Jump to content

கொரோனா 2ஆம் அலையில் கணவரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர்க் கதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • சின்கி சின்ஹா
  • பிபிசி ஹிந்தி
23 ஜூன் 2021
கொரோனா

ஜூன் 23, சர்வதேச விதவைகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்த நாளை அனுசரிப்பவர்கள், அசாதாரணமாக குடும்பத்தின் சோகமான சூழலை எதிர்கொள்ளத் தள்ளப்பட்டவர்கள்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை உலக அளவில் பல குடும்பங்களைச் சிதைத்திருக்கிறது. பல இளம் பெண்களின் வாழ்க்கைத்துணைகளை இந்த பெருந்தொற்று பறித்துக்கொண்டுள்ளது. வயதில் இந்தப்பெண்களில் பலரும் முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் உள்ளவர்கள்.

இல்லத்தரசிகளான இவர்கள் இதுவரை வேலைக்கு சென்றதில்லை. இப்போது பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் இவர்களின் முன்னால் நிச்சயமற்ற எதிர்காலம் விரிந்து கிடக்கிறது.

சமீபத்தில் விதவைகளாக மாறிய ஏராளமான பெண்கள், ஆணாதிக்க குடும்ப அமைப்புகளின் ஒரு பகுதியாக உள்ளனர். மேலும் அவர்களுக்கு தொழில்முறை பட்டங்கள் அல்லது முன் பணி அனுபவம் இல்லை. அவர்களில் நிறைய பேருக்கு, மறுமணம் என்பது ஒரு மாற்றுவழி அல்ல.

32 வயதான ரேணு ஏப்ரல் 25 ஆம் தேதி கொரோனா தொற்றுக்கு தனது கணவரை பறிகொடுத்தார். அவரது அச்சங்கள் மற்றும் கணவரின் இழப்பிற்குப் பிந்தைய அவரது வாழ்க்கை பற்றி பிபிசி நியூஸ் சமீபத்தில் அவருடன் பேசியது.

அவர் எங்களிடம் பேசியவை இதோ...

" அவர் இல்லாத துக்கம் என்னை வாட்டும்போது சில நாட்கள் நான் அவருடைய வெள்ளை சட்டையை அணிந்து கொள்வேன். ஆனால் இந்த சட்டை என்றென்றும் நிலைக்காது என்பதை நான் அறிவேன். எதுவுமே நிலையானது அல்ல. திருமணம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டிய ஒன்று. ஆனால் அது நடக்கவில்லை."

"அவர் இல்லாமல் படுக்கைக்குச் செல்வது மனதை வருத்துகிறது. அழுவதற்கு ஒரு அமைதியான இடத்தைத் தேடுவது அதை விட கடினம்."

"எனது ஒன்பது வயது மகள் நான் உறங்கும்வரை தூங்கமாட்டாள். அவளுக்கு ஒன்பது வயதுதான், ஆனால் மரணம் ஒருவரை விரைவில் வளர வைக்கும் என்று நான் நினைக்கிறேன். ஒரு நாள் அவள் மாடியில் அழுது கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவள் தன் தந்தையின் புகைப்படத்தை கையில் பிடித்தவாறு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். நான் அவளிடம் சென்று, இப்படியே நீ அழுதுகொண்டிருந்தால் நான் எப்படி சரியாக யோசிக்க முடியும், குடும்பத்தை கவனித்துக் கொள்ள முடியும் என்று கேட்டேன். இனி அழ மாட்டேன் என்று அவள் எனக்கு உறுதியளித்தாள். கூடவே நானும் அழ மாட்டேன் என்று உறுதி கூறும்படி என்னிடம் சொன்னாள். நாங்கள் இந்த ஒப்பந்தத்தை மீறாமல் இருக்க முயற்சிக்கிறோம்."

என் மகனுக்கு நான்கு வயது. அப்பா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார், விரைவில் திரும்புவார் என்று அவன் நினைக்கிறான்.

"அவர் காலமான நாள் எனக்கு நினைவிருக்கிறது. அவரது நுரையீரல் முற்றிலுமாக சேதமடைந்தது. அவருக்கு கோவிட் -19 இருக்கும் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனால் முந்தைய நாள் இரவு அவர் மூச்சுத் திணறல் இருப்பதாக சொன்னதை தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு 'கொரோனா பாசிடிவ்' என்று மருத்துவர்கள் கூறினர்.

மருத்துவமனையில் அதிக ஆக்சிஜன் இல்லை, ஆகவே அவரை வீட்டிற்கு அழைத்துச்செல்லும்படி கூறிவிட்டனர். அவரது நண்பர்களின் உதவியுடன் சில ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம். "

ஒரு விநாடியில் புரட்டிப்போடப்படும் வாழ்க்கை

கொரோனா

"அன்று ஏப்ரல் 25. மதியம் அவர் நன்றாகத் தூங்கினார். அவரது நண்பர்கள் சிலர் எங்களை சந்திக்க வந்தனர். என் மாமியார், மாமனாரையும் குழந்தைகளையும் விலகி இருக்கும்படி சொன்னேன். நான் அவருடன் இருந்தேன். மாலையில் குழந்தைகளை தன்னிடம் அழைத்து வரச் சொன்னார். இடைவெளியை கடைப்பிடிக்குமாறு அவர் சொன்னார். பின்னர் அவர் இரு குழந்தைகளையும் பார்த்து புன்னகைத்தார். அவருக்கு எதுவும் நடக்காது என்று நான் சொன்னேன்."

"நீ என்னுடன் இருப்பதால் இதிலிருந்து கண்டிப்பாக வெளியே வந்துவிடுவேன்," என்று அவர் கூறினார்.

"இரவு 10:30 மணியளவில் நாங்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை மாற்றிக்கொண்டிருந்தோம். அவரது நண்பரும் எங்கள் அண்டை வீட்டாரும் ஆக்ஸிமீட்டர் ரீடிங்கை பரிசோதித்தபோது அவருடைய SPO2 நிலை பூஜ்ஜியமாக இருந்தது. அவரது இதயதுடிப்பு விகிதம் 15 ஆக இருந்தது.

எனது கணவரின் நண்பர் சந்தீப், சிபிஆர் (cardio pulmonary resuscitation) மூலம் இதயத்தை துடிக்க வைக்க முயற்சி செய்தார். அவர் ஒரு மருத்துவர். மருத்துவமனையில் மருத்துவர் பரிந்துரைத்த ஒரு ஊசியையும் அவர் போட்டார். என் கணவரின் இதயம் துடிப்பதை நிறுத்தியது. அவர் என் கண்முன்னேயே இறந்து விட்டார். அவருக்கு வயது 37 தான். ஒரு நொடியில் வாழ்க்கை தலைகீழாக மாறக்கூடும் என்று சொல்வார்கள். இது உண்மைதான்," என கண் கலங்கினார் ரேணு.

"அவர் சமையலறையில் என்னுடன் செலவழித்த நேரம் இப்போதும் என் நிலைவில் இருக்கிறது. பொதுமுடக்கத்தின்போது நாங்கள் சேர்ந்து சமைப்போம். அவர் சமையல் குறிப்புகளை கூகிளில் பார்ப்பார். நான் காய்கறிகளை நறுக்குவேன். அவர் சமைப்பார். இப்போது, என்ன சமைக்க வேண்டும் என்று என்னிடம் சொல்ல யாருமே இல்லை,"

"எல்லாவற்றுக்கும் மேலாக, நான் எதிர்காலத்தைப் பற்றி பயப்படுகிறேன். நான் என் குழந்தைகளை நினைத்து பயப்படுகிறேன். அன்பு இல்லாத எதிர்காலத்தை பற்றி சிந்திக்க பயப்படுகிறேன்.

நான் எப்போதுமே ஒரு தொழில்முறை ஒப்பனை கலைஞராக இருக்க விரும்பினேன். நான் 10 ஆம் வகுப்புக்குப் பிறகு பள்ளியிலிருந்து நின்றுவிட்டேன். எனக்கு படிக்க பிடிக்கவில்லை.

நான் பழைய டெல்லியில் வளர்ந்தேன். என் அம்மா ஒரு இல்லத்தரசி. என் தந்தை ரயில்வேயில் பணிபுரிந்தார். நானும் என் இரட்டை சகோதரனும் ஒரு பழைய வீட்டில் பிறந்தோம். உடன்பிறப்புகளில் நான் மூத்தவள். பின்னர் என் அம்மா மேலும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.

நான் விதம் விதமாக உடை அணிவதை விரும்பினேன். ஒப்பனை என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நான் 6 ஆம் வகுப்பில் இருந்தபோது என் அத்தையின் உதட்டுச்சாயத்தை எடுத்து போட்டுக் கொள்வேன். அவர் கோபப்படுவார். ஆனால் நான் கவலையே படமாட்டேன். என் தந்தையின் சகோதரிக்கு லட்சுமி நகரில் ஒரு பார்லர் இருந்தது. நான் அங்கு சென்று அவர் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருப்பேன்."

என் இளவயதில் நான் திருமணம் செய்து கொள்ள விரும்பும் யாரையும் சந்திக்கவில்லை. எனக்கு 20 வயதாகும்போது, என் கணவரை சந்தித்தேன்.

திருமண அனுபவம்

கொரோனா

அது 2009 ஆம் ஆண்டு.

"எனது குடும்பத்தினரை சந்திக்க அவர் தனது பெற்றோருடன் வந்தபோது நாங்கள் முதலில் பார்த்துக்கொண்டோம். அது ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம். எனக்கு 20 வயதுதான். என் தந்தைக்கு உடல்நலம் நன்றாக இல்லை. அவர் விரைவில் என்னை திருமணம் செய்துகொடுக்க விரும்பினார். பழைய திரைப்படங்களில் வருவதுபோல, நான் தின்பண்டங்கள் மற்றும் தேநீர் நிறைந்த ஒரு தட்டை எடுத்துச் சென்றேன். அப்போதுதான் நான் அவரை முதலில் பார்த்தேன். தனிமையில் பேசவும் முடிவெடுக்கவும் நாங்கள் ஒரு அறைக்கு அனுப்பப்பட்டோம்."

"விதம்விதமாக ஆடை அணிவதும், மேக்கப் போட்டுக்கொள்வதும் எனக்குப்பிடிக்கும் என்று நான் அவரிடம் சொன்னேன். அவரது குடும்பத்தினருக்கு இதனால் எந்தப் பிரச்னையும் இருக்காது என்று அவர் எனக்கு உறுதியளித்தார். அவர் சிரித்துக் கொண்டே இருந்தார். என்னை ஏற்கெனவே பிடித்துவிட்டதாக அவர் சொன்னார். நான் எங்கள் குடும்பத்தினர் அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று, அவரை எனக்குப்பிடித்திருப்பதாக சொன்னேன். அவரது புன்னகை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. திருமணம் செய்துகொள்ள இது ஒரு நல்ல காரணம் நான் நினைத்தேன்."

ஒரு வருடம் கழித்து, 2010 நவம்பர் 19 ஆம் தேதி நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.

சில மாதங்களுக்குப் பிறகு நான் எனது முதல் குழந்தையை கருத்தரித்தேன். அப்போது நான் தாயாக விரும்பவில்லை. இது மிகவும் விரைவாக நடந்து விட்டதாக நான் நினைத்தேன். ஆனால் என் கணவர் குழந்தையை பெற்றுக்கொள்வோம் என்று கூறினார்.

இப்படியாக என் மகள் பிறந்தாள். அவள் மீது என் கணவர் அன்பைப்பொழிந்தார்.

தனிமையில் வெறுமையான வாழ்க்கை

கொரோனா

2013 ஆம் ஆண்டில், நான் மேக்அப் கோர்ஸ் ஒன்றை படித்தேன். எனக்கு கிட்டத்தட்ட ஒரு வேலையும் கிடைத்தது. ஆனால் என் மகள் மிகவும் சிறியவளாக இருந்ததால் நான் வீட்டில் தங்க முடிவு செய்தேன். பிறகு நான் ஃப்ரீலான்ஸ் வேலையை மேற்கொண்டேன். மாதம் சுமார் 20,000-25,000 ரூபாய் சம்பாதித்தேன். எனக்கு 2016 ல் ஒரு மகன் பிறந்தான்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எனக்கு 20 திருமண ஒப்பனை முன்பதிவுகள் இருந்தன. நான் நிறைய பணம் சம்பாதித்திருப்பேன், ஆனால் பொதுமுடக்கம் காரணமாக ஏறக்குறைய ஒரு வருடம் நான் வேலை செய்யவில்லை. சம்பாதித்த பணத்தை நான் சேமிக்கவில்லை. நகைகளை வாங்கினேன், பரிசுகள் வாங்கினேன், காலணிகள் மற்றும் கவுன்கள் வாங்கினேன்.

இதுபற்றி என் கணவர் அடிக்கடி வருத்தப்படுவார். வாழ்க்கை மற்றும் இறப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர் என்னிடம் சொல்லுவார். ஆனால் நாம் இளமையாக இருக்கும்போது நம்மிடம் பணம் இருக்கும்போது, மரணத்தைப் பற்றி நாம் நினைக்க மாட்டோம்.

பிப்ரவரியில், நாங்கள் ரஜெளரி கார்டனில் உள்ள ஒரு மாலுக்குச் சென்றிருந்தோம். குடும்பத்தில் ஒரு திருமணம் இருந்தது. அதற்காக நாங்கள் ஷாப்பிங் செய்யச் சென்றிருந்தோம். அங்கே ஒரு பிங்க் நிற கவுன் பொம்மைக்கு அணிவிக்கப்பட்டிருப்பதை நான் பார்த்தேன். அது எனக்கு மிகவும் பிடித்துப்போனது. அதன் விலை சுமார் 4,000 ரூபாயாக இருக்க வேண்டும் என்று மனதில் வேண்டிக் கொண்டேன். ஏனெனில் அந்த நேரத்தில் என்னிடம் அவ்வளவு பணம்தான் இருந்தது. ஆனால் நாங்கள் ஷோரூமுக்குள் சென்றபோது, விற்பனையாளர் அந்த கவுனின் விலை. 8,000 ரூபாய் என்று சொன்னார். எப்போதாவதுதான் கவுன் அணியமுடியும் என்பதால் இது வீண்செலவு என்று நான் என் கணவரிடம் சொன்னேன். குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கிக்கொண்டு நாங்கள் வீடு திரும்பினோம்.

மறுநாள் மாலை, என் கணவர் கையில் ஒரு பேக்கெட்டுடன் வீட்டிற்கு வந்தார். அதை திறக்குமாறு என்னிடம் சொன்னார். நான் அதை திறந்தபோது, உள்ளே அந்த கவுன் இருந்தது.

கணவர் கொடுத்த கடைசி பரிசு

கொரோனா

நான் அவருக்கு ஒரு பர்ஸ் வாங்கிக்கொடுத்தபோது, அவர் வருத்தப்பட்டார். நான் வீண்செலவு செய்கிறேன் என்று சொன்னார். அவர் எனக்கு அந்த கவுனை வாங்கிக்கொடுத்தது பற்றி நான் நினைவுபடுத்தினேன். அதுவே அவர் எனக்குக் கொடுத்த கடைசி பரிசு. அவருக்கு நான் கொடுத்த கடைசி பரிசு அந்த பர்ஸ்.

சில நாட்களுக்குப் பிறகு, என் கணவருக்குச் சொந்தமான பொருட்களை நான் கொடுத்துவிடுவேன். சடங்குகள் அப்படித்தான். ஆனால் சில பொருட்களைமட்டும் வைத்துக்கொள்வேன். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நான் அவருக்காக வாங்கிய பர்ஸ் அதில் ஒன்று.

ஏப்ரல் மாதத்தில் நாங்கள் செல்லவிருந்த கோவா பயணத்திற்குப் பிறகு நான் பணத்தை சேமிக்கத்தொடங்குவேன் என்பது நான் அவரிடம் சொல்ல விரும்பிய ஒரு விஷயம். நான் எப்போதுமே கடலைப் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். மற்ற ஜோடிகள் கோவாவுக்குச் செல்லும்போது எடுத்த புகைப்படங்களைப் போல புகைப்படங்களை எடுத்துக்கொள்ள விரும்பினேன். அவர்தான் என் பயணத் துணை. நான் அவரை இழந்து தவிக்கிறேன்.

இப்போது இந்த எல்லா இடங்களுக்கும் என்னை யார் அழைத்துச் செல்வார்கள்? நான் மிகவும் தனிமையாக இருக்கிறேன்.

கணவர் இறந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. எனது மாமனாருக்கு சுமார் 4 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. என் மகள் ஒரு தனியார் பள்ளிக்குச் செல்கிறாள், அவளுடைய பள்ளிக்கட்டணம் ரூ. 2,100. சேமிப்பு இல்லாத நிலையில் உயிர் வாழ்வதே கடினமாக இருக்கும். எனது கணவரின் சகோதரரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அதிகம் சம்பாதிக்கவில்லை. எனவே அவர் குடும்பத்தை கவனித்துக் கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது.

நான் வேலை தேடுகிறேன். நான் ஒரு சில படிவங்களை நிரப்பினேன். சைல்ட் சர்வைவல் இந்தியா என்ற நிறுவனத்திடம் இருந்து பதில் கிடைத்துள்ளது. வேலை தேட உதவிடுவதாக அவர்கள் சொன்னார்கள். கோவிட் -19 நிலைமை காரணமாக ஃப்ரீலான்சிங் ஒரு நீண்ட கால தீர்வு அல்ல.

நான் என் குழந்தைகளை நினைத்து பயப்படுகிறேன். எனது குழந்தைகள் படிக்க வேண்டும், அவர்களுக்கு ஒரு தொழில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் எப்படியோ என் வாழ்க்கையை கழித்துவிடுவேன். ஆனால் தனிமை என்னை வாட்டும் என்று எனக்குத்தெரியும். எல்லோரும் அவரவர் வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். அடர்த்தியான மூடுபனி போல தொங்கிக்கொண்டிருக்கும் நினைவுகளுடன் நான் இந்த அறையில் தனியே இருக்கிறேன்.இதிலிருந்து எப்படியே வெளியே வருவது?

நான் தனியாக இருக்கும்போதெல்லாம் அவரைப் பற்றியே நினைக்கிறேன். கைப்பேசியில் எங்கள் வீடியோக்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அவருடைய பொருட்கள் என்னைச் சுற்றிலும் உள்ளன. அவர் திரும்பி வந்துவிடுவார், இவை எல்லாமே தற்காலிகமானது, இது ஒரு மோசமான கனவுதான் என்று சில நேரங்களில் நினைக்கிறேன்.

மறுமணத்தை தவிர்ப்பது ஏன்?

நான் கொடுத்த அந்த பர்ஸில் அவர் என் புகைப்படம், குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் அவரது பெற்றோரின் புகைப்படத்தை வைத்திருப்பார். அதுவே எங்களின் வாழ்க்கை. எங்களுக்கு கனவுகள் இருந்தன. அச்சங்கள் இருந்தன. இப்போது மிச்சமிருப்பது நானும், நான் நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் மட்டுமே.

அவர் பெயர் அமித். அவருடைய பெயர் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இது சிறியதாகவும் இனிமையாகவும் இருந்தது.

"பலர் என்னிடம் மறுமணம் செய்துகொள்ளுமாறு சொல்கிறார்கள். ஆனால் நான் என் குழந்தைகளைப் பற்றி கவலைப்படுகிறேன். எனது பிள்ளைகள் புதிய தந்தையை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? என் மகளுக்கு தந்தையுடன் ஒட்டுதல் அதிகம். அவர் அதிகாலையில் எழுந்து அவளை எழுப்புவார். இருவரும் வாக்கிங் செல்வார்கள். நான் எப்போதாவது அவளைத் திட்டினால், அவர் வருத்தப்படுவார். மகள் மீது அவர் உயிரையே வைத்திருந்தார். அவள் ஒரு பைலட் ஆக வேண்டும் என்று அவர் விரும்பினார்."

"இது குறித்து சிந்திக்கும் நேரம் இன்னும் வரவில்லை. நான் மறுமணம் செய்ய முடிவு செய்தால் எனது மாமியார் மாமனார் எதிர்க்க மாட்டார்கள். ஆனால் நான் சென்றுவிட்டால் அவர்களை யார் கவனித்துக்கொள்வார்கள்? நான் இங்கே எப்போதுமே இருப்பேன் என்று என் கணவருக்கு வாக்குறுதி அளித்திருக்கிறேன்."

"எனது நண்பர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்ளத் தயாராக இருப்பதாக கூறினார். ஆனால் நான் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டேன். ஒரு வருடத்திற்கும் மேலாக அவரை எனக்குத் தெரியும். என் கணவருக்கும் அவர் பழக்கம். இரண்டு குழந்தைகளுடன் ஒரு விதவையை அவரது குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்களா என்று எனக்குத் தெரியாது. தனது குடும்பம் முற்போக்கானது என்று அவர் கூறுகிறார். ஆனால் நான் அவரை திருமணம் செய்துகொண்டபிறகு அவர் என் குழந்தைகளை மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை என்றால் என்ன செய்வது. நான் மறுப்பு தெரிவித்த பிறகு, அவர் அதிகமாக பேசுவதில்லை."

"நான் எல்லாவற்றையும் கடவுளிடம் விட்டுவிட்டேன்," என்கிறார் ரேணு.

சர்வதேச விதவைகள் தினம்: கொரோனா 2ஆம் அலையில் கணவரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர்க் கதை - BBC News தமிழ்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வெளிப்படையாக எல்லாவற்றையும் கூறுகிறார்.. ஆனால் இவரைப்போல எல்லோருக்கும் ஆதரவு கிடைப்பதில்லை என்பது ஒன்று..

இரண்டாவது, திருமணத்திற்கு பின் வேலையை விடுவது என்பது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும், பெண்களுக்கு, குறிப்பாக திருமணமான பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தனியான ஒரு தைரியத்தை/மனத்துனிவை தரும்.. ஆனால் அதுவும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

பகிர்ந்தமைக்கு நன்றி.. 

Link to comment
Share on other sites

17 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இவர் வெளிப்படையாக எல்லாவற்றையும் கூறுகிறார்.. ஆனால் இவரைப்போல எல்லோருக்கும் ஆதரவு கிடைப்பதில்லை என்பது ஒன்று..

இரண்டாவது, திருமணத்திற்கு பின் வேலையை விடுவது என்பது அவரவர் தனிப்பட்ட விடயமாக இருந்தாலும், பெண்களுக்கு, குறிப்பாக திருமணமான பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் தனியான ஒரு தைரியத்தை/மனத்துனிவை தரும்.. ஆனால் அதுவும் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.

பகிர்ந்தமைக்கு நன்றி.. 

உண்மை

கொரனாவால் சடுதியாக இறந்தவரது மனைவியின் நிலை நாளைக்கே எம்மைச் சார்ந்தவர்களுக்கு ஒரு விபத்தாலோ மாரடைப்பு போன்றவற்றாலோ ஏற்படலாம். ஆகக் குறைந்தது ஒரு வேலையை செய்வதற்கு தேவையான Skills இனையாவது இவர்கள் வளர்த்துக் கொள்ளல் வேண்டும். வேலைக்கு செல்லாத மனைவியரைக் கொண்ட ஆண்கள் தம் இறப்பிற்கு பின் குடும்பத்துக்கு பொருளாதார சவால்களை ஓரளவுக்கேனும் சமாளிக்க கூடிய காப்புறுதியையாவது எடுத்து வைத்து இருத்தல் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த சில நாட்களுக்கு முன் இங்கு vaccine போட்டுக் கொண்ட இரவே ஒரு தமிழர் இறந்துள்ளார் யாராவது அறிந்து கொண்டீர்களா...49 வயது குடும்பத்தவர் என அறிய முடிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவின் தாக்கங்களும் அதன் விளைவுகளும் உடனடியாக தெரியாது  குடும்ப உறவிலிருந்து  , உளவியல் தாக்கம் ,பிள்ளைகளின் கல்வி   ...மன நிலை , செல்பேசியை உற்றுபார்ப்பதால்  கண் பார்வை பிரச்சினை பொருளாதாரம்  என் பவ ற்றின்   தாக்கம்   இன்னும் சில காலங்களில் உணரப்படும்

Link to comment
Share on other sites

54 minutes ago, யாயினி said:

கடந்த சில நாட்களுக்கு முன் இங்கு vaccine போட்டுக் கொண்ட இரவே ஒரு தமிழர் இறந்துள்ளார் யாராவது அறிந்து கொண்டீர்களா...49 வயது குடும்பத்தவர் என அறிய முடிகிறது.

ஓ....நான் அறியவில்லை. 

தடுப்பூசி போட்டமைதான் காரணமாக இருக்காது என நம்புகின்றேன். 

39 minutes ago, நிலாமதி said:

 , செல்பேசியை உற்றுபார்ப்பதால்  கண் பார்வை பிரச்சினை பொருளாதாரம்  என் பவ ற்றின்   தாக்கம்   இன்னும் சில காலங்களில் உணரப்படும்

இதுக்கும் கொரனாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையே. சதா செல்போனை உற்றுப்பார்த்தால் கண்பார்வையில் பிரச்சனை வரும் தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நிழலி said:

உண்மை

கொரனாவால் சடுதியாக இறந்தவரது மனைவியின் நிலை நாளைக்கே எம்மைச் சார்ந்தவர்களுக்கு ஒரு விபத்தாலோ மாரடைப்பு போன்றவற்றாலோ ஏற்படலாம். ஆகக் குறைந்தது ஒரு வேலையை செய்வதற்கு தேவையான Skills இனையாவது இவர்கள் வளர்த்துக் கொள்ளல் வேண்டும். வேலைக்கு செல்லாத மனைவியரைக் கொண்ட ஆண்கள் தம் இறப்பிற்கு பின் குடும்பத்துக்கு பொருளாதார சவால்களை ஓரளவுக்கேனும் சமாளிக்க கூடிய காப்புறுதியையாவது எடுத்து வைத்து இருத்தல் வேண்டும். 

Life insurance, private health insurance போன்றவற்றை பெரும்பாலானோர் எடுப்பதில்லை என நினைக்கிறேன்.. மாத கட்டண கட்டுவதைவிட இந்த கட்டணங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டுபோகுமே தவிர அதனால் உடனடி பயன் இல்லை என்பதால் இந்த மாதிரி காப்புறுதிகளை எல்லோரும் எடுப்பதில்லை.. அத்துடன் ஒருவருடைய ஊதியத்தில் வீட்டு செலவுகள், கல்வி செலவுகள், வேறு செலவுகளும் இருப்பதால் இவற்றைப்பற்றி பலர் அக்கறை எடுப்பதில்லை..

அதே போல எதிர்காலத்தைப்பற்றி கனவுகள் காண்போம் ஆனால் இறப்பை பற்றி கதைப்பதை விரும்புவதில்லை…

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால்  ஒரு வம்சமே அழிந்த கதையும் உண்டு.

ஒன்று இரண்டுபேர் மிஞ்சியிருந்தால் குடும்பத்தின் பெயர் சொல்லவாவது இருந்திருப்பார்கள், இங்கே ஒட்டுமொத்தமாக போய்விட்டார்கள்.

யாரை பழி சொல்வது யாரின்மேல் பாவம் சொல்வது?

----------------------------

 4 மகன்கள் பலி, கொரோனாவுக்கு 5 பேர் பலி, தாய் அதிர்ச்சியில் பலி, திருப்பூர்

5 Dead in corona - Updatenews360

திருப்பூர் : கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் பலியாகி விட்டதை அறிந்த மூதாட்டி அதிர்ச்சியில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வராஜ் (வயது 42). இவரது மனைவி சாந்தி (வயது 35). இவர்கள் இருவருக்கும் கொரோனோ நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

 
 

இதையடுத்து தெய்வராஜின் அண்ணன்கள் ராஜா (வயது 50), சவுந்தரராஜன்(வயது 45), தங்கராஜ் (வயது 52) ஆகியோரும் கொரோனாவால் இறந்துவிட்டனர். ஒரே குடும்பத்தில் 5 பேர் அடுத்தடுத்து சில நாட்களில் கொரோனாவால் இறந்த தகவல் அவர்களின் தாயார் பாப்பாளுக்கு(வயது 70)  தெரிவிக்கப்படவில்லை.

அவரும் வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல்  இருந்தார். இந்த நிலையில் தனது மகன்கள், மருமகள் யாரும் வராததைக் கண்டு உறவினர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு உறவினர்கள் மகன்களும், மருமகளும் கொரோனா நோய் தொற்றால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போன பாப்பாள் இறந்து விட்டார். இந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

https://www.updatenews360.com/tamilnadu/corona-kills-4-son-and-a-daughter-in-law-two-days-after-the-tragedy-of-the-informed-mother-victim-280521/

Link to comment
Share on other sites

2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

Life insurance, private health insurance போன்றவற்றை பெரும்பாலானோர் எடுப்பதில்லை என நினைக்கிறேன்.. மாத கட்டண கட்டுவதைவிட இந்த கட்டணங்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டுபோகுமே தவிர அதனால் உடனடி பயன் இல்லை என்பதால் இந்த மாதிரி காப்புறுதிகளை எல்லோரும் எடுப்பதில்லை..

 

இங்கு கனடாவில் இவ்வாறு அதிகரிப்பது இல்லை. குறிப்பிட்ட தொகைக்கு (உதாரணமாக 5 இலட்சம்) இற்கு காப்புறுதி எடுக்கும் போது முதலாம் மாதம் செலுத்த வேண்டி வரும் கட்டணம் தான், இறுதி வரைக்கும் செலுத்த வேண்டி இருக்கும். இடையில் காப்புறுதித் தொகைகை அதிகரித்தால் மாதாந்த தொகையும் அதிகரிக்கும்.

நான் வீடு வாங்கினால் வீட்டு மோர்ட்கேஜ் இற்கு காப்புறுதி எடுக்காமல், வங்கிக்கு கட்ட வேஂண்டிய தொகைக்கு ஈடாக இன்னொரு ஆயுள் காப்புறுதி எடுப்பதுண்டு. ஒரு வேளை நான் இறந்தாலும் அந்த காப்புறுதியில் வரும் தொகையை வீட்டுக்கு செலுத்தி வீட்டை குடும்பம் முழுமையாக கொள்வனவு செய்ய முடியும். இவ்வாறு செய்யாமல் இறந்த என் நண்பனது குடும்பத்தின் நிலையை கண்ட பின் ஏற்பட்ட ஞானம் இது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

இங்கு கனடாவில் இவ்வாறு அதிகரிப்பது இல்லை. குறிப்பிட்ட தொகைக்கு (உதாரணமாக 5 இலட்சம்) இற்கு காப்புறுதி எடுக்கும் போது முதலாம் மாதம் செலுத்த வேண்டி வரும் கட்டணம் தான், இறுதி வரைக்கும் செலுத்த வேண்டி இருக்கும். இடையில் காப்புறுதித் தொகைகை அதிகரித்தால் மாதாந்த தொகையும் அதிகரிக்கும்.

நான் வீடு வாங்கினால் வீட்டு மோர்ட்கேஜ் இற்கு காப்புறுதி எடுக்காமல், வங்கிக்கு கட்ட வேஂண்டிய தொகைக்கு ஈடாக இன்னொரு ஆயுள் காப்புறுதி எடுப்பதுண்டு. ஒரு வேளை நான் இறந்தாலும் அந்த காப்புறுதியில் வரும் தொகையை வீட்டுக்கு செலுத்தி வீட்டை குடும்பம் முழுமையாக கொள்வனவு செய்ய முடியும். இவ்வாறு செய்யாமல் இறந்த என் நண்பனது குடும்பத்தின் நிலையை கண்ட பின் ஏற்பட்ட ஞானம் இது.

 

இந்த தொகை  குறைவடைந்து குறைவடைந்து இறுதியில் பூச்சியமாகி  விடுமல்லவா??

அவ்வாறாயின்  முதலில்  அவர்களுக்கு நட்டமாகவும்

இறுதிக்காலப்பகுதியில்  உங்களுக்கு நட்டமாகவும் தேவையற்றும்  போய்விடுமல்லவா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நிழலி said:

இங்கு கனடாவில் இவ்வாறு அதிகரிப்பது இல்லை. குறிப்பிட்ட தொகைக்கு (உதாரணமாக 5 இலட்சம்) இற்கு காப்புறுதி எடுக்கும் போது முதலாம் மாதம் செலுத்த வேண்டி வரும் கட்டணம் தான், இறுதி வரைக்கும் செலுத்த வேண்டி இருக்கும். இடையில் காப்புறுதித் தொகைகை அதிகரித்தால் மாதாந்த தொகையும் அதிகரிக்கும்.

நான் வீடு வாங்கினால் வீட்டு மோர்ட்கேஜ் இற்கு காப்புறுதி எடுக்காமல், வங்கிக்கு கட்ட வேஂண்டிய தொகைக்கு ஈடாக இன்னொரு ஆயுள் காப்புறுதி எடுப்பதுண்டு. ஒரு வேளை நான் இறந்தாலும் அந்த காப்புறுதியில் வரும் தொகையை வீட்டுக்கு செலுத்தி வீட்டை குடும்பம் முழுமையாக கொள்வனவு செய்ய முடியும். இவ்வாறு செய்யாமல் இறந்த என் நண்பனது குடும்பத்தின் நிலையை கண்ட பின் ஏற்பட்ட ஞானம் இது.

இங்கே ஆயுட்காப்புறுதி பற்றி அதிகம் எனக்கு தெரியவில்லை, அதைப்பற்றி சிந்திக்கவில்லை ஆனால் அதைப்பற்றி அறிந்துகொள்வதும் நல்லதுதான்.. 

ஆனால் private health insurance கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடிதான் உள்ளது..

உயிலைக்கூட எழுதும் பழக்கம் எங்களவர்களிடம் அதிகம் இல்லை.. பின்பு அதனால் வரும் கால இழுத்தடிப்பும் அதிகம்.. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • BJPயின் வாக்கு வங்கி, பாமக வுடன் சேர்ந்து  18% ஆக வளர்ந்து வருவது தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. அதிமுகவின் வாக்கு வங்கி இப்பிடி குறைந்து கொண்டு போவதும் நல்லதல்ல. சீமான் வேறு யாருடனும் கூட்டு சேராமல் வாக்கு வங்கியை வளர்க்கமுடியாது, ஏதாவது ஒரு பதவியில் இருந்து கொண்டு, மக்களிடம் நிரூபிக்காவிட்டால், இப்பிடியே 5 தொடக்கம் 8 சதவீதம் வரையில், அவரின் தீவிர ஆதரவாளர்களின் அளவின் வரைக்கும் வாக்கு வங்கி இருக்கும். 
    • பிடிச்ச பொலிஸ்காரர் நிஷான் துரையப்பாவாம்! மெய்யே?
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், அலெசியா பிராங்கோ மற்றும் டேவிட் ராப்சன் பதவி, ஃபீச்சர்ஸ் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் புதன் கோள், அதன் "பொருத்தமில்லாத" மையப்பகுதியில் தொடங்கி அதன் மேற்பரப்பின் குழப்பமான ரசாயன கலவை வரை, ஆச்சரியங்கள் நிறைந்தது. இந்தக் கோளின் தோற்றம் குறித்த பின்னணியிலும் ஆச்சரியத்திற்குக் குறைவு இல்லை. ஆனால், சைப்ரஸில் காணப்படும் பாறைகளில் அதற்கான சில பதில்கள் கிடைக்கக்கூடும். அறிவார்வம் பல ஆய்வாளர்களைப் பலி வாங்கியுள்ளது. அந்த வரிசையில் தாம் அடுத்தாக இருக்கக்கூடும் என்று நிக்கோலா மாரி அஞ்சினார். சைப்ரஸின் தொலைதூர மலைகளைச் சுற்றி வாகனம் ஓட்டும்போது மாரி வழிகாட்டலுக்கு தனது செல்போனை நம்பியிருந்தார். ஆனால் பகல்பொழுது சாய்ந்தபோது அவரது போனின் பேட்டரியும் குறைந்தது. தனது தங்குமிடத்திற்குத் திரும்பிச் செல்ல வழி தெரியாமல் அவர் தவித்தார். ”நான் 50 கி.மீ.க்கும் அதிகமாக (31 மைல்கள்) பயணித்தேன். அதன்போது நான் ஒரு வாகனத்தைக்கூட பார்க்கவில்லை," என்று அவர் கூறுகிறார். அவர் தனது வயிறு, இயந்திரம் மற்றும் தொலைபேசி பேட்டரிகளை நிரப்பக்கூடிய உணவு விடுதிக்குச் செல்லும் வழி தனக்கு நினைவில் இருப்பதாக நினைத்தார். ஆனால் அவர் அங்கு சென்றபோது அது வெறிச்சோடியிருப்பதைக் கண்டார். ஒரு திருப்பம் இறுதியில் அவரை மற்றொரு ஸ்தாபனத்திற்கு அழைத்துச் சென்றது, ஆனால் அந்த தனிமையான மலைச் சாலைகளில் தனது உயிருக்குப் பயந்ததாக அவர் ஒப்புக்கொள்கிறார். "நான் சில மோசமான கணிப்புகளைச் செய்தேன்," என்று அவர் கூறுகிறார். அதிர்ஷ்டவசமாக அவரது பயணம் வீண் போகவில்லை. மாரி இத்தாலியில் உள்ள பாவியா பல்கலைக்கழகத்தில் கோள் புவியியலாளராக உள்ளார். அவர் சூரிய குடும்பத்தில் நமது அண்டை கோள்களின் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சியை ஆய்வு செய்கிறார். அவர் தனது முனைவர் பட்டத்திற்காக செவ்வாய் கோளின் எரிமலை குழம்பு ஓட்டங்களை ஆய்வு செய்தார். இந்த நேரத்தில் அவர் சைப்ரஸ் வழியாக புதன் மீது தனது பார்வையைச் செலுத்துகிறார். புதனில் காணப்படும் பாறைகளுடன் வினோதமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக நம்பப்படும் "போனினைட்" என்று பெயரிடப்பட்ட ஒரு குறிப்பிட்ட வகை பாறையைக் கண்டுபிடிப்பதே அவரின் நோக்கமாக இருந்தது. அவர் நினைப்பது சரியாக இருந்தால் அந்தக் கோளின் தனித்துவமான தோற்றம் தொடர்பான ஒரு துப்பு கிடைக்கலாம்.   சூரியனில் இருந்து முதல் பாறை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் புதன் கோளில் அனைத்துமே உச்ச அளவில் உள்ளது. சந்திரனைவிட சற்றே அதிக கன அளவு கொண்ட புதன், சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். அது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது. அதில் வெப்பத்தைத் தக்கவைக்க வளிமண்டலம் இல்லை. அதாவது மேற்பரப்பில் வெப்பநிலை பகலில் 400 டிகிரி செல்ஷியஸ் முதல் இரவில் -170 டிகிரி செல்ஷியஸ் (750F முதல் -275F) வரை மாறுபடும். இது சூரிய குடும்பத்தில் மிகச் சிறிய சுற்றுப்பாதையைக் கொண்டுள்ளது; அதன் ஒவ்வோர் ஆண்டும் 88 புவி நாட்கள் மட்டுமே உள்ளன. ”இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த மொத்த கோளின் உட்கருவைத் தவிர வேறில்லை” என்கிறார் நிக்கோலா மாரி. புதன் இருக்கும் இடமானது விஞ்ஞானிகளின் ஆய்வை மிகவும் கடினமாக்கியுள்ளது. இதற்கு வெப்பமும் ஒரு காரணம். சூரியனுக்கு மிக அருகில் சுற்றும் இந்தக் கோளை நெருங்கும் விண்கலங்கள் வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும். இரண்டாவது ஈர்ப்பு விசை. சூரியனை நெருங்க நெருங்க அதன் இழுவை சக்தி வலுவடையும். இது விண்கலத்தை விரைவுபடுத்தும். மிக வேகமாகப் பயணிப்பதைத் தவிர்க்க விண்கலம் ஒரு சிக்கலான பாதையில் செல்ல வேண்டும். இது மற்ற கிரகங்களைச் சுற்றி நிறைய மாற்றுப் பாதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். இது அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் விண்கலம் தன் வேகத்தைக் குறைத்து, கட்டுப்பாட்டை மீண்டும் பெற அதிக எரிபொருள் தேவைப்படுகிறது.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,இந்த பண்டைய ‘சால்ட் லேக்’ போன்ற சைப்ரஸின் சில பகுதிகளில் காணப்படும் தரிசு நிலப்பரப்புகள், புதன் கோளின் தோற்றம் பற்றிய தடயங்களைக் கொண்டிருக்கலாம். "சுற்றுப்பாதை கண்ணோட்டத்தில் பார்த்தால் வியாழனைவிட புதன் கோளை அடைவது கடினம்,” என்று கூறுகிறார் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் ’பெபிகொலம்போ’ என்று அழைக்கப்படும் புதன் கோளுக்கான பயணத் திட்டத்தின் விண்கல இயக்க மேலாளர் இக்னாசியோ கிளெரிகோ. மாரி சைப்ரஸில் செய்துகொண்டிருக்கும் பணி இந்தத் திட்டத்தில் பங்கு வகிக்கிறது. இந்த சிரமங்கள் காரணமாக நமது மற்ற அண்டை கோள்களைவிட புதன் குறைவாகவே ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டு முந்தைய பயணங்கள் - மரைனர் 10 மற்றும் மெசஞ்சர் - அதன் மேற்பரப்பை வரைபடமாக்கும் அளவுக்கு நெருக்கமாகப் பறந்தன. புதன் பள்ளங்களால் நிரம்பியுள்ளதையும், அதன் கட்டமைப்பு பற்றிய சில முக்கிய ஆச்சரியங்களையும் அது வெளிப்படுத்தியது. புதன் கோளின் மையப்பகுதி ஆச்சரியங்கள் நிறைந்தது. மற்ற பாறை அடிப்படையிலான கிரகங்கள் - வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் அனைத்தும் ஒப்பீட்டளவில் சிறிய மையப்பகுதியைக் கொண்டுள்ளன. அவை தீக்குழம்பால் செய்யப்பட்ட தடிமனான மேலோடு மற்றும் கடினமான மேற்பரப்பால் சூழப்பட்டுள்ளன. இருப்பினும் புதனின் மேலோடு வியக்கத்தக்க வகையில் மெல்லியதாகத் தோன்றுகிறது. அதே நேரம் அதன் மையமானது எதிர்பாராதவிதமாக மேற்பரப்பைவிட மிகப் பெரியதாக உள்ளது. "இது பொருத்தமில்லாதது," என்று மாரி கூறுகிறார். மேலும் புதன் ஒரு காந்தப்புலத்தால் சூழப்பட்டிருப்பதை இந்தப் பயணங்கள் வெளிப்படுத்தின. அதன் அடர்த்தியுடன் இணைந்து, இது ஒரு இரும்பு மையத்தைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது. மேலும் பூமியைப் போலவே அதன் மையப் பகுதியும் ஓரளவு உருகிய தீக்குழம்புகள் அடங்கியதாகக் இருக்கக்கூடும். புதனின் மேற்பரப்பில் உள்ள ரசாயனங்களின் விகிதம் மிகவும் அசாதாரணமானது. தொலைவில் இருந்து கிரகத்தின் வேதியியல் கலவையைப் பகுப்பாய்வு செய்ய "ஸ்பெக்ட்ரோமெட்ரி" என்ற நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் விஞ்ஞானிகள், புதன் கோள் தனது அண்டை கோள்களைக் காட்டிலும் தோரியத்தின் அதிக செறிவுகளைக் கொண்டிருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். ஆரம்பக்கால சூரிய குடும்பத்தின் தீவிர வெப்பத்தில் தோரியம் ஆவியாகியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அதன் தோரியம் அளவு மூன்று கோள்கள் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்திற்கு ஒத்ததாக உள்ளது. சூரியனில் இருந்து அதன் தூரம் காரணமாக செவ்வாய் கிரகத்தில் குளிர்ந்த வெப்பநிலையில் தோரியம் உருவாகியிருக்கும்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,"ஆலிவின்ஸ்" என்று அழைக்கப்படும் பல பச்சை படிகங்களைக் கொண்ட போனினைட்டின் மாதிரி இத்தகைய முரண்பாடுகள், சூரியனில் இருந்து வெகு தொலைவில் செவ்வாய் கோளுக்கு அருகில் புதன் உருவாகியிருக்கக்கூடும் என்று சில கோள் விஞ்ஞானிகள் ஊகிக்க வழிவகுத்தது. அதன் பெரிய மையப்பகுதிக்கு ஏற்ற, பூமியின் அளவை ஒத்த நிலைத்தன்மையுடன் அது முதலில் உருவாகியிருக்க வேண்டும். அதன் வரலாற்றின் ஒரு கட்டத்தில், புதன் மற்றொரு கோளின் மேற்பரப்புடன் மோதியதாகவும், இந்த மோதல் சூரியனை நோக்கி அதை சுழலச் செய்ததாகவும் அனுமானிக்கப்படுகிறது. அத்தகைய மோதல் அதன் மேலோடு மற்றும் அதன் மேற்பரப்பின் பெரும்பகுதியைத் தகர்த்து அதைப் பறக்கச் செய்திருக்கும். அந்த நேரத்தில் ஒரு பெரிய திரவ மையம் உருவாகியிருக்கும். "இன்று நாம் காணும் புதன் ஒரு காலத்தில் இருந்த கிரகத்தின் உட்கருவைத் தவிர வேறொன்றுமில்லை," என்று மாரி கூறுகிறார். வேற்றுகிரக பாறைகள் இந்தக் கோட்பாட்டை சோதிப்பதற்கான சிறந்த வழி, புதனின் மேற்பரப்பில் இருந்து பாறைகளின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்வது அல்லது அதன் மேற்பரப்பில் துளையிடுவது. ஆனால் எந்த ஆய்வும் மேற்பரப்பில் தரையிறங்க முடியவில்லை. இதனால் விஞ்ஞானிகள் மற்ற தகவல்களைத் தேடுகிறார்கள். சில தடயங்கள் ஆபிரைட்டுகள் எனப்படும் விண்கற்களில் இருந்து வரலாம், அவை முதலில் கண்டுபிடிக்கப்பட்ட பிரான்ஸ் கம்யூன் ஆப்ரெஸின் பெயரால் அறியப்படுகிறது. இந்தப் பாறைகளின் ரசாயன கலவை புதன் கோளைப் போலவே உள்ளது. புதனை அதன் தற்போதைய நிலைக்குக் கொண்டுவந்த, கோள்களுக்கு இடையே நிகழ்ந்த மோதலின் விளைவாகச் சிதறிய பாறைத் துண்டுகளாக அவை இருக்கக்கூடும் என்றுகூட சில விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இது ஒரு நம்பக்கூடிய கருதுகோள்தான். ஆனால் மாரிக்கு இதில் சந்தேகம் உள்ளது. புதன் உருவான அதே சூரிய நெபுலா பகுதியில் உருவான சிறுகோள்களில் இருந்து ஆபிரைட்டுகள் வந்ததாக இதுவரை கிடைத்த சான்றுகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவை ஒருபோதும் கிரகத்தின் பகுதியாக இல்லை. "புவி வேதியியல் ஒப்புமைகள்" என்பதில் இருந்து ஒரு மாற்று ஆதாரம் வரலாம். அதாவது பூமியில் உருவாகும் பாறைகள் மற்ற கிரகங்களில் காணப்படும் அமைப்புகளை ஒத்திருக்கும். பூமிக்கு அருகில் புவியியல் செயல்முறைகள் பற்றிய சிறந்த அறிவை நாம் பெற்றுள்ளோம். மேலும் இந்தப் புரிதலைப் பயன்படுத்தி இதை ஒத்த தோற்றத்துடன் இருக்கும் பிற கோள்களின் உருவாக்கம் பற்றிய கோட்பாடுகளை நாம் உருவாக்கலாம்.   பட மூலாதாரம்,NICOLA MARI படக்குறிப்பு,டெதிஸ் பெருங்கடலின் அடிப்பகுதியில் வெடித்த பழங்கால எரிமலையின் தடயங்களை சைப்ரஸில் உள்ள ஒரு வெளிப்பகுதி காட்டுகிறது. சைப்ரஸுக்கான மாரி செய்துவரும் பணியின் நோக்கம் இதுதான். அவர் தேடும் குறிப்பிட்ட கட்டமைப்பை அது கொண்டிருக்கலாம் என்று கிடைக்கப் பெறும் புவியியல் தரவுகள் கூறுகின்றன. இந்த ஆளரவமற்ற மலைகள் வழியாகத் தனது தேடலைத் தொடங்கும்போது அவர் தன்னை ஒரு "நவீன இந்தியானா ஜோன்ஸ்" போல் உணர்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சைப்ரஸ் என்பது 90 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டெதிஸ் பெருங்கடலுக்கு அடியில் உருவான பூமியின் மேலோடு. மோதிய கண்டத்தட்டுகள் (tectonic plates) இறுதியில் அதை மேற்பரப்பை நோக்கித் தள்ளியது. இன்று நாம் அறியும் தீவாக அது மாறியது. தாதுக்கள் நிறைந்த பச்சைப் பாறைகளுடன் அந்த நிலப்பரப்பு வேறு ஒரு உலகத்தின் உணர்வைக் கொண்டுள்ளது என்கிறார் மாரி. "சைப்ரஸ் மலைகளின் சில பகுதிகளில் நடக்கும்போது நீங்கள் இன்னும் ஒரு பண்டைய கடல் படுகையில் நடப்பது போல் உணர்கிறீர்கள்," என்று அவர் கூறுகிறார். இறுதியில் அவர் தான் தேடும் போனினைட்ஸ் எனப்படும் எரிமலைக் குழம்புகளின் குறிப்பிட்ட துண்டுகளைக் கண்டுபிடித்தார். மாரி வீடு திரும்பினார். நாசா மற்றும் இத்தாலியில் உள்ள கோள் அறிவியல் அருங்காட்சியகத்தில் சக ஊழியர்களுடன் பணிபுரிந்து, பாறைகளின் கலவையைப் பகுப்பாய்வு செய்து, புதனிலிருந்து எடுக்கப்பட்ட அளவீடுகளுடன் ஒப்பிட்டார். முடிவுகள் வந்தபோது அவர் ஆச்சரியப்பட்டார். "அவை ஒன்று போல் இருக்கவில்லை. ஒன்றாகவே இருந்தன." மெக்னீசியம், அலுமினியம், இரும்பு போன்ற தனிமங்களின் கலவையானது, ராட்சத மையத்துடன் இருக்கும் ஒரு மர்மமான கோளில் காணப்படுவது போலவே இருந்தது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், சைப்ரஸின் பாறைகள் ஆக்ஸிஜனேற்றப்பட்டன. இது பூமியின் ஆக்ஸிஜன் நிறைந்த வளிமண்டலத்தில் தவிர்க்க முடியாதது. இது புதன் கோளின் முதல் உண்மையான நிலப்பரப்பு அனலாக் என்று மாரி கூறுகிறார். கிரகத்தைப் பற்றிய நமது புரிதலுக்கு மதிப்புமிக்க கூடுதல் தரவை இது வழங்குகிறது. இந்த பாறைகள் பற்றிய கூடுதல் ஆய்வு, புதனின் கடந்த கால புவியியல் செயல்பாடு பற்றிய சில தடயங்களைக் கண்டறிய உதவும். எல்லாவற்றுக்கும் மேலாக சைப்ரஸ் போனினைட்டுகள் பூமியின் மேலோட்டத்தில் ஓர் ஆழமற்ற புள்ளியில் இருந்து வெடித்த எரிமலைக் குழம்பில் இருந்து உருவானவை என்பதை நாம் அறிவோம். புதன் கோளில் உள்ள பாறைகளுடனான அவற்றின் முழுமையான ஒற்றுமை, அங்குள்ள மேலோட்டம் வழக்கத்திற்கு மாறாக மேற்பரப்புக்கு அருகில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. இது கிரகத்தின் அசல் மைய மேலோடு வெடித்ததால் ஏற்பட்ட தோற்றத்துடன் ஒத்துப் போகிறது.   எதிர்கால பயணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES மாரியின் கண்டுபிடிப்புகள் மிகப் பெரிய புதிரின் ஒரு பகுதி. மேலும் பல நுண்ணறிவுகள் பெபிகொலம்போ பணியிலிருந்து வரக்கூடும். இது ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் மற்றும் ஜப்பானுக்கு இடையிலான ஒத்துழைப்பு ஆகும். இது அக்டோபர் 2018இல் தொடங்கப்பட்டது. இதற்கு கணிதவியலாளரும் பொறியியலாளருமான கியூசெப்பே (பெபி) கொலம்போவின் பெயர் சூட்டப்பட்டது. மரைன் 10 விண்கலத்தின் சிக்கலான பாதையைத் திட்டமிட அவர் உதவினார். விண்கலத்தின் சுற்றி வளைந்து செல்லும் பாதையின் ஒரு பகுதியாக புதனுக்கு அருகில் இருந்து மூன்று முறை செல்லும் பாதைகளை பெபி கொலம்போ உருவாக்கியுள்ளார். விண்கலத்தின் வேகத்தைக் குறைப்பதே இதன் நோக்கம். விண்கலம் 2025இல் கிரகத்திற்கு அதன் இறுதி அணுகலைச் செய்யும். அங்கு அது இரண்டு சுற்றுக் கலங்களாக பிரியும். ஒன்று காந்தப்புலத்தை அளவிடும். மற்றொன்று மேற்பரப்பு மற்றும் உட்புற அமைப்பை ஆய்வு செய்யும். புவி வேதியியல் ஒப்புமைகள் குறித்த மாரியின் ஆராய்ச்சி இங்கே பொருத்தமானதாக இருக்கலாம். ஏனெனில் அவை இந்த அளவீடுகளில் சிலவற்றுக்கான வரையறைகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று அவர் கூறுகிறார். "புதன் போன்ற ஒப்புமைகளின் ஆய்வக அளவீடுகள் எங்கள் அகச்சிவப்பு (வெப்ப அகச்சிவப்பு) ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மற்றும் சில வகையான எக்ஸ்-ரே ஸ்பெக்ட்ரோமீட்டர்கள் மூலம் பெறப்பட்ட அளவீடுகளின் முடிவுகளைச் சிறப்பாக விளக்க உதவுகிறது," என்று பெபிகொலம்போவின் திட்ட விஞ்ஞானி ஜோஹன்னஸ் பென்காஃப் விளக்குகிறார். அதன் பிறகான ஆண்டில் இந்தக் கலங்கள் புதனின் கனிம கலவை, அதன் நிலப்பரப்பு மற்றும் அதன் உட்புற அமைப்பு ஆகியவற்றின் துல்லியமான அளவீடுகளைச் செய்யும். முந்தைய பயணங்களின் தரவுகளுடன் இந்தத் தரவை ஒப்பிடுவதன் மூலம், கிரகம் இன்னும் புவியியல் ரீதியாக "உயிருடன்" உள்ளதா என்பதை விஞ்ஞானிகள் தீர்மானிக்க முடியும். புதனின் உள்ளே இருந்து பொருள் ஆவியாவதால் உருவானதாகத் தோன்றும் ’வெற்று இடைவெளிகள்’ மேற்பரப்பில் உள்ளன. ஆனால் இந்தச் செயல்முறை இன்னும் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை. இந்த அளவீடுகள் இறுதியாக புதனின் மர்மமான தோற்றத்தின் வேர்வரை செல்ல அனுமதிக்கலாம். மேலும் அதை நீட்டிப்பதன் மூலம் பிரபஞ்சத்தில் நமது இடம் பற்றியும் அதிகம் சொல்ல முடியும். "புதன் ஏன் மிகவும் அடர்த்தியாக உள்ளது, அதன் மையப்பகுதி ஏன் மிகவும் பெரிதாக உள்ளது என்ற கேள்விகள் நமது சூரிய மண்டலத்தின் உருவாக்கம் மற்றும் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் முக்கியமானது" என்று பென்காஃப் கூறினார். ”விண்கலத்தில் மிகவும் பரந்த அளவிலான உபகரணங்கள் மற்றும் கருவிகள் உள்ளன. அவை உண்மையில் நமது அறிவியல் அறிவை மேம்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்." சூரியனுக்கு அருகில் இருக்கும் முதல் கிரகத்தை நாம் பார்க்கும் விதம் ஏற்கெனவே நிறைய மாறிவிட்டது. "பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புதன் ஒரு ஆர்வத்தைத் தூண்டாத கிரகமாகக் கருதப்பட்டது," என்கிறார் பென்காஃப். "ஆனால் நான் இன்னும் பல ஆச்சரியங்களை எதிர்பார்க்கிறேன்,"என்று அவர் குறிப்பிட்டார். மாரிக்கு புதன் கோள் ஆரம்பம் மட்டுமே. "வட அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவான லான்சரோட்டில் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் உள்ளது போன்ற எரிமலைக்குழம்பு கிடைத்தது. மேலும் வெள்ளி கோளின் தடயங்களைக் கண்டறிய, சிசிலி, ஹவாய், இந்தோனீசியா மற்றும் ரஷ்யாவில் உள்ள கம்சட்காவை ஆய்வு செய்து வருகிறோம்," என்றார் அவர். பெபி கொலம்போவின் முழு அறிவியல் செயல்பாடுகள் 2026இல் தொடங்க இருக்கும் நிலையில் பூமியில் உள்ள இந்தப் பாறைகள் சூரியக் குடும்பத்தில் உள்ள நமது மற்ற அண்டை கோள்களைப் பற்றி எவ்வளவு சொல்ல முடியும் என்பதை விரைவில் நாம் தெரிந்துகொள்ள முடியும். https://www.bbc.com/tamil/articles/c89z8v501p9o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.