Jump to content

"போர்க்காலச் சூழல்தான் என்னை வளர்த்தது..." என்னும் ஜெயரஞ்சினியின் சாட்சியம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"ஆ உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்..." என்றுதான் எங்கள் ஊடகவியலாளர்கள் பேட்டிகளை ஆரம்பிப்பார்கள் என்று கொஞ்ச நாளைக்கு முன்னம் ஒரு பதிவு போட்டிருந்தேன்.

இந்தப் பெண் ஊடகவியலாளர் கொஞ்சம் வித்தியாசமாக ஆரம்பிக்கிறார், "சரி உங்களில் இருந்து ஆரம்பிப்போம்..." என்று. 😍😍
அந்த ஊடகவியலாளரிடம் அகப்பட்ட நம்ம ஆள், Jeyaranjinee Gnanadas "தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி" இல் இருந்து ஆரம்பிக்கிறா. "கலை வளம் நிறைந்த பாடசாலை என்னுடைய பாடசாலை...." என்றபடி....
இந்தப் பேட்டியில் எனக்குப் பிடித்த ஒரே விசயம்: "போர்க்காலச் சூழல்தான் என்னை வளர்த்தது..." என்னும் ஜெயரஞ்சினியின் சாட்சியம்.
30 வருட ஆயுதப் போராட்டம் தோல்வியில் முடிந்தது, தோல்வியில் முடிந்தது என்று சிலர் அரை வேக்காட்டுத்தனமாக தொடர்ந்து உழறிக் கொண்டிருக்கிறார்கள்.
"ஆட்சியைப் பிடிப்பதுதான் போராட்டத்தின் வெற்றி" என்பது போல் வியட்நாம் போர், கியூபாப் புரட்சி பற்றியெல்லாம் பொதுப் புத்தியில் வகுபெடுக்கிறார்கள்.
உண்மையில் மக்கள் போராட்டங்களின் நோக்கம், "வெற்றி" அல்ல!
"மாற்றமும் பரிணாம வளர்ச்சியுமே" போராட்டங்களின் நோக்கம்.
கீதை முதல் கார்ல் மார்க்ஸ் வரை உரைப்பது அதைத்தான்.
30 வருட எங்கள் போராட்டம் அதை பல்வேறு தளங்களில் நிகழ்த்தியுள்ளது. அதற்கான ஒரு சாட்சியாக கலாநிதி ஜெயரஞ்சினியும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியே!
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.