Jump to content

''எல்லோரும் ஈழத்துக்கு வரச்சொல்லி கூப்பிடுறாங்க'' - 'மேதகு' குட்டிமணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

''எல்லோரும் ஈழத்துக்கு வரச்சொல்லி கூப்பிடுறாங்க'' - 'மேதகு' குட்டிமணி

நடிகர் குட்டிமணி

நடிகர் குட்டிமணி

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பயோபிக்கான, 'மேதகு' படத்தில் பிரபாகரனாக நடித்த குட்டிமணியின் பேட்டி.

newsletter_image.png?w=576&dpr=1.0

விகடன் நியூஸ் லெட்டருக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க...!

எக்ஸ்க்ளுசிவ் நியூஸ் கட்டுரைகள் தினமும் உங்களை தேடி…!

Get Our Newsletter

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பயோபிக் 'மேதகு'. தமிழீழ திரைக்களம் தயாரிப்பில் இயக்குநர் கிட்டு இயக்கத்தில் ஓடிடி-யில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிரபாகரன் பிறந்ததில் இருந்து அவருக்குள் அந்த புரட்சி உணர்வு வந்து புதிய தமிழ்ப்புலிகள் உருவான கதை வரை முதல் பாகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் பிரபாகரனாக நடித்த நடிகர் குட்டிமணியின் நடிப்பு அனைவராலும் பாராட்டைப் பெற்றது. 'மேதகு' அனுபவம் குறித்து குட்டிமணியிடம் பேசினேன்.

இந்தப் படத்துக்குள்ள எப்படி வந்தீங்க ?

''சொந்த ஊர் சிவகங்கை. சின்ன வயசுல இருந்தே சினிமா மேல ஆர்வம் அதிகம். சின்னச்சின்ன குறும்படங்கள் நடிச்சுக்கிட்டிருந்தேன். ஏதாவது வாய்ப்பு கிடைச்சுடாதானு ஏங்கிட்டு இருந்த சமயத்துல என் நண்பர்தான் இந்த மாதிரி ஒரு படம் பண்றாங்கன்னு சொன்னார். எனக்கு பிரபாகரன் அவர்களை ரொம்பப் பிடிக்கும். அவரைப் பத்தின படம்னு தெரிஞ்சதும் இதுல ஏதாவது ஒரு சின்ன கேரக்டர் கிடைக்காதானு என் போட்டோவை அனுப்பி வெச்சேன். கொஞ்சம் ஸ்டைலான போட்டோவா அனுப்பினதால அது சரியா இல்லை. என் நண்பர் அசார் இந்தப் படத்துல ஆர்ட் டைரக்‌ஷன்ல வேலை செஞ்சிருக்கார். அவர்தான் என்னை இயக்குநர்கிட்ட சொல்லியிருக்கார். இயக்குநர் என்னை க்ளீன் ஷேவ் பண்ணிட்டு வீடியோ கால் பண்ண சொன்னார். நானும் ஷேவ் பண்ணிட்டு போன் பண்ணேன். உடனே அவருடைய அசிஸ்டென்ட்ஸ்கிட்ட, 'போய் தலைவரை கூட்டிட்டு வாங்க'ன்னு சொல்லியிருக்கார். தல, தலைவானு எல்லோரும் சும்மா சொல்ற மாதிரி சொல்றார்னு நினைச்சேன். ஆனா, அப்புறம்தான், தலைவர் பிரபாகரனா நடிக்கிறேன்னு தெரிஞ்சது. இப்படித்தான் நான் உள்ள வந்தேன்.''

 

நீங்கதான் பிரபாகரன்னு தெரிஞ்சதும் உங்களுக்கு என்ன தோணுச்சு ?

மேதகு
 
மேதகு

''ரொம்ப சந்தோஷமா இருந்தது. அதே சமயம், அதை எப்படி பண்ணப்போறோம்னு ரொம்ப பயமாவும் இருந்தது. அப்பழுக்கற்ற மிகப்பெரிய போராளியா நடிக்கும்போது மக்கள் எப்படி ஏத்துக்குவாங்கன்னு பயம் இருந்தது. அந்தக் கதாபாத்திரத்துக்கு எந்த வகைலயும் சின்ன தீங்குக்கூட ஏற்படுத்திடக்கூடாதுனு நினைச்சேன். தமிழீழ திரைக்களத்துக்கு நான் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன். தமிழ் சார்ந்து, மண் சார்ந்து வரலாற்று படங்களை எடுக்க பயப்படுறவங்களுக்கு முதுகெலும்பா தமிழீழ திரைக்களம் இருக்கும்னு நம்புறேன்.''

இந்த கதாபாத்திரத்துக்கு மனரீதியாவும் உடல் ரீதியாவும் எப்படி தயாரானீங்க ?

''2014-க்கு பிறகுதான், தலைவர் பிரபாகரனை பத்தின புரிதல் எனக்கு வந்தது. பிரபாகரன் பத்தியும் ஈழப் படுகொலை பத்தியும் தெரிஞ்சுக்கிட்டேன். அப்புறம், அவரைப் பத்தி நிறைய படிக்க ஆரம்பிச்சேன். அந்த சின்ன வயசுல எப்படி அவ்வளவு புரட்சிகரமா இருக்க முடியும்னு ஆச்சர்யப்பட்டிருக்கேன். உணர்வு ரீதியா என்னை அந்த கதாபாத்திரத்துக்கு தயார்படுத்திக்கிட்டேன். ரெண்டு மாசம் பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஜிம் போய் உடலை தயார் பண்ணேன். தினமும் படத்தோட வசனங்களை பேசிப்பேசி பழகணும். ஈழ தமிழ் எனக்கு பிடிக்கும். அதனால, எனக்கு ஈஸியா கத்துக்க முடிஞ்சது. உடல்மொழிக்கு நிறைய மெனக்கெட வேண்டியிருந்தது. இயக்குநர்தான் அதை கொண்டு வரவெச்சார். அவருடைய வீடியோக்கள் பார்த்து எப்படி நடப்பார், நிப்பார், பார்ப்பார்னு கவனிச்சு கவனிச்சு பண்ணினேன். அதெல்லாத்துக்கும் இயக்குநர் கிட்டு அண்ணன்தான் காரணம்.''

 

அடுத்து என்ன?

நடிகர் குட்டிமணி
 
நடிகர் குட்டிமணி

''யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு கிடைச்சிருக்கு. முதன்முதல்ல ஒரு படம் நடிச்சிருக்கேன். அதுல நான் நடிச்சதைப் பத்தி எல்லோரும் பேசுறதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பெரிய பொறுப்புணர்ச்சியை கொடுத்திருக்கு. சினிமாவுல என்னுடைய அடுத்தக்கட்ட நகர்வுகளை சரியா எடுத்து வைக்கணும்னு நினைக்கிறேன்.''

திரையுலகத்துல இருந்து வந்த பாராட்டுகள் என்னென்ன ?

''நிறைய பேர் இயக்குநர்கிட்ட என்னைப் பத்தி பேசிருக்காங்க. வெற்றிமாறன் அண்ணன் 'தம்பி நல்லா நடிச்சிருக்கான்'னு சொன்னதா இயக்குநர் சொன்னார். அவர் படத்துல நடிக்கணும்னு எத்தனையோ முறை ஆசைப்பட்டிருக்கேன். இப்போ அவரே என்னை பத்தி பேசும்போது அந்த சந்தோஷத்தை சொல்ல வார்த்தைகள் இல்லை.''

 

ஈழத்தமிழர்கள் படம் பார்த்தாங்களா... அவங்க என்ன சொன்னாங்க?

''படம் பார்த்தவங்க எல்லோரும் என் அண்ணனை காட்டிட்டீங்க, என் அப்பாவை காட்டிட்டீங்கன்னு சொல்றாங்க. என்னை ஈழத்துக்கு கூப்பிடுறாங்க. எனக்கும் தலைவர் வாழ்ந்த அந்த இடத்துக்கு போகணும்னு ஆசை. ஆனா, அது இனிமே சாத்தியமானு தெரியலை.''

மணிகண்டன் அப்படிங்கிற உங் உண்மையான பெயர் குட்டிமணினு மாற என்ன காரணம் ?

நடிகர் குட்டிமணி
 
நடிகர் குட்டிமணி

''தலைவர் பிரபாகரன் கூட குட்டிமணினு ஒரு போராளி இருந்தார். அவர் மேல மிகப்பெரிய அன்பு. அந்தக் கதாபாத்திரம் என்னை நிறைய பாதிச்சது. அதனால, பேர் குட்டிமணினு மாற்றப்பட்டது.''

 

 

https://cinema.vikatan.com/tamil-cinema/actor-kuttymani-acted-as-ltte-leader-prabhakaran-shared-about-his-experience-in-medhagu-movie

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி Published By: DIGITAL DESK 7   16 APR, 2024 | 02:42 PM   நாட்டுப்பற்றாளர் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் அவரின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு இன்று வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய மக்கள் முண்ணனியின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கில் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவுள்ள ஊர்தியானது இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்ட பந்தலுக்கு முன்பாக அஞ்சலிக்காக கொண்டுவரப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்க தலைவி கா. ஜெயவனிதா ஈகைச்சுடரினை ஏற்றி வைத்ததுடன் மற்றும் தாயார் மலர்மாலை அணிவித்து அடுத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/181216
    • Published By: DIGITAL DESK 3    16 APR, 2024 | 12:07 PM யாழ்ப்பாணத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். அவருக்கு திருமணமாகி பிள்ளைகள் உள்ள நிலையில் சுவிஸ் நாட்டில் கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகின்றார்.  இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குறித்த பெண் யாழ்ப்பாணம் வந்திருந்த போது, பெண்ணின் பூர்வீக சொத்துக்கள் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடுகள் தொடர்பில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ய சென்று இருந்தார்.  முறைப்பாடு செய்ய சென்ற நேரத்தில் பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த தமிழ் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  அந்த பழக்கம் பெண் வெளிநாடு சென்ற பின்னரும் தொடர்ந்து உள்ளது. ஒரு கட்டத்தில் அது காதலாக மலர்ந்துள்ளது. அதனை அடுத்து சுவிஸ் நாட்டு பெண், இங்குள்ள பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு பணம், நகை என்பவற்றுடன் அன்பளிப்பு பொருட்கள் என பலவற்றை வழங்கி வந்துள்ளார்.  ஒரு கட்டத்தில் பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தரை சுவிஸ் நாட்டிற்கு எடுப்பதற்கான முயற்சிகளையும் அப்பெண் மேற்கொண்டுள்ளார். அதற்கு பொலிஸ் பொலிஸ் உத்தியோகத்தர் மறுப்பு தெரிவித்து, தான் நாட்டை விட்டு வர மாட்டேன் என கூறியுள்ளார்.  அதனால் அப்பெண் மீண்டும் யாழ்ப்பாணம் வந்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய வேளை , அதற்கு அவர் உடன்படாத நிலையில், அது தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளார்.  அதனை அடுத்து, இப்பெண்ணிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஒரு தொகை நகை, பணம் என்பவற்றை மீள அளித்துள்ளார். மிகுதியை சிறு கால இடைவெளியில் மீள கையளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.  அதன் பிரகாரம் உரிய காலத்தில் மிகுதி பணம் நகையை மீள கையளிக்காததால், அப்பெண் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார். https://www.virakesari.lk/article/181215
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 11:19 AM   கொவிட் தொற்று பற்றிய உலக சுகாதார நிறுவனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெளிவுபடுத்தியுள்ளார். யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொவிட்தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளநிலையில், மக்கள் மத்தியில் தேவையற்ற சந்தேகங்களை தீர்க்கும்வகையில் குறித்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதன்படி 2023 ஒக்டோபர் 10ம் திகதி முதல் கீழ்வரும் 7 விடயங்கள் சுகாதார அமைச்சினால் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டு பின்பற்றப்படுகிறது. 1. கொவிட் தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஏனைய சுவாசத் தொற்று நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதே உரிய பாதுகாப்பும் பராமரிப்பும் வழங்கப்பட வேண்டும். பொருத்தமான சிகிச்சையும் வைத்தியசாலையில் வழங்கப்படும்.  (பொதுவாக சுவாச தொற்று வருத்தம் இன்னொருவருக்கு இலகுவாக பரவலாம். ஆகவே சுவாசத் தொற்று உடையவர்கள் உரிய அடிப்படை சுகாதார விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறே தொற்று உடையவருக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் பராமரிப்பவர்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைப்  பேண வேண்டும்.) 2. எதாவது நோய் ஒன்றின் சிகிச்சைக்கு முன்னர் அல்லது சத்திர சிகிச்சை ஒன்றிற்கு முன்னர்  கொவிட் தொற்றும் இருக்கின்றதா என பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 3. கொவிட் தொற்று உடையவரிற்கு அருகில் இருந்தவர்களிற்கு அல்லது அவருக்கு அருகில் சென்று சிகிச்சை அளித்தவர்களுக்கு கோவிட் தொற்று இருக்கின்றதா என பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. 4. இருமல் மற்றும் தடிமன் போன்ற சுவாசத் தொற்று ஏற்பட்டவர்கள் இன்னொருவருக்கு தொற்று ஏற்படாத வகையில் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக அதிகளவில் ஒன்றுகூடும் இடங்களில் உரிய முறையில் நடந்து கொள்ள வேண்டும். 5. கொவிட் இறப்பு ஏற்படும் போது உரிய சுகாதார விதிகளைக் கடைப்பிடித்து வீடுகளில் இறுதிச் சடங்கை செய்யமுடியும். 6. சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமுதாயத்தில் கொவிட் தொற்று இருக்கின்றதா என பலருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. 7. தனியார் சிகிச்சை நிலையங்களும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். https://www.virakesari.lk/article/181205
    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.