Jump to content

LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

LTTE உறுப்பினர்கள் உட்பட 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடுபவர்களை விடுவிக்குமாறு நாமல் கோரிக்கை

வழக்கு விசாரணையில் தாமதம் ஏற்பட்டதால் 10-15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மக்களை விடுவிப்பதற்கான ஒரு பொறிமுறையை செயற்படுத்துமாறு இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய அவர், முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் உட்பட பல இளைஞர்கள் தங்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படாமலோ அல்லது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமலோ நீண்ட கால சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவர்களின் வழக்குகளை விரைவுபடுத்துவதற்கும் அல்லது வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் அவர்களை தண்டிப்பதற்கும் விடுவிப்பதற்கும் ஒரு பொறிமுறையை அரசாங்கம் செயற்படுத்த வேண்டும் என்று நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1224322

Link to comment
Share on other sites

வாழ்வு அல்லது சாவு இரண்டில் ஏதாவது ஒரு முடிவுக்கு அரசு வந்தால் தான் தமிழ் அரசியல் கைதிகள் விடிவு சாத்தியம். 

ஒவ்வொருவரின் துயரம் நிறைந்த கதைகளுக்கு முடிவு வர வேண்டும். 

நாமலின் குரலுக்கு அவர்கள் விடுதலைக்கான வழிகள் வருமென்ற கைதிகள் நம்பிக்கை உண்மையாக வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, shanthy said:

வாழ்வு அல்லது சாவு இரண்டில் ஏதாவது ஒரு முடிவுக்கு அரசு வந்தால் தான் தமிழ் அரசியல் கைதிகள் விடிவு சாத்தியம். 

ஒவ்வொருவரின் துயரம் நிறைந்த கதைகளுக்கு முடிவு வர வேண்டும். 

நாமலின் குரலுக்கு அவர்கள் விடுதலைக்கான வழிகள் வருமென்ற கைதிகள் நம்பிக்கை உண்மையாக வேண்டும். 

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

இது ஒரு நம்பிக்கையான செய்தி. இவர் இதை வெளிப்படையாக முன் வைக்கிறார் என்றால் விடப்போகிறார்கள் போல இருக்கு.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

நாடென்ன குடும்ப சொத்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, goshan_che said:

இது ஒரு நம்பிக்கையான செய்தி. இவர் இதை வெளிப்படையாக முன் வைக்கிறார் என்றால் விடப்போகிறார்கள் போல இருக்கு.

நானும், அப்படித்தான் நினைக்கின்றேன்.

நாமல் பாராளுமன்றத்தில் கேட்டவுடன், அவர்களை விடுவித்தால்… அடுத்த தேர்தலுக்கு சின்னவனை, கனமான பதவியில் உட்கார வைக்கலாம் என்று, பெரிசுகளே திட்டம் தீட்டி கொடுத்திருப்பார்கள்.

சம்பந்தர் ஐயாவும்…. அடிக்கடி அரசாங்கத்துக்கு, காட்டமாக எச்சரித்து… பாரிய பின்விளைவுகள் ஏற்படும் என்று அறிக்கைகள் விடுவதால்… அரசும் கொஞ்சம் யோசிக்கத்தானே செய்யும்.

எது எப்படியோ… அவர்கள் வெளியே வரவேண்டும் என்பதுதான், அனைவரின் பிரார்த்தனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கற்பகதரு said:

நாடென்ன குடும்ப சொத்தா?

பின்னை…. குடும்பமே, அரசியலுக்கு வந்தால், குடும்ப சொத்துதானே… 😁 🤣

உங்களுக்கு, என்ன மாதிரி தெரியுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடும்ப அரசியல் நாட்டை எங்கு கொண்டுபோகும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, satan said:

குடும்ப அரசியல் நாட்டை எங்கு கொண்டுபோகும்?

பண்டாரநாயக்கா குடும்ப… அரசியலிருந்து,

இந்தியாவில்…. காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியல் வரை எல்லாம் செய்து…

இப்ப…..  ”ஈ” அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கற்பகதரு said:

நாடென்ன குடும்ப சொத்தா?

பசில்லும் கெதியா நாடாளுமன்றம் புகுந்துவிடுவார் போல கிடக்கு ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, தமிழ் சிறி said:

எது எப்படியோ… அவர்கள் வெளியே வரவேண்டும் என்பதுதான், அனைவரின் பிரார்த்தனை.

🙏🏾

யாரின் அரசியலுக்காகவேனும் அவர்கள வெளியே வர அனுமதிக்பட்டால் சந்தோசமே.

Link to comment
Share on other sites

3 hours ago, தமிழ் சிறி said:

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

அந்தப் பதவிக்கு வேறு யாரையும் இருத்தலாமெண்டு யோசிக்கிறேன். யாரை என்று தெரியவில்லை 🤔

1 hour ago, goshan_che said:

இது ஒரு நம்பிக்கையான செய்தி. இவர் இதை வெளிப்படையாக முன் வைக்கிறார் என்றால் விடப்போகிறார்கள் போல இருக்கு.

விடாமல் பண்ணினால் தானே பலருக்கு அரசியல் ஓடலாம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, shanthy said:

அந்தப் பதவிக்கு வேறு யாரையும் இருத்தலாமெண்டு யோசிக்கிறேன். யாரை என்று தெரியவில்லை 🤔

விடாமல் பண்ணினால் தானே பலருக்கு அரசியல் ஓடலாம். 

சாந்தி அக்கா! நீங்கள் ஏதோ சொல்லவாறியள் எண்டு விளங்குது. ஆனால் என்னெண்டுதான் எனக்கு விளங்கேல்லை? 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

நாடென்ன குடும்ப சொத்தா?

தம்பி சனாதிபதி. அண்ணர் முன்னாள் சனாதிபதியும் இந்நாள் பிரதமரும் ஆவார். அது மட்டுமல்லாமல் மகன் அமைச்சர். மற்றும் குடும்பத்தார் உற்றார் உறவினர்கள் உயர் அதிகார பதவிகளில்..... நாடு குடும்பச்சொத்து எண்டதுக்கு வேறை என்ன ஆதாரம் வேணும்.

கற்பகத்தார் நீங்கள் வர வர மங்கிக்கொண்டு போறியள் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இது ஒரு நம்பிக்கையான செய்தி. இவர் இதை வெளிப்படையாக முன் வைக்கிறார் என்றால் விடப்போகிறார்கள் போல இருக்கு.

நான் நினைக்கவில்லை  வழக்கம் போல் சுமத்திரன்  ராகவனை பார்த்து நாய் போல் குரைக்க வேண்டாம் என்று வெண்ணெய் திரண்டு வரும் தாழியை  உடைக்குதுகள் எங்கடை தலையெழுத்து.

சுமந்திரனுக்கும், சுரேன் ராகவனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சுரேன் ராகவன் எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம் என சுரேன் ராகவனை சுமந்திரன் கோரியிருந்தார்.

அரசாங்கத்தின் அடிவருடியாக ராகவன் செயற்பட்டு வருவதாகவும், நலன்களுக்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியென கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்றில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என சுரேன் ராகவன், சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/sumanthiran-at-parliament-1624439780

  

சுமத்திரன்  பதவியில் இருந்தபோது என்ன செய்தார் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

நான் நினைக்கவில்லை  வழக்கம் போல் சுமத்திரன்  ராகவனை பார்த்து நாய் போல் குரைக்க வேண்டாம் என்று வெண்ணெய் திரண்டு வரும் தாழியை  உடைக்குதுகள் எங்கடை தலையெழுத்து.

சுமந்திரனுக்கும், சுரேன் ராகவனுக்கும் இடையில் நாடாளுமன்றில் கடும் வாக்குவாதம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கும், ஆளும் கட்சி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றிய போது சுமந்திரன் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளும் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய சுரேன் ராகவன் எதனையும் செய்யவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நாயைப் போன்று குரைக்க வேண்டாம் என சுரேன் ராகவனை சுமந்திரன் கோரியிருந்தார்.

அரசாங்கத்தின் அடிவருடியாக ராகவன் செயற்பட்டு வருவதாகவும், நலன்களுக்காக அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளும் சரியென கூறி வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, 15 ஆண்டுகள் நாடாளுமன்றில் இருந்து தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கின்றீர்கள் என சுரேன் ராகவன், சுமந்திரனிடம் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

https://tamilwin.com/article/sumanthiran-at-parliament-1624439780

  

சுமத்திரன்  பதவியில் இருந்தபோது என்ன செய்தார் ?

சும், சும்மா இருந்தாலே போதும். தானா விடுறவங்களையும் குழப்பி அடியாமல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழ் சிறி said:
5 hours ago, shanthy said:

வாழ்வு அல்லது சாவு இரண்டில் ஏதாவது ஒரு முடிவுக்கு அரசு வந்தால் தான் தமிழ் அரசியல் கைதிகள் விடிவு சாத்தியம். 

ஒவ்வொருவரின் துயரம் நிறைந்த கதைகளுக்கு முடிவு வர வேண்டும். 

நாமலின் குரலுக்கு அவர்கள் விடுதலைக்கான வழிகள் வருமென்ற கைதிகள் நம்பிக்கை உண்மையாக வேண்டும். 

நாமலின்…. அப்பாவும், சித்தப்பாவும்தான்…

பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளின் அழுத்தங்களில் இருந்து தப்பிக்கவும்

பொருளாதார சுமைகளில் இருந்து மக்களை திசைதிருப்பவும்

இப்படிப்பட்ட சேவைகள் தேவையாகுது.

எங்களுக்கு அரிசியானால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பெருமாள் said:

சுமத்திரன்  பதவியில் இருந்தபோது என்ன செய்தார் ?

மற்றவன் வாயை கிளறுவது :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

சும், சும்மா இருந்தாலே போதும். தானா விடுறவங்களையும் குழப்பி அடியாமல்.

வெகுவிரைவில் சிங்களவர்க்கு எதிராக தமிழர்களுக்கு பாவிக்கப்பட்ட ஆயுதம் திரும்பும் இன்று தென்னிலங்கை .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, குமாரசாமி said:

மற்றவன் வாயை கிளறுவது :cool:

அதே ஆள் அதே வாய் இப்படியும் சொல்லுது .

அரசியல் கைதிகளை பொசன் போயாவில் விடுதலை செய்யவும்

BY ADMIN ON JUNE 23, 2021

அரசியல் கைதிகள் பற்றி, கடந்த 11 வருடங்களாக பேசிக்கொண்டிருக்கின்றோம். எதிரணியில் இருக்கும் எங்களுடைய அழுதங்களால், 100 கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்,  பொசன் போயா தினத்தன்று, முடிந்தால் சிலரை விடுதலைச் செய்யுங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

https://thaainaadu.com/2021/06/23/அரசியல்-கைதிகளை-பொசன்-போ/?fbclid=IwAR2BPzouwLJyMxSNpk7DwIMRT6Z59tCVLVBDSE12CY_UKYphqc51pzec8iU

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போதய வானொலிச் செய்தி நாளை சில அரசியல் கைதிகள் விடுவிக்கப் படவுள்ளனர்.மகிழ்ச்சியான செய்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, சுவைப்பிரியன் said:

தற்போதய வானொலிச் செய்தி நாளை சில அரசியல் கைதிகள் விடுவிக்கப் படவுள்ளனர்.மகிழ்ச்சியான செய்தி.

சந்தோசம்.  

ஆனந்தசுதாகரனும் இன்னும் விடுவிக்கபடவில்லை என நினைக்கிறேன். அவரும் இதில் ஒருவர் என்றால் மேலும் மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

சும், சும்மா இருந்தாலே போதும். தானா விடுறவங்களையும் குழப்பி அடியாமல்.

சிலர் வாயால் பலரின் வாழ்க்கை தொலைந்து போயிட்டுது. ஆனால் அதுகள் தாங்கள் கூவித்தான் விடியுதெண்டு நினைக்கினம். 

38 minutes ago, goshan_che said:

சந்தோசம்.  

ஆனந்தசுதாகரனும் இன்னும் விடுவிக்கபடவில்லை என நினைக்கிறேன். அவரும் இதில் ஒருவர் என்றால் மேலும் மகிழ்ச்சி.

ஆனந்தசுதாகரன் உட்பட ஆயுள் தண்டனை கைதிகள் வரை இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7 பேர் மட்டும் விடுதலை என்கிறது. டெயிலி மிரர்.

https://www.dailymirror.lk/breaking_news/Seven-ex-LTTE-members-in-prison-to-be-released/108-214677

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியன் செய்தி 17 பேர் என்று சொல்லுது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.