Jump to content

மங்கையவளின் மரக்கறிக்கடை..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.8ff687fe-fd62-46ea-9839-94797af0ba5a-1.jpg.7e7a7f05b20aa299168c2c536bb9fb9f.jpg

மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை)

*************************

                                      பகுதி-1

முதலில்

தக தகவென்ற 

மேனியை 

பார்த்ததும்

தக்காழியை 

வாங்கி வைத்தேன்.

 

முந்தானையை பார்த்து

முனகினேன்

முருங்கக்காய்

வரத்து

குறைவென்றாள்.

 

கையை வைதேன்

சும்மா சுறண்டாதீர்கள்

மென்மையான தோல்

உதிரம் வருமென்றாள்

எடுத்து பார்த்தேன் 

பீற்றூட் கிழங்கு.

 

அவளின் விரலை 

பிடிப்பதுபோல் 

 எண்ணினேன்

முளிந்து பார்த்தாள்

எனது 

கையில் இருந்தது 

வெண்டிக்காய்

 

உடைக் வேண்டாமென

உறுமி விட்டு

சிரித்தாள்.

 

அவளின் சிரிப்பில் 

முல்லையும் 

பூத்தது 

காய்கறிக்கடையில்.

 

தேனாக பேசினாள்

தேங்காய் 

ஞாபகம் வந்தது

போனவாரம் குடுமியோடு  

தேங்காய் தந்தாய்

அது வழுக்கை என்றேன்

இல்லை நீங்கள் பாவிக்கும் 

சாம்பு

சரியில்லையென்றாள்.

 

 

மழை வரும் போல்

இருக்கிறது

குடைமிளகாய் வாங்க 

சொல்லிவிட்டு

 கண்களால் 

மின்னல் போல்

வெட்டினாள் 

கத்தரிக்காயும் 

ஞாபகம் வந்தது.

 

கொவ்வம் பழம் 

என்றேன் அது

விற்பதற்கில்லையென

சொண்டை நெளித்தாள்.

அப்படியென்றால்

மாஸ்க் போட்டு

மறைத்துவை யென்றேன்

 

 காய்ந்தாள்

காரமிளகாயாய்

 வாங்கினேன்-பச்சை

மிளகாய்

 குழைந்தாள் பின்

உருள..

கிழங்கும் வாங்கினேன்.

 

 

என்ன பார்க்கிறீர்கள் 

ஆடையை உரித்தால்

அழவைக்கும் 

வெங்காயம் 

என்றாள். 

அதிகம் உரித்தால்

ஒன்றுமே 

இல்லையென்றேன்.

 

பல்லுகள் என்ன பழுதாய்

கிடக்குதென்றேன்

அப்பு விளைவித்த

உள்ளியென்றாள்

 

கரட்டாக சொன்னாய் 

என்றேன்

அதுகும் பல

கலரில் இருக்கு

என்றாள்.

 

பாவக்காய் தரட்டா 

என்றாள் உன்

கையால் தந்தால்

கரும்பும் தேவையில்லை

என்றேன்

அதைக்கேட்டு

பயத்தம் காயாய்

நெழிந்தாள்

 

கோ(Go) வா என்றேன்

போய் வாங்கோ என்றாள்.

 

                                    பகுதி 2

 

இல்லை இல்லை என்னம்

வாங்க வேண்டுமென்றேன்.

கொடுக்கத்தானே

நான் இருக்கிறேன் என்றாள்.

 

                                         

காயா பழமா என்றேன்

பழம் தான் ஆனால்

காயாக சாப்பிட்டால் தான்

இனிமையாக இருக்கும்

கொய்யாஎன்றாள்.

 

எனக்கு..

மேலங்கி வேர்த்தது

பார்த்துவிட்டு

முள்ளங்கி   

கிடக்கென்றாள்

தொட்டுப்பார்த்து

முள் எங்கே என்றேன்

கண்ணால் குத்தினாள்.

இதயத்தில் பட்டு

குளிர்ந்தது

முளக்கீரை கேட்டேன்

இல்லை இல்லை

அரைக்கீர மத்தால்

கடைந்துண்டால்

மாபெரும்

சத்தென்றாள்.பின்

 

கறி வாழக்காய் 

கிடக்கென்றாள்

ஒரு சீப்பு

தாவென்றேன்

வாழக்காய்க்கு

சீப்பெதற்கு

முடிதான் இல்லையே 

என கிண்டலடித்தாள்

 

முகத்தைப் பார்த்து

பால் வடியுது என்றேன்

அது ஈரப்பலாக்காய்

காம்பில் என்றாள்.

இரண்டு எடுத்துப்போக

சொன்னாள்.

 

எனி தம்பியும்

கடைக்கு வருவான் 

என்றாள்

கொத்தமல்லி

இலை..

ஞாபகம் வந்தது

வாங்கினேன்

 

எல்லாம் எடுத்து 

வைத்தபின் 

கேட்டாள்

 சமைக்க

ருசிக்க

யார் இருக்கிறார்கள் 

வீட்டில் என்றாள்

 

தனிமைதான்

என்றேன்

பூக்கோவா மாதிரி

பூரிப் படைந்தாள்

 

வாழைத்தண்டாக

வளைந்து வந்தாள்

 

அகம் மகிழ்ந்தாள்

அகத்திக் கீரையை

அள்ளித்தந்தாள்

 

சொண்டவியாமல் 

இருக்க

சொதிவைத்து

சாப்பிடலாமென்றாள்

 

அவரைக் காயைப்

பார்த்து

இவரைப் 

பிடிக்குமென்றாள்.

 

காதலித்தாள்

கப்பல்  வாழைப்பழம்

 உரித்து தந்தாள்

வாழ்கை பற்றி

வாழை இலையில்

கடிதம் வரைந்தால்

காலங்கள் ஓடின

கலியாணம் செய்து 

கொண்டோம்.

 

இன்று அவளின்

பழய கடையடியால்

பூசணிக்காய் போல்

மனைவியின் வயிற்றோடு

வருங்கால குழந்தையின்

மகிழ்வை எண்ணி..

போய்க்கொண்டிருக்கிறோம்.

 

என்ற நண்பனின்

வட்செப்..

கடிதம் எனக்கு 

கிடைத்த போது

கருணை 

உள்ளத்தோடு-என்

மனைவி தந்த

கருணைக்கிழங்கை

வெட்டிக்கொண்டிருக்கிறேன்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

05.07.2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Knowthyself said:

பசுவூர்க்கோபி

Super

அன்புடன்  நன்றிகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2021 at 14:59, பசுவூர்க்கோபி said:

large.8ff687fe-fd62-46ea-9839-94797af0ba5a-1.jpg.7e7a7f05b20aa299168c2c536bb9fb9f.jpg

மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை)

*************************

                                      பகுதி-1

முதலில்

தக தகவென்ற 

மேனியை 

பார்த்ததும்

தக்காழியை 

வாங்கி வைத்தேன்.

 

முந்தானையை பார்த்து

முனகினேன்

முருங்கக்காய்

வரத்து

குறைவென்றாள்.

 

கையை வைதேன்

சும்மா சுறண்டாதீர்கள்

மென்மையான தோல்

உதிரம் வருமென்றாள்

எடுத்து பார்த்தேன் 

பீற்றூட் கிழங்கு.

 

அவளின் விரலை 

பிடிப்பதுபோல் 

 எண்ணினேன்

முளிந்து பார்த்தாள்

எனது 

கையில் இருந்தது 

வெண்டிக்காய்

 

உடைக் வேண்டாமென

உறுமி விட்டு

சிரித்தாள்.

 

அவளின் சிரிப்பில் 

முல்லையும் 

பூத்தது 

காய்கறிக்கடையில்.

 

தேனாக பேசினாள்

தேங்காய் 

ஞாபகம் வந்தது

போனவாரம் குடுமியோடு  

தேங்காய் தந்தாய்

அது வழுக்கை என்றேன்

இல்லை நீங்கள் பாவிக்கும் 

சாம்பு

சரியில்லையென்றாள்.

 

 

மழை வரும் போல்

இருக்கிறது

குடைமிளகாய் வாங்க 

சொல்லிவிட்டு

 கண்களால் 

மின்னல் போல்

வெட்டினாள் 

கத்தரிக்காயும் 

ஞாபகம் வந்தது.

 

கொவ்வம் பழம் 

என்றேன் அது

விற்பதற்கில்லையென

சொண்டை நெளித்தாள்.

அப்படியென்றால்

மாஸ்க் போட்டு

மறைத்துவை யென்றேன்

 

 காய்ந்தாள்

காரமிளகாயாய்

 வாங்கினேன்-பச்சை

மிளகாய்

 குழைந்தாள் பின்

உருள..

கிழங்கும் வாங்கினேன்.

 

 

என்ன பார்க்கிறீர்கள் 

ஆடையை உரித்தால்

அழவைக்கும் 

வெங்காயம் 

என்றாள். 

அதிகம் உரித்தால்

ஒன்றுமே 

இல்லையென்றேன்.

 

பல்லுகள் என்ன பழுதாய்

கிடக்குதென்றேன்

அப்பு விளைவித்த

உள்ளியென்றாள்

 

கரட்டாக சொன்னாய் 

என்றேன்

அதுகும் பல

கலரில் இருக்கு

என்றாள்.

 

பாவக்காய் தரட்டா 

என்றாள் உன்

கையால் தந்தால்

கரும்பும் தேவையில்லை

என்றேன்

அதைக்கேட்டு

பயத்தம் காயாய்

நெழிந்தாள்

 

கோ(Go) வா என்றேன்

போய் வாங்கோ என்றாள்.

 

                                    பகுதி 2

 

இல்லை இல்லை என்னம்

வாங்க வேண்டுமென்றேன்.

கொடுக்கத்தானே

நான் இருக்கிறேன் என்றாள்.

 

                                         

காயா பழமா என்றேன்

பழம் தான் ஆனால்

காயாக சாப்பிட்டால் தான்

இனிமையாக இருக்கும்

கொய்யாஎன்றாள்.

 

எனக்கு..

மேலங்கி வேர்த்தது

பார்த்துவிட்டு

முள்ளங்கி   

கிடக்கென்றாள்

தொட்டுப்பார்த்து

முள் எங்கே என்றேன்

கண்ணால் குத்தினாள்.

இதயத்தில் பட்டு

குளிர்ந்தது

முளக்கீரை கேட்டேன்

இல்லை இல்லை

அரைக்கீர மத்தால்

கடைந்துண்டால்

மாபெரும்

சத்தென்றாள்.பின்

 

கறி வாழக்காய் 

கிடக்கென்றாள்

ஒரு சீப்பு

தாவென்றேன்

வாழக்காய்க்கு

சீப்பெதற்கு

முடிதான் இல்லையே 

என கிண்டலடித்தாள்

 

முகத்தைப் பார்த்து

பால் வடியுது என்றேன்

அது ஈரப்பலாக்காய்

காம்பில் என்றாள்.

இரண்டு எடுத்துப்போக

சொன்னாள்.

 

எனி தம்பியும்

கடைக்கு வருவான் 

என்றாள்

கொத்தமல்லி

இலை..

ஞாபகம் வந்தது

வாங்கினேன்

 

எல்லாம் எடுத்து 

வைத்தபின் 

கேட்டாள்

 சமைக்க

ருசிக்க

யார் இருக்கிறார்கள் 

வீட்டில் என்றாள்

 

தனிமைதான்

என்றேன்

பூக்கோவா மாதிரி

பூரிப் படைந்தாள்

 

வாழைத்தண்டாக

வளைந்து வந்தாள்

 

அகம் மகிழ்ந்தாள்

அகத்திக் கீரையை

அள்ளித்தந்தாள்

 

சொண்டவியாமல் 

இருக்க

சொதிவைத்து

சாப்பிடலாமென்றாள்

 

அவரைக் காயைப்

பார்த்து

இவரைப் 

பிடிக்குமென்றாள்.

 

காதலித்தாள்

கப்பல்  வாழைப்பழம்

 உரித்து தந்தாள்

வாழ்கை பற்றி

வாழை இலையில்

கடிதம் வரைந்தால்

காலங்கள் ஓடின

கலியாணம் செய்து 

கொண்டோம்.

 

இன்று அவளின்

பழய கடையடியால்

பூசணிக்காய் போல்

மனைவியின் வயிற்றோடு

வருங்கால குழந்தையின்

மகிழ்வை எண்ணி..

போய்க்கொண்டிருக்கிறோம்.

 

என்ற நண்பனின்

வட்செப்..

கடிதம் எனக்கு 

கிடைத்த போது

கருணை 

உள்ளத்தோடு-என்

மனைவி தந்த

கருணைக்கிழங்கை

வெட்டிக்கொண்டிருக்கிறேன்.

 

அன்புடன் -பசுவூர்க்கோபி-

05.07.2021

Screenshot-2021-07-07-12-03-16-947-com-a

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/7/2021 at 08:35, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Screenshot-2021-07-07-12-03-16-947-com-a

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றிகள் தோழர்.👍

நன்றிகள்  புரட்சி  தோழர்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பிக்கும் போதே தக்காளிக்கு "ழி" இருக்கும்போதே புரிந்து கொண்டோம் மங்கையவளிடம் இருக்கும் காய்கறிகளில் மயங்கி விட்டீர்கள் என்று......ம்.....நல்லாய் இருக்கு கவிதை........!   😁

நன்றி கோபி.....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதை பகிர்விற்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனைக் கவிதை  மிக மிக அருமை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/7/2021 at 14:33, Knowthyself said:

பசுவூர்க்கோபி

Super

நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/7/2021 at 13:17, suvy said:

ஆரம்பிக்கும் போதே தக்காளிக்கு "ழி" இருக்கும்போதே புரிந்து கொண்டோம் மங்கையவளிடம் இருக்கும் காய்கறிகளில் மயங்கி விட்டீர்கள் என்று......ம்.....நல்லாய் இருக்கு கவிதை........!   😁

நன்றி கோபி.....!

சொல்லாமல் சொல்லும் "ழி" கவிதையுடன் சேர்த்துக்கொண்டுபோன அழகோ அழகு உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் என்னை எழுத வைக்கிறது. 
நன்றிகள்  அண்ணா

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது.
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்) அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.