Jump to content

திஸ்ஸமஹாராமவில்... பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை, சீன நிறுவனத்துக்கு உரியது – சீனத் தூதரகம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

திஸ்ஸமஹாராமவில் பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை சீன நிறுவனத்துக்கு உரியது – சீனத் தூதரகம்!

திஸ்ஸமஹாராமவில்... பணியாளர்கள் அணிந்திருந்த சீருடை, சீன நிறுவனத்துக்கு உரியது – சீனத் தூதரகம்!

திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது.

எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

சீன நாட்டின் இராணுவச் சீருடையுடன் அவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகியதையடுத்து, இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இதனையடுத்து, திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள சீனத் தூதரகம், குறித்த பணியாளர்கள், சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று விளக்கமளித்துள்ளது.

இந்த நிலையில், எதிர்காலத்தில் அவ்வாறான இராணுவச் சீருடையை அணிய வேண்டாம் என்று குறித்த பணியாளர்களுக்கு அறிவுறுத்தும்படி, பாதுகாப்பு செயலாளர் சீனத்தூதரகத்திடம் கோரியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2021/1225769

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, தமிழ் சிறி said:

திஸ்ஸமஹாராம குளத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த சீன பணியாளர்கள், இராணுவ சீருடை அணிந்திருந்தமை தொடர்பாகப் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன சீன தூதரகத்திடம் விளக்கம் கோரியுள்ளார்.

SarcasticCheapFinwhale-mobile.jpg

ஒம்.. ஆர்வ கோளாறில சூட்கேஸ் உறையில் உடுப்பு தைத்துவிட்டீனம்.. விடுங்கங்ப்பா.

☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மக்கள் விடுதலை இராணுவ

நம்ம ஊரில அந்த காலத்தில தளபதியா இருந்தவர் இப்ப அமைச்சராக இருக்கிறார்....🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

2 hours ago, தமிழ் சிறி said:

சீன நாட்டின் மக்கள் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என சீனத்தூதரகம் விளக்கமளித்துள்ளது.

பொறுப்பற்ற எகத்தாளமான பதில். நீயென்ன கேட்கிறது நனென்ன சொல்கிறது என்பதுபோன்ற தொனி தெரிகிறது.
சிங்களவன் கேட்டதென்ன சீனன் சொன்னதென்ன!!!
ராஜபகச சகோதரர்களின் சீனவிசுவாசத்திற்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.

2 hours ago, தமிழ் சிறி said:

எனினும் அந்த சீருடை, சீனாவின் ஒரு நிறுவனத்துக்கு உரியது என்றும் சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் பணிபுரியும் இவர்கள் தனியார் இராணுவசேவையை சேர்ந்தவர்களோ. இலங்கை அரசாங்கத்துக்கே  தெரியாது இலங்கையில் சீனாசார்பில் எந்த கம்பனிகள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனா கம்னிஸ்ட் கட்சியின் கம்பனியாக இருக்கும்.....சீனாவில் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இராணுவம் உண்டு ...ஆகவே அவர்கள் எதை போட்டாலும் சிறிலங்கா பார்த்து கொண்டு இருக்க வேண்டியதுதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் ஆட்டம் இலங்கையில் தொடங்கி விட்டது என நினைக்கிறன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அணிந்துள்ள உடைகளின் நிறத்தையும் அதிலுலள்ள வடிவங்களும்தான் பிரச்சனை என்றால் அதனை விவாதப் பொருளாக்கும் ஊடகங்களின் தரத்தைத்தான் கேள்விக்குள்ளாக்க வேண்டும். 

சீருடை அணிந்தால் இராணுவம், 

கோவணம் கட்டியிருந்தால் விவசாயி.. 

🤦🏼‍♂️

Link to comment
Share on other sites

6 hours ago, putthan said:

சீனா கம்னிஸ்ட் கட்சியின் கம்பனியாக இருக்கும்.....சீனாவில் கட்சியின் கட்டுப்பாட்டில் தான் இராணுவம் உண்டு ...ஆகவே அவர்கள் எதை போட்டாலும் சிறிலங்கா பார்த்து கொண்டு இருக்க வேண்டியதுதான்...

சீன இராணுவத்துக்கு சொந்தமான வணிக நிறுவனங்களும், சீன இராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு சொந்தமான தனியார் நிறுவனங்களும் உள்ளன. இவற்றில் முன்னாள் இராணுவத்தினரும், தற்காலிக இராணுவத்தினரும் வேலை செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

சீனர்களை பாதுகாப்பதில் கோத்தபாய அரசு உறுதி : ஐக்கிய மக்கள் சக்தி

(சு.பிரசன்னா)

கோத்தபாய ராஜபக்ஷ அரசாங்கம் சீனர்களின் பாதுப்பாவை உறுதி செய்வத்தில் முன் னின்று செற்படுகின்றது. எனவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முன்வருமாறு மகா சங்கத்தினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அழைப்பு விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று புதன்கிழமை நடந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு அழைப்பு விடுத்த அக்கட்சியின் எம்.பி.யான துஷார இந்துனில் மேலும் கூறுகையில்,

திஸ்ஸமகாராம வாவி அபிவிருத்திப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனப் பிரஜைகள் இரா ணுவ சீருடையை அணிந்திருக்கவில்லையென அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வாகனங்கள் பழுது பார்க்கும் இடங்களிலும், சில காவல் பணிபுரியும் தொழிலாளர்களும் இவ்வாறான ஆடைகளை அணிவதாகவும் கெஹெலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டியுள்ளார்.

download-2.jpg

எந்தப் பகுதிகளில் அவர் இதனை அவதானித்துள்ளார் என்பதை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு பொய் கூறி மக்களை தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். இவர்கள் நாட்டு மக்கள் பார்வையற்றவர்களென நினைத்துக் கொண்டுள்ளனர்.

திஸ்ஸமகாராம் வாவியில் இடம்பெறும் அபிவிருத்திப் பணிகள் முற்றிலும் தொல் பொருள் கட்டளைச்சட்டத்துக்கு முரணானவை. தொல்பொருள் முக்கியத்துவம் வாய் ந்த இடங்களில் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப் படவில்லை.

இதனை யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியவில்லை. ஏனெனில் கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கம் சீனர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னின்று செயற்படுகின்றது.

எனவே தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முன்வருமாறு மாக சங்கத்தினருக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் அழைப்பு விடுகின்றோம்.

இந்த விடயத்தில் நாம் அனைவரும் தலையிட்டு எமது உரிமைகளைப் பாதுகாப்போம் என்றார்.

https://thinakkural.lk/article/125586

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.