Jump to content

ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்டம் 2020 : இரண்டாவது சுற்று ஆரம்பம்


Recommended Posts

இத்தாலி  எதிர் ஸ்பெயின்

செக் குடியரசு எதிர் இங்கிலாந்து

 

இத்தாலி  எதிர் இங்கிலாந்து😁

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Eppothum Thamizhan said:

உங்கள் கணிப்பிற்கு 

பெல்ஜியம் எதிர் இத்தாலி 
சுவிற்சர்லாந்து எதிர் ஸ்பெயின் 
டென்மார்க் எதிர் செக் குடியரசு 
இங்கிலாந்து எதிர் உக்ரைன் 

 

பெல்ஜியம் எதிர்  ஸ்பெயின் 
 செக் குடியரசு  எதிர்   இங்கிலாந்து

பெல்ஜியம்  எதிர்   இங்கிலாந்து

 

பெல்ஜியம் 😀

Link to comment
Share on other sites

இன்று நடந்த போட்டியில் பெல்ஜியத்தை  தோற்கடித்து இத்தாலியும், சுவிசை தோற்கடித்து ஸ்பெயினும் அரையிறுதிக்கு முன்னேறுகின்றனர். இத்தாலியும் ஸ்பெயினும் செய்வாய்க் கிழமை மோதுகின்றனர்.
ஏனைய இரு காலிறுதி போட்டிகளான டென்மார்க் எதிர் செக் குடியரசு, உக்ரேன், இங்கிலாந்து நாளை மோதுகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இத்தாலி  இறுதி ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டார்கள்.
நீண்ட காலத்திற்கு பின் வருகின்றார்கள். வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெயின் இத்தாலி  டென்மார்க் நாடுகளில் இதுவரை யூரோ இறுதிப் போட்டி ஆட்டத்திற்குள் நுழையாத நாடு இங்கிலாந்து தானாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இண்டைக்கு இங்கிலாந்துக்கும் டென்மார்க்குக்கும் கூத்து இருக்கு.
என்ரை சப்போர்ட் இங்கிலாந்துக்கு தான். ஏனெண்டால் எங்களை ஆண்டபரம்பரை எல்லே 😎

547.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்திற்கு வாழ்த்துக்கள்.

Sancho muss bei England wieder auf die Bank

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2020 யூரோ ; டென்மார்க்கை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

லண்டனின் வெம்ப்லி மைதானத்தில் நடந்த 2020 யூரோ கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் டென்மார்க்கை வீழ்த்தி இங்கிலாந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

E5ukAo5XMAMCnKj.jpg

இங்கிலாந்து வீரர் ஹாரி கேனின் எக்ஸ்ட்ரா டைம்  கோல் மூலம் டென்மார்க்கை 2:1 என்ற கணக்கில் வீழ்த்தி இறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து.

இங்கிலாந்து 1966 ஆம் ஆண்டு உலக கிண்ணத்துக்கு பிறகு முதல் முறையாக பெரிய தொடர் ஒன்றில் இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது, மேலும் யூரோ கால்பந்து தொடரில் முதல் முறையாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.

ஆட்டத்தின் 30 ஆவது நிமிடத்தில் டென்மார்க்கின் அபாய வீரர் மிக்கெல் டாம்ஸ்கார்ட் திகைப்பூட்டும் ஃப்ரீகிக்கில் 25 அடியிலிருந்து நேராக கோலுக்குள் திணிக்க டென்மார்க் முதலில் 1-0 என்று முன்னிலை பெற்றது. 

ஆனால் 39 ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து கொடுத்த நெருக்கடியில் டென்மார்க் வீரர் சிமன் கியா தன் கோலுக்குள்ளேயே சேம்சைடு கோல் அடிக்க இங்கிலாந்து அதிர்ஷ்டத்தில் சமன் செய்தது.

பிறகு ஆட்டம் 1-1 என்ற நிலையில் கூடுதல் 30 நிமிடம் ஒதுக்கப்பட்டதில் 104 ஆவது நிமிடத்தில் பெனால்டி கிக்கை டென்மார்க் கோல் கீப்பர் தடுக்க திரும்பி வந்த பந்தை ஹாரி கேன் கோலாக மாற்ற 2-1 என்று இங்கிலாந்து வென்று 55 ஆண்டுகளுக்குப் பிறகு பெரிய கால்பந்து தொடரின் இறுதிக்குள் கால்வைத்துள்ளது.

E5ulYsoXIAIu54s.jpg

ஞாயிறன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து-இத்தாலி அணிகள் மோதும்.

 

https://www.virakesari.lk/article/109002

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவராய் பில்டப்  கொடுக்கப்படாது பிரிட்டிஷ் அன்ட் கொலனிஸ் 😎

சொந்த மண்ணில் தோல்வி என்பது கவலைக்குரிய விடயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவேளை பனால்டியில்   தோற்றிருந்தால்கூட  உண்மையான வெற்றியாளர் இத்தாலிதான். அப்படியொரு வெறித்தனமான ஆட்டம்.

முதல் அடிச்ச ஒரு கோலுக்கு பிறகு இங்கிலாந்து ஆடினதெல்லாம் தற்காப்பு ஆட்டம்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யூரோ கோப்பை: இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி சாம்பியன்

 

யூரோ கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இத்தாலி அணி பட்டத்தை வென்றது

விறுவிறுப்பாக நடந்த போட்டியில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது.

ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்திருந்தன. பெனால்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அணி வெற்றி பெற்றது. பெனால்டியின்போது அடுத்தடுத்து மூன்று வாய்ப்புகளை இங்கிலாந்து அணி தவறவிட்டது.

1968-ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தாலி அணி முதல் முறையாக யூரோ சாம்பியன் பட்டத்தை வென்றிருப்பதால் அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இங்கிலாந்து அணியும் யூரோ கோப்பையை வெல்வதற்காக கடந்த 55 ஆண்டுகளாகக் காத்திருக்கிறது.

https://www.bbc.com/tamil/live/global-57800918

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கால்பந்து கிண்ணத்தை கைப்பற்றியது இத்தாலி

யூரோ  கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி 1968 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இத்தாலி.

Image

இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 6 ஆவது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.

Image

இன்று அதிகாலை இடம்பெற்ற இந்தப் போட்டியில் உலக தரவரிசையில் 7 ஆவது இடத்தில் உள்ள இத்தாலி அணி இங்கிலாந்து அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2 ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் எவரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

Image

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67 ஆவது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

Image

இதையடுத்து இரு அணிகளுக்கும் மேலதிக நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

பின்னர் வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்று யூரோ கிண்ணத்தை கைப்பற்றியது.

Image

 

https://www.virakesari.lk/article/109214

 

 

Link to comment
Share on other sites

இனவாத கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன. பெனால்டியை வெளியில் அடித்த கறுப்பு இன வீரர்களால் தானாம்  பிரித்தானியா தோற்றதாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

இனவாத கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன. பெனால்டியை வெளியில் அடித்த கறுப்பு இன வீரர்களால் தானாம்  பிரித்தானியா தோற்றதாம்.

அந்த இளம் வீரர்கள்தான் அடுத்த தலைமுறை நட்ஷத்திரங்கள் ஆக வருவார்கள்.
சொந்த நாட்டில் விளையாடியதால் மட்டுமே இங்கிலாந்து இறுதி வரை வந்தது. அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து ரசிகர்களே நிறைய பாஸ்தா சாப்பிடுங்கள்; இத்தாலிய வீரர் கிண்டல்

இங்கிலாந்து ரசிகர்களே நிறைய பாஸ்தா சாப்பிடுங்கள்; இத்தாலிய வீரர் கிண்டல்

 

லண்டன், 

16வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி கடந்த மாதம் 11ந்தேதி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்று முடிவில் இத்தாலி மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.


தோல்வியே சந்திக்காமல் இறுதிசுற்றை எட்டிய இவ்விரு அணிகளில் சாம்பியன் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் லண்டன் வெம்ப்லி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

ஆட்டத்தில் முதல் பாதியில் இங்கிலாந்து அணி ஒரு கோலுடன் முன்னிலை வகித்தது. அதில் இங்கிலாந்து அணி வீரர் லூக் ஷாவின் கோல் 1 நிமிடம் 57 வது வினாடியில் அடிக்கப்பட்டது. இது யூரோ சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டியில் அடித்த வேகமான கோல் ஆகும்.

இதனைத்தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் லியோனர்டோ போனுக்சி கோல் அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது. 

இதனைத்தொடர்ந்து அளிக்கப்பட்ட அதிகப்படியான நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. பின்னர் பெனாலிட்டி ஷூட் அவுட் முறையில் வெற்றியை தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதன் அடிப்படையில் இத்தாலி அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

முன்னதாக 4 முறை உலக சாம்பியனான இத்தாலி அணி இதற்கு முன்பு ஒரே ஒரு முறை யூரோ கோப்பையை (1968-ம் ஆண்டு) வென்றுள்ளது. களத்தில் அதிரடியான தாக்குதல் பாணியை கையாளுவதில் கில்லாடியான இத்தாலி அணி இந்த தொடரில் மட்டும் 12 கோல்களை போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மகுடம் சூடியுள்ள இத்தாலி அணிக்கு ரூ.89 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுகிறது. போட்டி கட்டணம், லீக் சுற்று, நாக்-அவுட் சுற்று வெற்றிகள் எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்தத்தில் கிட்டத்தட்ட ரூ.300 கோடியை இத்தாலி அணி பரிசாக அள்ளியது.

போட்டியின் 67வது நிமிடத்தில் இத்தாலி அணி வீரர் போனுக்சி அடித்த கோல் ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்து வெற்றியை நிர்ணயித்தது.  யூரோ இறுதி போட்டியில் மிக வயது முதிர்ந்த (34 வயது) கோல் அடித்தவரான போனுக்சி, யூரோ இறுதி போட்டி வரலாற்றில் அதிகளவில் (18 முறை) பங்கேற்றவர் என்ற பெருமை கொண்டவர்.

அவர் போட்டியின் நடுவில் இங்கிலாந்து ரசிகர்களை நோக்கி நிறைய பாஸ்தா சாப்பிட வேண்டும்.  நிறைய பாஸ்தா சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது என கிண்டலாக கூறினார்.  அதன்பின்னர், கேமிரா ஒன்றின் முன்னால் வந்து, கோப்பை ரோம் நகருக்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் கூறி இங்கிலாந்து ரசிகர்களை கடுப்பேற்றினார்.

யூரோ கோப்பையை ஜெர்மனி (3 முறை), ஸ்பெயின் (3 முறை) மற்றும் பிரான்ஸ் (2 முறை) ஆகியவற்றுக்கு அடுத்து அதிக முறை வென்ற பட்டியலில் இத்தாலி 4வது இடம் பிடித்து உள்ளது.  53 ஆண்டு இடைவெளிக்கு பின் இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

https://www.dailythanthi.com/Sports/Football/2021/07/12124214/UK-fans-eat-a-lot-of-pasta-Italian-player-tease.vpf

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, வாத்தியார் said:

அந்த இளம் வீரர்கள்தான் அடுத்த தலைமுறை நட்ஷத்திரங்கள் ஆக வருவார்கள்.
சொந்த நாட்டில் விளையாடியதால் மட்டுமே இங்கிலாந்து இறுதி வரை வந்தது. அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தானே

அவர்கள் இப்போதே பெரிய நட்சத்திரங்கள்தான்! ஆனால் பெனால்டி அடிக்க அனுபவம் போதாது.

இங்குள்ள லீக் மட்சுகளில் “சமநிலை” முடிவு ஒழிக்கப்படவேண்டும். 90 நிமிடங்களில் வெற்றி-தோல்வி முடிவு வராவிட்டால் மேலதிக நேரம் கொடுக்காமல் உடனேயே பெனால்டி உதைகள் மூலம் வெற்றியைத் தீர்மானிக்கவேண்டும். இதுதான் வீரர்களுக்கு பயிற்சியையும், நம்பிக்கையையும் கொண்டுவரும். யார் சிறந்த பெனால்டி உதைகாரர்கள் என்று அறியவும் முடியும்! 💡

இங்கிலாந்து முதலாவது கோல் அடிக்காமல் இருந்திருந்தால் மட்ச் வேளைக்கே முடிந்திருக்கும்😃 நானும் நித்திரை தூங்காமல் இருந்திருக்கலாம்😉

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெட்டிங்  செண்டர்களை இப்படியான போட்டிகள் நடைபெறும் நேரம் உலகம் முழுக்க தடைபண்ணனும் பில்லியன்கணக்கான பவுண்ஸ் போக்குவரத்தை நிமிடங்களுக்கு குறைவான நேரத்தில் ஆட்டையை போடும் வித்தை  அங்குதான் அரங்கேருது .

 

Link to comment
Share on other sites

 

https://www.youtube.com/watch?v=3EiE7eLWI_M

 

இங்கிலாந்தின் தன்போதைய பயிற்சியாளர் Southgate பெனால்டி உதையை  காப்பாளரிடம் கொடுத்து ஜேர்மனியிடம் தோற்ற ஆண்டு 1996. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, nunavilan said:

 

https://www.youtube.com/watch?v=3EiE7eLWI_M

 

இங்கிலாந்தின் தன்போதைய பயிற்சியாளர் Southgate பெனால்டி உதையை  காப்பாளரிடம் கொடுத்து ஜேர்மனியிடம் தோற்ற ஆண்டு 1996. 

இதுவும் நேற்று இன்றைய தினங்களில் ஊடக பேசு பொருள்.

10 hours ago, கிருபன் said:

இங்கிலாந்து முதலாவது கோல் அடிக்காமல் இருந்திருந்தால் மட்ச் வேளைக்கே முடிந்திருக்கும்😃 நானும் நித்திரை தூங்காமல் இருந்திருக்கலாம்😉

தோல்வியை கூட இவ்வளவு நாகரீகமாக எழுத எல்லாராலையும் ஏலாது 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மார்கஸ் ரஷ்பேட்டால் தான் தோத்து  விட்டோம் என்று கொஞ்சம் கொஞ்சமாய் துவேசம் துளிர்க்கிறது .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதை என்னை நக்கலடிப்பதற்காக சொன்னீர்களோ தெரியாது 😂 ஆனால் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் நன்றாக தெரிந்த விடயம் ரஷ்யா தங்களுக்கு எதிரியல்ல என்பது. உண்மையில் உலகிற்கே ஆப்பு வைக்கக்கூடிய நிலையில் ஒரு பொது எதிரியாக சீனாதான் இன்றுள்ளது ஈரானில் கூட 70 வீத வியாபார நிலையங்கள் சீனாவிற்குரியதாம்.அதே போல் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இன்னும் மோசமான நிலையே. மேற்குலகை பற்றி நான் சொல்லத்தேவையில்லை. உங்கள் எங்கள் கண் முன்னே சீனாவின் பொருட்களை கண் முன்னே பார்த்துக்கொண்டுதானே இருக்கின்றோம்.   இன்று கூட சீன அதிபரை சர்வாதிகாரி என ஜேர்மன் பத்திரிகைகள் முழங்க..... ஜேர்மனிய ஆட்சியாளரும் அவர் அமைச்சரவையும் சீனாவில் குடிகொண்டு வர்த்தக் ஒப்பந்தகள் செய்துகொண்டிருக்கின்றனர்.🤣 யாருக்கு? 
    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.