Jump to content

கிளப் ஹவுஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிளப் ஹவுஸ்

spacer.png

ஸ்ரீராம் சர்மா 

லாக் டவுன் காலத்தின் புது வரவாக முளைத்திருக்கிறது ‘கிளப் ஹவுஸ்’.

ஃபேஸ்புக், வாட்ஸப், போன்றவைகளைத் தாண்டியதொரு புது வடிவமாக, 24 மணி நேரமும் ஓயாமல் இரைந்தபடி இருக்கும் அலசலாட்டமாக பற்றிப் பரவிக் கொண்டிருக்கின்றது ‘கிளப் ஹவுஸ்’ செயலி !

உலகம் நவீனப்படத் துவங்கும்போது அதனை ஓர் படைப்பாளன் தவிர்த்து விடக்கூடாது, அதன் சுகந்தங்கள் – சூழ்வினைகள் அனைத்தையும் அண்டி அனுபவித்து சொல்லியாக வேண்டும்.

அப்படித்தான் கிளப்ஹவுஸ் செயலியையும் அணுகிப் பார்த்தேன்.

‘கிளப் ஹவுஸ்’ என்னும் செயலியை நான் புரிந்து கொண்ட வகையில் இங்கே அலச விரும்புகிறேன். இது, சரியா, தவறா என்னும் தீர்ப்பாளியாக இந்த சமூகம்தான் இருந்தாக வேண்டும்.

எழுத்தாளனின் எல்லையில் நின்று அதன் தாக்கங்களை மட்டும் எடுத்துச் சொல்வது எனது கடமையாகிறது. கருத்தில் தவறிருந்தால் தடையின்றி எழுதிச் சொல்லலாம்.

விஷயத்துக்குள் போவோம் !

இந்த கிளப் ஹவுஸ் ஆன்லைன் வலைப்பின்னலை தன் உடல் நலம் குன்றிய குழந்தை ‘லிடியா’ வுக்காகத்தான் துவங்கியதாக தெரிவிக்கிறார் இதன் மூல மூளைக்காரர் ரோஹன் சேத்.

வழக்கம்போல, இதனை வர்த்தக ரீதியாக கொண்டு செலுத்தும் பால் டேவிசன் ஓர் அமேரிக்கர்தான் என்றாலும், கண்டுபிடித்த கில்லாடி அடிப்படையில் ஓர் இந்தியர் என்பதில் வழக்கம்போல் நாம் பெருமைப்பட்டுக் கொள்வோம்.

spacer.png

கிளப் ஹவுஸின் முகமாக ஜப்பானிய அரசியலாளர் - பெண் ஓவியர் ‘ட்ரூ கடகோ” முகத்தை ஏன் பயன்படுத்தினார்கள் என்பது மில்லியன் டாலர் கேள்வி. அது குறித்து வேறு ஓர் சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

அதுபோக, 2020 ஆண்டில், பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே வீட்டுக்குள் முடங்கிவிட அவர்களைத் தேற்றும் விதமாக பயனுள்ள பொழுது போக்காக விரிவாக்கப்பட்டதாகத் தெரிகிறது கிளப் ஹவுஸ் !

ஆனால், லாக்டவுன் ஏறத்தாழ முடிவடையும் இந்த நேரம் பார்த்து சமீபத்தில்தான் நம் நாட்டில் வெகுவாக பிக்கப் ஆகியிருக்கின்றது.

spacer.png

கிளப் ஹவுஸ் !

அது ஒரு ஆப். (APP). அதை நமது அலைபேசிக்குள் டவுன்லோட் செய்து கொண்டு அதில் இருக்கும் பலவிதமான ரூம்களுக்குள் சென்று நம்மை இணைத்துக் கொண்டு கேட்கலாம். இணைந்து பேசலாம்.

வீடியோ வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. வெறும் ஆடியோதான். யார் யார் பேசலாம் என்பதை நிர்வகிக்க அந்தந்த ரூமில் சில ‘மாடரேடர்கள்’ இருப்பார்கள். அவர்களது விருப்பத்துக்கேற்ப ‘மைக்’ ஓப்பன் செய்யப்படும். இஷ்டத்துக்குப் பேசலாம் !

ஆரம்பத்தில், மசாலாவுக்குப் பேர்போன சினிமா பிரபலங்கள் உள்ளே ஓடோடி வந்தார்கள். வழக்கம்போல தேவுடுகாருகள் பங்கெடுக்கும் ரூமுக்கு மவுசு அதகளப்பட்டது. முன்னணியில் இருக்கும் சினிமா தயாரிப்பாளர்கள் பங்கெடுத்த நிகழ்வுகளில் இளைஞர்கள் கூட்டம் முண்டியது.

பங்கேற்றவர்கள் சினிமா வாய்ப்புகளை குறி வைத்து சுமாரான கேள்விகளை திரும்பத் திரும்பக் கேட்டபடியே இருந்தார்கள்.

மேற்படி தயாரிப்பாளர்களும், ‘உங்களை முதலில் முழுமையாக தேற்றிக் கொண்டு எங்களுக்குண்டான வழியில் வந்தால் உரிய வாய்ப்பு தரப்படும்…’ என்று ஓயாமல் பதில் அளித்துக் கொண்டிருந்தார்களே ஒழிய….

ஒரு நல்ல டைரக்டரையோ, நல்ல கதை சொல்லியையோ கண்டு விடவேண்டும் என்னும் ஆதங்கத் தேடலும் - கேள்விகளும் அவர்களிடம் இருந்து வெளிப்படவேயில்லை. ஆக, ஜஸ்ட் டைம் பாஸ் !

அடுத்து, தொழில் முனைவோர்கள் ரூம். அதிலும், தொழிலில் சாதித்தவர்கள் வந்து ஓயாமல் அலசினார்கள். ஆயினும், ‘இதோ, நான் பத்து காசு தருகிறேன். உங்களிடம் பத்து காசும் உழைப்பும் இருக்கிறதா...?’ என்று கேட்கவேயில்லை. ஆக, ஜஸ்ட் டைம் பாஸ் !

spacer.png

இளைஞர்கள் தங்களின் அடுத்தகட்ட படிப்பு குறித்து ஆர்வமாக ரூம்களை நாடினாலும் அதிலும், விவரமில்லாத பங்கேற்பாளர்கள் ஆளாளுக்கு குழப்புவதைக் கேட்கமுடிந்தது.

கூட்டிக்கழித்தால் அனைத்தும் குட்டிச்சுவற்றின் வெற்று அரட்டை போல்தான் இருந்தது.

எந்த ஒரு தொழில் நுட்பமும் அதனைப் பயன்படுத்தும் விதத்தில் தான் பலனளிக்கும்

ஒரு Closed Room அமைத்து அதில் விவரம் தெரிந்தவர்களை மட்டுமே அனுமதித்துக் கொண்டு உரையாடினால் எதிர்பார்க்கும் பலனை அடையலாம்.

ஓப்பன் க்ரூப்பில் வளவளப்பதால் என்ன பயன் ? கால விரயமும் – ஏமாற்றமும்தான் மிச்சம் ! அது எங்கு போய் முடியும் என்பதுதான் நமது அச்சம் !

ஃபேஸ்புக்கிலாவது தங்கள் கருத்தை சொல்ல ஒருவர் இரண்டு வரிகளையாவது கைவலிக்க டைப் செய்தாக வேண்டும். இதில் அந்த கஷ்டம் கூட இல்லை. ரூமுக்குள் புகுந்து மைக் கிடைத்தவுடன் ஓயாமல் பேசினால் போதும் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது.

கூடும் கூட்டம் பொறுப்பே இல்லாமல் பலதையும் பேசிக் கொண்டிருப்பதைக் காணக் காண கவலையே மேலிடுகின்றது.

18 + ரூம்கள் மலிந்து கிடக்கின்றன. அதில், விடிய விடிய சளசளப்புகள் நடக்கின்றன. அந்த ரூம்களில் நள்ளிரவு கடந்த நேரங்களிலும் இளம் பெண்கள் பங்கேற்றுக் காத்திருப்பது அதிர்சியளிக்கின்றது.

உலகில், இன்று நமது நாட்டில்தான் இளைய சமுதாயத்தினர் அதிகம் இருக்கின்றார்கள். நாட்டை மேம்படுத்தும் சக்தி மிக்க அவர்களை வீண் பேச்சுக்குள் இழுத்து சென்று அடைக்கும் சூழ்ச்சியாகவே இதனைக் கருதுகிறேன்.

இதைக் கண்காணிப்பதில், பெற்றோர்களின் பொறுப்பு அடங்கி நிற்கின்றது என்றாலும், அரசாங்கத்தின் பொறுப்பே அதிகம் என்பேன் !

ஃபேஸ்புக்கில் ஒருவன் ஒரு அப்பாவிப் பெண்ணைக் கடத்திவிட தூண்டில் போடுகிறான் என்றால் அதற்கான டாகுமெண்ட் அதில் இருக்கும். அதை வைத்து குற்றவாளியை ட்ரேஸ் செய்து விடலாம். ஆனால், இந்த கிளப் ஹவுஸ் செயலியில் அப்படியானதொரு வாய்ப்பே இல்லை.

யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் தப்பிதமாக உபயோகித்துக் கொள்ள முடியும் என்பதாகத்தான் இருக்கின்றது..

பாலியல் குற்றங்கள் மிக அதிகமாக நடக்க வாய்ப்புள்ளது.

ஒரு செயலியை உலகுக்குள் செலுத்தினால் அதற்குண்டான பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றாக வேண்டும்.

உதாரணமாக, தவறான புகைப்படம் அல்லது வீடியோவை ஒருவர் ஃபேஸ் புக்குக்குள் செலுத்திவிட்டால் அதனைக் கண்டு சரிபார்த்து நீக்கும் பொறுப்பை அந்த நிறுவனம் ஏற்றுக் கொள்கிறது.

ஆனால் , அப்படி ஒரு பொறுப்பை கிளப் ஹவுஸ் செயலி ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.

எங்கள் மக்கள் பயனுக்காக நீங்கள் கொடுக்கும் இந்த செயலியில் உங்களது பொறுப்புணர்ச்சி வெளிப்பட்டதாக தெரியவில்லை என்பதால் இந்த செயலியைத் தடை செய்கிறோம் என்று நிர்தாட்சண்யமாக சொல்லி விரட்டி விட்டது சீன அரசாங்கம் ! மேலும், சில நாடுகளும் இதனை மறுதலித்து விட்டன.

ஆனால், கலாச்சாரத்தை வலியுறுத்தும் நமது இந்திய அரசாங்கம் இன்னும் கேள்வி கேட்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கின்றது. சொந்த மக்களின் வாழ்க்கை மனநலம் கெட்டுப் போக வழி வகுக்கும் இந்த செயலியை குறித்து கேள்வி கேட்காமல் அனுமதித்துக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கத்தை கேள்வி கேட்க வேண்டியது நமது கடமையாகின்றது.

போதாக்குறைக்கு, வைரமுத்து புகழ் சின்மயியும் கூட ஏதோ ஓர் ரூமுக்குள் சென்று அலப்பறை மேலிட கோர்ட்டுக்கு போகப் போகிறேன் என உரண்டை இழுத்துக் கொண்டதைக் காண முடிகின்றது.

இன்னும் என்னவெல்லாம் கண்றாவிகள் அரங்கேறி சீழ்படுமோ இந்த கிளப் ஹவுஸில் !?

சம்பந்தப்பட்ட Alpha Exploration Co நிறுவனம் தனது வியாபாரத்தில் விட்டேத்தித்தனமாக இருப்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்றால்…

அதைவிட அதிர்ச்சி அளிக்கிறது, இந்திய இளைய சமூகத்தையும் அதன் கலை, கலாச்சாரத்தையும் காப்பாற்றியாக வேண்டிய இந்திய அரசாங்கத்தின் விட்டேத்தித்தனம்.

ஒருவேளை, கிளப் ஹவுஸில் ‘ஒன்றியம்’ என்ற பெயரில் ஒரு ரூமை துவங்கினால் விழித்துக் கொள்வார்களோ என்னமோ !

ஜெய் ஹிந்த் !

கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

 

https://minnambalam.com/politics/2021/06/30/22/club-house-application

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.