Jump to content

முல்லைத்தீவில் 44 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு - ரவிகரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது. 

 

IMG_1235.jpg

இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 

இவ்வாறு இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் 22.06.2021 இன்றையதினம் கொக்கிளாய்ப் பகுதிக்கு நேரில் சென்று ஆராய்ந்தனர். 

இதன்பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

IMG_1234.jpg

கொக்கிளாய் கிழக்குப் பகுதியிலுள்ள எமது தமிழர்களுடைய பூர்வீக காணிகளை இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் அபகரித்துள்ளது. குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டைப் பகுதியில் அமைந்துள்ள அந்த இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினூடாக , முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளிலும் கனியமணல் அகழ்வதற்கான ஆயத்தப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளில் கனியமணல் அகழ்வதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதாக அப்பகுதிளிலுள்ள தமிழ் மக்களால் எமக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன. 

அதற்கு அமைவாக நான் மாகாணசபையில் இந்த விடயம் தொடர்பிலும் பேசியிருந்தேன். அதனடிப்படையில் இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக மாகாணசபையினால் ஓர் குழு அமைக்கப்பட்டது. அவ்வாறு மாகாணசபையினால் அமைக்கப்பட்ட குழுவினர், இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தினைச் சார்ந்தோரைப் பலதடவைகள் சந்திததுக் கலந்துரையாடியுமிருந்தனர். 

குறிப்பாக கடந்த 2018.06.01 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டைப் பகுதியில் அமைந்துள்ள கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்திற்குரிய, இல்மனைட் தொழிற்சாலையில் கடந்த 2018.09.01அன்றும் இவ்வாறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. 

அப்போதுகூடநாம் இந்த இடத்தை அபகரிக்கும் விடயத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. இவை மக்களுடைய காணிகள், எனவே மக்களுக்கே வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் நாம் கருத்துக்களைத் தெரிவித்துவந்தநிலையில் அவர்களுடைய இந்த ஆக்கிரமிப்பு மற்றும், கனியமணல் அகழும் முன்னெடுப்புக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 

இந் நிலையில் கடந்த 2018.10.24 அன்று வடமாகாணசபையின் முதலாவது ஆட்சிக்காலம் நிறைவிற்கு வந்த பின்னர், இது தொடர்பான கூட்டங்களுக்கு வடமாகாணசபையால் அமைக்கப்பட்ட குழுவினை அழைப்பதுமில்லை, இந்த நடவடிக்கைகள் தொடர்பில் அந்தக் குழுவினருடன் கலந்துரையாடுவதுமில்லை. 

இவ்வாறானதொருசூழலில் இதுவரைகாலமும் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த கனிப்பொருள் மணல்கூட்டுத்தாபனத்திற்குரிய இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கான காணி அபகரிப்பு விடயம் மற்றும், கனியமணல் அகழ்விற்கான செயற்பாடுகள் என்பன தற்போது மீண்டும் முனைப்புப்பெறத் தொடங்கியுள்ளன. 

அந்தவகையில் இல்மனைட் தொழிற்சாலை அமைப்பதற்கென 18 தமிழ் மக்களுக்கு சொந்தமான, 44 ஏக்கர் அறுதி உறுதிக்காணிகளை கொக்கிளாய் கிழக்குப் பகுதியில், காணிகளுக்குரிய தமிழ் மக்களின் அனுமதியைப் பெறாது கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் வேலிகளை அமைந்து அபகரித்து தமது அடாவடித் தனமான செயற்பாட்டினைச் செய்துள்ளனர். கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனத்தின் இத்தகைய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. 

அத்தோடு அண்மையில் கொக்கிளாய் கிழக்கு, கொக்கிளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத் தொடுவாய் வடக்கு, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் தெற்கு ஆகிய ஆறு கிராம அலுவலர் பிரிவுகளிலுமுள்ள பொது அமைப்புகள், பொதுமக்கள் எனப் பலரும் கையொப்பமிட்டு, இந்த காணி அபகரிப்பைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், இந்தக் காணிகள் காணிகளுக்குரிய எமது தமிழ் மக்களுக்கே சேரவேண்டும் என்பதான மகஜர் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் வழங்கியதுடன், இன்னும் பொறுப்பு வாய்ந்தவர்களுக்கும் அந்த மகஜரின் பிரதிகள் அனுப்பிவைக்கப்பட்டதுடன், என்னிடமும் அந்த மகஜரின் பிரதியினை அப்பகுதி மக்கள் கையளித்திருந்தனர். 

இவ்வாறாக அந்தப் பகுதி மக்கள் பெரும்பாலானோர், அப்பகுதியில் அபகரிக்கப்பட்டுள்ள இந்தக் காணிகள், காணிகளுக்குரிய மக்களுக்கே வழங்கப்படவேண்டுமென கோரியிருக்கின்றனர். 

இந் நிலையில் தமிழ் மக்களுக்குரிய இந்த அறுதி உறுதிக்காணிகளை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் எவ்வாறு ஆக்கிரமிக்கமுடியும்? 

இவ்வாறு மக்களுக்குரிய காணிகளை அனுமதியின்றி அரச திணைக்களங்களும், கூட்டுத்தாபனங்களும் அபகரிப்பது பொருத்தமான செயற்பாடல்ல. 

எனவே கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் தாம் அபகரித்துள்ள இந்தக்காணிகளை உடனடியாக விடுவிக்கவேண்டும். 

அவ்வாறாக இந்தக் காணிகளை விடுவித்து மக்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை, உரிய பொறுப்புவாய்ந்த அதிகாரிகளும் முன்னெடுக்கவேண்டும் - என்றார்.

முல்லைத்தீவில் 44 ஏக்கர் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு - ரவிகரன் | Virakesari.lk

Link to comment
Share on other sites

பிரபாகரன் இல்லாத தமிழர்கள் சிங்கள கொத்தடிமைகள் தான்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிழம்பு said:

ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக இந்த கொக்கிளாய் உள்ளிட்ட பகுதிகளில் கனியமணல் அகழ்வதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெறுவதாக அப்பகுதிளிலுள்ள தமிழ் மக்களால் எமக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டிருந்தன

இதை தடுப்பதற்கான உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இப்படியே காலத்துக்கு காலம் கூவிவிட்டு போவதா? இன்னும் இரண்டு வருடத்திற்கு பின் வந்து பார்ப்பதற்க்கு ஒன்றுமே இருக்காது. உருப்படியாய் எதுவும் செய்யாமல் கூடிக் கூப்பாடு போடுவதே வழமையாய்ப்போச்சு. இதற்கு மேல் எதுவும் நடவாது என்கிற தைரியத்தில் அவனும் ஏதோ ஒரு காரணத்தையிட்டு காணி பிடிக்கிறான். கூவுவதற்கு மட்டும்தான் நமது பிரதிநிதிகள் லாயக்கு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

முல்லைத்தீவு - கொக்கிளாய் கிழக்கில் கனியமணல் (இல்மனைட் ) தொழிற்சாலை ஒன்றினை நிறுவுவதற்காக, தமிழ் மக்களுக்குச் சொந்தமான சுமார் 44 ஏக்கர் காணிகளை அரசவளங்கள் மற்றும் தொழில் முயற்சி அமைச்சின் கீழான, இலங்கை கனிப்பொருள் மணல் கூட்டுத்தாபனம் கம்பிகளாலான வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளது. 

இங்கே....
சீமானும் இல்லை
ஆமைக்கறியும் இல்லை
விசயலச்சுமியும் இல்லை
நாம் தமிழரும் இல்லை


 எனவே தூண்டில் போடுவாரும் இல்லை... 😂

தோணாவில் மீன் பிடித்தல் | WWW.YOURKATTANKUDY.COM

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:

இதை தடுப்பதற்கான உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? இப்படியே காலத்துக்கு காலம் கூவிவிட்டு போவதா? இன்னும் இரண்டு வருடத்திற்கு பின் வந்து பார்ப்பதற்க்கு ஒன்றுமே இருக்காது. உருப்படியாய் எதுவும் செய்யாமல் கூடிக் கூப்பாடு போடுவதே வழமையாய்ப்போச்சு. இதற்கு மேல் எதுவும் நடவாது என்கிற தைரியத்தில் அவனும் ஏதோ ஒரு காரணத்தையிட்டு காணி பிடிக்கிறான். கூவுவதற்கு மட்டும்தான் நமது பிரதிநிதிகள் லாயக்கு!

இதை குறையாக சொல்லவில்லை சாத்தான்.

குருந்தூர் மலை திரியில் கூட நீங்களும், நானும், @putthan, @valavanஎழுதியதுதான் - எமது பிரதிநிதிகள் மட்டும் அல்ல - நாமும் கூட சும்மா கூவுவதை தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாத நிலையில் உள்ளோம் என்பது உண்மைதானே?

நான் கோட்ட அபய வெல்ல கூடாது என எழுதியதற்கு பிரதான காரணமே - இந்த சிங்கள மயமாதல் சஜித்தின் கீழ் கொஞ்சமேனும் தாமமதப்படும் என எதிர்பார்த்ததே. (ஆனால் கோட்டா எப்படியும் வென்றிருப்பார்).

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நான் கோட்ட அபய வெல்ல கூடாது என எழுதியதற்கு பிரதான காரணமே - இந்த சிங்கள மயமாதல் சஜித்தின் கீழ் கொஞ்சமேனும் தாமமதப்படும் என எதிர்பார்த்ததே

நல்லாட்சி கும்பல் சகலதையும் கிடப்பில் போட்டுவிட்டு அரைத்த மாவை அரைத்தார்களே தவிர வேறு எதையுமே செய்யவில்லை. உதாரணத்திற்கு ரோட்டுக்கு தார்கூட ஊத்தவில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இரகசியமாக சந்தித்து பேசும் கூட்டம், ரணில் அரசை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்த மேதாவிகள் எங்கே போய்விட்டார்கள்? தேர்தல் காலங்களில் மட்டும் வருவார்கள்: வந்தபின் நாங்கள்  காப்போம் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

நல்லாட்சி கும்பல் சகலதையும் கிடப்பில் போட்டுவிட்டு அரைத்த மாவை அரைத்தார்களே தவிர வேறு எதையுமே செய்யவில்லை. உதாரணத்திற்கு ரோட்டுக்கு தார்கூட ஊத்தவில்லை.
 

இது உண்மைதான். 

ஆனால் நிச்சயமாக மைத்திரி ரணில் ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது என்பது வெளிப்படை.

இருதரப்புமே இனவாதிகள்தான் - ஆனால் நில அபகரிப்பு, சிங்கள மயமாக்கலில் கோட்ட-மகிந்த தரப்பு மிகவும் வினைதிறனானவர்கள்.

ஆனால் கோட்ட எப்படியும் வென்றிருப்பார். 

5 minutes ago, satan said:

சிங்களத்தை காப்பாற்றுவதற்காக வெளிநாட்டுப் பிரதிநிதிகளை இரகசியமாக சந்தித்து பேசும் கூட்டம், ரணில் அரசை காப்பாற்ற நீதிமன்றம் அலைந்த மேதாவிகள் எங்கே போய்விட்டார்கள்? தேர்தல் காலங்களில் மட்டும் வருவார்கள்: வந்தபின் நாங்கள்  காப்போம் என்று. 

அவர்களும், எங்களை போல் எதுவும் செய்ய முடியாதவர்கள்தான். 

ஆனால் நமக்கு இது தொழில் இல்லை ஆகவே நாம் எம்மால் எழுதுவதை, யாழில் வந்து புலம்புவதை தவிர வேறு வழியில்லை என நேர்மையாக ஒத்து கொள்கிறோம். 

அவர்களுக்கு அரசியல் தொழில், ஆகவே வழக்கு போடுவோம் என ஒரு சாராரும், எமக்கு அரசில் உள்ள பவரை பாவித்து இதை தடுப்போம் என மறு சாராராரும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள்.

நமக்கும், ஊரில் உள்ள அரசியல்வாதிகளுக்கும் இது மட்டுமே வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

இது உண்மைதான். 

ஆனால் நிச்சயமாக மைத்திரி ரணில் ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது என்பது வெளிப்படை.

இருதரப்புமே இனவாதிகள்தான் - ஆனால் நில அபகரிப்பு, சிங்கள மயமாக்கலில் கோட்ட-மகிந்த தரப்பு மிகவும் வினைதிறனானவர்கள்.

ஆனால் கோட்ட எப்படியும் வென்றிருப்பார். 

இப்படியும் கணிக்கலாம்....

கோத்தாவின் வெற்றி தேவாலய குண்டுவெடிப்புகளை வைத்து நிச்சயிக்கப்பட்டது

அல்லது...

தேவாலய குண்டு வெடிப்புகள் மூலம் ராஜபக்ஸ வம்சம் அரசாட்சிக்கு உள்ளே வர வைக்கப்பட்டது.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இப்படியும் கணிக்கலாம்....

கோத்தாவின் வெற்றி தேவாலய குண்டுவெடிப்புகளை வைத்து நிச்சயிக்கப்பட்டது

அல்லது...

தேவாலய குண்டு வெடிப்புகள் மூலம் ராஜபக்ஸ வம்சம் அரசாட்சிக்கு உள்ளே வர வைக்கப்பட்டது.
 

நிச்சயமாக. அவர்கள் வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நடத்தபட்டவை அவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நிச்சயமாக. அவர்கள் வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நடத்தபட்டவை அவை.

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
இனி வரும் காலங்களில் எதற்காக தனி ஈழ போராட்டம் தொடங்கியது என தெரியாதவர்களுடன் தனி கூட்டு வைக்காமல் மக்களுடன் மக்களாக இணைந்திருங்கள்.😂

சிங்கள இனவாதம் செய்தவற்றை ஒரு கணமும் நினைவு கூராமல் தமிழினத்தை மட்டும் குறைகூறுபவர்களிடம் விலகியிருங்கள். 🤣

நான் தமிழன் நீங்கள் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.
இனி வரும் காலங்களில் எதற்காக தனி ஈழ போராட்டம் தொடங்கியது என தெரியாதவர்களுடன் தனி கூட்டு வைக்காமல் மக்களுடன் மக்களாக இணைந்திருங்கள்.😂

சிங்கள இனவாதம் செய்தவற்றை ஒரு கணமும் நினைவு கூராமல் தமிழினத்தை மட்டும் குறைகூறுபவர்களிடம் விலகியிருங்கள். 🤣

நான் தமிழன் நீங்கள் 😎

உங்கள் கருத்துக்கும் நன்றி.

நான் இனவாதத்தின் நெருப்பை, போரின் அகோரத்தை நேரில் அனுபவித்தவன்.  

பலர் பத்திரிகையில் மட்டும் வாசிக்கும் கொக்கிளாயும், கொக்குதொடுவாயும், தென்னமரவாடியும் அந்த மண்ணின் கரு நிற கடற்கரையும் நான் ஓடி விளையாடிய மண். ஆகவே போராட்டத்தின் நியாப்பாடு பற்றி யாரிடமும் அறிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

யாழில் எல்லாருடனும் நான் ஒரே அளவு தூரத்தில்தான். சிலதில் ஒன்றியும், சிலதில் விலகியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

உங்கள் கருத்துக்கும் நன்றி.

நான் இனவாதத்தின் நெருப்பை, போரின் அகோரத்தை நேரில் அனுபவித்தவன்.  

பலர் பத்திரிகையில் மட்டும் வாசிக்கும் கொக்கிளாயும், கொக்குதொடுவாயும், தென்னமரவாடியும் அந்த மண்ணின் கரு நிற கடற்கரையும் நான் ஓடி விளையாடிய மண். ஆகவே போராட்டத்தின் நியாப்பாடு பற்றி யாரிடமும் அறிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

யாழில் எல்லாருடனும் நான் ஒரே அளவு தூரத்தில்தான். சிலதில் ஒன்றியும், சிலதில் விலகியும்.

பல ஊடகங்களிலும்,பல இணையத்தளங்களிலும் , பல போராட்ட இயக்களிலும் வந்த சொல் நான்
இது தான் இவ்வளவு அழிவிற்கும் காரணம். இதை தொடர்வீர்கள் என நம்புகின்றேன்.
அது வரைக்கும் நன்றி வணக்கம்.🙏🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, குமாரசாமி said:

பல ஊடகங்களிலும்,பல இணையத்தளங்களிலும் , பல போராட்ட இயக்களிலும் வந்த சொல் நான்
இது தான் இவ்வளவு அழிவிற்கும் காரணம். இதை தொடர்வீர்கள் என நம்புகின்றேன்.
அது வரைக்கும் நன்றி வணக்கம்.🙏🏽

உங்கள் நம்பிக்கை நின்று நிலைக்க வாழ்த்துக்கள் சாமியார்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் முன்பு வேலை பார்த்த ஒருவர் முல்லைதீவு பகுதியை சேர்ந்தவர்  அவர் சொன்னார் முல்லை மாவட்டத்தில் பலநூறு ஏக்கர் காணிகள் பெயருக்குத்தான் தமிழருக்கு சொந்தமானவை என்று இருக்கின்றதேயொழிய யாரும் அந்த பக்கம் போய் எட்டியும் பார்ப்பதில்லை,வெறும் கட்டாந்தரையாக கவனிப்பாரற்று விட்டிருக்கிறார்கள், காலபோக்கில் அவை அரச காணிகளாகும் என்று.

புலம்பெயர்ந்த நாட்டில் இருப்பவர்கள் அவற்றை விற்க முனைப்பும் காட்டுவதில்லை ஏனெனில் யாழ்நகர பகுதிபோன்று அதிகவிலை போவதுமில்லை வாங்குவதற்கு பலர் முன்வருவதும் இல்லை என்று.

 

எல்லோரும் வாழ்ந்தால் ஜப்னா டவுனுக்குள் இல்லையென்றால் வாழ்க்கையே வேண்டாம் என்பதுபோல் சுத்தி சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிற்பதனால் எல்லைகள் விழுங்கபடுகின்றன என்று நினைக்கிறேன்.

கவனிப்பாரற்ற காணிகளை காணிகளே இல்லாத தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் இல்லையென்றால் மலையக பகுதியை சேர்ந்த மக்களுக்காவது குடியமர வழங்கலாம்  ஆனால் அதற்கு யாருக்கும் மனசு வருவதில்லை அரசாங்கத்திடமும் சிங்களவன் முஸ்லீம்களிடமும் பறி கொடுத்தபின் குய்யோ முறையோ என்று புலம்புவினம்.

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, valavan said:

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

வீட்டுக்குள்ள இருந்தவர்களையே அடிச்சு விரட்டிவிட்டு ஆட்சி நடத்துது அரசு. புற்று எடுத்த வீடுகளை துப்பரவாக்கி குடியிருந்தவர்களை வெளிநாட்டு உறவுகளும் உண்டு. ஆனால் பாதிக்கப்படுவதும், பாதிக்கப்பட்டதும் ஏழைகளும், ஏதிலிகளுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, குமாரசாமி said:

பல ஊடகங்களிலும்,பல இணையத்தளங்களிலும் , பல போராட்ட இயக்களிலும் வந்த சொல் நான்
இது தான் இவ்வளவு அழிவிற்கும் காரணம். இதை தொடர்வீர்கள் என நம்புகின்றேன்.
அது வரைக்கும் நன்றி வணக்கம்.🙏🏽

நீங்கள், “நீங்கள்” என என்னை விளித்து எழுதினால் நான், என்னை பற்றி இல்லாமல் பக்கத்து வீட்டுகாரனின் நிலைப்பாடு பற்றியா எழுத முடியும்?

35 minutes ago, valavan said:

என்னுடன் முன்பு வேலை பார்த்த ஒருவர் முல்லைதீவு பகுதியை சேர்ந்தவர்  அவர் சொன்னார் முல்லை மாவட்டத்தில் பலநூறு ஏக்கர் காணிகள் பெயருக்குத்தான் தமிழருக்கு சொந்தமானவை என்று இருக்கின்றதேயொழிய யாரும் அந்த பக்கம் போய் எட்டியும் பார்ப்பதில்லை,வெறும் கட்டாந்தரையாக கவனிப்பாரற்று விட்டிருக்கிறார்கள், காலபோக்கில் அவை அரச காணிகளாகும் என்று.

புலம்பெயர்ந்த நாட்டில் இருப்பவர்கள் அவற்றை விற்க முனைப்பும் காட்டுவதில்லை ஏனெனில் யாழ்நகர பகுதிபோன்று அதிகவிலை போவதுமில்லை வாங்குவதற்கு பலர் முன்வருவதும் இல்லை என்று.

 

எல்லோரும் வாழ்ந்தால் ஜப்னா டவுனுக்குள் இல்லையென்றால் வாழ்க்கையே வேண்டாம் என்பதுபோல் சுத்தி சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிற்பதனால் எல்லைகள் விழுங்கபடுகின்றன என்று நினைக்கிறேன்.

கவனிப்பாரற்ற காணிகளை காணிகளே இல்லாத தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் இல்லையென்றால் மலையக பகுதியை சேர்ந்த மக்களுக்காவது குடியமர வழங்கலாம்  ஆனால் அதற்கு யாருக்கும் மனசு வருவதில்லை அரசாங்கத்திடமும் சிங்களவன் முஸ்லீம்களிடமும் பறி கொடுத்தபின் குய்யோ முறையோ என்று புலம்புவினம்.

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

முல்லை தீவு பக்கம் கூட போகத்தேவையில்லை - வேலணைக்கும் ஊறாத்துறைக்கும் இடைபட்ட ஊர்களில் நல்ல காப்பெட் ரோடு உண்டு, 25 நிமிசத்தில் யாழ் போகலாம் ஆனாலும் சனம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

குறைகூறுபவர்களிடம் விலகியிருங்கள். 🤣

 

உசுப்பேத்திவிட்டு கைதட்டுறதும் இருக்கக்கூடாது என்றும் சொல்லி வையுங்கள்.

1 hour ago, goshan_che said:

சிலதில் ஒன்றியும், சிலதில் விலகியும்.

எங்கள் சட்டாம்பி மாதிரி: சிங்களவருடன் இருப்பது மகிழ்ச்சி, ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று சொன்னால் சிங்களவர் சமஷ்டியை கையில தந்துவிடுவார்கள் என்று புலுடா விடுகிற மாதிரியில்லைதானே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, valavan said:

 

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

ஆனால் இதில் இன்னொரு கோணமும் உள்ளது வல்லவன்.

நீங்கள் சொல்லும் இந்த காணிகள் காட்டு பகுதியை அண்டி, மலேரியா போன்ற ஆபத்துகள், பள்ளி மருத்துவ, வீதி வசதி இல்லாமல்தான் இருக்கும். ஆகவே அங்கே போய் வாழ ஆட்களை பிடிப்பது சுலபமல்ல. அவர்களுக்கும் அங்கே வாழ்வாதாரம் இராது.

ஆனால் இந்த வசதிகள் எல்லாம் ஒரு 10 குடியேற்ற வீடுகளை கட்டியவுடன் மளமளவென்று வந்துவிடும். 

அலம்பில், நாயாறு பக்க தமிழ் கிராமங்களையும், மணலாற்றின் குடியேற்ற கிராமங்களையும் (பட்டினங்களையும்) பார்த்தால் இது புரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

 

எங்கள் சட்டாம்பி மாதிரி: சிங்களவருடன் இருப்பது மகிழ்ச்சி, ஆயுதப்போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை என்று சொன்னால் சிங்களவர் சமஷ்டியை கையில தந்துவிடுவார்கள் என்று புலுடா விடுகிற மாதிரியில்லைதானே? 

இதை நீங்கள் அவரிடம் கேட்க வேண்டும். இனவாதம், போராட்டம், பிழைகள், குறைகள், நிறைகள், தனிநாடு, சமாஸ்டி இவை பற்றிய எனது நிலைப்பாடு என்னது. 

நான் எனக்கு பிடித்த கருத்துகள் வரும் போது கருத்துக்கு கைதட்டுவேன்.

திருக்கேதீஸ்வர வளைவு, யாழில் போதகர் தாக்கபட்டது போன்ற திரிகளில் உங்களை எல்லாரும் சேர்ந்து கும்மிய போது, உங்கள் கருத்து எனக்கு ஏற்புடையதால இருந்தபடியால் அதை வரவேற்றேன்.

அதற்கக்க நான் உங்களை உசுபேத்த்தி விட்டதாக கருதக்கூடாது.

எப்போதும் யாரிடனும் 100% ஒத்தும் இருக்க முடியாது விலகியும் இருக்க முடியாது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, goshan_che said:

கருத்து எனக்கு ஏற்புடையதால இருந்தபடியால் அதை வரவேற்றேன்

வரவேற்புக்கும், உசுப்பேத்தலுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. உங்களுடைய முன்னைய பதிவுகளை பார்த்தல் அது உங்களுக்கு விளங்கும்.

 

50 minutes ago, goshan_che said:

அதற்கக்க நான் உங்களை உசுபேத்த்தி விட்டதாக கருதக்கூடாது.

ஒரு போதும் நான் அப்படி நினைக்கவில்லை. என்னை யாரும் வரவேற்கவேண்டும் என்றோ, பாராட்ட வேண்டுமென்றோ எழுதுவதில்லை. நானும் எனது இனமும் பட்ட வேதனைகள், இழப்புகள், அழிவுகள் ஈடு செய்ய முடியாதவை. அதை விலத்தி கடந்து போக என்னால் முடிவதில்லை. அதை என்னால் மறந்து எமது இருப்பை அழித்தவன் நல்லது செய்வான் என்றோ, அல்லது அவனது மாயையில் நாம் இழந்ததை மீட்டு விடலாம் என்றோ நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, satan said:

வரவேற்புக்கும், உசுப்பேத்தலுக்கும் இடையில் நிறைய வித்தியாசமுண்டு. உங்களுடைய முன்னைய பதிவுகளை பார்த்தல் அது உங்களுக்கு விளங்கும்.

 

ஒரு போதும் நான் அப்படி நினைக்கவில்லை. என்னை யாரும் வரவேற்கவேண்டும் என்றோ, பாராட்ட வேண்டுமென்றோ எழுதுவதில்லை. நானும் எனது இனமும் பட்ட வேதனைகள், இழப்புகள், அழிவுகள் ஈடு செய்ய முடியாதவை. அதை விலத்தி கடந்து போக என்னால் முடிவதில்லை. அதை என்னால் மறந்து எமது இருப்பை அழித்தவன் நல்லது செய்வான் என்றோ, அல்லது அவனது மாயையில் நாம் இழந்ததை மீட்டு விடலாம் என்றோ நினைக்கவில்லை.

நீங்கள் வரவேற்புக்கா எழுதுவதாக நான் சொல்லவில்லை. அப்படி தொனித்தால் மன்னிகவும். நானும் அப்படி எழுதுவதில்லை. இல்லை என்றால் யாழில் மிக பெரும்பான்மை ஆதரிக்கும் கருத்துக்களை எதிர்து எழுதி கொண்டிருக்க மாட்டேன்.

உங்களது மேலே உள்ள நிலைப்பாட்டுக்கும் எனது நிலைப்பாட்டுக்கும் அதிக தூரம் இல்லை.

ஆனால் ஊரில் இருப்பவர்களின் அன்றாட யாதார்தங்களின் அடிப்படையில் அவர்கள் சில கருத்துக்களை சொல்லும் போது, குறிப்பாக அவர்களின் முந்திய கொள்கை பற்றான நிலைப்பாடு தெரியும் பட்சத்தில் அந்த கருத்தின் நியாத்தையும் புரிந்து கொள்கிறேன். அதை எடுத்து சொல்லும் நெஞ்சுரத்தை வரவேற்கிறேன்.

யாரையும் உசுப்பேத்தும் எண்ணமோ, தேவையோ எனக்கு இல்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

அவர்களின் முந்திய கொள்கை பற்றான நிலைப்பாடு தெரியும் பட்சத்தில் அந்த கருத்தின் நியாத்தையும் புரிந்து கொள்கிறேன்

ஏது... ஏது....? போகிற போக்கைப்பார்த்தால் நாளைக்கு வி. முரளிதரனுக்கும் வரவேற்பு நடக்கும் போலத் தெரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, satan said:

ஏது... ஏது....? போகிற போக்கைப்பார்த்தால் நாளைக்கு வி. முரளிதரனுக்கும் வரவேற்பு நடக்கும் போலத் தெரிகிறது.

முரளிதரனுக்கும், வேறு வழி இன்றி ஊரில் ஒருவகை அரசியலை ஆதரிக்கும் யாழ்கள உறுப்பினர்களுக்கும்மான வேறுபாட்டை நான் புரிந்து கொள்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, valavan said:

என்னுடன் முன்பு வேலை பார்த்த ஒருவர் முல்லைதீவு பகுதியை சேர்ந்தவர்  அவர் சொன்னார் முல்லை மாவட்டத்தில் பலநூறு ஏக்கர் காணிகள் பெயருக்குத்தான் தமிழருக்கு சொந்தமானவை என்று இருக்கின்றதேயொழிய யாரும் அந்த பக்கம் போய் எட்டியும் பார்ப்பதில்லை,வெறும் கட்டாந்தரையாக கவனிப்பாரற்று விட்டிருக்கிறார்கள், காலபோக்கில் அவை அரச காணிகளாகும் என்று.

புலம்பெயர்ந்த நாட்டில் இருப்பவர்கள் அவற்றை விற்க முனைப்பும் காட்டுவதில்லை ஏனெனில் யாழ்நகர பகுதிபோன்று அதிகவிலை போவதுமில்லை வாங்குவதற்கு பலர் முன்வருவதும் இல்லை என்று.

 

எல்லோரும் வாழ்ந்தால் ஜப்னா டவுனுக்குள் இல்லையென்றால் வாழ்க்கையே வேண்டாம் என்பதுபோல் சுத்தி சுத்தி சுப்பரின் கொல்லைக்குள் நிற்பதனால் எல்லைகள் விழுங்கபடுகின்றன என்று நினைக்கிறேன்.

கவனிப்பாரற்ற காணிகளை காணிகளே இல்லாத தமிழர்களுக்கு பகிர்ந்தளிக்கலாம் இல்லையென்றால் மலையக பகுதியை சேர்ந்த மக்களுக்காவது குடியமர வழங்கலாம்  ஆனால் அதற்கு யாருக்கும் மனசு வருவதில்லை அரசாங்கத்திடமும் சிங்களவன் முஸ்லீம்களிடமும் பறி கொடுத்தபின் குய்யோ முறையோ என்று புலம்புவினம்.

வீட்டுக்குள் ஆக்கள் இருந்தால் பாம்பு புற்று எடுக்காது.

நானும் கன இடங்களில் இதையே எழுதி வருகிறேன் தமிழர்கள் குடியிருக்க சகல வசதிகளும் வேண்டும் ஆனால் மற்ற இனத்தவர்கள் குடியேறிய பின்னர் சகலதையும் அமைத்துக்கொள்கிறார்கள் 

கிழக்கில் வெளிநாட்டிலுள்ளவர்களே காணிகளை வாங்கி அதிக விலைக்கும் விற்கிறார்கள்  (அம்பாறை பக்கம்)

16 hours ago, goshan_che said:

ஆனால் இதில் இன்னொரு கோணமும் உள்ளது வல்லவன்.

நீங்கள் சொல்லும் இந்த காணிகள் காட்டு பகுதியை அண்டி, மலேரியா போன்ற ஆபத்துகள், பள்ளி மருத்துவ, வீதி வசதி இல்லாமல்தான் இருக்கும். ஆகவே அங்கே போய் வாழ ஆட்களை பிடிப்பது சுலபமல்ல. அவர்களுக்கும் அங்கே வாழ்வாதாரம் இராது.

 

பல சிங்கள குடும்பங்கள் காடுகளுக்குள் குடியேறி பல் நூறுகிலோமீற்றர் ரவுணுக்கும் , பள்ளிக்கும் , நடந்தே , காட்டு விலங்குகளுக்கும் வாழ்ந்துவருகிறது . வாழ்வாதாரம் அடைக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம் ( மரக்கறி , பழங்கள்)  ஆனால் தமிழர்கள் யாழ்ப்பாணத்தை தவிர்ந்த பிரட்கேசங்களில் உள்ளவர்கள் நெற்பயிர் செய்கைவிட வேறேதும் செய்ய முன்வருவதும் இல்லை . விவசாயம் செய்ய தயாரும் இல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.