Jump to content

“என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது! - சரத் பொன்சேகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

“என்னை தாக்கிய இளைஞன் 15 வருடங்களுக்கு மேல் சிறையில்” தண்டனை போதுமானது!

June 23, 2021
spacer.png

தான் குண்டுத் தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்தாலும், தனக்கு எதிராகத் தாக்குதலை நடத்தியவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றே தான் விரும்புவதாகத் தெரிவிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தாக்குதலை நடத்திய இளைஞன் 15 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறையில் இருக்கிறார் அவருக்கு அந்தத் தண்டனையே போதுமெனவும் தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையிலான நேற்றையப் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘ஒரு தடவை நான் வழக்கு விசாரணைக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்துக்கு சென்றிருந்தேன். நீதிமன்றத்தில் எனக்கு அருகில் மற்றொரு இளைஞரும் அமர்ந்திருந்தார். அவரின் பெயர் மொரிஷ்.

என் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்திய தற்கொலை தாரியை அழைத்து வந்த வாகனத்தின் சாரதியே அந்த இளைஞன். நான் நீதிமன்றத்துக்கு சென்றிருந்தபோதே, என் மீதான தாக்குதலை நடத்திய இளைஞரும் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தார். அந்த இளைஞருடன் தற்போதும் தொலைபேசியில் பேசுவேன்.” எனவும் தெரிவித்தார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் என் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடத்துக்குப் பின்னர் தாக்குதலுடன் தொடர்புடைய மொரிஸ் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது 15 வருடங்களுக்கு மேலாக வழக்கு விசாரணைகள் இன்றி சிறைச்சாலையில் இருக்கிறார். அவருக்கு அந்தத் தண்டனையே போதும் எனவும் பொன்சேகா தெரிவித்தார்.
 

https://globaltamilnews.net/2021/162623

Link to comment
Share on other sites

இந்தப் பெருந்தன்மையான பேச்சினை சட்டமாதிணைக்களமும் ஜனாதிபதியும் கவனத்தில் எடுத்து அவனை விடுதலை செய்தால் நன்றாக இருக்கும். 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nunavilan said:

சரத், நாமலின் மென்போக்கு எதை காட்டுகிறது?

கூட்டமைப்பு…. சென்ற கிழமை, இந்திய தூதுவரை சந்தித்த பின், ஏற்பட்ட அழுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

21 minutes ago, nunavilan said:

சரத், நாமலின் மென்போக்கு எதை காட்டுகிறது?

எதை காட்டிலாலும் பரவாயில்லை. அவர்கள் விடுதலை செய்யப்படுவதே முக்கியம். அவர்களது போராடிய நோக்கமே நிறைவேறாத நிலையில் அந்த தனி நபர்கள் விடுதலை செய்யப்பட்டு எம்மை போல் சாதாரண வாழ்ககை வாழ்வதே தற்போதைய நிலையில் முக்கியமானது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, nunavilan said:

சரத், நாமலின் மென்போக்கு எதை காட்டுகிறது?

அடுத்த தேர்தலை குறிவைக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சரத், நாமலின் மென்போக்கு எதை காட்டுகிறது?

இந்த விடயத்தில் ஒரு பகுதி விட்டால் மறுபகுதி அதை அரசியலாக்க கூடும்.

ஆகவே இதை அரசியாலாக்குவதில்லை என இரு பகுதியும் முடிவுக்கு வந்துள்ளதாகவே படுகிறது.

ஏன் இந்த திடீர்மனமாற்றம் என்பது புரியவில்லை.

Link to comment
Share on other sites

4 hours ago, tulpen said:

எதை காட்டிலாலும் பரவாயில்லை. அவர்கள் விடுதலை செய்யப்படுவதே முக்கியம். அவர்களது போராடிய நோக்கமே நிறைவேறாத நிலையில் அந்த தனி நபர்கள் விடுதலை செய்யப்பட்டு எம்மை போல் சாதாரண வாழ்ககை வாழ்வதே தற்போதைய நிலையில் முக்கியமானது.  

இதுபற்றி கதைத்தால் என்மீது கல் சொல் எறிவிழும். சிறையில் இருக்கும் ஒவ்வொருவரின் மனநிலையும் தாங்கள் விடுதலையாகி அமைதியாக வாழ வேண்டும் என்பதே. 

வீரமுடன் இனி போராட வருவோம் என்று எவரும் இல்லை. சிறை அவர்களை வாழ்வின் பெறுமதியை உயிரின் பெறுமதியை உணர்த்திவிட்டது. 

எவர் அவர்களை விடுதலை செய்ய முன்வருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுக்கும் மனநிலை பலரிடம் உள்ளது. 

3 hours ago, goshan_che said:

ஏன் இந்த திடீர்மனமாற்றம் என்பது புரியவில்லை.

எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டுமே. 

4 hours ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பு…. சென்ற கிழமை, இந்திய தூதுவரை சந்தித்த பின், ஏற்பட்ட அழுத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

நீங்களும் ஆயலாம். 🤭 தொடங்குங்கோ ஒரு இலவச சனல். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்கப்படத்தக்க முயற்சி மற்றும் செயல்

இவர்ளை நிம்மதியாக தமது குடும்பங்களுடன் சாதாரண  வாழ்வை  வாழ  எல்லோரும் அனுமதிக்கவும் வேண்டும்

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

வரவேற்கப்படத்தக்க முயற்சி மற்றும் செயல்

இவர்ளை நிம்மதியாக தமது குடும்பங்களுடன் சாதாரண  வாழ்வை  வாழ  எல்லோரும் அனுமதிக்கவும் வேண்டும்

ஒருவரின் அனுமதியும் தேவையில்லை. அவர்கள் சாதாரணமாக வாழ்வார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

ஒருவரின் அனுமதியும் தேவையில்லை. அவர்கள் சாதாரணமாக வாழ்வார்கள். 

இதுவரை வெளியில் விடப்பட்டவர்கள் சாதாரண  வாழ்வை  வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

இதுவரை வெளியில் விடப்பட்டவர்கள் சாதாரண  வாழ்வை  வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா??

ஏன் வழவில்லை எனநினைக்கிறீர்களா?? அவர்களை சிங்களவர்களை விட அதிகம் துரத்துவது தமிழர்களே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தனிக்காட்டு ராஜா said:

ஏன் வழவில்லை எனநினைக்கிறீர்களா?? அவர்களை சிங்களவர்களை விட அதிகம் துரத்துவது தமிழர்களே 

அதைத்தான் நானும்  சொன்னேன் ராசா

இவர்ளை நிம்மதியாக தமது குடும்பங்களுடன் சாதாரண  வாழ்வை  வாழ  எல்லோரும் அனுமதிக்கவும் வேண்டும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, satan said:

அடுத்த தேர்தலை குறிவைக்கிறது.

எந்த தேர்தல் அதீல் நாமல் வேட்பாளரானும் அவருக்கு எனது வோட்டு காரணம் சிறையில் உள்ளவர்கள் விடுதலையாகவேணும் உங்கள போல எல்லாத்துக்கும் ஒரு சாட்டும் , ஒரு கருத்தும் 

9 hours ago, shanthy said:

இந்தப் பெருந்தன்மையான பேச்சினை சட்டமாதிணைக்களமும் ஜனாதிபதியும் கவனத்தில் எடுத்து அவனை விடுதலை செய்தால் நன்றாக இருக்கும். 😢

நாளை 17 பேர் முதலில் விடுதலை ஜனாதிபதியின் மன்னிப்புக்கு என செய்திகள் சொல்கின்றன விடுதலையானால் தான் உண்மையா என சொல்லலாம் நாளைய நாள் அவர்களுக்கு விடுதலை நாளாக அமையட்டும் என்ற எதிர்பார்ர்ப்போடு

2 minutes ago, விசுகு said:

அதைத்தான் நானும்  சொன்னேன் ராசா

இவர்ளை நிம்மதியாக தமது குடும்பங்களுடன் சாதாரண  வாழ்வை  வாழ  எல்லோரும் அனுமதிக்கவும் வேண்டும்

அவர்கள் விடுதலையானால் அவர்கள் குடும்பத்துடந்தானே இணைவார்கள்  அதற்கு எலோரும் அனுமதிப்பார்கள் ஆனால் தமிழர்கள் மட்டும் குத்தி குடைவார்கள் 

Link to comment
Share on other sites

25 minutes ago, விசுகு said:

இதுவரை வெளியில் விடப்பட்டவர்கள் சாதாரண  வாழ்வை  வாழ அனுமதிக்கப்பட்டிருக்கிறார்களா??

அப்போ எப்படி வாழ்வதை நீங்கள் அவதானித்தீர்கள்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, shanthy said:

அப்போ எப்படி வாழ்வதை நீங்கள் அவதானித்தீர்கள்? 

தமிழ் மக்கள் (அரச  பயத்தில்) அவர்களிடத்தில்  இருந்து தள்ளி  நிற்பதையும்

அரசும் மாற்று  இயக்கத்தவரும் அவர்ளை  புலிகளாகவே ஒவ்வொரு  நடவடிக்கையையும்  கண்காணிப்பதையும்  அறிந்தேன்.

வெற்றிச்செல்வியிலிருந்து பலர்  இது பற்றி தொடர்ந்து  எழுதி  வருகின்றனரே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எந்த தேர்தல் அதீல் நாமல் வேட்பாளரானும் அவருக்கு எனது வோட்டு காரணம் சிறையில் உள்ளவர்கள் விடுதலையாகவேணும் உங்கள போல எல்லாத்துக்கும் ஒரு சாட்டும் , ஒரு கருத்தும் 

நாளை 17 பேர் முதலில் விடுதலை ஜனாதிபதியின் மன்னிப்புக்கு என செய்திகள் சொல்கின்றன விடுதலையானால் தான் உண்மையா என சொல்லலாம் நாளைய நாள் அவர்களுக்கு விடுதலை நாளாக அமையட்டும் என்ற எதிர்பார்ர்ப்போடு

அவர்கள் விடுதலையானால் அவர்கள் குடும்பத்துடந்தானே இணைவார்கள்  அதற்கு எலோரும் அனுமதிப்பார்கள் ஆனால் தமிழர்கள் மட்டும் குத்தி குடைவார்கள் 

நீங்கள் ஊரிலை இருந்து சொல்லுற படியாலை  எல்லாம் சரியாத்தான் இருக்கும். 😷

Link to comment
Share on other sites

17 minutes ago, விசுகு said:

அதைத்தான் நானும்  சொன்னேன் ராசா

இவர்ளை நிம்மதியாக தமது குடும்பங்களுடன் சாதாரண  வாழ்வை  வாழ  எல்லோரும் அனுமதிக்கவும் வேண்டும்

எல்லோரும் அனுமதித்துத் தான் அவர்கள் சிறை போகவில்லை. ஆக அவர்கள் வாழ்வார்கள். அவர்களுக்கு எந்த அரசானாலும் விடுதலையை கொடுத்தால் போதும். 

அவர்களில் எமக்கு அக்கறை இருக்குமானால் அவர்களுக்கு பொருளாதார பலத்தை வழங்கினால் போதும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் விடுதலையாகி குடும்பங்களுடன் சேர்ந்து வாழ்ந்தால் அதுவே பெரும் பாக்யம்......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் ஊரிலை இருந்து சொல்லுற படியாலை  எல்லாம் சரியாத்தான் இருக்கும். 😷

ஊரில் இருக்கும் போதும் விடுதலையானவர்கள் சிறையிலிருப்பவர்களை பற்றி கதைக்கும் போது காதால் கேட்ட வார்த்தைகள் நெஞ்சில் இறங்கும் போது எனக்கும் சேர்த்து குத்துகிறது காரணம் எனக்கும் ஒருவன் போராடி இருந்திருப்பான் சிறைக்கும் போயிருப்பான் என்ற எண்ணம் அப்படியானவர்கள் விடுதலையாவது எனக்கு மகிழ்ச்சி  அதை நான் ஊரில் இருந்துதான் சொல்லவேண்டும் என்ற தேவை எனக்கு அதிகம் உள்ளது சாமியார்🤭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, shanthy said:

எல்லோரும் அனுமதித்துத் தான் அவர்கள் சிறை போகவில்லை. ஆக அவர்கள் வாழ்வார்கள். அவர்களுக்கு எந்த அரசானாலும் விடுதலையை கொடுத்தால் போதும். 

அவர்களில் எமக்கு அக்கறை இருக்குமானால் அவர்களுக்கு பொருளாதார பலத்தை வழங்கினால் போதும். 

ம்ம்ம்

எமக்கு  அக்கறை  இருந்து  மட்டும் பிரயோசனமில்லை

அவர்கள் பழையவற்றிலிருந்து  விடுபட்டு  வாழ அனுமதிக்கப்படணும்

ஒரு  ஆடைத்தொழிற்சாலை தொடங்கினோம்

போரால்  பாதிக்கப்பட்ட  பெண்கள் தலைமை தாங்கும் குடும்ப  பெண்களுக்கு உதவுவதற்காக.

அதற்கு  பொறுப்பாக இருந்தவரை  தூக்கி 6 மாதம்  உள்ளே  போட்டு  விட்டார்கள்

சொன்ன  காரணம் போரால்  பாதிக்கப்பட்ட  பெண்கள் என்கின்றபோது

அவர்கள் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்களாம்

எனவே  புலிகளை  மீள பலப்படுத்துகின்றோமாம்

இதில்  வேதனை என்னவென்றால் இவர்கள் இவ்வாறு  தான்  வேலைக்கு ஆட்களை  எடுக்கிறார்கள் என்று  போட்டுக்கொடுத்ததே  எம்மவர்கள் தான்.

Link to comment
Share on other sites

11 minutes ago, விசுகு said:

தமிழ் மக்கள் (அரச  பயத்தில்) அவர்களிடத்தில்  இருந்து தள்ளி  நிற்பதையும்

அரசும் மாற்று  இயக்கத்தவரும் அவர்ளை  புலிகளாகவே ஒவ்வொரு  நடவடிக்கையையும்  கண்காணிப்பதையும்  அறிந்தேன்.

வெற்றிச்செல்வியிலிருந்து பலர்  இது பற்றி தொடர்ந்து  எழுதி  வருகின்றனரே???

சிறைச்சாலை, , புனர்வாழ்வு முகாம் யாவும் ஒன்றல்ல இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 

வெற்றிச்செல்வி ஆகாயத்தில் இருக்கிறாரா? அவர் புனர்வாழ்வு பெற்று இருப்பவர். அவரோட சேர்த்து 12 ஆயிரம் பேர் புனர்வாழ்வு பெற்று விடுதலை பெற்றவர்கள். அதாவது 2009 பின்னர். 

தமிழ் அரசியல் கைதிகள் 2009 முன்பு கைதானவர்கள். 

இப்ப இங்க நாங்க கதைப்பது தெற்கில் பெரும் தாக்குதல்களில் தொடர்புபட்ட ஆயுள் தண்டனை 300, 600,வருடங்கள் என தண்டனை பெற்றவர்கள் பற்றியது. 

இதற்குள் அவர் எழுதினார் இவர் உரைத்தார் என்று விவாதம் செய்வதை தவிர்க்க விரும்புகிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்தோசமான விடயம்! இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தண்டனைக்கு முதலே தடுப்புக் காவலில் இருப்பது கூட நரக வேதனை தரும் விடயம். நாளை விடுதலை நடந்தால் நாம் எல்லாரும் எம் அரசியல் வேறுபாடுகளை மறந்து மகிழ வேண்டிய நாளாக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, shanthy said:

வெற்றிச்செல்வி ஆகாயத்தில் இருக்கிறாரா? அவர் புனர்வாழ்வு பெற்று இருப்பவர். 

சிறப்பாக விவசாயம் செய்கிறார் அவர்  முகநூலில் பதிவுகளை காணும் போது சந்தோசம் அண்மையில் அவர் வெளியீட்ட  புத்தகம்
 ( பங்கர்) அனுப்பி வைத்தார் வாசித்த பின்னர் யாரும் வெளிநாட்டிலுள்ள நம் உறவுகள் கேட்டால் அனுப்பி விடுவது வழக்கம் 

Link to comment
Share on other sites

15 minutes ago, Justin said:

சந்தோசமான விடயம்! இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் தண்டனைக்கு முதலே தடுப்புக் காவலில் இருப்பது கூட நரக வேதனை தரும் விடயம். நாளை விடுதலை நடந்தால் நாம் எல்லாரும் எம் அரசியல் வேறுபாடுகளை மறந்து மகிழ வேண்டிய நாளாக இருக்கும்!

நாளை நடைபெறும் விடுதலை எல்லோருக்கும் வர வேண்டும். 

இன்னும் வழக்கு முடியாமல் இருப்பவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இருப்பவருக்கும் நல்ல முடிவு வர வேண்டும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.