Jump to content

சம்பந்தனின் ஆசனம் ரணிலுக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

பாராளுமன்றம் இன்று  புதன் கிழமை காலை 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.

பிரதான நடவடிக்கையாக கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசன வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன  முன்னிலையில்  சத்தியப்பிரமாணம் செய்துகாெண்டார்.

சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்காக ரணில் விக்ரமசிங்க காலை 10.00 மணிக்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்வதற்கு  சபாபீடத்துக்கு வரும் நுழைவாயில் ஊடாக வந்தார். 

சபாநாயகர் முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்துவிட்டு, அவருக்கு எதிர்க்கட்சியில் முன் வரிசையில் ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்துக்கு படைக்கல செவிதர் அழைத்து சென்றார். இதன்போது ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து மேசையில் தட்டி அவரை வரவேற்றனர்.

சத்தியப்பிரமாணம் செய்துகாெண்ட ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சியை பார்த்து வணக்கம் தெரிவித்துக்கொண்டு, ஆளுங்கட்சியில் முன்வரிசையில் இருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்களை பார்த்து அவர்களுக்கும் வணக்கம் செலுத்தி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்துக்கு சென்று அமர்ந்து கொண்டார். 

ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் முன்வரிசையில் 13 ஆவது ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அந்த ஆசனத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இருந்தார். 

தற்போது ஆசன வரிசையில் ரணில் விக்ரசிங்கவுக்கு அடுத்தபடியாக ஆர்.சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது.

204159410_3010538282514222_1797023697888

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த ஆசனமும் கிடைக்கவில்லை. இருந்தபோதும் அந்த கட்சிக்கு கிடைக்கப்பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் தேசியப்பட்டியலில் ஒரு ஆசனம் கிடைக்கப்பெற்றது. இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அந்த ஆசனத்துக்கு யாரை நியமிப்பதென்ற கலந்துரையாடல் கட்சி செயற்குழுவில் பல தடவைகள் இடம்பெற்று வந்தன. 

இறுதி கட்டத்தில் நாட்டின் நிலைமைய கருத்திற்கொண்டு, தற்போதைய நிலையில் பாராளுமன்றத்துக்கு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க செல்லவேண்டும் என்ற தீர்மானம் கட்சி செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டது. 

அதன் பிரகாரம் கடந்த வாரம் கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஆசனத்துக்கு ரணில் விக்ரமசிங்கவின் பெயரை பரிந்துரை செய்து கட்சியின் செயலாளரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் கையளித்திருந்தார்.

அதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்துக்கு வந்து சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்ற உறுப்பினரானார்.

சம்பந்தனின் ஆசனம் ரணிலுக்கு  | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 ம் நம்பரை பேயின் நம்பர் என்று கூறுவார்கள் 😂😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

13 ம் நம்பரை பேயின் நம்பர் என்று கூறுவார்கள் 😂😂 

13’ம் நம்பரில் முன்பு இருந்த, இனி இருக்கப் போகிற ஆட்களைப் பார்க்கும் போது… அப்படித்தான் தெரிகின்றது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 ஆம் நம்பர் கதிரையில் இருந்தால்.....நல்ல நித்திரை வருமே?😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புங்கையூரன் said:

13 ஆம் நம்பர் கதிரையில் இருந்தால்.....நல்ல நித்திரை வருமே?😃

நம்ம ஆள்…. கூடுதலாக நித்திரை கொண்டவர் என்பதற்காக… 😂

ரணிலும்… அப்படி செய்வார் என எதிர்பார்க்க முடியாது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

13’ம் நம்பரில் முன்பு இருந்த, இனி இருக்கப் போகிற ஆட்களைப் பார்க்கும் போது… அப்படித்தான் தெரிகின்றது. 🤣

ரணிலுக்குச் சனியன் இந்தக் கதிரையில் இருந்து தொடங்கினால் சம்பந்தனைக் குறை கூற கூடாது.  😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீரகேசரிக்கும் தலைப்புகளை சரியான முறையில் போடத்தெரியவில்லையா? “சம்பந்தனின் ஆசனம் ரணிலுக்கு” ஏதோ சம்பந்தனின் ஆசனத்தை பறித்து ரணிலிற்கு கொடுத்தமாதிரியல்லோ தலைப்பு உள்ளது.. 

இல்லை எனக்குத்தான் தமிழ் விளங்கவில்லையோ தெரியவில்லை

Link to comment
Share on other sites

5 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இல்லை எனக்குத்தான் தமிழ் விளங்கவில்லையோ தெரியவில்லை

ஐயா! பிரபா சிதம்பரநாதா! ஐயமே அறிவின் திறவுகோல்.!! 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.