Jump to content

தமிழ்த் தொலைக்காட்சிகளின் மொழிவஞ்சம் -ஜேம்ஸ் வசந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வேறு எந்த மொழியிலாவது இப்படி பொது ஊடகத்தில் இவ்வளவு மொழிப்பிழைகளும், மொழி வஞ்சகங்களும் நிகழ்கிறதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த “ஐகோர்ட்” என்ற சொல்லில் எப்படி “ஐ”யும் “high”யும் ஒன்றாகும் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

இந்த “ஐகோர்ட்” என்ற சொல்லில் எப்படி “ஐ”யும் “high”யும் ஒன்றாகும் 🤔

எங்களை புகையை சேர்த்து 
"புகைஇரயில்" என்று ஏமாத்திட்டங்களே  

"உறைப்பு"
என்பது தமிழ் சொல்லா?

தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இது புரியுதில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Maruthankerny said:

எங்களை புகையை சேர்த்து 
"புகைஇரயில்" என்று ஏமாத்திட்டங்களே  

"உறைப்பு"
என்பது தமிழ் சொல்லா?

தமிழ்நாட்டு தமிழர்களுக்கு இது புரியுதில்லை 

புகைஇரயிலா? புகையிரத வண்டி என்றுதானே படித்திருக்கிறோம்.. 

அவர்களுக்கு “ காரம்” என்றால்தான் விளங்கும் என நினைக்கிறேன்.. திருகோணமலையில் கொஞ்சகாலம் இருந்திருக்கிறேன் அப்பொழுது  காரமுறுக்கு என்றுதான் உறைப்பு முறுக்கை கூறுவார்கள்.. அதேபோல கொச்சிக்காய்(மிளகாய்) .. இப்படி ஊருக்கு ஊர் வேறுபடும் சொற்களும் உள்ளதுதானே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

புகைஇரயிலா? புகையிரத வண்டி என்றுதானே படித்திருக்கிறோம்.. 

அவர்களுக்கு “ காரம்” என்றால்தான் விளங்கும் என நினைக்கிறேன்.. திருகோணமலையில் கொஞ்சகாலம் இருந்திருக்கிறேன் அப்பொழுது  காரமுறுக்கு என்றுதான் உறைப்பு முறுக்கை கூறுவார்கள்.. அதேபோல கொச்சிக்காய்(மிளகாய்) .. இப்படி ஊருக்கு ஊர் வேறுபடும் சொற்களும் உள்ளதுதானே..

பிரித்து சொன்னாலும் சேர்த்து சொன்னாலும் 
இரயிலுக்கு (ரயிலுக்கு) புகை அடித்து இருக்கிறார்கள் 

புகையாக  இருந்ததால் நாமும் அதை தெளிவில்லாமல்  நம்பி விட்டோம் 

சொற்கள்  ஊருக்கு ஊர் பேச்சு வழக்கில் மாறுவது பொதுவானது 
ஆனால் "உறைப்பு" அல்லது "காரம்" 
முச்சுவைக்குள் அல்லவா இருக்கவேண்டும் 

அல்லது அடிப்படையே பிழையாகிடுமே.
அதனால்தான் கொஞ்சம் நெருடல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2021 at 13:57, ஏராளன் said:

வேறு எந்த மொழியிலாவது இப்படி பொது ஊடகத்தில் இவ்வளவு மொழிப்பிழைகளும், மொழி வஞ்சகங்களும் நிகழ்கிறதா?

நீங்கள் ஹிந்தி கிரிகெட் வர்ணனை கேட்டிருக்கிறீர்களா? ஹிந்தி தெரிய வேண்டியதில்லை. ஆங்கிலம் மட்டும் போதும்🤣.

60ம் ஆண்டு வந்த தமிழ் நாட்டு பேப்பர்கள்களை, சஞ்சிகைகளை எடுத்து பார்த்தால் தெரியும் ஒரு காலத்தில் எவ்வளவு மொழித் திணிப்பு இருந்ததென. 

இவ்வளவு ஏன், ஈழநாடு, ஈழமுரசு, முரசொலி கூட “ஹர்தால் வாபஸ்” என்று சர்வசாதாரணமாக தலைப்பிட்டன. ஆனால் இன்று கடையடைப்பு கைவிடப்பட்டது என எழுதுகிறனர்.

தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் கடந்த 50/60 ஆண்டுகளில் திராவிட இயங்கங்களும், விடுதலை புலிகளும்தான் இந்த மொழி மீட்பை முன்னெடுத்தனர்.

அதன் அடுத்த அஞ்சல் ஓட்டகாரார் சீமான். அவர் பேசும் தூயதமிழும், அதை அவர் இளைஞர் மத்தியில் பரப்புவதும் வரவேற்கபட வேண்டியதே. ஆனால் இதில் மற்றையவர்களின் பங்கு மறக்கப்பட முடியாதது.

 

1971 இல் அமைக்கப்பட்ட தமிழ் வளர்சி துறை.

http://tamilvalarchithurai.com 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் நன்றாக தமிழ் கதைக்கின்றீர்கள்.
நீங்கள் நன்றாக தமிழ் எழுதுகின்றீர்கள்.

இப்படி  ஆங்கிலேயர்களோ பிரான்ஸ்காரர்களோ அல்லது ஜேர்மனியர்களோ தங்களுக்குள் பேசிக்கொள்வார்களா? தெரியவில்லை.

ஆனால் தமிழர்கள் நாங்கள் எமக்குள் பேசிக்கொள்வோம்.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

நீங்கள் நன்றாக தமிழ் கதைக்கின்றீர்கள்.
நீங்கள் நன்றாக தமிழ் எழுதுகின்றீர்கள்.

இப்படி  ஆங்கிலேயர்களோ பிரான்ஸ்காரர்களோ அல்லது ஜேர்மனியர்களோ தங்களுக்குள் பேசிக்கொள்வார்களா? தெரியவில்லை.

ஆனால் தமிழர்கள் நாங்கள் எமக்குள் பேசிக்கொள்வோம்.😂

ஆங்கிலேயர் தமக்குள்ளும் மற்றையவரை பார்த்தும் இப்படி சொல்வதுண்டு. ஆங்கிலத்தின் ஒருவர் கதைக்கும் பாணியை வைத்தே அவர் எந்த வகுப்பு பிரித்தானியர் என்று கணிக்கும் வழக்கமும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

ஆங்கிலேயர் தமக்குள்ளும் மற்றையவரை பார்த்தும் இப்படி சொல்வதுண்டு. ஆங்கிலத்தின் ஒருவர் கதைக்கும் பாணியை வைத்தே அவர் எந்த வகுப்பு பிரித்தானியர் என்று கணிக்கும் வழக்கமும் உண்டு.

கனக்க வேண்டாம் நான்  ஒவ்வொருத்தர் கதைக்கிற தமிழை வைச்சே ஊர் பேர் விலாசம் எல்லாம் சொல்லுவன். தேவையெண்டால் ஆள் இன்னார் எண்டு சொல்லுற அளவுக்கு பாண்டித்தியம் இருக்கு 😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.