Jump to content

வட பகுதி கடல்வளத்துறை... இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்! கலாநிதி. சூசை ஆனந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வட பகுதி கடல்வளத்துறை இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்! கலாநிதி. சூசை ஆனந்தன்!

வட பகுதி கடல்வளத்துறை... இப்போது திராவிடர்,சிங்களவர்,சீனர் கைகளில்! கலாநிதி. சூசை ஆனந்தன்!

இதுவரையில் வட பகுயின் கடல் வளங்களானது ஒரு புறத்தில் தென்இந்திய திராவிடர்களாலும்,மறுபுறத்தில் தென்பகுதி சிங்களவர்களாலும் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்க இப்போது சீனர்களும் கரையோர ஏரிப்பகுதிகளில் கடலட்டைவளர்ப்பு என்று களம் இறக்கப்பட்டிருக்கின்றனர்.

ஒட்டு மொத்தத்தில் வடபகுதி கடல்வளம் அந்நியரால் விழுங்கப்பட வடபகுதி மீனவர்களோ பிச்சைப்பாத்திரம் ஏந்தும் பரிதாப நிலைக்குத்தள்ளப்பட்டிருக்கின்றனர்.

தென்னிந்திய திராவிடர்கள்

தென் இந்திய திராவிடர்கள் ,அழிவை ஏற்படுத்துகின்ற இழுவைமடியினை( bottom trawl net) பாரிய இயந்திரப்படகுள் கொண்டு பாக்கு நீரிணை,பாக்கு குடாப்பகுதிகளை ஆக்கிரமிக்க ,தூத்துக்குடி மீனவர்கள் இராட்சத படகுகள் கொண்டு மன்னார் குடாக்கடலையும்(Gulf of Mannar) ஆக்கிரமிப்புச் செய்து அங்குள்ள வளங்களை எதுவித எதிர்ப்புமின்றித் தாராளமாகச் சூறையாடிச் செல்லுகின்றனர்.

சிங்கள மீனவர்கள்

மறு புறமாக சிங்கள மீனவர்கள் கிழக்கே வங்காள விரிகுடாக்கடலில் பலநாட் கலங்கள் கொண்டு பேதுரு( pedro bank) மீன்பிடித்தளம் சார்ந்த பகுதிகளையும்,மன்னார் கரையோரமாக தலைமன்னார் முதல் முள்ளிக்குளம் ஈறாக உள்ள நீண்டநாள் கரையோரப் பகுதிகளையும்,முல்லைத்தீவிலே கொக்கிளாய், நாயாறு ஏரிகளையும் ஆக்கிரமித்துள்ளதுடன் அங்குள்ள கரைவலைப்பாடுகளையும், தம்வசப்படுத்தியுள்ளனர். யாழ்குடாவில் மைலிட்டித் துறைமுகத்தினையும் ஆக்கிரமித்து பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்புடன் வளங்களை வகைதொகையின்றி அள்ளிச் சென்றுகொண்டிருக்கின்றனர்.அத்துடன் போர்க்காலத்தில் ஆக்கிமிக்கப்பட்ட வலிவடக்கின் பெரும்பகுதி இன்னமும் உரியவர்களிடம் மீளக் கையளிக்கப்படவில்லை.மாறாக அப்பகுதிகளில் படைத்தரப்பினர் மரக்கறிச் செய்கையில் ஈடுபட்டு உள்ளூர் விவசாயிகளின் வயிற்றில் அடடிப்பதாக விவசாயிகள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.அரசோடு ஒட்டி உறவாடும் தமிழ் அமைச்சர்களுக்கு கொக்கிளாய் நாயாறு, வலிவடக்கு இது குறித்து கவலை இருப்பதாகத் தெரியவில்லை.

சீன மீனவர்கள்

இந்தத் தொல்லைகள் போதாதென்று எஞ்சிய கரையோர ஏரிப்பகுதிகள் வளர்ப்பு பண்ணைகளுக்காக சீனர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன.

 

தெற்கு ஊடாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் கடலட்டையின் உற்பத்தி பூநகரி முதல் மன்னார் வரையிலான கடற்பிரதேசத்தில் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இக் குறித்த கரையோரப் பிரதேசமானது ஆழம் மிக குறைவானதும், சேற்றுப்பகுதியாகவும் கண்டல் காடுகளையும், வற்றுப்பெருக்கு மேடுகளைக் கொண்டதுமான வளமிக்க ஓர்பகுதியாகும்.கடலட்டை,இறால்,பச்சை நண்டு (green crab) வளர்ப்பிற்கான மிகச்சிறந்த சமுத்திரச் சூழலைக் கொண்ட ஓர் பகுதியாகும்.இப்பகுதி நீரில் வளர்ப்பிற்காக முழுமையான பயன்பாட்டிற்கு இதுவரை கொண்டு வரப்படவில்லை.மூலதனப் பற்றாக்குறை, வளர்ப்பிற்கான தொழில்நுட்பம் இன்மை, ஆளணிப்பற்றாக்குறை, நிறுவனரீதியான ஆதரவின்மை,அரச ஆதரவின்மை, போன்ற பல்வேறு காரணிகளால் உள்ளூர் மீனவர்களால் இத்தகைய நீரில் வளர்ப்பினை நல்ல முறையில் வெற்றிகொள்ளமுடியாதநிலை காணப்படுகின்றது.இதனால் இப்பகுதி உள்ளுர் முகவர்களின் உதவியுடன் தென்பகுதி முதலீட்டாளர்களினால் இலகுவில் இலக்கு வைக்கப்பட்டு விடுகின்றன.

இவ்வாறான பின்னணியில் சீனர்கள் 2015 களிலேயே இப்பகுதிகளில் களம்இறக்கப்பட்டுவிட்டதாக இப்பகுதி மீனவர்கள் கூறுகின்றனர். தெற்கிலே பல்வேறு அபிவிருத்திப் பணிகளிலும் சீனர்கள் ஈடுபட்டு வருவது புதிய விடயமல்ல. மீன்பிடித்துறைகளிலும் இவர்கள் ஈடுபட்டு வருவது இப்பகுதி மீனவர்களிடையே ஒருவித பயப்பீதியை ஏற்படுத்தியிருக்கிறது.ஏற்கனவே மூன்று தீவுகளில் காற்றாலைமூலமான மின்உற்பத்தி வேலைகளில் ஈடுபட்டுள்ளமையும் சர்ச்சைக்குரியதாகவுள்ளது.வடபகுதியில் சீனர்களின் பிரசன்னம் இந்தியாவுக்கு கடும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளதுபோலவே படுகிறது.அகவர்கள் கோட்டை விட்டுவிட்டு இப்போது ஒப்பாரி வைப்பதில் பயனில்லை.

இதனுடன் தொடர்புடைய நக்டா ( NAQDA ) என்ற நிறுவனம் இத்துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்காற்றி வருவது கவரவேற்கத்தக்கது. மேலும் வினைத்திறனுடன் நக்டா தமது சேவையை இத்துறைசார்ந்து முன்னெடுக்கவேண்டும் என்பது எமது அவா.

வடபகுதியிலிருந்து பெறப்படும் நண்டு,கணவாய், இறால், கடலட்டை,சங்குச் சதை,மட்டி போன்றவைகளின் விலைகள் வெளிச்சந்தைகளில் மிக உயர்ந்து காணப்படுகிறது. இப்பகுதிகளில் கடலுணவுகள் சந்தைப்படுத்தல் பொறிமுறையானது அரசியல்வாதிகளின் பிடிக்குள் சிக்கி தெற்கு இடைத்தரகர்களே அதிக இலாபத்தை ஈட்டிச்செல்லுகின்ற நிலையயைத் தோற்றுவித்துள்ளது.

வளமிக்க கரையோரப்பகுதிள் உள்ளூர் மீனவர்களால் மட்டும் பயன்படுத்தக் கூடியதாகவும் உற்பத்தியாளர்கள் அதன்பலாபலன்களைப் பெறக்கூடியவாறும் சந்தைப்படுத்தல் முறைகள் ஒழுங்கமைக்கப்படுவது அவசியம். ஊழல்மிக்க அரசியல்வாதிகள் மூலமாக தெற்கிலுள்ள அல்லது சீனா போன்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பண்ணைகள் வழங்கப்படுவது தடுக்கப்படவேண்டும்.கடலில் அட்டைகுளிப்பில் ஈடுபட்டு வரும் உள்ளூர் சுழியோடிளிடம் அரசு ஆதரவுபெற்ற அரசியல்வாதிகள் கப்பம் பெற்றே இதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளனர்.ஸ்கூபா மூலமான சுழியோடிப்பிடித்தல் தென்பகுதி மீனவர்களுக்கே வரப்பிரசாதமாக அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மீனவர்கூட்டுறவுச்சங்கங்கள் பிரதேச சபைகள் இதில் அக்கறை கொள்வதும் அவசியம்.

செயற்கை மீன்பண்ணைகள்

வடக்கில் கைவிடப்பட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட பஸ் வண்டிகள் வடபகுதி பாக்கு கடலில்அமிழ்த்தப்பட்டு மீன்வள விருத்திக்காக செயற்கை மீன்வாழிடக் கருவிகளாக உருவாக்கப்படுள்ளதாச் செய்திகள் வந்துள்ளன. மீன்களை ஒருங்கு சேர்க்கும் இந்த செயற்கை உறைவிடங்கள் இப்பகுதி மீன்வள விருத்திக்கு வலு சேர்க்கும் என கடற்றொழில் அமைச்சர் அவர்களால் இந்த அதிரடி முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.உலகின் பல இடங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆயினும் இந்த நடவடிக்கையானது இந்திய மீனவர்கள் தமது மீன்பிடித் தொழிலுக்கு இடைஞ்சலானது என ஆர்ப்பாட்டம் நடாத்தியிருக்கின்றனர்.இந்திய மீனவர்கள் அத்துமீறி வடபகுதி கடலுக்குள் ஊடுருவும் செயற்பாடகளைக் கட்டுப்படுத்த தவறியதன் விளைவே இது எனலாம். இந்தியா தொடர்ந்தும் மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தவறியே வருகின்றது.சீனர்களின் பிரசன்னத்தை எதிர்மறையாகப் பார்க்கும் இந்தியா முதலில் தமதுநாட்டு மீனவர்களின் அத்துமீறியச் செயற்பாடுகளை நிறுத்துவது நல்லது. ஈழத்தமிழர்களை இந்தியா தொடர்ந்து வதைசெய்வதை நிறுத்த வேண்டுகின்றோம்.

நாட்டுப்படகுகளுக்கான அனுமதி

இதனிடையே இந்திய நாட்டுப்படகுகள் வடபகுதி கடலில் மீன் பிடிக்க அனுமதிப்பது தொடர்பான விடயங்கள் பேசுபொருளாக இருந்து வருகிறது. இத்தகையோர்களுக்கு அனுமதி வழங்ககினால் வடபகுதி மீனவர்கள் தூக்கு கயிற்றில் தொங்கவேண்டிய நிலையே ஏற்படும்.

ஏற்கனவே யுத்தத்தின் தாக்கத்தினால் நொந்துபோய் இருந்த மீனவர்கள் இழுவைமடி மீன்பிடி செயற்பாடுகள் காரணமாக சொல்லொணா துயரங்களுக்கும் ஆளாகியிருந்தனர் இவ்வாறான பின்னணியில் நாட்டுப்படகுகளுக்கும் அனுமதி வழங்கப்படுமானால் வடபகுதி மீனவர்கள் மீன்பிடித்தொழிலைக் கைவிட வேண்டியதுதான்.

வகைதொகையின்றி நாட்டுப் படகுகள் நுழைவதினால் வள அழிவு,மீனவர்கள் இடையிலான மோதல்கள்,களவு போன்ற விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். ஆகவே இவ்வாறான மீன்பிடி ஒப்பந்தங்கள் செய்துகொள்வது அறிவு பூர்வமான விடயமாக இருக்காது என்பது எமது கருத்து.

எவ்வாறாயினும் வடபகுதி பொருளாதார நடவடிக்கைகளில் பிரதான இடத்தினை வகித்திருந்த கடல்வளத்துறை பல அந்நியச்சக்திகளின் ஆக்கிரமிப்பினால் இன்று சிதைவடந்து போயுள்ளது. இதனை பழைய நிலைக்கு கொண்வருவதற்கான வாய்ப்புக்கள் மந்தமாகவேயுள்ளன.கடல்வளம்சார்ந்த அதிகாரங்களுடன் கூடிய அரசியல் தீர்வு இல்லையேல் இத்துறையில் தங்கிவாழ்வோரின் வாழ்வாதாரம் சீரழிந்து போகலாம்.

https://athavannews.com/2021/1226629

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, தமிழ் சிறி said:

தென்இந்திய திராவிடர்களாலும்

அட அங்கும் தொடங்கிட்டாங்க 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலட்டை குளிப்பதற்கு சீனர்கள் 50-60 வருடங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்துவிட்டார்கள். 😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kapithan said:

கடலட்டை குளிப்பதற்கு சீனர்கள் 50-60 வருடங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்துவிட்டார்கள். 😀

 

கடலட்டை வளர்ப்பது பற்றி பயிற்சி கொடுப்பதுக்கு வந்து போனார்கள் அப்போது இப்ப அவர்களே பண்ணைகளை அமைத்து அறுவடையும்  அவர்களே மண்ணின் மைந்தர்கள்  எல்லைக்கு வெளியே சிங்களம் தமிழின அழிப்புக்கு வாங்கிய கடனுக்கு தமிழ்ப்பகுதிகளையே சீனாவுக்கு தாரை வார்க்கிறார்கள் . மறவன்புலவு போன்ற நம்ம அரசியல்வாதிகள் தமிழர்களுக்குள் சண்டையை உருவாக்க அல்லும்பகலும் வேலை செய்கிறார்கள் இப்படியான நிலமே பறிபோகும் விடயங்களுக்கு அமைதியாக இருப்பார்கள் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kapithan said:

கடலட்டை குளிப்பதற்கு சீனர்கள் 50-60 வருடங்களுக்கு முன்பே இலங்கைக்கு வந்துவிட்டார்கள். 😀

 

உங்கள் தொழிலுக்கு பரச்சனை இல்லையோ இந்த கப்பல் எரிந்த பிரச்னையால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

உங்கள் தொழிலுக்கு பரச்சனை இல்லையோ இந்த கப்பல் எரிந்த பிரச்னையால்.

பெரிய பிரச்சனை என்று இதுவரை எதுவும் இல்லை. முதலீட்டில் 1/3 பங்கிற்கும் மேல் மீள எடுத்தாயிற்று.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

கடலட்டை வளர்ப்பது பற்றி பயிற்சி கொடுப்பதுக்கு வந்து போனார்கள் அப்போது இப்ப அவர்களே பண்ணைகளை அமைத்து அறுவடையும்  அவர்களே மண்ணின் மைந்தர்கள்  எல்லைக்கு வெளியே சிங்களம் தமிழின அழிப்புக்கு வாங்கிய கடனுக்கு தமிழ்ப்பகுதிகளையே சீனாவுக்கு தாரை வார்க்கிறார்கள் . மறவன்புலவு போன்ற நம்ம அரசியல்வாதிகள் தமிழர்களுக்குள் சண்டையை உருவாக்க அல்லும்பகலும் வேலை செய்கிறார்கள் இப்படியான நிலமே பறிபோகும் விடயங்களுக்கு அமைதியாக இருப்பார்கள் .

 

கடலட்டை பிடிப்பதற்காக வந்தார்கள். அவர்கள் தங்கியிருந்த, அவர்களால் கட்டப்பட்ட கட்டடங்களை கிளிநொச்சி, ஜெயபுரம்(பொன்னாவெளி) காட்டிற்குள் பார்த்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.