Jump to content

கோபா அமெரிக்கா(copa America 2021)


Recommended Posts

கோபா அமெரிக்கா

 

கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் - கால் இறுதி சுற்றில் அர்ஜென்டினா

copa-america-2021
 

பிரேசிலியா

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பராகுவே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது அர்ஜென்டினா.

பிரேசிலின் பிரேசிலியா நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-வது நிமிடத்தில் கைடோ ரோட்ரிக்ஸ் உதவியுடன் பந்தை பெற்ற பப்பு கோமஸ் பாக்ஸ் பகுதிக்கு வெளியே இருந்து இலக்கை நோக்கி உதைத்தார்.

 

ஆனால் பந்து கோல்கம்பத் துக்கு மேலே சென்று ஏமாற்றம் அளித்தது. அடுத்த நிமிடத்தில் கோல் அடிக்க கிடைத்த அருமையான வாய்ப்பை அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகுரோ தவறவிட்டார். இருப் பினும் 10-வது நிமிடத்தில் அர் ஜென்டினா தனது முதல் கோலை அடித்தது.

ஏஞ்சல் டி மரியா உதவியுடன் பந்தைபெற்ற பப்புகோமஸ் பாக்ஸின் மையப்பகுதியில் இருந்து அடித்த பந்துகோல்கம்பத்தின் மையப்பகு தியை துளைக்க அர்ஜென்டினா 1-0 என முன்னிலை பெற்றது.

இதன் பின்னர் மேற்கொண்டு கோல்கள் ஏதும் அடிக்கப்படவில்லை. முடிவில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள அர்ஜென்டினா அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள அர்ஜென்டினா 2 வெற்றி, ஒரு டிராவுடன் 7 புள்ளிகள் பெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

முன்னதாக இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத் தில் உருகுவே - சிலி அணிகள் மோதின. இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது. 26-வது நிமிடத்தில் சிலி வீரர் எட்வர்டோ வர்காஸ் கோல் அடித்தார்.

66வது நிமிடத்தில் சிலி வீரர் அர்துரோ விடால், சுயகோல் அடிக்க பெரு அணி ஆட்டத்தை டிராவில் முடித்தது.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நாளை ஆஜன்ரீனாவுக்கு எதிராக பிறேசில் இறுதி  போட்டியில்  மோதுகின்றனர்.

Link to comment
Share on other sites

28 வருடங்களுக்கு பின் ஆஜன்ரீனா 1 -0 கோல் கணக்கில்  முன்னைய சம்பியன் பிறேசிலை வென்று 2021  கோபா அமெரிக்கா சம்பியனாகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சம்பியனானது ஆர்ஜென்டீனா

கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்தி 28 ஆண்டுகளில் தேசிய அணியின் முதல் பெரிய பட்டத்தைப் பெற்றது.

E5--kEPXsAM2ulz.jpg

ரியோ டி ஜெனிரோவில் உள்ள மரகானா மைதானத்தில் உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் தொடக்கம் முதலே பிரேசில் ஆக்ரோஷம் காட்டி வந்தது.

எனினும் வெற்றி கோல் போட்டியின் 22 ஆவது நிமிடத்தில் 33 வயதான ஏஞ்சல் டி மரியாவினால் ஆர்ஜென்டீன அணிக்காக பெற்றுக் கொடுக்கப்பட்டது.

முதல் பாதி ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் விழாததால் ஆர்ஜென்டீனா 1-0 என முன்னிலை வகித்தது.

2 ஆவது பாதி ஆட்டத்தில் பிரேசில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரேசில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மர் முதல் கோலுக்கு கடுமையாக முயற்சித்தார்.

எனினும், ஆர்ஜென்டீனா சிறப்பான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் கூடுதலாக 4 நிமிடங்கள் வழங்கப்பட்டன. பிரேசில் அணியால் கூடுதல் நேரத்திலும் கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்ய முடியவில்லை.

இதன்மூலம், ஆர்ஜென்டீனா  1-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் ஆனது.

ஆர்ஜென்டீனா வெற்றிகொள்ளும் 15 ஆவது கோபா அமெரிக்கா கிண்ணம் இது என்பதுடன், 34 வயதான லியோனல் மெஸ்ஸியின் முதல் பெரிய சர்வதேச பட்டத்துக்கான காத்திருப்பும் நிறைவுக்கு வந்துள்ளது.

E5--C69XEAUBmXC.jpg

 

https://www.virakesari.lk/article/109172

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.