Jump to content

13 ஆவது திருத்தச் சட்டமும் குமார் பொன்னம்பலமும்


Recommended Posts

 

13 ஆவது திருத்தச் சட்டமும் குமார் பொன்னம்பலமும்
------------------------------------------- ----
13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் இருந்து என்றோ ஒரு நாள் நீக்கம் செய்யப்படும் சந்தர்ப்பம் வருமென மாமனிதர் குமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.
2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்கு வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு சொன்னார்.
13, அரசியல் தீர்வு அல்ல என்றும், ஆனாலும் குறைந்தபட்ச அதிகாரப்பரவலாக்கத்தைக் கொண்ட 13 ஆவது திருத்தச் சட்டம்கூட சிங்கள ஆட்சியாளர்களினால் ரத்துச் செய்யப்படும் சூழல் உருவாகுமெனவும் அவர் அன்று தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருந்தார்.
----கொழும்பில் உள்ள பிரபல அச்சு ஊடகம் ஒன்றில் நான் பணியாற்றியபோது, குமார் பொன்னம்பலம் வழங்கிய அந்த நேர்காணல், அச்சுக்குச் சென்று சிறிது நேரத்தில் திடீரென ஓடிக் கொண்டிருந்த இயந்திரம் நிறுத்தப்பட்டு அந்த நேர்காணல் அகற்றப்பட்டது.
உடனடியாக ஏதோவொரு கட்டுரையைப் போட்டுப் அந்தப் பக்கத்தை நிரப்பி மீண்டும் புதிய பதிப்பு அச்சிடப்பட்டது.
குமார் பொன்னம்பலத்தின் நேர்காணலோடு ஏற்கனவே அச்சிடப்பட்ட பல பிரதிகள் அப்படியே கட்டப்பட்டு வெளியே போகாமல் ஒரு மூலைக்குள் போட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது எரிக்கப்பட்டிருக்கலாம்.
நேர்காணல் பிரசுரிக்கப்படக் கூடாதென, அச்சுக்குப் போய் சில நிமிடங்களில் எங்கிருந்து திடீர் உத்தரவு வந்தததென இதுவரை எனக்குத் தெரியாது-
அப்போதிருந்த பிரதம ஆசிரியர் மனவேதனையோடு தனது மேசையில் இருந்ததை என்னால் உணர முடிந்தது.
அந்த நேர்காணல், குமார் பொன்னம்பலத்தின் 31 நாள் நினைவு வணக்க நூலில் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் சர்ச்சையான கருத்துக்களைத் தவிர்த்தே அதனைப் பிரசுரிக்க அனுமதியளித்தேன்--(கொழும்பில் அப்போதைய பாதுகாப்பு நிலை ஆபத்தானதாக இருந்தது- அத்துடன் நான் பணியாற்றிய நிறுவனமும் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சமும் இருந்தது. )
1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவைக் கடுமையாக விமர்சித்த குமார் பொன்னம்பலம், கொழும்பு கோட்டையில் உள்ள இலங்கை வங்கியின் கேட்போர் கூடத்தில் சிங்களப் புத்திஜீவிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றினார்.
கேள்விகளுக்குத் துணிவோடு பதிலளித்த குமார் பொன்னம்பலம், போர் நிறுத்தப்படவில்லை என்றால், கடன்சுமை தாங்க முடியாமல் இலங்கை குட்டிச் சுவராகும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்தக் கருத்தரங்கில் நானும் மாமனிதர் சிவராம் அண்ணணும் பங்குபற்றியிருந்தோம். சிங்கள மக்களினால் கேட்கப்பட்ட குறிப்பிட்ட சில கோள்விகளைத் தவிர, அநேகமான கோள்விகள் இனவாதமாகவும், ஆத்திரத்தை ஏற்படுத்தும் கருத்துகளாகவும் இருந்தன.
ஆனால் பொறுமையாகவும் நிதானமாகவும் பதில் வழங்கினார் குமார் பொன்னம்பலம்.
----அப்போது செய்தித் தணிக்கை அமுலில் இருந்ததால் குமார் பொன்னம்பலம் கூறிய பதில்களில் சில கருத்துக்களை மாத்திரமே நான் பணியாற்றிய அந்த அச்சு ஊடகத்தில் என்னால் எழுத முடிந்தது---
13 ஆவது திருத்தச் சட்த்தை ரத்துச் செய்ய வேண்டுமென்ற தங்கள் விருப்பங்களையே சிங்களப் புத்தஜீவிகளில் பலர், குமார் பொன்னம்பலத்திடம் முன்வைத்திருந்தனர்.
22 வருடங்கள் சென்று விட்ட நிலையிலும் சிங்கள மக்களில் பலரும், மிலிந்த மொறகொட போன்ற சிங்கள அரசியல்வாதிகளும், அமைச்சர் சரத் வீரசேகர போன்ற முன்னாள் இராணுவ உயர் அதிகாரிக் சிலரும் அதே கருத்துடனேயே இன்றும் செயற்படுகின்றனர்.
13 ஆவது திருத்தச் சட்டத்தையாவது ஏற்றிருக்கலாம் என்று புலம்வோருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
 
200930614_4132496623532300_7253721816030
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

 

13 ஆவது திருத்தச் சட்டமும் குமார் பொன்னம்பலமும்
------------------------------------------- ----
13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கை அரசியல் யாப்பில் இருந்து என்றோ ஒரு நாள் நீக்கம் செய்யப்படும் சந்தர்ப்பம் வருமென மாமனிதர் குமார் பொன்னம்பலம் கூறியிருந்தார்.
2000 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனக்கு வழங்கியிருந்த நேர்காணல் ஒன்றில் இவ்வாறு சொன்னார்.
13, அரசியல் தீர்வு அல்ல என்றும், ஆனாலும் குறைந்தபட்ச அதிகாரப்பரவலாக்கத்தைக் கொண்ட 13 ஆவது திருத்தச் சட்டம்கூட சிங்கள ஆட்சியாளர்களினால் ரத்துச் செய்யப்படும் சூழல் உருவாகுமெனவும் அவர் அன்று தீர்க்க தரிசனமாகச் சொல்லியிருந்தார்.
----கொழும்பில் உள்ள பிரபல அச்சு ஊடகம் ஒன்றில் நான் பணியாற்றியபோது, குமார் பொன்னம்பலம் வழங்கிய அந்த நேர்காணல், அச்சுக்குச் சென்று சிறிது நேரத்தில் திடீரென ஓடிக் கொண்டிருந்த இயந்திரம் நிறுத்தப்பட்டு அந்த நேர்காணல் அகற்றப்பட்டது.
உடனடியாக ஏதோவொரு கட்டுரையைப் போட்டுப் அந்தப் பக்கத்தை நிரப்பி மீண்டும் புதிய பதிப்பு அச்சிடப்பட்டது.
குமார் பொன்னம்பலத்தின் நேர்காணலோடு ஏற்கனவே அச்சிடப்பட்ட பல பிரதிகள் அப்படியே கட்டப்பட்டு வெளியே போகாமல் ஒரு மூலைக்குள் போட்டப்பட்டிருக்க வேண்டும். அல்லது எரிக்கப்பட்டிருக்கலாம்.
நேர்காணல் பிரசுரிக்கப்படக் கூடாதென, அச்சுக்குப் போய் சில நிமிடங்களில் எங்கிருந்து திடீர் உத்தரவு வந்தததென இதுவரை எனக்குத் தெரியாது-
அப்போதிருந்த பிரதம ஆசிரியர் மனவேதனையோடு தனது மேசையில் இருந்ததை என்னால் உணர முடிந்தது.
அந்த நேர்காணல், குமார் பொன்னம்பலத்தின் 31 நாள் நினைவு வணக்க நூலில் பிரசுரிக்கப்பட்டது. ஆனால் சர்ச்சையான கருத்துக்களைத் தவிர்த்தே அதனைப் பிரசுரிக்க அனுமதியளித்தேன்--(கொழும்பில் அப்போதைய பாதுகாப்பு நிலை ஆபத்தானதாக இருந்தது- அத்துடன் நான் பணியாற்றிய நிறுவனமும் என் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சமும் இருந்தது. )
1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது அப்போதைய ஜனாதிபதி சந்திரிகாவைக் கடுமையாக விமர்சித்த குமார் பொன்னம்பலம், கொழும்பு கோட்டையில் உள்ள இலங்கை வங்கியின் கேட்போர் கூடத்தில் சிங்களப் புத்திஜீவிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் உரையாற்றினார்.
கேள்விகளுக்குத் துணிவோடு பதிலளித்த குமார் பொன்னம்பலம், போர் நிறுத்தப்படவில்லை என்றால், கடன்சுமை தாங்க முடியாமல் இலங்கை குட்டிச் சுவராகும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அந்தக் கருத்தரங்கில் நானும் மாமனிதர் சிவராம் அண்ணணும் பங்குபற்றியிருந்தோம். சிங்கள மக்களினால் கேட்கப்பட்ட குறிப்பிட்ட சில கோள்விகளைத் தவிர, அநேகமான கோள்விகள் இனவாதமாகவும், ஆத்திரத்தை ஏற்படுத்தும் கருத்துகளாகவும் இருந்தன.
ஆனால் பொறுமையாகவும் நிதானமாகவும் பதில் வழங்கினார் குமார் பொன்னம்பலம்.
----அப்போது செய்தித் தணிக்கை அமுலில் இருந்ததால் குமார் பொன்னம்பலம் கூறிய பதில்களில் சில கருத்துக்களை மாத்திரமே நான் பணியாற்றிய அந்த அச்சு ஊடகத்தில் என்னால் எழுத முடிந்தது---
13 ஆவது திருத்தச் சட்த்தை ரத்துச் செய்ய வேண்டுமென்ற தங்கள் விருப்பங்களையே சிங்களப் புத்தஜீவிகளில் பலர், குமார் பொன்னம்பலத்திடம் முன்வைத்திருந்தனர்.
22 வருடங்கள் சென்று விட்ட நிலையிலும் சிங்கள மக்களில் பலரும், மிலிந்த மொறகொட போன்ற சிங்கள அரசியல்வாதிகளும், அமைச்சர் சரத் வீரசேகர போன்ற முன்னாள் இராணுவ உயர் அதிகாரிக் சிலரும் அதே கருத்துடனேயே இன்றும் செயற்படுகின்றனர்.
13 ஆவது திருத்தச் சட்டத்தையாவது ஏற்றிருக்கலாம் என்று புலம்வோருக்கு இந்தப் பதிவு சமர்ப்பணம்.
 
200930614_4132496623532300_7253721816030

இதை எழுதியவர் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இதை எழுதியவர் யார்?

nixon

 

Link to comment
Share on other sites

நல்லதை எழுதினால் கேள்வி தொடரும் திணறவேண்டும். நலிவுற்றதை எழுதினால் வேள்வி தொடரும் இறைச்சி உண்டு சுவைக்கலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.