Jump to content

உலகின், மருந்தகமாக... இந்தியா விளங்குகிறது – ராம்நாத் கோவிந்த்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச் செய்தி!

உலகின், மருந்தகமாக... இந்தியா விளங்குகிறது – ராம்நாத் கோவிந்த்

உலகின் மருந்தகமாக விளங்கும் இந்தியா கொரோனா தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான மருந்துகளை உலக நாடுகளுக்கு வழங்கியுள்ளதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

கொலம்பியா, உருகுவே, ஜமைக்கா, ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்காக புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவர்கள் தங்கள் சான்றுகளை குடியரசு தலைவரிடம் அளிக்கும் நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘கொரோனா தொற்று பாதிப்பு சூழலில் கொரோனா தொற்று தடுப்புக்கான அத்தியாவசிய மருந்துகளை உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கியது.

கொரோனாவுக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக திகழ்ந்தது’ எனத் தெரிவித்தார்.

அதேநேரம் இந்தியாவுடனான நல்லுறவு தொடர்ந்து நீடிக்கும் என்று அந்த நாடுகளின் தூதுவர்கள் உறுதி அளித்தனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://athavannews.com/2021/1227097

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.