் கருதும், இதற்குமேல் தன்மீது கூறப்பட்டுள்ள‍ வரதட்சனை மரண குற்றத்தை செய்ய வில்லை எ ன்று நிரூபிக்கும் பொறுப்பு குற்ற‍ம் சாட்ட‍ப்பட்ட‍ நபரையே சேரும். இந்த குற்ற‍த்திற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க‍லாம்.
 
வ‌ரதட்சனை மரணம் தொடர்பான குற்ற‍ங்கள் அபராதம் செலுத்தத்தக்க‍ மற்றும் பினையில் விட இயலாத தண்டனைக்குரியவை மேலும் சமாதான உடன்படிக்கை மூலம் தீர்க்க முடியாதவை.
 
வ‌ழக்குக்காக எந்தக் கட்ட‍ணமும் செலுத்த‍ வேண்டியதில்லை.
 
மேல் நடவடிக்கைகள்
 
உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு
 
உச்ச‍ நீதிமன்றத்தில் மேல் முறையீடு
 
மாற்று வழி தீர்வுகள்
 
காவல்துறை புகாரை பெறாமல் மறுக்கும் பட்சத்தில் சட்ட‍ சேவை ஆணையத்தை (லீகல் சர்வீஸ் அத்தாரிட்டி) அணுகுவதைத் தவிர வேறு வழியில்லை.
 
4.
 
குடும்ப வன்முறை – வரதட்சனை கொடுமையால் ஏற்படும் மரணம் 24
குடும்ப வன்முறைச் சட்ட‍ம் பிரிவு 498 அ 15
இந்துப் பெண்களின் வாழ்க்கைப் பொருளுதவிக்கான உரிமைச் சட்ட‍ம் 1956 – 18
இந்து பெண்களுக்கான சொத்துரிமைச் சட்ட‍ம் 5
சிறப்புச் சட்ட‍ங்கள் – பேறுகால சலுகைச் சட்ட‍ம் 21

வாத்தியாருக்கு பகிடி கூடிப்போச்சு ....
இது ஒன்றும் தெரியாமலா? இங்கே எழுதுகிறார்கள் 

அவர்களுக்கு இதுக்கு மேலேயும் தெரியும் 

சீமானின் பெயர் தலைப்பில் இருக்கிறது 
தங்காளால் முடிந்த மக்கள் சேவையை செய்கிறார்கள் அவ்வளவுதான் 

இது இதனுடன் முடியப்போவதுமில்லை 
அடுத்தத்தமுறை விஜலஷ்மிக்கு வயித்துக்குத்தோ வாந்திபேதியோ 
வந்து மருத்துவமனை சென்று பில் கட்டிட முடியாமல் போனால் 
இது மீண்டும் இங்கு பதியப்படும் 
எங்களால் மீண்டும் இது அலசப்படும்.

அலசுவத்துக்கு தேவையான அலவாங்கு கத்தி கோடரி இருந்தால் கொண்டுவங்கள். 
எல்லோரும் கூடி இருந்து கிண்டுவோம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

வாத்தியாருக்கு பகிடி கூடிப்போச்சு ....
இது ஒன்றும் தெரியாமலா? இங்கே எழுதுகிறார்கள் 

அவர்களுக்கு இதுக்கு மேலேயும் தெரியும் 

சீமானின் பெயர் தலைப்பில் இருக்கிறது 
தங்காளால் முடிந்த மக்கள் சேவையை செய்கிறார்கள் அவ்வளவுதான் 

இது இதனுடன் முடியப்போவதுமில்லை 
அடுத்தத்தமுறை விஜலஷ்மிக்கு வயித்துக்குத்தோ வாந்திபேதியோ 
வந்து மருத்துவமனை சென்று பில் கட்டிட முடியாமல் போனால் 
இது மீண்டும் இங்கு பதியப்படும் 
எங்களால் மீண்டும் இது அலசப்படும்.

அலசுவத்துக்கு தேவையான அலவாங்கு கத்தி கோடரி இருந்தால் கொண்டுவங்கள். 
எல்லோரும் கூடி இருந்து கிண்டுவோம் 

ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயங்களில் ஆராய்வது
தவிர்க்கப்பட வேண்டும் அரசியலில் அவர் எதிரியாக இருந்தாலும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயங்களில் ஆராய்வது
தவிர்க்கப்பட வேண்டும் அரசியலில் அவர் எதிரியாக இருந்தாலும்

 

1. நீங்கள் தந்த நீண்ட வெட்டி ஒட்டல் இந்திய  திருமண சட்டம் சம்பந்தமானது.  இங்கே கொடுக்கபட்டுள்ள புகார் திருமணமான இருவர் இடையே எழுந்த பிணக்கோ அல்லது அவர்களிடையே இருந்த உறவு திருமண பந்தமா இல்லையா என்ற கேள்வியோ அல்ல. 

அண்மையில் ஒரு பெண் கொடுத்த புகாரில் முன்நாள் அமைச்சர் மணிகண்டன் கைதானாரே? அவர்கள் என்ன சட்டபடி கணவன் மனைவியா? இல்லை.

இவர்கள் மேலே தொடுக்கபடும் வழக்கு இ பி கோ 420 அடிப்படையில் cheating என்பதின் கீழ் வரும்.

இவ்வகையான புக்கார்களுக்கும் இந்திய திருமண சட்டத்துக்கும் தொடர்பிருப்பதாக தெரியவில்லை.

2. ஒரு அரசியல் தலைவர் 420 பேர்வழி எனும் குற்றச்சாடு ஒரு போதும் அந்தரங்க விடயம் அல்ல. மொனிக்கா லிவின்சி மேட்டர் யு எஸ் சில் கிராண்ட் யூரி வரைக்கும் போனது.  அரசியல் தலைவர் ஒருவர் 6 கோடி சீட்டிங் செய்தால் அதை அந்தரங்கம் என விட்டு விடுவீர்களா? அதே போலத்தான் “திருமணம் செய்வேன் என பொய் கூறி பாலியல் தேவைகளை பெற்று எமாற்றுவதையும்” இந்திய சட்டம் கருதுவதாக தெரிகிறது. 

மணிகண்டன் மீதான நடவடிக்கை இன்னும் பல நடிகர்கள் மீதான வழக்குகள் கூறி நிற்பது இதையே.

முடிவாக ஒரு அரசியல் தலைவர் 420 வேலை பார்த்து பாலியல் தேவையை பூர்த்தி செய்தார் என்ற குற்றச்சாடு ஒரு போதும் தனிபட்ட விடயமாக கருதப்படகூடாது. இந்த குற்றச்சாட்டு பற்றி அறிந்து கொள்ள, விவாதிக்க மக்கள் பூரண உரித்துடையவர்கள். இது ஜனநாயகத்தின் மிக அடிப்படையான பண்பு.

வேணும் எண்டால் பாலியல் குற்றசாட்டால் பதவி இழந்த அரசியல்வாதிகள் லிஸ்டை போடுகிறேன்…. It’s a never ending list.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

The police had booked Manikandan under sections 417 (punishment for cheating), 376 (rape), 313 (causing miscarriage without woman’s consent), 323 (punishment for voluntarily causing hurt) & 506(i) (criminal intimidation) of the Indian Penal Code read with section 67A of the Information Technology Act.
 

https://www.hindustantimes.com/india-news/chennai-police-bring-back-ex-aiadmk-minister-arrested-from-bengaluru-101624191514869.html

சில விடயங்களில் (அனைத்திலும் அல்ல) சீமானை ஒத்த குற்றச்சாட்டிற்கு முகம் கொடுக்கும் மணிகண்டன் மீது பாய்ந்த குற்றவியல் பிரிவுகள் மேலே👆🏼.

இப்போ சொல்லுங்கள் மணி கண்டன் விசயம் தனிபட்ட அந்தரங்கமா அல்லது பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கு வேண்டிய பேர்வழியென்பதால் இது "சரி வுட்றா வுட்றா" அணுகுமுறை! இது இ.பி.கோ 420 இற்கு superseding! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

கள்ளன் ஒளிக்கத்தெரியாமல் பொலிஸ்காரன் வீட்டிலை போய் ஒளிச்ச மாதிரி....ஆரிட்டை போய் முறைப்பாடு குடுக்கோணுமெண்டு விசயலச்சுமிக்கு இன்னும் தெரியேல்லை.😁

போயும் போயும்.....😎

2011ல் போலீசுக்கு போய், நீதிமன்று போக தயாரான நிலையில், காசை வாங்கிக் கொண்டு, சமாதானமாக போறன் எண்டு எழுதி கொடுத்து வாபஸ் வாங்கிப் போட்டு, திரும்பவும் போலீஸ் விசாரிக்க வேணும் என்றால், நடக்கிற விசயமா எண்டு, யாராவது இந்திய வக்கீல்கள் தான் எங்களுக்கு விளக்கப் படுத்த வேணும்.

இவோ போலீசுக்கு போனால், இவா வீடியோ போட்டு காசு பிடுங்கிறதை தான் தொழில் ஆக செய்கிறா எண்டு, கர்நாடக கேசுகள் எல்லாம் எடுத்து, நிரூபித்தால், இவோவுக்கு பெரும் சிக்கல்.

ரஜனி அரசியலுக்கு வருவார் என்று, சீமானை திட்ட, ராகவா லாரான்ஸ் கொடுத்த 1 லட்சம் செக் பணம் இல்லாமல் திரும்பியது எண்டு குறைபட்டு போட்ட வீடியோ இருக்கிறதே.  

ஆகவே, காசு பிடுங்க, அரசியல் ரீதியாக, பயமுறுத்தல் செய்கிறார். போலீசுக்கு போகப்போவதில்லை. அது சீமான் வக்கீல்களுக்கும் தெரியும். 

அதனால் சீமானும் கண்டுக்கொள்ளப் போவதில்லை. மேலும் தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே இந்த விசயத்தில் ஒரே ரகம். ஆகவே தங்களுக்கும் பின்னர் சிக்கல் வரும் என்பதால்,  கண்டு கொள்ள மாட்டார்கள். 

மணிகண்டன், விரைவிலேயே, சமாதானம் பேசி, பணத்தை கொடுத்து கதையை முடிப்பார். அம்மணியும், அப்படியெல்லாம் இல்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு, மலேசியா கிளம்புவார்.

மருதர் சொன்னது போல, இந்த சினிமா உலக அழகிய பெண்கள்.... புத்தி குறைவானவர்கள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் எந்தவொரு அரசியல்வாதியும் பாலியல் விடயத்தில் சுத்தமானவர்கள் இல்லை. அதிலும் சினிமாத்துறை என்றால் அது கனவுத்தொழிற்சாலை என்பார்கள். விசயலட்சுமி பாலியல் விடயத்தில் நேர்மையானவரா என்றால் அதுவும் இல்லை. அப்படியான விசயலச்சுமிக்கு இங்கு வரும் வக்காளத்துக்களை பார்க்க சம்பந்தப்பட்டவர்களின் மனோநிலையை புரிந்து கொள்ள முடிகின்றது.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே நான் ரேப் என்பதை போல்ட் செய்ததை பார்த்து பலருக்கு வியப்பாக இருக்க கூடும்.

ஆனால் ரேப் என்பது சினிமாவில் வருவது போல கதற கதற செய்வது மட்டும் அல்ல.

ஒரு உடலுறவு ரேப் ஆகாமல் இருக்க அந்த உடலுறவுக்கு பெண்ணின் சம்மதம் (consent) முக்கியம். 

எதோ ஒரு காரணத்தால் ( உதாரணமாக குடும்பத்தை அழிப்பேன் என மிரட்டி)  விருப்பத்துக்கு மாறாக பெறப்படும் consent, ஒரு consent ஆகவே கருதப்படாது. நாகரீக உலகம் முழுதும் இதுதான் நடைமுறை.

இந்தியாவை பொறுத்தவரை

கல்யாணம் செய்வேன் என்ற வாக்குறுதியில் மட்டும் ஒரு பெண் உடலுறவுக்கு சம்மதித்தால், அந்த வாக்குறுதியை ஆண் கனம் பண்ணும் எண்ணமே இல்லாமல் பொய்யாக வழங்கி இருந்தால், அதன் பின் அந்த வாக்குறுதி மீறப்படும் போது consent obtained via deception, ஒரு consent ஆகவே கருதப்படாமல் - அந்த உடலுறவு ரேப்பாக கருதப்படக்கூடும்.

https://timesofindia.indiatimes.com/blogs/legally-speaking/whether-sex-based-on-promise-of-marriage-amounts-to-rape/

இதன் அர்த்தம் என்ன தெரியுமா ?

Seeman is potentially facing rape charges.

இப்பொ சொல்லுங்கள் இன்னும் இது அந்தரங்கம் என்றா கடந்து போக போகிறீகள்?

* சீமான் ரேப் பண்ணினார் என நான் கூறவில்லை. ஆனால் ஒரு ஆண், பொய்யான கல்யாண வாக்குறுதியை வழங்கி, அதை நம்பி (மட்டுமே) பெண் உடலுறவுக்கு ஒத்து கொண்டு, பின்னர் கல்யாணம் செய்யாவிடின் - இந்திய சட்டப்படி அது ரேப்.

இப்படித்தானா சீமான் விடயத்தில் நடந்தது என்பது கோர்ட்டில் தீர்க்க வேண்டிய விடயம்.

அப்படி வழக்கு நீதிமன்றம் போக, எடப்பாடி, ஸ்டாலின் கட்டுப்பாட்டில் இருக்கும், இருந்த பொலிஸ் சீமான் மேல் வழக்கு போடவேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

இவோ போலீசுக்கு போனால், இவா வீடியோ போட்டு காசு பிடுங்கிறதை தான் தொழில் ஆக செய்கிறா எண்டு, கர்நாடக கேசுகள் எல்லாம் எடுத்து, நிரூபித்தால், இவோவுக்கு பெரும் சிக்கல்.

இதை புரிந்து கொள்ளாமல் பில்கிளின்டன் லெவலுக்கு பந்தி பந்தியாய் எடுத்து விடுகினம். 🤣

நாதர்! பழிவாங்கல் அரசியல்பற்றி இவையளுக்கு நாங்கள் தான் பாடம் எடுக்கோணும் போலகிடக்கு. நேரம் இருந்தால் சொல்லச்சொல்லுங்கோ நீங்களும் நானும் இவையளுக்கு ஒன்லைன் கிளாஸ் எடுத்து புரிய வைப்பம். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

2011ல் போலீசுக்கு போய், நீதிமன்று போக தயாரான நிலையில், காசை வாங்கிக் கொண்டு, சமாதானமாக போறன் எண்டு எழுதி கொடுத்து வாபஸ் வாங்கிப் போட்டு, திரும்பவும் போலீஸ் விசாரிக்க வேணும் என்றால், நடக்கிற விசயமா எண்டு, யாராவது இந்திய வக்கீல்கள் தான் எங்களுக்கு விளக்கப் படுத்த வேணும்.

இவோ போலீசுக்கு போனால், இவா வீடியோ போட்டு காசு பிடுங்கிறதை தான் தொழில் ஆக செய்கிறா எண்டு, கர்நாடக கேசுகள் எல்லாம் எடுத்து, நிரூபித்தால், இவோவுக்கு பெரும் சிக்கல்.

ரஜனி அரசியலுக்கு வருவார் என்று, சீமானை திட்ட, ராகவா லாரான்ஸ் கொடுத்த 1 லட்சம் செக் பணம் இல்லாமல் திரும்பியது எண்டு குறைபட்டு போட்ட வீடியோ இருக்கிறதே.  

ஆகவே, காசு பிடுங்க, அரசியல் ரீதியாக, பயமுறுத்தல் செய்கிறார். போலீசுக்கு போகப்போவதில்லை. அது சீமான் வக்கீல்களுக்கும் தெரியும். 

அதனால் சீமானும் கண்டுக்கொள்ளப் போவதில்லை. மேலும் தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே இந்த விசயத்தில் ஒரே ரகம். ஆகவே தங்களுக்கும் பின்னர் சிக்கல் வரும் என்பதால்,  கண்டு கொள்ள மாட்டார்கள். 

மணிகண்டன், விரைவிலேயே, சமாதானம் பேசி, பணத்தை கொடுத்து கதையை முடிப்பார். அம்மணியும், அப்படியெல்லாம் இல்லை என்று எழுதிக்கொடுத்து விட்டு, மலேசியா கிளம்புவார்.

மருதர் சொன்னது போல, இந்த சினிமா உலக அழகிய பெண்கள்.... புத்தி குறைவானவர்கள் தான்.

குற்றமே செய்யாமல் ஒரு புத்தி குறைவான சினிமா நடிகையின் மிரட்டலுக்கு தவணைக்கு தவணை காசு கொடுக்கும் மனிதர் எப்படி ஒரு ஆளுமையான தலைவராக இருக்க முடியும்?

நான் தப்பே செய்யவில்லை, முடிந்தால் சீட்டிங் என்ன, ரேப் என்ன, கொலை கேசே போடு - I will see you in court என்றல்லவா உத்தமன் சொல்லுவான்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

இதை புரிந்து கொள்ளாமல் பில்கிளின்டன் லெவலுக்கு பந்தி பந்தியாய் எடுத்து விடுகினம். 🤣

நாதர்! பழிவாங்கல் அரசியல்பற்றி இவையளுக்கு நாங்கள் தான் பாடம் எடுக்கோணும் போலகிடக்கு. நேரம் இருந்தால் சொல்லச்சொல்லுங்கோ நீங்களும் நானும் இவையளுக்கு ஒன்லைன் கிளாஸ் எடுத்து புரிய வைப்பம். :cool:

பெரியகருப்பன் என்ற அரசியல்வாதி.... பிரச்சாரத்தின் நடுவே ரெஸ்ட் எடுக்க, ரூமில் தங்கி இருந்தார். சாப்பாடு கொண்டு வந்தார், மகளிர் அணி தலைவி. சாப்பிட்டாரோ இல்லையோ.... அய்யா பில் கிளிண்டனுக்கு கிடைத்த சேவையினை பெற்றுக் கொண்டார்.

படுபாவிகள் வீடியோ வைத்து எடுத்து விட்டார்கள். அது யூடியூபில் ஏறியது, கட்டுமரமும் பார்த்தார்.

ஏன்யா இப்படி, கமரா பிடிக்கிற மாதிரியா சிக்கிக்குவாய் என்று கடிந்து கொண்டார். இன்றும் அரசியல்வாதியாக வலம் வருகிறார்.

எடப்பாடி மேலே, அரசியலுக்கு வருமுன்பே இரு கொலைகேசுகள். அதிலிருந்து தப்பிக்கவே அரசியலுக்கு வந்தார். முதல்வரான பின்னர் கொடநாடு கொலை கேசு.....

அதுதான் தமிழகம்.... 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

பெரியகருப்பன் என்ற அரசியல்வாதி.... பிரச்சாரத்தின் நடுவே ரெஸ்ட் எடுக்க, ரூமில் தங்கி இருந்தார். சாப்பாடு கொண்டு வந்தார், மகளிர் அணி தலைவி. சாப்பிட்டாரோ இல்லையோ.... அய்யா பில் கிளிண்டனுக்கு கிடைத்த சேவையினை பெற்றுக் கொண்டார்.

படுபாவிகள் வீடியோ வைத்து எடுத்து விட்டார்கள். அது யூடியூபில் ஏறியது, கட்டுமரமும் பார்த்தார்.

ஏன்யா இப்படி, கமரா பிடிக்கிற மாதிரியா சிக்கிக்குவாய் என்று கடிந்து கொண்டார். இன்றும் அரசியல்வாதியாக வலம் வருகிறார்.

அதுதான் தமிழகம்.... 😁

பச்சை தமிழன் ரஜனியின் அரசியலுக்கு  மிண்டு கொடுத்தவர்களுக்கு அவரின் பாலியல் வக்கிரங்கள் தெரியாமலா இருந்தது?
நினைத்தாலே இனிக்கும் வரலாறு.....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

பச்சை தமிழன் ரஜனியின் அரசியலுக்கு  மிண்டு கொடுத்தவர்களுக்கு அவரின் பாலியல் வக்கிரங்கள் தெரியாமலா இருந்தது?
நினைத்தாலே இனிக்கும் வரலாறு.....😁

அட, தமிழகம் பத்தி கதைக்க எங்களுக்கு என்ன அருகதை?

மகிந்த, தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில், இரண்டு பேருக்கு வெடி வைத்தார்.

கொலைகள் செய்த சரத்துக்கு, வாக்குகள் அளித்தோம்.

கோத்தாவை நாட்டின் ஜனாதிபதி ஆக்கி உள்ளோம்.

ஆனாலும் அடுத்த வீட்டு விடுப்பு என்றால், சந்தோசமாக கதைப்போம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

மேலும் தமிழக அரசியல்வாதிகள் அனைவருமே இந்த விசயத்தில் ஒரே ரகம். ஆகவே தங்களுக்கும் பின்னர் சிக்கல் வரும் என்பதால்,  கண்டு கொள்ள மாட்டார்கள். 

இது நியாயமான கருத்து.

இதுதான் சீமான் விடயத்திலும் நடப்பதாக பலர் சொல்கிறார்கள்.

நீங்களும் குசா அண்ணையும், ஸ்டாலின் செய்யாததா, பெரிய கருப்பன் செய்யாததா, கட்டு மரம் செய்யாததா, ரஜனி செய்யாததா என்பதன் மூலம் இதையேதான் இன்னொரு விதமாக சொல்கிறீர்கள்.

ஆனால் ரஜனி, பெரிய கருப்பன், ஸ்டாலின் மீது எந்த பெண்ணும் பொலீசில் புகார் கொடுக்கவில்லை.

சீமான் மீது விஜயலச்சுமி கொடுதுல்த்துள்ளார்.

ஆகவே விஜயலட்சுமியின் புகார் இருக்கும் வரை - ஆட்சியில் இருக்கும் முதல்வர் கையில்தான் சீமானின் குடும்பி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

அதுதான் தமிழகம்.... 😁

பிரபல்ய அரசியல்வாதிக்கு நான் கற்பமானேன் என்ற ஒரு  பேட்டி அண்மையில் வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த கரு பின்னர் அழிக்கப்பட்டது.

இதைப்பற்றியும் அலசி ஆராய்வோமா? 😎

ஒரு வேளை அந்த விந்தணு கொரோனா ரேஞ்சிலை பரவியிருக்குமோ எண்ட டவுட்டு எனக்கு வருது உங்களுக்கு??? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

இது நியாயமான கருத்து.

இதுதான் சீமான் விடயத்திலும் நடப்பதாக பலர் சொல்கிறார்கள்.

நீங்களும் குசா அண்ணையும், ஸ்டாலின் செய்யாததா, பெரிய கருப்பன் செய்யாததா, கட்டு மரம் செய்யாததா, ரஜனி செய்யாததா என்பதன் மூலம் இதையேதான் இன்னொரு விதமாக சொல்கிறீர்கள்.

ஆனால் ரஜனி, பெரிய கருப்பன், ஸ்டாலின் மீது எந்த பெண்ணும் பொலீசில் புகார் கொடுக்கவில்லை.

சீமான் மீது விஜயலச்சுமி கொடுதுல்த்துள்ளார்.

ஆகவே விஜயலட்சுமியின் புகார் இருக்கும் வரை - ஆட்சியில் இருக்கும் முதல்வர் கையில்தான் சீமானின் குடும்பி இருக்கும்.

இங்கே சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு கீறவில்லை.
போலிசுக்கு போனால் தான் குற்றம் அல்ல. பல குற்றங்கள் இடை நடுவிலேயே நிறுத்தப்பட்டு விடுகின்றன. அதனால் குற்றங்கள் நிகழவில்லை என அனாவசியமாக தட்டிக்கழிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

பிரபல்ய அரசியல்வாதிக்கு நான் கற்பமானேன் என்ற ஒரு  பேட்டி அண்மையில் வந்தது உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த கரு பின்னர் அழிக்கப்பட்டது.

இதைப்பற்றியும் அலசி ஆராய்வோமா? 😎

ஒரு வேளை அந்த விந்தணு கொரோனா ரேஞ்சிலை பரவியிருக்குமோ எண்ட டவுட்டு எனக்கு வருது உங்களுக்கு??? 🤣

அண்ணை உதென்ன மேட்டரே,

எங்கட பொரிசிட்ட பேப்பர்காரர் உங்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளையள் எண்டு கேட்க ஆள் பதில் சொல்ல மாட்டன் எண்டுட்டார்.

இப்படி விடயங்கள் எல்லா இடமும் நடப்பதுதான்.

ஆனால் உறவு வைத்த பொம்பிளை அதை கோர்ட் கேசாக்காமல் பார்த்து கொள்ளும் கெட்டித்தனம் வேணும்.

கட்டு மரத்துக்கு இல்லாததா? ஆனால் ஒருத்தரும் பொலிஸ் கேஸ் எண்டு போகேல்ல.

1 minute ago, குமாரசாமி said:

இங்கே சிறிய கோட்டுக்கு முன்னால் பெரிய கோடு கீறவில்லை.
போலிசுக்கு போனால் தான் குற்றம் அல்ல. பல குற்றங்கள் இடை நடுவிலேயே நிறுத்தப்பட்டு விடுகின்றன. அதனால் குற்றங்கள் நிகழவில்லை என அனாவசியமாக தட்டிக்கழிக்க முடியாது.

நான் எங்கேயும் சீமான் குற்றம் செய்தார் என சொல்லவில்லை. ஆனால் அதை ஒருவர் குற்றவியல் புகாராக பொலீஸ்சில் கொடுத்த பின், அதை அந்தரங்கம் என கடந்து போக முடியாது என்றேன் சொன்னேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அண்ணை உதென்ன மேட்டரே,

எங்கட பொரிசிட்ட பேப்பர்காரர் உங்களுக்கு மொத்தம் எத்தனை பிள்ளையள் எண்டு கேட்க ஆள் பதில் சொல்ல மாட்டன் எண்டுட்டார்.

இப்படி விடயங்கள் எல்லா இடமும் நடப்பதுதான்.

ஆனால் உறவு வைத்த பொம்பிளை அதை கோர்ட் கேசாக்காமல் பார்த்து கொள்ளும் கெட்டித்தனம் வேணும்.

கட்டு மரத்துக்கு இல்லாததா? ஆனால் ஒருத்தரும் பொலிஸ் கேஸ் எண்டு போகேல்ல.

இப்ப என்ன?
வேண்டா பொண்டாட்டி பட்டால் குற்றம் தொட்டால் குற்றம் அதுதானே உங்கடை பொலிசி..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இப்ப என்ன?
வேண்டா பொண்டாட்டி பட்டால் குற்றம் தொட்டால் குற்றம் அதுதானே உங்கடை பொலிசி..?

இல்லை. நான் இதை ஒரு செய்தியாக மட்டுமே பகிர்ந்தேன். எனது கருத்தை கூட எழுதவில்லை.

எனது பிந்தைய கருத்துகள் எல்லாம், மற்றையவர் வைத்த கருத்துக்கான பதில்களே.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

கட்டு மரத்துக்கு இல்லாததா? ஆனால் ஒருத்தரும் பொலிஸ் கேஸ் எண்டு போகேல்ல.

கட்டுமரத்தின்ரை வேலையத்தான் சின்னக்கலைஞர் செய்ய வெளிக்கிடுறார். ஆனால் இப்ப மீடியா வெளிச்சம் அதிகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.