Jump to content

ஒன்வெப்: 650 செயற்கை கோள்களை ஏவத் திட்டம் - இனி விண்வெளியிலிருந்து அதிவேக இணைய சேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்வெப்: 650 செயற்கை கோள்களை ஏவத் திட்டம் - இனி விண்வெளியிலிருந்து அதிவேக இணைய சேவை

  • ஜோனதன் அமோஸ்
  • அறிவியல் செய்தியாளர்
2 ஜூலை 2021
சோயஸ் ராக்கெட்

பட மூலாதாரம்,ONEWEB

லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்வெப் என்கிற நிறுவனம், விண்வெளியில் இருந்து அதிவேக இணைய சேவையை வழங்குவதற்கு தேவையான விஷயங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.

தன் முயற்சியில் கடந்த வியாழக்கிழமை ஒரு புதிய உச்சத்தை எட்டி இருக்கிறது அந்நிறுவனம்.

ஒன்வெப் நிறுவனம் மேலும் 36 செயற்கைக் கோள்களை ஏவியுள்ளது. எனவே தற்போது ஒன்வெப் நிறுவனத்துக்குச் சொந்தமாக 254 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் இருக்கின்றன.

தன் முழு அமைப்பையும் நிறுவ, இன்னும் பல செயற்கைக் கோள்களை ஏவ வேண்டும் என்றால் கூட, தற்போது ஏவப்பட்டிருக்கும் செயற்கைக் கோள்களை வைத்துக் கொண்டு, உலகின் வட துருவத்தில் தன் இணைய சேவையை வழங்கத் தொடங்கும் அளவுக்கு போதுமானதாக இருக்கிறது.

 

இது இவ்வாண்டின் இறுதிக்குள் தொடங்கப்பட இருக்கிறது.

"இவை அனைத்தும் ஒருநாள் இரவில் நடக்காது. கடந்த சில மாதங்களாக கடுமையான உழைப்பு போடப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்த 36 செயற்கைக் கோள்களை ஏவுவது என்பது பிரத்யேகமானது" என ராக்கெட் ஏவப்படுவதற்கு முன் கூறினார் ஒன்வெப் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி நீல் மாஸ்டர்சன்.

"இந்த 36 செயற்கைக் கோள்கள் தான் 50 டிகிரி லாட்டிட்யூட் பகுதியில் இருந்து வட துருவம் முழுக்க இணைப்பு சேவையை வழங்குகின்றன. இதில் வட ஐரோப்பா, பிரிட்டன், கிரீன்லாந்து, கனடா, அலாஸ்கா, ஐஸ்லாந்து ஆகிய பகுதிகள் அடங்கும்" என பிபிசியிடம் கூறினார்.

வட துருவம்

பட மூலாதாரம்,ONEWEB

ரஷ்யாவில் கிழக்குப் பகுதியில் இருக்கும் வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இந்த 36 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன.

நேற்று (ஜூலை 01, வியாழக்கிழமை) உள்ளூர் நேரப்படி 21.48-க்கும் சோயஸ் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.

அடுத்த சில மணி நேரங்களுக்கு செயற்கைக் கோள்கள் வெற்றிகரமாக சென்ற சேர்ந்ததா என்பதை தெரிந்து கொள்ள முடியாது.

சுமார் ஓராண்டு காலத்துக்கு முன் தான் பிரிட்டன் அரசும், இந்தியாவின் பார்தி குளோபல் என்கிற நிறுவனமும், கடனில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒன்வெப் நிறுவனத்தை ஏலத்தில் எடுத்து, தலா 500 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தனர்.

அதன் பிறகு பல முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் இணைந்தனர். யுடெல்சாட் (Eutelsat) என்கிற பிரான்சின் செயற்கைக் கோள் தொலைத் தொடர்பு நிறுவனம் இத்திட்டத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

2022ஆம் ஆண்டுக்குள் 650 செயற்கைக் கோள்களை ஏவுவது தான் இத்திட்டத்தின் இலக்கு. அதற்கு வியாழக்கிழமை ஏவிய 36 செயற்கைக் கோள்கள் போக, இன்னும் சுமார் 10 முறையாவது செயற்கைக் கோள்களை ஏவ வேண்டும்.

இத்திட்டத்துக்கு 2.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது. இந்த வாரம் 500 மில்லியன் அமெரிக்க டாலரை முதலீடு செய்ய தீர்மானித்திருக்கிறது பார்தி குழுமம். எனவே திட்டத்துக்குத் தேவையான மொத்த நிதித் தேவையையும் இது நிறைவு செய்கிறது.

செயற்கைகோள்

பட மூலாதாரம்,ONEWEB

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒன்வெப் நிறுவனம் மற்றும் பிரிட்டனின் தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான பிடி நிறுவனமும் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பிரிட்டன் மற்றும் உலகம் முழுக்க இந்த இரு நிறுவனங்களும் எப்படி இணைந்து செயல்படலாம் என்கிற வழிகளை ஆராயவிருக்கின்றன.

பிரிட்டனுக்கான கொள்ளளவில் பெரும் பகுதியை பிடி நிறுவனம் எடுத்துக் கொள்ளலாம். பிடி நிறுவனம் தன் அகன்ற அலைவரிசை சேவையில் ஒன்வெப் சேவையையும் ஒன்றாக களமிறக்கும்.

எனவே இதுவரை இணைய வசதிகள் இல்லாத அல்லது மிகக் குறைவான இணைய வசதி கொண்ட இடங்களில் ஒன்வெப் நிறுவனத்தின் இணைய சேவைகள் வழங்கப்படும்.

"நாங்கள் ஃபைபர் ஆப்டிக் அளவுக்கு தரமான இணைய சேவையை, ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் இல்லாத இடங்களில் வழங்குகிறோம். பிடி போன்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களால் சேவை வழங்க முடியாத இடங்களுக்கு சேவை வழங்குவது அல்லது அவர்களது சேவைக்கு வலுசேர்ப்பது தான் எங்கள் இலக்கு" என்கிறார் மாஸ்டர்சன்.

பிரிட்டன் அமைச்சர்கள் 'ஜிகாபிட்' என்கிற திட்டத்தை முன்மொழிந்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டனின் கிராமபுற பகுதிகளில் அகன்ற அலைவரிசை சேவையை கணிசமாக மேம்படுத்துவது தான் இதன் நோக்கம். இத்திட்டத்தில் ஒன்வெப் நிறுவனத்தின் சேவை முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்வெப்பைப் போலவே அதிக எண்ணிக்கையில் செயற்கைக் கோள்களை அனுப்பி இணைய சேவையை வழங்கும் போட்டி நிறுவனம் ஈலான் மஸ்கின் ஸ்டார் லிங்க்.

செயற்கைக் கோள்

பட மூலாதாரம்,ARIANESPACE

ஸ்டார் லிங்க் நிறுவனத்துக்கு ஏற்கனவே 1,500 செயற்கைக் கோள்கள் விண்வெளியில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் ஆயிரக் கணக்கான செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட இருகின்றன. இதன் இணைய சேவை பீட்டா சோதனையில் இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தன் சேவையை தொடங்க இருப்பதாக ஈலான் மஸ்க் இந்த வாரம் தெரிவித்தார். அடுத்த 12 மாதங்களுக்குள் சுமார் ஐந்து லட்சம் பயனர்கள் இதைப் பயனப்டுத்துவார்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஸ்டார்லிங்க் மற்றும் ஒன்வெப் நிறுவனங்கள் இரண்டும், இருவேறு வியாபார மாதிரிகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்வெப் நிறுவனம் தொலைத் தொடர்பு நிறுவனங்களோடு இணைந்து செயல்பட இருக்கிறது. ஆனால் ஸ்டார் லிங்கோ நேரடியாக வாடிக்கையாளர்களிடம் அலைவரிசையை விற்க இருக்கிறது.

இந்த இரு நிறுவனங்களும் மற்ற எந்த நிறுவனங்களை விடவும் இணைய வியாபாரத்தில் முன்னேறி இருக்கிறார்கள்.

ஐரோப்பிய ஆணையம் மற்றும் சீன அரசாங்கம் கூட இது போல செயற்கைக் கோள்களை ஏவி இணைய சேவையை வழங்குவது குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அது குறித்து எந்த வித தெளிவான விவரங்களும் கிடைக்கவில்லை.

https://www.bbc.com/tamil/science-57689247

விண்வெளிக் குப்பையை அதிகரிக்கிறதா போய் முடியுதோ தெரியல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.