Jump to content

தற்கால படைத்துறையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தமிழ்ச்சொற்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+

training 41.jpg

 

தற்கால தரைப்படையில் உள்ள ஒவ்வொரு பிரிவுகளுக்குமான தமிழ் சொற்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன...படித்து மகிழுங்கள்!

 

இச்சொற்கள் எல்லாம் சங்க இலக்கியங்களில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும்.

  1. அலகு :- Unit
  2. துணையலகு - Sub-Unit
  3. சூட்டணி/ சூடு & தடூக அணி:- fireteam/ fire and maneuver team = 2–4
  4. சதளம் :- squad /crew = 8–12
  5. பகுதி/ சுற்றுக்காவல் :- section / patrol = 8–24
  6. நாரி/ படையினர் :- platoon/ troop = 26–55
  7. குவவு - staffel/ echelon = 50- 90
  8. குழாம்/ சேணேவித் தொகுதி :- Company /Artillery battery = 80–250
  9. சமரணி :- battalion /cohort = 300–1000
  10. படையணி :- regiment/ group= 1,000– 3000
  11. படைத்தொகுதி/அதிகம் :- Brigade = 3000 - 5000
  12. படைப்பிரிவு/ பிரிவு :- division/legion = 6,000– 20,000
  13. திரள் :- corps = 20,000–50,000
  14. களப் படை/ படை :- Field Army/ Army = 100,000–200,000
  15. மூகை/ முனை :- army group /front = 400,000 - 1,000,000
  16. தளம் / விளாகம்/அரங்கம் / அடிபாட்டாளர் கட்டளைப்பீடம் :- region/ theater/ Combatant Command = 1,000,000 - 10,000,000

 


மேலே உள்ள ஒவ்வொரு சொற்களும் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டது என்பதற்கான விளக்கம். பாமரனிற்கும் புரிய வேண்டும் என்னும் கூட்டத்தினர் இவற்றை வாசிக்க வேண்டாம். :-

  1. அலகு = Unit
  2. சூட்டணி என்றால் சுடும் அணி என்று பொருள். ஒரு சுடும் அணியில் மிகக் குறைவான வீரர்களே இடம்பெற்றிருப்பார்கள். மேலும் இச்சொல் புலிகள் காலத்தில் ஒரு fireteam குறிக்க வழங்கப்பெற்றது.
  3. தடூகம் - தட(பெரிய) + ஊகம்(உய்த்துணர்தல், உத்தி, அறிவு, படை வகுப்பு) - பெரிய உத்தியாக அனுப்பப்படக்கூடிய படையின் உட்பிரிவு
  4. சதளம் - இச்சொல் squad ஐ குறிக்க மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் உருவாக்கப்பெற்றது.
  5. பகுதி - என்னும் இச்சொல்லின் பொருள் அராணுவம் என்பதே. மேலும், பகுதி = part (தற்காலத்தில்)
  6. சுற்றுக்காவல் = Patrol (ஈழ வழக்கு)
  7. நாரி- platoon என்னும் இச்சொல் வரிசையாகத்தொடுத்த மாலைபோன்று திகழும் படை அணி என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு குறைந்தது இவ்வளவு வீரர்கள் நிற்பார்கள் என்னும் பொருளில் இங்கு ஒழுங்கமைத்துள்ளேன்.
  8. படையினன் - Troops எனபதைக் குறிக்க ஏற்கனவே படையினர் என்னும் சொல் ஈழத்தில் வழங்கி வருவதைக் காண்க.
  9. குவவு - குவவு என்றால் கூட்டம் என்று பொருள்.. படைப் பொருட் பின்புலம் இச்சொல்லுக்கில்லை
  10. குழாம் - society, company, association.
  11. சமரணி - புலிகளிடம் இது சமரணி என்று வழங்கப்பெற்றது. நானும் இங்கு அதே பொருளில்தான் வழங்கியுள்ளேன். 
  12. படையணி - சொல்லவே தேவையில்லை. ஏற்கனவே புலிகளின் காலத்தில் Regiment-க்கு ஈடாக வழங்கப் பெற்ற சொல். சோழர் காலத்திலும் வழங்கப்பெற்ற சொல். அதையே இங்கும் கொடுத்துள்ளேன்.
  13. படைத்தொகுதி - இச்சொல்லானது ஏற்கனவே விடுதலைப் புலிகளால் ஒரு 'Brigade' குறிக்கப் பயன்படுத்தப்படது
  14. அதிகம் - ரெஜிமென்ரின் அளவை விட அதிகமான ஆட்கள் இருந்தால், அஃது பிரேகேட் ஆகும் என்பதுவே ரெஜிமென்ற் என்னும் சொல்லின் விளக்கமாகும். எனவே ஒரு படைப்பிரிவில் அதிகமான வீரர்கள் இருந்தால், பண்டைய காலத்தில், அது அதிகம் எனப்படும் என்று அர்தசாஸ்திரம் மூலம் அறிந்து கொண்டேன்(அர்த்தசாச்திரத்தில் இதற்கு வேறு சொல் உண்டு). அதையே இங்கும் வழங்கியுள்ளேன்.
  15. பிரிவு/ படைப்பிரிவு- division என்பதன் பொருளும் பகுதியே. மேலும் பிரிவு என்பதன் பொருளும் அராணுவம் என்பதால் இரண்டும் ஒரே சொல்லில் வருவதால் அதை இங்கு சூட்டி விட்டேன். மேலும் இது ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்லாகும்.
  16. திரள் - Corps என்றால் படையின் உடற்பகுதி(நடுவில் இருக்கும் திரண்ட பகுதி) என்று பெயர். அதே பொருளில் தமிழில் வழங்கும் சொல் திரள் என்பதாகும் . இதன் பொருள் படையின் ஒரு திரண்ட பகுதி . அதையே இங்கும் அதே பொருளில் வழங்கியுள்ளேன்.
  17. களப்படை/ படை- ஏற்கனவே army என்பதன் பொருள் படை என்றுதான் வழங்கி வருகிறோம். ஆகையால் அதனையே இங்கும் கொடுத்து விட்டேன். மேலும், இது ஏற்கனவே வழக்கில் உள்ள சொல்லாகும்.
  18. மூகை - மூகை என்றால் படைக் கூட்டம்(army group) என்று பொருள்.
  19. தளம் - இதன் பொருள் ஒரு ஒரு சேனையுட்படும் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்பூதங்களிற்கான படைகளையும் துணைப்படை, எல்லைப்படை, அதிரடிப்படை, தற்கொடைப்படை போன்றவற்றையும் குறிப்பது. ஒரு பிராந்தியத்திற்குள்ளேயே பல தளங்கள் இருக்கும். இவற்றை Region என்பர் ஆங்கிலத்தில். இவையெல்லாம் இருக்கும் இடத்தையும் தேவையையும் கருத்தில் கொண்டே இதனுட்படும். இவை இருக்கும் இடத்தினால் அவ்விடத்திற்கு தளம் என வழங்கி, அதுவே பிற்கலத்திலும், பேந்து தற்காலத்திலும் 'படைத்தளம்' என்னுஞ்சொல்லில் வரும் தளத்தின் பொருளை தாங்கிற்று.
  20. முனை - ஈழத்தில் பயன்பாட்டில் இருந்த சொல். எ.கா: வடபோர் முனை..
  21. விளாகம் - போர் நடந்த இடமும் சூழலும் விளாகம் எனப்படும், தமிழில். ஆங்கிலத்தில் theater எனப்படும்.
  22. அரங்கம் - புலிகள் காலத்தில் வழங்கப் பெற்ற சொல்

 


கடற்படை பிரிவுகள்:-

  1. Task elements - பணிக்கடக் கூறுகள்
  2. Squadron/ Task unit - கலமணி/சதளம்/ பணிக்கட அலகு
  3. Flotilla/ Task group - கலத்தொகுதி/ பணிக்கடக்குழு
  4. Division/ Task group - படைப்பிரிவு/ பணிக்கடக்குழு
  5. Taskforce/ strike group - பணிக்கடப்படை/ அடிக்குழு
  6. Battle fleet - சமர் கலக்கூட்டம்
  7. Fleet - கலக்கூட்டம்

 


  • கூடுதல் தகவல்:

 

 

 

உசாத்துணை:

படிமப்புரவு: கொம்பனி

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.