Jump to content

ரெட் பைனின் சீனக்கவிதைகள்


Recommended Posts

சீனக்கவிதைகள் குறித்த விரிவான உரை ஒன்றை மொழிபெயர்ப்பாளர் ரெட் பைன் நிகழ்த்தியிருக்கிறார். இவரது இயற்பெயர் பில் போர்ட்டர். (Bill Porter/Red Pine,) அமெரிக்கரான இவர் ஜென் குருவாகச் செயல்பட்டு வருகிறார். இவரது உரை தற்போது இணையத்தில் காணக்கிடைக்கிறது.

porter-bill-red-pine-400x599-1.jpg

பண்டைய சீனக்கவிதைகள் மற்றும் ஞானநூல்களின் மொழிபெயர்ப்பாளரான இவர் வரலாற்றில் சீனக்கவிதைகளின் இடம் குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருகிறார். Burton Watson மொழியாக்கம் செய்த சீனக்கவிதைகளை வாசித்திருக்கிறேன். அவரது தொடர்ச்சியை போலவே ரெட் பைனும் செயல்படுகிறார்.

இந்த உரையில் சீனவரலாற்றுக்கும் கவிதை மரபுக்குமான தொடர்பு, சீனாவில் விவசாயிகள் எவ்வாறு கவிஞர்களைக் கொண்டாடினார்கள். கவிஞர்களுக்கான நினைவிடத்தை உருவாக்கினார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்ட கவிஞர்களின் சங்கம் மற்றும் ஒன்று கூடி கவிதை பாடும் முறை, கவிஞரின் நினைவாக நடக்கும் விழாக்கள். கவிதை வாசிக்கும் நாள். அரச சபையில் இடம்பெற்ற கவிஞர்களின் நிலை பெண் கவிஞர்களின் வாழ்க்கை, மற்றும் கவிஞர்களின் நினைவிடங்களைத் தேடிக் கண்டு பெற்ற அனுபவம் என மிகச் சுவாரஸ்யமான உரையைத் தந்திருக்கிறார்.

trgh.jpg

அவர் கவிதைகளை வாசிக்கும் அழகும் அதற்குத் தரும் விளக்கமும் மிக இனிமையாக உள்ளது.இந்த உரையில் ஒரு மீனவனுக்கும் கவிஞருக்குமான உரையாடல் பற்றிய பகுதி ஒன்றுள்ளது. மிகச்சிறந்த பகுதியது.

ரெட் பைன் உரையில் மூன்று விஷயங்களை முக்கியமாகக் கருதுவேன். ஒன்று சீனாவில் தொகை நூல்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றிய பார்வை. இரண்டாவது கவிஞர்களின் புனைபெயர்கள். மூன்றாவது கவிஞனின் வாழ்க்கையும் பார்வைகளும்.

நமது அகநானூறு, புறநானூறு போலவே சீனாவிலும் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்த கவிஞர்களின் சிறந்த கவிதைகள் ஒன்று திரட்டப்பட்டுத் தொகைநூலாக அரசால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

இதன் முக்கியத் தேவை அரசு விழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது எந்தக் கவிதையை வாசிக்க வேண்டும் என்பதற்கு உதவி செய்வதே. அது போலவே வணிகச் சந்திப்புகள். மற்றும் தூரதேசம் பயணம் செய்கிறவர்கள் ஒன்று கூடும் போது இந்தக் கவிதைகளைச் சொல்லி மகிழ்வதும் இசையோடு பாடுவதும் நல்லுறவின் அடையாளமாக இருந்திருக்கும் என்கிறார்.

ஒருவகையில் கவிதை சொல்வது என்பது ஆளுமையின் அடையாளம். தனது விருப்பம் மற்றும் ரசனையை வெளிப்படுத்தச் சிறந்த கவிதை ஒன்றைச் சொல்வதை அன்றைய சீனர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். தனக்கென தனித்துவமான பார்வையும் உலகை தனது சொந்த மனவெளிப்பாட்டின் படி அணுகுவதும். மொழியை ரசவாதி போல விரும்பும் படி உருமாற்றம் செய்வதும் கவிஞனின் வேலை. அவன் இயற்கையை அப்படியே நகலெடுப்பதில்லை. கண்முன்னே தோன்றும் காட்சிகளின் வழியே அவன் காணாத உலகை,. அறியாத உணர்ச்சிகளை அடையாளப்படுத்துகிறான். தன்னைக் கண்ணாடியில் பார்த்துக் கொள்வது போலவே உலகின் காட்சிகள் வழியாகவும் பார்த்துக் கொள்கிறான். கவிஞனுக்கு உலகிடம் பயமில்லை. ஆனால் அவன் உலகின் இயக்கத்திற்கு எதிர் திசையில் செல்லவே விரும்புகிறான். கவிஞனின் அகம் எதனால் விழித்துக் கொள்ளும் எதைப் புனைவு கொள்ளும் என்பது கண்டறியமுடியாத ரகசியம்.

தொகை நூலின் வழியே கவிதைகள் தேசம் முழுவதும் பரவத்துவங்கின. இது கவிதைகளைப் பண்பாட்டு செயலாக்கியது என்கிறார். அத்துடன் தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கவிதை பயிலரங்குகள். பயிற்சி நிலையங்கள் உருவாகக் காரணமாகவும் அமைந்தன என்கிறார்

தொகை நூல்களின் நோக்கம் இப்படிதானிருக்ககூடும். தமிழில் புறநானூறு யாரால் தொகுக்கப்பட்டது எவர் தொகுப்பித்தவர் என்று தெரியவில்லை. அகநானூற்றினைத் தொகுத்தவர் மதுரை உப்பூரிகுடி கிழார் மகனார் உருத்திரசன்மர். தொகுப்பித்த மன்னன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. ஐங்குறுநூறு தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.

இந்தத் தொகை நூல்களில் இடம்பெற்ற கவிஞர்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டார்கள். எவ்வாறு தொகுப்பு முறை செய்யப்பட்டது. ஒரு கவிஞரின் எந்தக் கவிதையை எப்படித் தேர்வு செய்தார்கள், நானூறு என்ற எண்ணிக்கையை எதை வைத்து முடிவு செய்தார்கள் என்று எந்த விபரமும் கிடைக்கவில்லை. கவிஞர்களுடன் மன்னர்களின் கவிதையும் இடம்பெற்றதை அன்றைய இலக்கியச் சூழல் எப்படி எதிர்கொண்டது. தொகைநூலில் இடம்பெறாத கவிஞர்களின் எதிர்வினை எப்படியிருந்தது என்பது போன்ற கேள்விகள் ஆராய வேண்டியவை.

str.jpg

இது போன்ற கேள்விக்கான பதிலாகவே ரெட் பைன் சீனாவில் தொகுக்கபட்ட கவிதைகளின் தேர்வு மற்றும் பயன்பாடு பற்றிக் கூறுகிறார். பௌத்த சமயம் காரணமாகவே தொகுப்பு முயற்சிகள் உருவாகின என்று கூறுகிறார். இந்தக் கோணத்தில் தமிழையும் நாம் ஆராய வேண்டும்.

இது போலவே கவிஞர்கள் ஏன் புனைப்பெயர் வைத்துக் கொண்டார்கள். அதுவும் கவிதையின் படிமம் அல்லது உருவகத்தைத் தனது பெயராகக் கொண்டது ஏன் என்றே கேள்விக்குச் சீனாவில் கவிதை எழுதியவர்களில் பெரும்பான்மையினர் அடித்தட்டு மக்கள். எளியோர். ஆகவே அவர்கள் புனைப்பெயரை உருவாக்கிக் கொண்டார்கள் என்கிறார். அந்த நாட்களில் வேறு கலைத்துறையைச் சார்ந்த கலைஞர்கள் புனைபெயர் வைத்துக் கொண்டதில்லை. இசைக்கலைஞர்கள். ஓவியர்கள், சிற்பிகள் அவர்களின் சொந்த பெயராலே தான் அறியப்பட்டிருக்கிறார்கள். ஆனால் சீனக்கவிஞர்கள் இயற்கையின் அடையாளமாகத் தன் பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். குளிர் மலை என்பது ஒரு கவிஞனின் பெயர். ஆயிரம் மழைத்துளிகள் என்றொரு கவிஞர். தப்பியோடிய மேகம் என்பது வேறு ஒரு கவிஞரின் பெயர். இப்படிக் கவிதைகளிலிருந்தே அவர்களின் புனைபெயர்கள் உருவாகியிருக்கின்றன. தமிழிலும் இது போலவே சங்க கவிஞர்கள் தனது கவிதையின் வழியாகவே அடையாளம் காணப்பட்டார்கள்.

rft.jpg

சங்க கவிஞர்களின் பெயர்களை வாசித்துப் பாருங்கள். அணிலாடு முன்றிலார்,குப்பைக் கோழியார், நெடுவெண்ணிலவினார் மீனெறி தூண்டிலார் வெள்ளிவீதியார் கல்பொரு சிறுநுரையார் – கங்குல் வெள்ளத்தார் என எவ்வளவு கவித்துவமாக இருக்கின்றன. இந்தப் பெயர்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தால் இன்னும் கவர்ச்சியாக இருக்கிறது.

சீனக் கவிதைகளின் பொற்காலமாக டாங் அரச வம்சம் ஆட்சி செய்த காலத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் நாடு முழுவதுமாக 2500 கவிஞர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியதாகவும் சீன இலக்கிய வரலாறு கூறுகிறது. இதில் துஃபு, , லீ போ, பாய் ஜுய் மூவரும் மிக முக்கியமான கவிஞர்கள், இவர்களின் கவிதைகள் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

reed.jpg

சங்க இலக்கியத்திலுள்ள பெண் கவிஞர்களைப் போலவே தன் சொந்த அடையாளத்தை மறைத்துக் கொண்டு சீனாவிலும் பெண் கவிஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். புற உலகம் அறியாதவர்கள் என்றே இந்தக் கவிஞர்களை வகைப்படுத்துகிறார்கள். வீட்டிற்குள் இருந்தபடியே அவர்கள் உலகை அறிந்திருக்கிறார்கள். காற்றை, மழையை, நிலவை, சூரியனை. பறவைகளின் சங்கீதத்தைப் பற்றிக் கவிதை பாடியிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முதுமை, நோய், தனிமை, பிரிவு. மரணம், துக்கம், துரோகம் வஞ்சகம் பற்றியும் எழுதியிருக்கிறார்கள். பெண் கவிஞர்களின் கவிதைகளுக்கு அந்தக் காலத்திலே நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் அவர்கள் பொது வெளியில் கவிஞராக உலவ முடியவில்லை. அதைப் பண்பாடு அனுமதிக்கவில்லை என்றும் ரெட் பைன் தெரிவிக்கிறார்.

webf.jpg

ரெட்பைன் தனது உரையில் பண்டைய பெண் கவிஞர் ஒருவரின் வீடு தேடி அலைந்த சம்பவத்தை விவரிக்கிறார். முடிவில் அதைக் கண்டுபிடித்தபோது அவர் அடைந்த பரவசத்தை உரையின் போதும் அவரது முகத்தில் காணமுடிகிறது

இது போலவே பூங்காவிலிருந்த கவிஞரின் கல்லறை ஒன்றைத் தேடிய அனுபவத்தையும் மிக அழகாக விவரித்துள்ளார்.

சீனக்கவிஞர்களில் பெரும்பாலோர் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். சுற்றியலைந்து பெற்ற அனுபவத்தைச் செல்லும் இடங்கள் தோறும் கவிதை பாடியிருக்கிறார்கள். குறிப்பிட்ட சில கவிஞர்கள் அரச சபையில் மன்னரின் ஆலோசகராகவோ, நிர்வாகப் பணிகளிலோ ஈடுபட்டிருக்கிறார்கள். அரச சபை வாழ்க்கை கவிஞர்களுக்கு ஏற்றதில்லை என்றே விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் அரச சபையில் இதயத்தில் நினைப்பதை எல்லாம் உதட்டின் வழியே பேச முடியாது. ஒரு வேளை அப்படி மனம் திறந்து பேசினால் அவர்கள் உடனே நாடு கடத்தப்படுவார்கள். அரச சபையிலிருந்து நாடு கடத்தப்பட்ட கவிஞர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு என்கிறார் ரெட் பைன்.

சங்க கவிதை மரபிலும் பாடிப்பரிசல் பெற அலைந்து திரியும் கவிஞர்களையே அதிகம் காண முடிகிறது. கபிலரைப் போலச் சிலர் அரசருக்கு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். ஔவையைப் போலச் சிலர் நீதி சொல்லியிருக்கிறார்கள்.

சீன மன்னர்களுக்குக் கவிதையிலிருந்த ஈடுபாடு என்பது கவிதை வழியாக அவர்கள் உணர்த்தும் அறத்தின் பொருட்டேயிருந்தது என்கிறார் ரெட்பைன். அது உண்மையே, அந்தக் காலத்தில் கவிதையின் வழியே தான் அறம் பேசப்பட்டது. நீதி நெறிகள் அடையாளம் காணப்பட்டன. கவிதை ஒரு ஊடகம். அதன்வழியே தான் நுண்மையான அனுபவங்கள். ஞானம் பகிரப்பட்டது. அதுவும் கவிதையில் நேரடியாக மன்னரைச் சுட்டிக்காட்ட முடியாது என்பதால் விலங்குகளை, பருவகாலத்தைச் சொல்லி அதன் வழியே மன்னருக்குச் சொல்ல வேண்டிய நீதியைப் புரிய வைத்தார்கள்.

சங்க கவிதைகளைப் போலப் பசியை, வறுமையை, இல்லாமையைச் சீனக்கவிதைகள் அதிகம் பாடவில்லை. வறுமையான சூழலை விவரிக்கும்போதும் தமிழ்க் கவிதையினைப் போலத் துயர்மிகு சித்திரமாக வெளிப்படவில்லை.

der.jpg

மதுவின் மயக்கத்திலே ஆழ்ந்து கிடப்பது அன்றைய கவிஞர்களின் இயல்பு. குடியைப் பற்றி எழுதப்பட்ட கவிதைகள் சீனாவில் ஏராளம் இருக்கின்றன. கூடிக் குடிப்பது மட்டுமின்றி, மலையுச்சியில் அமர்ந்து நிலவோடு குடிப்பது, படகில் தனித்திருந்து குடிப்பது எனக் குடிவாழ்க்கையைக் கொண்டாடியிருக்கிறார்கள். அரசசபையில் பதவி வழங்கப்பட்ட கவிஞர்களின் ஒரே வேலை குடிப்பது மட்டும் தான், அது உண்மையைச் சொல்ல வேண்டாதபடி கவிஞனை எப்போதும் மயக்கத்தில் வைத்திருக்கும் என்கிறார் ரெட் பைன்.

இது போலவே உயர்ந்த மலைத்தொடரைத் தேடிச்சென்று சிறிய குடில் அமைத்துக் கொண்டு வாழுவதும் கவிஞனின் இயல்பாக இருந்திருக்கிறது. கவிஞர் லி பெய் திருமணம் செய்து கொண்டு இளம் மனைவியோடு வாழ்ந்த சில மாதங்களிலே இப்படி மலையில் குடில் அமைத்து தனியே தங்கி கவிதைகள் எழுதி வந்தார் என்பதையும் ரெட் பைன் நினைவுபடுத்துகிறார்.

ரெட் பைன் மானுடவியல் பயின்றவர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பயிலும் காலத்தில் உதவித்தொகை கிடைக்கிறது என்பதற்காகச் சீனமொழியைக் கற்றுக் கொண்டிருக்கிறார். அந்த ஆர்வம் வளரவே சீனத்திலிருந்து அரிய கவிதைத்தொகுப்புகள் மற்றும் பௌத்த சூத்திரங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வருகிறார்.

சில காலம் பௌத்த மடாலயங்களில் தங்கி தியானம் கற்றுக் கொண்டதுடன் ஜென் வாழ்க்கையைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். தைவானில் வசித்த போது மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் பணியில் இரண்டு ஆண்டுகள் மேற்கொண்டிருக்கிறார். அதில் கிடைத்த வருமானத்தைக் கொண்டு மொழியாக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். Cold Mountain எனும் சீனக்கவியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்வதற்காக மலையுச்சியிலிருந்த சிறிய விவசாயக் கிராமம் ஒன்றுக்குப் போய்த் தங்கிக் கொண்டு எளிய விவசாயப் பணிகளை மேற்கொண்டவாறு மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.

சீனாவில் இவர் மேற்கொண்ட பயணங்களும் கவிஞர்களின் நினைவிடங்களைத் தேடிக் கண்டறிந்து வெளிப்படுத்திய விதமும் அபாரமானது.

ஜாங்னான் மலைத்தொடர் மிக நீண்டது, இங்குள்ள குகைகளில் வாழும் பௌத்த துறவிகளைத் தேடி ரெட் பைன் நீண்ட பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தில் அவர் அடைந்த அனுபவங்களை ரோடு டு ஹெவன் என்ற நூலாக எழுதியிருக்கிறார். இதில் நிறையப் பெண் துறவிகளைச் சந்தித்து அவர்களின் தனித்துவமிக்க வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார்.

ரெட் பைனின் வாழ்க்கை வியப்பூட்டக்கூடியது . அவரது அப்பா ஒரு வங்கி கொள்ளைக்காரர். அவரும் நண்பர்களும் வங்கி ஒன்றைக் கொள்ளையடித்துவிட்டுத் தலைமறைவாகி விட்டார்கள். துரத்தி வந்து அவர்களைக் கண்டுபிடித்த போலீசாருடன் துப்பாக்கிச் சூட்டில் இறங்கினார்கள்.. இதில் முழங்காலில் காயமடைந்த அவரது அப்பாவைத் தவிர மற்றவர்கள் அதே இடத்தில் கொல்லப்பட்டார்கள். ரெட் பைனின் அப்பா சிறைக்குச் சென்றார்.

தண்டனைக்காலம் முடிந்து அப்பா வெளியே வந்ததும் தான் பதுக்கி வைத்திருந்த பணத்தைக் கொண்டு டெக்சாஸில் ஹோட்டல் வியாபாரத்தில் ஈடுபடத் துவங்கினார். அதில் மிகப்பெரிய வெற்றி பெற்றார். சில ஆண்டுகளிலே அவர் பெரும் பணக்காரராக மாறினார்.

drth.jpg

ரெட் பைனின் குழந்தைப் பருவம் ஆடம்பரமான வாழ்க்கையைக் கொண்டிருந்தது. அவரது அப்பாவிற்கு அரசியலில் ஆர்வம் உருவானது. கலிபோர்னியாவில் உள்ள ஜனநாயகக் கட்சியின் தலைவரானார். தேர்தலில் போட்டியிட்டார். அந்த நாட்களில் கென்னடி சகோதரர்கள் அவர்கள் வீட்டிற்கு வருவது வழக்கம். தேர்தல் அரசியலில் அவரது எண்ணம் நிறைவேறவில்லை. ஆகவே நிறையத் தோல்விகளைச் சந்தித்தார்.

இதற்கிடையில் ரெட் பைனின் அம்மாவை அவரது அப்பா விவாகரத்துச் செய்தார், ஆகவே எல்லா வசதிகளையும் இழந்து நடுத்தர வாழ்க்கைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள். ரெட் பைன் ஜூனியர் கல்லூரியில் தோல்வியுற்று மன அமைதியை இழந்தார். அதன்பின்பு மூன்று ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றினார். அதிலிருந்து ஓய்வு பெற்று வந்த பிறகே பல்கலைக்கழகத்தில் மானுடவியல் பயிலச் சென்றார்.

தைவானில் வசித்த போது சீனப்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவரது ஊக்கம் காரணமாகவே சீன இலக்கியங்களை மொழியாக்கம் செய்யத் துவங்கினார்.

எண்பதுகளின் மத்தியில் தான் சீனா அமெரிக்கர்களைத் தன் தேசம் முழுவதும் தடையில்லாமல் பயணம் செய்ய அனுமதி தந்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அவர் சீனா முழுவதும் பயணம் செய்தார். தான் படித்து அறிந்த சீனாவின் நிலக்காட்சிகளை, மஞ்சள் நதியை நேரடியாகச் சென்று பார்த்தார்.பௌத்த துறவிகளின் மீது ஈடுபாடு கொண்டு அவர்களைத் தேடி மலைப்பிரதேசங்களில் அலைந்தார்.

ரெட் பைன் 2005ல் சீனாவில் ஒரு மாதகாலம் பயணம் செய்து முப்பது புகழ்பெற்ற கவிஞர்களின் கல்லறைகளைத் தேடிக் கண்டுபிடித்து அக் கல்லறையின் முன்பாக ஒரு கோப்பை ஸ்காட்ச் விஸ்கியை மலர்களுடன் படையல் செய்து வணங்கியிருக்கிறார். இந்த உரையின் போதும் சிறிய குப்பியில் வைத்திருந்த மதுவைச் சந்தோஷத்துடன் உயர்த்திப் பருகிக் கொள்கிறார்.

ரெட் பைனின் முகத்தில் காணப்படும் சந்தோஷம். உற்சாகமான பேச்சு. வேடிக்கையாகச் சொல்லும் விதம் நம்மை அவரோடு நெருக்கமாக்குகிறது. இந்த உரையைக் கேட்ட கையோடு பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதைகளின் தொகுப்பான வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை வாசித்தால் முழுமையான அனுபவத்தை நாம் பெற முடியும்.

th.jpg

ரெட் பைன் போலவே பயணி எனும் ஸ்ரீதரனும் சீனாவில் பணியாற்றிச் சீனமொழியை முறையாகக் கற்றுக் கொண்டு இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார். மிகுந்த பாராட்டிற்குரிய பணியிது.

ரெட் பைன் தேர்வு செய்து வாசிக்கும் கவிதைகளை கேட்கும் போது பெரிய ஈர்ப்பு உருவாகவில்லை. ஆனால் அதே கவிதைகளை மௌனமாக வாசித்தால் அது தரும் அனுபவம் சிறப்பாக உள்ளது.

ரெட் பைனின் முக்கிய நூல்களை ஒவ்வொன்றாக அறிமுகம் செய்யலாம் என நினைக்கிறேன். அதன் துவக்கப்புள்ளியாக இந்த உரையைக் குறிப்பிடலாம்.

 

 

 

ரெரெட் பைனின் சீனக்கவிதைகள்ரெட் பைனின் சீனக்கவிதைகள்ட் பைனின் சீனக்கவிதைகள்

https://www.sramakrishnan.com/ரெட்-பைனின்-சீனக்கவிதைகள/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனுபவப் பகிர்விற்கு நன்றி கோசான் அவர்களே. புத்தர் சிலைகள் எல்லாம் எந்தளவு தூரம் முளைத்துள்ளன? 
    • மனித வளம் அதிகம் இருப்பதால்தான் இன்னும் மனித மலத்தை மனிதர்களை வைத்தே கையால் அள்ளிக் கொண்டிருக்கிறார்களோ?தமிழ்நாட்டில் எண்ணெய்கப்பல் கசிந்து கடல்நீரில் கலந்த பொழுது வாளியால் அள்ளி ஊற்றினார்கள்.உண்மையில் இந்தியாவில் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையவில்லை.ஆனால் ஒரு அணுவாயுத வல்லரசு பொருளாதாரத்தில் வளர்ந்தது போல் ஒருமாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.நகர்ப்புறங்கள் நவீனத் தோற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கின்றன.சந்திராயனுக்கு ரொக்கற் அனுப்பிய அதே வேளையில் இந்தியாவின் கடைக்கோடி கிராமத்தில் அடிப்படை வசதிகளற்று மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.ஒப்பீட்டளவில் தென் மாநிலங்கள் ஓரளவு வளர்ச்சி அடைந்த நிலையில் வடமாநிலங்களின் நிலமை படு மோசம்.
    • சகோ சீமானின் பிள்ளைகள் பற்றிய கருத்தை இங்கே பதிவிட்டவன் யானே.  இங்கே எனது கேள்வி தனது பிள்ளைகள் தமிழ் படிக்காததற்கு  மேடை கோணல் என்பது.  ஆனால் அது உண்மையல்லவே.  எனவே இந்த இவரது கூற்று தேர்தல் நேரத்தில் அவரை கவிழ்க்க உதவும் என்பதே அவரின் அபிமானியான எனது கவலை. நன்றி. 
    • சீமான் தமிழ் தேசியத்தைப் பேசுகிறார், உண்மை - ஈழத்தில் கஜேந்திரகுமார் அணி தமிழ் தேசியத்தைப் பேசுவது போல பேசுகிறார்😎. இதனால் மட்டும் தமிழ் தேசியம் வாழும் என்றால், நீங்கள் குறிப்பிடும் தமிழ் தேசியம் "யூ ரியூப்" வியாபார தமிழ் தேசியம் என எடுத்துக் கொள்கிறேன்! இந்த "திராவிடர்-தமிழர் ஆணி" ஈழவருக்கு தேவையில்லாத ஆணி என்கிறேன். இதனால், தமிழ் நாட்டில் ஆட்சியில் இருக்கப் போகும் கட்சிகளோடும் (குறைந்த பட்சம் புலத்தில் வாழும்) ஈழவர் பகைத்துக் கொள்ள வேண்டி வரும். இன்னொரு பக்கம், சீமான் தம்பிகள் முன்மாதிரியில் போலிச் செய்திகள், வைரல் வீடியோக்கள், யாழில் நடப்பது போன்ற எங்களிடையேயான அர்த்தமில்லாத சண்டைகளும் வளரும். இதெல்லாம் "ஈழவரான எங்களுக்கு ரொம்ப நல்லது!" என்று நீங்கள் சொன்னால் நான் நம்புகிறேன்!  
    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.