Jump to content

மேதகு - முதற்பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

large.8481DA4A-5D8A-4207-B20F-D9141208443E.jpeg.52461d700bfea66a896e3640c55f3769.jpeg

நீங்கள் வருவியளே? அங்கை சந்திப்போம்! 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
"தலைவரா நடிக்கணும்ன்னு சொன்னதும் பயந்துட்டேன்!"
"போலீஸ் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்னை பண்ணுவாங்க!" - 'மேதகு' நடிகர் குட்டி மணி! …
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

நீங்கள் வருவியளே? அங்கை சந்திப்போம்! 😁

எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம்😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


மேதகு படக்குழுவின் உறுப்பினரும், அதில் வரும் பாடல் ஒன்றை எழுதியவருமான கவிஞர் திருக்குமரனின் பேட்டி.

படம், பாடல்கள் உருவாகிய விதம், புதுவை ஐயாவின் முதல் சினிமா பாடல் என பல சுவாரசியாமான தகவல்கள் உள்ளன.

5000 பேருக்கு சாப்பாடு கொடுக்க முடியாமல் தமிழாராய்சி மகாநாட்டு காட்சியை மினிமைஸ் பண்ணிணோம் எனும் போது இந்த படத்தின் மீதான, அதன் பின்னாலுள்ள உழைப்பின் மீது மேலும் மதிப்பு உயர்கிறது.

பின்பாதியில் மிக தெளிவாக தமிழ் நாட்டின் நடப்பு அரசியலை அதன் போக்கை விளக்குகிறார்.

இவர் யாழ் கள உறவு என்பதில் நாமும் கொஞ்சம் கர்வம் அடைவோம்😎

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கோசான்.

தெரியாத மனதுக்கு கஸ்டமான பல விடயங்களை உரையாடுகிறார்.

இவர்கள் பட்ட கஸ்டம் உரையாடலில் தெரிகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்


ஓடிடி உலகம்: திரும்பிப் பார்க்கவைத்த 2 படங்கள்
 

இதர மொழிகளோடு ஒப்பிடுகையில் ஓடிடி தளங்களில் வெளியாகும் தரமான தமிழ் படங்கள் மிகவும் குறைவு. இந்த ஆதங்கத்தை நேர் செய்யும் வகையில் அண்மையில் இரண்டு திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்திருக்கின்றன. ஈழத்தமிழர் போராட்டம் பற்றிய பொதுப்புத்தியின் அலட்சியத்தை உலுக்கிய ’மேதகு’, ஆதிக்க வெறியர்களைச் சாடும் ‘மாடத்தி’ என, கனமான உள்ளடக்கத்துடன் வெளியாகி, விவாதங்களையும் பற்ற வைத்திருக்கின்றன.

மேதகு: ஒரு தலைவன் உருவான கதை

‘ஃபேமிலிமேன்’ வலைத்தொடரின் இரண்டாம் சீஸன், ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் என அண்மையில் ஓடிடியில் வெளியான இரண்டு படங்களிலும் ஈழப்போராட்டம் குறித்த கருத்தாக்கம் பொறுப்பின்றி கையாளப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. நிஜத்தில், ஈழத்தில் நடந்தது என்ன? ஈழ மக்களின் தரப்பு நியாயங்கள் எவை என்பது பற்றிய புரிதலில் தற்போதைய தமிழ்நாட்டு தலைமுறைக்கும் பிற இந்திய மாநிலத்தினருக்கும் நிறையவே போதாமைகள் உண்டு. அவற்றுக்கு விடை தரும் முயற்சியாக மேதகுதிரைப்படம் அமைந்திருக்கிறது.

சிங்களர் - தமிழர் இடையிலான இனவாத மோதலில், திருப்புமுனையான ஒரு முக்கியப் போராளி இயக்கத்தின் விதை எப்போது விழுந்தது, வேலுப்பிள்ளை பிரபாகரன் என்கிற போராளி எப்படி உதயமானார், அறவழியிலிருந்த தமிழர்களின் போராட்டம் எந்தப் புள்ளியில் ஆயுதமேந்திய மறவழிக்கு மடைமாறியது என்பதையெல்லாம் ஆழமான விவரணைகளோடு ஓர் உயிர்ப்புமிக்கத் திரைப்படத்துக்குரிய எளிய மொழியில் சொல்லியிருக்கிறது ‘மேதகு’.

பிரபாகரன் பிறந்ததில் தொடங்கி, கையில் ’துவக்கு’ ஏந்தி அவர் களமாடிய முதல் சம்பவம் வரையாக ‘மேதகு’ முதல் பாகம் விவரிக்கிறது. பிரபாகரன், யாழ்ப்பாண மேயர் துரையப்பா, இலங்கை பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயகா என முக்கிய கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்வு சிறப்பாகவும் தோற்றப் பொருத்தத்துடனும் அமைந்துள்ளது. அதிலும் இளவயது பிரபாகரனாக தோன்றும் குட்டி மணியின் ஆழமான பார்வையும் உடல்மொழியும் அபாரம்!

ஏராளமான விவரிப்புகள், சம்பவங்கள் நிறைந்த கால் நூற்றாண்டுக் கதையை சுருங்கச் சொல்வதற்கு மதுரை தெருக்கூத்து உத்தியை உபயோகித்திருப்பது ரசிக்க வைக்கிறது. அழிவின் விளிம்பிலிருக்கும் கூத்துக் கலை ‘மேதகு’ மூலம் மீண்டும் ஆக்சிஜன் பெறவும் வாய்ப்பாகலாம். திரைப்படம் பேசும் அரசியலுக்கு அப்பால், கலை வடிவிலும் மேதகு பாய்ச்சல் காட்டியுள்ளது. சுமார் அறுபது லட்சம் பட்ஜெட்டில் சவால்கள் மிக்க கதையை, பெரிதாய் குறை காண முடியாத வகையில் சினிமாவாக உருவாக்கியிருப்பது வரவேற்புக்குரியது. அவ்வகையில் கதைகளைச் சுமந்துகொண்டிருக்கும் ஏராளமான இளைஞர்களுக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார் ‘மேதகு’ படத்தின் இயக்குநர் கிட்டு. ரியாஸின் ஒளிப்பதிவு, பிரவீன் குமாரின் இசை இரண்டும் திரைப்படத்தின் தூண்கள். பறையொலிப் பின்னணியில் ’தமிழுக்கு அமுதென்று பேர்..’ எனும் பாவேந்தரின் பாடல் காதுகளில் இன்னமும் ரீங்கரிக்கிறது.

படத்தின் பட்ஜெட் காரணமாக ஆவணப் படத்தின் சாயல் சில இடங்களில் துருத்தலாகத் தெரிவதை சிறு குறையாகச் சொல்லலாம். ஆனால் ஈழ மக்களின் வலியையும் மொழியையும் திருத்தமாக சொன்ன அரசியல் பார்வையில், எளிமையும் செறிவுமான திரைக்கலையில் நிகழ்த்திக் காட்டியிருக்கும் முன்மாதிரிப் பாய்ச்சல் என ’மேதகு’ படத்தைப் பாராட்டலாம். கூடவே அண்மைக்கால அரைகுறை சித்தரிப்புகளுக்கு முத்திரை வசனத்தின் பாணியிலே ‘திருப்பி அடி’த்திருக்கிறார்கள்.

பிகு

கவனச்சிதறலை தடுக்கும் எண்ணத்தில் மாடத்தி பற்றிய பகுதியை இணைக்கவில்லை. கீழே இணைப்பில் உண்டு.

https://www.hindutamil.in/news/todays-paper/subfront/688473-.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்து போராட்டத்தை எம் வாழ்நாளில் பதிவாக்கி  அதனை காவியமாக்குவோம் என்று அடிக்கடி கூவிய இந்திய திரை பிரபலங்கள் இரண்டுபேர்...

ஒன்று பாரதிராஜா..

இரண்டு வைரமுத்து..

மேலே உள்ள இரண்டுபேரும் திரையுலகின் ஜாம்பவான்கள்...

ஆனால் சொன்னதை செய்ததே இல்லை...

இயக்குனர் கிட்டு திரையுலக ஜாம்பவான் இல்லை,... ஆனால் சொல்லிக்கொண்டிருக்காமல் செய்தேவிட்டார்.

மேதகு...

இப்போது சொல்லி பார்க்கும்போது சக மனிதர்களுக்கு இந்த தலைப்பு சாதாரணமாக தெரியலாம்,  ஈழ தமிழர் சம்பந்தமான ஒரு படைப்பை தயாரிக்கும்போது இந்த பெயர் தாங்கியவரை எம் இனம் எவ்வளவு தூரம் நேசித்தது என்பதை புரிந்து கொண்டே பெயரிட்டிருக்கிறார் இயக்குனர் கிட்டு.

காலம் நமக்கு சதி செய்தது போலவே கொரோனாவும் சதி செய்கிறது, இல்லையென்றால் புலம்பெயர் நாடுகளில் உள்ள திரையரங்கங்களில் வெளியிடப்பட்டு மேதகு  இயக்குனர் கிட்டுவிற்கும் தயாரிப்பு குழுவும் இப்போ உள்ளதைவிட மிக பெரும் பொருளாதார பலம் பெற்றிருக்கும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/7/2021 at 12:25, அன்புத்தம்பி said:
"தலைவரா நடிக்கணும்ன்னு சொன்னதும் பயந்துட்டேன்!"
"போலீஸ் சொல்ல முடியாத அளவுக்கு பிரச்னை பண்ணுவாங்க!" - 'மேதகு' நடிகர் குட்டி மணி! …
 

குட்டிமணி என்ற மணிகண்டனின் இயல்பும் சேவையுள்ளமே என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, valavan said:

ஈழத்து போராட்டத்தை எம் வாழ்நாளில் பதிவாக்கி  அதனை காவியமாக்குவோம் என்று அடிக்கடி கூவிய இந்திய திரை பிரபலங்கள் இரண்டுபேர்...

ஒன்று பாரதிராஜா..

இரண்டு வைரமுத்து..

மேலே உள்ள இரண்டுபேரும் திரையுலகின் ஜாம்பவான்கள்...

ஆனால் சொன்னதை செய்ததே இல்லை...

இயக்குனர் கிட்டு திரையுலக ஜாம்பவான் இல்லை,... ஆனால் சொல்லிக்கொண்டிருக்காமல் செய்தேவிட்டார்.

மேதகு...

இப்போது சொல்லி பார்க்கும்போது சக மனிதர்களுக்கு இந்த தலைப்பு சாதாரணமாக தெரியலாம்,  ஈழ தமிழர் சம்பந்தமான ஒரு படைப்பை தயாரிக்கும்போது இந்த பெயர் தாங்கியவரை எம் இனம் எவ்வளவு தூரம் நேசித்தது என்பதை புரிந்து கொண்டே பெயரிட்டிருக்கிறார் இயக்குனர் கிட்டு.

காலம் நமக்கு சதி செய்தது போலவே கொரோனாவும் சதி செய்கிறது, இல்லையென்றால் புலம்பெயர் நாடுகளில் உள்ள திரையரங்கங்களில் வெளியிடப்பட்டு மேதகு  இயக்குனர் கிட்டுவிற்கும் தயாரிப்பு குழுவும் இப்போ உள்ளதைவிட மிக பெரும் பொருளாதார பலம் பெற்றிருக்கும்.

கொரோனா முடிந்ததும் சிறப்பு காட்சிகள் போட்டாலும் மீண்டும் ஒரு தடவை நாம் போய் பார்ப்போம். 

குறைந்தது லண்டன், பாரிஸ், டொரெண்டோவிலாவது செய்ய வேண்டும்.

தயாரிப்பாளர்கள் பரிசீலிக்க வேண்டும்.

40 minutes ago, ஏராளன் said:

குட்டிமணி என்ற மணிகண்டனின் இயல்பும் சேவையுள்ளமே என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.

17 வயதில் அறக்கட்டளை! செயலும் தலைவரை போலவே இருக்கிறார்.

தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக வர வேண்டும்🙏🏾

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளித்திரையில் மேதகு

 

large.92A9BD63-6CE6-4BAD-A52E-8E446CA517B6.jpeg.8590e7c46f9bb0347bbdbb85bf6534c4.jpeglarge.5351279B-E780-4754-B0D4-78817F8EE5E0.jpeg.f4e8ae35357117346586e4b490f6db5b.jpeglarge.6CF05D0E-8AE0-40C1-B478-633BEEFFFCE0.jpeg.81bb1f21477293dcb23b505f763eeef1.jpeglarge.F412CF85-D4FC-4CAD-9C18-DE47C0A23D83.jpeg.f068a2fdf59395776848108d1e80da76.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேதகு என்ற பெயரே அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது. நாட்டுப்புறக் கலைகளுக்கு முன்னுரிமை  கொடுத்து படம் முழுவதும் வரலாற்றை காட்சிப்படுத்திய விதம் அருமை. நடிகர்கள் மிக அருமையாக பாத்திரப் படைப்புக்கேற்ற விதத்தில் தெரிவுசெய்யப்பட்டிருப்பது மிகச் சிறப்பு. பாடல் காட்சிகள் மிக அருமையாக காட்சிப்படுத்தி உள்ளனர். படக் குழுவினருக்கு பாராட்டுக்கள். நாம் கொடுக்கும் ஒரு சிறுதுளி பெரு வெள்ளமாக தொடர்ந்தும் வரலாற்றை ஆவணமாக்க உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் செயற்படுவோம். தமிழுக்கும் அமுதென்று பேர் என்ற பாடலும் காட்சிகளும் மனதை விட்டு அகலவில்லை. 

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முக்கியமான சில விடயங்களை இந்த பேட்டியில் கோடிட்டு காட்டுகிறார்..சாட்டுகிறார்.

ஆனால் காலம் கடந்த நிலை..! 😌

 

 

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

முக்கியமான சில விடயங்களை இந்த பேட்டியில் கோடிட்டு காட்டுகிறார்..சாட்டுகிறார்.

ஆனால் காலம் கடந்த நிலை..! 😌

 

 

அருமையான கருத்தாடல்.

இவருக்கிருக்கும் சிந்தனை இன்னும் நம்மவர் நிறைய பேருக்கில்லை.

இணைப்புக்கு நன்றி வன்னியன்.

Link to comment
Share on other sites

இலங்கை புத்த பிட்சுக்களின் உண்மை முகம் இதான்! உறைய வைக்கும் சம்பவம் சொல்லும் மேதகு DIRECTOR பேட்டி

 

 

  • Thanks 1
Link to comment
Share on other sites

 

 

“யாரைக்கேட்டு மேதகு படம் எடுத்தீர்கள்”. புலம்பெயர் தமிழரின் புலம்பல்

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, nunavilan said:

 

 

“யாரைக்கேட்டு மேதகு படம் எடுத்தீர்கள்”. புலம்பெயர் தமிழரின் புலம்பல்

" புலம்பல்  "..

வீட்டில் மனைவி விரும்பாததை   சொல்லி விட்டால் அது புலம்பல் ..
நாட்டில் மனதுக்கொவ்வாத கருத்தை எவரும் சொல்லி விட்டால் அதுவும்  புலம்பல் 
சுற்றி வளைத்து கட்டி வைத்து  கும் கும் என்று கும்மி விடும் போது வருவதும் புலம்பல் 
இதில் எந்தப்  புலம்பல்  உண்மைப் புலம்பல் கச்சியேகம்பனே ....

 

 

 

Edited by சாமானியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இதை பார்க்க நேர்ந்தது..

பட விமர்சனங்களுக்கு அப்பால், கருத்தாடல் யதார்த்தமாக இருந்தது..

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் அரங்கு நிறைந்த மக்களோடு திரையிடப்பட்ட “மேதகு”

AdminJuly 12, 2021

தமிழீழத் தேசியத்தலைவரின் வரலாற்றைச் சொல்லும் மேதகு திரைப்படம் நேற்று 11/07/2021 இரவு 20.00மணிக்கு திரையரங்கம் நிறைந்த மக்களோடு திரையிடப்பட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் இளையவர்களின் ஈடுபாடு அதிகமாக இருந்ததைக்காணக் கூடியதாக இருந்தது.

mythaku1.jpg?resize=477%2C266

பிரான்சு ஈழத் தமிழர் திரைப்படச் சங்கத்துடன், பிரான்சு தமிழ் இளையோர் அமைப்பினர் இணைந்து இந்த வரலாற்றுப் பணியை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் எப்போது திரையிடுவீர்கள் எனப் பலரும் கேட்டுவருகின்றமை குறித்த திரைப்படத்தின் நெறிப்படுத்தலை வெளிக்காட்டி நிற்கிறது.

. 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

வெள்ளையளும் மதிப்புரை கொடுத்திருக்கினம்

7/10

 

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

 

சுவீடன் நாட்டில் இருந்து வருடந்தோறும் வழங்கப்படும் லூலியோ (Luleå - LIFF Sweden) சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், நமது “மேதகு” திரைப்படம் இறுதிச்சுற்றுக்கு (Best International feature film - finalist) தேர்ந்தெடுக்கப்படுள்ளது… ❤️

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.