Jump to content

காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த மதுப்பிரியர்கள்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

PicsArt_06-21-01.27.17.jpg

 

கடந்த ஒருமாத காலமாக நாடு முழுவதும் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டிருந்த

 நிலையில், இன்று காலை பயணத்தடை தளர்த்தப்பட்டது.
 
அத்தோடு, மதுபான நிலையங்கள் இன்று முதல் திறக்கப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் அறிவித்தது.
 
 
எவ்வாறாயினும், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த மக்கள் பயணத்தடை தளர்த்தப்பட்டதும் தொழிலுக்குச் சென்று குடும்பங்களை கவனிப்பது உள்ளிட்ட பல்வேறு கடமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பதைக் கடந்து மதுப்பிரியர்கள் காலை முதல் மதுபான சாலைகளின் வாசல்களில் காத்திருந்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
 
 
வெயில் படாமல் வீட்டுக்குள் முடங்கி இருந்தவர்கள் எல்லாம் இன்று உழைப்பாளர் தின பேரணியில் பங்கேற்பது போன்று வரிசையில் சென்று மதுபானங்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
 
 
இளைஞர்கள் முதல் வயதானோர் வரை இவ்வாறு காத்திருந்து மதுபானங்களை கொள்வனவு செய்து பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை சந்தித்துவரும் அரசாங்கத்திற்கு வரி செலுத்தியுள்ளனர்.
 
 
மதுபான நிலையங்களின் முன்பாக பொலிஸாரரும் கடமையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்ப்ட்டது.
 
 
இவ்வாறு இன்றைய தினம் மதுபான நிலையங்களுக்கு முன்னால் ஒன்றுகூடிய ஒரு தரப்பினர் படத்தில் .
- Siva Ramasamy 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடி மக்கள் என்று  தானே  வந்திருக்கணும்??

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

குடி மக்கள் என்று  தானே  வந்திருக்கணும்??

பொருளாதாரத்தை முண்டு கொடுத்து நிமிர்த்தும் மரியாதைக்குரிய பிரசைகள் என்றும் சொல்லலாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

பொருளாதாரத்தை முண்டு கொடுத்து நிமிர்த்தும் மரியாதைக்குரிய பிரசைகள் என்றும் சொல்லலாம் 🤣

காலையிலேயே சென்று

கால் கடுக்க  நின்று 

தமது தார்மீக நாட்டுப்பொறுப்பை  உணர்ந்து  செயற்படும் பிரசைகளை

மரியாதை  செய்யணும் என்பதை ஏற்கத்தான் வேண்டும்...

இதை  பரிந்துரைத்த நிழலிக்கு ஒரு  குவாட்டர் தரச்சொல்லுங்கப்பா🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிகரெட் சாராயத்துக்கு அடிமையானவர்களுக்கு திடீரெண்டு அது இல்லாமல் போனா இவ்வளவுநாளா எவ்வளவு அவஸ்தைபட்டிருப்பார்கள் என்பது கியூவை பார்த்தால் தெரியுது.

நல்லவேளை இந்தியாபோல் சனிடைசர், மண்ணெண்ணெய், ஓடிகொலோன் குடிச்சு சாகாமல் இவ்வளவுநாள் உயிர்தப்பி இருந்ததுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, valavan said:

சிகரெட் சாராயத்துக்கு அடிமையானவர்களுக்கு திடீரெண்டு அது இல்லாமல் போனா இவ்வளவுநாளா எவ்வளவு அவஸ்தைபட்டிருப்பார்கள் என்பது கியூவை பார்த்தால் தெரியுது.

நல்லவேளை இந்தியாபோல் சனிடைசர், மண்ணெண்ணெய், ஓடிகொலோன் குடிச்சு சாகாமல் இவ்வளவுநாள் உயிர்தப்பி இருந்ததுக்கு வாழ்த்துக்கள்.

கசிப்பு , வடி காய்ச்சி பரள் வெடிச்சு உயிரிழந்த சம்பவங்களும் உண்டு இங்கை  வடகிழக்கில் அதிக மது விற்பனை என்றால்  பாருங்கோவன் இதிலே அதிக போத்தல்களை கொள்வனவு செய்தவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்தியாக விற்பது அவர்கள் கைதாவது மக்கள் இதுதான் சட்டம்  இங்கை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.