Jump to content

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைகின்றார் விமல் வீரவன்ச- 2024 ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக விமலை நிறுத்துவதற்கு ரணில் இணக்கம்- அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பு
 

அரசாங்கம் குறித்து அதிருப்தியடைந்துள்ள அமைச்சர் விமல்வீரவன்சவிற்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகிள்ளன.
மூன்றாம் தரப்பொன்றின் முயற்சிகள் காரணமாக இருவருக்கும் இடையில் இணக்கப்பாடொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பௌத்தமதகுரு ஒருவர் இருவருக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தமொன்று உருவாவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.
wimal-ranil-300x169.jpg
2024 ஜனாதிபதி தேர்தலில் உருவாகவுள்ள புதிய அரசியல் கூட்டணியின் பொதுவேட்பாளராக விமல்வீரவன்சவை நியமிப்பதற்கு ரணில்விக்கிரமசிங்க சம்மதித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல் வீரவன்ச தரப்பினர் தொடர்ந்தும் அரசாங்கத்தில் நீடிக்கவேண்டும் சரியான தருணம் வரும்போது மைத்திரிபால சிறிசேன போன்று அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல்வீரவன்ச பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவிகளில் கண்வைத்துள்ளார் என்பது வெளிப்படையான உண்மை ஆனால் அதற்கான வேறு தந்திரோபாயங்களை வழிமுறைகளை பின்பற்றுவது என குறிப்பிட்ட பௌத்தமதகுரு உட்பட இந்த திட்டத்தை முன்னெடுப்பவர்கள் தீர்மானித்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமல்வீரவன்ச கட்சியில் தற்போது காணப்படும் நிலையிலிருந்து மேலும் வளருவதற்கு அனுமதிக்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்பது அடிப்படையாக வைத்தே அவர்கள் வேறு வழிமுறைகள் குறித்து சிந்தித்துள்ளனர்.
நாடாளுமன்றத்திற்கு செல்வதில்லை என உறுதியான தீர்மானத்துடன் காணப்பட்ட முன்னாள் பிரதமர் அந்த முடிவை மாற்றியுள்ளமை தற்செயலான விடயமில்லை –எதிர்காலத்தில் எதிர்பார்க்காத பல அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
Link to comment
Share on other sites

இப்படி ஒரு முட்டாள்தனமான முடிவை ரணில் எடுப்பார் என்று நான் நம்பவில்லை. ரணிலுக்கு, ஐ.தே.க வுக்கு இருக்கும் சிறுபான்மை இனத்தவர்களின் ஆதரவு விமலின் மூலம் முற்றாக இல்லாமல் போய்விடும். அத்துடன், விமலுக்கு சிங்களவர் மத்தியில் கூட பெரிய ஆதரவு இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

நரி களமிறங்கி உள்ளார். பல  திருப்பங்களை காணலாம்.

அமெரிக்க சார்பு கொள்கை உள்ளவர்கள் இனி வரவேற்கப்படுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலை இறக்குவது, இந்தியா... விரைவில் புரியும்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தல் பரப்புரை இப்போதே ஆரம்பித்து விட்டது.
பசிலுக்கு எதிராக ரணில் களத்தில் இறங்கிவிட்டார் .
அதாவது சஜித்துக்கு ஆதரவாக

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி மகிந்தவுக்கு ஆப்பு(பம்) அடிக்க ஒரு சில மாதங்களுக்கு முன் கொழும்பு டெலிகிராப் ஒரு செய்தி போட்டது.

ரணிலின் மனைவி மைத்திரி பொது வேட்பாளராக களம் இறங்குவார் என்றது அந்த செய்தி.

எல்லாரும் அந்த செய்தியை பார்த்து சிரித்தோம்.

ஆனால் உண்மையிலேயே பொது வேட்பாளர் ஆகியது மைத்திரிபால சிறிசேன.

மைத்திரியை பொது வேட்பாளர் ஆக்கும் திட்டம் உள்ளது என்பதை முகர்ந்து பிடித்த கொழும்பு டெலிகிராப் - எந்த மைத்திரி என்பதில் கோட்டை விட்டது.

ஆகவே இந்த செய்தி நம்ப கடினமாக இருந்தாலும்  - இதன் பின்னால் சில நகர்வுகள் இருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

ஆகவே இந்த செய்தி நம்ப கடினமாக இருந்தாலும்  - இதன் பின்னால் சில நகர்வுகள் இருக்கலாம்.

விமல் வரலாம்... ஆனாலும் அது சஜித்திற்கான
ஒரு சந்தர்ப்பமாகவும்... ராஜபக்சேக்களுக்கானா
ஒரு அடியாகவும்.... இருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

ரணிலை இறக்குவது, இந்தியா... விரைவில் புரியும்😎

உங்களுக்குதான் உள்வீட்டு விசயங்கள் அத்துப்படியாச்சே. எடுத்து விடுங்கோ நாதம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.