Jump to content

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில்  விசேட பூஜை வழிபாடு!

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

02.jpg

https://athavannews.com/2021/1227366

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கோமாளித்தனம். ஒருவர் இப்படி வேண்டுகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, satan said:

இதென்ன கோமாளித்தனம். ஒருவர் இப்படி வேண்டுகிறார். 

ராஜாபக்சாவின் "குருவியோ">>> போர்ட் சிற்றியில்  புகுந்து விளையாடுகிற பிளானாக இருக்கும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, satan said:

இதென்ன கோமாளித்தனம். ஒருவர் இப்படி வேண்டுகிறார். 

இதைத்தான்… குனிஞ்சு கும்பிடுறது, எண்டு சொல்லுறவை. 🤣

விரைவில் அவருக்கு… பெரிய பதவி ஒண்டு, வரப் போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலை போராட்டம் முளைவிட தொடங்கிய காலத்தில் முதலில் களையெடுக்கப்பட்டது வடக்குகிழக்கில் இருந்தபடி தமது தனிப்பட்ட பிரபல்யம் பொருளாதாரம், அரசியல் ஆதாயம் செல்வாக்கு ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு தமது இனத்தின் பாதிப்பு சுய கெளரவம்பற்றி கிஞ்சித்தும் யோசிக்காமல்  சிங்கள தலைமைகளுக்கு பாத பூசை செய்பவர்களைத்தான் என்பது வரலாறு.

இனத்தின் சுயகெளரவம் என்ற ஒற்றை சொல்லுக்காக போராட்டம் ஆரம்பித்து முடிவடைந்து எத்தனை தசாப்தங்கள் கடந்து போயின, எத்தனை எத்தனை ஆயிரம் மனித உயிர்கள்,அங்கவீனர்கள் ,சந்ததியே இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டவர்கள் , எத்தனை ஆயிரம் கோடி சொத்து இழப்புக்கள் இவற்றிலிருந்து ஏதாவது கற்றுக்கொண்டதா இந்த சிங்களவர்களின் புறங்கையில் ஒட்டிக்கொண்டிருக்கும் சோற்றை நக்க ஓடிக்கொண்டிருக்கும் பெயரில் மட்டுமே தமிழை கொண்டிருக்கும் இந்த கூட்டம்?

கட்டுப்படுத்த ஆள் இல்லை என்று ஆன பிறகு இந்த கால் கழுவும் கூட்டத்தின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு போகுமேயொழிய கட்டுப்பாட்டுக்குள் ஒருபோதும் வராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியா நகர் முழுவதும் ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’ என பொறிக்கப்பட்ட பதாதைகள்

 

IMG20210708094814 01 வவுனியா நகர் முழுவதும் 'வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச' என பொறிக்கப்பட்ட பதாதைகள்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று பதவி பிரமாணம் செய்துக் கொண்டார்.

IMG20210708102905 வவுனியா நகர் முழுவதும் 'வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச' என பொறிக்கப்பட்ட பதாதைகள்

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற மீள் வருகையடுத்து ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’  பாராளுமன்ற வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் வடக்கின் வசந்தத்தின் மூலம் பொது மக்களின் அபிலாசையினை பெற்ற நாயகனின் பாராளுமன்ற மீள்வருகை என பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகள் வவுனியா நகர் முழுவதும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

IMG20210708102835 01 வவுனியா நகர் முழுவதும் 'வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச' என பொறிக்கப்பட்ட பதாதைகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள், பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் என பலர் ஆதரவு தெரிவித்து இவ்வாறு பதாதைகளை காட்சிப்படுத்தியுள்ளனர்.

 

https://www.ilakku.org/vavuniya-basil-rajapaksa-poster/

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

நிதிஅமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது!!!!

இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரசியலிலும், அரச நிர்வாகத்திலும் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிரான செயற்பாடு என்றே கருத வேண்டும்.

பசில் ராசபக்ச நாட்டுக்கு சேவையாற்ற நினைத்தால் கோட்டாபய ராசபக்சாவை போன்று அமெரிக்க குடியுரிமையை துறக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் நாட்டை ஒருபோதும் முன்னேற்ற முடியாது என்றே தோன்றுகிறது என தேசப்பற்றுள்ள பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்தார்.

மேலும் குறிப்பிடுகையில், இரட்டை குடியுரிமையினை கொண்டவர்கள் அரச நிர்வாகத்திலும், அரசியலிலும் பங்குப்பற்றுவதும் தவறானதாகும்.

 

இரட்டை குடியுரிமையினையுடைவர்கள் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவது நாட்டுக்கு எதிராக செயற்பாடாகும்.

முன்னாள் அமைச்சர் பசில் ராசபகிச பாராளுமன்ற உறுப்பினராகி நாட்டுக்கு சேவையாற்றுவது வரவேற்கத்தக்கது. ஆனால் நாட்டின் நலனை கருத்திற் கொண்டு இரட்டை குடியுரிமையினை உடையவருக்கு அரசியலில் அனுமதியளிக்க முடியாது என்றார்.😕

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குனிவது

கும்பிடுவது என்று  புறப்பட்ட  பின்னர்??????😪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, உடையார் said:

பசில் ராஜபக்சவின் பாராளுமன்ற மீள் வருகையடுத்து ‘வளரும் நாட்டிற்கான பலம் பசில் ராஜபக்ச’  பாராளுமன்ற வருகைக்கு வாழ்த்துக்கள் மற்றும் வடக்கின் வசந்தத்தின் மூலம் பொது மக்களின் அபிலாசையினை பெற்ற நாயகனின் பாராளுமன்ற மீள்வருகை என பல்வேறு வசனங்களை தாங்கிய பதாதைகள் வவுனியா நகர் முழுவதும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

தமிழ் மக்கள் பசில் ராஜபக்ஷவை  விரும்புகிறார்கள் என்கிற மாயையை உருவாக்குவதற்காக அவர்களின் அடிவருடிகளால் காட்டப்படும் படம் போன்றே இருக்கிறது. தமிழர் இல்லாமல் இனி நாட்டில் அசைய முடியாத நிலை. ஒருபக்கம் சீனா விழுங்கப்போகுது, மறுபக்கம் சர்வதேசம் நெருக்குது, இன்னொரு பக்கம் சிங்களம் சிந்திக்குது. அந்தப்பக்கம் உட்கட்சி முரண்பாடு, பொருளாதார வீழ்ச்சி.  இவற்றிலிருந்து தப்புவதற்கு தமிழரை அணைப்பது போல் அணைத்து புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை பெற முயற்சிக்கலாம். அவர்கள் அணைக்கிறார்களோ இல்லையோ நம் ஆக்கள் ஒட்டிக்கொண்டிருந்து ஏதாவது பருக்கை இருக்கிறதா என்று ந ....... பார்ப்பார்கள். நெருக்கடியை சமாளிக்க பசிலை வரவழைத்து ஒரு நாடகம். மொத்தத்தில் புதிய கோப்பையில் பழைய கள் வாசனையோடு. அவரோ  ராஜபக் ராஜபக்ஷகளுக்குள் தந்திரம் கூடியவர். ஒருவேளை அமெரிக்கா இலங்கையை தன்வசம் இழுப்பதற்காக இவரை வைத்து காய் நகர்த்தலாம். குரைத்த தினேஷ் குணவர்தன பெட்டிப்பாம்பாய் வளைவதிலிருந்து பல சந்தேகங்கள் வருகிறது. எப்படியிருந்தாலும் இலங்கை ஒரு ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலுள்ளது இப்பொழுது.     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில்  விசேட பூஜை வழிபாடு!

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!

கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

02.jpg

https://athavannews.com/2021/1227366

என்ன படத்தைப்போட்டு இன்னொன்றோடு இணைத்து கதை எழுதுகிறார்கள் போலுள்ளது.  இங்கு கொரோனா கட்டுப்பாடு அனுசரிப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

தமிழ் மக்கள் பசில் ராஜபக்ஷவை  விரும்புகிறார்கள் என்கிற மாயையை உருவாக்குவதற்காக அவர்களின் அடிவருடிகளால் காட்டப்படும் படம் போன்றே இருக்கிறது

பசில் அவர்களுக்கு வட கிழக்கில் நிறைய ஆதரவு உள்ளது . அடுத்த கட்டம் வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தல்.... அதுதான் பசிலின் இலக்கு.
வட கிழக்கு மக்களின் ஆதரவுடன் அவர்தான் இலங்கையின்  அடுத்த தலைவர். 
தமிழ்த் தேசியம் போராட்டம் எல்லாம் பின் தள்ளப்படும்

Link to comment
Share on other sites

அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது - அமைச்சர் டக்ளஸ் வாழ்த்து
............
கௌரவ பஷில் ராஜபக்ஷ பதவியேற்று கொண்டமை அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் கௌரவ பஷில் ராஜபக்ஷ பதவியேற்றமை தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்குறித்தவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
"நிதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவின் ஆளுமை என்பது எமது மக்களினால் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.
அவ்வாறான ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் பதவியேற்றுள்ளமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிநடத்தலிலும் பயணித்துக் கொண்டிருக்கும் எமது அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது.
அதேபோன்று, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார சவால்கள் தொடர்பான நம்பிக்கையையும் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
மேலும், கடந்த காலங்களில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்து, அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்கொண்ட வேலைத் திட்டங்களும், எம்மால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர் வழங்கிய ஒத்துழைப்புக்களும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நிலையான இடத்தினை பிடித்திருக்கின்றமையினால், அவரின் தற்போதைய பதவியேற்பு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது" என்று தெரிவித்துள்ளார்.
May be an image of 1 person, standing and indoor
 
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

நிதிஅமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது!!!!

இலங்கையின் புதிய நிதி அமைச்சர் இலங்கை திருநாட்டை சரியான பாதையில் நிதிபரிபாலனம் செய்வதற்கு தேவையான அறிவையும், ஆரோக்கியத்தையும், பலத்தையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுக்கட்டும்.

ஓம் நமசிவாய!

 🙏🙏🙏

Link to comment
Share on other sites

38 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

இலங்கையின் புதிய நிதி அமைச்சர் இலங்கை திருநாட்டை சரியான பாதையில் நிதிபரிபாலனம் செய்வதற்கு தேவையான அறிவையும், ஆரோக்கியத்தையும், பலத்தையும் எல்லாம் வல்ல இறைவன் கொடுக்கட்டும்.

ஓம் நமசிவாய!

 🙏🙏🙏

கிழக்கு நோக்கி இருக்கும் சிவனின் மந்திரமாக'நமசிவாய' வைக் கூறுகின்றார்.
 
'நமசிவாய ' என்ற நாமம் உச்சரிக்க அமிர்த வச்சிரம் ஏற்படும்.
 
'நமசிவாய ஊம் நமசிவாய' என்று உச்சரித்தால் பதினெட்டு வகை சுரமும் தீரும்.
 
'நமசிவயங் செலகை நமசிவாய' என மந்திரம் உச்சரித்தால் அறுபத்தி நான்கு பாஷானங்களினால் ஏற்படும் விஷங்களும் தீரும்.
 
'நமசிவாயம் லங்க நமசிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பூமியில் மழை பொழியும்.
 
'சவ்வும் நமசிவாய நமா' என்று உச்சரித்தால் அரச போகம் கிட்டும்.
 
'ஶ்ரீயும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை ஓதினால் கள்ளர்கள் வரமாட்டார்கள்.
 
'ஊங்கிறியும் நமசிவாய நமா' என்ற மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிடைக்கும்.
 
'அலங்கே நமசிவாய நமோ' என்ற மந்திரத்தைச் சொன்னால் புகழ் மற்றும் பெருமை உண்டாகும்.
 
'வநம சிவாய' என்று செபித்தால் தேக சித்தி உண்டாகும்.
 
'ஓம் நமசிவாய' என்று செபித்தால் காலனை வெல்லலாம்.
 
'லங்கிரியும் நமசிவாய' என்று உச்சரித்தால் தானியங்கள் பெருகி வளரும்.
 
'ஓங்கிறியும் ஓம் நமசிவாய' என்று சொல்லி வந்தால் வாணிபங்கள் நன்றாய் நடக்கும்.
'ஓங் ஊங் சிவாய நம உங்நமா' என்ற மந்திரத்தை உச்சரித்தால் பதினெட்டு வகையான குட்டமும் தீரும்.
 
'லீங் க்ஷும் சிவாயநம' என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.
 
'லூங் ஓங் நமசிவாய' என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.
 
'ஓங் அங்கிஷ சிவாய நமா' என்று ஓதினால் பூமியெங்கும் சஞ்சாரம் செய்யலாம்.
 
'அங் சிவாய நம' என்று உச்சரித்து வந்தால் குழந்தை பாக்கியம் கிட்டும்.
 
'அங் உங் வங் சிவாய நம' என மந்திரம் உச்சரிக்க உடலில் உண்டான நோய்கள் தீரும்.
 
'ஹம் ஹம் சிவாய நமா' என்று உச்சரித்தால் யோக சித்தி உண்டாகும்.
 
'ஓம் நமசிவாய நமா' என்ற மந்திரத்தை செபித்தால் பூத கூட்டங்கள் வசமாகும், துஷ்ட தேவதைகள் அழியும்.
 
'சிலியும் நம சிவாய' என்ற மந்திரத்தை உச்சரித்தால் மன்னர்கள் வசியம் ஏற்படும்.
 
இவையெல்லாம் தத் புருஷம் இருபத்தைந்தாம்.
 
கரூரார் பூஜா விதிகள். சிதம்பர அஷ்ட கர்ம மந்திரங்கள்.
 
வில்வம், அத்தி ஆகியவற்றின் சமித்துகளால் தற்புருஷ மந்திர ஜபம் ஜபித்து ஆயிரத்தெட்டு முறை ஹோமம் செய்தால் காரிய சித்தியாகும். பிரம்மஹத்தி முதலிய பாவங்கள் நீங்கும்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

ஓம் நமசிவாய!

அதை சொல்பவர்களுக்குத்தான் நன்மையே தவிர மற்றவர்களுக்கு அல்ல சும்மா கடுப்பேத்த என்று அடித்து விடக்கூடாது பாஸ் .

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:
 
'லீங் க்ஷும் சிவாயநம' என்ற மந்திரம் உச்சரித்தால் பெண்கள் வசியம் ஏற்படும்.


எனது பெயரில் மேலேயுள்ள மந்திரத்தையும் குமாரசாமி அண்ணையின் பெயரில் கீழேயுள்ள மந்திரத்தையும் 1008 முறை சொல்லத்தக்க இயந்திரத்தை எங்கே வாடகைக்கு எடுக்கலாம் என்று தெரியுமா?😃

3 hours ago, nunavilan said:
 
'லூங் ஓங் நமசிவாய' என்று ஓதினால் தலையில் ஏற்படும் நோய்கள் அனைத்தும் தீரும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன்கள் போல பசில் ஐயாவும் ரொம்ப நல்லவர் .. வல்லவர் 
தமிழர்களுக்கு நடக்கும்போது ஒரு முள்ளு குத்தினால்கூட  மனமுடைந்து போவார் 
ஆதலால் தமிழர்கள் குண்டு அடிபட்டு இறந்தால் கூட யாரும் சொல்லுவதில்லை 
பச்சை குழந்தைகள் தாங்க மாட்டார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாத்தியார் said:

பசில் அவர்களுக்கு வட கிழக்கில் நிறைய ஆதரவு உள்ளது . அடுத்த கட்டம் வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தல்.... அதுதான் பசிலின் இலக்கு.
வட கிழக்கு மக்களின் ஆதரவுடன் அவர்தான் இலங்கையின்  அடுத்த தலைவர். 
தமிழ்த் தேசியம் போராட்டம் எல்லாம் பின் தள்ளப்படும்

பசில் அவர்களுக்கு.....🤔

இலங்கையில் பொதுவாழ்வில் இருந்தவர்களில் ஒரேயொருவரை மட்டுமே எனது வாய் "அவன்" என்று அழைத்ததில்லை.

நான் ஒரு நாகரிகம் தெரியாத காட்டுமிராண்டியோ ஒருவேளை .....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி யாழில்  விசேட பூஜை வழிபாடு!

பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு!

இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது.

02.jpg

முஸ்லீம் மத குருக்கள்....  பசில் ராஜபக்சவின், ஆசி நிகழ்விற்கு அழைக்கப் படாததை,
மிக, மிக... வன்மையாக கண்டிக்கின்றோம்.  😜

அலலது... அழைத்தும், அவர்கள் வரவில்லையா... 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, satan said:

தமிழ் மக்கள் பசில் ராஜபக்ஷவை  விரும்புகிறார்கள் என்கிற மாயையை உருவாக்குவதற்காக அவர்களின் அடிவருடிகளால் காட்டப்படும் படம் போன்றே இருக்கிறது. தமிழர் இல்லாமல் இனி நாட்டில் அசைய முடியாத நிலை. ஒருபக்கம் சீனா விழுங்கப்போகுது, மறுபக்கம் சர்வதேசம் நெருக்குது, இன்னொரு பக்கம் சிங்களம் சிந்திக்குது. அந்தப்பக்கம் உட்கட்சி முரண்பாடு, பொருளாதார வீழ்ச்சி.  இவற்றிலிருந்து தப்புவதற்கு தமிழரை அணைப்பது போல் அணைத்து புலம்பெயர்ந்தோரின் முதலீடுகளை பெற முயற்சிக்கலாம். அவர்கள் அணைக்கிறார்களோ இல்லையோ நம் ஆக்கள் ஒட்டிக்கொண்டிருந்து ஏதாவது பருக்கை இருக்கிறதா என்று ந ....... பார்ப்பார்கள். நெருக்கடியை சமாளிக்க பசிலை வரவழைத்து ஒரு நாடகம். மொத்தத்தில் புதிய கோப்பையில் பழைய கள் வாசனையோடு. அவரோ  ராஜபக் ராஜபக்ஷகளுக்குள் தந்திரம் கூடியவர். ஒருவேளை அமெரிக்கா இலங்கையை தன்வசம் இழுப்பதற்காக இவரை வைத்து காய் நகர்த்தலாம். குரைத்த தினேஷ் குணவர்தன பெட்டிப்பாம்பாய் வளைவதிலிருந்து பல சந்தேகங்கள் வருகிறது. எப்படியிருந்தாலும் இலங்கை ஒரு ஆப்பிழுத்த குரங்கின் நிலையிலுள்ளது இப்பொழுது.     

உண்மை அது ஆனால் அதை ஏற்கும் நிலையில் நம்மில் சிலர் இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

முஸ்லீம் மத குருக்கள்....  பசில் ராஜபக்சவின், ஆசி நிகழ்விற்கு அழைக்கப் படாததை,
மிக, மிக... வன்மையாக கண்டிக்கின்றோம்.  😜

அலலது... அழைத்தும், அவர்கள் வரவில்லையா... 🤔

பிரபலங்களுக்காக இறைவனை  வழிபடுவடை அவர்களது மார்க்கம் ஏற்று கொள்வதில்லை.....தனிமனித வழிபாடுகளும் அவர்களது மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது அது மட்டுமல்லாமல் ஏனைய மத சம்பிராதய்ங்கள் நடை பெறும் பொழுது  அவர்கள் கலந்து  கொள்வதை விரும்புவதில்லை....

Link to comment
Share on other sites

ஒரு நாட்டின் நிதி மேலாண்மை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது

இதன் அடிப்படையில், பல்வேறு நாடுகள் தங்கள் சொந்த அமைச்சரவையில் நிதி நிபுணர்களை நிதி அமைச்சர்களாக நியமிப்பது வழக்கம்.

நிதியமைச்சர் பதவிக்கு நியமிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நாட்டின் நிதிக் கொள்கை, நாணய மேலாண்மை, நிதி ஒழுங்குமுறைகள் மற்றும் நிதிச் சட்டங்களின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை,

வக்கீல் மற்றும் பட்டய கணக்காளர் முசுதபா கமலை அதன் நிதி அமைச்சராக பங்களாதேசு நியமித்துள்ளது.

நிதி நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்ற முசுதபா கமல், தாமரை கமல் குழுமத்தின் நிறுவனர் ஆவார்.

மேலும், பங்களாதேசு பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் வுளித் துறையின் நிதித்துறையில் பணியாற்றிய முசுதபா கமலுக்கு 40 வருட அனுபவம் உள்ளது.

முசுதபா கமலை லண்டனின் "தி பேங்கர்" பத்திரிகை 2020 ஆம் ஆண்டின் நிதியமைச்சர் விருதுக்கு பரிந்துரைத்தது.

நன்கு அறியப்பட்ட வங்கியாளரான சா யூகே கத் தரின் பாகித்தானின் நிதி அமைச்சராக உள்ளார்.

சா யூகே கத் தரின் முதுகலை பட்டம் பெற்றவர் மற்றும் சர்வதேச புகழ்பெற்ற சிட்டி வங்கியில் 22 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

பீப் வங்கி லிமிடெட் உட்பட நிதித்துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமும், கராச்சி பங்குச் சந்தை உள்ளிட்ட பங்குச் சந்தைகளில் 35 ஆண்டுகால அனுபவமும் சா யூகே கத் தரினுக்கு உண்டு.

பூட்டானின் நிதியமைச்சர் நம்கே செரிங்.

முதுகலை பட்டம் பெற்ற இவர், உலக வங்கியில் திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.

உலக சுகாதார அமைப்பில் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு

திருமதி நிர்மலா சீதாராமன் இந்திய நிதி அமைச்சராக உள்ளார்.

பொருளாதார வல்லுனர் நிர்மலா சீதாராமனுக்கு இங்கிலாந்தில் வேளாண் பொறியாளர்கள் சங்கத்தின் பொருளாதார வல்லுநராக பணியாற்றிய அனுபவம் உண்டு.

திருமதி நிர்மலா சீதாராமன் லண்டனில் உள்ள பிக் 4 தணிக்கை நிறுவனம் (பிக் 4 தணிக்கை நிறுவனம்) பி.டபிள்யூ.சியில் மூத்த மேலாளராகவும் அனுபவம் பெற்றவர்.
36 வயதான இப்ராகிம் அமீர் மாலத்தீவின் நிதி அமைச்சராக உள்ளார்.

சர்வதேச பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இப்ராகிம் அமீர், அமெரிக்காவில் ஃபுல்பிரைட் உதவித்தொகை பெற்றவர்களில் ஒருவர்.

இது தவிர, மாலத்தீவின் மத்திய வங்கியில் மேலாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது

டாக்டர் பழனிவேல் தியாகரான் இந்தியாவின் தமிழகத்தின் நிதி அமைச்சராக உள்ளார்.

தியாகரான் உலகப் புகழ்பெற்ற எம்ஐடி பல்கலைக்கழகத்தில் நிதி நிர்வாகத்தில் முதுகலை பட்டமும், அமெரிக்காவின் பவ்பலோ பல்கலைக்கழகத்தில் பிஎச்டியும் பெற்றுள்ளார்.

டாக்டர் பழனிவேல் தியாகரான் அமெரிக்காவில் லெகிய்மன் பிரதர்சு கோல்டிங்சு இன்க் நிறுவனத்தில் நிதி மேலாளராக 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.

தியாகரான் சிங்கப்பூரில் உள்ள இசுடாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் உலகளாவிய மூலதனப் பிரிவின் தலைவராக 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்.

இந்த சர்வதேச சூழலில், பசில் ராயபக்ச இலங்கையின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு உட்பட நாட்டின் பல பகுதிகளில் பட்டாசுகளுடன் பல கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

இலங்கை பொருளாதாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லக்கூடிய புத்திசாலி பசில் ராக்ச என்று கதைகள் கூறப்படுகின்றன.

பசில் ராக்சவின் கல்வித் தகுதி சரியாக என்ன? நிதித்துறையில் அவரது அனுபவம் என்ன?

அமெரிக்க தூதர் ராபர்ட் ஓ. பிளேக் தனது நாட்டிற்கு அனுப்பிய குறிப்பில் பசில் ராக்ச பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

  'பசில் ஊழல், கல்வி லிமிடெட் மற்றும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டது'

அதாவது, பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட படிப்பறிவற்ற மோசடி பசில் ராக்ச என்று கூறுகிறார்

எனவே, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறந்த நிதி நிபுணர்களைச் சந்திக்க, நியமிக்கப்பட்ட இலங்கை நிதி அமைச்சரின் திறமை ஒரு பத்து சதவீதம் கூட இல்லை.

இது கொண்டாட வேண்டிய ஒன்றல்ல .. வெட்கப்பட வேண்டிய ஒன்று.

 

வாட்சப்பில் ஒரு நண்பனிடமிருந்து வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப, தராவது, மகிந்தவுக்கு ஆசி வேண்டி பூசை செய்து, துன்னூறு அனுப்பி வைக்கவேணும்.

எங்கண்ட மகிந்தா என்ன தக்காளி தொக்கா. 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

இப்ப, தராவது, மகிந்தவுக்கு ஆசி வேண்டி பூசை செய்து, துன்னூறு அனுப்பி வைக்கவேணும்.

எங்கண்ட மகிந்தா என்ன தக்காளி தொக்கா. 😁

நேற்று… பசிலுக்கு, நடந்த பூசையில் ஏதோ… தவறு நடந்து விட்டது போலுள்ளது. 😂

குளிக்காமல்…. பூசை செய்து விட்டார்கள் என்று, ஜேர்மனியில் உள்ள பிரபல சாத்திரியார் சொல்லுகிறார். 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
    • த‌மிழ் சிறி அண்ணா அந்த‌ 800ரூபாய் வீடியோ ப‌ழைய‌ வீடியோ அண்ணா அந்த‌ வீடியோ போன‌ வ‌ருட‌மே ரிக்ரோக்கில் பார்த்து விட்டேன்....................இதை ப‌ற்றி அல‌ட்ட‌ என்ன‌ இருக்கு 800ரூபாய் வீடியோ அடிச்சு சொல்லுறேன் அது போன‌ வ‌ருட‌த்தான் வீடியோ ம‌ற்ற‌ வீடியோ ப‌ற்றி நான் வாயே திற‌க்க‌ல‌...................எப்ப‌ பார்த்தாலும் எல்லாத்துக்கையும் என்னை கோத்து விடுவ‌தில் கோஷானுக்கு ஏதோ இன்ப‌ம் இருக்கிற‌ மாதிரி தெரியுது அவ‌ரின் இன்ப‌த்துக்கு அவ‌ர் என்னை எப்ப‌டியும் க‌ழுவி ஊத்த‌ட்டும் ஹா ஹா😂😁🤣.......................... 
    • படக்குறிப்பு,இந்திய தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கைத் தமிழர் நளினி கிருபாகரன். கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 18 ஏப்ரல் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருச்சி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் பெண் ஒருவர், இந்திய அரசின் சட்டத்தை உயர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டி பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களைப் பெற்றிருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அப்பெண் முதல் இலங்கைத் தமிழராக வாக்கு செலுத்தியுள்ளார். இலங்கைத் தமிழர் பெண் இந்திய குடியுரிமை பெற்றது எப்படி? இலங்கைத் தமிழர்கள் இந்திய குடியுரிமை பெற முடியுமா? திருச்சி மாவட்டம் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வருபவர் நளினி, இவருக்கு 38 வயது ஆகிறது. இவரது பெற்றோர்களான கண்ணன், சாந்தி இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். அங்கு ஏற்பட்ட போர் பதற்றத்தால் கடல் வழியாக ராமேஸ்வரத்திற்கு 1983ஆம் ஆண்டு வந்தடைந்தனர். ராமேஸ்வரம் அருகே இருக்கும் மண்டபம் இலங்கை மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு 1986ஆம் ஆண்டு நளினி பிறந்தார். அதைத் தொடர்ந்து அங்கிருந்து திருச்சியில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாமிற்கு மாற்றப்பட்டு அங்கு கிருபாகரன் என்பவரை நளினி திருமணம் முடித்து இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இவர் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்திருந்தார். அவர் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பதால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க அதிகாரிகளால் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஸ்போர்ட் கேட்டு வழக்கு தனக்கு பாஸ்போர்ட் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி வழக்கு தொடுத்தார். அதில், இந்திய குடியுரிமைச் சட்டம் 1955 பிரிவு 3iன் படி, 26.1.1956 முதல் 1.7.1986 வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்தியர்கள்தான் என்ற அடிப்படையில் தனக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட்12இல் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பு வழங்கினார். அதில், "மனுதாரர் நளினி இலங்கையைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்திருந்தாலும் அவர் இந்திய குடிமகள்தான்” எனத் தீர்ப்பளித்து, அவருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து, நளினிக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய குடியுரிமை பெற்று வாக்களிக்க எண்ணிய நளினி வாக்காளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டு விண்ணப்பித்து அதையும் பெற்றார். நாளை நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் முதல் இலங்கை தமிழர் என்ற பெயரை பெற்றிருக்கிறார்.   40 ஆண்டு போராடத்திற்குக் கிடைத்த வெற்றி பட மூலாதாரம்,HIGHCOURT MADURAI BENCH படக்குறிப்பு,நளினிக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய நளினி கூறுகையில், “கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் எனது தாய், தந்தை வசித்து வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். எங்களுக்கு அரசிடமிருந்து சலுகைகள் கிடைத்தாலும் நாங்கள் நாடற்ற அகதிகளாகவே இன்னும் பார்க்கப்பட்டு வருகிறோம். எனவே, எங்களுக்கான அடையாளம் குடியுரிமை மட்டுமே. அதைப் பெற வேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம். கடந்த 1986ஆம் ஆண்டு பிறந்தவர் என்ற அடிப்படையில் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அது மறுக்கப்பட்டது. இந்திய குடியுரிமை சட்டத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றத்தை அணுகியபோது பாஸ்போர்ட் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, தற்போது முதல் இலங்கைத் தமிழராக வாக்களிப்பதற்கான உரிமையும் பெற்றுள்ளேன்,” என்றார். ‘இலங்கைத் தமிழர்களின் குரலாக முதல் வாக்கு’ நாளை நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க இருப்பது மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வாக இருக்கப் போகிறது எனக் கூறும் அவர், "நாடற்ற பெண்ணாக இருந்தேன். ஆனால் தற்போது இந்திய குடியுரிமை பெற்று இனி ஜனநாயகக் கடமையைச் செய்யப் போகிறேன்," எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இலங்கை மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாகத் தனது ஒற்றை வாக்கை நாடாளுமன்றத் தேர்தலில் செலுத்த உள்ளதாகவும் நளினி தெரிவித்தார். அதோடு, இந்திய அரசு தமிழ்நாட்டில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.   ‘150 இலங்கைத் தமிழர்கள் வாக்களிக்க வாய்ப்பு’ படக்குறிப்பு,தேர்தல்களில் வாக்களிக்கும் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என வழக்கறிஞர் ரோமியோ ராய் தெரிவித்தார். இந்திய குடியுரிமைச் சட்டத்தை மேற்கோள் காட்டி நளினிக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டு இந்திய குடியுரிமை பெற்ற நபராக மாறினார். அதைத் தொடர்ந்து வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து அதையும் பெற்றுள்ளார். இதை அடிப்படையாகக் கொண்டு இலங்கைத் தமிழர் முகாமில் வசிக்கும் மூன்று பேர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து உள்ளதாகவும் நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரோமியோ ராய் குறிப்பிட்டார். அதேவேளையில், "தமிழ்நாடு அரசு சார்பில் 1986ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்பாகப் பிறந்தவர்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 150 பேர் இருப்பது தெரிய வந்தது. இவர்களும் இந்திய அரசின் குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். இவர்கள் குடியுரிமை பெறும் பட்சத்தில் எதிர்வரும் தேர்தல்களில் இவர்களும் வாக்கு செலுத்த வாய்ப்பு கிடைக்கும்," என்றார் வழக்கறிஞர் ரோமியோ ராய். தமிழ்நாட்டில் 110 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் உள்ளன. அதில் தோராயமாக 1.10 லட்சம் மக்கள் வசிப்பதாகவும் காவல் நிலையத்தில் அனுமதி பெற்று 80,000க்கும் மேற்பட்டோர் வெளியில் வசித்து வருவதாகவும் கூறுகிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழர்கள் உரிமைகள் நலனுக்காக இயங்கி வரும் வழக்கறிஞர் புகழேந்தியிடம் பிபிசி தமிழ் பேசியபோது, "அவர்கள் குடியுரிமை வேண்டுமென நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும்" குறிப்பிட்டார்.   படக்குறிப்பு,"தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர்," என்கிறார் வழக்கறிஞர் புகழேந்தி. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு ஆதார், குடும்ப அட்டை போன்ற அடையாள ஆவணங்கள் வழங்கப்படுவதாகவும் குடும்பத் தலைவருக்கு ஆயிரம் ரூபாய், மற்ற உறுப்பினர்களுக்கு 750 ரூபாய் என உதவித் தொகையும் கொடுக்கப்படுவதாகவும் கூறுகிறார் புகழேந்தி. அவர்களது நிலை குறித்துப் பேசிய அவர், "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குழந்தைகளால் படித்து முன்னேறி அரசு வேலைக்குச் செல்ல முடியவில்லை. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் படித்த இளைஞர்கள் கூலித் தொழிலாளர்களாக கட்டட வேலைகளுக்கு மட்டுமே செல்லும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர் அதிலும் பல சிக்கல்களை அவர்கள் சந்தித்து வருகின்றனர்," என்கிறார். மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தில் 2014ஆம் ஆண்டுக்கு முன் ஆப்கனில் இருந்து வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ், "இலங்கைத் தமிழர்களையும் சேர்த்துவிட்டால் இவர்களுக்கும் குடியுரிமை கிடைக்கும். அதைச் செய்ய மத்திய அரசு தயங்குவது ஏனென்று புரியவில்லை," என்றும் கூறுகிறார் புகழேந்தி. இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் லண்டன், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக வசித்தால் அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. ஆனால், "இங்கே 30 ஆண்டுகள் தாண்டி வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை என்பது மறுக்கப்படுக்கிறது. தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர்கள் திறந்தவெளி சிறையில் வசிப்பதைப் போன்று வசித்து வருகின்றனர். இதில் மாற்றம் நிகழ வேண்டும் அதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனவும் வலியுறுத்தினார் வழக்கறிஞர் புகழேந்தி. https://www.bbc.com/tamil/articles/cd1w2q1qx2yo
    • "சிந்து வெளி பல் மருத்துவமும் வீட்டு மருத்துவமும்"     50 வருடங்களுக்கு முன்பு வரை, பண்டைய இந்தியா நாகரிகம் சிந்து சம வெளியாக இருந்தது. எமது பண்டையதைப் பற்றிய அறிவு ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிக்குள் அடங்கி விட்டது. அவையை தனித்துப் பார்க்கும் போது அவையின் முன்னேற்றம் விந்தையாக எமக்கு காட்சி அளித்தது. ஆனால் அன்றில் இருந்து எமது அறிவாற்றலிலும் தொலை நோக்கிலும் பெரும் முன்னேற்றமடைந்தது. 1974 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப் பட்ட புதிய கற்காலக் குடியேற்ற பகுதியான, இன்றைய பாகிஸ்தானில் உள்ள சிந்து சமவெளி நகரமான, மெஹெர்கர் [Mehrgarh] இதற்கு வழி வகுத்தது. இது அதி நவீன நாகரிக சிந்து வெளிக்கு முன்பும் அது வரையும் உள்ள முக்கிய தொடர்புகளை கொடுத்தது.   தொல்லியல் ஆய்வு ரீதியாய் பல முக்கியங்களை கொண்டிருந்த இந்த பகுதி, 2001 ஆம் ஆண்டு பல் துளைத்தலுக்கும் பல் அறுவை சிகிச்சைக்குமான முதலாவது சான்றை கொடுத்தது. ஆண்ட்ரியா கசினா [Professor Andrea Cucina ,University of Missouri-Columbia] தலைமையில் தொல்லியல் ஆய்வாளர்கள் அங்கு அகழ்வாராய்ச்சி செய்த போது, இரண்டு சிந்து சமவெளி நாகரிக மனிதனின் சிதை வெச்சங்கள் கிடைத்தன. இந்த மனித மண்டை ஓடுகளை ஆய்வுகளுக்கு உட் படுத்தி, ஒரு மண்டை ஓட்டின் பல்லை துப்பரவு செய்யும் போது ஒரு அதிர்ச்சி யூட்டத்தக்க அல்லது திகைக்கச் செய்கிற ஒரு உண்மை தெரிய வந்தது. அது கி மு 7000 ஆண்டில் இருந்தே இவர்களுக்கு பல் மருத்துவம் தெரிந்து இருந்தது என்பது ஆகும். அதாவது கி மு 7000 ஆண்டில் வசித்த மக்கள் பல் வலிக்கு தீர்வாக சொத்தை விழுந்த [cavity] பற்களை கூர்மையான ஒரு வித கற்களைக் கொண்டு, வில்லினால் சுற்றி [bow drills] துளை யிட்டு அறுவைச் சிகிச்சை செய்து அகற்றியது தெரிய வந்தது.   முதலில் பல்லில் சிறிய துவாரத்தை கண்டு பிடித்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கசினா, அந்த துவாரங்கள் ஈமச் சடங்கு போல தெரியவில்லை என்றும் மேலும் இந்த பல் இன்னும் அந்த மனிதனின் தாடையில் இருப்பதால் அவை கழுத்து மாலை செய்ய துளைக்கப் படவில்லை என்றும் தெரியப் படுத்தினார். அவரும் அவரின் மற்ற சக தொல்லியல் ஆய்வாளர்களும் அது பல் சிதைவுக்கான சிகிச்சையாக இருக்கக் கூடும் என்றும் மேலும் அங்கு தாவரம் அல்லது வேறு ஒரு பொருள் பாக்டீரியா வள ர்ச்சியைத் தடுக்கும் பொருட்டு அந்த துவாரத்திற்குள் திணிக்கப் பட்டது எனவும் சந்தேகிக்கிறார்கள். இந்த மெஹெர்கர் அகழ் வாராய்ச்சியின் போது ஒன்பது தனிப்பட்டவர்களில் மொத்தம் பதினொன்று துளை யிடப்பட்ட பற்களை அடையாளம் கண்டா ர்கள். இதில் ஒரு தனிப்பட்டவர் மூன்று துளை யிடப்பட்ட பற்களையும் மற்றும் ஒருவர் இரு தரம் துளை யிடப்பட்ட பல்லையும் கொண்டு இருந்தார். இந்த எல்லா தனிப் பட்டவர்களும் முதிர்ந்த வர்களாக, நாலு பெண், இரண்டு ஆண், மற்றும் மூன்று பால் அடையாளம் சரியாக அடையாளம் காணப்படாத தனிப்பட்ட வர்களாக இருந்தனர். இவர்களின் வயது பெரும்பாலும் இருபதில் இருந்து நாற்பதிற்கு மேலாக உள்ளது. மிக நுணுக்கமாக அவையை உற்று நோக்கும் போது, குறைந்தது ஒரு சிகிச்சையில் பல்லு துளைக்கப்பட்டதும் இன்றி அங்கு உண்டாகிய பொந்து அல்லது உட்குழி நேர்த்தியாய் திரும்ப வடிவமைக்கப் பட்டுள்ளது காணக் கூடியதாக உள்ளது.   சிறிய மேற்பரப்பை கொண்ட இந்த பல்லில் துளையிடுவதற்கு மெஹெர்கர் பல் வைத்தியர் அதிகமாக நெருப்பை உண்டாக்க ஆதி காலத்தில் பாவிக்கப்பட்ட பொறி போன்ற ஒன்றை பாவித்து இருக்கலாம். கயிறு இணைக்கப்பட்ட வில் போன்ற கருவி ஒன்றில் தனது முனையில் கூர்மையான ஒரு வித கற்களை கொண்ட மெல்லிய மரத் துண்டு, அந்த கயிற்றுனால் சுற்றப்பட்டு அழுத்தி சுற்றப்ப டுகிறது. அப்பொழுது அந்த கூர்மையான கல் பல்லில் துளையிடுகிறது. மணி ஆபரணங்கள் செய்வதற்கு பண்டைய கைவினைஞர்கள் மணிகளில் துளையிடும் தொழில் நுட்பத்தில் இருந்து இந்த மெஹெர்கர் பல் வைத்தியர்கள் இந்த அறிவை பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகிறார்கள். பற்கள் அடைப்பதற்கான சான்றுகள் ஒன்றும் இதுவரை கிடைக்கப் படவில்லை. என்றாலும், சில பற்கள் ஆழமாக துளைக்கப் பட்டு இருப்பதால், ஏதாவது ஒன்று அதை அடைக்க அதற்குள் செருகி இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். ஆனால் எதனால் அடைத்தார்கள் என தெரியவில்லை. இந்த துளைகள் அரை மில்லி மீட்டரில் இருந்து 3.5 மில்லிமீட்டர் வரை இருக்கிறது. இது பல்லின் மிளரியை [எனமல்/ enamel] ஊடுருவி பல்திசுக்களுக்குள் [dentin] செல்ல போதுமானது. எனினும் பல் அடைப்புக்கான சான்றுகளை ஆய்வாளர்கள் இன்னும் காண வில்லை. எப்படியாயினும் தார் போன்ற பொருள் அல்லது இலகுவான தாவர பொருள் ஒன்று பல் குழிக்குள் அடைத்து இருக்கலாம் என நம்புகி றார்கள்.  துளைக்கப் பட்ட பற்களை கொண்ட இந்த தனிப்பட்டவர்கள் எவரும் சிறப்பு கல்லறையில் இருந்து எடுக்கப்படவில்லை. இது அங்கு வாழ்ந்த எல்லோருக்கும் இந்த வாய் சம்பந்தமான சுகாதார சிகிச்சை அல்லது பராமரிப்பு இருந்ததை சுட்டிக்கா ட்டுகிறது.   இந்த பல் சுகாதார பராமரிப்பு மெஹெர்கரில் கிட்டதட்ட 1,500 ஆண்டுகள் தொடர்ந்து இருந்தாலும், இந்த நீண்ட பாரம்பரியம் அதன் பின் அடுத்த நாகரிகத்திற்கு பரவ வில்லை. இவர்களைத் தொடர்ந்து அங்கு இருந்த செம்புக்கால மக்கள் பல் வைத்தியரிடம் எப்பவாவது சென்ற தற்கான அறி குறிகள் அங்கு இல்லை. ஏன் இந்த பராமரிப்பு தொடராமல் நின்றுவிட்டது என தெரிய வில்லை. ஒருவேளை, இது ஏற் படுத்திய வலி இந்த நீண்ட பாரம்பரியத்தின் செல்வாக்கை இல்லாமல் செய்து இருக்கலாம்?   இங்கே  தரப்பட்ட துளையிட்ட  பல்லின் படம் Nature என்ற ஆய்வு இதழில் வெளியிடப் பட்டு உள்ளது. பாக்கிஸ்தானில் உள்ள புதிய கற்கால இடு காட்டில் இருந்து எடுக்கப்பட்ட  துளைக்கப் பட்ட கடைவாய்ப்பல். இங்கு  2.6 மில்லிமீட்டர் அகலமுள்ள துவாரம் ஒன்று துளைக்கப் பட்டு உள்ளது. இந்த துவாரம் வழவழப்பாக உள்ளது. இது அந்த தனிப்பட்ட மனிதன் இறக்கும் முன் துளைக்கப் பட்டதை காட்டுகிறது. பல்லை நன்றாக பரிசோதனை செய்ததில் இந்த துளையிடும் கருவி பழுதடைந்த பல் திசுவை அகற்றுவதில் மிகவும் திறமை வாய்ந்தது என இதை ஆய்வு செய்த குழு கூறுகிறது. ஆகவே நாம் முன்பு நினைத்ததை விட பல் வைத்தியம் மேலும் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. அதுமட்டும் அல்ல மயக்க மருந்து கண்டு பிடிப்பதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் இது பழமையானது. . இந்த பூமி கிரகத்தில் மனிதன் தோன்றிய காலம் தொட்டு நோய் அவனுக்கு ஒரு கொடிய விஷமாக இருக்கிறது. மனிதன் பல வித வியாதிகளுடன் வரலாற்றிற்கு முந்திய காலத்தில் இருந்து போராட வேண்டி இருந்தது. இறுதியாக, அவன் உள்நாட்டு மருத்துவம் ஒன்றை உருவாக்கினான். என்றாலும் மேலே கூறிய பல் அறுவைச் சிகிச்சையை விட, இந்த சிந்து வெளி மக்கள் எந்த வித மருந்துகளை அல்லது வீட்டு மருத்துவத்தை கையாண்டார்கள் என அறிய முடியவில்லை. ஆனால், சிந்து வெளி நூலோ அல்லது ஆவணமோ வாசிக்கக் கூடியதாக இதுவரை கண்டுபிடிக்கப் படாததால், இவர்களுடன் வர்த்தக உறவு வைத்திருந்த மற்ற கி மு 3000 ஆண்டு நாகரிக மக்கள் போல ஒரு நாட்டு வைத்தியம் அங்கு நிலவி இருக்கலாம் என எம்மால் ஓரளவு ஊகிக்க முடியும். ஆகவே இது சமயம், சூனியம், அனுபவ ரீதியான சடங்குகள், முறைகள் போன்ற வையாக இருக்கலாம். அவர்கள் தாயத்து போன்றவைகளை தீங்கில் இருந்து தம்மை காப்பாற்ற, ஆகவே நோயில் இருந்து காப்பாற்ற, அணிந்து இருந்தார்கள். மற்ற மக்களை மாதிரி, அவர்களுக்கு மருந்துகளும் வீட்டு வைத்தியமும் நோய்ப் பட்டவர்களை சிகிச்சையளிக்கவும் தெரிந்து இருக்க வேண்டும். இதற்கான சான்றுகளை அனேகமாக ஹரப்பா, மொஹெஞ்சதாரோ போன்ற பகுதிகளில் உள்ள தொல் பொருள் எச்சங்களில் தேடவேண்டும்.   ஹரப்பான் மக்கள் தாவரங்கள், விலங்குகளில் இருந்து எடுத்த பொருள்கள், கனிப்பொருள்கள் போன்றவைகளை பாவித்து இருக்கலாம். மலைகளில் இயற்கையாக உண்டாகும் கருப்பு நிலக்கீலம் [Silajit, Black Asphaltum] என்ற கருத்த கனிப் பொருள் அகழ்வின் போது அங்கு கண்டு பிடிக்கப் பட்டது. Shilajit ஆசியாவில் ஒரு சில தேர்ந்தெடுக்கப் பட்ட மலைத்தொடர்களில் இருந்து பெறப்படுகிறது, குறிப்பாக திபெத்திய இமய மலை, ரஷியன் காகசஸ், மங்கோலியன் அல்தை, மற்றும் பாகிஸ்தான் கில்ஜித் மலைகள் [Tibet mountains, Caucasus mountains Altai Mountains, mountains of Gilgit Baltistan] ஆகும். ஆகவே இது சிந்து சம வெளியில் பாவிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பதை எமக்கு எடுத்து காட்டு கிறது. இந்த கருப்பு நிலக்கீலம் பல நன்மைகளை கொண்டது. இந்திய துணைக் கண்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான மருத்துவ கலவை இதுவாகும். மேலும் ஆசியா முழுவதும் பரவலாக ஆயுர் வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் அதிகரித்த ஆற்றல், அதிகரித்த நோய் எதிர்ப்பு சக்தி அதனால் நல்ல தரமான வாழ்க்கை, ஒவ்வாமை தணிப்பு , நீரிழிவு குணப்படுத்தல் [increased energy, improved quality of life allergy relief, diabetes relief,] போன்றவற்றிற்கு இது பயன் படுத்தப்படுகிறது.   அதே போல அங்கு இரைப்பை யழற்சிக்கு [gastritis / இரைப்பையின் உட்புறச் சுவர் பல்வேறு காரணங்களினால் அழற்சி அடைதல். வயிறு எரிச்சலடைதல், வயிற்று வலி ஆகியவை பொது வாகக் காணப்படும் அறி குறிகளாகும்] மருந்தாக பாவிக்கப்படும் கடனுரை [cuttlebone / ஒருவகைக் கடல் மீனின் ஓடு], மற்றும் சில [staghorn,] கண்டு எடுக்கப்பட்டது. இவைகள் இன்றும் இந்தியாவின் ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பாவிக்கப்படுகின்றன, ஆகவே பெரும்பாலும் இவை அந்த பழங்காலத்திலும் பாவிக்கப்பட்டு இருக்கலாம். மேலே கூறியவாறு நாம் சில அடிப்படைகளில் அல்லது ஒப்பீடுகளில் ஊகிப்பதை தவிர எம்மால் ஒன்றும் செய்ய முடியாத நிலை இருந்தாலும், சிந்து வெளியின் மற்றும் ஒரு அம்சமான, மக்களின் சுகாதாரத்தை முதன்மையாக கொண்ட, அவர்களின் கட்டிடமும் வடிகால் அமைப்பும் எமது இந்த ஊகத்தை மிகவும் ஆணித்தரமாக ஆதரிக்கிறது.   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]           
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.