Jump to content

மேதகு - முதற்பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப் போராட்டம் பற்றி செயற்கையான புனைவுகள், அந்நியமான வசன நடைகள், வரலாற்றுக்கு புறம்பான பதிவுகள் இல்லாமல், தெளிவான கதை சொல்லும் பாங்குடன், முடிந்தளவு யதார்த்ததை ஒட்டி இதுவரை வந்த ஆகச்சிறந்த திரைப்படம் எது என்றால் கண்ணை மூடிக் கொண்டு சொல்லலாம் - மேதகு.

முதல் பிரேமிலேயே தமிழரின் தொன்மையை தொட்டு படம் ஆரம்பிக்கிறது.

குமரிக்கண்டம் வரை ஆண்ட இனம் என்ற முகவுரை படத்தின் வரலாற்றுப் புரிதல் பற்றிய ஐயப்பாட்டை ஆரம்பத்தில் தோற்றுவித்தாலும், அடுத்த காட்சிலேயே - 1995 இன் மதுரை மாவட்ட கிராமம் ஒன்றில் நடக்கும் “மாவீரன் கூத்தோடு” அண்மைய வரலாற்றில் ஆழமாக படம் இறங்கும் போது அந்த ஐயப்பாடு மறைந்து விடுகிறது.  

குழந்தை பிறந்து, வளரும் பருவம் என்று மெதுவாக நகரும் கதை, சிறுவன் பிரபாகரன் “ நாம் ஏன் அப்பா திருப்பி அடிக்கவில்லை” என்று கேட்கும் காட்சியில் இருந்து டாப் கியரில் எகிறுகிறது.

படத்தின் அத்தனை பாத்திரத்தேர்வுகளும் அபாரம்.  

குறிப்பாக அந்த பதின்மவயது பிரபாகரன் வேடம் ஏற்கும் கதாநாயகன், முக அமைப்பும், வார்த்தை தேர்வும், தொனியும், உடல் மொழியும், கண் அசைவும், தலைவரை பின்னாளில் கண்ட பலர் கற்பனை செய்து வைத்திருக்கும் “தம்பி”யை அப்படியே கண் முன் கொண்டு வருகிறார்.

அதே போல் பார்வதி அம்மாள், வேலுப்பிள்ளை ஐயா, தந்தை செல்வா, துரையப்பா, சிறிமா, பண்டரநாயக்க, குட்டிமணி பாத்திரங்களும் கச்சிதம்.

பொதுவாக பெரிய பாத்திரங்கள் எல்லாமுமே 70-90% ஈழத்தமிழை ஒத்து பேசுவது சிறப்பு. அதுவும் அந்த பார்வதி அம்மாள் பாத்திரத்தின் ஈழத் தமிழ் அதி சிறப்பு.

சில இடங்களில் இலக்கிய தமிழ் வலிந்து தொனிப்பதாக படுகிறது. குறிப்பாக சிறு பாத்திரங்களில்.

பெளத்த பிட்சுகள் பேசும் சிங்களம் கர்ணகடூரமாக இருக்கிறது. ஒருவகையில் பழி தீர்கிறார்களோ என்னமோ🤣

படத்தை நகர்த்தி செல்லும் கூத்து ஒரு நல்ல கதை சொல்லும் உத்தி. ஆனால் அரிதாக சில இடங்களில் கொஞ்சம் இழுபடுவதான உணர்வு.

பச்சை நிற பஸ், யாழ் மாவட்ட சூழலில் காடு, மலை என்று பொருத்தாமல் இருந்தாலும், இவை கதை ஓட்டத்தை பாதிக்கவில்லை. 

இளவயது பிரபாகரன் கடற்கரையோரத்தில் தன் தந்தைக்கு தன் நியாயத்தை எடுத்து சொல்லும் காட்சியை இன்னும் அழகாக செதுக்கி இருக்கலாம். சில காட்சிகளுக்கு கொஞ்சம் சினிமாதனமும் தேவைதான். இந்த காட்சியில் அதற்குரிய பவர் மிஸ்ஸிங்.

தியாகி சிவகுமாரனுக்கு அவருக்குரிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது 🙏🏾

படத்தின் மைனஸ் என்றால் அந்த தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை காட்சிகள்தான். வரலாற்றுக்கு அமைவாகவும் இல்லாமல், நாடகதனமாக காட்சிகள் அமைகிறது.

ஆனால் ஸ்ரீ எதிர்ப்பு கலவர காட்சிகள் தத்துரூபமாக படமாக்கப்பட்டுள்ளன.

படம் ஒரு சாராரின் கருத்தை மட்டுமே பதிகிறது என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஆனால் பிராசார படம் போல கொள்கை முழக்கம் செய்யாமல், தமது பார்வையை மட்டுமே முன் வைக்கிறது. 

படம் நாயகர்கள் என்றும் வில்லனகள் என்றும் துரோகிகள் என்றும் வர்ணிப்பவர்களை பெரும்பாலனா ஈழத்தமிழ் மக்களும் அவ்வாறே கருதுவார் என்பது என் முடிவு.

முடிவாக இதுவரை இந்தியாவில் இருந்து வந்த ஈழம் பற்றி பேசிய படங்களை விட மட்டும் அல்ல, நிதர்சனம் படைப்புகளை விடவும் கூட இந்த படம் ஒரு படி மேல் என்றேபடுகிறது.

மேதகு - பெயர் சொல்லும் பிள்ளை

 

  • Like 14
  • Thanks 6
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி, கோசான். 
உங்கள், விமர்சனத்தை பார்த்த பின்...
படத்தை... எப்படியாவது, பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

மிக்க நன்றி, கோசான். 
உங்கள், விமர்சனத்தை பார்த்த பின்...
படத்தை... எப்படியாவது, பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது. :)

கட்டாயம் பாருங்கள்.

இதை வாட்சப்பில் இதர வழிகளிலும் பரப்பி எல்லாரையும் பார்க்கவும் தூண்டுங்கள். 

இப்படி ஒரு படத்தை எடுத்தமைக்கு நாம் செய்யகூடிய கைமாறாக இருக்கட்டும்.

அடுத்த பாகங்கள் வருவது நம் கையில்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

கட்டாயம் பாருங்கள்.

இதை வாட்சப்பில் இதர வழிகளிலும் பரப்பி எல்லாரையும் பார்க்கவும் தூண்டுங்கள். 

இப்படி ஒரு படத்தை எடுத்தமைக்கு நாம் செய்யகூடிய கைமாறாக இருக்கட்டும்.

அடுத்த பாகங்கள் வருவது நம் கையில்தான்.

நிச்சயமாக... நாம் தான், செய்ய வேண்டும்  கோசான்.

பணத்தை கட்டி... எப்படி, காணொளியை பார்ப்பது என்ற...
விடயத்தை... "Screenshot" மூலம், காண்பிக்க முடிந்தால்தான்...
(நான் உட்பட) பலரும்... உள்ளே வருவார்கள் என நினைக்கின்றேன்.

யாழ்.கள. உறுப்பினர்களுக்கு,  படம் பிடித்திருந்தால்,
ஐந்து டொலரை விட... அதிக பணம் செலுத்தி,
தமது, நன்றியை... தெரிவிப்பார்கள். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, தமிழ் சிறி said:

நிச்சயமாக... நாம் தான், செய்ய வேண்டும்  கோசான்.

பணத்தை கட்டி... எப்படி, காணொளியை பார்ப்பது என்ற...
விடயத்தை... "Screenshot" மூலம், காண்பிக்க முடிந்தால்தான்...
(நான் உட்பட) பலரும்... உள்ளே வருவார்கள் என நினைக்கின்றேன்.

யாழ்.கள. உறுப்பினர்களுக்கு,  படம் பிடித்திருந்தால்,
ஐந்து டொலரை விட... அதிக பணம் செலுத்தி,
தமது, நன்றியை... தெரிவிப்பார்கள். 

நான் பார்த்த முறை

1. லேப்டாப்பில் கூகிள் குரோம் வெப் பிரவுசரை  தரவிறக்கவும்.

large.5D7FAB71-900F-4E28-BD1E-BD6253A2FB33.jpeg.bc0df36d37fbcdd08a0578a6c70ee605.jpeg

2. பின்னர் www.bsvalue.com என்ற முகவரிக்கு போகவும்.

3. அங்கே இப்படி ஒரு ஸ்கிரீன் வரும்.

large.74CA1C1E-14FD-4BA2-96A0-DBB923F09ED5.jpeg.f5146a20c0c1490362229e41b473b427.jpeg

4. இதில் உங்கள் நாட்டை தெரிவு செய்து, மொபைல் இலக்கத்தை கொடுக்கவும். 

5. உங்கள் மொபைலுக்கு ஒரு நாலு இலக்க கோட் டெக்ஸ்ட் மெசேஜாக வரும்.

6. ஸ்கிரீனில் அடுத்துவரும் பெட்டியில் அந்த கோடை இட்டு, உங்கள் பெயர் கொடுத்து ரிஜெஸ்டிரேசனை பூர்த்தியாக்கவும். 

7. ரெஜிஸ்ரேசன் பூர்த்தியானதும் இந்த ஹோம் ஸ்கிரீன் வரும்.

large.32D81B7F-E27D-4B2E-902F-401061A7DA90.jpeg.243102a27a81e35824d60daed36e6787.jpeg

8. இதில் படத்தின் மேல் கிளிக் பண்ணினால் - உங்கள் மொமபைல், இமெயில் இவற்றுடன் கிரெடிட் கார்ட் தகவலையும் கேட்கும். அவற்றை கொடுத்து அழுத்தினால் - மீண்டும் 7 இல் உள்ள ஹோம் ஸ்கிரீன் வரும்.

9. அதில் போய் படத்தை அழுத்தினால் படம் ஓடத்தொடங்கும். படம் லோட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கலாம்.

  • Thanks 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நான் பார்த்த முறை

1. லேப்டாப்பில் கூகிள் குரோம் வெப் பிரவுசரை  தரவிறக்கவும்.

large.5D7FAB71-900F-4E28-BD1E-BD6253A2FB33.jpeg.bc0df36d37fbcdd08a0578a6c70ee605.jpeg

2. பின்னர் www.bsvalue.com என்ற முகவரிக்கு போகவும்.

3. அங்கே இப்படி ஒரு ஸ்கிரீன் வரும்.

large.74CA1C1E-14FD-4BA2-96A0-DBB923F09ED5.jpeg.f5146a20c0c1490362229e41b473b427.jpeg

4. இதில் உங்கள் நாட்டை தெரிவு செய்து, மொபைல் இலக்கத்தை கொடுக்கவும். 

5. உங்கள் மொபைலுக்கு ஒரு நாலு இலக்க கோட் டெக்ஸ்ட் மெசேஜாக வரும்.

6. ஸ்கிரீனில் அடுத்துவரும் பெட்டியில் அந்த கோடை இட்டு, உங்கள் பெயர் கொடுத்து ரிஜெஸ்டிரேசனை பூர்த்தியாக்கவும். 

7. ரெஜிஸ்ரேசன் பூர்த்தியானதும் இந்த ஹோம் ஸ்கிரீன் வரும்.

large.32D81B7F-E27D-4B2E-902F-401061A7DA90.jpeg.243102a27a81e35824d60daed36e6787.jpeg

8. இதில் படத்தின் மேல் கிளிக் பண்ணினால் - உங்கள் மொமபைல், இமெயில் இவற்றுடன் கிரெடிட் கார்ட் தகவலையும் கேட்கும். அவற்றை கொடுத்து அழுத்தினால் - மீண்டும் 7 இல் உள்ள ஹோம் ஸ்கிரீன் வரும்.

9. அதில் போய் படத்தை அழுத்தினால் படம் ஓடத்தொடங்கும். படம் லோட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கலாம்.

நன்றி,  கோசான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

8. இதில் படத்தின் மேல் கிளிக் பண்ணினால் - உங்கள் மொமபைல், இமெயில் இவற்றுடன் கிரெடிட் கார்ட் தகவலையும் கேட்கும். அவற்றை கொடுத்து அழுத்தினால் - மீண்டும் 7 இல் உள்ள ஹோம் ஸ்கிரீன் வரும்.

9. அதில் போய் படத்தை அழுத்தினால் படம் ஓடத்தொடங்கும். படம் லோட் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கலாம்.

கோசான் எவ்வளவு பணம் தான் எடுக்கிறார்கள்?

கடனட்டை கொடுக்கிறபடியால் தெரிந்து வைத்திருப்பது நல்லதல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

8. இதில் படத்தின் மேல் கிளிக் பண்ணினால் - உங்கள் மொமபைல், இமெயில் இவற்றுடன் கிரெடிட் கார்ட் தகவலையும் கேட்கும். அவற்றை கொடுத்து அழுத்தினால் - மீண்டும் 7 இல் உள்ள ஹோம் ஸ்கிரீன் வரும்.

என்னைப்போல கிரெடிட் கார்ட் இல்லாத பிரஜைகளுக்கு வேறு வழி ஏதாவது இருக்கா? பேபால் எண்டு.....?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

கோசான் எவ்வளவு பணம் தான் எடுக்கிறார்கள்?

கடனட்டை கொடுக்கிறபடியால் தெரிந்து வைத்திருப்பது நல்லதல்லவா?

5 யூ எஸ். 

எனது அக்கவுண்டை ஒன்லனில் செக் பண்ணி பார்த்தேன். சொல்லிய அளவுதான் எடுத்துள்ளார்கள்.

https://razorpay.com எனும் நிறுவனம் மூலம்தான் காசு எடுக்கிறார்கள்.

* பண விசயம். முடிவு உங்களது. எனக்கு நம்பகமாகவே படுகிறது.

6 minutes ago, குமாரசாமி said:

என்னைப்போல கிரெடிட் கார்ட் இல்லாத பிரஜைகளுக்கு வேறு வழி ஏதாவது இருக்கா? பேபால் எண்டு.....?

இல்லை அண்ணை. நானும் பேபால் விரும்பிதான். ஆனால் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

5 யூ எஸ். 

எனது அக்கவுண்டை ஒன்லனில் செக் பண்ணி பார்த்தேன். சொல்லிய அளவுதான் எடுத்துள்ளார்கள்.

https://razorpay.com எனும் நிறுவனம் மூலம்தான் காசு எடுக்கிறார்கள்.

* பண விசயம். முடிவு உங்களது. எனக்கு நம்பகமாகவே படுகிறது.

இல்லை அண்ணை. நானும் பேபால் விரும்பிதான். ஆனால் இல்லை.

தகவலுக்கு நன்றி கோசான்.

இது ஒரு படத்துக்கு மட்டுமா அல்லது மாத சந்தாவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனின் வாழ்க்கை கூட நூறுவீதம் சரியாக அமைவதில்லை. அது போல் திரைப்படங்களும் விவரண காணொளிகளும் எக்காலத்திலும் 💯 சரியாக அமைந்ததில்லை.
கிட்டு எனும் சிறியவனுக்கு மனமார்ந்த  பாராட்டுக்கள்.

கோஷான் உங்களின் கண்ணோட்டத்திற்கும் நன்றிகள். 👍🏽

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

தகவலுக்கு நன்றி கோசான்.

இது ஒரு படத்துக்கு மட்டுமா அல்லது மாத சந்தாவா?

ஒரு படத்துக்கானது. 

3 minutes ago, குமாரசாமி said:

மனிதனின் வாழ்க்கை கூட நூறுவீதம் சரியாக அமைவதில்லை. அது போல் திரைப்படங்களும் விவரண காணொளிகளும் எக்காலத்திலும் 💯 சரியாக அமைந்ததில்லை.
கிட்டு எனும் சிறியவனுக்கு மனமார்ந்த  பாராட்டுக்கள்.

கோஷான் உங்களின் கண்ணோட்டத்திற்கும் நன்றிகள். 👍🏽

உண்மைதான் 100% வரலாற்றை ஒட்டி என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிவகுமாரனும் தலைவரும் ஒரே குழுவில் இருப்பதாக காட்டுகிறார்கள். நானறிந்த வரையில் இது உண்மையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

ஒரு படத்துக்கானது. 

உண்மைதான் 100% வரலாற்றை ஒட்டி என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிவகுமாரனும் தலைவரும் ஒரே குழுவில் இருப்பதாக காட்டுகிறார்கள். நானறிந்த வரையில் இது உண்மையில்லை.

ஊடக வளர்ச்சியையும் விஞ்ஞான வளர்ச்சியையும் வைத்து ஒரு விடயத்தை நூறு வீதம் எதிர்பார்க்கின்றோம்.
இதற்கான பரிசுதான் முள்ளிவாய்க்கால் அழிவு.

Link to comment
Share on other sites

29 minutes ago, goshan_che said:

ஒரு படத்துக்கானது. 

உண்மைதான் 100% வரலாற்றை ஒட்டி என்றும் சொல்ல முடியாது. உதாரணமாக சிவகுமாரனும் தலைவரும் ஒரே குழுவில் இருப்பதாக காட்டுகிறார்கள். நானறிந்த வரையில் இது உண்மையில்லை.

ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, appan said:

ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது) 

அப்படியா வருகிறது?

தலைவர் ஒரு மதிலின் மீது இருந்து நடந்தவற்றை விளக்கி சொல்லும் போது அவரை சூழ இருக்கும் குழுவில் இருக்கும் ஒருவர்தான் பின்னர் சிவகுமாரன் என அடையாளப்படுத்த படுகிறார் என நான் நினைக்கிறேன். 

ஒரே தோற்றமுடை இருவரை பார்த்து குழம்பிவிட்டேனோ?

Link to comment
Share on other sites

3 minutes ago, goshan_che said:

அப்படியா வருகிறது?

தலைவர் ஒரு மதிலின் மீது இருந்து நடந்தவற்றை விளக்கி சொல்லும் போது அவரை சூழ இருக்கும் குழுவில் இருக்கும் ஒருவர்தான் பின்னர் சிவகுமாரன் என அடையாளப்படுத்த படுகிறார் என நான் நினைக்கிறேன். 

ஒரே தோற்றமுடை இருவரை பார்த்து குழம்பிவிட்டேனோ?

அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, appan said:

அவர் வெள்ளை நிறம். பக்கம் நிற்பவர் கறுப்பு நிறம் அல்லவா. 

ஓம் இப்போ திரும்பி அந்த சீனை பார்த்தேன். இரு வேறு ஆட்கள்தான். உடல்வாகு ஒன்றாய் இருப்பதால் குழம்பி விட்டேன்.

படம் பற்றிய உங்கள் கருத்து என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

...

4. இதில் உங்கள் நாட்டை தெரிவு செய்து, மொபைல் இலக்கத்தை கொடுக்கவும். 

5. உங்கள் மொபைலுக்கு ஒரு நாலு இலக்க கோட் டெக்ஸ்ட் மெசேஜாக வரும்.

...

கைப்பேசி எண்ணிற்கு ஒரு மெசேஜ்ஜும் வரவில்லை. :shocked:

கிணத்துல போட்ட கல்லு மாதிரி 'கப்சிப்' :)

சிலமுறை முயன்றும் பயனில்லை.

இந்நாட்டிலிருந்து பார்க்க இயலாது போல தெரிகிறது. 🤔

பகிர்விற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, ராசவன்னியன் said:

கைப்பேசி எண்ணிற்கு ஒரு மெசேஜ்ஜும் வரவில்லை. :shocked:

கிணத்துல போட்ட கல்லு மாதிரி 'கப்சிப்' :)

சிலமுறை முயன்றும் பயனில்லை.

இந்நாட்டிலிருந்து பார்க்க இயலாது போல தெரிகிறது. 🤔

பகிர்விற்கு நன்றி.

ஓ அப்படியா…சில வேளை முன்னால் இருக்கும் 0 ஐ போடாமல் கைபேசி எண்ணை போட்டு பாருங்கள்.

உதாரணமாக எமது நம்பர் 07123456789 என்றால் 7123456789 என்று.

உங்கள் நாடு கொஞ்சம் கறார்தானே. எனக்கும் சில தளங்களை அங்கு வரும் போது பார்க்க முடியாமல் போவதுண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

+9710***
971**
0**
**

என எல்லா காம்பினேசனிலும் முயற்சித்தாயிற்று. ஒன்றும் பலனில்லை.

ADDRESS

SHIV DREAMZ PRODUCTION
NO.6,FLAT NO.14,
Srinivasa Apartments
Kodambakkam - 600024 Prakasam Street, T.Nagar, Chennai, Tamil Nadu, 600017

EMAIL

info@blacksheepvalue.com

மேற்கண்ட முகவரிக்கு தான் முறைப்பாடு எழுதணும்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ராசவன்னியன் said:

+9710***
971**
0**
**

என எல்லா காம்பினேசனிலும் முயற்சித்தாயிற்று. ஒன்றும் பலனில்லை.

ADDRESS

SHIV DREAMZ PRODUCTION
NO.6,FLAT NO.14,
Srinivasa Apartments
Kodambakkam - 600024 Prakasam Street, T.Nagar, Chennai, Tamil Nadu, 600017

EMAIL

info@blacksheepvalue.com

மேற்கண்ட முகவரிக்கு தான் முறைப்பாடு எழுதணும்.

 

நானும் முதலில் நாட்டை தெரிவு செய்து பின் phone number(without country code) போட்டும் சரிவரவில்லை. சிறிது நேரத்திற்கு பின் திரும்பவும் முயற்சி செய்த பொழுது அவர்களது home page வந்தது.. அதிலே  Methagu என தேடினால் வரும் அதை  படத்தை click  செய்யும் பொழுதுதான் உங்களது phone நம்பரை கேட்கும்.. உங்களது நாட்டின் பெயரை type செய்தால் code number தானாக வரும் பின் phone number எழுதினால் மேற்கொண்டு அதுவே மற்றயை விடயங்களை promptபண்ணும்.. email and credit card details.. அத்துடன் credit card details கொடுத்து கட்டணம் அறவிடப்படும் பொழுது அந்தந்த நாடுகளை பொறுத்து codeம் 4 இலக்கம் அல்லது 8 இலக்கத்தில் வரும்

நான் இப்படித்தான் பார்த்து முடித்தேன்

 

E4-A6-D34-D-4-FE0-4-B31-9544-003-D8728-A

இதைவிட  apple storeல் அவர்களது bsvale app தரவிறக்கம் செய்து பார்ப்பதும் இலகு என நினைக்கிறேன்

4-D4-A281-D-8-C6-F-40-B0-AF02-E99-A98883

Edited by பிரபா சிதம்பரநாதன்
வசனம் சேர்க்கப்பட்டது
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

நானும் முதலில் நாட்டை தெரிவு செய்து பின் phone number(without country code) போட்டும் சரிவரவில்லை. சிறிது நேரத்திற்கு பின் திரும்பவும் முயற்சி செய்த பொழுது அவர்களது home page வந்தது.. அதிலே  Methagu என தேடினால் வரும் அதை  படத்தை click  செய்யும் பொழுதுதான் உங்களது phone நம்பரை கேட்கும்.. உங்களது நாட்டின் பெயரை type செய்தால் code number தானாக வரும் பின் phone number எழுதினால் மேற்கொண்டு அதுவே மற்றயை விடயங்களை promptபண்ணும்.. email and credit card details.. 

நான் இப்படித்தான் பார்த்து முடித்தேன்

 

E4-A6-D34-D-4-FE0-4-B31-9544-003-D8728-A

இதைவிட  apple storeல் அவர்களது bsvale app தரவிறக்கம் செய்து பார்ப்பதும் இலகு என நினைக்கிறேன்

4-D4-A281-D-8-C6-F-40-B0-AF02-E99-A98883

ஆரம்பத்தில் எனக்கு ஐஓஎஸ் அப் ஸ்டோரில் இறக்கிய அப்பில் படம் ஓடவில்லை. ஆனால் இப்போ போய் தட்டினால் - ஓடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஆரம்பத்தில் எனக்கு ஐஓஎஸ் அப் ஸ்டோரில் இறக்கிய அப்பில் படம் ஓடவில்லை. ஆனால் இப்போ போய் தட்டினால் - ஓடுகிறது.

நீங்கள் ஒருதரம் உங்களது email, phone கொடுத்தமையாலும் , கட்டணம் கட்டியபடியால் இருக்கலாம்.. 

நான் இன்னமும் App Store download செய்யவில்லை.. 

Phone screen சிறியது என்பதால் laptopல்தான் பார்க்கவிரும்பி, laptopல்தான் முதலில் download செய்தேன்

2 hours ago, appan said:

ஐயா மன்னிக்கவும் இவர்களுக்கு தெரியாமல் தானே அவர் தனியாக செயல்படுவது போல் வருகிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் காட்டுவதால் ( குழம்பி விட்டீர்கள் போல் உள்ளது) 

நீங்கள் கூறுவது போலதான், அவர் செயல்படுவது இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை என்பதாகத்தான் படத்தில் கூறப்படுகிறது.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தகவல்களுக்கு நன்றி கோஷான் & பிரபா ........!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

என்னைப்போல கிரெடிட் கார்ட் இல்லாத பிரஜைகளுக்கு வேறு வழி ஏதாவது இருக்கா? பேபால் எண்டு.....?

எனக்கு ஒரு சீடி அனுப்புங்கள்  

எனக்கு காட் கீட் என்று எதுவும் இல்ல  அநேகமா இலங்கையில் பார்க்க இயலாது என நினைக்கிறன் சாமீ

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.