Jump to content

ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து - அமைச்சர் பந்துல குணவர்தன


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

(ஆர்.யசி)

பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும்.

அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார்.

 

http://cdn.virakesari.lk/uploads/medium/file/89712/Bandula.jpg

நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை சுதந்திரம்  அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவோ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவோ அல்லது எமது அரசாங்கமோ காரணம் அல்ல.

நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு நாளில் வருவதும் அல்ல, நீண்டகாலமாக தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இறுதியாக நெருக்கடியை  உருவாகும். 

இன்று நாம் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு  2015 ஆம் ஆண்டு அரசாங்கமே காரணமாகும். முன்னைய ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் விவசாயம் வீழ்ச்சி கண்டது, சகல ஏற்றுமதியும் நிறுத்தப்பட்டு இறக்குமதிக்காக  நாடு திறக்கப்பட்டது.

131 ரூபாவில் இருந்த டொலருக்கான பெறுமதி நாம் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் வேளையில் 181 ரூபாவாக உயர்த்தப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை இனியும் முன்னெடுக்க முடியாது என்ற நெருக்கடி நிலையிலேயே ஆட்சி எமது கைகளுக்கு கிடைத்தது. 

தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அவ்வாறான ஒரு நெருக்கடி நிலையில் நாம் உள்ளோம்.

அடுத்த வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக நாம் செலுத்தியாக வேண்டும், இவ்வாறு மிகப்பெரிய தொகையை கடனாக வழங்குவது இலகுவான விடயமல்ல. அவ்வாறு கொடுக்காது போனால் நாம் வங்குரோத்து நாடாக மாறுவோம்.

இப்போதே நாம் வீழ்ச்சி கண்ட நாடாக மாறியுள்ளோம். கடன் பெரும் நாடுகளில் பட்டியலில் இனி வீழ்ச்சி காண எமக்கு இடம் இல்லை. நாம் வெளிநாடுகளில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் வேளையில் கடன் பத்திரமொன்றை கையாள வேண்டும், அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களாக இருந்தாலும், எரிபொருள், உரம், திரவங்கள் போன்ற பொருட்களாக இருந்தாலும், இயந்திரங்கள் போன்ற மூலதனப்பொருட்களாக இருந்தாலும் கடன் பத்திரம் ஒன்றை முன்வைக்க வேண்டும். இது இல்லாது எதனையும் இறக்குமதி செய்ய முடியாது. தடுப்பூசிகளை கூட கொண்டுவர முடியாது. எனவே நாட்டின் நிலைமைகளை சகலரும் விளங்கிக்கொள்ள வேண்டும். 

கட்சி அரசியலை  தாண்டி நாடு குறித்து சிந்திக்க வேண்டும், நாடே நெருக்கடியில் இருக்கின்ற வேளையில் ஒரு தரப்பு மீது பொறுப்பை சுமத்தாது சகலரும் ஒன்றிணைந்து எழுர்ச்சி பெற வேண்டும். நாம் இதுவரை எந்தவொரு கடனையும் திரும்ப செலுத்தாது கைவிட்டதில்லை. நாட்டில் இருக்கின்ற சகல பணத்தையும் சுரண்டியேனும் அடுத்த வாரம் இந்த கடன் தொகையை செலுத்திவிடுவோம், செலுத்தவில்லை என்றால் நாம் பாரிய நெருக்கடியில் விழுவோம் என்றார். 

ஒரு வாரத்திற்குள் நாடு பாரிய நெருக்கடிக்குள் விழும் ஆபத்து - பந்துல குணவர்தன | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கடன் பிரச்சினை ஏற்படாமல் இருக்க…

நாடு, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து… சிங்களவர்களால், தமிழர் மீது வலிந்து திணிக்கப் பட்ட இனப் பிரச்சினை தான் காரணம் என்று அமைச்சருக்கு தெரிந்து இருந்தாலும்… அதனை ஒரு காரணமாக எந்த இடத்திலும் குறிப்பிட அவர் மனம் விரும்பவில்லை.

ஏனென்றால்… பிரச்சினைகளை, திசை திருப்பி… குளிர்காய விரும்புவதுதான் சிங்களவர் குணாதிசயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

இந்த கடன் பிரச்சினை ஏற்படாமல் இருக்க…

நாடு, சுதந்திரமடைந்த காலத்திலிருந்து… சிங்களவர்களால், தமிழர் மீது வலிந்து திணிக்கப் பட்ட இனப் பிரச்சினை தான் காரணம் என்று அமைச்சருக்கு தெரிந்து இருந்தாலும்… அதனை ஒரு காரணமாக எந்த இடத்திலும் குறிப்பிட அவர் மனம் விரும்பவில்லை.

ஏனென்றால்… பிரச்சினைகளை, திசை திருப்பி… குளிர்காய விரும்புவதுதான் சிங்களவர் குணாதிசயம்.

என்னிடம் ஒரு 600ம் இருக்குது, நீங்கள் ஒரு 400ம் தந்தால், அடுத்த கிழமை 1பி பிரச்சனைக்கு உதவலாம்.

என்ன சொல்லுறியள்?🤔

****

ஜே ஆர் ஜெயவர்த்தன காலத்தில் இருந்து மீடியா மேல் அடக்குமுறை பாவித்து, சிங்கள மக்களுக்கு எவ்வித உண்மையான தகவலும் போகாமல் செய்தார்கள். முள்ளிவாய்க்கால் பேரழிவு குறித்த சேனல் 4, செய்திகளை கூட மடக்கினார்கள்.

சகலமும் தாண்டி, இன்று சிங்களமக்களும் சில செய்திகளை பார்க்கிறார்கள். நியாயமும் புரிகிறது.

சீனாவினால் வரும் ஆபத்தும், அரசின் நிலையால், புலம் பெயர் தமிழ் முதலீடுகள் நாட்டினுள் வர முடியாமல் உள்ளத்தையும் உணர்கிறார்கள்.

ஆனால் சகலமும், திரும்ப முடியாத, ஒரு வழிப்பாதையில் போய், நீண்ட காலமாகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Nathamuni said:

என்னிடம் ஒரு 600ம் இருக்குது, நீங்கள் ஒரு 400ம் தந்தால், அடுத்த கிழமை 1பி பிரச்சனைக்கு உதவலாம்.

என்ன சொல்லுறியள்?🤔

இரண்டு பேரும் சேர்ந்து… அந்த 1பி பிரச்சினையை வாற கிழமை சமாளித்தாலும்…

2029’ம் ஆண்டு வரை… பல பி கட்ட வேணுமாமே. அதுக்கு நம்மால் முடியாதப்பா… 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இரண்டு பேரும் சேர்ந்து… அந்த 1பி பிரச்சினையை வாற கிழமை சமாளித்தாலும்…

2029’ம் ஆண்டு வரை… பல பி கட்ட வேணுமாமே. அதுக்கு நம்மால் முடியாதப்பா… 🤣

ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம்.

மிச்சத்தை தல கோசன் பார்த்துக்கொள்ளுவார். ஆள், வேர்ல்ட் பாங்குக்கே கடன் கொடுக்கக்கூடிய பசை பார்ட்டி. பெரும் முதலை. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம்.

மிச்சத்தை தல கோசன் பார்த்துக்கொள்ளுவார். ஆள், வேர்ல்ட் பாங்குக்கே கடன் கொடுக்கக்கூடிய பசை பார்ட்டி. பெரும் முதலை. 😁

வேர்ல்ட் பாங்க்குக்கு… கடன் குடுக்கிற ஆள் என்றால்…  முதலை 🦎  இல்லை.  🦕 டைனேசர் 🦖  🤣

🏃🏽தமிழ்சிறி🏃🏽‍♂️ எஸ்கேப்பு… 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே எனக்கும் கொஞ்சம் கிள்ளித் தெளியுங்கோவன்.😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பிழம்பு said:

அடுத்த வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக நாம் செலுத்தியாக வேண்டும், இவ்வாறு மிகப்பெரிய தொகையை கடனாக வழங்குவது இலகுவான விடயமல்ல. அவ்வாறு கொடுக்காது போனால் நாம் வங்குரோத்து நாடாக மாறுவோம்.

ஏற்கெனவே வங்குரோத்திலதான் நாடு இருக்கு என்பது இவருக்கு புரியவில்லையா,  நடிக்கிறாரா? ராஜபக்க்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை எடுத்தாலே போதும் கடன் கட்டலாம். வெளிநாடுகளில் கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்திக்கொண்டு, பணத்தையும் வெளிநாடுகளில் பதுக்கி, குடியுரிமை பெற்றுக்கொண்டு மக்கள்மேல் கடன் சுமையை ஏற்றிவிட்டு வெளிநாடுகளில் குடியமர்ந்து விடுவினம். கஸ்ரப்படுவது சாதாரண மக்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு முன்பு வீரகேசரியில் வாசித்த ஒரு கவிதை நினைவுக்கு வருகின்றது.

 

***

 

தலைப்பு: ஏணி

 

ஏறும்வரை

நீ வேண்டும்!

ஏறியபின் எதற்கு

நீ வேண்டும்?

 

***

 

இப்போது ஏணியை இலங்கை நாடு என்று நினையுங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, பிழம்பு said:

நாட்டின் பொருளாதார நெருக்கடி என்பது ஒரு நாளில் வருவதும் அல்ல, நீண்டகாலமாக தீர்வு காணப்படாத பிரச்சினைகள் இறுதியாக நெருக்கடியை  உருவாகும். 

இறுதி நிலைக்கு சிறிலங்கா வந்திட்டுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, satan said:

ஏற்கெனவே வங்குரோத்திலதான் நாடு இருக்கு என்பது இவருக்கு புரியவில்லையா,  நடிக்கிறாரா? ராஜபக்க்ஷ குடும்பத்தினர் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள பணத்தை எடுத்தாலே போதும் கடன் கட்டலாம். வெளிநாடுகளில் கடன் வாங்கி சொகுசு வாழ்க்கை நடத்திக்கொண்டு, பணத்தையும் வெளிநாடுகளில் பதுக்கி, குடியுரிமை பெற்றுக்கொண்டு மக்கள்மேல் கடன் சுமையை ஏற்றிவிட்டு வெளிநாடுகளில் குடியமர்ந்து விடுவினம். கஸ்ரப்படுவது சாதாரண மக்களே.

அப்படி ஒரு நிலை வந்தால் உவையளை நம்பி வடக்கு கிழக்கில் அரசியல் செய்யும் எம்மவர்கள் பாவம்....சில நேரம் அவையளையும் கூட்டிகொண்டு போவினம் ....வெளிநாட்டில் பாதுகாப்பு வீரர்களாக வைச்சிருப்பதற்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது கஷ்டப்படுகிறவனுக்கு கடன் கொடுத்தால் சிறிது சிறிதாகவாவது அந்த கடன் திரும்பக் கிடைக்கும் ......பிச்சைகாரனுக்கு கடன் குடுத்தால் அதை வசூலிக்க முடியுமா.....!

முதலில் வட்டி வேண்டாம் என்பார்கள்...... சில வருடங்களின் பின் அசலில் அரைவாசி தந்தால் போதும் என்பார்கள் .......அதன் பின் அங்கும் அரசு மாறி  இங்கும் அரசு மாறி ஒருத்தர் மீது ஒருத்தர் பழி போட்டுக்கொண்டிருக்க நாடு கடனில் மூழ்காது கடன்தான் கடலில் மூழ்கும்.......!  😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம்.

மிச்சத்தை தல கோசன் பார்த்துக்கொள்ளுவார். ஆள், வேர்ல்ட் பாங்குக்கே கடன் கொடுக்கக்கூடிய பசை பார்ட்டி. பெரும் முதலை. 😁

ஏனப்பா அந்தாளை இழுக்கிறியள்,அந்தாள் சிவனே எண்டு லீவு முடிந்து வேலையிலை மும்முரமாக இருக்குது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

யாராவது கஷ்டப்படுகிறவனுக்கு கடன் கொடுத்தால் சிறிது சிறிதாகவாவது அந்த கடன் திரும்பக் கிடைக்கும் ......பிச்சைகாரனுக்கு கடன் குடுத்தால் அதை வசூலிக்க முடியுமா.....!

முதலில் வட்டி வேண்டாம் என்பார்கள்...... சில வருடங்களின் பின் அசலில் அரைவாசி தந்தால் போதும் என்பார்கள் .......அதன் பின் அங்கும் அரசு மாறி  இங்கும் அரசு மாறி ஒருத்தர் மீது ஒருத்தர் பழி போட்டுக்கொண்டிருக்க நாடு கடனில் மூழ்காது கடன்தான் கடலில் மூழ்கும்.......!  😎

👆🏼இதுதான் உண்மை.

 

13 hours ago, Nathamuni said:

ஏதோ நம்மால் முடிந்ததை செய்வோம்.

மிச்சத்தை தல கோசன் பார்த்துக்கொள்ளுவார். ஆள், வேர்ல்ட் பாங்குக்கே கடன் கொடுக்கக்கூடிய பசை பார்ட்டி. பெரும் முதலை. 😁

 

Link to comment
Share on other sites

அரசாங்கத்துக்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் ஹர்ஷ டி சில்வா

 
அரசாங்கத்துக்கு முக்கிய கோரிக்கையை முன்வைத்தார் ஹர்ஷ டி சில்வா
 

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை ஒன்றை அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாணயத்தாள்களை அச்சிடுவதன் ஊடாக மாத்திரம் நாட்டை அபிவிருத்தி செய்து விட முடியாது என்பதை அரசாங்கம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது நாடு, பாரிய பொருளாதார பின்னடைவை முதன் முறையாக சந்தித்துள்ளது.  அதனை கட்டியெழுப்புவதற்கு உடனடி நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிடின் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் நாணயத்தாள்களை அச்சிடுவதன் ஊடாக நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது என்பதுடன் இலங்கை ரூபாயின் நாணய பெருமதி மேலும் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளது என ஹர்ஷ டி சில்வா  கவலை வெளியிட்டுள்ளார்.

ஆகவே, இந்த விடயத்தில் உரிய தீர்வொன்றினை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைப்  அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என  அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://athavannews.com/2021/1226352

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருட இறுதிக்குள் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்த்துள்ளோம் - அஜித் நிவாட் கப்ரால்

(நா.தனுஜா)

கொவிட் பரவல் காரணமாக இவ்வருட இறுதிக்குள் எதிர்பார்த்த 6 வீத சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள மீட்சிக்கான செயற்திட்டங்கள் மூலம் 2021 ஆம் ஆண்டு முடிவில் 5 - 5.5 சதவீதம் வரையான பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்ப்பதாக நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக நாட்டின் இறையாண்மைக்கும் சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான நிபந்தனைகளுக்கு அடிபணிய முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், அவ்வரிச்சலுகை நீக்கப்படுவதால் பொருளாதார ரீதியில் பாரியதொரு சேதம் ஏற்படாது என்றும் அதனை எதிர்கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

36.jpg

இன்று வெள்ளிக்கிழமை கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இணையவழி கலந்துரையாடலில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,  

கேள்வி - தற்போது நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாகவும் அது மிகமோசமான வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்றும் கூறப்படுகின்றது. இதன் உண்மை நிலைவரம் என்ன?

பதில் - நாட்டில் போர் இடம்பெற்றுக்கொண்டிருந்த 2006 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும், எரிபொருட்களின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும் காலப்பகுதியிலும் மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துவிடும் என்றுதான் கூறப்பட்டது. இது தற்போது புதிதாகக் கூறப்படுகின்ற விடயமல்ல. எமது அரசாங்கம் பதவியேற்றுக்கொண்டதிலிருந்து பல்வேறு தரப்பினராலும் இவ்வாறு கூறப்பட்டுவருகின்றது. நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வித நெருக்கடிகளும் இல்லை என்று நான் கூறவில்லை. அதில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் பொருளாதாரம் வீழ்ச்சியடையப்போவதாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலராலும் கூறப்படும் விடயங்கள் அரசியல் கோணத்தை மையப்படுத்தியவையாகும். பொருளாதாரத்தில் பிரச்சினைகள் காணப்படுவதாகக் கூறுகின்ற எந்தவொரு தரப்பினரும் அதற்கான தீர்வுகளைக்கூற முன்வரவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எமது நாடு மாத்திரமன்றி உலகின் அநேக நாடுகள் பலகாலம் தொடர்ச்சியாக முடக்கப்பட்டிருந்தன. அதனால் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்குப் பங்களிப்புச்செய்கின்ற பல்வேறு துறைகளும் சிக்கல்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. ஆகவே இவ்விடயத்தைப் பொறுத்தவரையில், குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதையும் பிரச்சினைகளை மாத்திரமே சுட்டிக்காட்டுவதையும்விடுத்து, அவற்றுக்கான தீர்வுகளைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

கேள்வி - நாட்டின் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தியிருக்கின்றார். இதுகுறித்த உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பதில் - பொருளாதாரத்தின் மீட்சிக்கு ஒவ்வொரு தரப்பினரும் பல்வேறு வழிமுறைகளையும் நிலைப்பாடுகளையும் கொண்டிருக்க முடியும். சிலர் வரையறுக்கப்பட்ட அல்லது தவறான தரவுகளை மாத்திரம் மேற்கோள்காட்டி, சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகோருமாறு கூறுகின்றார்கள். ஆனால் அவ்வாறு கூறுகின்றவர்கள் கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்தபோது சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகோரியதால் ஏற்பட்ட நெருக்கடிகள் தொடர்பில் பேசுவதில்லை.

ஆகவே இதுவிடயத்தில் எம்மிடம் மாற்றுயோசனைகள் உள்ளன. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக ஏற்கனவே பல்வேறு செயற்திட்டங்களை வகுத்து, அவற்றை நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம். எம்மை வீழ்ச்சியுறச்செய்வது மாத்திரமே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். அதனை செவிமடுத்து, முறையற்ற கொள்கைகளை வகுப்பதற்கு நாம் தயாரில்லை.

கேள்வி - கொவிட் - 19 வைரஸ் பரவலின் முதலாம், இரண்டாம் அலைகளின் பின்னர் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. எனினும் ஓரளவு இயல்புநிலைக்குத் திரும்பிவந்த பொருளாதாரம், தற்போது மீண்டும் ஏற்பட்ட வைரஸ் பரவல் அலை காரணமாக நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றது. எனவே ஏற்கனவே கூறியதன்படி இவ்வருட முடிவில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவது சாத்தியமா?

பதில் - இவ்வருட இறுதியில் பொருளாதார வளர்ச்சியை 6 சதவீதமாகப் பேணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போதைய சூழ்நிலைகளை அடிப்படையாகக்கொண்டு நோக்குகையில் அது சற்றுக் கடினமானதாகவே அமையும். நாட்டில் நீண்டகாலத்திற்கு அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தமை அதற்குப் பிரதான காரணமாகும். எனினும் எதிர்பார்க்கப்பட்டதை விடவும் விரைவிலேயே நாட்டை மீளத்திறக்க முடிந்திருக்கிறது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், அனைவருக்கும் வெகுவிரைவில் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுத்து ஏனைய நடவடிக்கைகளை இயல்புநிலைக்குத் திருப்பவேண்டும். குறிப்பாக சுற்றுலாத்துறையின் செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுக்கப்பட வேண்டும். வெளிநாடுகளிலிருந்து வருகைதரும் விமானங்கள் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும். சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்குக் கிடைத்த வருமானம் கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக முழுமையாக வீழ்ச்சியடைந்திருக்கிறது.

அதேபோன்று பயணக்கட்டுப்பாடுகளின்போது அனைத்து நிறுவனங்கள், வணிகங்களும் மூடப்படுவதால் அவற்றின் வருமானம் வீழ்ச்சியடையும். அதன் விளைவாக அவை அரசாங்கத்திற்குச் செலுத்துகின்ற வரியின் அளவிலும் வீழ்ச்சி ஏற்படும். மக்களின் உயிரைப் போன்றே அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும். அதற்குரிய நடவடிக்கைகயை மேற்கொள்வதுடன் தற்போதைய நிலை மேலும் மோசமடையாமல் பேணுவதற்கும் வெகுவிரைவில் இயல்புநிலையை அடைவதற்கும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இவற்றின் ஊடாக வருட இறுதியில் 6 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைந்துகொள்ள முடியாவிட்டாலும், 5 அல்லது 5.5 சதவீதம் வரையில் பொருளாதார வளர்ச்சியைப் பேணுவதற்கு எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி - சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பது தொடர்பில் புதிய தீர்மானங்கள் எவையேனும் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

பதில் - நாட்டை மீண்டும் இயல்புநிலைக்குத்திருப்பி, முழுமையாகத் திறப்பதே இதற்கான அடிப்படையாகும். சுகாதாரத்தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு நாம் எவ்வித இடையூறையும் ஏற்படுத்தவி;ல்லை. ஆனால் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மீண்டும் நாட்டைத் திறப்பதற்கும் பொருளாதார நடவடிக்கைகளை இயல்புநிலைக்குத் திருப்புவதற்கும் தீர்மானித்திருக்கின்றன. நாமும் உரிய சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றுவதுடன் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதன் ஊடாகப் இயல்புநிலைக்கு திரும்பினால், நாட்டின் பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும்.

கேள்வி - இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை இடைநிறுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி குறித்த வரிச்சலுகை இல்லாமல்போகுமா? அவ்வாறு இல்லாமல்போகுமாயின், அதனை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் எவை?

பதில் - முதலில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கு ஏற்றுமதிகளைச் செய்யும்போது கிடைக்கின்ற வரிச்சலுகையாகும். இந்த வரிச்சலுகையானது பொலிவியா, ஆர்மேனியா, பாகிஸ்தான், மொங்கோலியா, பிலிப்பைன்ஸ், இலங்கை உள்ளடங்கலாக ஒன்பது நாடுகளுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. ஏனைய நாடுகளுக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படவில்லை.

அதேபோன்று ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படும்போது அதற்காகப் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அவை பொருளாதாரம் சார்ந்த நிபந்தனைகள் அல்ல. மாறாக நாடொன்றின் கொள்கைகள், மனித உரிமைகள் உள்ளிட்ட பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்ட விடயங்கள் சார்ந்த நிபந்தனைகளாகவே இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு கடந்த 2002 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையானது, போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் எமது நாட்டில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்பட்டு 2010 ஆம் ஆண்டில் இல்லாமல்செய்யப்பட்டது. அப்போதும் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையப்போகின்றது என்பது உள்ளடங்கலாக இப்போது முன்வைக்கப்படும் அனைத்துக் கூச்சல்களும் எழுந்தன. ஆனால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்பட்டதிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையான காலத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட்டுவந்த ஏற்றுமதிகளை விடவும் 2010 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் ஏற்றுமதிகளின் அளவு 20 சதவீதத்தினால் அதிகரித்தது. இவர்கள் கூறுவதைப்போன்று பொருளாதார வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை.

பின்னர் மீண்டும் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை எவ்வாறு மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட 30ஃ1 தீர்மானத்திற்கு உடன்படுவதாகக் கூறினார்கள். எமது இராணுவ வீரர்களை சிறைகளில் அடைத்தார்கள். சிறையிலிருந்த தீவிரவாதிகளை விடுதலை செய்தார்கள். அதன்மூலமே அந்த வரிச்சலுகை மீண்டும் பெறப்பட்டது. இவையனைத்தும் பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் அல்ல. மாறாக அரசியல் நடவடிக்கைகள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அந்த வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கான தீர்மானம் ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. எனவே எமது கொள்கைகள் மற்றும் நாட்டின் இறையாண்மை தொடர்பில் நாம் அவர்களுக்கு விளக்கமளிக்க முடியும். இல்லாவிட்டால், ஜி.எஸ்.;பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படும் பட்சத்தில் அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து ஆராயவேண்டும். அடுத்தவாரமளவில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டு, உரிய செயற்திட்டங்கள் வகுக்கப்படும். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல், எமது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கும் அதேவேளை பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதற்கான கொள்கைகளும் திட்டங்களும் தயாரிக்கப்படும்.

கேள்வி - கடந்த காலத்தில் வேறு எவ்வித அழுத்தங்களும் காணப்படாததன் காரணமாக ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்ட போதிலும் அதற்கு சிறப்பாக முகங்கொடுக்க முடிந்தது. எனினும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பொருளாதாரம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில், இந்த வரிச்சலுகையும் நீக்கப்பட்டால் அதற்கு முகங்கொடுப்பது சாத்தியமா?

பதில் - கடந்த காலத்திலும் இதேபோன்ற கருத்துக்கள்தான் கூறப்பட்டன. போரை வெற்றிகொள்ளமுடியாது என்றும் கூறப்பட்டது. அதேபோன்று, இப்போது கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தச் சவாலுக்கும் முகங்கொடுப்பது கடினம் என்கிறார்கள். நாட்டின் இறையாண்மையைப் பாதிக்கும் நிபந்தனைகளுக்கும் அழுத்தங்களுக்கும் அடிபணியமுடியாது என்பதே எமது கொள்கையாகும். ஆகவே இந்தச் சவாலுக்கு முகங்கொடுப்பதற்குத் தயாராகிவருகின்றோம்.

கேள்வி - அண்மைக்காலத்தில் ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சிகண்டுவரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

பதில் - எந்தவொரு விடயத்திலும் இலக்கு ஒன்று இருக்கவேண்டு;ம். அதனை குறித்த காலப்பகுதிக்குள் அடைவது சாத்தியமில்லாவிடினும், அதனை அடைவதற்கு முயற்சிக்க வேண்டும். அதேபோன்று ரூபாவின் பெறுமதியை நிலையான மட்டத்தில் பேணுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்பார்த்த காலப்பகுதியில் அதனை அடையமுடியாதுபோனாலும், அந்த இலக்கை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.

நான் மத்திய வங்கியின் ஆளுநராகப் பதவிவகித்தபோது டொலருக்கெதிரான ரூபாவின் பெறுமதி 131 ஆகக் காணப்பட்டது. எனினும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அது 185 ரூபா வரை அதிகரித்தது. அதன் காரணமாகவே தற்போது டொலருக்கெதிரான ரூபாவின் பெறுமதி 200 ஐ அண்மிக்கக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கடந்த அரசாங்கம், அதாவது தற்போதைய எதிர்க்கட்சி தமது காலத்தில் இடம்பெற்ற தவறுகளை மறைத்துக்கொள்வதற்கு எம்மீது குற்றஞ்சுமத்துகின்றார்கள்.

கேள்வி - எரிபொருள் விலையதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திற்குள்ளேயே பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன அல்லவா?

பதில் - எந்தவொரு அரசாங்கமும் தமது நாட்டுமக்கள் சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதை விரும்பாது. அந்தவகையில் எரிபொருள் விலையேற்றத்திற்கு அரசாங்கத்திற்குள்ளேயே எதிர்ப்புக் கிளம்புவது இயல்பானதாகும். ஆனால் இப்போது எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால், எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலையேற்படும்.

எதிர்வரும் காலத்தில் உலகசந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடையும் போது, அதன்மூலம் கிடைக்கும் நன்மையை எமது நாட்டுமக்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடியும். இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் எரிபொருள் விலை மிகவும் குறைந்த மட்டத்திலேயே பேணப்படுகின்றது என்று குறிப்பிட்டார்.

வருட இறுதிக்குள் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைவதற்கு எதிர்பார்த்துள்ளோம் - அஜித் நிவாட் கப்ரால் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குண்டு  குண்டாக  தமிழரின் தலையில்  கொட்டி

ஒவ்வொரு  அங்குலமாக பிடித்த  எம்  மண்ணையும்

வட்டியாக தன் மண்ணையும்  சேர்த்து  விற்றாலும்

முடியாது  இந்த  வட்டிக்கடன்

எவ்வளவு  சொன்னாலும்  மதம்  பிடித்தவனுக்கு????

Link to comment
Share on other sites

51 minutes ago, விசுகு said:

குண்டு  குண்டாக  தமிழரின் தலையில்  கொட்டி

ஒவ்வொரு  அங்குலமாக பிடித்த  எம்  மண்ணையும்

வட்டியாக தன் மண்ணையும்  சேர்த்து  விற்றாலும்

முடியாது  இந்த  வட்டிக்கடன்

எவ்வளவு  சொன்னாலும்  மதம்  பிடித்தவனுக்கு????

யாருக்கு எதை சொன்னீர்கள்? 

நீங்கள் சண்டை பிடித்திருக்காவிட்டால் அவர்கள் கடன்வாங்க வேண்டியநிலை வந்திருக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, கற்பகதரு said:

யாருக்கு எதை சொன்னீர்கள்? 

நீங்கள் சண்டை பிடித்திருக்காவிட்டால் அவர்கள் கடன்வாங்க வேண்டியநிலை வந்திருக்காது.

குடுக்க வேண்டியதை குடுத்தால் ஏன் சண்டை சச்சரவு வரப்போகுது கற்பகத்தார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கற்பகதரு said:

யாருக்கு எதை சொன்னீர்கள்? 

நீங்கள் சண்டை பிடித்திருக்காவிட்டால் அவர்கள் கடன்வாங்க வேண்டியநிலை வந்திருக்காது.

உடல் நலம் சார்ந்து எந்த பிரச்சினையும் இல்லைத்தானே  சகோ?

நலம்  தானே???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பிழம்பு said:

அடுத்த வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக நாம் செலுத்தியாக வேண்டும், இவ்வாறு மிகப்பெரிய தொகையை கடனாக வழங்குவது இலகுவான விடயமல்ல. அவ்வாறு கொடுக்காது போனால் நாம் வங்குரோத்து நாடாக மாறுவோம்

☺️..😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கற்பகதரு said:

யாருக்கு எதை சொன்னீர்கள்? 

நீங்கள் சண்டை பிடித்திருக்காவிட்டால் அவர்கள் கடன்வாங்க வேண்டியநிலை வந்திருக்காது.

ஏன்  சண்டை பிடிக்க வேண்டி வந்தது ?

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

உடல் நலம் சார்ந்து எந்த பிரச்சினையும் இல்லைத்தானே  சகோ?

நலம்  தானே???

இதையா சொன்னீர்கள்? ஏதோ உங்கள் புண்ணியத்தால் முன்னர் இருந்த பிரச்சினைகள் இல்லாமல் போனதால் உடல்நலம் முன்னேறியிருக்கிறது.🙂

1 hour ago, பெருமாள் said:

ஏன்  சண்டை பிடிக்க வேண்டி வந்தது ?

சண்டியர்கள் இருந்ததால் சண்டைபிடிக்க வேண்டிவந்தது. இப்ப சண்டை இல்லையல்லவா?🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, கற்பகதரு said:

சண்டியர்கள் இருந்ததால் சண்டைபிடிக்க வேண்டிவந்தது. இப்ப சண்டை இல்லையல்லவா?🙂

1958 ல் தொடங்கி தமிழரை இனவழிப்பு செய்தவர்கள் இப்ப இல்லையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, கற்பகதரு said:

இதையா சொன்னீர்கள்? ஏதோ உங்கள் புண்ணியத்தால் முன்னர் இருந்த பிரச்சினைகள் இல்லாமல் போனதால் உடல்நலம் முன்னேறியிருக்கிறது.🙂

சண்டியர்கள் இருந்ததால் சண்டைபிடிக்க வேண்டிவந்தது. இப்ப சண்டை இல்லையல்லவா?🙂

நான் நினைத்தேன் வயதாக வயதாக சில விடயங்கள் மரத்து போகும் என்பார்கள். 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.