Jump to content

யாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு

 

நாட்டில் 100 நகரங்களை பல் பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய பெரு நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம் நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நாட்டில் நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் ஒரு பிரதேசத்தை பல் பரிமாண நகராக்குவதற்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், கொழும்பு, அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய 4 முக்கிய வணிக நகரங்களை இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களைக் கொண்டிருப்பதால், அவை தேசிய மற்றும் சர்வதேச வணிக வலையமைப்பின் மையங்களாக இணைக்கப்படும்.

இவற்றை மையப்படுத்தி நாட்டில் உருவாக்கப்பட உள்ள 100 நகரங்கள் வணிக நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான கலந்துரையாடல் பெரு நகர அபிவிருத்தி அமைச்சில் இடம் பெற்றுள்ளதுடன் அதற்கான வேலைத் திட்டங்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 

 

https://newuthayan.com/யாழ்ப்பாணத்தை-அழகுபடுத்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, கிருபன் said:

ஒரு பிரதேசத்தை பல் பரிமாண நகராக்குவதற்கு சுமார் 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.

டமார் எண்டு குண்டு வெடிச்சுது எண்டு அதிர்ச்சியா சொல்லுறமாதிரி, பிரதேசத்தை அழகுபடுத்த சுமார்....... 20 மில்லியன் ரூபாய்கள் என்று அதிர்வலைகளை ஏற்படுத்துவதைவிட சுருக்கமா கோத்தபாய ஒரு பிரதேசத்துக்கு 2 கோடி ரூபாய் ஒத்துக்கியிருக்கிறார் என்று சொல்லலாம்.

அந்த 2 கோடியில் அவரின் யாழ் பிராந்திய எடுபிடிகள் அமுக்கியதுபோக ஒரு 50 லட்சங்கள் மிஞ்சும், 50 லட்சம் என்பது தற்போது யாழ்ப்பாணத்தில் 20 மாடு வாங்கும் காசு,அந்த 50 லட்சத்தில் யாழ்நகர பிரதேசங்கள் அழகுபெற்று தக தக என்று எம்ஜிஆர் கலர்ல  ஜொலிக்கபோகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

120 மில்லியனே 12 கோடி தான்...

இதில 20 மில்லியன் அதாவது  2 கோடி யாழ்ப்பாணத்துக்கு???

எங்கே  இருந்து தேடிப்பிடிக்கிறார்களே இப்படியான  தலையங்கங்களை???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

120 மில்லியனே 12 கோடி தான்...

இதில 20 மில்லியன் அதாவது  2 கோடி யாழ்ப்பாணத்துக்கு???

எங்கே  இருந்து தேடிப்பிடிக்கிறார்களே இப்படியான  தலையங்கங்களை???

விசுகு ஐயா, செய்தியை வடிவாக வாசிக்கவேண்டும். 

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள்  யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை  அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அவையாவன:

  1. வேலணை
  2. சாவகச்சேரி
  3. கொடிகாமம்
  4. நாவற்குழி
  5. நெல்லியடி 
  6. மருதனார்மடம் 

முதலில் தமிழை சரியாகப் படிப்போம். பின்னர் தலையங்கத்தில் பிழை பிடிப்போம்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விசுகு said:

120 மில்லியனே 12 கோடி தான்...

இதில 20 மில்லியன் அதாவது  2 கோடி யாழ்ப்பாணத்துக்கு???

எங்கே  இருந்து தேடிப்பிடிக்கிறார்களே இப்படியான  தலையங்கங்களை???

 

37 minutes ago, கிருபன் said:

விசுகு ஐயா, செய்தியை வடிவாக வாசிக்கவேண்டும். 

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள்  யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை  அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார். அவையாவன:

  1. வேலணை
  2. சாவகச்சேரி
  3. கொடிகாமம்
  4. நாவற்குழி
  5. நெல்லியடி 
  6. மருதனார்மடம் 

முதலில் தமிழை சரியாகப் படிப்போம். பின்னர் தலையங்கத்தில் பிழை பிடிப்போம்🤪

இப்படியான செய்திகளை யார் வாசிப்பார்
கருத்திற்கு கருத்து எனும் பெயரில் மட்டுமே
எங்கள் கருத்துக்களைத் திணிக்க முயல்வோம்
வந்தால் மலை போனால்....... என்ன அது தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, கிருபன் said:

கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் ராமநாதன் அவர்கள்  யாழ் மாவட்டத்தில் ஆறு இடங்களை  அழகுபடுத்த தலா 20 மில்லியன் ரூபாக்களை இடம் ஒன்றுக்கு என மேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்‌ஷவின் கனவுத்திட்டமான நூறு நகர அபிவிருத்தி திட்டங்களில் இடம்பெறச் செய்துள்ளார்.

அடேங்கப்பா மேதகு சேர்ப்பு வேறை.....அவங்க தவற விட்டாலும் நாங்க தவற விடமாட்டம். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அடேங்கப்பா மேதகு சேர்ப்பு வேறை.....அவங்க தவற விட்டாலும் நாங்க தவற விடமாட்டம். 😊

பின்னர் எப்படி உங்களை இந்தத் திரிக்குள்   அழைப்பது...வந்தீட்டிங்களா வந்தீட்டிங்களா
இனி ......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.