Jump to content

வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு!

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பில் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவம் முற்றுமுழுதாக ஒரு கொலை.

இது தொடர்பில் உரியவாறு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றோம்.

ஏனென்றால் மெயப்பாதுகாவலராக பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை நியமிப்பது தான் வழக்கம். MSD என்று சொல்லப்படுகின்ற Ministry Security Division என்பது உண்மையிலே அனுபவம் வாய்ந்த சிறந்த அதிகாரிகளை நியமிப்பது தான் அரசாங்கத்தின் கடமை.

ஆகவே அதனை மீறி அனுபவமற்ற ஒரு இளைஞன் அதுவும் ஒரு தமிழ் இளைஞன் இவ்வாறு தனது துப்பாக்கியால் கொலை செய்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் முன்னுக்கு பின் முரணான செய்திகளை வெளியிட்டு அந்த பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயன்று வருகிறார்.

ஏனென்றால் மூன்று மாதமாக தனது வீட்டு சிசிடிவி கமெரா வேலை செய்யவில்லை என்பதும், பக்கத்து வீட்டு கமெரா கூட வேலை செய்யவில்லை என்பதும், கண்மூடித்தனமான சிறுபிள்ளை தனமான செயற்பாடு.

இதனை துப்பறியும் ஆய்வகத்திற்கு அனுப்புகின்ற போது அவர்களால் எதனையும் மறைக்க முடியாது. இந்த கொலையை மறைக்க முற்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது இதனை அவர் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எடுத்தவுடனேயே அவர் துப்பாக்கியால் சுட்டிருப்பது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவே காணப்படுகிறது.

வருகின்ற தகவல்களின் படி அந்த சம்பவம் நடைபெறுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் உயிரிழந்த நபர் அவர்களுடன் முரண்பட்டுள்ளார். என்னை பொறுத்தவரை வியாழேந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய விடயம். இது தொடர்பில் வியாழேந்திரன் முன்னுக்கு முரணான தகவல்களை வெளிப்படுத்துவதென்பது ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இதனை சட்ட ரீதியாக பார்க்கின்ற போது அமைச்சர் கூறுகிறார் நான் அங்கு இருக்கவில்லை என்று. ஆனால் அவர் 12 மணி வரை வீட்டில் இருந்ததற்கான ஆதாரம் இருக்கின்றது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2021/1224777

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு நனையுதென்று அழுகுது ஓநாயொன்று.

Link to comment
Share on other sites

7 hours ago, தமிழ் சிறி said:

 

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

 

கடத்தி பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்வது, வானிற்குள் வைத்தே பேராசிரியர்களை அடித்தே கொல்வது, தனக்கான புதைகுழிகளை வெட்டச் சொல்லி அதற்குள் தள்ளி சுட்டுக் கொல்வது, தமிழர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒன்று இல்லாமல் போவதற்காக சிங்களவர் பக்கம் நின்று பாடுபடுவது போன்றவற்றை தமிழர்களே தமிழர்களுக்கு செய்யலாமா கருணா பிரதர்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, நிழலி said:

கடத்தி பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்வது, வானிற்குள் வைத்தே பேராசிரியர்களை அடித்தே கொல்வது, தனக்கான புதைகுழிகளை வெட்டச் சொல்லி அதற்குள் தள்ளி சுட்டுக் கொல்வது, தமிழர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒன்று இல்லாமல் போவதற்காக சிங்களவர் பக்கம் நின்று பாடுபடுவது போன்றவற்றை தமிழர்களே தமிழர்களுக்கு செய்யலாமா கருணா பிரதர்?

கருணா…. எப்போ இருந்து, உங்களுக்கு “பிரதர்” 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, தமிழ் சிறி said:

கருணா…. எப்போ இருந்து, உங்களுக்கு “பிரதர்” 🤣

அது நிழலி கடும்  கோபத்தில் எழுதியது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

கடத்தி பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்வது, வானிற்குள் வைத்தே பேராசிரியர்களை அடித்தே கொல்வது, தனக்கான புதைகுழிகளை வெட்டச் சொல்லி அதற்குள் தள்ளி சுட்டுக் கொல்வது, தமிழர்களுக்கான பாராளுமன்ற உறுப்பினர் ஒன்று இல்லாமல் போவதற்காக சிங்களவர் பக்கம் நின்று பாடுபடுவது போன்றவற்றை தமிழர்களே தமிழர்களுக்கு செய்யலாமா கருணா பிரதர்?

எனக்கு என்னவோ கருணாவிலை தான் சந்தேகம். தான் உள்ளே வருவதற்காக உள்ளடி வேலை செய்த மாதிரி இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஆம் தமிழர் ஒருவரை ஒரு தமிழர் கொன்றது பாரதூரமான குற்றம். அதை நூற்றுக்கணக்கில் தமிழர்களை கொன்றவர் சொல்லும்போது கேட்டுத்தான் ஆகவேண்டும். 

முதலில் ஒரு தமிழர் கொல்லப்பட்டது பாரதூரமான விசயம்தான் அதில் வேறு கருத்தில்லை, 

அதேபோல் படுகொலை என்று வரும்போது இனம் மதம் முக்கியமில்லை உயிர்கள் என்பதுதான் கணக்கு. 

 

அந்த வகையில்  கருணாவினால் பண்ணப்பட்ட சரணடைந்த அப்பாவி இலங்கை காவல்துறையை சேர்ந்த 600 பேர் படுகொலை,

தர்மத்தையும் ஒழுக்கத்தையும் போதித்து புல்லைகூட மிதிக்காம மென்மையாக வாழும் புத்த பிக்குகள் படுகொலை போன்றன ஏற்றுக்கொள்ள்ள முடியாதவை  . அந்த மொட்டை மண்டைகளை கருணா சுட்டு கொல்லும்போது ஐயோ அம்மா என்று அவர்கள் சிங்களத்தில் அலறிய சத்தம் மொழி மாற்றலாகி இன்றும் எம் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது.

உலகம் எல்லாம் அமைதியையும் சமாதானத்தையும் தவிர வேற எதையும் போதிக்காத குண்டுகளை கண்ணாலையே கண்டறியாத  அப்பாவி முஸ்லீம்கள் குனிஞ்சு கும்பிடும்போது பின்னாலபோய் போட்டு தள்ளியது என்று புலிகளின் பெயரை பாவித்து  கருணா பண்ணிய படுகொலை பட்டியல் ஏராளம்

பண்ணுவதையும் பண்ணிவிட்டு இலங்கை அரசில்வேறு அங்கம் வகிப்பது சிங்கள மக்களின் மனசை காயபடுத்தும் செயல். அனைத்து சிங்கள இஸ்லாமிய மக்களூம் இந்த பாதக செயலை செய்த கருணாவிற்கெதிராக அணி திரள வேண்டும் அதுக்கு இந்த தமிழனின் ஆதவு இருக்கும்.

Link to comment
Share on other sites

41 minutes ago, தமிழ் சிறி said:

கருணா…. எப்போ இருந்து, உங்களுக்கு “பிரதர்” 🤣

கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

அது நிழலி கடும்  கோபத்தில் எழுதியது

 

3 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

விசுகு, நான் அதனை ஊகித்து இருந்தாலும்,
நிழலியின்... சுய வாக்குமூலம் எப்படி இருக்குது என்று...
சும்மா... "நூல்" விட்டு பார்த்தேன். :grin:

ஆள்... ஆப்கானிஸ்தான் என்று,
"கழுவுற மீனிலை, நழுவி" விட்டார்.

கனடாவிலை... ஆப்கானிஸ்தான் காரங்கள் இருக்கிறாங்களா என்று எனக்கு தெரியாது.
சிலவேளை... "தொலை பேசியில்" அவங்களுடன்,  கதைச்சிருப்பார் போலுள்ளது.  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

பொலிஸ் என்றால் சுட தான் செய்வார்கள் இதில் தமிழ் பொலிஸ் ,சிங்கள பொலிஸ் என்று இல்லை.....என மத்திய அரசின் ஆசையை மறைமுகமாக சொல்லுகிறார்....பொலிஸின் இந்த செயலை கண்டிக்கிறோம் என அறிக்கை விடாமல் தமிழ் பொலிஸ் தமிழரை கொலை செய்தது என அறிக்கை விடுகிறார்...

இனி வரும் காலங்களில் தமிழ் இராணுவ வீரர் ,தமிழ் பொலிஸ் தமிழரை சுட்டுதள்ளுவார்கள் ......அரச ஆதரவு அரசியல் வாதிகள் அறிக்கை விடுவார்கள் தமிழரே தமிழரை சுட்டுத்தள்ளுகிரார்கள் என்று.....
சிங்கள ஆயுதபடைகள் இனவழிப்பு செய்யவில்லை தமிழ் பொலிஸ், இராணுவமும் தங்கள் இனத்தை அழிக்கின்றனர் என ..
சகோதர படு கொலை என 30 வருசமா கட்டுரை எழுதி குளிர் காயும் முன்னாள் புரட்சிவாதிகளிடம் கற்று கொண்ட பாடத்தை இவர் இப்ப கையில் எடுத்துள்ளார் 

மாகாணசபை க்கு பொலிஸ் அதிகாரம் கொடுத்தால் இதே நிலை தான் தமிழர்களுக்கு என மத்திய சொல்லாமல் சொல்லுகிறது ..கிழக்கு மாகாணத்தில் இரண்டு கிழமையில் இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் ....இருவரும்  பொலிஸாரினால் தான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தமிழ் சிறி said:

தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

அன்று தொடக்கம் இன்று வரை சிங்களம் தனித்து நின்று தமிழர்களுக்கெதிராக எதையுமே செய்ததில்லை.
குதிரை வண்டில் புகழ்  சேர் பொன் தொடக்கம் 2009  பிஸ்டல் அடையாளம் காட்டும் வரைக்கும் ஒரு தமிழர் ஈழத்தமிழின அழிவிற்கு துணையாகவே இருந்துள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

 2009  பிஸ்டல் அடையாளம் காட்டும் வரைக்கும் ஒரு தமிழர் ஈழத்தமிழின அழிவிற்கு துணையாகவே இருந்துள்ளார்கள்.

2009 இதை கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா

9 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

ஏன் அவர்கள் மாற்று மதத்தினரை அப்படி அழைக்கிறார்கள் என்றால் ....மாற்று மதத்தினர் தங்களது மதக்கடவுள்களின் பெயரை வைத்திருப்பார்கள்(சிவா,முருகன்,விக்கி ,ஜெசு,அந்தோனி)...மாற்று மதக் கடவுள்களின் நாமங்களை உச்சரிக்க கூடாது என்ற காரணத்தால் பெயர் தெரிந்தாலும் பிரதர் என்று அழைப்பதை நீங்கள் காணலாம்....நான் சவுதிய்ல் இருக்கும் பொழுது அறிந்த விடயம்....(அதி தீவிர இஸ்லாமியர்கள் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அன்று தொடக்கம் இன்று வரை சிங்களம் தனித்து நின்று தமிழர்களுக்கெதிராக எதையுமே செய்ததில்லை.
குதிரை வண்டில் புகழ்  சேர் பொன் தொடக்கம் 2009  பிஸ்டல் அடையாளம் காட்டும் வரைக்கும் ஒரு தமிழர் ஈழத்தமிழின அழிவிற்கு துணையாகவே இருந்துள்ளார்கள்.

ஏன்... 2019´ம் ஆண்டு வரை,
சம்பந்தன், எதிர்க் கட்சி தலைவராகவும்,

சுமந்திரன்.... யாழ்ப்பாணத்துக்கு வாறதெண்டால்,
அப்போது அமைச்சராக  இருந்த, விஜயகலா மகேஸ்வரனுடன்....  
உலங்கு வானுர்தியில்...   வந்து, இறங்கக் கூடியவர் சுத்து மாத்து.

ஒன்றையும்... நாம், மறக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, putthan said:

2009 இதை கொஞ்சம் விபரமாக சொல்ல முடியுமா

col_karuna20may

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

கொஞ்ச நாட்களாக நிறைய இஸ்லாமியர்களுடன் பழக வேண்டி வந்துள்ளது. முக்கியமாக ஆப்கன் ஆட்களிடம். அவர்கள் அனேகம் பேரை பிரதர் என்று தான் கூப்பிடுவர். அதன் நீட்சி இந்த பதிலிலும் வந்து விட்டது.

நிழலி, இஸ்லாமியரின் நட்சத்திர அடையாளத்தில் உள்ள நட்சத்திரத்தில் ஐந்து முனைகள் இருக்கும்! அதில் ஒன்று இந்த பிறதர்ஹூட் என்பதாகும்! அதாவது உலகின் எந்த மூலையில் அவர்கள் இருந்தாலும்....அவர்கள் அனைவரும் பிறதேர்ஸ் தான்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, குமாரசாமி said:

col_karuna20may

ஆயுத ஒப்படைப்பா... அல்லது , ஆயுத கையளிப்பா...?
பக்கத்தில்.. நெருக்கமாக நிற்கும், இராணுவத்தின் முகங்களில் தெரியும்,
உடல் மொழியை.... முதலாம் வகுப்பு மாணவனும் புரிந்து கொள்வான்.

கருணா.... வெள்ளை சேர்ட் போட்டுக் கொண்டு, எங்களுக்கு ...
வெள்ளை, அடிக்க வேண்டாம். 
அவங்கடை... உடுப்பை, போட்டு... அவங்களாகவே மாறிவிடு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.