Jump to content

எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எளிதில் நோய் தொற்றக்கூடிய ஆபத்தில் உள்ள எமக்கு உதவுங்கள் – வன்னி விழிப்புலனற்றோர் சங்கம்

 
Capture.JPG-1-8-696x320.jpg
 91 Views

வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் கொரோனாப் பெருந் தொற்று தொடர்பான ஒரு பொது வேண்டுகோளை புலம்பெயர் மக்களிடம் வைத்திருந்தார்கள். அது தொடர்பாக அதன் செயலாளர் மகிந்தகுமார் அவர்கள் ‘இலக்கு’ ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலை இங்கு தருகிறோம்.

36285c05-f89c-4597-b66e-7c16b08fbf84-743  

  1. வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தோற்றம். அதன் அங்கத்தவர்கள், செயற்பாடுகள் தொடர்பாக, எமது வாசகர்களுக்கு சுருக்கமாக அறியத் தருவீர்களா?

பதில் – எமது வன்னி விழிப்புலனற்றோர் சங்கமானது 22.07.2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அன்றைய கால கட்டத்தில் எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி, விலை மதிக்க முடியாத பார்வையினை விலையாகக் கொடுத்து, நிர்க்கதியானவர்களை இலங்கையில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர் நிறுவனங்கள் பொறுப்பேற்க மறுத்து விட்டன. இதனால் அவர்களை பாதுகாக்கும், பராமரிக்கும் நோக்கோடு ஏனைய காரணிகளால் பார்வை இழந்தவர்களையும் இணைத்து, இச்சங்கமானது உருவாக்கப்பட்டது. வடக்கு, கிழக்கு மாகாணங்களை பணிப்பரப்பு எல்லையாகக் கொண்டு, இப்பொழுது 278 பயனாளிகள் அங்கம் வகிக்கின்றார்கள். இச்சங்கமானது யாப்பு விதிகளுக்கு அமைவாக நான்கு சபைகளால் நிர்வகிக்கப்படுகின்றது. தொண்டு அடிப்படையில் ஒன்பது பார்வையற்ற அங்கத்தவர்களைக் கொண்ட இயக்குநர் சபையினால் சங்கமானது நிர்வகிக்கப்படும். நிரந்தர வைப்புகள், நிதியங்கள், உறுப்பினர்களுக்கான ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்றவற்றிற்கான தீர்மானங்களை காப்பாளர் சபை இணைந்தே தீர்மானம் நிறைவேற்றும். பயனாளிகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள், பாகுபாடுகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒரு தடவை இடம்பெறும் முச்சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து நியாயத் தீர்வை பெற்றுக் கொடுப்பது மூவர் கொண்ட எதிர்ச் சபையின் கடமையாகும்.

WhatsApp-Image-2021-06-19-at-1.21.27-PM-

ஆண்டுக்கு ஒரு முறை கூடி கணக்கு அறிக்கை மற்றும் முன்னேற்ற அறிக்கை என்பனவற்றை ஆய்விற்கு உட்படுத்தி  ஏற்பதும், சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை கூடி இயக்குநர் சபை உறுப்பினர்களைத் தெரிவு செய்வதும் பொதுச் சபையின் கடமையாகும். ஆரம்ப கால கட்டங்களில் நிவாரண, வாழ்வாதார உதவிகளை கொடையாளிகளின் உதவியுடன் முன்னெடுத்ததோடு, படிப்படியாக கண் சிகிச்சைகளுக்கான மருத்துவ உதவி, கண்ணாடி, துணைக் கருவிகள் வழங்கல், கிணறு, மலசலகூடம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகள், போக்குவரத்திற்கான உதவிகள், பயிற்சி வகுப்புகளுக்கான உதவிகள் என முன்னேற்றமடைந்து முற்றாக பார்வையிழந்தவர்கள், பார்வை இழப்புடன் ஏனைய அவயங்களை இழந்தவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கல் போன்ற திட்டங்களுடன் பார்வையற்ற குடும்பங்களில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான கல்வி அபிவிருத்தித் திட்டத்தினை முன்னெடுப்பதற்கான வளர்ச்சிப் படியில் கால் பதித்தது. அனர்த்தங்களின் பொழுதும், இயலுமான போதும் ஏனைய சாதாரண மக்களுக்கான உதவும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்தது. இருப்பினும் அனைத்துத் திட்டங்களுமே தற்காலிகமாகவே இடம்பெறுகின்றன. திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு அவ்வப்பொழுது கொடையாளிகளைக் கண்டறிய வேண்டியிருக்கின்றது.

WhatsApp-Image-2021-06-19-at-1.21.27-PM-

  1. சிறப்புத் தேவை உள்ளவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டுள்ள உங்களது சங்கம், எதிர் நோக்குகின்ற சவால்கள் எவை? அதனை எப்படிக் கையாள்கின்றீர்கள்?

முதலில் இயல்பான மனித செயற்றிறனில் இருந்து மாறுபட்ட சிறப்புத் திறனைக் கொண்டு விளங்கும் இவர்கள், கல்வி ரீதியாக எதிர் கொள்ளும் சவால்களைப் பொறுத்தமட்டில் பார்வை அற்றோருக்கான கற்றல் செயல் நூல்கள், கணினிசார் பயிற்சி, சிறப்புத் தேவையுள்ள ஆசிரியர்கள் போன்ற தேவைகள் கிடைப்பதில்லை. இவ்வாறே சிக்கல்களை எதிர்கொண்டு, கற்றுப் பட்டதாரியாகும் இவர்கள், வேலை வாய்ப்பு என்ற விடயத்தில்  வயது, மாற்றுத் திறன் போன்ற காரணிகளைக் காரணம் காட்டி புறக்கணிக்கப் படுகின்றார்கள்.

மருத்துவ சவால்களைப் பொறுத்த மட்டில் கண்மருத்துவ சிகிச்சை முறைகளுக்கான போதிய நிதி மற்றும் தொழில் நுட்ப வளமின்மை.

WhatsApp-Image-2021-06-19-at-1.21.27-PM-

வாழ்வாதார சவால்களைப் பொறுத்த மட்டில் முழுமையற்ற வாழ்வாதாரத் திட்டங்கள், குடும்ப உறுப்பினர்கள் ஒத்துழையாமை, இயலாமை, பொருத்தமற்ற வாழ்வாதார மூலம் சமூகச் சீர்கேடுகள் போன்ற காரணிகள் வாழ்வாதாரத் திட்டங்களில் பின்னடைவை ஏற்படுத்துகின்றன. திட்டங்களை நன்கு ஆராய்ந்து முன்னோக்கிச் செல்லும் வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்தி வருகின்றோம்.

அடிப்படைத் தேவைகளுக்கான சவால்களைப் பொறுத்த மட்டில் கிணறு, கழிப்பறை, வீட்டுத் திருத்தங்கள் போன்ற செயற்பாடுகளைப் போதுமான அளவு முன்னெடுக்க முடியாமல் உள்ளது. இத்திட்டங்களைப் பூர்த்தி செய்வதற்கான கொடையாளி அன்பர்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றோம்.

போக்குவரத்து சவால்களைப் பொறுத்த மட்டில்  பொதுப் போக்குவரத்து ஊர்திகளில் பயணிக்க முடியாமை, அனைத்து இடங்களுக்கும் செல்வதற்கான வசதிகள் இன்மை, தனித்து நடமாடுவதற்கான தொழில் நுட்பக் கருவிகள் இன்மை போன்ற சிக்கல்களை எதிர்நோக்கி வரும் நாம், இன்னொருவருடைய உதவியுடன் இச்சவால்களை சமாளித்து வருகின்றோம்.

தொடர்பாடல் சவால்களைப் பொறுத்த மட்டில் பார்வையற்றோர் பயன்படுத்தக் கூடிய திறன் கைபேசிகளை பெற்றுக் கொள்வதற்கான வளமின்மை போன்றன நாம் எதிர் நோக்கும் சவால்களாகும்.

  1. எமது மக்களின் அரசியல் உரிமைகளுக்காகப் போராடி, அதன் நிமித்தம் இரண்டு கண்கள் உட்பட பார்வை இழந்த உங்களின் அங்கத்தவர்களின் வாழ்வியலை மேம்படுத்தும் பணியில் புலம்பெயர்ந்த எங்களது மக்களின் மனநிலையும் பங்கெடுப்பும் எவ்வாறு உள்ளது?

WhatsApp-Image-2021-06-19-at-1.21.27-PM-

பதில் – தாயக மக்களின் அபிவிருத்தியில் புலம்பெயர் உறவுகள் மிகவும் கரிசனை உள்ளவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் ஒருங்கிணைந்து செயற்படும் மனநிலை குறைந்து காணப்படுகின்றது. இதனால் அனேகமான செயற் திட்டங்கள்  தற்காலிக தீர்வையே தருகின்றன. வெளித் தோற்றங்களைப் பார்த்தும், ஏற்படுகின்ற அனுதாபத்தின் அடிப்படையிலுமே உதவுகின்ற மனநிலையினை  அனேகர் கொண்டுள்ளார்கள். சிந்தித்துத் திடமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சிறு சிறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயற்படுத்தும் மனநிலையினை வளர்த்துக் கொள்ளுகின்ற பொழுது தாயகத்தில் கையேந்தும் நிலையைக் குறைக்க முடியும்

  1. கோவிட் 19 பெருந்தொற்று உலகையே புரட்டிப் போட்டு வரும் இன்றைய சூழலில் உங்களது அங்கத்தவர்கள் எதிர்கொள்கின்ற சிரமங்களும் தேவைகளும் எவை?

பதில் – இன்று ஒரு கிலோ அரிசி- 130ரூபா, ஒரு கிலோ மீன்- 400 முதல் 1000 ரூபாய், கோழி இறைச்சி- 800 ரூபாய், வெங்காயம்-300 ரூபாய் என மரக்கறிகள் உள்ளடங்கலாக அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகரித்துக் காணப்படுகின்றன. நாளாந்தம் நாட்கூலி செய்யும் ஒருவரின் உழைப்பு ஒருநாள் செலவிற்கே போதுமானது. இதிலும் பார்வையற்ற குடும்பங்கள் மிகவும் நலிவடைந்து, அடுத்தவர் தயவையே அதிகம் நம்பியிருப்பவர்கள். இந்த நிலையில் அடிக்கடி முடக்க நிலை ஏற்படுத்தப் படுகின்றது. தற்சமயம்கூட இருபது நாட்களாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப் பட்டுள்ளது. தனியார் போக்குவரத்துகள் யாவும் முடக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைக்குச் செல்ல முடியாது எமது பார்வையற்ற குடும்பங்கள் திண்டாடுகின்றார்கள். உணவு நெருக்கடியால் அவதிப்படுகின்றார்கள். இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு உலர் உணவுத் திட்டங்களையும், மருந்துப் பொருட்கள் வழங்கும் திட்டங்களையும், போக்குவரத்து உதவிகளையும் செய்ய வேண்டியுள்ளது

 

 

https://www.ilakku.org/?p=53103

 

என்னால் இயன்ற உதவியை செய்துவிட்டேன்🙏

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியை பழைய மாணவர் சங்கங்கள், ஊர் சங்கங்கள் போன்றவற்றில் பகிர்ந்தால் சில உதவிகள் கிடைக்ககூடும் என நம்புகிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.