Jump to content

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வெற்றிகரமான இராணுவதலைவர் வெற்றிகரமான அரசியல் தலைவரில்லை – எரிக்சொல்ஹெய்ம் கருத்து


Recommended Posts

On 5/7/2021 at 17:36, கற்பகதரு said:

ஏனண்ணை சரணடைஞ்சவை? அழிப்பாங்கள் எண்டு விளக்கமிருக்கேலையோ? 

 

2 hours ago, பெருமாள் said:

அப்ப  என்ன செய்ய சொல்ல வருகிறீர்கள் ?

வெண்டிருக்கலாம் இல்லையோ? தலைவர் உலகத்திலேயே சிறந்த இராணுவத்தளபதி. வரலாறு காணாத இராணுவ திபுணர். இப்படியிருக்க இவங்கள் சரணடைஞ்சு இப்படி எல்லாத்தையும் தோத்துப்போக செய்திட்டாங்களே…

Link to comment
Share on other sites

  • Replies 75
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

ஜேபி & சமாதான நீதவான்  இரண்டுக்கும் என்ன வித்தியாசம் கோஷான்?

இரெண்டு ஒண்டுதான் உடையார்.

ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் என்பதன் சுருக்கம்தான் ஜேபி.

ஆனால் இங்கிலாந்தில் இவர்களில் மிக பெரும்பான்மையானோர் மஜிஸ்றேட் கோர்ட்களில், மஜிஸ்ரேட்டாக கடமை புரிவர். 6 மாதம் வரை சிறைக்கு அனுப்பும் சிறு குற்றங்களை விசாரிப்பர். இங்கே மஹிஸ்ரேட் ஆக சட்ட படிப்பு தேவையில்லை.

ஆனால் இலங்கையில் மஜிஸ்ரேட் ஆக சட்டப்படிப்பு அவசியம்.

இலங்கையில் 3 வகை ஜேபி உண்டு.

1. உத்தியோக பற்றற்ற மஜிஸ்ரேட் ஜேபி -இவர்கள்  சட்டத்தரணிகள். மஜிஸ்ரேர்ட்க்கு வரமுடியாத நேரத்தில் மஜிஸ்ர்ரெட்டாக இவர்கள் தற்காலிகமாக செயல்படலாம்.

2. அகில இலங்கை ஜேபி - இவர்கள் சட்டதரணிகள் அல்ல. ஒப்பம் இடல், அத்தாட்சி படுத்தல் அதிகாரம் மட்டும் உடையோர்.

3. மாவட்ட ஜேபி - 2ஐ போலவே ஆனால் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிகாரம் உள்ளோர்.

10 hours ago, குமாரசாமி said:

கோதாரிவிழ என்னெண்டப்பா எல்லாத்தையும் ஞாபகம் வைச்சிருக்கிறியள்?😂
நானே மறந்து போனன்... 🤣

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

இரெண்டு ஒண்டுதான் உடையார்.

ஜஸ்டிஸ் ஒவ் த பீஸ் என்பதன் சுருக்கம்தான் ஜேபி.

ஆனால் இங்கிலாந்தில் இவர்களில் மிக பெரும்பான்மையானோர் மஜிஸ்றேட் கோர்ட்களில், மஜிஸ்ரேட்டாக கடமை புரிவர். 6 மாதம் வரை சிறைக்கு அனுப்பும் சிறு குற்றங்களை விசாரிப்பர். இங்கே மஹிஸ்ரேட் ஆக சட்ட படிப்பு தேவையில்லை.

ஆனால் இலங்கையில் மஜிஸ்ரேட் ஆக சட்டப்படிப்பு அவசியம்.

இலங்கையில் 3 வகை ஜேபி உண்டு.

1. உத்தியோக பற்றற்ற மஜிஸ்ரேட் ஜேபி -இவர்கள்  சட்டத்தரணிகள். மஜிஸ்ரேர்ட்க்கு வரமுடியாத நேரத்தில் மஜிஸ்ர்ரெட்டாக இவர்கள் தற்காலிகமாக செயல்படலாம்.

2. அகில இலங்கை ஜேபி - இவர்கள் சட்டதரணிகள் அல்ல. ஒப்பம் இடல், அத்தாட்சி படுத்தல் அதிகாரம் மட்டும் உடையோர்.

3. மாவட்ட ஜேபி - 2ஐ போலவே ஆனால் ஒரு மாவட்டத்தில் மட்டும் அதிகாரம் உள்ளோர்.

🤣

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

பிரெஞ்சு சிஸ்டம் பற்றி எனக்கு போதிய அறிவில்லை அண்ணை.

இங்கே மஜிஸ்ரேட்டாக வர நாங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களாக கூப்பிடுவதில்லை.

ஆனால் யூரி சேவைக்கு அவர்களாகவே கூப்பிடுவார்கள்.

மஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு மேல் பட்ட குற்ற வழக்குகள் யூரி சபை முறையில் நடத்தபடும்.

வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

உங்களுக்கு வந்த கடிதம் இது போன்றதா, அல்லது வேறு ஏதுமா என என்னால் சரியாக கூற முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, goshan_che said:

பிரெஞ்சு சிஸ்டம் பற்றி எனக்கு போதிய அறிவில்லை அண்ணை.

இங்கே மஜிஸ்ரேட்டாக வர நாங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களாக கூப்பிடுவதில்லை.

ஆனால் யூரி சேவைக்கு அவர்களாகவே கூப்பிடுவார்கள்.

மஜிஸ்ரேட் கோர்ட்டுக்கு மேல் பட்ட குற்ற வழக்குகள் யூரி சபை முறையில் நடத்தபடும்.

வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

உங்களுக்கு வந்த கடிதம் இது போன்றதா, அல்லது வேறு ஏதுமா என என்னால் சரியாக கூற முடியவில்லை.

அதே தான். 

யூரிகள் சபை என்பதை எழுத மறந்து விட்டேன்.

மக்களுக்கும் இதில் பெரிய அளவிலான தெளிவில்லாது விட்டாலும் உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்கள்.

என்னுடைய பைல் கொஞ்சம்........ ஆனது என்பதால் கூடுதலாக யோசித்தேன். 

(வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

அதனால் தான் வெளியே சொல்வது குற்றம் என்று சொன்னேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, விசுகு said:

அதே தான். 

யூரிகள் சபை என்பதை எழுத மறந்து விட்டேன்.

மக்களுக்கும் இதில் பெரிய அளவிலான தெளிவில்லாது விட்டாலும் உங்களால் முடியும் என்று ஊக்கம் தந்தார்கள்.

என்னுடைய பைல் கொஞ்சம்........ ஆனது என்பதால் கூடுதலாக யோசித்தேன். 

(வழக்கில் சட்டம் (law) பற்றிய முடிவுகளை ஒரு நீதிபதி எடுக்க, வழக்கின் நிகழ்வுகளை/தரவுகளை (facts) பற்றிய முடிவை 12 நன்னடத்தை உள்ள பொதுமக்கள் குழு எடுக்கும் (ஜட்ஜின் வழிகாட்டல் படி). 

அதனால் தான் வெளியே சொல்வது குற்றம் என்று சொன்னேன்.

ஓம், நடக்கும் விசயத்தை வெளியே சொல்லகூடாது. அடுத்த முறை வந்தால் கட்டாயம் போங்கள். இது ஒரு கடமை அத்தோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஓம், நடக்கும் விசயத்தை வெளியே சொல்லகூடாது. அடுத்த முறை வந்தால் கட்டாயம் போங்கள். இது ஒரு கடமை அத்தோடு வித்தியாசமான அனுபவமாகவும் இருக்கும்.

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

 

நாம விட்டாத்தான்  தம்பிமாரும் அவிட்டு  விடுகிறார்கள்😍

வாழ்த்துக்கள்

இதுவும் ஒரு அங்கீகாரம் தான்

 

 

Link to comment
Share on other sites

45 minutes ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, நிழலி said:

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

ஆம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, நிழலி said:

கனடிய சட்டப்படி நீங்கள் இதனை வெளியில் சொல்லக் கூடாது என நம்புகின்றேன்.

நான் எதுவித தனியார் சம்பத்தப்பட்ட விடயங்களை பகிரவில்லை தானே ஸுவாமி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

டொரோண்டோவில் நடந்த போதை பொருள் கடத்தல், ஆட்கொலைகள், குழுமக்கொலைகள் சம்மந்தப்பட்ட ஒரு வழக்கில் Superior Court of Justice Superior Court of Justice இல் நானும் ஒரு ஜூரியாக 33 நாட்கள் கடமை ஆற்றி இருக்கிறேன். மறக்கமுடியாத அனுபவம். இந்த வழக்கு  கொலம்பியாவின் மிகப்பெரிய போதைவஸ்து ராச்சிய மன்னன் "எல் சப்போ - El Chapo" அவனுடைய கனேடிய வலைப்பின்னலில் நிகழ்ந்த திட்டமிடல், கொலைகள் பற்றியது. இது நடந்தது 4 வருடங்களுக்கு முன்னர், இது பற்றி எழுதலாம் என்றும்  கூட நினைத்தேன். தொடர்கதையாக போகுமே என்ற பயத்தில் விட்டு விட்டேன்.
நானும் ரவுடிதான் மாதிரி நானும் ஜூரிதான் ... 

 வேலையில் இருந்து சம்பளத்தோடு விடுப்பு வேற கிடைக்கும். உங்கள் அதிஸ்டம் நல்லதொரு இண்டெரெஸ்டிங்கான வழக்கில் வேலை பார்த்துள்ளீர்கள். சில high profile வழக்குகளுக்கு ஹோட்டலும் புக் பண்ணி தருவார்கள்.

வழக்கு நடக்கும் போது எதையும் யாரிடமும் பகிர கூடாது.

வழக்கு முடிந்த பின் கோர்ட்டில் நடந்தவை பற்றி கதைக்கலாம், ஆனால் யூரி அறையில் நடந்தவை பற்றி அப்போதும் பேச முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்வது சரி கோஷன். வேலை தளத்தில் இருந்து சம்பளம் தடையில்லாமல் வந்தது. 
ஜூரி கடமை செய்ததினால் ஒரு சிறிய (அளாவான்ஸ்) பணமும்  கிடைத்தது. 
வழக்கின் தீர்ப்புக்கு முதல்நாள் "டெலிபரேஷன்" ஒரு நாள் நடந்தது. அப்போது நீங்கள் சொன்னதை போல ஒரு நீதிமன்றத்துக்கு பக்கத்தில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனிஅறையும் தந்தார்கள். 
தொலைக்காட்சி, கைத்தொலைபேசி, பத்திரிகை, மடிக்கணனி எதுவும் எங்களுடன் வைத்திருக்க தடை இருந்தது. ஒருவர புகை பிடிக்க வெளியே போனாலும் 13 ஐயும் பேரும் சேர்த்தே கூட்டிச்செல்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 20:45, விசுகு said:

சில  வருடங்களுக்கு முன்னர் எனக்கும் பிரெஞ்சு  அரசிடமிருந்து இவ்வாறு ஒரு  கடிதம் வந்தது?

ஆலோசனைகளை  கேட்டு (முன் அனுபவம்  எம்மவர்களுக்கு இல்லை)😪

நான் பதில்  போட தாமதமாகி விட்டது

இன்னும் பதில் வரவில்லை (வந்திருந்தால் இதை வெளியில் சொல்வது  குற்றமும்  கூட)

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, புங்கையூரன் said:

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Sasi_varnam said:

 

பிறகென்ன யூரி அனுபவத்தை பாட்டாகவே படித்து விட்டீர்கள்👏🏾👏🏾👏🏾.

12 minutes ago, Sasi_varnam said:

என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 

👆🏼இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே🤣

13 minutes ago, Sasi_varnam said:

இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள்

இங்கே குற்றம்சாட்ட பட்டவர் யூரியை நிராகரிக்க தகுந்த காரணம் சொல்லபட வேண்டும். இனம், நிறம், வேலை இப்படி சொல்ல முடியாது. ஆனால் இவர் செய்யும் வேலை (பத்திரிகையாளர்) ஏற்புடையதல்ல போன்றவை, வழக்கின் தன்மையை பொறுத்து ஜட்ஜால் ஏற்கப்படும்.

இலங்கையில் குற்றம் சாட்டபட்டவருக்கு யூரியை தேர்வதில் அதிக சலுகைகள் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம் சாட்டபட்ட இராணுவ வீரர்கள் தனி சிங்கள யூரிகளை மட்டுமே கோருவார்கள்.

அமைதியற்ற சூழல் நிறைந்த வட அயர்லாந்தில் சில அரசியல் சாயம் உள்ள வழக்குகளுக்கு யூரி முறையையை கைவிட்டு 3 ஜட்கள் தீர்க்கும் முறை இருந்தது. யூரிகள் கத்தோலிக்கர், புரிட்டஸ்தாந்து என்ற அடிப்படையில் தீர்பளிக்ககூடாது என்பதால்.

13 hours ago, புங்கையூரன் said:

அவுஸில்  ஜுரர் கடமைக்குக் கூப்பிடும் போது, கட்டாயம் நீதி மன்றுக்குப் போய்.....எதற்காக கடமை ஆற்ற இயலாது என்பதை நீதிபதிக்குத் தெரிவிக்க வேண்டும்! அவர் அதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அடுத்த முறை அழைப்பு வரும் வரையும் கொண்டாட்டம் தான்!
அழைப்பு வரும்போது நீதி மன்று போகா விட்டால், வீட்டுக்குத் தண்டக் கடிதம் வரும்!

அவுஸில் வாக்களிக்கா விட்டாலும்...தண்டக் கடிதம் வீடு தேடி வரும்...!

இங்கே அழைப்பு வரும் பத்திரத்தில் தக்க காரணம் சொன்னால் விலக்கு அளிப்பார்கள். விலக்கு கிடைக்காவிட்டால் அழைத்த திகதியன்று போய் ஜட்ஜிடமும் சொல்லலாம். 

சட்டம், காவல்துறை சம்பந்தபட்ட வேலைகளுக்கு தானியங்கி விலக்கு. நீங்கள் விரும்பினாலும் போக முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே🤣

அது ஒரு அயர்ச்சி தரும் சோதனை ... பிறகு எல்லாம் சரியாகி விடும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

நன்றி சகோ. அடுத்து செல்லும் பலருக்கு உதவக் கூடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன்.. தனது மக்களின் அரசியல் சமூகத் தேவை என்ன என்பதை கேடிட்டு காட்டிவிட்டு தான் சென்றிருக்கிறார். 

இவர் நோர்வே அரசியலிலும் சரி.. சர்வதேச அரசியல் அரங்கிலும் சரி.. இன்று ஓர் அனாதையானது எப்படி என்று அலசலாமே...!! இவர் இத்தனை பேரை சந்திச்சும்.. ஏன் தோல்வி அடைந்தார் உள்ளூரிலும்.. சர்வதேச அரங்கிலும்.

பிரபாகரன் இவரைப் போன்ற கையாலாகதவர்களின் வாக்குறுதியை நம்பியது தான் இறுதியில் அவருக்கு தோல்வியாக அமைந்துவிட்டது. அவர் தானாக முடிவெடுத்து செயற்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் சவால்களை வென்றே வந்திருக்கிறார். 

மொத்தத்தில்.. பிரபாகரன் தனது மக்களின் அரசியல் சமூக தேவை என்ன என்பதை சரியாக விளங்கிக் கொண்டிருந்தார்.. ஆனால் சொல்கைம் போன்றவர்களுக்கு அந்த புரிதல் இல்லை. அதனால்.. சொந்த நாட்டிலும் தோல்வி.. சர்வதேச அரங்கிலும் தோல்வி. இதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் ஆழமான கேள்விகளை தொடுக்கவில்லை..???! 

Link to comment
Share on other sites

On 9/7/2021 at 10:10, Sasi_varnam said:


அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள்.

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?
 

On 9/7/2021 at 10:31, goshan_che said:

இலங்கையில் குற்றம் சாட்டபட்டவருக்கு யூரியை தேர்வதில் அதிக சலுகைகள் இருப்பதாக தெரிகிறது. அதனால்தான் குற்றம் சாட்டபட்ட இராணுவ வீரர்கள் தனி சிங்கள யூரிகளை மட்டுமே கோருவார்கள்.

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கேட்டு பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
 

23 hours ago, nedukkalapoovan said:

சொல்கைம் போன்றவர்களுக்கு அந்த புரிதல் இல்லை. அதனால்.. சொந்த நாட்டிலும் தோல்வி.. சர்வதேச அரங்கிலும் தோல்வி. இதைப் பற்றி ஏன் செய்தியாளர்கள் ஆழமான கேள்விகளை தொடுக்கவில்லை..???! 

நோர்வேஜியன் மொழியில் வரும் சொல்ஹைமுக்கு எதிரான கட்சிகளுக்கு சார்பான செய்தித்தாள்களில் இவ்வாறான கேள்விகள் வந்திருக்கும், நோர்வேயில் உள்ள தமிழர்களை கேட்டுப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கற்பகதரு said:

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?
 

குற்றம்சாட்டப்பட்ட தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கேட்டு பெற்றுக்கொண்ட சந்தர்ப்பங்கள் பற்றி அறிந்திருக்கிறீர்களா?
 

நோர்வேஜியன் மொழியில் வரும் எதிர்க்கட்சிகளுக்கு சார்பான செய்தித்தாள்களில் இவ்வாறான கேள்விகள் வந்திருக்கும், நோர்வேயில் உள்ள தமிழர்களை கேட்டுப்பாருங்கள்.

1. கடவுளின் பெயரால் - என்பதற்கு பதிலாக உளப்பூர்வமாக என்று எந்த புத்தகத்திலும் கைவைக்காமல் உறுதிமொழி எடுக்கலாம்.

2. கேள்விபட்டதில்லை ஆனால் சிப்பாய்கள் தனி சிங்கள யூரிகளை கோருவதுபோல் தமிழர்கள் தனி தமிழ் யூரிகளை கோர முடியும் என்றே ஊகிக்கிறேன். ஆனால் இது என்னை பொறுத்தவரை ஒரு சரியான நடைமுறை அல்ல - இருவருக்கும். அண்மையில் நடந்த வழக்கு ஒன்று trial at bar முறையில் ஜட்ஜுகள் மட்டுமே தீர்த்தது என நினைக்கிறேன். இதே போல் முன்பு தந்தை செல்வா மீதும் trial at bar முறையில் வழக்கு நடந்ததாக அறிந்துள்ளேன்.

https://www.bbc.co.uk/news/uk-24588854
 

The oath, still sworn by witnesses and defendants as they hold a holy book, has given the English language one of its most familiar sentences.

"I swear by Almighty God [to tell] the truth, the whole truth, and nothing but the truth."

Other faiths can take the oath on other books - Muslims on the Koran, Jews on the Old Testament, for example. 

Atheists are allowed to "solemnly, sincerely and truly affirm" instead of swearing.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கற்பகதரு said:

இவை எதையும் பின்பற்றாத, இந்த சமயங்கள் எதிலும் நம்பிக்கையில்லாத என்னை போன்றவர்களுக்கு என்ன புத்தகம் தருவார்கள்?

யூரி சேவைக்கு அழைக்கப்பட்டால் அழைத்தவர்களிடம் கேட்டுப்பார்த்தால் விஷயம் தெளிவாச்சு.

On 10/7/2021 at 03:31, goshan_che said:

இதை பார்த்தா யூரி சேவைக்கு போனமாரி தெரியேல்லையே

எதையோ வைச்சுக்கொண்டு வஞ்சகம் பண்ணுகிற மாதிரி தெரியுது, அவிட்டு விட வேண்டியது தங்களின் அனுபவத்தை நாங்களும் ரசிக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/7/2021 at 03:10, Sasi_varnam said:

 

வணக்கம் புங்கை அண்ணா ,🙏

இந்த ஜூரிக்களை தெரிவு செய்யும் முறையே 2 நாட்கள் எடுக்கும்.
முதலில் கடிதம் கிடைத்தவர்கள் எல்லோரும் வருவார்கள் (என்னுடைய அனுபவத்தில் நடந்தது) சுமார் 600 பேர்.
இதில் 100, 200 காரண காரியம் கூறி அனுமதி பெற்று வெளியேற,  அரைவாசி நேரம் இந்த செயல்முறையில் போய்விடும்.  மிகுதி இருக்கும் 400 பேரை வைத்துக்கொண்டு ஜூரி தேர்வு செய்வார்கள். அனைவரது கையிலும் விசேட இலக்கங்கள், குறியீடுகள் கொண்ட சிறியதொரு பற்றுசீட்டு போல இருக்கும் ஒன்றை தருவார்கள்.
எல்லோரும் ஒரு பெரிய வழக்காடு மன்றத்துக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கே ஏற்கனவே அமர்ந்திருக்கும் தலைமை நீதிபதி (ஜட்ஜ்), அவரின் உதவியாளர்கள், பதிவாளர்கள், பாதுகாவலர், அரச தரப்பு வக்கீல்,  குற்றவாளிக்கு ஆதரவாக ஆஜராகும் வக்கீல், உதவி வக்கீல்கள் இப்படி பலர் இருக்க எங்களை கூட்டிச்சென்று அமர வைப்பார்கள்.  
ஜட்ஜ் ஐயா ஜூரி கடமையின் அவசியம், அதன் சிறப்பு, கனேடிய நீதித்துறையின் எதிர்பார்ப்பு இப்படி பல விடயங்கள் குறித்து ஒரு சின்ன உரையாற்றுவார்.
அதன் பின்னர் குறித்த வழக்கு குறித்து ஒரு சுருக்கமான வாசிப்பு (வழக்கின் பின்னணி). அதன் பின்னர் குற்றம் சாட்டப்பட்டவரை அறிமுகம் செய்வார்கள். அவரோடு அவரின் வக்கீல் (Defense Lawyer), அரச தரப்பு வக்கீல்(Crown Lawyer) இந்த இருவரின் உதவியாளர்கள் என அனைவரும் அறிமுகம் செய்யப்பட நமக்கு கை, கால் வெடவெடக்கும். 
சரி இனி அடுத்த கட்டமாக ஒரு பூட்டிய பெட்டியில் இருக்கும் ரசீது போன்ற சீட்டுக்களை எழுந்தமானமாக (Random) எடுப்பார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண், தொழிசார் தகவல் இரண்டையும் இணைத்து அழைப்பார்கள். 
உதாரணம் 73201 - டீச்சர் , 60442 - தாதி இப்படி இருக்கும்.
அழைக்கப்பட்டவர் தனது ரசீதுடன் சரி செய்து கொண்டு கூண்டு போல ஊருக்கும் ஒரு மேடையில் பொய் நிற்க வேண்டும், அவரிடம் பைபிள், திருகுர்ஹான், பகவத்கீதை இப்படி ஏதாவது ஒரு புத்தகத்தை நீட்டி ஒரு சத்தியப்பிரமாணம் எடுப்பார்கள். குறிப்பாக சில வரிகள் குற்றம் சாட்டப்பட்டவரின் பின்னணி குறித்த வரிகளாய் இருக்கும் (கொலம்பியா நாடு) அதன் பின்னர் ஜட்ஜ் ஐயா அவரிடம் உங்களால் இந்த ஜூரி கடமையை பக்க சார்பற்று நேர்மையாக அணுக முடியுமா என்று  கேட்பார். 
அப்போது கூட யாராவது என்னால் இத கடமையை சரிவர செய்ய முடியாது அதற்கான காரணம் இது தான் என்று கூறினால் (உதாரணம் - எனது ஆங்கில அறிவு சட்ட விடயங்களை பற்றி உரையாட போதாது, நான் கொலம்பியா நாட்டை சார்ந்தவன், எனக்கு சின்ன வயதில் குழந்தை இருக்கிறார்கள் இப்படி பல காரணங்கள் கூறி சிலர் விலக, என்னால் இந்த கடமையை செய்ய முடியும் என்று கூறுபவர்கள் அங்கு நிற்க; குற்றம் சாட்டப்பட்டவரும், அவரது வக்கீலும் தங்களுக்குள் பேசி தீர்மானிக்க, அதே போல அரச தரப்பு வக்கீலும் அவரது உதவியாளரும் தங்களுக்குள் ரகசியமாக பேசி முடிக்க இருவரும் சரி என்றால் மட்டுமே உங்களை அவர்கள் ஜூரியாக தெரிவு செய்வார்கள். 
உதாரணம் ஒரு டீச்சர் போய்  நிற்க அவரை அரச தரப்பு ஏற்க, எதிர் தரப்பு தவிர்க்க அவருக்கான தேவை அங்கே இல்லாது போகும், அந்த டீச்சர் வெளியே அழைத்து செல்லப்பட்டு விடுவார். 
அதே போல எதிர்தரப்பு ஒருவரை ஏற்க, அரச தரப்பு வக்கீல் அவரை தவிர்க்க இது ஒரு கயிறு இழுக்கும்  போட்டி போல போய்க்கொண்டே இருக்கும். கடைசியில் 14 (13 + 1 எக்ஸ்ட்ரா) பேர் கொண்ட ஜூரியை இவர்கள் சல்லடை போட்டு தேடித் தடவி எடுக்க நமக்கு வயித்துக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதா அந்த வைரமுத்துவின் உருண்டை ஓடிக்கொண்டே இருக்கும். 😂
கடைசியில் வந்தவர் எல்லாம் சென்று விட... மாட்டிக்கொண்ட அந்த 14 பெரும் தனியாக அங்கே அமர்ந்திருக்க சில முன் குறிப்புகள், அறிவுரைகள் வழங்கப்பட அடுத்தநாள் , என்ன நேரம், அறை இலக்கம் , நீங்கள் குடிப்பது கோப்பியா, டீயா, உங்களுக்கு பழம் வேணுமா, பால் வேணுமா, சேர்க்கும் சீனி அளவு என்ன இப்படியான குறிப்புகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் வருவதற்கான விசேட அனுமதி பாத்திரமும் தந்து  மிகுதி வெள்ளித்திரையில் காண்க என எம்மை அனுப்பி வைப்பார்கள்.

அருமையான விளக்கத்துக்கு நன்றி..சசி!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/7/2021 at 09:04, பெருமாள் said:

பலமுறை விளங்கப்படுத்தியும் விளங்காமல் நடிப்பது ஒரு கலை .

அப்படியல்ல பெருமாள்! தங்கள் கொள்கையை மற்றவர்கள் மேல் திணிக்கும்வரை விளங்காததுபோல் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 07:12, விசுகு said:

இப்பவும் என்ன?

அவர் வந்து வந்து எண்ணையை தானே விடுகிறார்?😂

இங்கு சிலர் தம் தலைக்கு பொருத்தமில்லாத தொப்பியை போட்டுகொண்டு உலவுகிறார்கள். சிலசமயம் தமது தலையை மறந்து சில கருத்துக்களால் குஷியாகி குதிக்கிற குதியில் தொப்பி கழண்டு விழுந்துடுது. இருந்தாலும்; அவர்களை பராக்கு பார்த்ததில் விழுந்துடுத்து என்று சொல்லி  மீண்டும் அதே தொப்பியை போட்டு தங்கள் தலையை மறைக்கப்பார்க்கிறார்கள். பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்குது என்று  நாமும் கடந்து போவோம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார் Published By: VISHNU    19 APR, 2024 | 06:46 PM   மறைந்த முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். வெள்ளிக்கிழமை (19) முற்பகல் அவரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மத்துகம யடதொலவத்தையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகளுக்கு தனது அனுதாபத்தை தெரிவித்தார். இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். https://www.virakesari.lk/article/181481
    • இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஜோ பைடனின் பேச்சை மீறியதால் சிக்கலில் பெஞ்சமின் நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரெமி போவன் பதவி, பிபிசி சர்வதேச ஆசிரியர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது. அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது. அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.   அமெரிக்கா ஆவேசம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார். வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார். இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.   இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு பட மூலாதாரம்,GETTY IMAGES வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார். காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.   அமெரிக்காவின் மனநிலை பட மூலாதாரம்,UGC கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது. குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது. “இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.   இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல். ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின. காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது. இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.   மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம் அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும். அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார். இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது. காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர். அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது. இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது. ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்ரேல்-இரான் பகை இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது. மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர். கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது. தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம். பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.   காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு படக்குறிப்பு,அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை," என்றார். இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது. காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும். இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம். இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார். இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம். இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும். https://www.bbc.com/tamil/articles/cd19j8p3n4vo
    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.