Jump to content

சமாதான முயற்சிகளை ரணில் பலவீனப்படுத்துவார் என சந்திரிகா அஞ்சினார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான முயற்சிகளை ரணில் பலவீனப்படுத்துவார் என சந்திரிகா அஞ்சினார்

சந்திரிகா குமாரதுங்க சமாதான முயற்சிகளை முன்னெடுக்க விரும்பியவேளை ரணில் அதனை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அஞ்சினார் என்று இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் கலந்துரையாடல் ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
கொழும்பின் இரு முக்கிய கட்சிகளும் அவ்வேளை சமாதான முயற்சிகள் விடயத்தில் ஒத்துழைத்து செயற்படவில்லை.
அவர்கள் நாடாளுமன்றத்தில்- அரசாங்கத்தில் ஒரே பதவிக்காக போட்டியிட்டுக்கொண்டிருந்தனர்.
cbk_helgesen_eric_190402-300x208.jpg
பொதுவான நலனிற்காக இலங்கையின் முக்கிய இரு கட்சிகளும் இணைந்து செயற்பட தயாராக யில்லாதமையே சமாதான நடவடிக்கைகளை மிகவும் கடினமானதாக மாற்றியது.
விடுதலைப்புலிகளுடன் சமாதான உடன்படிக்கை யொன்றை எட்டுவதற்கு ஐக்கிய தேசிய கட்சி முயற்சிகளை மேற்கொண்டால் அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அதனை ஏற்றுக்கொள்ளாது அதனை பலவீனப்படுத்தும் என அச்சமடைந்தார்கள்.
அதேஅச்சம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியிலும் காணப்பட்டது.
ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க சமாதான முயற்சிகளை முன்னெடுக்க விரும்பியவேளை ரணில் அதனை பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என அஞ்சினார். இது சமாதான முயற்சிகளை மேலும் கடினமானதாக்கியது.
இரு கட்சிகளும் விடுதலைப்புலிகளுடன் சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்காக தங்கள் சக்தியை செலவிடுவதை விட தங்களிற்கு எதிரான மோதலிற்கு அதிக சக்தியை செலவிடுகின்றனர் என நான் கருதினேன் .
 

https://thinakkural.lk/article/126105

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் இனப் பிரச்சனையின் அடிப்படையே இதுதான். தமிழருக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாது. 

ஏனென்றால் இரு கட்சிகளையும் (அடிப்படையில்)  இயக்குவது மிகச் சிலரே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

இலங்கையின் இனப் பிரச்சனையின் அடிப்படையே இதுதான். தமிழருக்கு எந்த அதிகாரமும் கொடுக்கக் கூடாது. 

ஏனென்றால் இரு கட்சிகளையும் (அடிப்படையில்)  இயக்குவது மிகச் சிலரே. 

இரண்டு கட்சிகளின்ரை கொள்கை ஒண்டு.....ஆனால் போற பாதைதான் வித்தியாசம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பவே தமிழருக்கு தீர்வு கொடுக்கக் கூடாது என்று கண்டியை நோக்கிய பாத யாத்திரை தொடங்கிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

அப்பவே தமிழருக்கு தீர்வு கொடுக்கக் கூடாது என்று கண்டியை நோக்கிய பாத யாத்திரை தொடங்கிவிட்டது.

இதுக்கும் விடுதலைப்புலிகளும் பிரபாகரனும் தான் காரணம் எண்டு எங்கடை ஜாம்பதட்டிவான்கள் சொல்லாத வரைக்கும் சந்தோசம். :(

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.