Jump to content

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இல்லாதொழிந்துள்ளது: நாமும் வீதிக்கிறங்கி போராட நேரிடும் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(இராஜதுரை ஹஷான்)
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் ஆற்றிய உரை வரவேற்கத்தக்கது. கொவிட்-19 வைரஸ் பரலைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும். அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள் நாளாந்தம் பெரும்  நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளார்கள். அரசாங்கத்திற்கு எதிராக  நாட்டு மக்கள் விரைவில் வீதிக்கிறங்கி போராடுவார்கள்  என அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர் குறிப்பிட்டார்.

thero.jpg

   நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த  அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 பாரிய எதிர்பார்ப்பின் மத்தியில் நாட்டு மக்கள் 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். தேசியம் மற்றும்  நாட்டு மக்களின்  நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம்   செயற்படும் என்று எதிர்பார்த்தே அரசாங்கத்திற்கு ஆதரவு  வழங்கினோம். தேர்தல் காலத்தில் நாட்டு மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்திய கொள்கைக்கு முரணாகவே அரசாங்கம் தற்போது செயற்படுகிறது. ஆகவே அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை முழுமையாக இல்லாதொழிந்து விட்டது.

 கொவிட்-19  வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் முறையற்ற வகையில் முன்னெடுக்கப்படுகிறன. எவர் தலைமையில்  இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது என்பதில் போட்டித்தன்மை காணப்படுவதால் இறுதியில் பொறுப்பு கூறுபவர்கள் எவருமில்லை. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளின் பொறுப்பை  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என ஆரம்பத்தில்  இருந்து தெரிவித்தோம். அவர் இவ்விடயத்தில் மௌனம் காப்பது நெருக்கடிகளை தீவிரப்படுத்துமே தவிர  சீர் செய்யாது.

 அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டினால் நாட்டு மக்கள்  பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும்  பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.  கொவிட் -19 பிரச்சினை,  கப்பல்  தீ  விபத்து பிரச்சினை, எரிபொருள் விலையேற்றம் , உர பற்றாக்குறை என  பலதரப்பட்ட பிரச்சினைகளை நடுத்தர மக்கள் எதிர்க் கொண்டுள்ளார்கள். இப்பிரச்சினைகளுக்கு  இதுவரையில் உரிய தீர்வு முன்வைக்கப்படவில்லை.

  விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான உரத்தை இலவசமாக வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அதிக விலைக்கு கூட உரத்தை பெற்றுக் கொள்ள முடியாத நெருக்கடி நிலைக்கு விவசாயிகள்  தள்ளப்பட்டுள்ளார்கள். இரசாயன உர பாவனையை தடை செய்யும் திட்டத்தை  வரவேற்கிறோம். ஆனால் அதற்கு ஆரம்பத்தில்  ஒரு சிறந்த திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தியிருக்க வேண்டும்.

 விவசாயிகள்  தங்களின் வயல் நிலங்களில் இருந்து போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். ஆகவே இவர்களை வீதிக்கு இறக்கும் செயற்பாட்டை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். விவசாயிகளின் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும். இல்லாவிடின் அரசாங்கத்திற்கு எதிராக நாமும் வீதிக்கு இறங்கி போராட நேரிடும் என்றார்.

அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இல்லாதொழிந்துள்ளது: நாமும் வீதிக்கிறங்கி போராட நேரிடும் - முருந்தெட்டுவே ஆனந்த தேரர்  | Virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.