Jump to content

நாம் எதனால் வாசிப்பதில்லை?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

நாம் எதனால் வாசிப்பதில்லை?

written by செல்வேந்திரன்June 24, 2021

வாசிப்பதன் பயன்களைப் பற்றி பள்ளியிலும் கல்லூரியிலும் தொடர்ச்சியாக அறிவுரைகள் வழங்கப்பட்டாலும் நம்மால் ஏன் வாசிக்க முடியவில்லை? விரிவான ஆய்வுகள் வாசிப்பைத் தடை செய்யும் சில காரணிகளைப் பட்டியலிடுகின்றன.

குடும்பச் சூழல் – உண்மையில் பல குடும்பங்களில் வாசிப்பதற்கான சூழலே இருப்பதில்லை. வறுமை அல்லது எந்நேரமும் பூசலிடுவது அல்லது குடும்பத் தொழில் காரணமாக வாசிப்பதற்கான உளநிலைகள் அமையாமல் இருப்பது. தமிழகத்தில் இருபது சதவீத மாணவர்கள் கல்லூரிக்கு வருவதே கடுமையான வறுமைக்கு மத்தியில்தான். சில மாணவர்கள் பகுதி நேரமாக வேலை பார்த்தால்தான் கல்வியைத் தொடர முடியும் நிலையில் உள்ளார்கள். அவர்களால், உள்ளபடியே வாசிக்க இயலாது.

பயிற்சியின்மை – நமது சூழலில் ஒரு மாணவன் அதிகபட்சம் எட்டாம் வகுப்பு வரைதான் எதையாவது வாசிக்க அனுமதிக்கப்படுகிறான். பிறகு கல்லூரியில் சேரும் வரை மதிப்பெண்களுக்கான நெருக்கடியும் டீன் ஏஜ் குழப்பங்களும் வாசிக்கவிடாமற் செய்துவிடுகின்றன. ஆகவே திடீரென்று ஒரு நூலைக் கருத்தூன்றி வாசிக்கும் பயிற்சி இல்லாமல் போய்விடுகிறது. 

ஆர்வமின்மை – பல காரணங்களால் ஆர்வமின்மை உண்டாகிவிடுகிறது. ஓர் எளிய உதாரணம் சொல்வதென்றால் இன்று தமிழகத்தில் பொறியியல் பயிலும் பெரும்பான்மை மாணவர்களுக்குத் தங்கள் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மை மனச்சோர்வினை உருவாக்கியுள்ளது. ஆகவே எதைச் செய்து என்ன ஆகப்போகிறது எனும் மனநிலை நீடிக்கிறது.

https://s3.amazonaws.com/lowres.cartoonstock.com/children-school_library-lending_library-media_center-librarian-digital_books-dgrn560_low.jpg

வழிகாட்டல் இல்லை / ஊக்குவிப்பில்லை  மிகப்பெரிய பிரச்சினையாக இது கருதப்படுகிறது. இன்று வாசிக்க நினைக்கும் இளைஞனின் கையில் முக்கியத்துவம் இல்லாத சலிப்பூட்டும் ஒரு நூல் சிக்கிவிட்டதென்றால் மிக எளிதாக ஆர்வம் இழந்துவிடுவான். பிறகு புத்தகங்களின் திசைக்கே திரும்ப மாட்டான். ஆகவே, எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது என்ற வழிகாட்டல் மிக முக்கியம். போலவே வாசிப்பை ஊக்குவிக்கும் ரிவார்டுகளும் மிக அவசியம்.

கவனச்சிதறல்கள் – இணையம், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம்- விளக்கம் தேவையில்லை.

கல்வி சார்ந்த அழுத்தங்கள் – இன்று கல்லூரிகளிலேயே ஏராளமான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிலபஸ்களை முடிக்கவே நேரம் போதாத நிலையில் சில கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அன்றாடம் மாணவர்கள் விரல் ஒடியும் வண்ணம் அசைன்மெண்ட் கொடுக்கும் பேராசிரியர்களும் உண்டு. 

இதையெல்லாம் தாண்டிய ஒரு பெரிய காரணம் உண்டு. அதன் பெயர் ‘சுவாரஸ்யமின்மை’.

நமக்கு ஏன் புத்தகங்கள் சுவாரஸ்யமாக இல்லை?

பல இடங்களில் மாணவர்கள் என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். “சார் நான் வாசிக்கணும்னுதான் ஆரம்பிப்பேன். ரெண்டு பக்கம் வாசிச்சதும் தூக்கம் வந்துடுதான் சார்.” இன்னும் சில பேர், “எதையாவது வாசிச்சாலே கடுப்பா இருக்குது சார்” என்றார்கள். உண்மைதான். பொதுவாக வாசிப்பு செயல்பாட்டாளர்கள் காண மறுக்கும் ஓர் உண்மை இது. புத்தக வாசிப்பு குறைந்து போனதற்கு சுவாரஸ்யமின்மைதான் முதன்மையான காரணம். ஆனால் அது புத்தகங்களின் பிழை இல்லை.

அம்மா அன்றாடம் காலையில் எழுந்து அவசர அவசரமாக நமக்குக் காலை உணவை சமைத்துத் தருகிறார். அதை நாம் சாப்பிட்டு முடிப்பதற்குள் மதியம் கல்லூரியில் சாப்பிடுவதற்கான உணவையும் தயார்செய்து லஞ்ச் பாக்ஸில் அடைத்துத் தருகிறார். பெரும்பாலும் அது லெமன், தக்காளி, தயிர் சாதங்களாகவோ, கிச்சடியாகவோ, சேவையாகவோ, பிரெட் ஆம்லெட்டாகவோ, அரிசி பருப்பு சாதமாகவோ, உப்புமாவாகவோ அவசரக் கோலத்தில் தயாரிக்கப்பட்ட எளிய உணவாகத்தான் இருக்கும். மதியம் பசித்த வயிறுடன் சோற்றுப் பொட்டலத்தைத் திறக்கையில் அவசரமாகச் சமைக்கப்பட்ட வழக்கமான மெனு முகத்திலடிக்கும். 

https://glasbergen.b-cdn.net/wp-content/gallery/digilife/toon918.gif

இத்துடன் ஒப்புநோக்க பீட்ஸா கவர்ச்சியானது, வண்ணமயமானது, சூடானது, சுவையானது. ஜூஸியான அதன் சீஸ்… ஹா எழுதும்போதே என் நாக்கில் ருசி ஊறுகிறது. இரசித்து ருசித்துப் புசிக்க போதுமான அத்தனைத் தகுதிகளும் பீட்ஸாவிற்கு இருக்கிறது. இல்லையென்றால் இத்தாலியின் ஏதோ ஒரு கிராமத்தில் உருவான பண்டம் உலகம் முழுக்க குடை விரிக்க முடியாது. தமிழ்நாட்டில் ஊருக்கு நூறு கடைகள் எனும் வீதத்தில் பீட்ஸா கடைகள் கிளை பரப்பியுள்ளன. 

ஒரேயொரு கேள்விதான். அம்மாவின் அவசர லஞ்சுடன் ஒப்புநோக்க பீட்ஸா சுவையானதுதான். ஆனால் தொடர்ச்சியாக ஒரு நாளின் மூன்று வேளையும் பீட்ஸாவையே உணவாகக் கொண்டால் என்ன ஆவோம்? செத்துப் போவோம் என நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. நீங்கள் நிஜ வாழ்வில் அதைத்தான் செய்கிறீர்கள். உங்கள் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸாப் ஸ்டேட்டஸ் டைம்லைன்களோடு ஒப்புநோக்க புத்தகங்கள் சற்று சுவாரஸ்யம் குறைவானவைதான். ஒரு நடிகனின் சிக்ஸ்பேக் புகைப்படம், புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகிறது, நடிகையின் மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட், விளையாட்டு வீரனின் புதிய சிகையலங்காரம், நகைச்சுவை மீம்ஸூகள், அழகிகளின் டிக்டாக்குகள், காமெடி வீடியோக்கள், கேலிகள், கிண்டல்கள், நக்கல்கள், உலகின் ஏதோ மூலையில் நிகழும் வேடிக்கை வினோதங்கள், நண்பர்களின் சுற்றுலா புகைப்படங்கள் என நொடிக்கு நொடி நுரை கொப்பளித்தபடி ‘என்னைக் கவனி, என்னைக் கவனி’ என ஒளியாகவும் ஒலியாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை ஊடகமாக்கி, தன்னைப் பண்டமாக்கி, தன்னைக் கோமாளியாக்கி, தன்னை அரசியல் நோக்கராக்கி இந்த உலகில் முன்வைத்துக்கொண்டே இருக்கிறான். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இவற்றை விடாது பார்த்துக்கொண்டே இருப்பது மூளைக்கு டோபோமைன் ஏற்றிக்கொள்வது போல. ஒரு புதிய தகவல் என்பது மூளையின் நுட்பமான பகுதியைச் சென்று தீண்டும் டோபோமைன். ஆகவேதான் சமூக ஊடகங்களில் புழங்குபவர்களுக்கு ஒரு ஆரம்பகட்ட உற்சாகம் கிடைக்கிறது. புத்துணர்ச்சி கிடைப்பதான உணர்வு ஏற்படுகிறது. தாங்கள் பிறறியாத பலவற்றையும் தெரிந்தவர்களான ஒரு மயக்கத்தையும் உண்டாக்குகிறது. அந்த மெல்லிய ஆணவம் நாள்பட நாள்பட கெட்டிப்பட்டுப் போகிறது. எதையும் ஊன்றிக் கவனிக்கவோ நுட்பமாகப் புரிந்துகொள்ளவோ இயலாத மூளைச்சோம்பல் கொண்ட நோயாளி ஆக்குகிறது. குடியைவிடவும் பெரிய பிரச்சினை இது. இப்போதே இணைய அடிமைகளுக்கான உள ஆலோசனை நிபுணர்கள் பெருகிவிட்டார்கள். எதிர்காலத்தில் நெட்டிஸன் மறுவாழ்வு மையங்கள் நிச்சயம் அமையக்கூடும். 

https://i.pinimg.com/474x/31/4a/c4/314ac4aec1717b8f06d2cd2d7dbeb489--social-media-humor-comic-strips.jpg

ஓரொரு நிமிடமும் பரபரப்பு கூட்டும் சமூக வலைதளங்களுக்குப் பழகிய ஒருவர் புத்தகங்களைப் பொறுமையாக வாசித்தல் இயலாத காரியம். அடுத்தத் தெருவில் ஆடல் பாடல் நிகழும்போது ஒருவன் வீட்டில் அமர்ந்து பாராயணம் செய்ய முடியுமா என்ன? புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நம்மை உள்ளிழுத்துக்கொள்ளும். அதற்குரிய பொறுமையையும் மரியாதையையும் நாம் புத்தகங்களுக்கு வழங்க வேண்டும். இரண்டு பக்கம் படிப்பதற்குள் போனை எடுத்து நோட்டிபிகேஷன்ஸ் பார்ப்போமானால், நமக்கு நோய் முற்றிவிட்டது என்று பொருள். நான்கைந்து பக்கங்கள் படிப்பதற்குள் எழுந்து சென்று போனை நிரடிப்பார்க்கும் ஆவலை என்னால் கட்டுப்படுத்தவே இயலவில்லை எனச் சொல்லும் நண்பர்கள் எனக்குண்டு. 

நூல்கள் அளிக்கும் சுவாரஸ்யம் என்பது ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் வாழ்க்கை வாழும் நிகர் அனுபவம். வாழ்நாள் முழுக்க உடன் வரக்கூடியது. வாழ்வில் உக்கிரமான தருணங்களில் மனதின் அடியாழத்திலிருந்து எழுந்து வருவது. நாம் வாழும் வாழ்க்கைக்கு மேலும் நுண்ணிய அர்த்தங்களைச் சேர்ப்பது. இந்த வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கும் பெருக்கிக்கொள்வதற்கும் வழிகாட்டுவது. டிவைஸ்கள் அளிக்கும் சிற்றின்பங்கள் ஒருபோதும் இத்தகைய பேரின்ப அனுபவங்களுக்கு இணையாகாது.

டிவைஸ்களுக்கு எதிரான மனோபாவமா?

மிக மிகப் பழைய மனோபாவம் கொண்ட ஒருவனின் சொற்களாக இந்தக் கட்டுரை புரிந்துகொள்ளப்படும் அபாயம் இருக்கிறது. எகிப்து பிரமிடு ஒன்றிலிருந்து எழும்பி வந்த மம்மிக்களுள் ஒன்று பல நூற்றாண்டுகள் பழைய தொழில்நுட்பமான புத்தகங்கள், நாளிதழ்கள் என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறது எனத் தோன்றலாம். ஆனால் நான் ஒருபோதும் தொழில்நுட்பத்திற்கு எதிரானவன் அல்ல. தொழில்நுட்பத்தை எதிர்ப்பவன் முழுமூடன். தொழில்நுட்பம் ஆயிரம் பகாசுரக் கரங்களுடன் வரலாற்றை உருமாற்றிக்கொண்டிருக்கும் ஒன்று. அத்துடன் மோதி வெல்லும் வல்லமை இறைவனுக்கும் இல்லை. நான் மீண்டும் மீண்டும் இளைஞர்களிடம் வலியுறுத்திச் சொல்வது ஒன்றைத்தான். தொழில்நுட்பத்தை உங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தினால் நீங்கள் அதை உபயோகிக்கிறீர்கள் என்று பொருள். தொழில்நுட்பம் உங்களைப் பயன்படுத்திக்கொண்டிருந்தால் அதன் பொருள் என்ன? நீங்கள் வெறும் கச்சாப்பொருள். அவ்வளவே. உங்களை அரைத்து துப்பிவிட்டு அது அடுத்த ஆளை நோக்கிச் சென்றுவிடும். 

https://bloximages.newyork1.vip.townnews.com/standard.net/content/tncms/assets/v3/editorial/8/05/8052e69d-c3ec-57a1-8da2-5e65789ddc2b/5b6cc1d405616.image.jpg?resize=1200%2C894

டிவைஸ்களின் பயன்பாட்டைக் குறித்து எச்சரிக்கும் ஆய்வுகள் உலகெங்கும் வெளியானபடி இருக்கின்றன. அவையெல்லாம் உங்களை வந்தடைகிறதா என்பது அச்சமாக இருக்கிறது. ஒரு டைப்ரைட்டரில் டைப் அடிக்கும் வேகத்தில் காரணகாரியம் இன்றி போனில் டைப் செய்துகொண்டிருக்கும் கம்பல்சிவ் டெக்ஸ்டிங் கற்றல் குறைபாட்டினை உருவாக்குகிறது. இந்தப் பிரச்சினை ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். காதில் கருஞ்சரடு மாட்டி கல்லூரிக்கு வருகையிலும் போகையிலும் ஹாஸ்டலிலும் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களின் காதில் பாதகம் விளைவிக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மிகக் குறுகிய காலத்தில் செவி கேட்கும் திறனை இழக்கிறது. அதை மீட்டெடுக்க வைத்தியத்தில் வழியே இல்லை. காது கேட்கும் கருவிதான் மாட்ட வேண்டும். போன் அடிக்காத போதே அடிப்பது போன்ற உணர்வு அடிக்கடி எழுவது, பேட்டரி டவுண் ஆகும்போது உருவாகும் மன உளைச்சல், இரவிரவாகப் போன் பயன்படுத்துவதால் உருவாகும் தூக்கமின்மை, தூக்கமின்மையின் விளைவால் உடல் பருமன், செரிமானப் பிரச்சினை, மன அழுத்தம், மாதவிடாய்க் கோளாறு, நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள். கவனமின்மை, உடல் சோர்வு, நேரத்தை நிர்வகிக்க முடியாமல் போவது போன்ற பல உப விளைவுகள். இவற்றைப் பற்றிய கவனம் நமக்கு இருக்கிறதா?

மேற்கண்டவற்றை விடவும் அபாயகரமான இரு உளவியல் சிக்கல்கள் அதிகரித்து வருவதைப் பார்க்கிறேன். ஒன்று ‘ஷேரிங் பெருமாள்களின்’ ஆளுமைக் குறைபாடு. எப்போதும் எதையாவது நண்பர்களுடனும் சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துகொண்டேயிருப்பது. இந்த உளநிலையைப் பற்றி பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தனக்கென ஒரு ஆளுமை இல்லாதவர்கள், இல்லாத ஒரு போலி பிம்பத்தை நண்பர்கள் மத்தியில் கட்டமைக்கவே ஷேரிங் பெருமாள்களாக மாறுகிறார்கள் என்கிறார்கள் உள நிபுணர்கள். நான் எப்படிப்பட்டவன் தெரியுமா? எப்படிப்பட்ட விஷயங்கள் என்னை வந்து சேர்கின்றன தெரியுமா? உங்களுக்கு இதைத் தெரியப்படுத்தி வழிநடத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது என ரியல் செல்ஃபுக்குப் பதிலாக ஒரு சோஷியல் செல்ஃபை உருவாக்கும் முயற்சிதான் இது. இதிலிருந்து வெளியேறுவதற்கு ஒரு வழி இருக்கிறது. நீங்களே சிந்தித்து உருவாக்காத ஒன்றை ஒருபோதும் பரப்பாதிருப்பது. கருத்தோ, பாடலோ, டிக்டாக் வீடியோவோ, மீம்ஸோ – நீங்கள் உருவாக்கியிருந்தால் நீங்கள் ஒரு படைப்பாளி. அதை உலகத்தோடு பெருமையோடு பகிர்ந்துகொள்ளுங்கள். எவனோ உருவாக்கிய ஒன்றை அது எவ்வளவு முக்கியமானதெனினும் பரப்புவதில்லை என்பதே சரியான நிலைப்பாடு. 

இன்னொரு சிக்கல். சமூக வலைதளத்தில் நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டிருப்பது சக மனிதர்களின் வாழ்க்கைத் தருணங்களை. ஒருவர் வீடு வாங்கியிருக்கிறார், இன்னொருவர் புதிய காருடன் படம் போடுகிறார், போட்டியில் வென்றிருக்கிறார், விருது பெற்றிருக்கிறார், குடும்பத்தோடு வெளிநாட்டுக் கடற்கரையில் எடுத்த புகைப்படம், வெற்றி பெற்ற திரைப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டி, பணி உயர்வு, குழந்தைகள் போட்டிகளில் வென்ற செய்திகள், பண்டிகைப் பரிசுகள், குடும்பக் கொண்டாட்டங்கள், காதலியுடன் பொன்னான தருணம், அழகிய தோழியர் புடைசூழ செல்ஃபி, திருமண போட்டோ ஷூட்டுகள் எனப் பெரும்பாலும் களியாட்டுகள். நம்முடைய வாழ்வில் இத்தனை கொண்டாட்டங்கள் இல்லை. நாம் விஜயராமபுரத்திலிருந்து கிளம்பி சாத்தான்குளம் வந்து சைக்கிளை பஸ் ஸ்டாண்டில் போட்டுவிட்டு நாசரேத் பஸ் ஏறி நிறுத்தத்தில் இறங்கி காலேஜ் வரை நடந்து வகுப்பு முடிந்ததும் பழையபடி அதே வழியில் திரும்பும் அன்றாடம் உடையவர்கள். பெரிய வர்ண வேறுபாடுகளற்ற தினசரி வாழ்க்கை நம்முடையது. அடுத்தவனின் கொண்டாட்டத்தையும் வெற்றியையும் மட்டுமே சதாசர்வகாலமும் பார்த்துக்கொண்டிருப்பது உருவாக்கும் மன அழுத்தத்தைப் பற்றி நாம் யோசிப்பதே இல்லை. சாதாரணர்களின் வாழ்வில் திருமணம், வீடு, கார், பதவி உயர்வு, விருது என்பன போன்ற அசாதாரண சம்பவங்கள் நான்கைந்து தடவைதான் சாத்தியம். நாம் வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா எனும் எண்ணம் நம்மைப் போன்ற சாதாரணர்களுக்குள் எழுவது இயற்கை. நமக்கு நாமே தாழ்வுணர்ச்சியை ஏன் உருவாக்கிக்கொள்ள வேண்டும்?

https://www.exoplatform.com/blog/wp-content/uploads/2018/06/800-2.png

இந்த நூற்றாண்டின் இந்தத் தருணத்தில் இருவகை மனிதர்கள்தான் உள்ளார்கள். ஒளிரும் திரைக்கு உள்ளே இருப்பவர்கள். திரைக்கு வெளியே இருப்பவர்கள். உள்ளே இருப்பவர்கள் வென்றவர்கள். சாதனையாளர்கள். எதையாவது ஒன்றைச் செய்து காண்பித்தவர்கள். ஆகவே வெளியே நிற்கும் நாம் அவர்களை வாய்பிளந்து பார்த்துக்கொண்டே இருக்கிறோம். நீ உள்ளே நிற்கப் போகிறாயா, வெளியே நிற்கப் போகிறாயா என்பதைக் கேட்டுக்கொள். உள்ளே நிற்க விரும்பினால், உலகமே உன்னைக் கவனிக்க விரும்பினால் நீ ஒருபோதும் வெளியே நிற்காதே. உன் ஆர்வம் செல்லும் திசையை நோக்கி விசையோடு செல். இன்று தன் துறையில் முழு அர்ப்பணிப்போடு செயலாற்றி தன்னை இழப்பவர்கள் மிகவும் குறைவு. கபீரின் கவிதை ஒன்று.

செய்யும் ஒன்றை முழுதாய்ச் செய்.
எல்லாம் செய்தவனாவாய்.
இருக்கும் எல்லாவற்றையும்
செய்ய நினைத்தால்
அந்த ஒன்றையும் இழந்திடுவாய்
பூக்களும் பழங்களும் தேவையெனில்

நீ நீருற்ற வேண்டியது வேருக்கே1.

நான் வீடியோ பார்க்கிறேன் போதாதா?

“சார் என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க, எனக்கு வாசிக்க மட்டும் வராது சார்” என்பார்கள் சிலர். ஏன், கண் பார்வை சரியில்லையா என்பேன் நான். “இல்ல சார், எனக்கு என்னமோ புக்ஸ் எனக்கான மீடியம் இல்லைன்னு தோணுது சார்” என்பார்கள். ஏன், எழுத்தறிவு இல்லையா என்பேன் நான். “சார், நான் வாசிக்கறதுதான் இல்லையே தவிர நிறைய வீடியோஸ் பார்ப்பேன் சார். ஆடியோ புக்ஸ்லாம் கேட்பேன் சார்” என்பவர்களிடம் சரி, நீங்கள் சமீபத்தில் கேட்ட புதிய சிந்தனையை வெளிப்படுத்தும் உரையைக் குறிப்பிடுங்கள் என்பேன். நீங்கள் கேட்ட ஆடியோ புத்தகம் ஒன்றின் மையக்கருத்தை ஒரு பத்து நிமிடம் பேசுங்கள் என்பேன். பெரும்பாலும் ஓடிவிடுவார்கள்.

https://www.gannett-cdn.com/presto/2020/04/25/PEVC/f5ddcf0a-fb11-4029-9592-b4ff0d40eeb0-94144093_2888251057918472_104666952844181504_o.jpg

வீடியோக்களும் ஆடியோக்களும் வாசிக்க இயலாத முதியவர்கள், நோயாளிகள், பார்வைத் திறனற்றவர்கள், பாமரர்கள், நெருக்கடியான பணிகளில் இருப்பவர்களுக்காக உருவானவை. அறிவுத் தேட்டம் உள்ள ஒருவன், தனது அறிதலின் ஒரு வழியாக, தான் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த வேண்டுமே தவிர இதைப் பெருவழிப்பாதையென கருதிவிடக்கூடாது. வீடியோ மட்டுமே பார்த்து, ஃபேஸ்புக்கில் மட்டுமே வாசித்து அறிஞர் ஆன ஒருவரை நானும் என் நண்பர்களும் கடந்த பத்தாண்டுகளாகத் தேடிக்கொண்டிருக்கிறோம். இன்னும் சிக்கவில்லை. வீடியோக்களுக்கு நினைவில் வாழும் வீரியம் இருப்பதில்லை. சில திறன்களை மேம்படுத்திக்கொள்ள வீடியோக்கள் உதவலாம். 

ஒளிரும் திரைகளின் இன்னொரு பிரச்சினை- அவை கற்பனையை கட்டுப்படுத்துகின்றன. ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘பொன்னியின் செல்வன்’ வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் உருவாவது ஒவ்வொரு வந்தியத்தேவன். திரையில் வந்தியத்தேவனாக நடிகர் விக்ரம் நடிக்கிறார் என்று வையுங்கள். அதைப் பார்க்கும் ஒவ்வொருவருக்குமே அவர் ஒரே வந்தியத்தேவன்தான். கற்பனைச் சிறகு எல்லையில்லாதது. ஒரு நாவலை வாசிக்கையில் உங்கள் அகத்தில் விரியும் சித்திரம் மிக மிக விரிவானது. நீங்கள் பார்க்கும் நிலம், மனிதர்கள், தாவரங்கள், இயற்கைக் காட்சிகள், உணர்ச்சிகள் அத்தனையும் புதியது, அந்தரங்கமானது. திரைகள் தொழில்நுட்பத்தால் செறிவாக்கின ஒற்றை அனுபவத்தை மட்டும்தான் தர இயலும்.

*

குறிப்புகள்:

1நூல்: புன்னகைக்கும் பிரபஞ்சம், மொழிபெயர்ப்பு- செங்கதிர்.

“வாசிப்பது எப்படி?” நூலிலிருந்து ஒரு பகுதி.

 

 

https://tamizhini.in/2021/06/24/நாம்-எதனால்-வாசிப்பதில்ல/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு  சிறு கதைகள்  சிறு நாவல்கள் ஆராய்ச்சி  கட்டுரைகள் கடந்து  வாசிக்க வராது

பொறுமையில்லை

ஆனால்  எனது  வீட்டில் 2  பேர்  புத்தக பூச்சிகள்

அதிலும்  கடைசி  மகள் அது  தான் வாழ்க்கையே...

இதுவும்  பிறந்ததில் இருந்து ஒருவித தயார்  படுத்தல்  தான்

அதனால் தான் வைத்தியதுறையில்  படிக்க  உதவுகிறது?

அண்மையில் வீட்டில்  சில வேலைகளை  செய்தபோது

பெரிய  மகன்  படித்த  புத்தகங்களை பார்த்து  ஏங்கிப்போனேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, விசுகு said:

இதுவும்  பிறந்ததில் இருந்து ஒருவித தயார்  படுத்தல்  தான்

புலம்பெயர் நாடுகளில் சிறுவயதில் இருந்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றார்கள். பொதுப்போக்குவரத்துப் பயணங்களில் வாசிக்காதவர்கள் மிகவும் குறைவு.

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாடசாலைகளில் புத்தகம் படிப்பதை ஊக்குவிக்கும் நிலை இல்லை. அதனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் படிப்பவர்கள் குறைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும் பழக்கமாவது கணனி , ஸ்மார்ட்போன் வரையாவது இன்னும் எஞ்சியிருக்கிறது,

எழுதும் பழக்கம்தான் ஏறக்குறைய சுத்தமா இல்லாமலே போய்விட்டது. மாணவர்களை தவிர பலரிடம் அது விடைபெற்றுபோய் ரொம்ப காலம்.

பலர் கடைசியாக கடிதம் எழுதி பல வருசங்கள் இருக்கும், கையெழுத்துக்காவது ஓரளவு பயன்பட்ட எழுதும் பழக்கம் இப்போ அதுகூட அடிக்கடி பயன்படுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கிருபன் said:

புலம்பெயர் நாடுகளில் சிறுவயதில் இருந்து வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கின்றார்கள். பொதுப்போக்குவரத்துப் பயணங்களில் வாசிக்காதவர்கள் மிகவும் குறைவு.

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாடசாலைகளில் புத்தகம் படிப்பதை ஊக்குவிக்கும் நிலை இல்லை. அதனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் படிப்பவர்கள் குறைவு.

யாழ்பாணத்தில் இருக்கும் அளவுக்கு ஊருக்கு ஊர் சிறிய வாசிகசாலைகள் உள்ள ஊரை, நாட்டை நான் இன்னமும் காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, valavan said:

வாசிக்கும் பழக்கமாவது கணனி , ஸ்மார்ட்போன் வரையாவது இன்னும் எஞ்சியிருக்கிறது,

எழுதும் பழக்கம்தான் ஏறக்குறைய சுத்தமா இல்லாமலே போய்விட்டது. மாணவர்களை தவிர பலரிடம் அது விடைபெற்றுபோய் ரொம்ப காலம்.

பலர் கடைசியாக கடிதம் எழுதி பல வருசங்கள் இருக்கும், கையெழுத்துக்காவது ஓரளவு பயன்பட்ட எழுதும் பழக்கம் இப்போ அதுகூட அடிக்கடி பயன்படுவதில்லை.

கடிதம் எழுதும் கலை அழிகிறது என்பதை ஏற்கும் அதேவேளை எழுதுவதே மொத்தமாக அழிகிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன்.

நான், @Maruthankerny எல்லாம் பந்தி பந்தியா இப்போ யாழில் எழுதுவதை போல் 2000 த்துக்கு முன் சாத்தியமில்லைதானே?

 வாசிப்பது புத்தகத்தில் இருந்து இலந்திரனியல் சாதனதுக்கு தாவியது போல எழுத்தும் தாவிவிட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கடிதம் எழுதும் கலை அழிகிறது என்பதை ஏற்கும் அதேவேளை எழுதுவதே மொத்தமாக அழிகிறதா என்றால் இல்லை என்றே சொல்வேன்.

நான், @Maruthankerny எல்லாம் பந்தி பந்தியா இப்போ யாழில் எழுதுவதை போல் 2000 த்துக்கு முன் சாத்தியமில்லைதானே?

 வாசிப்பது புத்தகத்தில் இருந்து இலந்திரனியல் சாதனதுக்கு தாவியது போல எழுத்தும் தாவிவிட்டது.

 

யாழ் களம் இல்லை என்றால் எனது பாதையும் மாறிப்போயிருக்கலாம் 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் இருக்கும் அளவுக்கு ஊருக்கு ஊர் சிறிய வாசிகசாலைகள் உள்ள ஊரை, நாட்டை நான் இன்னமும் காணவில்லை.

அந்த வாசிகசலைகளில் பலவற்றில்  ஒரு நூலை ஆழமாக வாசிக்க கூடிய அமைதியான சூழ்நிலை உண்டா?  பொழுது போக்க அரட்டையடிக்க பலர் கூடும் இடமாக உள்ளதா?

நான் அறிய யாழ் பொது சன நூலகத்தில் மட்டும் தான் அவ்வாறான அமைதியான சூழ்நிலை இருந்தது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

ஆனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பாடசாலைகளில் புத்தகம் படிப்பதை ஊக்குவிக்கும் நிலை இல்லை. அதனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் படிப்பவர்கள் குறைவு.

புத்தகங்கள் வாசிப்பதற்கு ஆர்வம் இருக்க வேண்டும்
ஆர்வம் இருந்தால் சிறு சிறு இடைவெளிகளில் கூட வாசிக்கலாம்

இன்றைய காலத்தில் புத்தகங்கள்  வாசிக்கும்  ஆர்வம் குறைவதற்கான முதற்காரணி பாடசாலைக் கல்விமுறையே ஆகும் .
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான்
என்ற வாசகம் எங்கள் இளம்பிராயத்தில் மனதில் நிலைத்து நின்றது

இன்றைய காலத்தில்  இறுதி பரீடசையை கடந்துவிட்டால் காணும் என்ற நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளார்கள்
வாசிப்பதற்கான நேரம் அவர்களுக்கு கிடைப்பது அரிதாகவே இருக்கின்றது   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

அந்த வாசிகசலைகளில் பலவற்றில்  ஒரு நூலை ஆழமாக வாசிக்க கூடிய அமைதியான சூழ்நிலை உண்டா?  பொழுது போக்க அரட்டையடிக்க பலர் கூடும் இடமாக உள்ளதா?

நான் அறிய யாழ் பொது சன நூலகத்தில் மட்டும் தான் அவ்வாறான அமைதியான சூழ்நிலை இருந்தது.  

அரட்டை அடிப்பதற்கான இடமாக இருந்தாலும் தினசரிகள், விகடன் போன்ற சஞ்சிகைகள் கிடைக்கும் இடமாகவும் இருந்தது. தவிரவும் ஒவ்வொரு பிரதேச சபையிலும் ஒரு நூலகம் இருந்தது. அங்கே மூச்சு விட முடியாது. 

எனது காலத்தில் யாழ் நூலகத்துக்குள் போகமுடியாது. ஒன்றில் போரபாயம் அல்லது மிதிவெடி அபாயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

ஒரு நாவலை வாசிக்கையில் உங்கள் அகத்தில் விரியும் சித்திரம் மிக மிக விரிவானது. நீங்கள் பார்க்கும் நிலம், மனிதர்கள், தாவரங்கள், இயற்கைக் காட்சிகள், உணர்ச்சிகள் அத்தனையும் புதியது, அந்தரங்கமானது. திரைகள் தொழில்நுட்பத்தால் செறிவாக்கின ஒற்றை அனுபவத்தை மட்டும்தான் தர இயலும்.

உண்மைதான், நீங்கள் ஒரு நாவலை வாசிக்கும் பொழுது அதில் வரும் மனிதர்களாக மாறிவிடுவீர்கள், நீங்களும் அவர்களைப்போலவே சிரிப்பீர்கள், கண்ணீர்விடுவீர்கள், காடு மலை எல்லாம் போவீர்கள், எந்த காலகட்டத்தில் அந்த புத்தகம் எழுதப்பட்டதிற்கு அமைய அந்த இடங்களை மனக்கண் கொண்டு வர நாவல்களுக்கு மட்டுமே முடியும்.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவிரவும் தனி மனிதர்கள் தத்தம் வீடுகளில் நூலகம் வைக்கும் பழக்கம் இருந்தது. எனது சித்தப்பா முறையானவர் இப்படி வைத்திருந்தார். அதே போல் எங்கள் ஊரில் ஒரு அக்காவும் அவர்களது மாட்டு தொழுவத்தை (மாடு வித்தபின்) பூசி மெழுகி பல அரிய சிறுவர் புத்தகங்கள்  வைத்து ஒரு வாசிகசாலை உருவாக்கினார்.

டிவி, சீரியல், படம், பாட்டு, மின்சாரம் ஈறாக இல்லாத காலத்தில் வாசிப்பு மட்டுமே ஒரே பொழுது போக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அதனால் பாடப்புத்தகங்களுக்கு அப்பால் படிப்பவர்கள் குறைவு.

அதனால்தான் இவ்வளவு குண்டு சட்டி நண்டு பிடி இழுவையும்  என்று நினைக்கிறேன் .

4 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் இருக்கும் அளவுக்கு ஊருக்கு ஊர் சிறிய வாசிகசாலைகள் உள்ள ஊரை, நாட்டை நான் இன்னமும் காணவில்லை.

இன்னும் எங்களூரில் கோசான் உங்களை சொல்லவில்லை வாசிகசாலைக்கும் நூலகத்துக்கும்  வித்தியாசம் தெரியாத அறிவாளிகள் உள்ளனர் .

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, பெருமாள் said:

அதனால்தான் இவ்வளவு குண்டு சட்டி நண்டு பிடி இழுவையும்  என்று நினைக்கிறேன் .

இன்னும் எங்களூரில் கோசான் உங்களை சொல்லவில்லை வாசிகசாலைக்கும் நூலகத்துக்கும்  வித்தியாசம் தெரியாத அறிவாளிகள் உள்ளனர் .

🤣

உங்கட குரோய்டன் லைப்ரிரரி தரமான லைப்ரரிதான். முன்பு ஒரு வேலை செய்தனான் - இடையில் 3 மணி நேர வெயிட்டிங். லைபிரரிதான் தஞ்சம். நிறைய தமிழ் புத்தகங்களும் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, valavan said:

எழுதும் பழக்கம்தான் ஏறக்குறைய சுத்தமா இல்லாமலே போய்விட்டது. மாணவர்களை தவிர பலரிடம் அது விடைபெற்றுபோய் ரொம்ப காலம். 

இந்த எழுதும் பழக்கம், மாணவர்களிடையும் குறைந்துவிட்டது.. அனேகமான assignments, onlineலேயே கொடுக்கப்படுவதால், grammar check, spelling எல்லாமே autocorrect இருப்பதால் பரீட்சையில் தடுமாறுவார்கள் என்ற நிலையும் உள்ளது.. 

எங்களுக்கு இந்த வசதிகள் இல்லாதமையால் வாசித்து, எழுத வேண்டிய கட்டாயம் இருந்தமையால் பெரிய பெரிய பந்திகளாக இன்றுவரை எழுதக்கூடியதாக உள்ளது.. ஆனால் இன்றைய மாணவர்களிடம் அது இல்லை.. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

உங்கட குரோய்டன் லைப்ரிரரி தரமான லைப்ரரிதான். முன்பு ஒரு வேலை செய்தனான் - இடையில் 3 மணி நேர வெயிட்டிங். லைபிரரிதான் தஞ்சம். நிறைய தமிழ் புத்தகங்களும் இருக்கு.

நான் அங்கு போவதில்லை நாம் போகும்  வழமையான இடம்  Boston Spa British Library நூலகத்தில் தான் .🤣

பகிடிக்கு அடிச்சு விடுவம்  எல்லாம் உண்மையாக்க கூடாது பாஸ் இந்த தொழில் நுட்ப்பம் விரும்பிய நூல்களை கிண்டிலில்  தரும்போது அங்கு ஏன் போவன் .அப்படியும் புதியவை அறியனும்  என்றால்https://www.magzter.com/ மாதம் 10 பவுன் தான் உலகில் உள்ள அனைத்து வாரமாத வருஷ சஞ்சிகைகள் திகட்ட திகட்ட தேன்  அடைபோல் இருக்குது .

Link to comment
Share on other sites

8 hours ago, tulpen said:

அந்த வாசிகசலைகளில் பலவற்றில்  ஒரு நூலை ஆழமாக வாசிக்க கூடிய அமைதியான சூழ்நிலை உண்டா?  பொழுது போக்க அரட்டையடிக்க பலர் கூடும் இடமாக உள்ளதா?

நான் அறிய யாழ் பொது சன நூலகத்தில் மட்டும் தான் அவ்வாறான அமைதியான சூழ்நிலை இருந்தது.  

நீங்கள் திருநெல்வேலி இந்து இளைஞர் சங்க வாசிகசாலைக்கு வந்துள்ளீர்களா அதனை நிர்வகித்த பெரியவர்கள் அங்கு குண்டூசி விழுந்தாலும் சத்தம் கேட்கும் அளவிற்கு வரும் வாசகர்கள் அமைதியைப் பேணும்படியான நிலைக்கு அதனை வைத்திருந்தார்கள். அரசு இருந்தாலும் நல்ல ஊர்ப்பெரியவர்களின் ஆட்சியைக் கொண்ட கிராமங்கள் நன்றாகவே இருந்தன.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

நான் அங்கு போவதில்லை நாம் போகும்  வழமையான இடம்  Boston Spa British Library நூலகத்தில் தான் .🤣

பகிடிக்கு அடிச்சு விடுவம்  எல்லாம் உண்மையாக்க கூடாது பாஸ் இந்த தொழில் நுட்ப்பம் விரும்பிய நூல்களை கிண்டிலில்  தரும்போது அங்கு ஏன் போவன் .அப்படியும் புதியவை அறியனும்  என்றால்https://www.magzter.com/ மாதம் 10 பவுன் தான் உலகில் உள்ள அனைத்து வாரமாத வருஷ சஞ்சிகைகள் திகட்ட திகட்ட தேன்  அடைபோல் இருக்குது .

எனக்கு kindle தரவிறக்கி வாசிப்பது இன்னமும் பிடிக்கவில்லை.. ஒரேயொரு புத்தகத்தை மட்டும்தான் kindle வாசித்தேன்.. அது மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகத்துடன் மேலே வாசிக்கவில்லை.. அவ்வளவுதான் எனக்கும் kindleற்குமான பழக்கம்

Link to comment
Share on other sites

9 hours ago, விசுகு said:

யாழ் களம் இல்லை என்றால் எனது பாதையும் மாறிப்போயிருக்கலாம் 

உண்மை விசுகு அவர்களே! மன நோய்க்கும் ஒரு அருமருந்தாகவே யாழ்களம் வந்தது. அன்று கருத்துக்கள உறவுகள் நெல்லுக்கு இறைத்தார்கள், நெற்பயிர் செழிப்பாக வளர்ந்தது. இன்று நெல்லுக்கு இறைத்த நீரில் புல்லும் புகுந்து செழிப்பாக வளர்ந்துவிட்டது போன்ற ஒரு தோற்றம்..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, கிருபன் said:

 

நாம் எதனால் வாசிப்பதில்லை?

 

இஙகை கருபனுக்கு விழுகிற சாத்துபடியை பாத்தாப் பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டேன்😂

இங்கை கிருபனுக்கு விழுகிற சாத்துப்படியை பாத்தாப் பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு kindle தரவிறக்கி வாசிப்பது இன்னமும் பிடிக்கவில்லை.. ஒரேயொரு புத்தகத்தை மட்டும்தான் kindle வாசித்தேன்.. அது மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகத்துடன் மேலே வாசிக்கவில்லை.. அவ்வளவுதான் எனக்கும் kindleற்குமான பழக்கம்

ஆரம்பத்தில் கையில் ஒரு தட்டை வைத்து படிப்பது ஒரு விதமான அந்நியத்தன்மையை கொடுத்தாலும் இரண்டு மூன்று புத்தகங்களை படித்து முடிந்தபின் கார் ஓடப்பழகிய பின் வரும் மனநிலையை கொண்டுவந்துவிடும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, goshan_che said:

யாழ்பாணத்தில் இருக்கும் அளவுக்கு ஊருக்கு ஊர் சிறிய வாசிகசாலைகள் உள்ள ஊரை, நாட்டை நான் இன்னமும் காணவில்லை.

வாசிகசாலைகளில் பத்திரிகை படிப்பதும், சந்தர்ப்பம் கிடைத்தால் காட்ஸ் விளையாடுவதும் நடக்கும். ஆனால் வணிக சஞ்சிகைகளையும், வணிக நாவல்களையும் தாண்டிய வாசிப்புப் பழக்கம் ஊக்குவிக்கப்படுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, goshan_che said:

உங்கட குரோய்டன் லைப்ரிரரி தரமான லைப்ரரிதான். முன்பு ஒரு வேலை செய்தனான் - இடையில் 3 மணி நேர வெயிட்டிங். லைபிரரிதான் தஞ்சம். நிறைய தமிழ் புத்தகங்களும் இருக்கு.

ஆம். முன்னர் நல்ல புத்தகங்கள் இருந்தன. இப்போது தமிழ்ப்பிரிவு இருக்கின்றதா தெரியவில்லை. 

Tooting,  Croydon, Merton லைப்ரரிகளில் எல்லாம் உறுப்பினராக இருந்திருக்கின்றேன்! எஸ்.பொ. , சுந்தரராமசாமி, ஜானகிராமன் புத்தகங்கள் இருந்தன. 

Merton Civic Centre library மிகவும் பிடித்த இடம். Summer இல் அதன் முகப்புப் பக்கத்தில் இருந்து பிஸியான வீதியை விடுப்புப் பார்த்தபடி revision செய்த நாட்கள் அதிகம்🙂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, சுவைப்பிரியன் said:

இஙகை கருபனுக்கு விழுகிற சாத்துபடியை பாத்தாப் பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டேன்😂

இங்கை கிருபனுக்கு விழுகிற சாத்துப்படியை பாத்தாப் பிறகு வாசிப்பதை நிறுத்தி விட்டேன்.😂

ஓம். அடிக்கடி விழும். 😂 ஆனால் சாத்துபவர்கள் எல்லாம் தங்கள் குழந்தை, குட்டிகள் எல்லாம் படித்து பெரும் சாதனை படைக்கின்றார்கள், படைக்கப்போகின்றார்கள் என்று பெருமைப்படுபவர்கள். அதனால் கூழ்ப்பானைப் பல்லிகளை கண்டுகொள்வதில்லை ஏனென்றால்  இங்குள்ள சாத்துப்படி சாத்துபவர்கள் மிகமிகச் சாதாரணமான ரசனை கொண்டவர்கள்.😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கு kindle தரவிறக்கி வாசிப்பது இன்னமும் பிடிக்கவில்லை.. ஒரேயொரு புத்தகத்தை மட்டும்தான் kindle வாசித்தேன்.. அது மூன்று புத்தகங்களில் ஒரு புத்தகத்துடன் மேலே வாசிக்கவில்லை.. அவ்வளவுதான் எனக்கும் kindleற்குமான பழக்கம்

நான் kindle, iBook இல்தான் அதிகம் படிப்பது. 1000 பக்கங்கள் உள்ள புத்தகங்களை எல்லாம் கையில் தூக்கிவைத்து படிக்கமுடிவதில்லை! அதனாலேயே வாங்கிய சில புத்தங்களை kindle இலும் டவுன்லோட் செய்து படிப்பதுண்டு.

மேலும், சில வரிகளை கொப்பி பண்ணி பின்னர் பாவிக்கவும் வசதி உண்டு. இடைக்கிடை யாழில் பொன்மொழிகளாக தூவவும் உதவும்😜

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.